Jump to content

என் வீட்டுச் சுவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது வீட்டு வரவேற்பறை பத்து வருடப் பழசு. ஆட்களைத்தான் மாற்ற முடியாது. சரி அறைகளின் வண்ணங்களையாவது மாற்றினால் மனதுக்கு இதமாக இருக்கும் எண்டு கணவரைக் கேட்டால், கணவர் அதுக்கென்ன மாத்துவம். எல்லாரும் சேர்ந்து பழைய பேப்பரை உரியுங்கோ. நான் பெயின்ற் அடிக்கிறன் என்றார். 

 

எனக்குத் தெரியும் உது நடக்காத வேலை எண்டு. ஏனென்டா போன வருசமும் இப்பிடித்தான் கொரிடோருக்குச் சொல்லி கடைசியா நான் தான் பெயின்ட் அடிச்சு முடிச்சது. அதனால நீங்களோ நாங்களோ ஒண்டும் செய்ய வேண்டாம். ஆட்களைப் பிடிச்சுச் செய்வம் எண்டு சொல்ல, வீணா ஏன் அவங்களுக்குக் காசு எண்டு இரண்டு மூண்டு நாள் இழுபறியில் பக்கத்து வீட்டில இருக்கிற போலந்துக் காரனைக் கேட்பதென முடிவெடுத்தேன்.

 

போன மாதம் அவன் முன் வீட்டு மதில் கட்டினதைப் பார்த்ததால் பக்கத்து வீட்டுக் காரன் எல்லா வேலையும் செய்வான் என எண்ணினேன். அடுத்த நாள் அவனைக் கண்டு கேட்க வீட்டினுள்ளே வந்து பார்த்துவிட்டு அதுக்கென்ன இரண்டு நாளில் செய்துவிடலாம். தளபாடங்களை ஒன்றாக அடுக்கி வை.நானே கவர் கொண்டுவந்து மூடிவிட்டு இன்னும் மூன்று நாட்களில் வேலையை ஆரம்ம்பிக்கிறேன் என்றான். நான் கூடக் காசு  வாங்கிறனான். நீ பக்கத்துவீடு என்பதால் £550 பவுண்ட்ஸ் தா என்றான். எனக்கோ சந்தோசம் பிடிபடவில்லை. கணவரிடம் கூறியபோது உது அதிகம் வேறு ஆட்களைப் பார்ப்போம் என்றார். இனி வேறு ஆட்கள் வேண்டாம். அவனையே வேலை செய்ய விடுவோம் என்றேன்.

 

சிறிது நேரத்தில் நானே பெயின்ற் வாங்கிறன். நீ நிறத்தைத் தெரிவு செய்து சொன்னால் போதும் என்று ஒரு புத்தகத்தையும் தந்துவிட்டுப் போட்டான். அவசர அவசரமா எல்லாச் சாமான்களையும் ஒதுக்கி எறிய வேண்டியதை எறிந்து ( அப்பதானே புதிது வாங்கலாம் ) சோபா செட், டிவி, சாப்பாட்டு மேசை, கதிரை எல்லாம் ஒண்டும் விடாமல் அடுக்கியாச்சு.

 

வியாழன் வாறன் எண்டு சொன்னவனைக் காணவில்லை. பகல் முழுதும் வேலைக்கும் போகாமல் இருந்தது ஒருபக்கம் சந்தோசம். இன்னும் அவனைக் காணவில்லையே என்ற எரிச்சலில் ஒரு மணிபோல் அவனது போனுக்கு அடித்தேன். நான் வெளியே ஒரு இடத்தில நிக்கிறன். வந்து உன்னோடு கதைக்கிறன் என்றவன் அன்று முழுவதும் வரவே இல்லை. எனக்குக் கோபம் ஒருபுறம் ஏமாற்றம் மறுபுறம் என்ன செய்வது என்று தெரியாமல் கணவருக்கு போன் செய்தேன்.

 

உனக்கு எப்போதும் எல்லாத்துக்கும் அவசரம் தான். இரண்டு மூண்டு பேரைக் கேட்டுப் போட்டுக் குடுத்திருக்கலாம் என்று எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார். இனி இவனைக் கொண்டு வேலை செய்விக்கக் கூடாது. நான் வேற ஆரையன் கூப்பிவம் என்றதற்கு பக்கத்து வீட்டுக் காரன். சும்மா மனஸ்தாபம் வேண்டாம். இண்டைக்கு வராட்டாலும் நாளைக்கு வருவான் தானே என்றார்.

