Jump to content

ரகசியத்தின் நாக்குகள் சொல்லும் கதை ( விமர்சனம் )


Recommended Posts

ரகசியத்தின் நாக்குகள் சொல்லும் கதை ( விமர்சனம்)

 
10014925_840819795944674_2033617915_o.jp

நெற்கொழு தாசனின் " ரகசியத்தின் நாக்குகள் " கவிதைத்தொகுதி வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன் . என்னுடன் கூடப் பயணித்த கொழுவனை பற்றி மற்றையவர்கள் அக்குவேறு ஆணிவேறாக ஆக்கபூர்வமாக விமர்சித்த பொழுது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. மற்றயவர்கள் நெற்கொழு தாசன் என்று அழைத்தாலும் நான் அவரை "கொழுவன்" என்றே அழைப்பது வழக்கம். அதற்கு காரணமும் இல்லாமலும் இல்லை. அவர் கவிதைகளுக்கான சொற்களை கொழுவுவதில் வல்லவர் .

நெற்கொழுதாசனின் கவிதை தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் காத்திரமான கவிதைகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. அனால் அவரின் பல கவிதைகள் " ஒப்பாரி கவிதைகள் " என்ற வகையிலேயே எனக்குத் தெரிகின்றது. சோகம் அல்லது பிரிவாற்றாமை என்பது வாசகர்களை கவரும் உத்திதான். ஆனால் ஒருவர் ஒப்பாரி வகையான கவிதைகளை தொடர்ந்தும் தந்து கொண்டிருப்பாரானால் அது வாசகர்களிடையே ஆரம்பத்தில் கவர்ந்தாலும், அது காலப்போக்கில் வாசகர்களிடையே ஒரு வித சலிப்பை ஏற்படுத்தி விடும் .உதாரணமாக

"இவர்களுக்கிடையில் நானும்.... "

"வன்மங்களையும், வக்கிரங்களையும் தோல்களாக்கி, 
அகதிப் போர்வைகளால் மூடிக்கொண்டவர்களின் ஊர்க் கதைகளாலும் 
ஏக்க விளிப்புக்களாலும் 
அரைகுறைத் தூக்கங்களாலும் 
நீண்ட தொடரூந்துகளும் 
நிலக்கீழ் வழித்தடங்களும் நிறைந்து கிடக்கின்றன.... 
என்னையும் சுமந்துகொண்டு... "


என்ற கவிதையில் ,புலம் பெயர் நாட்டில் உள்ள ஒருவனது இருப்பு பற்றிய ஆவேசம் வலிகளாக வெளிவருகின்றது . ஆனால் அந்த வலியை சொன்னால் மட்டும் போதுமா ?? அந்த வலியை வெற்றியாக்க வேண்டிய நம்பிக்கை தரும் கவி வரிகளை தவற விடுகின்றார் .

மேலும்

நாளை நானும்... ,  

"பரவுகின்ற வெறுமை 
தின்னத்தொடங்குகிறது 
ஒவ்வொன்றாக.... 
நான், 
இழந்து கொண்டிருக்கிறேன் 
கொஞ்சம் கொஞ்சமாக அந்த 
கூடுதிரும்பாத பறவையின் நினைவுகளை. நாளை, 
நானும் கூடு திரும்பாவிட்டால் ..." 
 

என்ற கவிதையில் தனது இருப்பு பற்றிய உறைநிலையையே காட்ட விழைகின்றார் . இந்த இரண்டு கவி வரிகளிலும்  , தான் இனி வருங்காலத்தில் எப்படி இருப்பேன் என்ற நம்பிக்கை தரும் ஒர்ம வரிகளை என்னால் அடயாளப்படுத்த முடியவில்லை. இதற்கு ஒரு உதாரணம் காட்டுகின்றேன் . எனது மதிப்புக்கு உரிய வ ஐ செ ஜெயபாலன் ஒரு கவிதையில் தனது இருத்தல் பற்றி இப்படி குறிப்பிடுவார்,

"இயற்கை மரணம்
எம்மை அழைக்கும் வரை
மூக்கும் முழியுமாக
வாழவே பிறந்தோம் !!


என்று. இது தான் இருத்தலுக்கான நம்பிக்கையான எதிர்வுகூறல் .

என்னைப் பொறுத்த வரையில் , நெற்கொழுதாசன் ஒரு குறிப்பிட்ட வகையான பாடுபொருளுக்குள் தன்னை அமிழ்தாது பல்முனை பாடுபொருள்களை கொண்டு கவி புனைய வேண்டும் . அதே வேளையில் எழுத்துச் சமசரங்களுக்கு இடம் கொடுக்காது மனதில் பட்டதை வெளியே கொண்டு வருகின்ற மனத்துணிவு இருக்க வேண்டும் . ஏனெனில் கூனிக் குறுகி , குழைந்து வளைந்து எழுதுபவர்கள் எல்லாம் காத்திரமான படைப்பாளியாக முடியாது .

