Jump to content

கருத்துக்களம் -- கற்றுக்குட்டிகளின் நந்தவனம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களம் -- கற்றுக்குட்டிகளின் நந்தவனம் !

 

 

ஓடியாடித்  திரியலாம்  ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம்

கும்மியடிச்சு  பாடலாம்  குலவையிட்டு மகிழலாம்

கற்றுக்குட்டிகளின் நந்தவனம் -- இது

கற்றோர்க்கு  அய்யனின் குறளோவியம் !

 

வண்ணங்கள் வீசும் முகப்பு

வந்தாரை வரவேற்கும் சிறப்பு

நறுந்தேன் மலர்களாய் கலைஞர்கள்

நாடிடும் வண்டுகளாய் வாசகர்கள் !

 

தூரமாய் வாழ்ந்திடும் மனிதர்கள் - முகம்

தெரியா உறவுகளின்  மரண்ங்கள்

துடித்தே வந்திடும் பண்பாளர்கள் -- அவர்

துயர்தனைப்  பங்கிடும் பங்காளிகள் !

 

சக உறவுகளையும்  நேசிக்கிறோம்

செமையாய் சன்டையும் போடுகிறோம்

சுவையாய் பிரியாணிகள் செய்திடுவோம்

சுடுதண்ணி வைப்பதில் சொதப்பிடுவோம் !

 

இரவே காணாத யாழ் இணையம் -- இதில்

எங்கே தோன்றும் அமாவாசை

சூரிய அஸ்தமனம் நிகழாததால்

பௌர்ணமியும் இங்கே பார்ப்பதில்லை !

 

ஆசையாய்  "அந்த" கருத்துகள் இட்டு

அகத்தியர் கையால் பெறுவோம் குட்டு

அடுத்த பக்கத்தில் சிரித்து சிறந்து

விஸ்வரூபம் எடுப்போம் வாமனன் போல் !

 

அமுதுடன் அமர்ந்த அன்னபூரணி

அறிவுப் பசியின்  அட்சய பாத்திரம்

கற்றுக்குட்டிகளின் நந்தவனம்

கற்றோற்கு  அய்யனின் குறளோவியம் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தான வார்த்தைகளை கோர்த்தெடுத்த  சுவி   அண்ணர் 

 

.ஆர்ப்பாட்ட  மில்லாத அட்சய பாத்திரம். பாராட்டுக்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vadivelu.jpg

 

போச்சுடா..! அமைதியாய் இருந்த இவரும் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டாரா? :)

 

யாழுக்கு ஏதோ தொற்று வியாதி தாக்கிவிட்டதோ?

 

நல்லாதானே போய்க்கிட்டு இருந்தது? :o

 

ஏம்பா ..?.ஏன்....?

 

அவ்வ்வ்வ்...! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விருப்பு வாக்கு முடிந்து விட்டது சுவி அண்ணா. என்ன சொல்ல அந்தமாதிரி இருக்குது. :)

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை சுவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களம் -- கற்றுக்குட்டிகளின் நந்தவனம் !

 

 

ஓடியாடித்  திரியலாம்  ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம்

கும்மியடிச்சு  பாடலாம்  குலவையிட்டு மகிழலாம்

கற்றுக்குட்டிகளின் நந்தவனம் -- இது

கற்றோர்க்கு  அய்யனின் குறளோவியம் !

 

வண்ணங்கள் வீசும் முகப்பு

வந்தாரை வரவேற்கும் சிறப்பு

நறுந்தேன் மலர்களாய் கலைஞர்கள்

நாடிடும் வண்டுகளாய் வாசகர்கள் !

 

தூரமாய் வாழ்ந்திடும் மனிதர்கள் - முகம்

தெரியா உறவுகளின்  மரண்ங்கள்

துடித்தே வந்திடும் பண்பாளர்கள் -- அவர்

துயர்தனைப்  பங்கிடும் பங்காளிகள் !

 

சக உறவுகளையும்  நேசிக்கிறோம்

செமையாய் சன்டையும் போடுகிறோம்

சுவையாய் பிரியாணிகள் செய்திடுவோம்

சுடுதண்ணி வைப்பதில் சொதப்பிடுவோம் !

 

இரவே காணாத யாழ் இணையம் -- இதில்

எங்கே தோன்றும் அமாவாசை

சூரிய அஸ்தமனம் நிகழாததால்

பௌர்ணமியும் இங்கே பார்ப்பதில்லை !

 

ஆசையாய்  "அந்த" கருத்துகள் இட்டு

அகத்தியர் கையால் பெறுவோம் குட்டு

அடுத்த பக்கத்தில் சிரித்து சிறந்து

விஸ்வரூபம் எடுப்போம் வாமனன் போல் !

 

அமுதுடன் அமர்ந்த அன்னபூரணி

அறிவுப் பசியின்  அட்சய பாத்திரம்

கற்றுக்குட்டிகளின் நந்தவனம்

கற்றோற்கு  அய்யனின் குறளோவியம் !!

 

அருமையான... கவிதைக்கு, நன்றி சுவி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவே காணாத யாழ் இணையம் -- இதில்

எங்கே தோன்றும் அமாவாசை

சூரிய அஸ்தமனம் நிகழாததால்

பௌர்ணமியும் இங்கே பார்ப்பதில்லை !

 

 

அருமையான... கவிதைக்கு,

நன்றி சுவியண்ணா :)

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை  நன்றி சுவி அண்ணை

 

 

நானும் லைக் பண்ணலாம் என்டால் முடியுதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாழ்க்கருத்துக்களத்தில் நானும் ஒரு கற்றுக்குட்டி என்பதில் பெருமை அடைகிறேன். நான் இரசிக்கும் நந்தவனமும் இதுதான் எனக்குள் தோன்றும் எண்ணங்களை நீங்கள் எழுத்தில் வடித்திருக்கிறீர்கள் சுவி நீண்ட நாட்களுக்குப்பின்னர் நீங்களும் யாழுக்கான கவிதையுடன் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

போட்டி போட்டு கவிதை எழுதுறாங்க எல்லோரும் :( ஆனா சுவியண்ணா சும்மா சொல்லக்கூடாது...

சூப்பர் சூப்பர் சூப்பர்,,,..!

Link to comment
Share on other sites

நல்லதொரு கவிதை. நீண்ட காலத்துக்கு பின் கவிதை எழுதி உள்ளீர்கள். விகடகவி, கறுப்பியின் கவிதை திரியில் நீங்கள் எழுதிய ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர்! பின்னீட்டியள்....இதைவிட வார்தையில்லை  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு உறவுகளான  ,  நிலா,வன்னியன், ஜீவா, அகஸ்தியன், தமிழ்சிறி, விசுகு, நவீனன், பரியாரி, வல்வை சகாரா, விஷ்வா, நுனா, கு. சா .எல்லோருக்கும் , மற்றும் கண்ணால் கண்டு கடந்துபோன உறவுகளுக்கும் உளமார்ந்த நன்றி. :D :D

 

நான் , கறுப்பியின் கவிதை அந்தாதியில் அப்பப்ப நடக்கும் முக்கிய சம்பவங்களின் பதிவாக ஏதாவது எழுதி வருவேன். இது யாழின் பதினாறு என்டதும் வேலி தான்டிக் குதிச்சிட்டன். :icon_idea:

 

சும்மா அடிக்கடி எழுதிக் கடுபேத்தமாட்டேன் , உத்தரவாதம்...! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.