Jump to content

உவங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு கறுப்பு சாயம் பூசி ஒவ்வொரு நாளும் முகச்சவரம் செய்து 80 வயதிலும் 60 வயது தோற்றத்தில் இருப்பார் கந்தசாமி சிவசாமிப்பிள்ளை.அவுஸ்ரேலியாவில் அவரின் பெயர் கந்ஸ் ஆனால் ஊர்காரர் ஆசையாக கந்தர் என்று அழைப்பார்கள்.சுரேஸ் அவரை கந்ஸ் அண்ணே என்று செல்லமாக அழைப்பான்.ஊரில் அங்கிள் என்றுதான் கூப்பிட்டவன் அப்படி கூப்பிட ஒரு காரணமிருந்தது.காரணத்தை கதை வாசிச்ச பின்பு அறிவீர்கள்.சுரேஸும் கந்தரும் ஒரே ஊர்,ஒரே சாதி அத்துடன் தூரத்து உறவு வேறு ,இருவரின் பாசப்பிணைப்பை பற்றி சொல்வதற்கு வேறு விடயங்கள தேவையில்லை. இப்ப மகளுடன் இருக்கின்றார் ..இரண்டும் பெட்டைகள் மூன்றாவது பெடியனாக பெறவேண்டும் என்று கோவில் குளமெல்லாம் ஏறிய புண்ணியம் 7வருடத்தின் பின்பு கடவுள் அவருக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்திட்டார்.பெடியனை பொத்தி பொத்தி வளர்த்தார்.அவரின்ட பெயர் சொல்ல அவன் தான் வாரிசு என்ற ஒரு காரணம் ஆகும்.

சுரேஸும் கந்தரும் வயசு வித்தியாசம் பாராமல் விவாதிப்பார்கள் அதாவது இருவரும் அலட்டுவார்கள் .வெளியே இருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள் எதோ முக்கியமான விடயம் பற்றி கலந்தாலோசிக்கினம் எண்டு ஆனால் ஒரு சதத்திற்கும் பிரயோசணமில்லாத விடயமாக இருக்கும்.இவர்களின் இந்த அலட்டல் ஊரில் தேர்முட்டியடியில் தொடங்கினது. இப்ப சிட்னியில்முருகன் கோவில்,நண்பர்களின் வீட்டுதண்ணி பார்ட்டி ,தமிழ் பாடசாலை வரை தொடர்கிறது.

கந்தரின் இளமைக்காலம் யாழ்ப்பாணத்தில் பின்பு வேலை கொழும்பில், இளமை குடும்பவாழ்க்கையும் கொழும்பில் .ஊர் கோவில் திருவிழாவுக்கு குடும்பமாக வந்து இரண்டு கிழமை ஊரில் நிற்பார்.சாமி தீர்த்தம் ஆடி முடிந்த அடுத்த நாள் கந்தர் தீர்த்தம் ஆடி பூங்காவனதன்று உச்சநிலையில் இருப்பார். அதற்கு அடுத்தநாள் கந்தர் தாயாரின் வீட்டில் பெரிய விருந்தும் வைப்பார்.

புலத்தில் வீடுகளில் நண்பர்கள் ஒன்று கூடுவது போல ஊரில் ஒன்று கூடுவதில்லை.தேர்முட்டியடி ,வாசிகசாலை போன்றவற்றில் தான் ஒன்றுகூடுவார்கள் .இலவசமாக கிடைக்ககூடிய இடமும் இதுதான்.

மாலை நேரங்களில் தேர்முட்டியடியில் ஐந்தாறு பெரிசுகள் நாலைந்து இளசுகள் கூடி ஊர் விடுப்பு,அரசியல் கதைப்பது வழக்கம் .கந்தர் ஊரில் நின்றால் நிச்சம் கலந்து கருத்தும் பகிர்ந்து கொள்வார்.தமிழர்கள் தனிநாடு கேட்டு போராட தொடங்கிய காலகட்டம்.