இறுதியாக, இந்த நிகழ்வு யாரால் ஒழுங்கமைக்கப்பட்டது ?? என்பதனை விட அந்த நிகழ்வில் என்ன பேசப்பட்டது என்பதே முக்கியமாகின்றது . நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இருக்க பிரான்சின் மூத்த எழுத்தாளர்கள் " ரகசியத்தின் நாக்குகளை " காய்த்தல் உவத்தல் இன்றி விமர்சித்து இருக்கின்றார்கள் . இதே போன்று யாழ்ப்பாணத்தில் திருமலை கலாமன்றத்திலும் பல மூத்த படைப்பாளிகள் காய்த்தல் உவத்தல் இன்றி இவருக்கான விமர்சனங்களை தந்துள்ளார்கள். நெற்கொழுதாசனுக்கு ஓர் இலக்கிய அங்கீகரிப்பு இடம் பெற்று இருக்கின்றது . இந்த நிகழ்வானது மூத்த எழுத்தாளர்களுக்கும் வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கும் இடையில் ஓர்  இணைப்பு பாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும் . மேலும் நெற்கொழு தாசனின் ஏற்புரையில் " தன்னை போல பல குண்டுமணிகள் பிரசுர வசதிகள் இன்றி இருக்கின்றார்கள் . அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது இங்கு உள்ள மூத்த படைப்பளிகளுடைய கடமை " என்ற வேண்டுகோளுடன் விழா நிறைவுக்கு வந்தது .

மேலதிக படங்கள்:
 

 
10245425_853909097969077_1149169034_n.jp
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கோ...

 

Link to comment
Share on other sites

கோ ,

குக்கூ பார்க்க போனதின் திருப்தி அவர் பதிவில் தெரிகின்றது .

 

(ஒரு கல்யாண வீட்டிற்கு போய்வந்த பின் அங்கு நடந்த எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்க தக்க அங்கு சாப்பிட்ட சாப்பாட்டில் கத்தரிக்காய் குழம்பிற்கு உறைப்பு காணாது பருப்பிற்கு உப்பு காணாது என்று கதைப்பவர்களும் இருக்கின்றார்கள் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுய மதிப்பீடு?

 

உங்களுக்கு உறைப்புக்காணாதா?

உப்புக்காணாதா?? :( 

 

குக்கூ  பார்க்க  வந்திட்டு

என்ன  கேள்வி.......?? :( 

Link to comment
Share on other sites

நன்றி  கோ...

 

எதற்கு நன்றி ஐயா ?? எமது கள உறவை ஆக்க பூர்வமான விமர்சனத்தை கொடுத்தது அவருக்கு ஊக்க மருந்தை கொடுப்பது எமது கடமையல்லவா ?? உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உறைப்புக்காணாதா?

உப்புக்காணாதா?? :( 

 

குக்கூ  பார்க்க  வந்திட்டு

என்ன  கேள்வி.......?? :( 

 

அதில்லை விசுகர், "சுய மதிப்பீடு" எண்டதும் நெற்கொழு தாசன் எழுதினதாக்கும் எண்டு நான் வந்து பாத்தன். கோ "என் மதிப்பீடு" எண்டு போட்டிருக்கலாம்!

Link to comment
Share on other sites

கோ ,

குக்கூ பார்க்க போனதின் திருப்தி அவர் பதிவில் தெரிகின்றது .

 

(ஒரு கல்யாண வீட்டிற்கு போய்வந்த பின் அங்கு நடந்த எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்க தக்க அங்கு சாப்பிட்ட சாப்பாட்டில் கத்தரிக்காய் குழம்பிற்கு உறைப்பு காணாது பருப்பிற்கு உப்பு காணாது என்று கதைப்பவர்களும் இருக்கின்றார்கள் )

 

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அர்ஜுன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பார்வையைப்பதிந்துள்ளீர்கள் நன்றி கோமகன்

 

இருப்பினும்,

யாழின் உறுப்பினர்கள் இருவர் (நீங்கள் மற்றது விசுகர்) அந்நிகழ்வுக்குச் சென்றிருந்தும் அவருடைய நூல்வெளியீடு பற்றிய கட்டுரையை முழுமைப்படுத்தவில்லை என்பது பெருங்குறையே....  நீங்கள் இருவரும் நிழற்படங்களில் தெளிவாகத் தெரிகிறீர்கள்.

Link to comment
Share on other sites

சுய மதிப்பீடு?

 

தவறுக்கு வருந்துகின்றேன் சுட்டிக்காடியமைக்கு மிக்க நன்றி . கருத்துக்களத்தில் வாத்தியார் இல்லாத குறை இப்பதான் தெரியுது  :lol:  :D  :D  .வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி  :)  .

Link to comment
Share on other sites

உங்கள் பார்வையைப்பதிந்துள்ளீர்கள் நன்றி கோமகன்

 

இருப்பினும்,

யாழின் உறுப்பினர்கள் இருவர் (நீங்கள் மற்றது விசுகர்) அந்நிகழ்வுக்குச் சென்றிருந்தும் அவருடைய நூல்வெளியீடு பற்றிய கட்டுரையை முழுமைப்படுத்தவில்லை என்பது பெருங்குறையே....  நீங்கள் இருவரும் நிழற்படங்களில் தெளிவாகத் தெரிகிறீர்கள்.

