Jump to content

'ள'கரம் 'ழ'கரம் எங்கே, எப்படி பாவிப்பது?


Recommended Posts

Sound Variations

ல (la), ள (La), ழ (zha) - variations

la - This sound ‘la’ is produced when tip of tongue gently runs over the upper jaw’s front teeth. example : palaa, pal

La - This sound ‘La’ is produced when tongue-tip bends to touch the upper jaw’s central portion. example : paLLam, koL

Zha - This special sound ‘zha’ produced when tongue-tip proceeds further bending as if to reach the inner tongue. example : vaazhai

Ra, ra variations

ra - This is called idayinam ra which is produced by the tongue tip touching the frontal edge of the upper jaw. example : maram, karam

Ra - This is called vallinum Ra. It is produced in the same way as ra but with more pressure. example : aRam, muRam

n’a, na, nna variations

n’a - Dental sound ‘n’a’ is produced when upper teeth is pressed by tongue tip. example : n’anRu

Na - Tongue twist sound ‘Na’ is produced with the rear side of tongue-tip touches the upper jaw. example : kaN, aNai

na = Proximity teeth sound ‘na’ is produced when tongue-tip goes near the teeth but doesn’t touch the teeth. example : manam

Link to comment
Share on other sites

இலக்கணச் சுருக்கம்

ஆறுமுகநாவலர்

பகுதி 1

-----------------------------------------

பொருளடக்கம்

எழுத்ததிகாரம்

எழுத்தியல் 5

பதவில் 15

புணரியல் 29

சொல்லதிகாரம்

பெயரியல் 84

வினையியல் 112

இடையியல் 151

உரியியல் 166

தொடர் மொழியதிகாரம்

தொகைநிலைத் தொடரியல் 169

தொகாநிலைத் தொடரியல் 178

ஒழியியல் 178

பகுபத முடிபு 202

சொல்லிலக்கணங்கூறுதல் 213

சொற்றொடரிலக்கணங் கூறுதல் 215

இலக்கணச் சுருக்கம்

முதலாவது

எழுத்ததிகாரம்

1.எழுத்தியல்

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுல் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.

2. அந்நூல் எலுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

தேர்வு வினாக்கள் - 1. இலக்கண நூலாவதியாது? 2. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்?

எழுத்துக்களின் பெயர்

3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்

4.அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்.

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம். இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம். இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம். இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம்

உ-ம். அவன், இவன், உவன்,

அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.

உ-ம். எவன், எக்கொற்றன்

கொற்றான, கொற்றனோ

ஏவன், கொற்றனே

யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணுhறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.

உ-ம். எஃகு, கஃசு, அஃது, பஃறி

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.

தேர்வு வினாக்கள் -- 3. எழுத்தாவது யாது? 4. அவ்வெழுத்து எத்தனை வகைப்படும்? 5.உயிரெழுத்துக்கள் எவை? 6. உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 7.குற்றெழுத்துக்கள் எவை? 8. நெட்டெழுத்துக்கள் எவை? 9. மெய்யெழுத்துக்கள் எவை? 10. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 11. வல்லெழுத்துக்கள் எவை? 12.மெல்லெழுத்துக்கள் எவை? 13. இடையெழுத்துக்கள் எவை? 14. சுட்டெழுத்துக்கள் எவை? 15. வினாவெழுத்துக்கள் எவை? 16. எந்தெந்த வெழுத்துக்கு எந்தெந்தவெழுத்து இனவெழுத்தாகும். 17. உயிர்மெய்யெழுத்துக்கள் எவை? 18. உயிர்மெய் குற்றெழுத்து எத்தனை? உயிர்மெய்க் குற்றெழுத்து எப்படி தொண்ணுhhறாகும்? உயிர்மெய் நெட்டெழுத்து எத்தனை? உயிர்மெய் நெட்டெழுத்து எப்படி நூற்றிருபத்தாறாகும்? உயிர்மெய் வல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் வல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? உயிர்மெய் மெல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் மெல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? உயிர்மெய் யிடையெழுத்து எத்தனை? உயிர்மெய் யிடையெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? 18. ஆய்தவெழுத்தாவது எது? 19. ஆகத் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கும் எழுத்துக்கள் எத்தனை?

எழுத்துக்களின் மாத்திரை

20. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.

மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை.

ஊயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின ளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை இரண்டு.

மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.

21. உயிரெழுத்துக்குள்ளே, உகரமும் இகரமும், சிலவிடங்களிலே தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும். ஆவ்வுகரத்திற்கு குற்றியலுகரமென்றும் பெயராம்.

22. குற்றியலுகரமாவது, தனிக் குற்றெழுத்தல்லாத மற்றையெழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளிளிறுதியில் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமாகும்.

ஆக்குற்றியலுகரம், ஈற்றெழுத்தாகிய தன்னைத்தொடர்கின்ற அயலெழுத்தின் வகையiனாலே, நெடிற் றொடர்க்குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம், உயிர்த்தொடர்க்குற்றியலுகரம

Link to comment
Share on other sites

இலக்கணச் சுருக்கம்

ஆறுமுகநாவலர்

பகுதி 2

-----------------------------------------

2. வினையியல்

228. வினைச் சொல்லாவது, பொருளினது, புடைப் பெயர்ச்சியை உணர்த்துஞ் சொல்லாம்.

புடைப்பெயர்ச்சியெனினும், வினை நிகழ்ச்சியெனினும், பொருந்தும். வினை, தொழில் என்பவை ஒரு பொருட் சொற்கள்.

தேர்வு வினாக்கள் - 228. வினைச் சொல்லாவது யாது? புடைப் பெயர்ச்சி என்பது என்ன? வினைக்கு பாரியாயநாமம் என்ன?

வினை நிகழ்ச்சிக்குக் காரணம்

229. வினையானது வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படு பொருள் என்னும் இவ்வாறுங் காரணமாவேணும், இவற்றுட் பல காரணமாகவேனும், நிகழும்.

உ-ம்.

வனைந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது. வினைமதல் குயவன்; முதற்கருவி மண்; துணைக்கருவி தண்டசக்கர முதலியன் இடம் வனைதற்கு ஆதாரமாகிய இடம்; செயல் வனைதற்கு மதற்காரணமாகிய செய்கை; காலம் இறந்தகாலம்; செயப்படு பொருள் குட முதலியன.

இருந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது.

உடையன்: இக்குறிப்பு வினை, கருவியுஞ் செயப்படு பொருளுமொழிந்த நான்குங் காரணமாக வந்தது.

230. வினை முதன் முதலிய ஆறனுள்ளே, தெரிநிலை வினைமுற்றின் கண், விணைமுதலுஞ் செயலுங் காலமுமாகிய மூன்றும் வெளிப்படையாகவும், மற்றை மூன்றுங் குறிப்பாகவுந் தோன்றும்.

தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங்களின்கண் செயலுங் காலமுமாகிய இரண்டும் வெளிப்படையாகவும், மற்றை நான்கும் குறிப்பாகவுந் தோன்றும்.

வினைமுதல் பால் காட்டும் விகுதியினாலும், செயல் பகுதியினாலும், காலம் இடைநிலையும் விகுதியும் விகாரப்பட்ட பகுதியுமாகிய மூன்றனுள் ஒன்றினாலுந் தொன்றும். எச்ச வினைகட்குப் பால் காட்டும் விகுதி யின்மையால், அவற்றில் வினைமுதல் வெளிப்படத் தோன்றதாயிற்று.

உ-ம்.

உண்டான்: இத்தெரிநிலை வினைமுற்றிலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும், விகுதியால் வினைமுதலும் வெளிப்படையாகவும், மற்றவை

உண்ட: இத் தெரிநிலைவினைப் பெயரெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின.

உண்டு: இத்தெரிநிலை வினையெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின.

231. வினைக்குறிப்பு முற்றிக்கண் வினை முதன் மாத்திரம் வெளிப்படையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும்.

வினைக்குறிப்பு வினையெச்சங்களின் கண், வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றும்.

உ-ம்.

கரியன்: இக்குறிப்பு வினைமுற்றிலே, விகுதியால் வினைமுதல் வெளிப்டையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும்.

கரிய: இக்குறிப்புவினைப் பெயலெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.

இன்றி: இக்குறிப்புவினை வினையெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.

தேர்வு வினாக்கள் - 229. வினையானது எவை காரணமாக நிகழும்? 230. தெரிநிலைவினைமுற்றிற்கண், வினைமுதன் முதலய ஆறும் எப்படித் தோன்றும்? தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங்களின் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்? வினைமுதல், செயல், காலம், என்னும் மூன்றும் எவ்வௌ; வுறுப்புக்களினாலே தோன்றும்? யாது காரணத்தால் எச்ச வினைகளில் வினை முதல் வெளிப்படத் தோன்றாதாயிற்று? 231. வினைக்குறிப்பு, முற்றிக் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படிப்த் தோன்றும்? வினைக்குறிப்புப் பெயரெச்ச வினையெச்சங்களின் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்?

காலம்

232. காலம், இறப்பு, நிகழ்வு, எதிர்வு, என மூவகைப்படும்.

இறப்பாவது தொழிலது கழிவு நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலமை. எதிர்வாவது தொழில் பிறவாமை.

தேர்வு வினாக்கள் - 232. காலமாவது யாது? இறப்பாவது யாது? நிகழ்வாவது யாது? எதிர்வாவது யாது?

வினைச்சொற்களின் வகை

233. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச்சொற்கள், தெரிநிலைவினையுங் குறிப்பு வினையும் என, இருவகைப்படும்.

234. தெரிநிலை வினையாவது, காலங்காட்டும் உருப்புண்மையினாலே, காலம் வெளிப்படத் தெரியும்படி நிற்கும் வினையாம்.

உ-ம்.

நடந்தான்: இது, தகரவிடை நிலையினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.

உண்கும்: இது, கும் விகுதியினால் எதிர்காலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.

பெற்றான்: இது, பெறு, பெற்று என விகாரப்பட்டு நின்ற பகுதியினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.

தெரிநிலை வினைகள் தோன்றுதற்குரிய முதனியடிகள் இவையென்பது பதவியலில் நாற்பத்தாறம் வசனத்திற் கூறப்பட்டது.

235. குறிப்பு வினையாவது, காலங்காட்டும் உறுப்பின்மையினாலே, காலம் வெளிப்படத் தெரிதலின்றிச் சொல்லுவோனது குறிப்பினாலே தோன்றும்படி, நிற்கும் வினையாம்.

உ-ம்.

பொன்னன்: இது, பொன்னையுடையனாயினான் என இறந்தகாலங் கருதியாயினும், பொன்னையுடையனாகின்றான் என நிகழ்காலங் கருதியாயினும், பொன்னையுடையனாவான் என எதிர்காலங் கருதியாயினுந் தன்னை ஒருவன் சொல்ல, அக்காலம் அவனது குறிப்பாட் கேட்போனுக்குத் தோன்றும் படி நிற்றலினாலே, குறிப்பு வினை.

பொன்னன் என்பது, பொன்னுடைமை காரணமாக ஒருவனுக்குப் பெயராய் நின்று எழுவாய் முதலிய வேற்றுமையுரு பேற்கும் போது பெயர்ச் சொல்; முக்காலம் பற்றிப் புடை பெயரும் ஒருவனது வினை நிகழ்ச்சியை உணர்த்திப் பெயருக்குப் பயனிலையாய் வரும் போது குறிப்பு வினைமுற்றுச் சொல்; அங்ஙனம் வினைமுற்றாய் நின்று பின் அவ்வினை நிகழ்ச்சி காரணமாக அவனுக்குப் பெயராகி எழுவாய் முதலிய வேற்றுமையுருபேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்.

குறிப்பு வினைகள் தோன்றுதற் குரிய முதனிலையடிகாள் இவையென்பது பதவியலில் நாற்பத்து நான்காம் வசனத்திற் கூறப்பட்டது.

236. தெரிநிலைவினை குறிப்புவினை என்னும் இரண்டும், முற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும், வினையெச்சமும் என்பன மும்மூன்று வகைப்படும். எனவே, தெரிநிலைவினைமுற்றும், தெரிநிலைவினைப் பெயரெச்சமும், தெரிநிலை வினையெச்சமும், குறிப்பு வினைமுற்றும், குறிப்பு வினைப்பெயரெச்சமும், குறிப்பு வினை வினையெச்சமும் என, வினைச்சொற்கள் அறுவகையாயின.

237.இவ்வறுவகை வினைச்சொற்களும், உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.

உடன்பாட்டு வினையாவது. தொழிலினது நிகழ்ச்சியை உணர்த்தும் வினையாம். உடன்பாட்டு வினையெனினும், பொருந்தும்.

உ-ம்.

நடந்தான் நடந்த நடந்து

பெரியன் பெரிய மெல்ல

எதிhமறை வினையாவது, தொழில் நிகழாமையை உணர்த்தும் வினையாம். எதிர்மறைவினையெனினும், மறைவினையெனினும், பொருந்தும்.

உ-ம்.

