Jump to content

உவங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு கறுப்பு சாயம் பூசி ஒவ்வொரு நாளும் முகச்சவரம் செய்து 80 வயதிலும் 60 வயது தோற்றத்தில் இருப்பார் கந்தசாமி சிவசாமிப்பிள்ளை.அவுஸ்ரேலியாவில் அவரின் பெயர் கந்ஸ் ஆனால் ஊர்காரர் ஆசையாக கந்தர் என்று அழைப்பார்கள்.சுரேஸ் அவரை கந்ஸ் அண்ணே என்று செல்லமாக அழைப்பான்.ஊரில் அங்கிள் என்றுதான் கூப்பிட்டவன் அப்படி கூப்பிட ஒரு காரணமிருந்தது.காரணத்தை கதை வாசிச்ச பின்பு அறிவீர்கள்.சுரேஸும் கந்தரும் ஒரே ஊர்,ஒரே சாதி அத்துடன் தூரத்து உறவு வேறு ,இருவரின் பாசப்பிணைப்பை பற்றி சொல்வதற்கு வேறு விடயங்கள தேவையில்லை. இப்ப மகளுடன் இருக்கின்றார் ..இரண்டும் பெட்டைகள் மூன்றாவது பெடியனாக பெறவேண்டும் என்று கோவில் குளமெல்லாம் ஏறிய புண்ணியம் 7வருடத்தின் பின்பு கடவுள் அவருக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்திட்டார்.பெடியனை பொத்தி பொத்தி வளர்த்தார்.அவரின்ட பெயர் சொல்ல அவன் தான் வாரிசு என்ற ஒரு காரணம் ஆகும்.

சுரேஸும் கந்தரும் வயசு வித்தியாசம் பாராமல் விவாதிப்பார்கள் அதாவது இருவரும் அலட்டுவார்கள் .வெளியே இருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள் எதோ முக்கியமான விடயம் பற்றி கலந்தாலோசிக்கினம் எண்டு ஆனால் ஒரு சதத்திற்கும் பிரயோசணமில்லாத விடயமாக இருக்கும்.இவர்களின் இந்த அலட்டல் ஊரில் தேர்முட்டியடியில் தொடங்கினது. இப்ப சிட்னியில்முருகன் கோவில்,நண்பர்களின் வீட்டுதண்ணி பார்ட்டி ,தமிழ் பாடசாலை வரை தொடர்கிறது.

கந்தரின் இளமைக்காலம் யாழ்ப்பாணத்தில் பின்பு வேலை கொழும்பில், இளமை குடும்பவாழ்க்கையும் கொழும்பில் .ஊர் கோவில் திருவிழாவுக்கு குடும்பமாக வந்து இரண்டு கிழமை ஊரில் நிற்பார்.சாமி தீர்த்தம் ஆடி முடிந்த அடுத்த நாள் கந்தர் தீர்த்தம் ஆடி பூங்காவனதன்று உச்சநிலையில் இருப்பார். அதற்கு அடுத்தநாள் கந்தர் தாயாரின் வீட்டில் பெரிய விருந்தும் வைப்பார்.

புலத்தில் வீடுகளில் நண்பர்கள் ஒன்று கூடுவது போல ஊரில் ஒன்று கூடுவதில்லை.தேர்முட்டியடி ,வாசிகசாலை போன்றவற்றில் தான் ஒன்றுகூடுவார்கள் .இலவசமாக கிடைக்ககூடிய இடமும் இதுதான்.

மாலை நேரங்களில் தேர்முட்டியடியில் ஐந்தாறு பெரிசுகள் நாலைந்து இளசுகள் கூடி ஊர் விடுப்பு,அரசியல் கதைப்பது வழக்கம் .கந்தர் ஊரில் நின்றால் நிச்சம் கலந்து கருத்தும் பகிர்ந்து கொள்வார்.தமிழர்கள் தனிநாடு கேட்டு போராட தொடங்கிய காலகட்டம்.