 

உண்மையில் எனக்கு இந்த வரிகள் விளங்கவில்லை . எனது பார்வையில் ஓர் விமர்சனக் கண்ணோட்டத்தில் இந்த நிகழ்வை தந்திருக்கின்றேன். விசுகரோ அவரின் பார்வையில் தந்திருக்கின்றார் . என்னைப் பொறுத்த வரையில் இருவரின் கண்ணோட்டங்கள் வேறாக இருந்தாலும் , யாழின் சார்பில் கொழுவனை மேலும் ஊக்கபடுத்துவதில் முளுமையடைந்ததாகவே எண்ணுகின்றேன் . ஆக்கத்தைப் படித்து கருத்து தந்ததிற்கு மிக்க நன்றிகள் வல்வை சகாரா  :)  :)  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பார்வையைப்பதிந்துள்ளீர்கள் நன்றி கோமகன்

 

இருப்பினும்,

யாழின் உறுப்பினர்கள் இருவர் (நீங்கள் மற்றது விசுகர்) அந்நிகழ்வுக்குச் சென்றிருந்தும் அவருடைய நூல்வெளியீடு பற்றிய கட்டுரையை முழுமைப்படுத்தவில்லை என்பது பெருங்குறையே....  நீங்கள் இருவரும் நிழற்படங்களில் தெளிவாகத் தெரிகிறீர்கள்.

 

எனக்கு இரண்டு பேரையும் தெரியாது படத்திலை இன்னார் இவரெண்டு தொட்டு காட்டினியளெண்டால் கற்பனை முகங்களை தூக்கி எறியலாம் எண்டு பாக்கிறன்... :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரண்டு பேரையும் தெரியாது படத்திலை இன்னார் இவரெண்டு தொட்டு காட்டினியளெண்டால் கற்பனை முகங்களை தூக்கி எறியலாம் எண்டு பாக்கிறன்... :D  :D

 

கு.சா அண்ணை இங்கு இணைக்கப்பட்ட படங்களில் இவ்விருவரும் இல்லை முகநூலில் பல பதிவுகள் நெற்கொழுவின் நூல் வெளியீடு தொடர்பாக பதியப்பட்டுள்ளன அவற்றில் ஒன்றில் இவர்கள் இருவரும் மிகத் தெளிவாகத் தெரிகிறார்கள் அத்தோடு இந்நூல் தொடர்பாக யாழுக்கு வெளியே நிறைய விடயங்கள் அறிய முடிந்தது அதனாலேயே நெற்கொழுவின் நூல் தொடர்பான ஒரு தெளிவான விமர்சனத்தை யாழில் பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தில் முழுமையடையவில்லை என்று எழுதியிருந்தேன் பட்... கோமகன் தனது பார்வையையும், விசுகு தனது பார்வையையும் மட்டுமே எழுதியிருந்தார்கள் அவ்வளவே... ஒரு படைப்பாளியின் நூல் வெளியீடு என்பது அந்த படைப்பாளியின் படைப்பியல் பற்றியே பேச வேண்டும். ஈழவர்களாகிய நம்மிடையே சமயம் வாய்க்கும்போது சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி பிழை சொல்லவும் குரூரமாக பழிவாங்கவும் பயன்படுத்தப்படும் களமாக தளமாக இலக்கியத்தளம் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலையான விடயம். அதே நேரம் குரூரமான மனவிகாரிகளைப்போன்று அவர்களைக்காட்டிலும் மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக எழுத முற்படுவதும் விரும்பத்தகாத ஒன்று. எது எவ்வாறாயினும் நெற்கொழுவின் நூல் வெளியீடு என்பது அந்த மென்மையான கவிஞனை காயப்படுத்த களம் சமைத்துவிட்டது. உண்மையில் இன்று வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு இது போன்ற சங்கடம் தொடர்ந்துவரும் காலங்களிலும் தொடரும். படைப்பாளிகள் சுதந்திரமானவர்களாக படைப்பிலக்கியங்களை படைக்கவேண்டும் அவர்களை கட்டுப்படுத்துவது அல்லது இதற்குள்தான் நிற்கவேண்டும் என்று வட்டம் கீறி நிற்கவைப்பதும் தவிர்க்கப்படவேண்டும். மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்வோம் இல்லை இவர்கள் எப்படி இப்படிச் சொல்லலாம் என்று கங்கணம் கட்டி மற்றத்தரப்பு மல்லுக்கட்டவேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை ஒரு மனநோயாளி பேசுவதற்கு பதிலளிக்க முற்பட்டால் யார் மனநோயாளி என்பது பார்வையாளனுக்குத் தெரியாது. ஏதோ என் மனதிற்கு பட்டதை எழுதினேன்...இவ்விடத்தில் எழுதுவது பொருத்தப்பாடுடையதா இல்லையா என்பது தெரியவில்லை இருப்பினும் கிடைக்கும் தருணங்களில் எழுதியே ஆகவேண்டும்.