 

சரி மனுஷன் சொல்லுறபடி கேட்டுத்தான் பாப்பம் என்றுவிட்டு இருந்தால் அடுத்த நாள் காலை வந்து இன்று வேலை தொடங்க முடியாது. எனக்கு ஒரு அவசர வேலை வந்துவிட்டது. சனியும் ஞாயிறும் நான் என் நண்பர்களுடன் வந்து செய்து முடித்துவிடுகிறேன் என்றான். சரி இனி என்ன செய்வது. ஒரு நாள் பொறுப்போம் என்று இருந்தால் சனிக்கிழமையும் வரவில்லை.

 

எனக்கோ கடும் கோபம். இனி உவனை வைத்து வேலை செய்யக் கூடாது என்றுவிட்டு ஒரு தமிழர் இருக்கிறார். அவருக்கு போன் செய்தார் கணவர். அவர் ஒரு வாரம் செல்லவே வருவதாகக் கூற வாங்கோ என்றுவிட்டார் கணவர். நான் போலந்துக் காரனுக்கு போன் செய்யவே இல்லை.

 

அடுத்த நாட் காலை நல்ல வெய்யில். வெள்ளனவே எழுந்து தோட்டத்தின் அழகை இரசித்துக்கொண்டு இருக்க, நீ விரும்பினால் இப்பொழுதே வேலை ஆரம்பிக்க முடியும் என்று பக்கத்து வீட்டுக் காரனிடமிருந்து போன். என்ன செய்வது என்று கணவருடன் கதைத்தால், சரி வரச் சொல் என்றார். வா என்று திரும்ப செய்தி அனுப்ப இரண்டு பேருடன் வந்தான். அட மூன்று பேர். அப்ப வேலை முடிந்து விடும் என்று எனக்குள் சந்தோசம். இரவு எட்டு மணிவரை மூன்று பேரும் சேர்ந்து பேப்பர் எல்லாம் உரித்து முடித்து, நாளை வந்து பிளாஸ்டர் செய்கிறோம் என்றுவிட்டுப் போய்விட்டனர்.

 

அடுத்த நாள் வந்து, நான் தெரியாமல் கூறிவிட்டேன். சாமான்கள் வாங்கவே நிறையக் காசு போட்டுது. இன்னும் £150 பவுண்ட்ஸ் தா என்றதும் எனக்குக் கோவம் வந்திட்டுது. நான் உனக்குக் கூட்டித் தர முடியாது. செய்யிறதானால் செய். அல்லது நான் வேறு யாரையாவது பார்க்கிறேன் என்றேன் கோபத்தோடு. சிறிது நேரம் ஒன்றும் கூறாது நின்றவன், சரி நானே செய்கிறேன். எனக்கு இதில் லாபம் இல்லை என்றபடி வேலையை ஆரம்பித்தான்.

 

அடுத்த நாளும் இன்னும் ஒருவருடன் வந்து சுவருக்குப் பூசிவிட்டு நான் ஊற்றிக் கொடுத்த கோப்பியையும் இருதடவை குடித்துவிட்டு, வேலை கிட்டத்தட்ட முடிந்தது. நாளை வந்து வெள்ளைப் பெயின்ட் அடித்தால் சுவர் எப்படி என்று தெரியும். அதன் பின் பைனல் கோட் அடிக்கலாம் நாளை உனது வேலை முடித்துவிடுவேன் அரைவாசிக் காசைத் தா என்றான். சரி என்று காசைக் கொடுத்துவிட்டு அடுத்த நாள் பார்த்துக்கொண்டு இருந்தால் ஆளைக் காணவில்லை. ஏன் நீ இன்று வரவில்லை என்றதற்கு நான் நாளைக்கும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.