நடவான் நடவாத நடவாது

இலன் இல்லாத இன்றி

238. வினைச்சொற்கள், இருதிணையைம்பான் மூவிடங்களுள் ஒன்றற்கு உரிமையாகியும், பலவற்றிற்குப் பொதுவாகியும், வழங்கும்.

தேர்வு வினாக்கள் - 233. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச்சொற்கள் எத்தனை வகைப்படும்? 234. தெரிநிலை வினை யாவது யாது? 235. குறிப்பு வினையாவது யாது? பொன்னன் என்பது எத்தனை வகைச் சொல்லாகும்? அது எப்பொழுது பெயர்ச் சொல்? எப்பொழுது குறிப்பு வினைமுற்றுச் சொல்? எப்பொழுது குறிப்பு வினையாலணையும் பெயர்? 236. தெரிநிலை வினை குறிப்பு வினை என்னும் இரண்டும் தனித்தனி எத்தனை வகைப்படும்? 237. இவ்வறுவகை வினைச்சொற்களும் எவ்வெப் பொருளில் வரும்? உடன்பாட்டு வினையாவது யாது? எதிர்மறை வினயாவது யாது? 238. வினைச்சொற்கள் இருதிணையைம்பான் மூவிடங்களைப் பற்றி எப்படி வழங்கும்?

முற்று வினை

239. முற்று வினையாவது, பால் காட்டும் விகுதியோடு கூடி நிறைந்து நின்று பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.

இம்முற்றுவினை கொள்ளும் பெயர்களாவன் பொவுட் பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயருமாம்.

உ-ம்.

செய்தான் சாத்தன் நல்லன் சாத்தன்

குளிர்ந்தது நிலம் நல்லது நிலம்

வந்தது கார் நல்லது கார்

குவிந்தது கை நல்லதுகை

பரந்தது பசப்பு நல்லது பசப்பு

ஒழிந்தது பிறப்பு நல்லது பிறப்பு

தேர்வு வினாக்கள் - 239. முற்று வினையாவது யாது? முற்று வினை கொள்ளும் பெயர்களாவன் எவை?

படர்க்கை வினைமுற்று

240. படர்க்கை வினைமுற்று, உயர்திணையாபாலொருமைப் படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைமுற்றும், அஃறிணையொன்றன் பாற் படர்க்கை வினைமுற்றும், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றும் என ஐந்து வகைப்படும்.

241. அன், ஆன், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவன்

நடந்தனன்

நடந்தான் நடக்கின்றனன்

நடக்கின்றான் நடப்பன்

நடப்பான் குழையன்

குழையான்

242. து, று, என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவள்

நடந்தனள்

நடந்தாள் நடக்கின்றனள்

நடக்கின்றாள் நடப்பள்

நடப்பாள் குழையள்

குழையாள்

243. அர், ஆர் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணைப் பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவர்

நடந்தனர்

நடந்தார் நடக்கின்றனர்

நடக்கின்றார் நடப்பர்

நடப்பார் குழையர்

குழையார்

செய்யுளிலே பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ்விகுதிகளின்றி, ப, மார் என்னம் விகுதிகளும் வரும். அவை இடைநிலையின்றித் தாமே எதிர் காலங் காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

உ-ம்.

நடப்ப நடமார் - அவர்

இவ்விரண்டற்கும் நடப்பார் என்பது பொருள்.

244. து, று என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் அஃறிணையொன்றன் பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம். இவற்றுள், றுவ்விகுதி, இறந்தகால விடைநிலையோடன்றி, நிகழ்கால வெதிர்காலவிடைநிலைகளோடு கூடி வராது.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அது

நடந்தது

கூயிற்று நடக்கின்றது

---- நடப்பது

--- குழையது

அற்று

றுவ்விகுதி, வந்தன்று, உண்டன்று, சென்றன்று எனத்தடற வொற்றிடைநிலைகளின் முன்னும், புக்கன்று விட்டன்று, பெற்றன்று, என விகாரப்படடிறந்நகாலங் காட்டுங் கு, டு, று வீற்றுப் பகுதிகளின் முன்னும், அன்சாரியை பெற்று வரும். இவை, முறையே, வந்தது, உண்டது, சென்றது, புக்கது, விட்டது, பெற்றது எனப் பொருள்படும். றுவ் விகுதி, கூஙிற்று, ஓடிற்று என இன்னிடை நிலையின் முன் மாத்திரம், சாரியை பெறாது வரும்.

அற்று, இற்று, எற்று என்பவை, சுட்டினும் வினாவினும் வந்த வினைக்குறிப்பு முற்றுக்கள். இவை,

• தந்தின்று என, றுவ்விகுதி தகரவிடைநிலையின் முன் இன்சாரியை பெற்றதன்றோ எனின்; அன்று. அது, தந்தன்று, என்னும் உடன்பாட்டு வினையை மறுத்தற்குத் தகரவிடைநிலைக்கும் றுவ் விகுதிக்கும் இடையே இல்லென்னும் எதிர்மறையிடை நிலையேற்று வந்த மறைவினையென்றறிக. தந்தின்று தந்ததில்லையென பொருள்படும்.

முறையே, அத்தன்மைத்து, இத்தன்மைத்து, எத்தன்மையித்து எனப் பொருள் படும்.

டுவ் விகுதியை இறுதியில் உடைய வினைச் சொல் அஃறிணையொன்றன்பாற் படர்க்கை குறிப்பு வினைமுற்றாம், இவ் விகுதி தெரிநிலைவினைமுற்றிற்கு இல்லை.

உ-ம். பொருட்டு (ஸ்ரீ பொருளையுடையது)

ஆதிரைநாட்டு (ஸ்ரீ ஆதிரை நாளினிடத்தது)

குண்டுகட்டு (ஸ்ரீ ஆழமாகிய கண்ணையுடையது) அது

245. அ என்னம் விகுதியை இறுதியில் உடைய வினைச்சொல், அஃறிணைப் பலவின்பால் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமா.

இவ்விகுதி, அன்சாரியை பெற்றும், பெறாதும், வரும்

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. அவை

நடந்தன

நடந்த நடக்கின்றன

நடக்கின்ற நடப்பன

நடப்ப கரியன

கரிய

ஆ என்னும் விகுதியை இறுதியில் உடைய வினைச் சொல், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை, யெதிர்மறைத் தெரிநிலைவிணை முற்றாம். இவ்விகுதி குறிப்பு வினை முற்றிற்கு இல்லை.

உ-ம்.

நடவா -- அவை

• நடப்ப என்னும் உயர்திணைப் பலர்பாற்படர்க்கைத் தெரிநிலை வினை முற்று, வேறு, நடப்ப என்னும் அஃறிணை பலவின்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும், வேறு, முன்னையது, நட என்னும் பகுதியும், பா என்னும், எதிர்கால பரர்பற்படர்க்கை விகுதியுமாகப், பகுக்கப்பட்டு வரும். பின்னையது, நட என்னும் பகுதியும், இப்பென்னும் எதிர்காலவிடைநிலையும், ஆ என்னும் பலவின்பாற் படர்க்கை விகுதியுமாக, பகுக்கப்பட்டு வரும்.

தேர்வு வினாக்கள் - 240. படர்கை வினைமுற்று எத்தனை வகைப்படும்? 241. உயர்திணை யாண்பாலொருமை படர்க்கை விணைமுற்றுக்கள் எவை? 242. பெண்பாலொருமை படர்க்கை விணைமுற்றுக்கள் எவை? 243. உயர்திணை பலர்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? பலர்பாற் படர்க்கை தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகளின்றி வேறு விகுதிகளும் வருமோ? 244. அஃறிணையொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? து, று, என்னும் இரு விகுதிகளும் முக்கால விடைநிலைகலோடும் வருமோ? றுவ்விகுதி எவ்விடங்களின் எச்சாரியை பெற்று வரும்? எவ்விடத்துச் சாரியை பெறாது வரும்? அஃறிணை யொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்கு, து று என்னும் இரு விகுதிகளுமன்றி வேறு விகுதி இல்லையோ? 245. அஃறிணைப் பலவின் பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? அஃறிணை பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுக்கு வேறு விகுதி இல்லையோ?

தன்மை வினைமுற்று

246. தன்மை வினைமுற்று, தம்மையொருமை, வினைமுற்றும் தன்மைப் பன்மை வினைமுற்றும் என, இரு வகைப்படும்.

247. என், ஏன், அன் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. யான்

உண்டனென்

உண்டேன்

உண்டனன் உண்கிறனென்

உண்கிறேன்

உண்கிறனன்

எ. தெரி. குறி

உண்குவென்

உண்பேன்

உண்பன் குழையினென்

குழையினேன்

குழையினன்

செய்யுளுளிலே தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகள்களன்றி, ஆல் கு, டு து று என்னும் விகுதிகளும் வழங்கும்.

இவைகளுள், ஆல் விகுதி எதிர்காலவிடைநிலைகளோடு மாத்திரம் வரும். மற்றைநான்கு விகுதிகளும் இடைநிலையின்றி தாமே காலங்காட்டுதல் பதவியளிற் பெறப்பட்டது.

(உதாரணம்)

விகு. இ.தெ. எ.தெ. யான்

அல்

கு

டு

து

று -

-

உண்டு

வந்து

சென்று உண்பல்

உண்கு

-

வருது

சேறு

248. அம், ஆம், எம், ஏம், ஓம் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. யாம்

உண்டனம்

உண்டாம்

உண்டெனம்

உண்டேம்

உண்டோம் உண்கின்றனம்

உண்கின்றாம்

உண்கின்றனெம்

உண்கின்றேம்

உண்கின்றோம்

எ. தெரி. குறி.

உண்பம்

உண்பாம்

உண்பெம்

உண்பேம்

உண்போம் குழையினம்

குழையினாம்

குழையினெம்

குழையினேம்

குழையினோம்

செய்யுளிலே, தன்மைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ் விகுதிகளின்றி, கும், டும், தும், றும் என்னும் விகுதிகளும் வழங்கும் இடைநிலையின்றித் தாமே காலங்காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

விகு. இ. தெரி. எ. தெரி. யாம்

கும்

டும்

தும்

றும் -

உண்டும்

வந்தும்

சென்றும் உண்கும்

-

வருதும்

சேறும்

தேர்வு வினாக்கள் - 246. தன்மை வினைமுற்று எத்தனை வகைப்படும்? 247. தம்மையொருமை வினைமுற்றுக்கள் எவை? தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்வுகுதிகளின்றி வேறு விகுதிகளும் வழங்குமோ? ஆல் விகுதி எக்கால விடைநிலைகளொடு வரும்? 248. தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள் எவை? தன்மைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகளின்றி வேறு விகுதிகள் வழங்குமோ?

முன்னிலை வினைமுற்று

249. முன்னிலை வினைமுற்று முன்னிலையொருமை வினைமுற்றும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுமென இரு வகைப்படும்.

250. ஐ ஆய் இ என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் முன்னிலையொருமைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீ

உண்டனை

உண்டாய்

உண்டி உண்கின்றனை

உண்கின்றாய்

உண்ணாநின்றி உண்பை

உண்பாய்

சேறி குழையினை

குழையாய்

வில்லி

இகரவிகுதி எதிர்காலத்தை இடைநிலையின்றி தானே காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

251. இர், ஈர், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய விசை; சொற்கள். முன்னிலைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீர்

உண்டனிர்

உண்டீர் உண்கின்றனீர்

உண்கின்றீர் உண்பிர்

உண்பீர் குழையினிர்

குழையீர்

தேர்வு வினாக்கள் - 249. முன்னிலை வினைமுற்று எத்தனை வகைப்படும்? 250. முன்னிலையொருமை வினைமுற்றக்கள் எவை? 251. முன்னிலை பனடமை வினைமுற்றுக்கள் எவை?

எதிர்மறை வினைமுற்று

252. எதிர்மறை குறிப்பு வினைமுற்றுக்கள், ஆல், இல் என்னும் எதிர்மறைப் பன்படியாக தோன்றிப் பால் காட்டும் விகுதிகளை பெற்று வருவனாவாம்.

உ-ம்.

படர்க்கை - அல்லன், அல்லள், அல்லர் அன்று அல்ல ஜஅல்லனஸ

இலன் இலள் இலர் இன்று இல ஜ இல்லனஸ

தன்மை - அல்லேன் அல்லேம் இலேன் இலேம்

முன்னிலை - அல்லாய் அல்லீர் இலாய் இலீர்

இன்மை என்பது ஒரு பொருளினது உண்மைக்கும் ஒரு பொருளை உடமைக்கு மறுதலை உண்மை உளதாதல்.

உ-ம்.

உண்மை இன்மை

இங்கே சாத்தனுளன்

இவனிடத்தே அறமுண்டு இங்கே சாத்தானிலன்

இவனிடத்தே அறமின்று

உடமை இன்மை

இவன் பொருளுடையன்

இது குணமுடையது இவன் பொருளிலன்

இது குணமில்லது

அன்மையென்பது ஒரு பொருள் சுட்டியதொரு பொருளாதற்கு மருதலை, பிரிது பொருளாதலைக் காட்டும். என்றபடி

உ-ம்.