"உவங்கள் தனிநாடு கேட்கிறாங்கள்,உதால கொழும்பில் இருக்கிற எங்களுக்குதான் பிரச்சனை" என கந்தர் தன்னுடைய மனக்குறையை கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்த பெரிசுகள் சிங்களவனோட வாழ முடியாது எங்களை அவன் கல்வி,குடியேற்றம்,மற்றும் சந்தைகட்டிடங்களை தீ வைத்து பலவழிகளில் ஒதுக்கதொடங்கிவிட்டான் ஆகவே தனிநாடு தான் தீர்வு என்றார்கள் .இளசுகலும் உணர்ச்சிவசப்பட்டு தனிநாடுதான் ஒரே வழி என்றார்கள்.

கந்தர் ஊர் திருவிழா முடிவடைந்து கொழும்பு திரும்பினார்.இரண்டு கிழமையால் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு குடும்ப சகிதமாக கப்பலில் ஊர் வந்து சேர்ந்தார். அன்று மாலையே தேர்முட்டியடிக்கு வந்தார்.

"உவங்களாட வாழ ஏலாது தனிநாடுதான் ஒரே வழி .நான் இனி திரும்பி போக மாட்டேன் ஊரோடதானிருக்க போகிறேன்" என்று கூறியவர் பிள்ளைகளை எந்த பாடாசாலைக்கு அனுப்பலாம்,மற்றும் எந்த டியுட்டரி,டியுசன் மாஸ்டர் திறம் போன்ற விபரங்களை சுரேஸிடம் இருந்து அறிந்துகொண்டார்.

சுரேஸும் தான் போகும் டியுட்டரியும்,கல்விகற்கும் ஆசிரியர்கள், சிறந்தது என சொல்லிவைத்தான் .இதில் ஒரு உள் நோக்கமும் இருந்தது. கந்தரின் பிள்ளைகள் ஆரம்பகல்வியை கொழும்பிலுள்ள பிரபலமான கிறிஸ்தவ பாடசாலையில் படித்தார்கள். அதுமட்டுமன்றி கொழும்பு நாகரிகமும் அவர்களிடம் அதிகம் காணப்பட்டது.ஊர் இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும் ஒருவித கவர்ச்சி இருந்தது.பெண்களை இரட்டை சடையுடனும், அரைப்பவாடை பிளாவுஸ்,மற்றும் சுருக்குவைத்த முழுச்சட்டையுடன் பார்த்த ஊர் இளைஞர்களுக்கு ,மேலாடயை ஜீன்ஸுக்குள் விட்டு அங்கங்கள் ஒரளவு தெரியும் படி வீதியில் செல்லும் பெண்களை நிச்சமாக இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும்.சுரேஸின் உணர்வுகளையும் அந்த கவர்ச்சி தூண்டியது.

சுரேஸும் கண்ணனும் அனேகமாக ஊரில் ஒன்றாக ஊர்வலம் வருவார்கள்.கன்ன உச்சி வைத்து தலைமுடியை பக்கவாட்டில் இழுத்திருப்பான் சுரேஸ் கண்ணாடி முன்னால் நின்று அழகு பார்ப்பது குறைவு.கண்ணன் தலைமுடியைமேவி இழுத்து நாலுபேர் மத்தியில் தன்னை மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்க வேணும் என்று உடையணிந்து தன்னை அழகு படுத்திகொள்வான்.படிப்பிலும் சுரேசைவிட கேட்டிக்காரன்.கண்ணனின் இந்த தோற்றமும் கல்வியறிவும் கந்தரின் மூத்தவள் பிரியாவை கவர்ந்துவிட்டது.