 

இப்போதெல்லாம் இளம்படைப்பாளிகள் தமது நூல் வெளியீடு என்பதை இலக்கியத்தளம் சார்ந்து வெளியீடு செய்யப்பயப்படுகிறார்கள். ஏனெனில் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவர்களை அடுத்த கட்ட இலக்கிய நகர்வு நோக்கி பயணிக்கவைக்க மறுக்கிறது தேர்ந்த இலக்கியங்களை பெரிய அளவில் நமக்குள் வளர்க்கமுடியாத ஒரு சாபக்கேடு நம்மை ஆட்டிப்படைக்கிறது. அது தேசியத்துக்கு எதிரானவர்கள் மாற்றுக்கருத்தளர்கள் பேராலும் தேசியத்திற்கு மிக ஆதரவானவர்கள் பேராலும் புதிதாய் பிறப்பெடுக்கும் படைப்பிலக்கியவாதிகள் முகவரியற்றவர்களாக்கப்படுகிறார்கள். வெறுமனே தம்முடைய சொந்தங்களுடனும் ஊரவர்களுடனும் தமது இலக்கித் திறமையை விவாதிக்க ஆளில்லாத வெற்றுத்தளத்தில் வெளியீடு செய்யும் அபாக்கியம் நிகழ்கிறது. நமக்குள் விரிவடையாத இலக்கியத்தளம் இருக்கிறது. அவை தனிப்பட்ட சிலரின் சுயநலங்களுக்காகவும், சில தளங்கள் கடந்தகால தங்களின் வன்மங்களைத் தீர்ப்பதற்காகவும், சில குறிப்பிட்ட சிலருக்குள்ளாக முதுகு சொறிவதற்காகவும் மட்டுமே பயன்படுகின்றன. இலக்கியப்பசிகொண்ட ஆரோக்கியமான படைப்பாளிகளுக்கு இந்தத் தளங்களில் இருந்து எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை அப்படியே ஏதாவது நன்மையுண்டா என்று பார்த்தால் அந்தந்த குழுமநிலைகளுக்குள் படைப்பாளி உள்ளடக்கப்படுவதை தவிர்க்க முடியாமல் படைப்பாளி மௌனமாகிக் கொள்கிறான். இதுதான் இப்போது நம்மவர்களிடையே இலக்கியத்தளத்தில் நடப்பது. எப்போது இவற்றையெல்லாம் உடைத்து வெளிவருகிறோமோ அப்போது ஈழத்து இலக்கியங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்படும் நிலைக்கு எழுச்சி பெறும்.

 

எப்பிடியான அபந்தங்கள் நேரக்கூடாது என்று தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எண்ணி சில எண்ணங்களை எனக்குள் விதைத்தாரோ... காலம் அத்தகைய கெடுதிகளை மட்டுமே தனது கொள்கலனில் நிறைத்து வைத்திருக்கிறது.. வெற்று பெருமூச்சைத் தவிர இலக்கிய வெளியில் நம்மால் எதனைச் சாதிக்கமுடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை ஒரு படைப்பாளியின் நூல் வெளியீடு என்பது அந்த படைப்பாளியின் படைப்பியல் பற்றியே பேச வேண்டும். ஈழவர்களாகிய நம்மிடையே சமயம் வாய்க்கும்போது சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி பிழை சொல்லவும் குரூரமாக பழிவாங்கவும் பயன்படுத்தப்படும் களமாக தளமாக இலக்கியத்தளம் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலையான விடயம். அதே நேரம் குரூரமான மனவிகாரிகளைப்போன்று அவர்களைக்காட்டிலும் மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக எழுத முற்படுவதும் விரும்பத்தகாத ஒன்று. எது எவ்வாறாயினும் நெற்கொழுவின் நூல் வெளியீடு என்பது அந்த மென்மையான கவிஞனை காயப்படுத்த களம் சமைத்துவிட்டது. உண்மையில் இன்று வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு இது போன்ற சங்கடம் தொடர்ந்துவரும் காலங்களிலும் தொடரும். படைப்பாளிகள் சுதந்திரமானவர்களாக படைப்பிலக்கியங்களை படைக்கவேண்டும் அவர்களை கட்டுப்படுத்துவது அல்லது இதற்குள்தான் நிற்கவேண்டும் என்று வட்டம் கீறி நிற்கவைப்பதும் தவிர்க்கப்படவேண்டும். மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்வோம் இல்லை இவர்கள் எப்படி இப்படிச் சொல்லலாம் என்று கங்கணம் கட்டி மற்றத்தரப்பு மல்லுக்கட்டவேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை ஒரு மனநோயாளி பேசுவதற்கு பதிலளிக்க முற்பட்டால் யார் மனநோயாளி என்பது பார்வையாளனுக்குத் தெரியாது. ஏதோ என் மனதிற்கு பட்டதை எழுதினேன்...இவ்விடத்தில் எழுதுவது பொருத்தப்பாடுடையதா இல்லையா என்பது தெரியவில்லை இருப்பினும் கிடைக்கும் தருணங்களில் எழுதியே ஆகவேண்டும்.