இவன் சாத்தனல்லன்: ஜ கொற்றன் ஸ

இஃதறனன்று: ஜ மறம் ஸ

253. எதிர்மறத் தெரிநிலை முற்றுக்கள், இல் ஆல், ஆ, என்னும் எதிர்மறையிடைநிலைகளோடு பால் காட்டும் விகுதிகளைப் பெற்று வருவனவாம். இவற்றுள் இல் இடைநிலை இறந்தகால இடைநிலையோடும் விகாரப்டிறந்த காலங்காட்டும் பகுதியோடும். நிகழ்கால விடைநிலையோடும். கூடி வரும். இனி இடைநிலையோடு கூடாது, இல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் ஆல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் பெறாதும் ஆகாரவிடைசாரியை பெறாதும் எதிர்காலம் உணர்த்தி வரும்.

உ-ம்.

நடந்திலன், பெற்றிலன், நடக்கின்றிலன், நடக்கிலன், எ-ம். நடக்கலன், உண்ணலன், எ-ம். நடவான், எ-ம். வரும். மற்ற விகுதிகளோடு இப்படியேயொட்டிக் கொள்க.

• இல், அல், ஆ, இவ் மூன்றையும் எதிர்மறை விகுதி என்பர் சிலர். எதிர்மறை இடைநிலையெனபதே சேனாவரையார். சிவஞான முனிவர். முதலியோர் துண்வு நடவா என்னும் அஃறிணைப்பலவின் பால் படர்க்கை வினைமுற்றில் ஆகாரம் வெரு விகுதி வேண்டாது தானே, எதிர்மறை பொருளோடு பலவின்பாற் படர்க்கைப் பொருளையுந் தந்து நிற்றலின், அங்கு மாத்திரம் விகுதியோ யென்றறிக.

அகரவிடைநிலை வருமெழுத்து உயிராயவழிக் கெடுதல் பதவியலிற் பெறப்பட்டது.

இங்ஙனமன்றி உடன்பாட்டு தெரிநிலை முற்றுக்களே ஆல் என்னும் பன்படியாக தோன்றிய எதிர்மறை சிறப்பு வினைக்குறிப்போடாயினும் இல்லை யென்னும் எதிர்மறைத்த தெரிநிலை வினைமுற்றுக்களாயும் வரும்.

உ-ம்.

உண்டானல்லன், உண்டேனல்லன், உண்டாயல்லை, எ-ம். வந்தானில்லை, வந்தேனில்லை, வந்தாயில்லை, எ-ம். வரும்.

தேர்வு வினாக்கள் - 252. எதிர்மறைத் குறிப்பு வினைமுற்றுக்கள் எவை? இன்மையென்பது என்னை? அன்மை யென்பது என்னை? 253. எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் எவை? இவற்றுள் இல் இடைநிலை எப்படி வரும்? ஆல் இடைநிலை எப்படி வரும்? அகரவிடைநிலை எப்படி வரும்? எதிர்மறைத்தெரிநிலை வினைமுற்றுக்கள் இங்ஙனமன்றி, இன்னும் எங்ஙனம் வரும்?

முன்னிலையேவல் விiனுமுற்று

254. முன்னிலையேவல் வினைமுற்று, முன்னிலையேவலொருமை வினைமுற்று முன்னிலையேவற் பன்மை வினைமுற்றும் என இரு வகைப்படும்.

255. ஆய், இ, ஆல், ஏல், ஆல், என்னும் விகுதிகளை இருதியில் உடைய வினைச்சொற்களும் ஆய் விகுதி புணர்ந்து குன்றிப் பகுதி மாத்திரையாய் நிற்கும் விசை; சொற்களும் முன்னிலையேவாலொருமை தெரிநிலை வினைமுற்றுக்களாம். இவற்றுல் அல், ஏன், ஆல், என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையிடத்து வரும்.

உ-ம்.

உ-ம். உண்ணாய்

உண்ணல் உண்ணுதி

உண்ணேல் உண்

மாறல் நீ

ஏவல் விகுதிகள் இடைநிலையின்றி தாமே எதிர்காலங்காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.

எதிர்மறையாலொருமை வினைமுற்றுக்கள், உண்ணாதே, உண்ணாதீ, என எதிர்மறை ஆகாரவிடை நிலையின் முன் தகரவெழுத்து பெற்றோடு எகர விகுதி இகரவிகுதிகளுள் ஒன்று பெற்றும் வரும்.

256. ஈர், உம், மின், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்களாம்.

உ-ம்.

உண்ணீர், உண்ணும் உண்மின் - நீர்

எதிர்மநையேவற் பன்மைவினை முற்றுக்கள் உண்ணமின், நடவன்மின் என, பகுதிக்கும் வின் விகுதிக்கும் இடையே எதிர்மறை அல் இடைநிலை பெற்று வரும்.

(1) உண்ணாய், என்னும் முன்னிலையொருமை யெதிர்மறை தெரிநிலை வினைமுற்று வேறே: உண்ணாய் என்னும், முன்னிலையேவலொருமை தெரிநிலை வினைமுற்றும் வேறே: முன்னையது உண்ணென்னும் பகுதியும் பெற்று அகரவிடைநிலை கேட்டு முடிந்நது. பின்னையது உன் என்னும் பகுதியும் ஆய் விகுதியும் பெற்று முடிந்தது.

(2) உண்ணீர் என்னும் முன்னிலைப் பன்மையெதிர்மறை தெரிநிலை வினைமுற்றும், வேறே: உண்ணீர் என்னும் முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலைவினைமுற்று வேறே: முன்னையது உண் என்னும் பகுதியும் ஆவன என்னும் எதிர்மறை இடைநிலையும் ஈர் விகுதியும் பெற்று இடைநிலை ஆகாரம் கேட்டு முடிந்தது. பின்னையது உண் என்னும் பகுதியும் ஈர் விகுதியும் பெற்றும் முடிந்தது.

தேர்வு வினாக்கள் - 254. முன்னிலையேவல் வினைமுற்று எத்தனை வகைப்படும்? 255. முன்னிலையேவலொருமை தெரிநிலை வினை முற்றுக்கள் எவை? இவற்றுள் எவை எதிர்மறையிடத்து வரும்? எதிர்மறையேவலொருமை வினைமுற்றுக்கள் என்னும் எப்படி வரும்? 256. முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் எவை? எதிர்மறையேவற் பன்மைவினைமுற்றுக்கள் எவை?

வியங்கோல் வினைமுற்று

257. க, இய, இயர், அ, அல், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் வியங்கோள் வினைமுற்றுக்களாம்.

வியங்கோளாவது, இருதிணையைம்பாண் மூவிடங்கட்கும் பொதுவாகிய ஏவல்.

ககரவிகுதி - வாழ்க

இயவிகுதி - வாழிய

அகரவிகுதி - வர

அல்விகுதி - ஒம்பல் உண்க

உண்ணிய

உண்ணியர்

உண்ண

எனல் யான்,யாம்

நீ, நீர்

அவன்,

அவள், அவர்,

அது, அவை

வாழிய என்பது, ஆ, வாழி, அந்தணர் வாழி எனப் பெரும்பாலும் ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.

வா ஸ்ரீ வருக, உன்னை ஸ்ரீ உன்க

ஒம்பல் ஸ்ரீ ஒம்புக, எனல் ஸ்ரீ என்க

சிறுபான்மை, இவை, இக்காலத்து உலக வழக்கிலே நடக்கக்கடவுன், நடக்கக்கடவுள், எ-ம். நடப்பானாக நடப்பாளாக நடப்பாராக. எ-ம். பாலிடங்களுள் ஒன்றற் குரியாவாய் வருமெனவுங் கொள்க.

எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள், மறவற்க, உண்ணற்க அல் இடைநிலை பெற்று வரும்.

அன்றியும், ‘மகனெல்’ என்னுமிடத்து மகனென்று சொல்லற்க எனவும், ‘மாPஇயதொரால்’ என்னுமிடத்து மாPயதொருவற்க. எ-ம். பொருள்பட நிற்றலால், அல், ஆல் இரண்டும் எதிர்மறை வியங்கோள் விகுதிகளாய் வருமெனவும் அறிக.

மேற்கூறிய ஏவல் விகுதிகளும் இவ்வியங்கோள் விகுதிகளும் இடைநிலையின்றித் தாமே எதிர்காலங் காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.

தேர்வு வினாக்கள் - 257. வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை? வியங்கோளாவது என்ன? எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை? வியங்கோளாவது என்ன? எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை?

செய்யுமென் முற்று

258. செய்யுமென்னும் வாய்ப்பாட்டுத் தெரிநலை வினைமுற்றுச் சொற்கள், படர்க்கையிடத்தனவாகிய ஐம்பால்களுக்குள்ளே பலர்பாலொழிந்த நான்கு பால்களுக்கும் பொதுவாக வரும்.

உ-ம்.

அவண்ணும் அவளுண்ணும்

அதுவுண்ணும் அவையுண்ணும்

இம்முற்று வினைச் சொல்லில் உம் விகுதி நிகழ்காலமும் எதிர்காலமுங’ காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

தேர்வு வினா - 258. செய்யுமென்னும் வாய்ப்பாட்டுத் தெரிநிலை முற்றுக்கள் எவ்வாறு பொதுப்பட வரும்?

பொதுவினைக் குறிப்பு

259. வேறு, இல்லை, உண்டு, என்னும் இம்மூன்று வினைக்குறிப்பு முற்றுச்சொற்களும், யார் என்னும் வினா வினைக்குறிப்பு முற்றுச் சொல்லும், இருதிணையம்பான் மூவிடங்கட்கும் பொதுவாகி வரும்.

உ-ம்.

அவன்

அது

யாம் அவள்

அவை

நீ அவர்

யான்

நீர் வேறு, இல்லை, உண்டு, யார்

இல்லையென்பது ‘எஞ்ஞான்னுமில்’ எனக் கடைக் குறைந்து வருதலுமுண்டு.

அஃறிணையொருமைக்குரிய டுவ்விகுதி பெற்று நிற்கும் உண்டு என்னம் வினைக்குறிப்பு முற்றும் வேறே: விகுதியின்றிப் பொதுச் சொல்லாயே நிற்கும் இவ்வுண்டென்னும் வினைக்குறிப்பு முற்றும் வேறே: முன்னையது இன்று என்பதற்கு மறுதலை: பின்னையது இல் என்பதற்கு மறுதலை: பின்னையது இல் என்பதற்கு மறுதலை.

யார் என வகரங்கெட்டு நிற்கும் பலாபாற் படர்க்கை வினைப் பெயரும் வேறே: யார் என்னும் இவ் வினா வினைக்குறிப்பும் வேறே: யார் என்னும் இவ் வினா வினைக்குறிப்பும் வேறே.

யாரென்பது ஆரென விகாரப்பட்டும் வரும்.

260. எவன் என்னும் வினைவினைக் குறிப்பு மற்றுச் சொல் அஃறிணையிருபாற்கும் பொதுவாகி வரும்.

உ-ம்

அஃதெவன் அவையெவன்.

எவன் என்னும் உயர்திணையாண்பாற் படர்க்கை வினாப்பெயரும் வேறே: எவன் என்னும் இவ்வினா வினைக்குறிப்பும் வேறே.

எவன் என்பது என், என்ன, என்னை, என விகாரப்பட்டும் வரும்.

தேர்வு வினாக்கள் - 259. வேறு, இல்லை, உண்டு என்னும் இம்மூன்று வினைக்குறிப்பு முற்றுச் சொற்களும், யார், என்னம் வினாவினைக் குறிப்புமுற்றுச் சொல்லும், எவ்வாறு பொதுப்பட வரும்? 260. எவன் என்னும் வினா வினைக் குறிப்பு முற்றுச் சொல் எவ்வாறு பொதுப்பட வரும்?

பெயரெச்சம்

261. பெயரெச்சமாவது, பாhல் காட்டும். முற்று விகுதி பெறாத குறைச்சொல்லாய்ப் பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.

இப்பெயரெச்சங் கொள்ளும் பெயர்களாவன், வினை, முதற்பெயர், கருவிப் பெயர், இடப்பெயர், தொழிற்பெயர், காலப்பெயர், செயற்பாட்டுப் பொருட்பெயர் என்னும் அறவகை பெயருமாம்

உ-ம்.

உண்டசாத்தன் - வினைமுதற்பெயர்

உண்ட கலம் - கருவிப்பெயர்

உண்ட வீடு - இடப்பெயர்

உண்ட ஊண் - தொழிற்பெயர்

உண்ட நாள் - காலப்பெயர்

உண்ட சோறு - செயப்படு பொருட்பெயர்

262. தெரிநிலைவினைப் பெயரெச்சம், செய்த வென்னும் வாய்ப்பாட்டிறந்தபாலப்பெயரெ

Link to comment
Share on other sites

பகுதி 1

70. சில விகுதிகள், இடைநிலையேலாது, தாமே காலங்காட்டும், அவை வருமாறு:-

து, தும், று, றும் என்னும் விகுதிகள் இறந்தகாலமும், எதிர்காலமுங்காட்டும்.

உ-ம்.

வந்து, (ஸ்ரீவந்தேன்), வந்தும், (ஸ்ரீவந்தேம்) வருது, (ஸ்ரீவருவேன்) வருதும், (ஸ்ரீவருவேம்) எ-ம்.