கந்தருக்கு உலக அரசியல் ,கொழும்பு அரசியல் தெரிந்தளவுக்கு ஈழ அரசியலில் அறிவில்லை.ஈழநாடு,வீரகேசரி ,பத்திரிகை,கொழும்பு ஆங்கிலபத்திரிகை செய்திகளை படித்துவிட்டு தேர்முட்டியடி அரசியல் விமர்சனம் செய்வார்.அத்துடன் இயக்கங்களின் பெயர்களோ,அதன் தலைவர்கள் யார் என்பது பற்றிய அறிவுமில்லை.பாதுகாப்பு படைகளுக்கு எதிராக எதாவது தாக்குதல் நடந்தால் ,"பெடியள் அடிச்சு போட்டாங்கலாம் ,நல்ல அடியாம் மகே அம்மே என்று ஆர்மிகாரன் ஒடிட்டானாம்" என சொல்லி புலங்காகிதம் அடைவார்.அவங்களுக்கு உவங்கள் பெடியள் செய்யிறதுதான் சரி என நற்சான்றிதழ் வழங்குவார்.

இப்படிதான் ஒருநாள் கந்தரின் வீட்டுக்கு அருகாண்மையில் பொலிஸ் வணடிக்கு கிரனைட் தாக்குதலை செய்துவிட்டு பெடியள் தப்பி சென்றுவிட்டார்கள்.ஒரு பொலிஸதிகாரி மரணமடைய எனையோர் தலைமையகத்திற்கு தகவல் அனுப்பிவிட்டார்கள்.முப்படையும் ஸ்தலத்திற்க்கு விரைந்துவந்தனர்.மக்கள் வீடுவாசலைகளையும்,உடமைகளையும் விட்டு வேறு கிராமத்திற்கு ஒடினார்கள்.கந்தரும் குடும்பத்தோடு வெளிக்கிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

முப்படையினர் தங்களது ஆத்திரத்தை கிராமமக்களின் வீடுகளை,உடமைகளை தீ வைத்தும்,கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தும் தீர்த்து கொண்டார்கள்.பின்பு இரு நாட்கள் ஊரடங்கு சட்டம் போட்டு ஊரை காவல் காத்தார்கள்.

பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதிப்படைந்த கிராம மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்,அத்துடன் இளைப்பாரிய உச்சநீதிமன்ற நீதி பதியின் தலைமயில் விசாரனை நடை பெறும் என பத்திரிகையில் செய்திகள் வந்தன,ஆனால் நீதியும் ,நிதியும் மக்களுக்கு கிடைக்கவில்லை.மக்கள் தங்களது முயற்ச்சியால் இயங்கத்தொடங்கினார்கள். மீண்டும் தேர்முட்டி அரசியல் வியாக்கியானதை தொடங்கினார்கள்.

"உவங்கள் பெடியள் கிரனைட்டை காட்டுப்பகுதியில் போட்டிருந்தால் ஆர்மிக்காரன் எங்கன்ட இடத்தை உப்படி நாசம் பண்ணியிருக்கமாட்டாங்கள்"... அங்கும் இங்கும் திரும்பி பார்த்துவிட்டு " உவங்கள்பெடியள் செய்தது சரியான பிழை"என்றார் கந்தர்.

"அண்ணே கெரில்லா போர் என்றால் உப்படித்தான் இருக்கும்"

"அடே! பாதிக்கப்பட்டது நாங்கள்"

"அண்ணே நோகாமல் நொங்கு குடிக்கப் பாக்கிறீங்கள்"

ஊர் நிலமைகள் சரியில்லை என அறிந்த கந்தர் மீன்டும் கொழும்பு திரும்பினார் .மூத்தமகள் பிரியாவை மேல்படிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது மகளும்,மகனும் ஊரில் தாயாருடன் இருந்தார்கள்.லண்டனுக்கு ஒப்பின் விசா என அறிந்து விடியற்காலை பிரித்தானியா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தவம் இருந்து விசா பெற்று உடனடியாகவே லண்டன் பயணமானார்.