இப்போதெல்லாம் இளம்படைப்பாளிகள் தமது நூல் வெளியீடு என்பதை இலக்கியத்தளம் சார்ந்து வெளியீடு செய்யப்பயப்படுகிறார்கள். ஏனெனில் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவர்களை அடுத்த கட்ட இலக்கிய நகர்வு நோக்கி பயணிக்கவைக்க மறுக்கிறது தேர்ந்த இலக்கியங்களை பெரிய அளவில் நமக்குள் வளர்க்கமுடியாத ஒரு சாபக்கேடு நம்மை ஆட்டிப்படைக்கிறது. அது தேசியத்துக்கு எதிரானவர்கள் மாற்றுக்கருத்தளர்கள் பேராலும் தேசியத்திற்கு மிக ஆதரவானவர்கள் பேராலும் புதிதாய் பிறப்பெடுக்கும் படைப்பிலக்கியவாதிகள் முகவரியற்றவர்களாக்கப்படுகிறார்கள். வெறுமனே தம்முடைய சொந்தங்களுடனும் ஊரவர்களுடனும் தமது இலக்கித் திறமையை விவாதிக்க ஆளில்லாத வெற்றுத்தளத்தில் வெளியீடு செய்யும் அபாக்கியம் நிகழ்கிறது. நமக்குள் விரிவடையாத இலக்கியத்தளம் இருக்கிறது. அவை தனிப்பட்ட சிலரின் சுயநலங்களுக்காகவும், சில தளங்கள் கடந்தகால தங்களின் வன்மங்களைத் தீர்ப்பதற்காகவும், சில குறிப்பிட்ட சிலருக்குள்ளாக முதுகு சொறிவதற்காகவும் மட்டுமே பயன்படுகின்றன. இலக்கியப்பசிகொண்ட ஆரோக்கியமான படைப்பாளிகளுக்கு இந்தத் தளங்களில் இருந்து எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை அப்படியே ஏதாவது நன்மையுண்டா என்று பார்த்தால் அந்தந்த குழுமநிலைகளுக்குள் படைப்பாளி உள்ளடக்கப்படுவதை தவிர்க்க முடியாமல் படைப்பாளி மௌனமாகிக் கொள்கிறான். இதுதான் இப்போது நம்மவர்களிடையே இலக்கியத்தளத்தில் நடப்பது. எப்போது இவற்றையெல்லாம் உடைத்து வெளிவருகிறோமோ அப்போது ஈழத்து இலக்கியங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்படும் நிலைக்கு எழுச்சி பெறும்.

எப்பிடியான அபந்தங்கள் நேரக்கூடாது என்று தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எண்ணி சில எண்ணங்களை எனக்குள் விதைத்தாரோ... காலம் அத்தகைய கெடுதிகளை மட்டுமே தனது கொள்கலனில் நிறைத்து வைத்திருக்கிறது.. வெற்று பெருமூச்சைத் தவிர இலக்கிய வெளியில் நம்மால் எதனைச் சாதிக்கமுடியும்?

நன்றி அக்கா... என் தொண்டைவரை வந்து சிக்கி இருந்தவைகளை எழுதி இருக்கிறீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எதிர் பார்த்த ஒன்று தான்..அதாவது ஒரு நிகழ்விற்கு அவர் வந்தார்,இவர் வந்தார் என்பதை விட,ஆக்க பூர்வமான விமர்சனங்களை எதிர்பார்ப்பது வழமை..அங்கே முதன்மை பெற்று இருந்தது ஒரு நூல் அதற்குள் என்ன விடையங்கள் அடக்கப்பட்டு இருந்தது..மற்றவர்களின் கணிப்பீடு எவ்வாறு இருந்தது பற்றிய விடையங்கள் தான் எமக்கு தற்போதைய காலத்தில் தேவைப்படுகிறது.

Link to comment
Share on other sites

நெற்கொழுவின் கவிதை தொகுப்பு இலங்கையில் வெளியிடப்பட்டது .அதற்கும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தோம் .எமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பட்டியல் தாண்டி யாழில் மிக சிறப்பாக நிகழ்வு நடை பெற்றிருந்தது .

அடுத்து பிரான்சில் நடந்தது .அங்கு என்ன நடந்தது .அங்கு என்ன நடந்தது என்று ஆக்கபூர்வமாக இதுவரை தெரியவில்லை .விசுகர் யார் என்ன பேசினார்கள் என்று ஒரு வார்த்தையும் சொல்லாமல் பொதுவாக அனைவரையும் சாடியிருந்தார் .நடந்ததே தெரியாமல் பச்சை குத்த பலர் இங்கு போட்டி .

கோ ,

வழக்கம் போல பட்டும் படாமலும் தனது பதிவை வைத்திருந்தார் . (துணிவு என்ற சொல் அவர் அகராதியில் என்றும் இருந்தில்லை )

யாரவாது வந்து இன்னார் ,என்னத்தை பேசினார் என்று எழுத மட்டும் ஊகத்தில் நாமும் போற்றியும் திட்டியும் தீர்ப்போம் .

இந்த இடைவெளிக்குள்   சகாறா தனது சயிக்கிளை ஓட்டி விட்டு போய்விட்டார் .

புதுவை  ஒரு அங்கிடுதட்டி அவருக்கு வக்கலாத்து வேறு .