 

இனி என்ன செய்வது முள்ளில் சேலையைப் போட்டாகி விட்டது. பொறுக்கத்தான் வேண்டும் என்று வரும் கோபத்தைஎல்லாம் அடக்கியபடி காத்திருந்தேன். அடுத்த நாள் வந்து வெள்ளை அடித்து முடித்தான். சுவர்களைப் பார்த்தபோது மூன்று இடங்களில் பள்ளம் திட்டிகள் தெரிந்தது. என்ன இது ?? முன்பு சுவர் ஒழுங்காக இருந்ததே என்ன செய்தாய் என்றேன் நான். உன் வீட்டுச் சுவர் சரியில்லை. நீ காசு கூடத் தந்திருந்தால் வடிவாச் செய்திருப்பேன் என்றான். நீ நினைச்சு நினைச்க்ச்சுக் காசு கேட்டால் தர முடியாது. ஒழுங்காக வேலையை முடித்தால் தான் மிகுதிப் பணம் தருவேன் என்று கூறிவிட்டு நின்று கதைக்காது அங்கால் சென்றுவிட்டேன்.

 

சிறிது நேரத்தில் மீண்டும் என்னை அழைத்தான். நீயே பெயிண்டை வாங்கு என்னால் முடியாது என்பவனை என்ன செய்வது என்ற கோபம் வந்தாலும் வேலை முடியவேண்டும் என்று சரி என்றேன்.

 

அடுத்த நாள் விடிய ஞாயிறு. இன்றுடன் வேலை செய்யத் தொடங்கி எட்டு நாட்கள். வீடு முழுவதும் புழுதி. வரவேற்பறையில் இருந்து தொலைபேசி பார்த்து பத்து நாட்கள். இருந்து சாப்பிட மேசை இல்லை. கடைசி மகளுக்கு பள்ளி விடுமுறை. ஐ பாட்டே கதி என தன் அறையுள் முடங்கிக் கிடந்தாள். அவர்கள் வேலை செய்யும் இடம் கடந்து குசினிக்குள் போட்டு வர ஆடை முழுதும் வெள்ளைப் புழுதி.

 

சரி இன்று வந்துவிடுவான் என்று பார்த்துக்கொண்டு இருக்க பதினோரு மணிவரை அவனைக் காணவில்லை. போன் செய்தால் வருகிறேன் என்றுவிட்டு ஆடிப் பாடி வாறான். இன்று அந்த இடங்களைச் சரி செய்துவிடுகிறேன் என்றபடி வேலையை ஆரம்பிக்க, நானும் கணணியைப் போட்டுவிட்டு அதற்குள் மூழ்கிவிட்டேன். ஒரு மணித்தியாலம் சென்றிருக்கும். இப்ப சுவருக்குப் பூசியிருக்கிறேன். இரண்டு மணித்தியாலம் செல்லும் காய. பெயின்ரை எடுத்துவை அடிக்க என்றுவிட்டுச் சென்றுவிட்டான். நான் சென்று சுவரைப் பார்த்தேன். நல்ல நேராய் இருந்த சுவர்கள் பல இடங்களில் மேடுபள்ளமாக இருந்தது. எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வர சிலவேளை என் கண்கள் தான் பிரச்சனையோ என்று கைகளால் தடவிப் பார்த்தேன். ஒரே மேடு பள்ளம். அவனுக்கு போன் செய்து வரச் சொன்னேன்.

 

வந்து நின்றவனிடம் ஏன் இப்படிச் சுவர் இருக்கிறது என்று கேட்க தான் அரம் கொண்டுவந்து தேய் த்துவிட்டுத் தான் பெயின்ற் அடிப்பேன் என்று சொன்னதும் நம்பிக்கை வந்தது.மாலை எழு மணி வரை பெயின்ட் அடித்துவிட்டு, முதல் கோட் முடிந்துவிட்டது. நாளை வந்து மிகுதியை அடிக்கிறேன் என்று கூற, நான் போய் சுவரைப் பார்த்தேன். மேடு பள்ளத்துடன் பெயிண்டை அடித்து முடித்திருந்தான்.

 

என்ன நீ அதை நிரவாமலேயே பெயின்ட் அடித்திருக்கிறாய். அதுவும் இது வரவேற்பறை. உனக்கு வேலை தெரியாதா என்றேன் கோபமாக. உண்மையில் நான் காப்பெண்டர். ஆனால் நான் நன்றாகத்தானே செய்திருக்கிறேன் என்றான். எனக்கு இத்தனைநாள் இழுபட்டும் வேலையை ஒழுங்காகச் செய்யவில்லையே என்ற ஆதங்கம். இப்படியே விட முடியாதே என்று அழுகை முட்டிக் கொண்டு வர, உனக்கு வேலை தெரியாவிட்டால் ஏன் தெரியும் என்று கூறினாய். என் நாட்களையும் வீட்டையும் பழுதாக்கி விட்டாயே என்று அழத் தொடங்கினேன். ரியலி சொறி என்றபடி கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான்.

