Jump to content

உன் பேர் சொல்ல வேண்டும். .......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகவை பதினாறு காணும்
யாழ் மகளே நீ வாழி .
.கற்றோரும் மற்றோரும் 
கத்துக்குட்டிகளும் காளைகளும்
கன்னியரும் .கற்றுத் தெளிந்தோரும்..
கற்க வருபவருக்கும் நீ கலைமகள். 

 

கண்ட நாள்முதல் மீண்டும்
மீண்டும் காண வைத்தாய் ..
அனைவரையும்  அணைக்கும்
ஆலமரம் நீ.. ஜாதி மத பேதமின்றி
சகலருக்கும் சரி சமமாய்

 

பிறப்பிலிருந்து  இறப்பு வரை
அறிவிக்கும் கருவியாய்..

ஊரிலிருந்து உலக செய்திவரை 
அத்தனயும் தரும் அமுத சுரபியாய் .
.பருகத்தேவிட்டாத தேனாய்
நாளும்பொழுதும்  வளரும்
யாழ் களமே நீ வாழி

 

நான் மட்டும் மல்ல
ஊரும் உலகும் என் பேரன் பேத்திகளும்
கொள்ளுபேரன் பேத்திகளும்
உன் பேர் சொல்ல வேண்டும். 
என்ன துயர் வரினும்
எழுகவே யாழ் களமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள், நிலாக்கா!

 

யாழ் ஒரு கட்டிளங் காளையாக, வாலைக் குமரியாக, மகளாக, தோழியாக,கலைமகளாக, ஆசானாக, ஆலமரமாக.... எத்தனை உருவகங்களை எடுக்கிறாள் என்னும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது! 

 

மொத்தத்தில், யாழ், தமிழுலகில் தனக்கென ஒரு நிரந்தரமான இடமொன்றைப் பிடித்திருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிகின்றது!

 

ஆங்கிலத்தில் Niche  என்று சொல்லப்படும், ஒன்றை அவள் தனக்காக்கியிருக்கிறாள்! இங்கே தான் அவள் 'வெற்றி' பெற்றிருக்கிறாள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கான சிந்தனைக்கவிதை இது...வாழ்த்துக்கள் நிலாமதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அகஸ்தியர் குமாரசாமி அன்னார ..புங்கையூரன்  உங்களுக்கு என் நன்றிகள் .

 

.மேலும்  வாசித்த  அனைவருக்கும் இனி வாசிக்க இருப்போருக்கும்  நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் மட்டும் மல்ல
ஊரும் உலகும் என் பேரன் பேத்திகளும்
கொள்ளுபேரன் பேத்திகளும்
உன் பேர் சொல்ல வேண்டும். 
என்ன துயர் வரினும்
எழுகவே யாழ் களமே
 
கவிக்கும்  வாழ்த்துக்கும்  நன்றி  தாயே............. :) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மட்டும் மல்ல
 ஊரும் உலகும் என் பேரன் பேத்திகளும்
 கொள்ளுபேரன் பேத்திகளும்
 உன் பேர் சொல்ல வேண்டும்.
என்ன துயர் வரினும்
 எழுகவே யாழ் களமே

 

 

இதற்கு நாங்கள் நிறைய உழைக்க வேண்டும்
இளையவர்களை இப்பவே யாழுக்குள் அழைத்து வரவேண்டும்

கவிதைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா உங்களுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நிச்சயம் யாழைத்தேடி வருவார்கள். உங்கள் விருப்பம் நிச்சயமாக நிறைவேறும். ஏனெனில் தங்கள் அம்மாவின், பாட்டியின். கொள்ளுப்பாட்டியின் எழுத்துகளை அவர்கள் தேடும்போது முதன்முதலாக அவர்கள் யாழுக்குள்தான் தேடுவார்கள். எதிர்பார்ப்புடனான கவிதைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..கதையோடு கதையாக உங்களை தேடும்போது உங்களுக்கு நாங்கள் எழுதியவற்றையும் எதிர்காலச் சந்ததியின் வாசிப்பார்கள் இல்லையா அந்தவகையில் என் கருத்தையும் அவர்கள் வாசிப்பார்கள் :wub:

Link to comment
Share on other sites

தாத்தா பாட்டிக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து கவலை பட ஆரம்பிச்சுட்டாங்களே :(

கவலை படாதேயுங்கோ...

உங்க கொள்ளு பேரன் பேத்திக்கு உங்க ஒவ்வொருத்தரின்ட குட்டையும் நான் சொல்லிவிடரேன் :D

கவிதைக்கு நன்றிகள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்ததியையும் சேர்த்து விட்டு , சிந்திக்க வைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி...! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.