மனிதராக நாம் மாறி  விமர்சனம் வைத்தால் ஒழிய நாங்கள் திருந்த இடமில்லை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழுவின் கவிதை தொகுப்பு இலங்கையில் வெளியிடப்பட்டது .அதற்கும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தோம் .எமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பட்டியல் தாண்டி யாழில் மிக சிறப்பாக நிகழ்வு நடை பெற்றிருந்தது .

அடுத்து பிரான்சில் நடந்தது .அங்கு என்ன நடந்தது .அங்கு என்ன நடந்தது என்று ஆக்கபூர்வமாக இதுவரை தெரியவில்லை .விசுகர் யார் என்ன பேசினார்கள் என்று ஒரு வார்த்தையும் சொல்லாமல் பொதுவாக அனைவரையும் சாடியிருந்தார் .நடந்ததே தெரியாமல் பச்சை குத்த பலர் இங்கு போட்டி .

கோ ,

வழக்கம் போல பட்டும் படாமலும் தனது பதிவை வைத்திருந்தார் . (துணிவு என்ற சொல் அவர் அகராதியில் என்றும் இருந்தில்லை )

யாரவாது வந்து இன்னார் ,என்னத்தை பேசினார் என்று எழுத மட்டும் ஊகத்தில் நாமும் போற்றியும் திட்டியும் தீர்ப்போம் .

இந்த இடைவெளிக்குள்   சகாறா தனது சயிக்கிளை ஓட்டி விட்டு போய்விட்டார் .

புதுவை  ஒரு அங்கிடுதட்டி அவருக்கு வக்கலாத்து வேறு .

மனிதராக நாம் மாறி  விமர்சனம் வைத்தால் ஒழிய நாங்கள் திருந்த இடமில்லை .

 

அர்யூன் உங்களின் கருத்திடுகை என்பது நான் எழுதியதை எவ்வளவு தூரத்திற்கு விளங்கி இருக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கிறது. அங்கிடுதட்டி வக்காளத்து என்பதன் அர்த்தம் என்ன?, இங்கு புதுவைக்காக எப்படிப்பட்ட வக்காளத்து வாங்கப்பட்டு உள்ளது என்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். என் கருத்திடல் பற்றிய நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.

 

Link to comment
Share on other sites

நெற்கொழுவின் கவிதை தொகுப்பு இலங்கையில் வெளியிடப்பட்டது .அதற்கும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தோம் .எமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பட்டியல் தாண்டி யாழில் மிக சிறப்பாக நிகழ்வு நடை பெற்றிருந்தது .

அடுத்து பிரான்சில் நடந்தது .அங்கு என்ன நடந்தது .அங்கு என்ன நடந்தது என்று ஆக்கபூர்வமாக இதுவரை தெரியவில்லை .விசுகர் யார் என்ன பேசினார்கள் என்று ஒரு வார்த்தையும் சொல்லாமல் பொதுவாக அனைவரையும் சாடியிருந்தார் .நடந்ததே தெரியாமல் பச்சை குத்த பலர் இங்கு போட்டி .

கோ ,

வழக்கம் போல பட்டும் படாமலும் தனது பதிவை வைத்திருந்தார் . (துணிவு என்ற சொல் அவர் அகராதியில் என்றும் இருந்தில்லை )

யாரவாது வந்து இன்னார் ,என்னத்தை பேசினார் என்று எழுத மட்டும் ஊகத்தில் நாமும் போற்றியும் திட்டியும் தீர்ப்போம் .

இந்த இடைவெளிக்குள்   சகாறா தனது சயிக்கிளை ஓட்டி விட்டு போய்விட்டார் .

புதுவை  ஒரு அங்கிடுதட்டி அவருக்கு வக்கலாத்து வேறு .

மனிதராக நாம் மாறி  விமர்சனம் வைத்தால் ஒழிய நாங்கள் திருந்த இடமில்லை .

 

எனக்கு துணிவு இல்லை எண்டு சொன்ன முதல் ஆள் நீங்கள்தான் எண்டு நினைக்கிறன்  :unsure:  . எனக்கு இரட்டை நாக்குகள் கிடையாது என்பதை யாழ் கருத்துக்கள வரலாற்றை திருப்பி பாருங்கள்  :)  :)  . வரலாறு முக்கியம் அமைச்சரே :lol: :lol: :D .

Link to comment
Share on other sites

எனக்கு இரண்டு பேரையும் தெரியாது படத்திலை இன்னார் இவரெண்டு தொட்டு காட்டினியளெண்டால் கற்பனை முகங்களை தூக்கி எறியலாம் எண்டு பாக்கிறன்... :D  :D

 