"உவங்கள் தனிநாடு கேட்கிறாங்கள்,உதால கொழும்பில் இருக்கிற எங்களுக்குதான் பிரச்சனை" என கந்தர் தன்னுடைய மனக்குறையை கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்த பெரிசுகள் சிங்களவனோட வாழ முடியாது எங்களை அவன் கல்வி,குடியேற்றம்,மற்றும் சந்தைகட்டிடங்களை தீ வைத்து பலவழிகளில் ஒதுக்கதொடங்கிவிட்டான் ஆகவே தனிநாடு தான் தீர்வு என்றார்கள் .இளசுகலும் உணர்ச்சிவசப்பட்டு தனிநாடுதான் ஒரே வழி என்றார்கள்.

கந்தர் ஊர் திருவிழா முடிவடைந்து கொழும்பு திரும்பினார்.இரண்டு கிழமையால் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு குடும்ப சகிதமாக கப்பலில் ஊர் வந்து சேர்ந்தார். அன்று மாலையே தேர்முட்டியடிக்கு வந்தார்.

"உவங்களாட வாழ ஏலாது தனிநாடுதான் ஒரே வழி .நான் இனி திரும்பி போக மாட்டேன் ஊரோடதானிருக்க போகிறேன்" என்று கூறியவர் பிள்ளைகளை எந்த பாடாசாலைக்கு அனுப்பலாம்,மற்றும் எந்த டியுட்டரி,டியுசன் மாஸ்டர் திறம் போன்ற விபரங்களை சுரேஸிடம் இருந்து அறிந்துகொண்டார்.

சுரேஸும் தான் போகும் டியுட்டரியும்,கல்விகற்கும் ஆசிரியர்கள், சிறந்தது என சொல்லிவைத்தான் .இதில் ஒரு உள் நோக்கமும் இருந்தது. கந்தரின் பிள்ளைகள் ஆரம்பகல்வியை கொழும்பிலுள்ள பிரபலமான கிறிஸ்தவ பாடசாலையில் படித்தார்கள். அதுமட்டுமன்றி கொழும்பு நாகரிகமும் அவர்களிடம் அதிகம் காணப்பட்டது.ஊர் இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும் ஒருவித கவர்ச்சி இருந்தது.பெண்களை இரட்டை சடையுடனும், அரைப்பவாடை பிளாவுஸ்,மற்றும் சுருக்குவைத்த முழுச்சட்டையுடன் பார்த்த ஊர் இளைஞர்களுக்கு ,மேலாடயை ஜீன்ஸுக்குள் விட்டு அங்கங்கள் ஒரளவு தெரியும் படி வீதியில் செல்லும் பெண்களை நிச்சமாக இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும்.சுரேஸின் உணர்வுகளையும் அந்த கவர்ச்சி தூண்டியது.

சுரேஸும் கண்ணனும் அனேகமாக ஊரில் ஒன்றாக ஊர்வலம் வருவார்கள்.கன்ன உச்சி வைத்து தலைமுடியை பக்கவாட்டில் இழுத்திருப்பான் சுரேஸ் கண்ணாடி முன்னால் நின்று அழகு பார்ப்பது குறைவு.கண்ணன் தலைமுடியைமேவி இழுத்து நாலுபேர் மத்தியில் தன்னை மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்க வேணும் என்று உடையணிந்து தன்னை அழகு படுத்திகொள்வான்.படிப்பிலும் சுரேசைவிட கேட்டிக்காரன்.கண்ணனின் இந்த தோற்றமும் கல்வியறிவும் கந்தரின் மூத்தவள் பிரியாவை கவர்ந்துவிட்டது.