குடும்பத்தை லண்டன் அழைப்பதற்கான ஆயத்தங்களை செய்யத்தொடங்கினார்.மூத்தவளுக்கு அவுஸ்ரேலியா மாப்பிள்ளையை கட்டி கொடுத்தார். இரண்டாவது மகளும் ,மகனும் மருத்துவர்களாக லண்டனில் இருக்கின்றார்கள் .கந்தரும் மனைவியும் சிட்னிக்கும் லண்டனுக்கும் காலநிலைக்கு ஏற்றமாதிரி மாறிமாறி குடியிருப்பினம்.லண்டனில் வின்டர் என்றால் சிட்னியில் குடியிருப்பு. சிட்னியில் இருக்கும் பொழுது பேரப்பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு கந்தர் அழைத்து வருவார்.சுரேஸும் தனது பிள்ளைகளை அதே பாடசாலைக்கு அழைத்து செல்வான்.

"டேய் சுரேஸ் உவங்கள் ஒழுங்கா தமிழ் படிப்பிப்பாங்களோ"

"ஏன் அண்ணே அப்படி கேட்கீறீங்கள் என்ட பிள்ளைகள் உயர்தரம் வரை இங்க படிச்சவயள் அவர்கள் இப்ப நல்லா தமிழ் பேசுவினம்"

"உவங்கள் என்ட பேத்திக்கு போனமுறை மார்க்ஸ் போடும்பொழுது குறைச்சு போட்டாங்கள் அதுதான் கேட்டனான்"

"உவங்கள் இப்ப உந்த கேட்டை பூட்டிப்போடுவாங்கள் நான் போய் காரை உள்ள விடப்போகிறேன்" காரை உள்ளே விட்டுவிட்ட பின்பு வந்த கந்தர் மீண்டும் அரசியல் பக்கம் கதையை தொடங்கினார்

"ஐ.நா தீர்மானம் இந்த முறை உவங்களுக்கு வெற்றி கிடைக்கும்"

"யாருக்கு அண்ணே"

"கூட்டணிக்குத்தான்டா"

"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"யாருக்கு அண்ணே"

"கூட்டணிக்குத்தான்டா"
"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று"  :icon_idea: 

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டுத் தமிழன் சொல்வான் நான் இந்தியன் என்று!

இலங்கைத் தமிழன் சொல்வான் நான் சிறீலங்கள் என்று!

 

உவங்கள் என்றால் யார்? அவர்கள்தான் தமிழர்களோ??

 

புத்தனே உங்கள் ஆராச்சி அபாரம்!!!
 

Link to comment
Share on other sites

எங்கட ஊரிலயும் இப்பிடி ஒருத்தர் இருந்தார்.. முதலில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு.. ஒருமுறை ஏதோ ஒரு இயக்கம் பெற்றோல் தாங்கியை கடத்த.. ஹெலியில் வந்து முழங்கினான். அப்ப ஊரில் இல்லாத அரிச்சனை எல்லாம் இயக்கங்களுக்கு விழுந்தது. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், இந்தமுறை 'மேட்டுக்குடியை' ஒரு கை பாக்கிறதெண்டு முடிவெடுத்திட்டியள்! :D

 

என்னுடனும், சில பிரபலமான கூட்டணி 'எம்பி மாரின்' பிள்ளையள் படிச்சிருக்கினம்!

 

அந்தப் பெரியமனுசனின் குடும்பத்தை, ஒரு நல்லூர் திருவிழாவில் சந்தித்தேன்! நான் அவரது மகனுடன் நின்றிருந்தாலும், அவரும் என்னுடன் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்.

 

எங்கடை ஆங்கிலம் உங்களுக்குத் தெரியும் தானே....  what I mean..... If.... But .... So... எல்லாம் போட்டு ஒரு மாதிரி, மேடு பள்ளம் விழாமல் கதைச்சு முடிச்சம்! :lol:  

 

பிறகு கவனித்தால், அந்த முழுக்குடும்பமும், அங்கு 'சர்பத்' குடிச்சு முடியும்வரைக்கும் தனி ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடி முடித்தது! :icon_mrgreen:

 

இப்ப, இவங்களை 'எங்கடை' எண்டு எப்பிடிச் சொல்ல, மனம் வரும்!