சென்று, (ஸ்ரீசென்றேன்) சென்றும், (ஸ்ரீசென்றேம்) சேறு, (ஸ்ரீசெல்வேன்) சேறும், (ஸ்ரீசெல்வேம்) எ-ம். வரும்.

கு, கும் என்னும் விகுதிகள் எதிர்காலங் காட்டும்.

உ-ம்.

உண்கு, (ஸ்ரீஉண்பேன்) உண்கும், (ஸ்ரீஉண்பேம்) என வரும்

டு, டும் என்னும் விகுதிகள் இறந்தகாலங் காட்டும்.

உ-ம்.

உண்டு, (ஸ்ரீஉண்டேன்) உண்டும், (ஸ்ரீஉண்டேம்) என வரும்.

இ என்னும் முன்னிலை வினைமுற்று விகுதி யொன்றும், ப, மர், என்னும் படர்க்கை வினைமுற்று விகுதியிரண்டும், க, இய, இயர், அல், என்னும் வியங்கோண் முற்று விகுதுp நான்கும், ஆய், இ, ஆல், ஏல், காண், மின், உம், ஈர், என்னும் முன்னிலையேவன்முற்று விகுதியேழும், ஆகிய பதிநான்கு விகுதிகளும் எதிர்காலங்காட்டும்.

உ-ம்.

(1). சேறி, (ஸ்ரீசெல்வாய்) (2) நடப்ப, (ஸ்ரீநடப்பார்) நடமார், (ஸ்ரீநடப்பார்) (3) வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல் (4) நடவாய், உண்ணுதி, மாறல், அழேல், சொல்லிக்காண், நடமின், உண்ணும், உண்ணீர்.

உம்

என்னஞ் செய்யுமன் முற்று விகுதி நிகழ்காhலமும் எதிர்காலமுங் காட்டும்.

உ-ம்.

உண்ணும்

எச்சவிகுதிகள் காலங்காட்டல் வினையியலிற் கண்டு கொள்க.

தேர்வுவினாக்கள - 70. இடைநிலையேலாது தாமே காலங்காட்டும் விகுதிகள் உளவோ? து, தும், று, றும், விகுதிகள் எக்காலங் காட்டும்?, கு, கும், விகுதிகள் எக்காலங் காட்டும்? டு, டும் விகுதிகள் எக்காலங் காட்டும்? ஏதிர்காலங்காட்டும்? வேறு விகுதிகள் உளவோ? உம் என்னுஞ் செய்யுமென் முற்று விகுதி எக்காhலங் காட்டும்?

காலங்காட்டும் பகுதி

71. கு, டு, று, என்னும் மூன்னுயிர்மெய்களை இறுதியாக உடைய சில குறிலிணைப் பகுதிகள் விகாரப்பட்டு இறந்த காலங்காட்டும்.

உ-ம்.

புக்கான், விட்டான், பெற்றான்.

தேர்வு வினா - 71. காலங்காட்டும் பகுதிகள் உளவோ?

சாரியை

72. சாரியைகள், அன், ஆன், அம், ஆம், அல், அத்து, அற்று, இன், இற்று, தன், தான், தம், தாம், நம்,நும், அ, ஆ, உ, ஏ, ஐ, கு, து, ன் என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.

உ-ம்.

நடந்தனன், ஒருபற்கு, புளியங்காய், புற்றாஞ்சோறு, தொடையல், அகத்தன், பலவற்றை, வய்டின் கால், பதிற்றுப் பத்து, அவன்றன்னை, அவன்றான், அவர்தம்மை, அவர்தாம், எல்லாநம்மையும், எல்லீர் நும்மையும், நடந்தது, இல்லாப்பொருள், உண்ணுவான், செய்து கொண்டான், ஆன்.

தேர்வு வினா- 72. சாரியைகளென்பன எவை?

சந்தி

73. சந்திகளாவன, புணரியலிற் சொல்லப்டுவன வாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி விகாரங்களாம்.

தேர்வு வினா -- 73. சந்திகளாவன எவை?

விகாரம்

74. விகாரங்களாவன, மெல்லின மெய்யை வல்லின மெய்யாக்கலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்களும், நெட்டெழுத்தை கற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை விரித்தலும், உள்ள எழுத்தை தொகுத்தலும் ஆம்.

தோர்வு வினா - 74. வகாரங்களாவன எவை?

பதவியல் முற்றிற்று

3. புணரியல்

75. புணர்ச்சியாவது, நிலைமெழியும் வருமொழியும் ஒன்டுபடப்புணர்வதாம்.

76. அப்புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சியும், அல் வழிப்புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும்.

77. வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொகள் புணர்வதாம்.

உ-ம்.

வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி

மரம்வெட்டினான் .. ஜஐஸ மரத்தை வெட்டினான்

கல்லெறிந்தான் .. ஜஆல்ஸ கல்லாலெறிந்தான்

கொற்றன்மகன் .. ஜகுஸ கொற்றனுக்கு மகன்

மலைவீழருவி .. ஜஇன்ஸ மலையின் வீழருவி

சாத்தான்கை .. ஜஅதுஸ சாத்தனதுகை

மலைநெல் .. ஜகண்ஸ மலையின்கணெல்

78. அலவழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். ஆது, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற்தொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர், என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப், பதினான்கு வகைப்படும்.

தொகைநிலைத் தொடர்களுக்கு உதாரணம்

(1) கொல்யானை .. வினைத்தொகை

(2) கருங்குதிரை .. பண்புத்தொகை சாரைப்பாம்பு .. இருபெயரொட்டுப் பண்புத் தொகை

(3) மதிமுகம் .. உவமைத் தொகை

(4) இராப்பகல் .. உம்மைத் தொகை

(5) பொற்றொடி .. அன்மொழித் தொகை

தொகாநிலைத் தொடர்களுக்கு உதாரணம்

(1) சாத்தன் வந்தான் .. எழுவாய்த் தொடர்

(2) சாத்தவா .. விளித் தொடர்

(3) வந்தான் சாத்தன் .. தொரிநிலை வினைமுற்றுத் தொடர்

(4) பொன்னனிவன் .. குறிப்பு வினைமுற்றுத்தொடர்

(5) வந்த சாத்தன் .. பெயரெச்சத் தொடர்

(6) வந்து போனான் .. வினையெச்சத் தொடர்

(7) மற்றொன்று .. இடைச்சொற்றொடர்

(8) நனிபேதை .. உரிச்சொற்றொடர்

(9) பாம்பு பாம்பு .. அடுக்குத் தொடர்

79. இப்படி மொழிகள், வேற்றுமை வழியாலும், அல்வழியாலும், புணருமிடத்து, இயல்பாகவாயினும், விகாரமாகவாயினும் புணரும்.

80. இயலபு புணர்ச்சியாவது, நிலைமொழியும், வருமொழியும், விகாரமின்றிப் புணர்வதாம்.

உ-ம்.

பொன்மணி சாத்தன்கை

81. விகாரப்புணர்ச்சியாவது, நிலைமொழியேனும், வருமொழியேனும், இவ்விரு மொழிமேனும், தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்களுள் ஒன்றையாயினும் பெற்றுப் புணர்வதாம்.

உ-ம்.

வாழை 10 பழம் ஸ்ரீ வாழைப்பழம் தோன்றல்

மண் 10 குடம் ஸ்ரீ மட்குடம் திரிதல்

மரம் 10 வேர் ஸ்ரீ மரவேர் கெடுதல்

நிலம் 10 பனை ஸ்ரீ நிலப்பனை கெடுதல், தோன்றல்

பனை 10 காய் ஸ்ரீ பனங்காய் கெடுதல், தோன்றல், திரிதல்

82. தோன்றல், திரிதல், கெடுதல், என்னும் இவ் விகாரமூன்றும், மயக்க விதி இன்மை பற்றியும், அல்வழி வேற்றுமைப் பொருணோக்கம் பற்றியும் வரும்.

தேர்வு வினாக்கள்- 75. புணர்ச்சியாவது யாது? 76. அப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 77. வேற்றுமைப்புணர்ச்சி யாவது யாது? 78? ஆல்வழிப் புணர்ச்சியாவது யாது? அது எத்தனை வகைப்படும்? 79. மொழிகள், வேற்றுமை வழியாலும் அல்வழியாலும் புணருமிடத்து, எப்படி புணரும்? 80. இயல்பு புணர்ச்சியாவது யாது? 81. விகாரப் புணர்ச்சியாவது யாது? 82. தோன்றல் முதலிய விகாரங்கள் எவை பற்றி வரும்?

மயங்கா எழுத்துக்கள்

83. உயிரோடு உயிர்க்கு மயக்கவிதி இன்மையால், உயிhPற்றின்முன், உயிர் வரின், இடையே உடம்படு மெய்யென ஒன்று தோன்றும்.

உடம்படு மெய்யாவது, வந்த உயிருக்கு உடம்பாக அடுக்கும் மெய், நிலைமொழியீற்றினும் வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய்யெனினும் பொருந்தும். உடம்படுத்தலெனினும், உடன் படுத்தலெனினும் ஒக்கும்.

84. மெய்யீற்றின்முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின், நிலைமொழியீற்றேனும், வருமொழி முதலேனும், இவ்விரண்டுமேனும் விகாரப்படும்.

85.மொழிக்கு ஈராகுமெனப்பட்ட பதிகொருமெய்களின் முன்னும், மொழிக்கு முதலாகுமெனப்பட்ட ஒன்பது மெய்களும் புணரும்போது, மயங்குதற்கு உரியனவல்லாத மெய்களைச் சொல்வாம் :-

லகர ளகரங்களின் முன்னே த ஞ ந ம என்னும் நான்கும் மயங்கா. ணுகர னகரங்களழன் முன்னே த ந என்னும் இரண்டும் மயங்கா. முகர மெய்யின் முன்னே க ச த ஞ ந என்னும் இரண்டும் மயங்கா ஞகரத்தின் முன்னே சகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. நுகரத்தின் முன்னே தகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. வுகரத்தின் முன்னே யகரமல்லாத எட்டும் மயங்கா.

தேர்வு வினாக்கள் - 83. உயீறிற்றின் முன் உயிர் வரின் எப்படி யாகும்? உடம்படுமெய்யாவது யாது? உடம்படுமெய்யென்பதற்கு வேறு பொருளும் உண்டோ? 84. மெய்யீற்றின் முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின் எப்படியாகும்? 85. லகர ளகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? ணகர னகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? மகரமெய்யின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? ஞகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? நகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? வகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?

மெய்யீற்றின் முன் உயிர் புணர்தல்

86. தனிக்குற்றெழுத்தைச் சாரத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், வந்தவுயிர் அந்த மெய்யீற்றின் மேல் ஏறும்.

உ-ம்.

ஆண் 10 அழகு ஸ்ரீ ஆணழகு

மரம் 10 உண்டு ஸ்ரீ மரமுண்டு

87. தனிக்குற்றெழுத்தை ச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், அந்த மெய் இரட்டிக்கும்: இரட்டித்த மெய்யீற்றின் மேல் வந்தவுயிர் ஏறும்.

உ-ம்.

கல் 10 எறிந்தான் ஸ்ரீ கல்லெறிந்தான்

பொன்; 10 அழகியது ஸ்ரீ பொன்னழகியது

தேர்வு வினாக்கள்- 86. தனிக்குற்றெழுத்தைச் சாராத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்? 87. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?

உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்

88. இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.

உ-ம்.

கிளி; 10 அழகு ஸ்ரீ கிளியழகு

தீ 10 எரிந்தது ஸ்ரீ தீயெரிந்தது

பனை 10 ஓலை ஸ்ரீ பனையோலை

89. அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.

உ-ம்.

பல 10 அணி ஸ்ரீ பலவணி

பலா 10 இலை ஸ்ரீ பலாவிலை

திரு 10 அடி ஸ்ரீ திருவடி

பூ 10 அரும்பு ஸ்ரீ பூவரும்பு

நொ 10 அழகா ஸ்ரீ நொவ்வழகா

கோ 10 அழகு ஸ்ரீ கோவழகு

கௌ 10 அழகு ஸ்ரீ கௌவழகு

கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால், இடையில் வகரம் வராது யகரம் வரும்.

உ-ம்.

கோ 10 இல் ஸ்ரீ கோயில்

ஓரோவிடத்துக் கோவில் எனவும் வரும்.

90. ஏகாரவுயிhPற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.

உ-ம்.

அவனே 10 அழகன் ஸ்ரீ அவனேயழகன்

சே 10 உழுதது ஸ்ரீ சேவுழுதது

தேர்வு வினாக்கள்- 88. இ, ஈ, ஐ எ;ஏம் மூன்றுயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்? 89. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்? கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால் இப்படியே முடியுமோ? 90. ஏகாரவுயிhPற்றின் முன் உயிர் முதன்மொழி வந்தால் எப்படி புணரும்?

குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல்

91. குற்றியலுகரம், உயிர் வந்தால் தான் ஏறி நின்ற மெய்யைவிட்டுக் கெடும்: யகரம் வந்தால், இகரமாகத் திரியும்.

உ-ம்.