கந்தருக்கு உலக அரசியல் ,கொழும்பு அரசியல் தெரிந்தளவுக்கு ஈழ அரசியலில் அறிவில்லை.ஈழநாடு,வீரகேசரி ,பத்திரிகை,கொழும்பு ஆங்கிலபத்திரிகை செய்திகளை படித்துவிட்டு தேர்முட்டியடி அரசியல் விமர்சனம் செய்வார்.அத்துடன் இயக்கங்களின் பெயர்களோ,அதன் தலைவர்கள் யார் என்பது பற்றிய அறிவுமில்லை.பாதுகாப்பு படைகளுக்கு எதிராக எதாவது தாக்குதல் நடந்தால் ,"பெடியள் அடிச்சு போட்டாங்கலாம் ,நல்ல அடியாம் மகே அம்மே என்று ஆர்மிகாரன் ஒடிட்டானாம்" என சொல்லி புலங்காகிதம் அடைவார்.அவங்களுக்கு உவங்கள் பெடியள் செய்யிறதுதான் சரி என நற்சான்றிதழ் வழங்குவார்.

இப்படிதான் ஒருநாள் கந்தரின் வீட்டுக்கு அருகாண்மையில் பொலிஸ் வணடிக்கு கிரனைட் தாக்குதலை செய்துவிட்டு பெடியள் தப்பி சென்றுவிட்டார்கள்.ஒரு பொலிஸதிகாரி மரணமடைய எனையோர் தலைமையகத்திற்கு தகவல் அனுப்பிவிட்டார்கள்.முப்படையும் ஸ்தலத்திற்க்கு விரைந்துவந்தனர்.மக்கள் வீடுவாசலைகளையும்,உடமைகளையும் விட்டு வேறு கிராமத்திற்கு ஒடினார்கள்.கந்தரும் குடும்பத்தோடு வெளிக்கிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

முப்படையினர் தங்களது ஆத்திரத்தை கிராமமக்களின் வீடுகளை,உடமைகளை தீ வைத்தும்,கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தும் தீர்த்து கொண்டார்கள்.பின்பு இரு நாட்கள் ஊரடங்கு சட்டம் போட்டு ஊரை காவல் காத்தார்கள்.

பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதிப்படைந்த கிராம மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்,அத்துடன் இளைப்பாரிய உச்சநீதிமன்ற நீதி பதியின் தலைமயில் விசாரனை நடை பெறும் என பத்திரிகையில் செய்திகள் வந்தன,ஆனால் நீதியும் ,நிதியும் மக்களுக்கு கிடைக்கவில்லை.மக்கள் தங்களது முயற்ச்சியால் இயங்கத்தொடங்கினார்கள். மீண்டும் தேர்முட்டி அரசியல் வியாக்கியானதை தொடங்கினார்கள்.

"உவங்கள் பெடியள் கிரனைட்டை காட்டுப்பகுதியில் போட்டிருந்தால் ஆர்மிக்காரன் எங்கன்ட இடத்தை உப்படி நாசம் பண்ணியிருக்கமாட்டாங்கள்"... அங்கும் இங்கும் திரும்பி பார்த்துவிட்டு " உவங்கள்பெடியள் செய்தது சரியான பிழை"என்றார் கந்தர்.

"அண்ணே கெரில்லா போர் என்றால் உப்படித்தான் இருக்கும்"

"அடே! பாதிக்கப்பட்டது நாங்கள்"

"அண்ணே நோகாமல் நொங்கு குடிக்கப் பாக்கிறீங்கள்"

ஊர் நிலமைகள் சரியில்லை என அறிந்த கந்தர் மீன்டும் கொழும்பு திரும்பினார் .மூத்தமகள் பிரியாவை மேல்படிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது மகளும்,மகனும் ஊரில் தாயாருடன் இருந்தார்கள்.லண்டனுக்கு ஒப்பின் விசா என அறிந்து விடியற்காலை பிரித்தானியா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தவம் இருந்து விசா பெற்று உடனடியாகவே லண்டன் பயணமானார்.