ஏன் இந்த கொலை வெறி  :lol:  :D  ? என்னட்டை கேட்டால் மெயிலிலை என்ரை படத்தை அனுப்புவன் தானே ஐயா  :)  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை இங்கு இணைக்கப்பட்ட படங்களில் இவ்விருவரும் இல்லை முகநூலில் பல பதிவுகள் நெற்கொழுவின் நூல் வெளியீடு தொடர்பாக பதியப்பட்டுள்ளன அவற்றில் ஒன்றில் இவர்கள் இருவரும் மிகத் தெளிவாகத் தெரிகிறார்கள் அத்தோடு இந்நூல் தொடர்பாக யாழுக்கு வெளியே நிறைய விடயங்கள் அறிய முடிந்தது அதனாலேயே நெற்கொழுவின் நூல் தொடர்பான ஒரு தெளிவான விமர்சனத்தை யாழில் பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தில் முழுமையடையவில்லை என்று எழுதியிருந்தேன் பட்... கோமகன் தனது பார்வையையும், விசுகு தனது பார்வையையும் மட்டுமே எழுதியிருந்தார்கள் அவ்வளவே... ஒரு படைப்பாளியின் நூல் வெளியீடு என்பது அந்த படைப்பாளியின் படைப்பியல் பற்றியே பேச வேண்டும். ஈழவர்களாகிய நம்மிடையே சமயம் வாய்க்கும்போது சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி பிழை சொல்லவும் குரூரமாக பழிவாங்கவும் பயன்படுத்தப்படும் களமாக தளமாக இலக்கியத்தளம் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலையான விடயம். அதே நேரம் குரூரமான மனவிகாரிகளைப்போன்று அவர்களைக்காட்டிலும் மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக எழுத முற்படுவதும் விரும்பத்தகாத ஒன்று. எது எவ்வாறாயினும் நெற்கொழுவின் நூல் வெளியீடு என்பது அந்த மென்மையான கவிஞனை காயப்படுத்த களம் சமைத்துவிட்டது. உண்மையில் இன்று வளர்ந்துவரும் படைப்பாளிகளுக்கு இது போன்ற சங்கடம் தொடர்ந்துவரும் காலங்களிலும் தொடரும். படைப்பாளிகள் சுதந்திரமானவர்களாக படைப்பிலக்கியங்களை படைக்கவேண்டும் அவர்களை கட்டுப்படுத்துவது அல்லது இதற்குள்தான் நிற்கவேண்டும் என்று வட்டம் கீறி நிற்கவைப்பதும் தவிர்க்கப்படவேண்டும். மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்வோம் இல்லை இவர்கள் எப்படி இப்படிச் சொல்லலாம் என்று கங்கணம் கட்டி மற்றத்தரப்பு மல்லுக்கட்டவேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை ஒரு மனநோயாளி பேசுவதற்கு பதிலளிக்க முற்பட்டால் யார் மனநோயாளி என்பது பார்வையாளனுக்குத் தெரியாது. ஏதோ என் மனதிற்கு பட்டதை எழுதினேன்...இவ்விடத்தில் எழுதுவது பொருத்தப்பாடுடையதா இல்லையா என்பது தெரியவில்லை இருப்பினும் கிடைக்கும் தருணங்களில் எழுதியே ஆகவேண்டும்.

 

இப்போதெல்லாம் இளம்படைப்பாளிகள் தமது நூல் வெளியீடு என்பதை இலக்கியத்தளம் சார்ந்து வெளியீடு செய்யப்பயப்படுகிறார்கள். ஏனெனில் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அவர்களை அடுத்த கட்ட இலக்கிய நகர்வு நோக்கி பயணிக்கவைக்க மறுக்கிறது தேர்ந்த இலக்கியங்களை பெரிய அளவில் நமக்குள் வளர்க்கமுடியாத ஒரு சாபக்கேடு நம்மை ஆட்டிப்படைக்கிறது. அது தேசியத்துக்கு எதிரானவர்கள் மாற்றுக்கருத்தளர்கள் பேராலும் தேசியத்திற்கு மிக ஆதரவானவர்கள் பேராலும் புதிதாய் பிறப்பெடுக்கும் படைப்பிலக்கியவாதிகள் முகவரியற்றவர்களாக்கப்படுகிறார்கள். வெறுமனே தம்முடைய சொந்தங்களுடனும் ஊரவர்களுடனும் தமது இலக்கித் திறமையை விவாதிக்க ஆளில்லாத வெற்றுத்தளத்தில் வெளியீடு செய்யும் அபாக்கியம் நிகழ்கிறது. நமக்குள் விரிவடையாத இலக்கியத்தளம் இருக்கிறது. அவை தனிப்பட்ட சிலரின் சுயநலங்களுக்காகவும், சில தளங்கள் கடந்தகால தங்களின் வன்மங்களைத் தீர்ப்பதற்காகவும், சில குறிப்பிட்ட சிலருக்குள்ளாக முதுகு சொறிவதற்காகவும் மட்டுமே பயன்படுகின்றன. இலக்கியப்பசிகொண்ட ஆரோக்கியமான படைப்பாளிகளுக்கு இந்தத் தளங்களில் இருந்து எந்த நன்மையும் கிடைத்துவிடப்போவதில்லை அப்படியே ஏதாவது நன்மையுண்டா என்று பார்த்தால் அந்தந்த குழுமநிலைகளுக்குள் படைப்பாளி உள்ளடக்கப்படுவதை தவிர்க்க முடியாமல் படைப்பாளி மௌனமாகிக் கொள்கிறான். இதுதான் இப்போது நம்மவர்களிடையே இலக்கியத்தளத்தில் நடப்பது. எப்போது இவற்றையெல்லாம் உடைத்து வெளிவருகிறோமோ அப்போது ஈழத்து இலக்கியங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்படும் நிலைக்கு எழுச்சி பெறும்.

