Jump to content

ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...!


Recommended Posts

ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...!

 
Aananthapuram-copy-600x337.jpg

அந்த நாட்கள்

தீயின் நாக்குகளால்

தின்னப்பட்ட தீராத்துயர்

எங்கள் வீரத்தின்

விலாசங்களை

வெ(கொ)ன்ற நாட்கள்.

வெற்றிகள் தந்தெங்கள்

விடுதலைச் சுவடுகளில்

வீரம் எழுதிய

மகனாரும் , மகளாளும்

இறுதிச் சமர் புரிந்து

எரிந்து கரைந்த

5ம் ஆண்டு நினைவில்

ஆனந்தபுரம் அழியாத நினைவாக....!

பூக்களின் வாசனை கலந்த

பொன்னிதழ் விரியும்

புன்னகை முகங்கள்

பொசுங்கிக் கிடந்த நாளை

வசந்த கால மலர்வாசம் தரும்

ஏப்றல் மாதம் என்றென்றும்

எங்களில் எரியும் தீயாய்...!

இழப்பின் கதைசொல்லும்

என்றைக்கும் இதயம் நிரம்பிய

துயர் தருமாதம் நஞ்சு கலந்து

எங்கள் கனவுகள் பறிக்கப்பட்ட

நிலத்தின் கதைசொல்லும்

நீங்காத் துயர் மாதம்.

04.04.2014 (2009 முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரம் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான நாள். உலகம் திரண்டு அழித்த ஈழவிடுதலைப்போரில் அன்று உலகின் கண்முன்னால் எங்கள் தளபதிகளும் போராளிகளும் எதிரிக்கு அதிகளவு இழப்பை ஏற்படுத்தி இறுதிவரை சமரிட்டு தங்கள் உயிர்களைத் தந்து போனவர்கள்)

சாந்தி ரமேஷ் வவுனியன் 

Email - rameshsanthi@gmail.com

 

http://mullaimann.blogspot.de/2014/04/blog-post.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தபுரம் எங்கள்

விடுதலை போர் மறவர்

வீழ்ந்த வீர நிலம்

வெளியே சொல்ல

வெட்கப்பட்டு

தமக்குள் எம் வீரர்

புகழ் பாடிய

எதிரிகள் கண்டிராத

அற்புத நிலம்

அவர்கள் இறக்கவில்லை

பிறப்பெடுத்திருப்பார்கள்

பழி தீர்க்காமல்

புலி போகாது

ஆனந்த புரத்தில்

அவர்கள் உடல்கள் விழுந்தது

தமிழர் மனதில் அவர்கள்

தாகம் எழுந்தது......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.