Jump to content

என்ன பாட்டு போட? (இசை புதிர்)


Recommended Posts

பாடல் எண் 133: வாழ்வே மாயமா.. :D

 

https://www.youtube.com/watch?v=NUixEzeTpuI

Link to comment
Share on other sites

  • Replies 338
  • Created
  • Last Reply

சசிவர்மன் ஆரம்பத்தில் இணைத்த பாடல்களின் இடையிசையில் ஒரு இனிமை இருந்தது. கேட்க பரவசமாக இருந்தது. கடைசியாக இணைத்ததில் 130இல் ஒரு இனிமை இருக்கின்றது. மற்றவைகள் வெறும் சத்தமாக இருக்கின்றன.

ஆரம்பத்தில் தந்த பாடல்களின் இடையிசை அந்த பாடல்கள் தருகின்ற உணர்வுகளை வெளிப்படுத்தின. காட்சியையும் கண்முன்னே கொண்டு வந்தன.

உதாரணமாக "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு" பாடலின் இடையிசை, இது ஒரு பிரிவின் ஏக்கத்தில் பாடும் தாலாட்டு என்பதை சொல்லியது.

"ஏ புள்ள கருப்பாயி" பாடலின் இடையிசை இது இரவில் பாடும் ஒரு சோகப்பாடல் என்பதை உணர்த்தியது.

"செவ்வரளி தோட்டத்திலே உன்னை நினைச்சு" பாடலின் இடையிசை காமமும் காதலும் கலந்த பாடல் இது என்பதைக் காட்டியது.

இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை. போட்டி மட்டும்தான் இருக்கிறது. இனிமை குறைந்து கொண்டு போகின்றது.

Link to comment
Share on other sites

ஏன் யாரும் பதில் சொல்லவில்லை? பாடல் 130 பற்றி ஏதாவது க்ளு தரமுடியுமா? அது இசைஞானியின் இசை என்பது மட்டும் புரிகிறது. "இளங்கிளியே இன்னும் விளங்கலியே" தொடக்கம் "முதன் முதலாக காதல் டுயட்" எல்லாம் மனதில் வந்து போகிறது. ஆனல் சரியான பாடல் பிடிபடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 இதோ இன்றைய  பாடல்கள்: 

 

பாடல் எண் 134: https://soundcloud.com/write2ravi/song-134

பாடல் எண் 135: https://soundcloud.com/write2ravi/song-135

Link to comment
Share on other sites

பாடல் எண் 135: நீங்காத எண்ணம் ஒன்று.. நெஞ்சோடு உண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அனைவருக்கும் வணக்கம்,
ஒரு வாரமாக இசை புதிர் பகுதியில் பாடல்கள் இணைக்க முடியாமல் போனமைக்கு வருந்துகின்றேன். 
இதோ இன்றைய இசை சேர்க்கைகள், அனைத்தும் இசைஞானி அவர்களின் இசையில் வந்த பாடல்களே.
சில பாடல்கள் உங்களால் இலகுவாக இனம் காண முடியும் என நினைக்கிறன்.
பாடல் எண்  136 : https://soundcloud.com/write2ravi/song-136
பாடல் எண்  137 : https://soundcloud.com/write2ravi/song-137
பாடல் எண்  138 : https://soundcloud.com/write2ravi/song-138
பாடல் எண்  139 : https://soundcloud.com/write2ravi/song-139
பாடல் எண்  140 : https://soundcloud.com/write2ravi/song-140
 
 
Link to comment
Share on other sites

பாடல் எண் 137: தேடும் கண் பார்வை (மெல்லத் திறந்தது கதவு)

****************

பாடல் எண் 138: வானுயர்ந்த சோலையிலே.. (இதயக்கோயில்)

****************

பாடல் எண் 139: உதய கீதம் பாடுவேன்.. (உதயகீதம்)

Link to comment
Share on other sites

136: மூக்குத்திப் பூமேலே (சோக வடிவம்). ஆனால் இந்தப் படத்தின் இசை கங்கை அமரன். எழுத்தோட்டத்தில் இளையராஜா இசை அமைத்து விட்டு பிடிக்காமல் எறிவதை கங்கை அமரன் எடுத்து வந்து இசை அமைப்பதாக கார்ட்டுன் வடிவத்தில் காட்டுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் 140: வரச்சொல்லி அந்நேரம் வனக்குயில் அழைத்தது வந்தேன்

 

வணக்கம் சபேசன்,

மூக்குத்தி பூமேலே பாடலுக்கு நீங்கள் கொடுத்த மேலதிக தகவல்களுக்கு நன்றி.