 

அவங்கள் எப்பவமே, அவங்கள் தான்!  :o

 

கிறுக்கல் அருமை...! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவன் கண்ணன்  உவள் பிரியாவை முடித்து  உவர் கந்தருக்கு மருமோன் ஆயிட்டாரோ ...! :)

Link to comment
Share on other sites

சூப்பர் புத்தன் .

வெளியில் நின்று வெடி வாணம் விடுபவர்கள் தானே எங்கடை ஆட்கள் .அப்ப உவங்கள் என்றுதானே வரும் .

Link to comment
Share on other sites

கதைக்கு நன்றி புத்தன்.  எப்பவும் மற்றன் தியாகியாக போக நாங்கள் (அகதியாக) வெளிநாடு போக வேண்டும் என்பதுதானே எங்கள் வழக்கம். :)

 

 

ஒரு விடயம்

 

புலத்தில் வீடுகளில் நண்பர்கள் ஒன்று கூடுவது போல ஊரில் ஒன்று கூடுவதில்லை.

 

 

இந்த வரி கொஞ்சம் தவறு என்று நினைக்கின்றன். புலம் என்றால் நிலம் என்றுதான் பொருள். புலத்தில் என்று சொல்லும் போது அது ஊரைத்தான் குறிக்கும், வெளிநாட்டை அல்ல. (புலம் பெயர்ந்தவர்கள் என்பது ஊரை விட்டு பெயர்ந்தவர்கள்)

 

மற்றது, வரிகளுக்கிடையில் கொஞ்சம் இடைவெளி விட்டால் வாசிக்க இன்னும் கொஞ்சம் இலகுவாக இருக்கும் என்று நினைக்கின்றன். கண் சில நேரங்களில் வழி தவறி விடுகின்றது (அல்லது எனக்கு கண் பிரச்சனையோ தெரியாது)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"யாருக்கு அண்ணே"

"கூட்டணிக்குத்தான்டா"

"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று"  :icon_idea: 

 

நன்றிகள் விசுகு வருகைக்கும் பச்சைக்கும்....

தமிழ்நாட்டுத் தமிழன் சொல்வான் நான் இந்தியன் என்று!

இலங்கைத் தமிழன் சொல்வான் நான் சிறீலங்கள் என்று!

 

உவங்கள் என்றால் யார்? அவர்கள்தான் தமிழர்களோ??

 

புத்தனே உங்கள் ஆராச்சி அபாரம்!!!

 

 

நன்றிகள் பாஞ் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

எங்கட ஊரிலயும் இப்பிடி ஒருத்தர் இருந்தார்.. முதலில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு.. ஒருமுறை ஏதோ ஒரு இயக்கம் பெற்றோல் தாங்கியை கடத்த.. ஹெலியில் வந்து முழங்கினான். அப்ப ஊரில் இல்லாத அரிச்சனை எல்லாம் இயக்கங்களுக்கு விழுந்தது. :wub:

 

நன்றிகள் இசை வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

புத்தன், இந்தமுறை 'மேட்டுக்குடியை' ஒரு கை பாக்கிறதெண்டு முடிவெடுத்திட்டியள்! :D

 

என்னுடனும், சில பிரபலமான கூட்டணி 'எம்பி மாரின்' பிள்ளையள் படிச்சிருக்கினம்!

 

அந்தப் பெரியமனுசனின் குடும்பத்தை, ஒரு நல்லூர் திருவிழாவில் சந்தித்தேன்! நான் அவரது மகனுடன் நின்றிருந்தாலும், அவரும் என்னுடன் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்.

 

எங்கடை ஆங்கிலம் உங்களுக்குத் தெரியும் தானே....  what I mean..... If.... But .... So... எல்லாம் போட்டு ஒரு மாதிரி, மேடு பள்ளம் விழாமல் கதைச்சு முடிச்சம்! :lol:  

 

நன்றிகள் புங்கை ஐயா ...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

உவன் கண்ணன்  உவள் பிரியாவை முடித்து  உவர் கந்தருக்கு மருமோன் ஆயிட்டாரோ ...! :)

 

உவர் கந்தர் விட்டாத்தானே :D

சூப்பர் புத்தன் .