குடும்பத்தை லண்டன் அழைப்பதற்கான ஆயத்தங்களை செய்யத்தொடங்கினார்.மூத்தவளுக்கு அவுஸ்ரேலியா மாப்பிள்ளையை கட்டி கொடுத்தார். இரண்டாவது மகளும் ,மகனும் மருத்துவர்களாக லண்டனில் இருக்கின்றார்கள் .கந்தரும் மனைவியும் சிட்னிக்கும் லண்டனுக்கும் காலநிலைக்கு ஏற்றமாதிரி மாறிமாறி குடியிருப்பினம்.லண்டனில் வின்டர் என்றால் சிட்னியில் குடியிருப்பு. சிட்னியில் இருக்கும் பொழுது பேரப்பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு கந்தர் அழைத்து வருவார்.சுரேஸும் தனது பிள்ளைகளை அதே பாடசாலைக்கு அழைத்து செல்வான்.

"டேய் சுரேஸ் உவங்கள் ஒழுங்கா தமிழ் படிப்பிப்பாங்களோ"

"ஏன் அண்ணே அப்படி கேட்கீறீங்கள் என்ட பிள்ளைகள் உயர்தரம் வரை இங்க படிச்சவயள் அவர்கள் இப்ப நல்லா தமிழ் பேசுவினம்"

"உவங்கள் என்ட பேத்திக்கு போனமுறை மார்க்ஸ் போடும்பொழுது குறைச்சு போட்டாங்கள் அதுதான் கேட்டனான்"

"உவங்கள் இப்ப உந்த கேட்டை பூட்டிப்போடுவாங்கள் நான் போய் காரை உள்ள விடப்போகிறேன்" காரை உள்ளே விட்டுவிட்ட பின்பு வந்த கந்தர் மீண்டும் அரசியல் பக்கம் கதையை தொடங்கினார்

"ஐ.நா தீர்மானம் இந்த முறை உவங்களுக்கு வெற்றி கிடைக்கும்"

"யாருக்கு அண்ணே"

"கூட்டணிக்குத்தான்டா"

"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"யாருக்கு அண்ணே"

"கூட்டணிக்குத்தான்டா"
"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று"  :icon_idea: 

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டுத் தமிழன் சொல்வான் நான் இந்தியன் என்று!

இலங்கைத் தமிழன் சொல்வான் நான் சிறீலங்கள் என்று!

 

உவங்கள் என்றால் யார்? அவர்கள்தான் தமிழர்களோ??

 

புத்தனே உங்கள் ஆராச்சி அபாரம்!!!
 

Link to comment
Share on other sites

எங்கட ஊரிலயும் இப்பிடி ஒருத்தர் இருந்தார்.. முதலில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு.. ஒருமுறை ஏதோ ஒரு இயக்கம் பெற்றோல் தாங்கியை கடத்த.. ஹெலியில் வந்து முழங்கினான். அப்ப ஊரில் இல்லாத அரிச்சனை எல்லாம் இயக்கங்களுக்கு விழுந்தது. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், இந்தமுறை 'மேட்டுக்குடியை' ஒரு கை பாக்கிறதெண்டு முடிவெடுத்திட்டியள்! :D

 

என்னுடனும், சில பிரபலமான கூட்டணி 'எம்பி மாரின்' பிள்ளையள் படிச்சிருக்கினம்!

 

அந்தப் பெரியமனுசனின் குடும்பத்தை, ஒரு நல்லூர் திருவிழாவில் சந்தித்தேன்! நான் அவரது மகனுடன் நின்றிருந்தாலும், அவரும் என்னுடன் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்.

 

எங்கடை ஆங்கிலம் உங்களுக்குத் தெரியும் தானே....  what I mean..... If.... But .... So... எல்லாம் போட்டு ஒரு மாதிரி, மேடு பள்ளம் விழாமல் கதைச்சு முடிச்சம்! :lol:  

 

பிறகு கவனித்தால், அந்த முழுக்குடும்பமும், அங்கு 'சர்பத்' குடிச்சு முடியும்வரைக்கும் தனி ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடி முடித்தது! :icon_mrgreen:

 

இப்ப, இவங்களை 'எங்கடை' எண்டு எப்பிடிச் சொல்ல, மனம் வரும்!