பாடல் எண் 140 ~ நீங்கள்  இனம் காணவில்லை ..

நான் கூட கேட்கும் போது கொஞ்சம் குழம்பித்தான் போனேன். பெரிதாக நான் கேட்காத ஒரு பாடல்.

மூக்குத்தி பூமேலே போல ஒரு பாடலின் இன்னும் ஒரு வடிவம் (சோகம்)

 

Link to comment
Share on other sites

பாடல் எண் 130: https://soundcloud.c...e2ravi/song-130

பாடல் எண் 131: https://soundcloud.c...e2ravi/song-131

பாடல் எண் 132: https://soundcloud.c...e2ravi/song-132

பாடல் எண் 134: https://soundcloud.c...e2ravi/song-134

இளையராஜாவின் பாடல்களா இவை???

Link to comment
Share on other sites

சசி! என்னுடைய பதில் சரியானது. 140 பாடல் சிங்காரவேலனில் இடம்பெற்ற "புதுச்சேரி கச்சேரி" பாடலின் சோக வடிவமாகிய "வரச்சொல்லி இன்னேரம் வனக்குயில் அழைத்தது வந்தேன்" பாடல்தான். அதில் மாற்றமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி! என்னுடைய பதில் சரியானது. 140 பாடல் சிங்காரவேலனில் இடம்பெற்ற "புதுச்சேரி கச்சேரி" பாடலின் சோக வடிவமாகிய "வரச்சொல்லி இன்னேரம் வனக்குயில் அழைத்தது வந்தேன்" பாடல்தான். அதில் மாற்றமில்லை.

 

சபேசன் ... நீங்கள் ஆதாரங்களுடன் நிரூபித்த பிறகு நான் என்ன சொல்ல.

நீங்கள் கூறிய பதில் சரி தான். நான் பாடலின் இடையில் வந்த வரியை மனதில் நினைத்து இருந்தேன்.

Link to comment
Share on other sites

ஹ்ம்ம்ம்... கனடா நேரத்துக்கு ஒருத்தர் நித்திரை வராமல் நடு நிசி 12:50 இற்கு பாட்டுக்கள் இணைக்கின்றார், இன்னுமொருவர் அதிகாலை 5 மணிக்கு எழும்பி அதற்கு சரியான பதில்களைத் தருகின்றார்.

 

அப்ப, என்னை மாதிரி 6 மணிக்கு எழும்பி பிள்ளைகளை குளிப்பாட்டி சாப்பாடு தீத்தி ஸ்கூலுக்கு விட்டு விட்டு வேலைக்கு வரும்  புள்ள குட்டிக் காரன் எல்லாம் என்னப்பா செய்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நுனாவிலான்,
பாடல் 130 - 6 இல் இருந்து 60 வரை - இளையராஜா
பாடல் 131 - சௌந்தர்யமே வருக வருக  - விஜய பாஸ்கர்
பாடல் 134 - ராம் லக்ஷ்மன் - இளையராஜா

 

Link to comment
Share on other sites

#131 ரசம் பழரசம் (இன்று தான் இப்பாட்டை கேட்கிறேன். அருமையான பாடல்)
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் நுனாவிலான் சரியான பாடல்களை இணைத்தமைக்கு நன்றி.
#131 ரசம் பழரசம் - இந்த பாடலை s p பால சார் பாடி இருக்கும் விதம் வித்தியாசம்.
 
இதோ இன்றைய பாடல்கள் : 70 - 80 களில் வந்த S P B பாடல்கள் தான் இவை ...
 
பாடல் எண் 141: https://soundcloud.com/write2ravi/song-141
பாடல் எண் 142: https://soundcloud.com/write2ravi/song-142
பாடல் எண் 143: https://soundcloud.com/write2ravi/song-143
பாடல் எண் 144: https://soundcloud.com/write2ravi/song-144
 

ஹ்ம்ம்ம்... கனடா நேரத்துக்கு ஒருத்தர் நித்திரை வராமல் நடு நிசி 12:50 இற்கு பாட்டுக்கள் இணைக்கின்றார், இன்னுமொருவர் அதிகாலை 5 மணிக்கு எழும்பி அதற்கு சரியான பதில்களைத் தருகின்றார்.