ஆடு 10 அரிது ஸ்ரீ ஆடரிது

நாகு 10 யாது ஸ்ரீ நாகியாது

குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் இல்லாமையால், சம்பு, இந்து முதலிய வட மொழிகளின் ஈற்றுகரம் உயிர்வரிற் கெடாது நிற்க, உடம்படு மெய் தோன்றும்.

உ-ம்.

சம்பு 10 அருளினான் ஸ்ரீ சம்புவருளினான்

இந்து 10 உதித்தது ஸ்ரீ இந்துவுதித்தது

தேர்வு வினாக்கள்- 91. குற்றியலுகரத்தின் முன் உயிர் வந்தால் எப்படியாம்? குற்றியலுகரத்தின் முன் யகரம் வந்தால் எப்படியாம்? குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் உண்டா இல்லையா? வுட மொழிகளின் ஈற்றுகரத்தின் முன் உயிர் வரின் எப்படியாம்?

சில முற்றியலுகரவீற்றின் முன் உயிரும் யகரமும் புணர்தல்

92. சில முற்றியலுகரமும், உயிர் வரின் மெய்யை விட்டுக்கெடுதலும், யகரம் வரின் இகரமாகத் திரிதலுமாகிய இவ்விரு விதியையும் பெறும்.

உ-ம்.

கதவு 10 அழகு ஸ்ரீ கதவழகு

கதவு 10 யாது ஸ்ரீ கதவியாது

தேர்வு வினா -- 92.முற்றியலுகரங் குற்றியலுகரவீற்று விதி பெறாதா?

எல்லாவீற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்

93. உயிரும் மெய்யுமாகிய எல்லாவீற்றின் முன்னும் வரும் ஞ ந ம ய வ க்கள், இருவழியினும், இயல்பாம்: ஆயினும் இவற்றுள் ண ள ன ல என்னும் நான்கின் முன்னும் வருநகரந் திரியும். இத்திரிபு மேற் கூறப்படும்;

வின, பலா, புளி, தீ, கடு, பூ, சே, பனை, கோ, கௌ, உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், வாள், என்னும் நிலைமொழிகளோடு, அல்வழிப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது, என்னும் வருமொழிகளையும், வேற்றுமைப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞாற்சி நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை, என்னும் வருமொழிகளையும் கூட்டிக்கண்டு கொள்க.

உ-ம்.

விள 10 ஞான்றது ஸ்ரீ விளஞான்றது

உரிஞ் 10 ஞான்றது ஸ்ரீ உரிஞ10ஞான்றது

விள 10 ஞாற்சி ஸ்ரீ விளஞாற்சி

உரிஞ் 10 ஞாற்சி ஸ்ரீ உரிஞ10ஞாற்சி

நிலைமொழியீற்றுட் சில விகாரப்படுதல், பின்பு அல்வவ்வீற்றிற் கூறும் விதியாற் பெறப்படும்.

94. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்ஃ

உ-ம்.

மெய் 10 ஞானம் ஸ்ரீ மெய்ஞ்ஞானம்

செய் 10 நன்றி ஸ்ரீ செய்ந்நன்றி

கை 10 மாறு ஸ்ரீ கைம்மாறு

95. நொ, து என்னும் இவ்விரண்டும் முன் வரும் ந ம ய வக்கள் மிகும்.

உ-ம்.

நொ 10 ஞௌ;ளா ஸ்ரீ நொஞ்ஞௌ;ளா

யவனா ஸ்ரீ நொய்யவனா

து 10 ஞௌ;ளா ஸ்ரீ துஞ்ஞௌ;ளா

யுவனா ஸ்ரீ துய்யவனா

நோ - துன்பப்படு, து- உண்

தேர்வு வினாக்கள்- 93. எல்லாவீற்றின் முன்னும் ஞ ந ம ய வக்கள் வந்தால் எப்படிப் புணரும்? 94. ஞ ந ம ய வக்கள் எந்த மொழி முன்னும் மிகவோ? 95. நொ, து என்னும் இவ்விரண்டின் முன்னும் ஞ ந ம ய வக்கள் இயல.பேயாமோ?

மெய்யீற்றின் முன் யகரம் புணர்தல்

96. யகரமல்லாத மெய்கள், தம் முன் யகரம் வந்தாள் இகரச்சாரியை பெறுதலுமுண்டு.

உ-ம்.

வேள் 10 யாவன் ஸ்ரீ வேளியாவன்

மண் 10 யானை ஸ்ரீ மண்ணியானை

வேள்யாவன் என இகராச்சாரியை பெறாது வருதலே பெரும்பான்மையாம்.

97. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் வருமொழி யகரம் வந்தாற் கெடும்.

உ-ம்.

வேய் 10 யாது ஸ்ரீ வேயாது

தேர்வு வினாக்கள் -- 96. யகரமல்லாத மெய்களின் முன் யகரம் வந்தால் எப்படி புணரும்? 97. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் முன் யகரம் வந்தால் எப்படிப் புணரும்?

மூன்று சுட்டின் முன்னும் எகரவினாமுன்னும் நாற்கணமும் புணர்தல்

98. அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டின் முன்னும், யகரமொழித்த மெய்கள் வந்தால், வந்தவெழுத்து மிகும்: யகரமும் உயிரும் வந்தால், இடையில் வகரந் தோன்றும்.

உ-ம்.

அக்குதிரை இக்குதிரை உக்குதிரை எக்குதிரை

அம்மலை அம்மலை உம்மலை எம்மலை

அவ்வழி இவ்வழி உவ்வழி எவ்வழி

அவ்யபனை இவ்யானை உவ்யானை எவ்யானை

அவ்வுயிர் இவ்வுயிர் உவ்வுயிர் எவ்வுயிர்

99. அந்த, இந்த, உந்த எந்த என மரூஉமொழிகளாய் வருஞ்சுட்டு வினாக்களின் முன் வரும். வல்லினம் மிகும்.

உ-ம்.

அந்தக்கல், இந்தக்கல், உந்தக்கல், எந்தக்கல்

தேர்வு வினாக்கள்- 98. அ, இ, உ என்னும் மூன்று கட்டின் முன்னும், எகரவினா முன்னும் யகரமொழிந்த மெய்கள் வந்தால், எப்படி புணரும்? இந்நான்கன் முன்னும் யகரமும் உயிரும் வந்தால் எப்படிப் புணரும்? 99. அந்த, இந்த, உந்த, எந்த என்னும் மரூஉமொழிகளின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?

உயர்தினைப் பொதுப் பெயர்களின் முன் வல்லினம் புணர்தல்

100. உயர்தினைப் பெயாப் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகரமெய்களின் முன்னும் வரும் வல்லினம் இருவழியினும் மிகாதியல்பாம்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

நம்பிக்குறியன்

விடலைசிறியன்

செய்பெரியன்

அவர் தீயர் நம்பிக்கை

விடலை செவி

சேய்படை

அவர்தலை உயர்தினைப் பெயர்

சாத்திகுறியள்

சாத்திகுறிது சாத்திகால் போதுப்பெயர்

தந்தைசிறியன்

தந்தைசிறிது தந்நைசெவி

தாய்பொடியாள்

தாய்கொடிது தாய்கை

ரகரமெய் பொதுப்பெயர்க்கு ஈறாகாது

நும்பிக்கொற்றான், சாத்திப் பெண், சேய்க்கடவுள், தாய்ப்பசு என இருபெயரொட்டுப் கண்புத்தொகையினும், தாய்க்கொலை, ஒன்னலர்ச் செகுத்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், செட்டித்தெரு என ஒரோவிடத்து ஆறாம் வேற்றுமைத் தொகையினும் வல்லின மிகுமெனக்கௌ;க.

முகப்பிறந்தது, மகப்பெற்றாள், எ-ம். பிதாக்கொடியன்.பிதாக்கை, எ-ம். ஆடுச்சிறியன், ஆடுச்செவி, எ-ம். கோத்தீயன், கோத்தலை, எ-ம். அகர, ஆகார ஊகார ஓகாரங்களின் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகுமெனக் கொள்க.

101. உயர்திணைப் பெயர் பொதுப்பெயர்களின் ஈற்று லகர ளகர ணகர னகர மெய்கள், வல்லினம் வந்தால் இருவழியினுந் திரியாதியல்பாம்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

தேன்றல்குறியன்

அவள்சிறியள்

அவன்பெரியான் தோன்றல்கை

அவள்செவி

அவன்பொருள் உயர்திணைப் பெயர்

ணகரமெய் உயர்திணைப்பெயர்க்கு ஈறாகாது.

தூங்கல் குறியன்

தூங்கல் குறிது தூங்கல் கை பொதுப் பெயர்

மகக்கள் சிறியர்

மக்கள் சிறிய மக்கள் செவி

ஆண் பெரியன்

ஆண் பெரிது ஆண்புறம்

சாத்தன் சிறியன்

சாத்தன் சிறிது சாத்தன் செவி

உயர்திணைப் பெயாPற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.

லகர ளகரங்களின் முன்னும், ணகர னகரங்களின் முன்னும், தகரம் மயங்குதற்கு விதியில்லாமையால், வரும் விகாரம் மேற்கூறப்படும்.

தேர்வு வினாக்கள் - 100. உயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகர மெய்களின் முன்னும், வல்லினம் வரின் எப்படிப் புணரும்? இவைகளின் முன் வரும் வல்லினம் எந்தவிடத்தும் மிகவோ? 101. உணர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்று லபர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படிப் புணரும்? இவைகள் வல்லினம், வந்தால் எவ்விமத்துந் திரியாவோ?

சில வுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணர்தல்

102. னகலர லகரவீற்றுச் சிலவுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணருமிடத்து, உம்மைத் தொகையினும், இருபெயரொட்டுப் பண்புத் தொகையினும் ஆறாம் வேற்றமைத் தொகையினும், நிலைமொழியேனும், இவ்விரு nhழியுமெனும், விகாரப்படும்.

உ-ம்.

உம்மைத் தொகை

கபிலன் 10 பரணன் ஸ்ரீ கபிலபரணர்

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

சிவன் 10 பெருமான் ஸ்ரீ சிவபெருமான்

முருகன் 10 கடவுள் ஸ்ரீ முரகக்கடவுள்

சதாசிவன் 10 நாவலன் ஸ்ரீ சதாசிவ நாவலன்

கந்தன் 10 வேள் ஸ்ரீ கந்தவேள்

வேலாயுதன் 10 உபாத்தியாயன் ஸ்ரீ வேலாயுதவுபாத்தியாயன்

தியாகராசர் 10 செட்டியர் ஸ்ரீ தியாகராசச் செட்டியர்

விநாயகர் 10 முதலியார் ஸ்ரீ விநாயகமுதலியார்

வேற்றுமைத் தொகை

குமரன் 10 கோட்டம் ஸ்ரீ குமரகோட்டம்

குமரக்கோட்டம்

வாணியர் 10 தெரு ஸ்ரீ வாணியத்தெரு

வேளாளர் 10 வீதி ஸ்ரீ வேளாளவீதி

தேர்வு வினாக்கள்- 101. எல்லாவுயர்தியைப் பெயரும், நாற்கணங்களோடு புணருமிடத்து, இயல்பாகவே புணருமொ?

விளிப்பெயர் முன் வல்லினம் புணர்தல்

103. விளிப்பெயாPற்று உயிர் முன்னும் ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆப் பெயாPற்று லகர ளகர ணகர னகரங்கள் வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.

உ-ம்.

புலவபாடு சாத்தா கேள்

நம்பிசெல் தம்பீ தா

வேந்து கூறு மகனே படி

விடலை போ நங்காய் பார்

நாய்கீர் சென்மின் நாய்காய் பார்

தோன்றல் உறாய் மக்கள் சொல்லீர்

ஆண் கேளாய் கோன் பேசாய்

விளக்கொடியை, பிதாகடகூறாய், ஆடூச் சொல்லாய், சேச்சொல்லாய், கோப்பேசாய், என அகர ஆகார ஊகார ஏகார ஓகாரங்களை இயல்பீறாகவுடைய விளிப்பெயர் முன் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.

தேர்வு வினாக்கள்- 103. விளிப் பெயாPற்று உயிர் முன்னும், யரழ மெய் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்? வுpளிப்பெயாPற்று லகர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? விளிப்பெயர் முன் வரும் வல்லினம் எவ்விடத்தும் மிகவோ?

ஈற்று வினா முன்னும் யாவினா முன்னும் வல்லினம் புணர்தல்

104. ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் யபவினா முன்னும் வரும் வல்லினம் மிகவாம்.

உ-ம்.

அவனா கொண்டான் அவனே சென்றான்

அவனோ தந்தான் யா பெரிய

தேர்வு வினாக்கள்- 104. ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்?

வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்

105. வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தாள் திரியாதியல்பாம்.

உ-ம்.

தெரிநிலை வினைமுற்று

உண்டன குதிரைகள் உண்ணா குதிரைகள்

வருதி சாத்தா வந்தனை சாத்தா

வந்தது புலி வந்தாய் பூதா

உண்டீர் தேவரே உண்டாhட தேவர்

உண்பல் சிறியேன் உண்டாள் சாத்தி

வந்தேக் சிறியேன் வந்தான் சாத்தன்

குறிப்பு வினைமுற்று

கரியன குதிரைகள் வில்லி சாத்தா

கரியது தகர் கரியை தேவா

கரியாய் சாத்தா கரியீர் சாத்தரே

கூயிற்றுக் குயில், குநற்தாட்டுக் களிறு என வன்றொடர்க் குற்றியலுகரவீற்றுத் தெரிநிலை வனை முற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னு மாத்திரம் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.

