Jump to content

”டிப்ரஷன்” நோயால் வாழ்க்கையை இழந்து தவிக்கும்.... இளையோர்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11-1397181754-stress5456-600.jpg

 

”டிப்ரஷன்” நோயால் வாழ்க்கையை இழந்து தவிக்கும் இளைஞர்கள்.

 

இன்றைய விரைந்து ஓடும் காலகட்டத்தில் எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றது ஒரு புது வியாதி.

 

குறிப்பாக இளைஞர்களைத் தாக்கும் இவ்வியாதி கிட்டதட்ட அவர்களை அழிவுப்பாதையிலேயே தள்ளி விட்டு விடுகின்றது.

 

உடலில் ஏற்படும் நோய்க்கு கூட மருந்து உண்டு.ஆனால், "டிப்ரஷன்" என்று அழைக்கப்படும் இம்மனச்சிதைவு நோய்க்கு மருந்து இருந்தாலும் அது பலனளிப்பதில்லை.

 

தவறான எண்ணங்கள்:

மாறிவரும் கால கட்டத்தில் வாழ்க்கை என்பது இளைஞர்களைப் பொறுத்தவரை காதல் பூக்கும் உலகம், பணம் காய்க்கும் தொழில், நாகரிக அரக்கன் என்றவைகளை மட்டுமே கொண்ட ஒன்றாக நினைக்க வைத்துள்ளது.

 

எல்லைமீறும் ஆசைகள்:

ஆனால், அந்த அளவுகடந்த ஆசைகளில் எல்லைமீறிப்போய் அவர்கள் செய்யும் சில காரியங்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையையே அழித்து விடுகின்றது.பெற்றவர்களின் அன்பெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை.

 

டிப்ரஷன் என்னும் “எமன்”:

அவர்களைப் பொறுத்தவரையில் கைநிறைய சம்பளம் வாங்கும் நான் ஏன் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகின்றது. அதில் எல்லை மீறிப் போய் , காதல் படுகுழியில் விழுந்து, வாழ்க்கையின் தாத்பரியங்கள் புரியாமல் எல்லாவற்றையும் இழந்து கடைசியில் "டிப்ரஷன்" என்ற காலனுக்குள் சிக்கி காணாமலே போய் விடுகின்றனர்.

 
கூடா நட்பு கேடாய் முடியும்:

சரி அப்படி ஒன்று,இரண்டு பேர் தங்களின் நிலை புரிந்து, பாலின வேறுபாடுகளைக் கடந்து நல்ல நட்புடன் இருந்தாலும் மற்றவர்கள் விடுவதில்லை.நண்பனுக்கு உதவி செய்கின்றேன் என்ற பெயரில் அவர்களின் மனதை தூண்டி தவறான விசயங்களை விதைத்து விடுகின்றார்கள்.

 
வாழ்க்கை இழப்பு:

விளைவு எல்லாவற்றையும் இழந்து, மனச்சிதைவுக்கு உள்ளாகி, சரியான முடிவு எடுக்க முடியாமல் வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர்.

 
குடும்பம்தான் மருந்து:

குடும்ப சூழல், கூட்டுக்குடும்பம் என்ற முடிச்சுகள் நம்மை கட்டிப்போடுவதற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல.நம்முடைய வாழ்க்கை எப்போதும் தறிகெட்டு போய்விடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட சொர்க்கங்கள் அவை. வாழ்க்கை முழுதும் நமக்காக அர்ப்பணித்த பெற்றோருக்கு கண்டிப்பாக நமக்கு எது நல்லது என்பதையும் தெரிய வைக்க முடியும்.

 

மனச்சிதைவுக்கு மருந்து:

எனவே, இளைஞர்கள் இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி, சிதைந்து தற்கொலை முடிவிற்கு போகும் நிலைமையை தடுக்க ஒரே வழி குடும்பத்தினர் காட்டும் பரஸ்பர பாசம் மற்றும் அன்பால் மட்டும்தான் முடியும்.வாழ்க்கையை புரிந்து அவர்களுடைய எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.இதுதான் இம்மனச்சிதை நோய்க்கு ஒரே மருந்தாகும்.

நன்றி தற்ஸ்தமிழ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமுதாய   அறிவூட்டல்  பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்கள் இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி, சிதைந்து தற்கொலை முடிவிற்கு போகும் நிலைமையை தடுக்க ஒரே வழி குடும்பத்தினர் காட்டும் பரஸ்பர பாசம் மற்றும் அன்பால் மட்டும்தான் முடியும்.வாழ்க்கையை புரிந்து அவர்களுடைய எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.இதுதான் இம்மனச்சிதை நோய்க்கு ஒரே மருந்தாகும்.