 

அவங்கள் எப்பவமே, அவங்கள் தான்!  :o

 

கிறுக்கல் அருமை...! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவன் கண்ணன்  உவள் பிரியாவை முடித்து  உவர் கந்தருக்கு மருமோன் ஆயிட்டாரோ ...! :)

Link to comment
Share on other sites

சூப்பர் புத்தன் .

வெளியில் நின்று வெடி வாணம் விடுபவர்கள் தானே எங்கடை ஆட்கள் .அப்ப உவங்கள் என்றுதானே வரும் .

Link to comment
Share on other sites

கதைக்கு நன்றி புத்தன்.  எப்பவும் மற்றன் தியாகியாக போக நாங்கள் (அகதியாக) வெளிநாடு போக வேண்டும் என்பதுதானே எங்கள் வழக்கம். :)

 

 

ஒரு விடயம்

 

புலத்தில் வீடுகளில் நண்பர்கள் ஒன்று கூடுவது போல ஊரில் ஒன்று கூடுவதில்லை.

 

 

இந்த வரி கொஞ்சம் தவறு என்று நினைக்கின்றன். புலம் என்றால் நிலம் என்றுதான் பொருள். புலத்தில் என்று சொல்லும் போது அது ஊரைத்தான் குறிக்கும், வெளிநாட்டை அல்ல. (புலம் பெயர்ந்தவர்கள் என்பது ஊரை விட்டு பெயர்ந்தவர்கள்)

 

மற்றது, வரிகளுக்கிடையில் கொஞ்சம் இடைவெளி விட்டால் வாசிக்க இன்னும் கொஞ்சம் இலகுவாக இருக்கும் என்று நினைக்கின்றன். கண் சில நேரங்களில் வழி தவறி விடுகின்றது (அல்லது எனக்கு கண் பிரச்சனையோ தெரியாது)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"யாருக்கு அண்ணே"

"கூட்டணிக்குத்தான்டா"

"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று"  :icon_idea: 

 

நன்றிகள் விசுகு வருகைக்கும் பச்சைக்கும்....

தமிழ்நாட்டுத் தமிழன் சொல்வான் நான் இந்தியன் என்று!

இலங்கைத் தமிழன் சொல்வான் நான் சிறீலங்கள் என்று!

 

உவங்கள் என்றால் யார்? அவர்கள்தான் தமிழர்களோ??

 

புத்தனே உங்கள் ஆராச்சி அபாரம்!!!

 

 

நன்றிகள் பாஞ் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

எங்கட ஊரிலயும் இப்பிடி ஒருத்தர் இருந்தார்.. முதலில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு.. ஒருமுறை ஏதோ ஒரு இயக்கம் பெற்றோல் தாங்கியை கடத்த.. ஹெலியில் வந்து முழங்கினான். அப்ப ஊரில் இல்லாத அரிச்சனை எல்லாம் இயக்கங்களுக்கு விழுந்தது. :wub:

 

நன்றிகள் இசை வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

புத்தன், இந்தமுறை 'மேட்டுக்குடியை' ஒரு கை பாக்கிறதெண்டு முடிவெடுத்திட்டியள்! :D

 

என்னுடனும், சில பிரபலமான கூட்டணி 'எம்பி மாரின்' பிள்ளையள் படிச்சிருக்கினம்!

 

அந்தப் பெரியமனுசனின் குடும்பத்தை, ஒரு நல்லூர் திருவிழாவில் சந்தித்தேன்! நான் அவரது மகனுடன் நின்றிருந்தாலும், அவரும் என்னுடன் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்.

 

எங்கடை ஆங்கிலம் உங்களுக்குத் தெரியும் தானே....  what I mean..... If.... But .... So... எல்லாம் போட்டு ஒரு மாதிரி, மேடு பள்ளம் விழாமல் கதைச்சு முடிச்சம்! :lol:  

 

நன்றிகள் புங்கை ஐயா ...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

உவன் கண்ணன்  உவள் பிரியாவை முடித்து  உவர் கந்தருக்கு மருமோன் ஆயிட்டாரோ ...! :)

 

உவர் கந்தர் விட்டாத்தானே :D

சூப்பர் புத்தன் .