ஏவலொருமை வினைமுற்று

நட கொற்றா வா சாத்தா

எறி தேவா கொடு பூதா

ஓடு கொற்றா வெஃகு சாத்தா

பரசு தேவா நடத்து பு_தா

அஞ்சு கொற்றா எய்து சாத்தா

வனை தேவா செய்கொற்றா

சேர் சாத்தா வாழ் பூதா

நில் கொற்றா கேள் சாத்தா

உண் கொற்றா தின் சாத்தா

நொ, து என்னும் ஏவலொருமை வினைமுற்றிரண்டின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

உ-ம். நொக்கொற்றா துச்சாத்தா

வினைத்தொகை

விரிகதிர் ஈபொருள்

அடுகளிறு வனைகலம்

ஆடு பாம்பு அஃகுபிணி

பெருகுபுனல் ஈட்டுதனம்

விஞ்சுபுகழ் மல்கு சுடர்

உண்கலம் தின்பண்டம்

கொல்களிறு கொள்கலம்

செய்கடன் தேர்ப்பொருள்

வீழ்புனல்

ஏவலொருமை வினைமுற்றும் வினைத் தொகையும் வன்றொடர்க் குற்றியலுகரவீற்றனவாயினும், அவற்றின் முன் வரும் வல்லினம் மிபாமை காண்க.

ணகர ழகரவீறுகள், வினைத் தொகைக்கும் ஏவன் முற்றுக்குமன்றி, மற்றை வினை முற்றுக்களுக்கு இல்லை. லகர வீறு குறிப்பு வினை முற்றுக்கு இல்லை.

தேர்வு வினாக்கள்- 105. வினைமுற்று வினைத் தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ மெய் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்? ஆச் சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகலங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்? வுல்லினம், எந்த வினை முற்றின் முன்னும் மிகவோ? வுன்றொடர்க் குற்றியலுகரவீற்று ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகுமோ? ஏந்த ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகவோ?

பெயரெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல்

106. அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகா. ஈற்றுயிர் மெய் கெட்டு ஈகாரவிறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்.

உ-ம்.

உண்ட கொற்றன் கரிய டிகாற்றன்

உண்ணாத குதிரை இல்லாத குதிரை

உண்ணாக் குதிரை இல்லாக் குதிரை

தேர்வு வினாக்கள்- 106. அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? ஈற்றுயிர்மெய் கெட்டு ஆகார விறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?

வினைடியச்சத்தின் முன்வல்லினம் புணர்தல்

107. இ, ய், ஆ, ஊ, என, அ என்னும் விகுதிகளையுடைய தெரிநிலை வினை வினையெச்சங்களின் முன்னும் அ, றி என்னம் விகுதிகளையுடை இவ்விரு வகை வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

உ-ம்.

தேடிக்கொண்டான் போய்க்கொண்டான்

உண்ணாச்சென்றான் உண்ணுhச் சென்றான்

உண்டெனப்பசஜ தீர்ந்தது உண்ணப் போனான்

மெல்லப் பேசினான் நாளின்றிப் போனான்

உண்டவழித் தருவான் உண்டக் கடைத்தருவான்

அவனில்லாவழிச் செய்வான் அவனில்லாக் கடைச்செண்வான்

108. இய, இயர், Nமு, டை என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.

உ-ம்.

உண்ணிய சென்றான் உண்ணியா சென்றான்

உண்ணாமே போனான் உண்ணாமை போனான்

109. வன்றொடர்க்குற்றியலுகரவீற்ற

Link to comment
Share on other sites

தேர்வு வினாக்கள்- 117. இகர ஐகாரவுயிர்களையும் ய ர ழ மெய்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம் எந்தெந்த விடங்களின் மிகும்: எந்தெந்தவிடங்களின் மிகா? இரண்டாம் வேற்றுமைத் தொகையும், ஏழாம்வேற்றுமைத் தொகையும், உருபு மாத்திரந் தொக்க தொகையாயின், அவற்றின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், அவற்றின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? இகர ஐகாரவீற்றஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், ஆறாம் வேற்றுமைத் தொகையில், மிகுதலன்றி வேறு விதி பெறாதோ? ய ர ழ வீற்றின் முன் வரும் வல்லினம், வேற்றுமைத் தொகையிலும், பண்புத் தொகையிலும், ஒரோவிடத்து வேறு விதி பெறவோ? மூன்றாம் வேற்றுமைத் தொகையிலே முடிக்குஞ் சொற் செயற்பாட்டு வினையாகுமிடத்து, ய ர க்களின் முன் வரும் வல்லினம் எப்படிப் புணரும்?

சில மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல்

118. உயிhPற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், இன மெல்லெழுத்து மிகும்.

உ-ம்.

மா 10 காய் ஸ்ரீ மாங்காய்

விள 10 காய் ஸ்ரீ விளாங்காய்

119. இகர, உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், அம்முச்சாரியை தோன்றும்.

உ-ம்.

புளி 10 காய் ஸ்ரீ புளியங்காய்

புன்கு 10 காய் ஸ்ரீ புன்கங்காய்

ஆல் 10 காய் ஸ்ரீ ஆலங்காய்

120. ஐ காரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், நிலைமொழியீற்றை காரங் கெட்டு அம்முச்சாரியை தோன்றும்.

உ-ம்.

எலுமிச்சை 10 காய் ஸ்ரீ எலுமிச்சங்காய்

மாதுளை 10 காய் ஸ்ரீ மாதுளங்காய்

தேர்வு வினாக்கள்- 118. உயிரீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்? 119. இகர உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்? 120. ஐகாரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?

சில வேற்றுமையுருபின் முன் வல்லினம் புணர்தல்

121. ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமையுருபு களின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகா.

உ-ம்.

மகனொடு போனான் மகனோடு போனான்

தனது கை தனாது கை தன கைகள்

தேர்வு வினா- 121. ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும், அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்?

குற்றியலுகரவீறு

122. வன்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

கொக்குக்கடிது கொக்குச்சிறை

சுக்குத்திப்பிலி சுக்குக்கொடு

123. மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்: வேற்றுமையிலே மிகும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

குரங்கு கடிது குரங்குக்கால்

அம்பு தீது அம்புத்தலை

குரங்கு பிடித்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும், அரங்கு புக்கான் என ஏழாம் வேற்றுமைத் தொகையிலும், வருமொழி வினையாயவிடத்து, வல்லினம் மிகாவெனக் கொள்க.

124. ஏழாம் வேற்றுமையிடப்பொருள் உணர நின்ற அன்று, இன்று, என்று, பண்டு, முந்து, என்னும் இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகா.

உ-ம்.

அன்று கண்டான் பண்டு பெற்றான்

இங்குச்சென்றான் ஈங்குச்சென்றான்

உங்குத்தந்தான் ஊங்குத்தந்தான்

எங்குப்பெற்றான் யாங்குப்பெற்றான்

யாண்டுப் பெற்றான்

125. நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர் என்னும் இந்நான்கு தொடர்க் குற்றியலுகர வீற்றுமொழிகளின் முன் வரும் வல்லினம், இரு வழியினும் இயல்பாம்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

நாகு கடிது நாகு கால்

எஃகு கொடிது எஃகு கூர்மை

வரகு சிறிது வரகு சோறு

தௌ;கு பெரிது தௌ;கு பெருமை

126. டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் நாற்கணமும் வரின், உகரமேறிய டகர றகர மெய்கள் வேற்றுமையிற் பெரும்பாலும் இரட்டும்.

ஆட்டுக்கால்

ஆட்டுமயிர்

ஆட்டுவால்

ஆட்டதர் ஆற்றுக்கால்

ஆற்றுமணல்

ஆற்றுவழி

ஆற்றூறல் நெடிற்றொடர்

பகட்டுக்கால்

பகட்டுமார்பு

பகட்டு வால்

பகட்டடி வயிற்றுக்கொடல்

வயிற்றுமயிர்

வயிற்றுவலி

வயிற்றணி உயிர்த்தொடர்

காட்டரண், ஏற்றுப்பன்றி, வரட்டாடு, வெளிற்றுப்பனை எனச் சிறுபான்மை அல்வழியிலே பண்புத்தொகையில் இரட்டுதலும், வெருக்குக்கண், எருத்துமாடு எனச் சிறுபான்மை இரு வழியிலும் பிறவொற்றிரட்டுதலும் உளவெனக் கொள்க.

ஆடு கொண்டான், ஆறு கண்டான், பகடு தந்தான், பயறு தின்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், காடு போந்தன், ஆறு பாய்ந்தான், அகடு புக்கது, வயிறு புக்கது என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, இரட்டா வெனக் கொள்க.

127. மென்றொடர்க் குற்றியலுகர வீற்று மொழிகளுள்ளே சில, நற்கணமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியிலே பணபுத்தொகையிலும், உவமைத் தொகையிலும், வன்றொடர்க் குற்றியலுகரமாதலுமுண்டு.

உ-ம்.

மருந்து 10 பை ஸ்ரீ மருந்துப்பை

கரும்பு 10 நாண் ஸ்ரீ கருப்புநாண்

கரும்பு 10 வில் ஸ்ரீ கருப்புவில் வேற்றுமை

கன்று 10 ஆ ஸ்ரீ கற்றா

அன்பு 10 தளை ஸ்ரீ அற்புத்தளை பண்புத்

என்பு 10 உடம்பு ஸ்ரீ எறபுடம்பு தொகை

குரங்கு 10 மனம் ஸ்ரீ குரக்குமனம் உவமைத்

இரும்பு 10 நெஞ்சம் ஸ்ரீ இருப்புநெஞ்சம் தொகை

128. சில மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகள் இறுதியில் ஐகாரச்சாரியை பெற்று வரும்.

உ-ம்.

பண்டு 10 காலம் ஸ்ரீ பண்டைக்காலம்

இன்று 10 நாள் ஸ்ரீ இற்றைநாள் அல்வழி

அன்று 10 கூலி ஸ்ரீ அன்றைக்கூலி வேற்றுமை

இன்று 10 நலம் ஸ்ரீ இற்றை நலம்

சில மென்றொடர் மொழிகள், வருமொழி நோக்காது, ஒற்றை, இரட்டை எனத் தனிமொழியாக நின்றும், ஈராட்டை, மூவாட்டை எனத்தொடர் மொழியாக நின்றும், ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.

நேற்று 10 பொழுது ஸ்ரீ நேற்றைப்பொழுது. எ-ம்.

நேற்று 10 கூலி ஸ்ரீ நேற்றைக்கூலி. எ-ம். வன்றொடர் ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.

தேர்வு வினாக்கள்- 122. வன்றொடர்க்குற்றியலுகரவீற்ற

Link to comment
Share on other sites

153. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து அல்வழியில், எழுவாய்த் தொடரிலும், விழித்தொடரிலும், உண்மைத் தொகையிலும், வினைமுற்றுத் தொடரிலும், வினைத்தொகையிலுந் கெடும்.

உ-ம்.

வேறீது வாடீது

தோன்றறீயன் வேடீயன் எழுவாய்த் தொடர்

தோன்றாறொடராய் வேடீயை - விளித்தொடர்

காறலை தாடலை - உம்மைத்தொகை

உண்பறமியேன் வந்தாடேவி - வினைமுற்றுத் தொடர்

பயிறோகை அருடேவன் - வினைத்தொகை

குயிற்றிரள், அருட்டிறம் என வேற்றுமையிலும், காற்றுணை, தாட்டுணை எனப் பண்புத்தொகையிலும் பிறங்கற்றோள், வாட்டாரை என உவமைத் தொகையிலும், கெடாது திரிந்து நின்றமை காண்க. பிறங்கள் - மலை, தாரை - கண்

வேறொட்டான், தாடொழுதான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்துக் கெடுமெனக் கொள்க.

நிலைமொழி உயர்திணைப் பெயராயின், தோன்றறாள், வேடோள் என வேற்றுமையினுங் கெடும் எனவும், குரிசிற்றடிந்தான், அவட்டொடர்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாய விடத்துக் கெடாது திரியும் எனவுங் கொள்க.

154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

கல் - கன்ஞெரிந்தது கன்ஞெரி

வில் - வின்னீண்டது வின்னீட்சி

புல் - புன்டாண்டது புன்மாட்சி

முள் - முன்ஞெரிந்நது முண்ஞெரி

புள் - புண்ணீண்டது புண்ணீட்சி

கள் - கண்மாண்டது கண்மாட்சி

155. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

வேனன்று வேனன்மை

பொருணன்று பொருணன்மை

156. லகர ளகரங்களின் முன் இடையினம் வரின், இரு வழியினும், இறுதி ல ளக்கள் இயல்பாம்

உ-ம்.