நன்றி - சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிப்பிரஷன் ஆண்களுக்கு மட்டும் தான் வருமா...??? நோய்களுக்கு ஆண்,பெண் என்ற பேதம் தெரியாது என்று நினைக்கிறன்..எல்லாம் அவர்,அவர் மனங்களைப் பொறுத்தது..சிலர் எவ்வளவு தான் பிரச்சனைகள் வந்தாலும் அதற்கு உரிய வைத்தியரை நாடும் அழவுக்கோ இல்லை மருந்துகளை எடுக்கும் அழவுக்கோ போவதில்லை.அதற்காக யோசனை,கவலைகள் அற்ற மனிதர்களாகவும் வாழ்கிறர்கள் என்றும் சொல்லி விட முடியாது. நோயாளிகளுக்கு  இரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலே உமக்கு அடிப்படையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது..இந்த வைத்தியரை ஒருக்கா பார்த்துட்டு வாறீரா என்று கேக்கிற குடும்ப வைத்தியர்களும் இருக்கிறார்கள்.அதாவது தங்களால் நோயாளிகளிடம்  அறிய முடியாத ஒன்றை வேறை விதமாக அறிய முற்படும் செயல்..இதை எல்லாம் முறியடித்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிப்பிரஷன் ஆண்களுக்கு மட்டும் தான் வருமா...??? நோய்களுக்கு ஆண்,பெண் என்ற பேதம் தெரியாது என்று நினைக்கிறன்..எல்லாம் அவர்,அவர் மனங்களைப் பொறுத்தது..சிலர் எவ்வளவு தான் பிரச்சனைகள் வந்தாலும் அதற்கு உரிய வைத்தியரை நாடும் அழவுக்கோ இல்லை மருந்துகளை எடுக்கும் அழவுக்கோ போவதில்லை.அதற்காக யோசனை,கவலைகள் அற்ற மனிதர்களாகவும் வாழ்கிறர்கள் என்றும் சொல்லி விட முடியாது. நோயாளிகளுக்கு  இரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலே உமக்கு அடிப்படையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது..இந்த வைத்தியரை ஒருக்கா பார்த்துட்டு வாறீரா என்று கேக்கிற குடும்ப வைத்தியர்களும் இருக்கிறார்கள்.அதாவது தங்களால் நோயாளிகளிடம்  அறிய முடியாத ஒன்றை வேறை விதமாக அறிய முற்படும் செயல்..இதை எல்லாம் முறியடித்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள்...

 

11-1397181771-depression1-600.jpg

 

யாயினி... உங்களது கேள்வி, என்னை மனம் குலையச் செய்து விட்டது.

காலையில்... வேலைக்குப் போகும், சிறிய இடைவெளியில்... இதனை கட்டாயம் யாழில் இணைக்க வேண்டும், என்ற அவசரத்தில்... தலைப்பையும், போட்ட படத்தையும்.... சரியாக, நான் தெரிவு செய்யாதற்காக... மன்னிக்கவும். :)

 

”டிப்ரஷன்” நோயால் வாழ்க்கையை இழந்து தவிக்கும் இளைஞர்கள். என்ற... தலைப்பை,

”டிப்ரஷன்” நோயால் வாழ்க்கையை இழந்து தவிக்கும்.... இளையோர்கள். என்று மாற்றியுள்ளேன்.

நான் போடும்... எல்லாத் தலைப்புக்களிலும், பெண்களின் படத்தையே... போடுவதால்.

இந்த்தத் தலைப்பில் மட்டும்... ஆண் இருக்கட்டுமே. :D

 

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட.... நிலாமதி அக்காவுக்கும், அன்புச் சகோதரன் விசுகுக்கும் நன்றி. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டுக்குடும்பம் இல்லாட்டி இல்லாத பொல்லாத வருத்தமெல்லாம் வரும்.
இப்பவெல்லாம் சீரழிஞ்ச வாழ்க்கை....புருசன் எத்தினை மணிக்கு வேலையாலை வருவான் எண்டு மனுசிக்கும் தெரியாது....மனுசி எத்தினைமணிக்கு வேலையாலை வருவ எண்டு மனுசனுக்கும் தெரியாது.... :o
பிள்ளையளுக்கு இரண்டும் தெரியாது...... ^_^
நாறல் சாப்பாட்டை சூடாக்கி சாப்பிட்டுக்கொண்டு கோலாவும் கார்ட்டூன் படமும் எண்டு கதை அந்தமாதிரி போகுது... :D
இப்பத்தையான் கார்ட்டூன் படத்தை பாக்க வேறை உலகத்திலை இருக்கிற பீலிங் எல்லாம் வரும்..... :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிப்பிரசன் அநேகமாக புலத்தில் இருப்பவர்கள் எல்லோருக்கும் உண்டு.ஆட்களைப் பொறுத்து/அவர்களது பிரச்சனைப் பொறுத்து கூட்டிக் குறையலாம். எனக்கும் கொஞ்ச காலம் இருந்தது இப்ப இல்லை நிம்மதியாய் இருக்கேன்.சனியன் என்னிடம் திரும்பி வரவே கூடாது:( இந்த நேரத்தில் வயிறு உப்பி போய் இருக்கும்,நெடுகப் பசிக்கும்,கோபம்,கோபமாய் வரும் என்பன சில அறிகுறிகளாகும். பதிவுக்கு நன்றி தமிழ்சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு 'சமுதாயப் பிரச்சனையைத்' தொட்டிருக்கிறீர்கள், தமிழ் சிறி!