 

அடுத்த இரண்டு மணிநேரம் நானும் கணவரும் பலருக்கும் போன் செய்து ஒருவாறு ஒரு சைனீஸ் காரனை தொடர்புகொண்டு என் கணவர் சுவரைப் பளுதாக்கிவிட்டார். உடனடியாக நீ உதவவேண்டும் என்று கெஞ்சுவது போல் கேட்டேன். சரி செவ்வாய் தான் என்னால் வரமுடியும் என்றவாறு எனது முகவரியைக் குறித்துக் கொண்டான்.

 

இன்னும் ஒருநாள். அவன் வருவானோ இல்லையோ என்று பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்காக   மிகவும் அனுதாப படுகிறேன். பக்கத்து வீட்டுக்  காரன் பாவம் பிழைக்கட்டும் என்று பார்ததால்வரும்  வினை...இனி என்ன செய்வது பொறுமையாக இருங்க .இலகுவில் எவரையும் நம்பாதேங்க .

 

முடிந்த்தும்படம் எடுத்துபோடுங்க.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் நம்பமாட்டியள் போனகிழமை என்ரை வீடு முழுக்க நான்தான் பெயின்ற் அடிச்சனான் icon6m_zps6069767e.gif....போயும் போயும் போலந்துக்காரனை நம்பி....... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிலா அக்கா, குமாரசாமி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் நம்பமாட்டியள் போனகிழமை என்ரை வீடு முழுக்க நான்தான் பெயின்ற் அடிச்சனான் icon6m_zps6069767e.gif....போயும் போயும் போலந்துக்காரனை நம்பி....... :D

 

பெயின்ட் கூட அடிச்சுப் போடலாம். சுவர் அழுத்தம் இல்லை. அது தான் பக்கத்துவீட்டுக் காரனைக் கேட்க வேண்டயதாப் போச்சு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலந்துக்காரன் எல்லாம் தெரிந்த மாதிரிக் காட்டுவான்... உள்ளுக்கு விசயமில்லை.
உள்ளுக்கு விசயமுள்ளவன், நேரமில்லாமல் வேறு இடங்களில்... வேலை செய்து கொண்டிருப்பான்.
இப்படியான... உள் வீட்டு வேலைகளுக்கு, அயல் வீட்டுக் காரனை கூப்பிட்டது முதல் தவறு.
இனி... அவனை அடிக்கடி காணும் போதெல்லாம்.... பிரசர் ஏறுவதை தவிர்க்க முடியாது.  :D

Link to comment
Share on other sites

அக்காவிற்கு ரிஸ்க் எடுக்கின்றதேன்றால் ரஸ்க் சாப்பிடுவது போல . :icon_mrgreen: .

வீட்டை விற்று விட்டு புது வீடு வாங்குங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர் வீட்டு சுவரில் பாம்பு உருண்டு தவண்டு பிரண்டு ஓடித்திரியுது.

Link to comment
Share on other sites

Estimate வாங்காமல் நான் எவரையும் வேலைக்கு எடுப்பதில்லை. அந்த estimate ஐ பார்க்கவே அவர்களின் திறன் பாதி தெரிந்துவிடும்.

Link to comment
Share on other sites

சுமே கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கதை சொல்லியாக வளருகின்றார். 

 

அது சரி,  மனுசர்ட முகத்தைப் பார்த்தே ஆள் எப்படி என்று கண்டுபிடிப்பன் என்று சொல்கின்ற உங்களால் போலந்து காரனின் முகத்தைப் படிக்கேலாமல் போய் விட்டதே. இன்னும் டிரெயின்ங் காணாது என்று நினைக்கின்றன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வு துரதிஷ்டவசம் ..மீண்டும் உங்கள் சுவர் அழகாய் பொலிவாய் கூடிய சீக்கிரம் மாறும்.

நீங்கள் பதிவை எழுதி இருந்த விதம் அருமை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கதை சொல்லியாக வளருகின்றார். 