 

அப்ப, என்னை மாதிரி 6 மணிக்கு எழும்பி பிள்ளைகளை குளிப்பாட்டி சாப்பாடு தீத்தி ஸ்கூலுக்கு விட்டு விட்டு வேலைக்கு வரும்  புள்ள குட்டிக் காரன் எல்லாம் என்னப்பா செய்றது?

 

வணக்கம் நிழலி.. முடிந்த வரையில் கனடா நேரத்தில் காலையில் பதிவுகளை இணைக்க முயற்சிக்கிறேன். பொறுப்புள்ள குடும்பத்த தலைவன் ஐயா நீர்...
இன்றைய இணைப்பில் உங்கள் கை வரிசையை காட்டலாம்...
 
Link to comment
Share on other sites

141-உனை எத்தனை முறை பார்த்தாலும் (என்று நினைக்கின்றன் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

141-உனை எத்தனை முறை பார்த்தாலும் (என்று நினைக்கின்றன் )

 

அர்ஜுன் முதல் விக்கெட்டை விழுத்தி விட்டார்... வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பாடல் எண் 144: மேகமே.. தூதாகவா.. அழகின் ஆராதனை... (மிகவும் பிடித்த பாடல்களுள் ஒன்று)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் நுனாவிலான், இசை, அர்ஜுன், 4 பாடல்களில் 3 பாடல்களை சரியாக இனம் கண்டு பதில் எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் .
பாடல் எண் 143 - க்ளு  ~ 
70 களில் வந்த திரைப்படம் , கவிஞர் கண்ணதாசன் எழுதி, M S V  இசை அமைத்து , பாலு அவர்கள் பாடிய  பாடல். இதே படத்தின் பெயரில் புதிய படம்(s ) கூட வந்துள்ளது. கிருஷ்ணாவை  நினைத்து பாடியது போல இருக்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்றைய பாடல்களின் இணைப்பு இதோ.
இதில் குறிப்பா எனக்கு மிகவும் பிடித்த ஒரு இசை கோர்வையை (பாடல் எண் 148) இணைத்து உள்ளேன்.
இப்பாடல் நடுவில் வரும் எல்லா இசை கோர்வைகளையும் சேர்த்துள்ளேன். 
ஒரு சாதாரண இசை ப்ரியனையும் வியக்க வைக்கும் இசை வடிவம் இது. இதில் இசை ஞானி அவர்கள் கலந்துள்ள புதிய (New age) இசை வடிவங்கள், துல்லியமாய் வாசிக்கப்படும் (conga drums), base guitar , அனைத்தையும்  தாண்டி இழைக்கப்படும் வயலீன் இசை (சில இடங்களில் பாடகர்கள் குரல் கொண்டு harmonizing) செய்வது போல ஒரு பிரமை ஏற்படும் அவ்வளவு கிளாரிட்டி இசையில்.
பாடும் நிலா பாலு இந்த பாட்டை வாழைப்பழம் சாப்பிடுவது  போல மிக மிக அனாயஷமாய்  பாடி உள்ளார். 
இசை ஞானி டொரோண்டோ கச்சேரியில் இதையெல்லாம் இசைப்பார் என்று நான் கனவு கூட கண்டு இருந்தேன். அது தான் நடக்க வில்லையே.. :( 
பாட்டை நீங்கள் எளிதாக கண்டு பிடிப்பீர்கள். உங்கள் மனதில் தோன்றுவதையும் எழுதுங்களேன் ..ப்ளீஸ்  
 
பாடல் எண் 145: https://soundcloud.com/write2ravi/song-145
பாடல் எண் 146: https://soundcloud.com/write2ravi/song-146
பாடல் எண் 147: https://soundcloud.com/write2ravi/song-147
பாடல் எண் 148: https://soundcloud.com/write2ravi/song-148
 
  
Link to comment
Share on other sites

பாடல் எண் 145: மடை திறந்து.. (நிழல்கள்)

****************

பாடல் எண் 146: தேன் மழையிலே.. தினம் நனையும் உன் நெஞ்சமே.. (புதியவன்)

*****************

பாடல் எண் 147: ஓ மைனா... ஓ மைனா..

********************

பாடல் எண் 148: வானம் கீழே வந்தால் என்ன (தூங்காதே தம்பி தூங்காதே)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.