 

எப்பிடியான அபந்தங்கள் நேரக்கூடாது என்று தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எண்ணி சில எண்ணங்களை எனக்குள் விதைத்தாரோ... காலம் அத்தகைய கெடுதிகளை மட்டுமே தனது கொள்கலனில் நிறைத்து வைத்திருக்கிறது.. வெற்று பெருமூச்சைத் தவிர இலக்கிய வெளியில் நம்மால் எதனைச் சாதிக்கமுடியும்?

 

உங்களுடைய  கருத்துடனும்

வருத்தத்துடனும்

ஆவேசத்துடனும்  ஒத்துப்போகின்றேன்....

 

இந்த நடைமுறை மாற்றப்படணும் என்ற நிலையிலேயே  நானும் இருந்தேன்

இருக்கின்றேன்

இதற்காக பல முயற்சிகளையும்   செய்து தோற்றவன்  என்ற  வருத்தமும் உண்டு

இறுதியாக எமது  ஊர்ச்சங்கத்தினூடாக  

சில புத்தக  மற்றும் குறுவெட்டு வெளியீடுகளைச்செய்த போதும் கூட

கசப்பான அனுபவங்களே நடந்தேறின

அத்துடன்

மாற்றுவோம் என  ஒன்றிணைந்தவர்கள்

வெளியீட்டுக்கு கிடைத்த பணத்தை ஒரு சதமும் தெளியாது சென்றுவிட

ஒருங்கமைத்த  நாம் சுமையைச்சுமந்ததும் நடந்தேறியது.......

அந்த  சோக  கீதத்தினை  இங்கு எழுத விரும்பவில்லை...

 

எனது திரியை  ஆரம்பிக்கும் முதலே

அது பற்றி  எழுதியிருந்தேன்......

 

...........................................................................................................................................................................................

நன்றி  தம்பி  நெற்கொழு.....

 

நான் எனது பார்வையில் என்று மட்டுமே  எழுதுவேன்

அது தங்களது  நூல் வெளியீட்டு விழாவின் பிரதிபலிப்பாக  இருக்குமே தவிர

நூலினைப்பற்றிய பார்வையாக இராது

அதனை வேறு எவராவது யாழில்  செய்தால் நன்றாக இருக்கும்

Link to comment
Share on other sites

ஏன் இந்த கொலை வெறி  :lol:  :D  ? என்னட்டை கேட்டால் மெயிலிலை என்ரை படத்தை அனுப்புவன் தானே ஐயா  :)  ?

 

பாவம் குமாரசாமியார் நித்திரை இல்லாமல் அலைய போறார் :D  :lol:

Link to comment
Share on other sites

நானும் எதிர் பார்த்த ஒன்று தான்..அதாவது ஒரு நிகழ்விற்கு அவர் வந்தார்,இவர் வந்தார் என்பதை விட,ஆக்க பூர்வமான விமர்சனங்களை எதிர்பார்ப்பது வழமை..அங்கே முதன்மை பெற்று இருந்தது ஒரு நூல் அதற்குள் என்ன விடையங்கள் அடக்கப்பட்டு இருந்தது..மற்றவர்களின் கணிப்பீடு எவ்வாறு இருந்தது பற்றிய விடையங்கள் தான் எமக்கு தற்போதைய காலத்தில் தேவைப்படுகிறது.

 

என்னால் முடிந்த அளவு இதில் செய்திருக்கின்றேன் . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி யாயினி .

 

Link to comment
Share on other sites

நன்றி அக்கா... என் தொண்டைவரை வந்து சிக்கி இருந்தவைகளை எழுதி இருக்கிறீர்கள்..

 

வரவுக்கு மிக்க நன்றி சுபேஸ் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற சனியன்று நான் பரீசிலுள்ள புத்தகக் கடைகளில்  இப் புத்தகத்தை  வாங்குவதற்காக (அறிவாலயம் , தமிழாலயம்) விசாரித்தேன். தங்களுக்கு கிடைக்கவில்லை என்று சொன்னார்கள்.

 

அப்படியே தமிழ்சூரியனின் சீடீயும்  ( லுன்னில்)  வாங்க முடியவில்லை...!

Link to comment
Share on other sites

 

 

அப்படியே தமிழ்சூரியனின் சீடீயும்  ( லுன்னில்)  வாங்க முடியவில்லை...!

சுவி அண்ணா சில நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட cd கள் வெளியே செல்லாதவாறு எதோ நடந்திருக்கு ........அலசி ஆராய்ந்து எனது எனேர்ஜிஜை விரயமாக்க விரும்பவில்லை .அதனால் நானே சமருக்கு  களத்தில் நேரடியாக இறங்குவதென்று தீர்மானித்துள்ளேன் .வெகு விரைவில் cd  உங்கள் நாட்டிற்கு கிடக்கும் அண்ணா .நன்றிகள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.