 

அது சரி,  மனுசர்ட முகத்தைப் பார்த்தே ஆள் எப்படி என்று கண்டுபிடிப்பன் என்று சொல்கின்ற உங்களால் போலந்து காரனின் முகத்தைப் படிக்கேலாமல் போய் விட்டதே. இன்னும் டிரெயின்ங் காணாது என்று நினைக்கின்றன். :rolleyes:

சிரிச்சு வயிறு நோகுது நிழலி.  :D  :D  :D  :D  :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், சுமே!

 

எல்லாம் முடிய எனக்கொருக்கால், எவ்வளவு மொத்தமா முடிஞ்சுது எண்டு சொல்லுங்கோ...!

 

நானும் கு.சானா அண்ணை மாதிரித்தான்... எல்லாத்தையும் நானே செய்யிறது..!.  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயின்ட் கூட அடிச்சுப் போடலாம். சுவர் அழுத்தம் இல்லை. அது தான் பக்கத்துவீட்டுக் காரனைக் கேட்க வேண்டயதாப் போச்சு

 

 

போலந்துக்காரர் உந்த வேலையளுக்கு திறமான ஆக்கள் தான்....வேலையும் தெரிஞ்ச ஆக்கள்..அதோடை மலிவும்.....ஆனால் என்ன ஒண்டு பச்சைக்கள்ளர்....24 மணி நேரமும் கண்ணுக்கை எண்ணையை விட்டுக்கொண்டு  திரியோணும்......ஜேர்மனியிலை கார் இன்சூரன்ஸ் கூடினதெண்டால் உவங்களாலைதான்
 
அதோடை இன்னுமொண்டையியும் சொல்லோணும்....இஞ்சை எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்  வீட்டை வாங்கிப்போட்டு........வீட்டை திருத்த போலந்து சாமிக்கு 5000 ஈரோ குடுத்து ஏமாந்து போனார்.5000 ஈரோ குடுத்தது யன்னல் மாத்தவாம்.......போலந்துசாமி உப்பிடி எத்தினை இடத்திலை யன்னல் மாத்தினானோ ஆருக்குத்தெரியும்?..ரெலிபோன் அடிச்சால் இந்தா நாளைக்கு வாறன் எண்டு சொல்லுறானாம்......இதையே நூறு தரம் சொல்லியிருப்பானாம்....ரெலிபோன் கனெக் ஷனிலை அவன் இருக்கிறதே பெரிய புண்ணியமெண்டு வீடு வாங்கினவர் சொல்லுறார்......இதுக்காக வீடு வாங்கினவர் பொலிசு கோர்ட்டு கேசு.... எண்டு போகேலுமோ? ஏலாது....ஏனெண்டால் எல்லாம் கள்ள வேலையாச்சே.. :D
Link to comment
Share on other sites

எனது வீட்டு வரவேற்பறை பத்து வருடப் பழசு. ஆட்களைத்தான் மாற்ற முடியாது. சரி அறைகளின் வண்ணங்களையாவது மாற்றினால் மனதுக்கு இதமாக இருக்கும் எண்டு கணவரைக் கேட்டால், கணவர் அதுக்கென்ன மாத்துவம். எல்லாரும் சேர்ந்து பழைய பேப்பரை உரியுங்கோ. நான் பெயின்ற் அடிக்கிறன் என்றார்.

கணவனே கண்கண்ட தெய்வம் என்று அனுபவப் பட்டதுகள் சும்மா சொல்லவில்லை... கணவனை நம்பியிருந்தால் !  போலந்துக்காரனை நம்பி மோசம்போக வேண்டிய தேவையுமில்லை ! சீனாக்காரனிடமும் போகவேண்டி வந்திருக்காது !!. இருந்தாலும் சீனன் வருவான்....

 

'என் வீட்டுச் சுவர்.' சீன மதில்போல் நீண்டு தொடர வாழ்த்துக்கள் !! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் அலை, தமிழ்ச் சிறி, அர்ஜுன், முதல்வன், நிழலி, சசி,புங்கை பாஞ்ச ஆகியோருக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலந்துக்காரன் எல்லாம் தெரிந்த மாதிரிக் காட்டுவான்... உள்ளுக்கு விசயமில்லை.

உள்ளுக்கு விசயமுள்ளவன், நேரமில்லாமல் வேறு இடங்களில்... வேலை செய்து கொண்டிருப்பான்.

இப்படியான... உள் வீட்டு வேலைகளுக்கு, அயல் வீட்டுக் காரனை கூப்பிட்டது முதல் தவறு.