 

தமிழர்களிடத்தில், இந்தப் பிரச்சனை மிகவும் அதிகம்!

 

எமது கலாச்சாரம், தெரிந்தோ, தெரியாமலோ, பல சுமைகளை எம்மீது ஏற்றி விடுகின்றது!

 

துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் எல்லாவற்றையும் சுமந்தேயாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் நிலையொன்று ஏற்படும்!

 

எமது கோவில்களாவது, இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒரு முக்கியமான 'பங்களிப்பை' வழங்க வேண்டும்!

 

ரதி சொன்னது போல, ஒவ்வொரு மனிதனின் அல்லது பெண்ணின் வாழ்க்கையிலும் ' ஒரு கட்டம்' வந்து போகும்!

 

அதை அடையாளம் காண்பதுடன், அது மீண்டும் வராமல் பார்த்துக்கொள்வதும் தான் மிகவும் முக்கியமானது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனஅழுத்தம் என்பது எல்லாவகையான மனிதர்களுக்கும் உள்ளது இல்லை என்று மறுதலிப்பவர்கள் மிகச்சிலரே. குறிப்பாக நம்மவர்களை எடுத்துக் கொண்டு அதாவது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை எடுத்துக் கொண்டால் விகிதாசாரத்தில் கூடிய அளவு பாதிப்புடையவர்களாக இருப்பதை அவதானிக்கலாம்.அடிப்படை வாழ்வுக்கான பிரச்சனைகள் பொருளாதாரம், சமூக வாழ்வு என்று பற்பல கோணத்தில் இந்த மனஅழுத்தம் பலரைத்துன்புறுத்துகிறது... இதில் ஒரு உண்மை எதுவென்றால் தமக்கு மன அழுத்தம் உள்ளதை பலர் அறிவதில்லை நீண்டகாலமாக இருக்கும் ஒரு விடயத்தை அடையாளம் கண்டு கொள்ளாமல் அது தமது இயல்பான குணம் என்பதாக நினைத்து கொள்கிறார்கள் அல்லது தாம் சார்ந்தவர்களின் குணங்கள் என்று அதனை அடையாளம் காண முற்படாமலே அதற்கு தம்மை முழுமையாக்கி விடுகிறார்கள் என்பதேயாகும். தொடர்ச்சியாக ஒருவருடன் உரையாடும்போது இலகுவாக கண்டு பிடித்துவிடலாம். பல சமயங்களில் இவருக்கு மன அழுத்தம் உள்ளது என்பதை காட்டிக் கொள்வதிலும் பார்க்க காட்டாமல் இருப்பதே நன்மையானதாகவும் இருக்கிறது.. ஏனெனில் மன அழுத்தம் தொடர்பாக நம்மவர்களுக்குள் போதிய தெளிவில்லாமையே.. மன அழுத்தம் என்பது ஏதோ பைத்தியக்காரப்பட்டத்தைத் தரும் என்பதுபோல் மிகப்பயங்கரமாக கற்பனைபண்ணப்பட்டுவிடும் அபாயம் நம்மவர்களுக்குள் அதிகம் சாதாரணமாக ஒருவருக்கு மன அழுத்தம் என்று நாங்கள் பேசிக்கொண்டாலே அடுத்த நாள் குறிப்பிட்ட அந்நபருக்கு மெண்டல் ஆக்கிப்போச்சு என்று கூறிக் கொள்ளும் கூர்ப்பியல்பு நம்மிடையே அதிகம். மன அழுத்தத்தைக்காட்டிலும் அது வெளியே மற்றவர்களுக்குத் தெரிந்து அதன் மூலம் தாம் ஏளனத்திற்கு ஆளாகி விடக்கூடாதே என்கிற தாக்கம் அதிகம் அதுவே வேறொரு பெருந்தாக்கத்திற்கு வழிவகுத்துவிடும்.... மன அழுத்தம் என்பதை பாதிக்கப்படுபவர் விருப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டால் மாத்திரமே பலனளிக்கக்கூடியது மற்றப்படி எந்த முயற்சியும் பலனளிக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.