வெளியில் நின்று வெடி வாணம் விடுபவர்கள் தானே எங்கடை ஆட்கள் .அப்ப உவங்கள் என்றுதானே வரும் .

 

நன்றிகள் அர்ஜூன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

சூப்பர் புத்தன் .

வெளியில் நின்று வெடி வாணம் விடுபவர்கள் தானே எங்கடை ஆட்கள் .அப்ப உவங்கள் என்றுதானே வரும் .

 

நன்றிகள் நிழலி ....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....நீங்கள் கூறியவற்றை கவனத்தில் எடுக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கிறுக்கல் மாதிரி தெரியலையே..?

நியாயத்தை தானே சொல்லியிருக்கிறீர்கள்..?

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணியம் தனது இருப்புக்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும் என்பற்கு உங்கள் கதை ஓர் உரைகல் வாழ்த்துக்கள் புத்தன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவங்கள் உவங்கள் உதுகள் எங்கடையள் அதுகள் எல்லாம் எங்களுக்கு இப்ப நோமலாய்ப்போச்சுது.......வாற சோசல்காசு ஒழுங்காய் வந்துதெண்டால்  எனக்கு அது வந்தவரைக்கும் லாபம்  :lol:
 
புத்தன்! கடிச்சு குதறிட்டியள்... :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள் என்று ஒரு சாதாரண தலைப்பிட்டு அழகிய கருவைத் தந்தவருக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளை, வெருட்டி வைச்சிருக்கிறதுக்குத் தன்னும்... புலி வேணும். புத்தா....
இல்லாட்டி... உதுகளை, திருத்திறது... "கல்லிலை, நார் உரிக்கிற மாதிரி" இருக்கும். :D

Link to comment
Share on other sites

உவங்கள் வளமைபோல புத்தனின் கைவண்ணம் அசத்தல். எண்டாலும் உவங்கள் ஆரெண்டு சொல்லாமல் போயிட்டியள்: :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கிறுக்கல் மாதிரி தெரியலையே..?

நியாயத்தை தானே சொல்லியிருக்கிறீர்கள்..?

 

நன்றிகள் ராசவன்னியன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

யாழ்ப்பாணியம் தனது இருப்புக்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும் என்பற்கு உங்கள் கதை ஓர் உரைகல் வாழ்த்துக்கள் புத்தன் .

 

நன்றிகள் கோமகன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

உவங்கள் திருந்தமாட்டாங்கள் புத்தன். :rolleyes:

 

நன்றிகள் முதல்வன்

அவங்கள் உவங்கள் உதுகள் எங்கடையள் அதுகள் எல்லாம் எங்களுக்கு இப்ப நோமலாய்ப்போச்சுது.......வாற சோசல்காசு ஒழுங்காய் வந்துதெண்டால்  எனக்கு அது வந்தவரைக்கும் லாபம்  :lol:
 
புத்தன்! கடிச்சு குதறிட்டியள்... :D

 

நன்றிகள் கு.சா

உவங்கள் என்று ஒரு சாதாரண தலைப்பிட்டு அழகிய கருவைத் தந்தவருக்கு வாழ்த்துகள்.

 

நன்றிகள் கறுப்பி

உதுகளை, வெருட்டி வைச்சிருக்கிறதுக்குத் தன்னும்... புலி வேணும். புத்தா....

இல்லாட்டி... உதுகளை, திருத்திறது... "கல்லிலை, நார் உரிக்கிற மாதிரி" இருக்கும். :D

 

நன்றிகள் தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

உவங்கள் வளமைபோல புத்தனின் கைவண்ணம் அசத்தல். எண்டாலும் உவங்கள் ஆரெண்டு சொல்லாமல் போயிட்டியள்: :mellow:

 

நன்றிகள் சாந்தி..... யாரெண்டு சொன்னால் எனக்கு அடி விழும்....:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.