இனி... அவனை அடிக்கடி காணும் போதெல்லாம்.... பிரசர் ஏறுவதை தவிர்க்க முடியாது.  :D

 

அவனை மட்டுமில்லை அவனோடு இருக்கும் மற்றவரைப் பார்க்கவும் பிரசர் கூடுது :D

 

அக்காவிற்கு ரிஸ்க் எடுக்கின்றதேன்றால் ரஸ்க் சாப்பிடுவது போல . :icon_mrgreen: .

வீட்டை விற்று விட்டு புது வீடு வாங்குங்கள் .

 

அதுக்காக அதிஷ்டமான வீட்டை விக்க முடியுமோ ???

 

Estimate வாங்காமல் நான் எவரையும் வேலைக்கு எடுப்பதில்லை. அந்த estimate ஐ பார்க்கவே அவர்களின் திறன் பாதி தெரிந்துவிடும்.

 

ஏழரைச் சனி முடியிற நேரம். என் நேரம் சரியில்ல.

 

நிகழ்வு துரதிஷ்டவசம் ..மீண்டும் உங்கள் சுவர் அழகாய் பொலிவாய் கூடிய சீக்கிரம் மாறும்.

நீங்கள் பதிவை எழுதி இருந்த விதம் அருமை...

 

நன்றி சசி

சுமே கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கதை சொல்லியாக வளருகின்றார். 

 

அது சரி,  மனுசர்ட முகத்தைப் பார்த்தே ஆள் எப்படி என்று கண்டுபிடிப்பன் என்று சொல்கின்ற உங்களால் போலந்து காரனின் முகத்தைப் படிக்கேலாமல் போய் விட்டதே. இன்னும் டிரெயின்ங் காணாது என்று நினைக்கின்றன். :rolleyes:

 

நான் சொன்னது தமிழற்ற முகத்தைத்தான் :lol:

 

போலந்துக்காரர் உந்த வேலையளுக்கு திறமான ஆக்கள் தான்....வேலையும் தெரிஞ்ச ஆக்கள்..அதோடை மலிவும்.....ஆனால் என்ன ஒண்டு பச்சைக்கள்ளர்....24 மணி நேரமும் கண்ணுக்கை எண்ணையை விட்டுக்கொண்டு  திரியோணும்......ஜேர்மனியிலை கார் இன்சூரன்ஸ் கூடினதெண்டால் உவங்களாலைதான்
 
அதோடை இன்னுமொண்டையியும் சொல்லோணும்....இஞ்சை எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்  வீட்டை வாங்கிப்போட்டு........வீட்டை திருத்த போலந்து சாமிக்கு 5000 ஈரோ குடுத்து ஏமாந்து போனார்.5000 ஈரோ குடுத்தது யன்னல் மாத்தவாம்.......போலந்துசாமி உப்பிடி எத்தினை இடத்திலை யன்னல் மாத்தினானோ ஆருக்குத்தெரியும்?..ரெலிபோன் அடிச்சால் இந்தா நாளைக்கு வாறன் எண்டு சொல்லுறானாம்......இதையே நூறு தரம் சொல்லியிருப்பானாம்....ரெலிபோன் கனெக் ஷனிலை அவன் இருக்கிறதே பெரிய புண்ணியமெண்டு வீடு வாங்கினவர் சொல்லுறார்......இதுக்காக வீடு வாங்கினவர் பொலிசு கோர்ட்டு கேசு.... எண்டு போகேலுமோ? ஏலாது....ஏனெண்டால் எல்லாம் கள்ள வேலையாச்சே.. :D

 

 

உண்மைதான் கள்ளம் செய்தால் தண்டனையையும் அனுபவிக்கத்தான் வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கணவர் சுவரைப் பளுதாக்கிவிட்டார்

கடைசியில கணவன்மாரில பிழையை போட்டுவிட்டு தப்பிட்டீங்கள்.....பாவம் அந்த மனுசன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவனே கண்கண்ட தெய்வம் என்று அனுபவப் பட்டதுகள் சும்மா சொல்லவில்லை... கணவனை நம்பியிருந்தால் !  போலந்துக்காரனை நம்பி மோசம்போக வேண்டிய தேவையுமில்லை ! சீனாக்காரனிடமும் போகவேண்டி வந்திருக்காது !!. இருந்தாலும் சீனன் வருவான்....