வெளியில் நின்று வெடி வாணம் விடுபவர்கள் தானே எங்கடை ஆட்கள் .அப்ப உவங்கள் என்றுதானே வரும் .

 

நன்றிகள் அர்ஜூன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

சூப்பர் புத்தன் .

வெளியில் நின்று வெடி வாணம் விடுபவர்கள் தானே எங்கடை ஆட்கள் .அப்ப உவங்கள் என்றுதானே வரும் .

 

நன்றிகள் நிழலி ....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....நீங்கள் கூறியவற்றை கவனத்தில் எடுக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கிறுக்கல் மாதிரி தெரியலையே..?

நியாயத்தை தானே சொல்லியிருக்கிறீர்கள்..?

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணியம் தனது இருப்புக்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும் என்பற்கு உங்கள் கதை ஓர் உரைகல் வாழ்த்துக்கள் புத்தன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவங்கள் உவங்கள் உதுகள் எங்கடையள் அதுகள் எல்லாம் எங்களுக்கு இப்ப நோமலாய்ப்போச்சுது.......வாற சோசல்காசு ஒழுங்காய் வந்துதெண்டால்  எனக்கு அது வந்தவரைக்கும் லாபம்  :lol:
 
புத்தன்! கடிச்சு குதறிட்டியள்... :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள் என்று ஒரு சாதாரண தலைப்பிட்டு அழகிய கருவைத் தந்தவருக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளை, வெருட்டி வைச்சிருக்கிறதுக்குத் தன்னும்... புலி வேணும். புத்தா....
இல்லாட்டி... உதுகளை, திருத்திறது... "கல்லிலை, நார் உரிக்கிற மாதிரி" இருக்கும். :D

Link to comment
Share on other sites

உவங்கள் வளமைபோல புத்தனின் கைவண்ணம் அசத்தல். எண்டாலும் உவங்கள் ஆரெண்டு சொல்லாமல் போயிட்டியள்: :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கிறுக்கல் மாதிரி தெரியலையே..?

நியாயத்தை தானே சொல்லியிருக்கிறீர்கள்..?

 

நன்றிகள் ராசவன்னியன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

யாழ்ப்பாணியம் தனது இருப்புக்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும் என்பற்கு உங்கள் கதை ஓர் உரைகல் வாழ்த்துக்கள் புத்தன் .

 

நன்றிகள் கோமகன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

உவங்கள் திருந்தமாட்டாங்கள் புத்தன். :rolleyes:

 

நன்றிகள் முதல்வன்

அவங்கள் உவங்கள் உதுகள் எங்கடையள் அதுகள் எல்லாம் எங்களுக்கு இப்ப நோமலாய்ப்போச்சுது.......வாற சோசல்காசு ஒழுங்காய் வந்துதெண்டால்  எனக்கு அது வந்தவரைக்கும் லாபம்  :lol:
 
புத்தன்! கடிச்சு குதறிட்டியள்... :D

 

நன்றிகள் கு.சா

உவங்கள் என்று ஒரு சாதாரண தலைப்பிட்டு அழகிய கருவைத் தந்தவருக்கு வாழ்த்துகள்.

 

நன்றிகள் கறுப்பி

உதுகளை, வெருட்டி வைச்சிருக்கிறதுக்குத் தன்னும்... புலி வேணும். புத்தா....

இல்லாட்டி... உதுகளை, திருத்திறது... "கல்லிலை, நார் உரிக்கிற மாதிரி" இருக்கும். :D

 

நன்றிகள் தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

உவங்கள் வளமைபோல புத்தனின் கைவண்ணம் அசத்தல். எண்டாலும் உவங்கள் ஆரெண்டு சொல்லாமல் போயிட்டியள்: :mellow:

 

நன்றிகள் சாந்தி..... யாரெண்டு சொன்னால் எனக்கு அடி விழும்....:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.