அல்வழி வேற்றுமை

கல்யாது கலயாப்பு

விரல்வலிது விரல்வன்மை

முள்யாது முள்யாப்பு

வாள்வலிது வாள்வன்மை

தேர்வு வினாக்கள் - 149. லகர ளகரங்களின் முன் இரு வழியினும் வல்லினம் வரின், எப்படிப் புணரும்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, எப்படியாம்? 150. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வல்லினம் வரின், எவ்விடங்களில் ஒரு கால் இயல்பாகவும், ஒருகாற்றிரியவும் பெறும்? எச் சொற்களின் ஈற்று லகரவொற்று, வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிற்றிரிந்தே வரும்? உறழ்ச்சியாவது யாது? தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்து இயல்பேயாமோ? 151. இரு வழியினும் லகரத்தின் முன் வருந் தகரம் எப்படியாம்? 152. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்துக் றடக்களாதலன்றி வேறு திரிபு பெறுமோ? 153. தனிக்குற்றெழுத்தைச் சாரத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து, கெடுதல் எங்கும் இல்லையோ? தனிக்குற்றெழுத்தைச் சாரத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து, எங்கே கெடாது திரிந்து நிற்கும்? லளக்கள் வேற்றுமையிற் கெடுதல் எங்கும் இல்லையோ? உயர்திணைப்பெயாPற்று லளக்கள் வேற்றுமையில் வருந் தகரந் திரிந்த விடத்து எப்படியாம்? 154. லளக்களின் முன் இரு வழியினும் மெல்லினம் வரின் எப்படியாம்? 155. தனிக்குற்றெழுத்தைச் சாராத லளக்கள் இரு வழியினும் வரும் நகரந் திரிந்த விடத்து, எப்படியாம்? 156. லளக்களின் முன் இரு வழியினும் இடையினம் வரின் எப்படியாம்?

வகரவீற்றுப் புணர்ச்சி

157. அவ், இவ், உவ் என்னும் அஃறிணைப் பலவின் பாலை உணர்த்தி வரும் சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம், அல்வழியில், வல்லினம் வரின் ஆயுதமாகத் திரியும்: மெல்லினம் வரின் வந்த எழுத்தாகத் திரியும்: இடையினம் வரின் இயல்பாகும்.

உ-ம்.

அஃகடியன இஃசிறியன உஃபெரியன

அஞ்ஞான்றன இந்நீண்டன உம்மாண்டன

அவ்யாத்தன இவ்வளைந்தன உவ்வாழ்ந்தன

156. தெவ் என்னும் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், உகரச்சாரியை பெறும்: மகரம் வருமிடத்து, ஒரோவழி மகரமாகத் திரியவும் பெறும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

தெவ்வுக் கடிது தெவ்வுக்கடுமை

தெவ்வுமாண்டது தெவ்வுமாட்சி

தெவ்வுவந்தது தெவ்வுவன்மை

தெவ்வுமன்னர் தெவ்வுமுனை

தெம்மன்னர் தெம்முனை

தேர்வு வினாக்கள் - 157. சுட்டுப்பெயர்களின் ஈற்று வகரம் அல்வழியில் மூவின மெய்களும் வரின், டிப்படியாம்? 158. தெவ்வென்னுஞ் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், எப்படியாம்? மகரம் வரின் வேறு விதியும் பெறுமோ?

எண்ணுப்பெயர் நிறைப்பெயர் அளவுப் பெயர்கள் சாரியை பெறுதல்

159. உயிரையும் மெய்யையும் ஈறாகவுடைய எண்ணும் பெயர் நிறைப்பெயர் அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப்பெயர்கள் வரின், பெரும்பாலும் ஏ என்னுஞ் சாரியை இடையில் வரும்.

உ-ம்.

ஒன்றேகால் காலேகாணி

தொடியேகஃக கழஞ்சேகுன்றி

கலனேபதக்கு உழக்கேயாழாக்கு

ஒன்றரை, கழஞ்சரை, குறுணிநானாழி எனச் சிறுபான்மை ஏகாரச் சாரியை வராதொழியுமெனக் கொள்க.

தேர்வு வினாக்கள் - 159. எண்ணுப் பெயர் நிறைப்பெயர், அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப் பெயர்கள் வரின் எப்படியாம்?

இடைச் சொற்களின் முன் வல்லினம் புணர்தல்

160. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் இயல்பாயும் மிக்கும் முடியும்.

உ-ம்.

அம்ம - அம்மகொற்றா

அம்மா - அம்மாசாத்தா

மியா - கேண்மியாபூதா

மதி - னெ;மதிபெரும

என - பொள்ளெனப்புறம்வேரார்

இனி - இனிச்செய்வேன்

ஏ - அவனே கண்டான்

ஒ - அவனோ போனான்

161. வினையை அடுத்த படி என்னும் இடைச் சொல்லின் முன் வரும் வல்லினம் மிகா. சுட்டையும் வினாவையும் அடுத்த படி என்னும் இடைச் nசொல்லின் முன் வரும் வல்லினம் ஒரு கால் மிக்கும், ஒரு கால் மிகாதும், வரும்.

உ-ம்.

வரும்படி சொன்னான்

அப்படிசெய்தான் அப்படிச்செய்தான்

எப்படிபேசினான் எப்படிப்பேசினான்

162. வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியை இடைச்சொல்லின் இறுதி னகரந் திரியாதியல்பாம்.

உ-ம்.

ஆன்கூற்று வண்டின்கால்

தேர்வு வினாக்கள் - 160. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரம் வல்லினம் எப்படியாம்? 161. படி என்னம் இடைச் சொல்லின் மன் வரம் வல்லினம் எப்படியாம்? 162.வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியையிடைச் சொல்லின் இறுதி னகரம் டிப்படியாம்?

உரிச்சொற்களின் முன் வல்லினம் புணர்தல்

163. உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின், மிக்கும், இயல்பாகியும், இனமெல்லெழுத்து மிக்கும் புணரும்.

உ-ம்.

தவ - தவப்பெரியான்

குழ - குழக்கன்று

கடி - கடிக்கமலம்

கடி - கடிகா

தட - தடக்கை

கம - கமஞ்சூல்

நனி - நனிபேதை

கழி - கழிகண்ணோட்டம்

தேர்வு வினா- 136. உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?

உருபு புணர்ச்சி

164. வேற்றுமையுருபுகள், நிலைமொழியோடும் வருமொழியோடும் புணருமிடத்து, அவ்வுருபின் பொருட்புணர்ச்சிக்கு முற் கூறிய விதிகளைப் பெரும்பான்மை பெறும்: சிறுபான்மை வேறுபட்டும் வரும்.

உ-ம்.

நம்பிக்கண் வாழ்வு: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினமிகா, என்றும், ணகரம் இடையினம் வரின் இறுவழியினும் இயல்பாம், என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் இயல்பாயின.

உறிக்கட்டயிர்: இங்கே இகரவீற்றஃறிணைப் பெயர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினம் மிகும் என்றும், ணகரம் வேற்றுமைப் பொருளில் வல்லினம் வரின், டகரமாகத் திரியும் என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் விகாரமாயின.

நம்பிக்குப் பிள்ளை: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர் முன் வேற்றுமை பொருளில் வரும் வல்லினம் இயல்பாம் என்று விதித்தபடி இயல்பாகாது குவ்வுருபு மிகுந்தது.

இங்ஙனம் உருபு புணர்ச்சியானது பொருட்புணர்ச்சியை ஒத்து வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், சான்றோராட்சியால் அறிந்து கொள்க.

உறித்தயிர் என்பது, கண்ணென்னும் ஏழாம் வேற்றுமையுருபின்றி அவ்வுருபினது இடப்பொருள் படப்பெயரும் நிலைமொழி வருமொழிகளாய் நின்று புணர்ந்த புணர்ச்சி யாதலின், பொருட்புணர்ச்சியெனப்பட்டது. உறிக்கட்டயிர் என்பது, அவ்வேழனுருபு வெளிப்படட்டு நின்று நிலைமொழி வருமொழிகளோடு புணர்ந்த புணர்ச்சியாதலின், உருபு புணர்ச்சியெனப்பட்டது.

தேர்வு வினாக்கள் - 164. வேற்றுவமயுருபுகள், நிலைமொழியோடும், வருமொழியோடும், எடிப்படிப் புணரும்? வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாவது யாது? உருபு புணர்ச்சியாவது யாது?

விதியில்லா விகாரங்கள்

165. விதியின்றி விகாரப்பட்டு வருவனவுஞ் சிலவுள. அவை மருவி வழங்குதல், ஒத்து நடத்தல், தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலை மாறுதல் என எழுவகைப் படும்.

அவைகளுள்ளே, மருவி வழங்குதலொன்று மாத்திரம் தொடர்மொழியிலும், மற்றவை பெரும்பாலும் தனிமொழியிலும் வரும்.

166. மருவி வழங்குதலாவது, விதியின்றிப்பலவாறு விகாரப்பட்டு மருவி வருதல்.

உ-ம்.

அருமந்தன்னபிள்ளை - அருமருந்தபிள்ளை

பாண்டியனாடு - பாண்டி நாடு

சோழநாடு - சோணாடு

மலையமானாடு - மலாடு

தொண்டைமானாடு - தொண்டைநாடு

தஞ்சாவூர் - தஞ்சை

சென்னபுரி - சென்னை

குணக்குள்ளது - குணாது

தெற்குள்ளது - தெனாது

வடக்குள்ளது - வடாது

என்றந்தை - எந்தை

நுன்றந்தை - நுந்தை

167. ஒத்து நடத்தலாவது, ஒரேழுத்து நின்றவிடத்து அற்றோரெழுத்து வந்து பொருள் வேறுபடா வண்ணம் நடத்தலாம். அவை வறுமாறு :-

அஃறிணையியற்பெயருள்ளே, குறிலிணையின் கீழ் மகரநின்ற விடத்து னகரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உ-ம்-

அகம் - அகன்

முகம் - முகன்

நிலம் - நிலன்

நலம் - நலன்

மொழி முதலிடைகளிலே சகர ஞகர யகரங்களின் முன் அகர நின்ற விடத்து ஐகாரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உ-ம்.

பசல்

மஞ்சு

மயல் பைசல்

மைஞ்சு

மையல் மொழி முதலில் ஒத்து நடந்தது

அமச்சு

இலஞ்சி

அரயர் அமைச்சு

இலைஞ்சி

அரையர் மொழியிடையில்

ஒத்து நடந்தது

ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும், சில விடத்து ஐகாரத்தின் பின்னும், நகர நின்ற விடத்து ஞகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உ-ம்.

நணடு

நெண்டு

நமன் ஞண்டு

ஞெண்டு

ஞமன் மொழி முதலில் ஒத்து நடந்தது

ஐந்நூறு

மைந்நின்ற கண் ஐஞ்ஞ10று

மைஞ்ஞின்ற கண் ஐகாரத்தின் பின்

ஒத்து நடந்தது

சேய்நலூர்

செய்நின்ற சேய்ஞலூர்

செய்ஞ்ஞின்ற நீலம் யகரத்தின் பின் ஒத்து நடந்தது

ஒரொவிடத்து அஃறிணைப் பெயாPற்றில் லகர நின்ற வடத்து ரகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உ-ம்.

சாம்பல் - சாம்பர்

பந்தல் - பந்தர்

குடல் - குடர்

அஃறிணைப் பெயர்களுள், ஒரோவிடத்து மென்றொடர்க் குற்றுகரமொழிகளினிறுதி உகர நின்ற விடத்து அர் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உ-ம்.

அரும்பு - அரும்பர்

கரும்பு - கரும்பர்

கொம்பு - கொம்பர்

வண்டு - வண்டர்

ஒரோவழி லகர நின்ற விடத்து ளகரமும், ளகர நின்ற விடத்து லகரமும் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உ-ம்.

அலமருகுயிலினம் - அளமருகுயிலினம்

பொள்ளாமணி - பொல்லாமணி

168. தோன்றலாவது, எழுத்துஞ் சாரியையும் விதியின்றித் தோன்றுதலாம்.

உ-ம்.

யாது - யாவது

குன்றி - குன்றம்

செல் உழி - செல்வுழி

விண் அத்து - விண்வத்து

169. திரிதலாவது, ஓரெழுத்து மற்றோரெழுத்தாக விதியின்றித் திரிதலாம்.

உ-ம்.

மாகி - மாசி

மழைபெயின் விளையும் - மழைபெயில் வியையும்

கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்பு

உயர்திணைமேலே - உயர்திணை மேன

170. கெடதலாலது உயிர்மெய்யாயினும் மெய்யாயினும் விதியின்றிக் கெடுதலாம்.

உ-ம்.

யாவர் - யார்

யார் - ஆர்

யானை - ஆனை

யாடு - ஆடு

யாறு - ஆறு

எவன் என்னும் குறிப்பு வினை, என் என இடைநின்ற உயிர்மெய் கெட்டும், என்ன, என்னை, என உயிர் மெய் கெட்டு இறுதியில் உயிர் தோன்றியும் வழங்கும்.

171. நீளலாவது, விதியின்றிக் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீளலாம்.

உ-ம்.

பொழுது - போழ்து

பெயர் - பேர்

172. நிலை மாறுதலாவது, எழுத்துக்கள் ஒன்ற நின்ற விடத்து ஒன்று சென்று மாறி நிற்றலாம்.

உ-ம்.