 

'என் வீட்டுச் சுவர்.' சீன மதில்போல் நீண்டு தொடர வாழ்த்துக்கள் !! :)

 

இனிச் சீனன் வந்தால் அவன் வேலை செய்து முடியும் மட்டும் நான் சீனனோட நிண்டு பாக்கிற வேலை தான் :D

சிரிச்சு வயிறு நோகுது நிழலி.  :D  :D  :D  :D  :D  :D  :D

 

உதுக்குப் பொய் ஆறும் சிரிப்பினமோ சுபேஸ்.

 

கடைசியில கணவன்மாரில பிழையை போட்டுவிட்டு தப்பிட்டீங்கள்.....பாவம் அந்த மனுசன் :D

 

எனக்கு சுவர் முக்கியமோ மனிசன் முக்கியமோ ?????

Link to comment
Share on other sites

கடைசியில கணவன்மாரில பிழையை போட்டுவிட்டு தப்பிட்டீங்கள்.....பாவம் அந்த மனுசன் :D

 

கடைசியில் கதாசிரியரைப் பாஞ்சாலியாக்கிவிடும் முயற்சியோ ??  தொடரட்டும் பாரதக் கதை....  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பிடியான வேலையளுக்குச் சீனன்தான் திறம்.  மலிவாகவும் முடிப்பான்.  சீக்கிரமாவும் முடித்துவிடுவான்.  வேலையும் திறம். 

 

3 மாதத்திற்கு முதல் ஒரு குளியலறையைப் பெரிதாக்கி புதிதாகச் செய்து முடித்தார்கள்.   இருவர் 3 நாள் வேலை செய்தார்கள்.  Electric வேலை செய்வதற்கு ஒருவன் ஒருநாள் மட்டும் வந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுப் போனான். வடிவாகவும் இருக்கு.  சிறிய இடத்தில் பெரிதாகவும் காட்டும்படிச் செய்து விட்டுச் சென்றார்கள். 

 

அதோடை சின்ன Kitchen க்குள்ளே Washer & Dryer உம்போட்டுக் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசல் படி , உங்களுக்கெல்லாம் இதுவும் வேனும் இன்னமும் வேணும். (நம்மாளையும் சேர்த்து).

 

நாலைந்து மாதத்துக்கு முன் மனைவி, வரவேற்பறையும் சாப்பாட்டு அறையும்  நிறம் மங்கீட்டுது பேப்பர் மாத்துவம் என்டு சொன்னாள். நானும் அடுத்தநாள் அவவுடன் கடைக்குப் போய் பெயின்ட் , பேப்பர் எல்லாம் வாங்கி வந்து , ஒவ்வொரு பக்கமாய் சாமான்களை அடுக்கி  உறையால் மூடி வடிவாய் எல்லாம் செய்து போட்டு , மிச்சத்தில் குசினியயும் செய்துவிட்டு, இஞ்சையப்பா இப்ப இருக்கும் மிச்சப் பேப்பருடன் இரண்டு பேப்பரும் , பத்து லிட்டர் பெயின்ரும் வாங்கினால் போதும் கோரிடோரையும் செய்வம் என்டு சொன்னன்.

உடன அவ அதுக்கு வேற பேப்பர்கள் ,வேற நிறப்  பெயின்ற் வாங்கிச் செய்ய வேணும் என்டாள். நானும் அதெல்லாம் வீன் செலவு , நிறைய சாமான்களும் மிஞ்சிப் போடும், பிறகு குப்பைல தான் போடவேணும் என்டு சொன்னால் கேட்கவில்லை. நீங்கல் சும்மாவிருங்கோ , பிள்ளைகள்  லீவுல வர நான் அவங்களைக் கொண்டு செய்யிறன் என்டாள்.

 

லீவும் வந்துபோய் ,அடுத்த லீவும் வரப் போகுது பிள்ளைகளும் வந்துட்டுப் போட்டினம் , கொரிடோர் அப்படியேதான் கிடக்கு நாலைந்து மாதமாய்...! :D :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியின் சுவர் பார்க்க ஆவல் :D

Link to comment
Share on other sites

லண்டன் வீடுகளுக்கு நல்ல சுவர் இருக்கிறதே பெரிய விசயம்.. :D இதுக்குள்ளை மேடு பள்ளம் இருந்தால் என்ன? :huh:  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.