வைசாகி - வைகாசி

நாளிகேரம் - நாரிகேளம்

மிஞிறு - ஞிமிறு

சிவிறி - விசிறி

தசை - சதை

இந்நிலை மாறுதல் எழுத்துக்கேயன்றிச் சொற்களுக்கும் உண்டு: அங்ஙனஞ் சொன்னிலை மாறி வழங்குவன இலக்கணப் போலி எனப் பெயர் பெறும்.

உ-ம்.

கண்மீ - மீகண்

நகர்ப்புறம் - புறநகர்

புறவுலா - உலாப்புறம்

இன்முன் - முன்றில்

பொதுவில் - பொதியில்

முன்றில் என்பதில் விதியின்றி றகரந் தோன்றிற்று. பொதியில் என்பதில் விதியின்றி இகரமும் யகர மெய்யுந் தோன்றின.

தேர்வு வினாக்கள் - 165.இப்படி விதியினால் விகாரப்பட்டு வருவனவன்றி, விதியின்றி விகாரப்படுவனவும் உளவோ? அவை எத்தனை வகைப்படும்? 166. மருவி வழங்குதலாவது யாது? 167. ஒத்து நடத்தலாவது யாது? 168. தோன்றலாவது யாது? 169. திரிதலாவது யாது? 170. கெடுதலாவது யாது? 171. நீளலாவது யாது? 172. நிலை மாறுதலாவது யாது? இந்நிலை மாறுதல் எழுத்துக்கே யன்றிச் சொற்களுக்கும் உண்டோ? சொன்னிலை மாறி வழங்குவன எப்படிப் பெயர் பெறும்?

புணரியல் முற்றிற்று

எழுத்ததிகாரம் முற்றுப் பெற்றது.

இரண்டாவது

சொல்லதிகாரம்

1. பெயரியல்

173. சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறார்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம்.

தேர்வு வினா - 173. சொல்லாவது யாது?

திணை

174. அக்கருத்தின் நிகழ்பொருள், உயர்திணை, அஃறிணை என, இரு வகைப்படும்.

திணை- சாதி, உயர்தணை - உயர்வாகிய சாதி, அஃறிணை - உயர்வல்லாத சாதி. அல்திணை என்றது அஃறிணை எனப் புணர்ந்தது. இங்கே திணை என்னும் பண்புப் பெயர், ஆகு பெயராய்ப் பண்பியை உணர்த்தி நின்றது. சாதி பண்பு, சாதியையுடைய பொருள் பண்பி.

175. உயர்தணையாவன, மனிதரும், தேவரும், நரகரும் ஆகிய மூவகைச் சாதிப் பொருள்களாம்.

176. அஃறிணையாவன, மிருகம், பறவைமுதலிய உயிருள்ள சாதிப் பொருள்களும், நிலம், நீர், முதலிய உயிரல்லாத சாதிப் பொருள்களுமாம்.

தேர்வு வினாக்கள் - 174. அக்கருத்தின் நிகழ் பொருள் எத்தனை வகைப்படும்? திணையென்பதற்கு பொருள் என்ன? உயர்திணையென்பதற்கு பொருள் என்ன? அஃறிணையென்பதற்கு பொருள் என்ன? இங்கே திணையென்னும் பண்புப் பெயர் எதனை உணர்த்தி நின்றது. 175. உயரிதிணையாவன யாவை? 176. அஃறிணையாவன எவை?

பால்

177. உயர்திணை, ஆண்பால், பெண்பால், பலர்பால், என மூன்று பிரிவுடையது.

உ-ம்.

அவன், வந்தான் - உயர்திணையாண்பால்

அவள், வந்தாள் - உயர்திணைப் பெண்பால்

அவர், வந்தார் - உயர்திணைப் பலர்பால்

பலர்பால் என்றது, ஆடவர், காளையர் என்பன முதலிய ஆண் பன்மையும், பெண்டீர், மங்கையர் முதலிய பெண்பன்மையும், மக்கள், அவர் என்பன முதலிய அவ்விருவர் பன்மையும், அடக்கி நின்றது.

178. அஃறிணை, ஒன்றன்பால், பலவின்பால் என, இரண்டு பிரிவையுடையது.

உ-ம்.

அது, வந்தது - அஃறிணையொன்றன்பால்

அவை, வந்தன - அஃறிணைப் பலர்பால்

தேர்வு வினாக்கள் - 177. உயர்திணை எத்துணைப் பிரிவையுடையது? பலர்பால் என்றது எவைகளை அடக்கி நின்றது? 178. அஃறிணை எத்துணைப் பிரிவையுடையது?

இடம்

179. இவ்விரு திணையாகிய ஐம்பாற்பொருளை உணர்த்துஞ் சொற்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும் மூவிடத்தையும் பற்றி வரும்.

180. பேசும் பொருள் தன்மையிடம்: பேசும் பொருளினால் எதிர்முகமாக்கப்பட்டுக் கேட்கும் பொருள் முன்னிலையிடம்: பேசப்படும் பொருள் படர்க்கையிடம்.

தேர்வு வினாக்கள் - 179. இவ்விரு திணையாகிய ஐம்பாற் பொருளை உணர்த்துஞ் சொற்கள் எவ்விடத்தைப் பற்றி வரும்? 180. தன்மையிடம் எது? முன்னிலையிடம் எது? தன்மையிடம் எது? படர்க்கையிடம் எது?

சொற்களின் வகை

181. சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும்.

தேர்வு வினா - 181. சொற்கள் எத்தனை வகைப்படும்?

பெயர்ச் சொற்களின் வகை

182. பெயர்ச் சொல்லாவது, பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உயர்த்தும்.

பொருள், இடம், காலம், சினை என்னம் நான்கும் nhருளென உன்றாய் அடங்கும். பொருட்கு உரிமை பூண்டு நிற்பனவாகிய பண்புத் தொழிலும் பொருளெனவும் படுமாதலின், அவைகளை உயர்த்துஞ் சொல்லும் பெயர்ச் சொல்லெனப்படும். பொருளினது புடைப் பெயர்ச்சி யெனப்படும் வினை நிகழ்ச்சியை உணர்த்துஞ் சொல்லாகிய வினைச் சொல்லும், பெயர்த்தன்மைப்பட்டு, அப்பொருளை உணர்த்தும். இங்ஙனமாகவே, பெயர்களனைத்தும், பொரட்பெயர், வினையாலணையும் பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் நால்வகையுள் அடங்கும்.

183. பெயர்ச் சொற்கள், இடுகுறிப் பெயர், காரணப்பெயர், காரணவிடுகுறிப் பெயர் என, மூவகைப்படும்.

184. இடுகுறிப் பெயராவது, ஒரு காரணமும் பற்றாது பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம்.

உ-ம். மரம், மலை, கடல், சோறு

இவை ஒரு காரணமும் பற்றாது வந்தமையால், இடு கறிப் பெயராயின.

185. காரணப்பெயராவது, யாதேனும் ஒரு காரணம் பற்றிப் பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம்.

உ-ம்.

பறவை, அணி, பொன்னன், கணக்கன்

பறப்பதாதலிற் பறவை எனவும், அணியப்படுவதாதலின் அணி எனவும், பொன்னையுடையனாதலிற் பொன்னன் எனவும், கணக்கெழுதுவோனாதலிற் கணக்கன் எனவும் காரணம் பற்றி வந்தமையால், இவை காரணப் பெயராயின.

186. காரணவிடுகுறிப் பெயராவது, காரணங் கருதிய பொழுது அக்காரணத்தையுடைய பல பொருள்களுக்குஞ் செல்வதாயும், காரணங் கருதாத பொழுது இடுகுறிகளவாய் நின்று ஒவ்வொரு பொருட்கே செல்வதாயும், உள்ள பெயராம்.

உ-ம்.

முக்கணன், அந்தனன், முள்ளி, கறங்கு

முக்கணன் என்பது, காரணங் கருதிய பொழுது விநாயகக் கடவுள் முதலிய பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத பொழுது இடுகுறியாளவாய்ச் சிவபெருமானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.

அந்தணன் என்பது, காரணங்கருதிய பொழுது அழகிய தண்ணளியையுடையயோர் பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய்ப் பார்ப்பானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.

முள்ளி என்பது, காரணங்கருதிய பொழுது முள்ளையுடைய செடிகள் பலவற்றிற்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய் முள்ளி என்னும் ஒரு செடிக்கு செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.

கறங்கு என்பது, காரணங்கருதிய பொழுது சுழலையுடை பல பொருள்கட்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய்க் காற்றாடி என்னும் ஒரு பொருட்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.

187. இப்பெயர்கள், பொதுப்பெயர், சிறப்புப்nபெயர் என இரு வகைப்படும்.

188. பொதுப்பெயராவது, பல பொருள்களுக்குப் பொதுவாகி வரும் பெயராம்

உ-ம்.

மரம், விலங்கு, பறவை

இவற்றுள், மரம் இடுகுறிப் பொதுப்பெயர்: விலங்கு பறவை என்பன காரணப்பொதுப் பெயர்.

189. சிறப்புப் பெயராவது, ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாகி வரும் பெயராம்.

உ-ம்.

ஆல், கரி, காரி

இவற்றுல் ஆல் இடு குறிப் பெயர்: கரி, காரி என்பன காரணச் சிறப்புப் பெயர். கரி- யானை, காரி - கரிக்குருவி.

190. பெயர்கள், இடவேற்றுமையினாலே, தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப் பெயர், என மூவகைப்படும்.

தேர்வு வினாக்கள் - 182. பெயர்ச் சொல்லாவது யாது? பெயர்கள் அனைத்தும் எத்தனை வகைப்படும்? 184. இடு குறிப்பெயராவது யாது? 185. காரணப்பெயராவது யாது? 186. காரணவிடுகுறிப் பெயராவது யாது? 187. இப்பெயர்கள் மீட்டு எத்தனை வகைப்படும்? 188. பொதுப்பெயராவது யாது? 189. சிறப்புப் பெயராவது யாது? 190. பெயர்கள் இட வேற்றுமையினால் எத்தனை வகைப்படும்?

தன்மைப்பெயர்கள்

191. தன்மைப்பெயர்கள், நான், யான், நாம், யாம், என நான்காம். இவைகளுள் நான், யான் இவ்விரண்டும் ஒருமைப்பெயர்கள்: நாம், யாம் இவ்விரண்டும் பன்மைப் பெயர்கள்.

இத்தன்மைப் பெயர்கள் உயர்திணையாண்பால் பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவனவாகும்.

உ-ம்.

யானம்பி, யானங்கை - தன்மையொருமை

யாமைந்தர், யாமகளிர் - தன்மைப் பன்மை

உலக வழக்குச் செய்யுள் வழக்கிரண்டினும், நாம், யாம், இரண்டும். நாங்கள், யாங்கள் எனவும் வரும்.

தேர்வு வினாக்கள் - 191. தன்மைப் பெயர்கள் எவை? இவைகளுள் எவை ஒருமைப் பெயர்கள்? எவை பன்மைப் பெயர்கள்? இத்தன்மைப் பெயர்கள் திணைபால்களுள் எவைகளுக்குப் பொதுவாகி வருகின்றன?

முன்னிலைப் பெயர்கள்

192. முன்னிலைப் பெயர்கள், நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீர் என ஐந்தாம். இவைகளுள், நீ என்பது ஒருமைப் பெயர்: மற்றவை பன்மைப் பெயர்கள்.

உ-ம்.

நீ நம்பி, நீ நங்கை, நீ பூதம்

- முன்னிலையொருமை

நீர் மைந்தர், நீர் மகளிர், நீர் ப10தங்கள்

- முன்னிலைப்பன்மை

w தன்மைப் பெயர்களை உயர்திணைப் பெயர்கள் என்பர் தொல்காப்பியர்; இரு தியைப் பொதுப் பெயர்கள் என்பர் நன்னூலார்.

இரு வழக்கினும் நீங்கள் என்பதும் முன்னிலைப் பன்மையில் வரும்.

தேர்வு வினாக்கள் - 192. முன்னிலைப் பெயர்கள் எவை? இவைகளுள், எது ஒருமைப்பெயர்? எவை பன்மைப் பெயர்? இம் முன்னிலைப் பெயர்கள் திணை பால்களுள் எவைகளுக்குப் பொதுவாகி வருகின்றன?

படர்க்கைப் பெயர்கள்

படர்க்கைப் பெயர்கள், மேற்சொல்லப்பட்ட தன்மை முன்னிலைப் பெயர்களல்லாத மற்றைய எல்லாப் பெயர்களுமாம்.

உ-ம்.

அவன், அவள், அவர், பொன், மணி, நிலம்

194. அன். ஆள், இ, ள் என்னும் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.

உ-ம்.

பொன்னன், பொருளான், வடமன், கோமன், பிறன்

195. அள், ஆள், கள், மார், ர், என்னும் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.

உ-ம்.

குழையள், குழையாள், பொன்னி, பிறள்

196. அர், ஆர், கள், மார், ர், என்னுதம் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்களாம்.

உ-ம்.

குழையர், குழையார், கோக்கள், தேவிமார், பிறர்

தச்சர்கள், தட்டார்கள், எனக் கள் விபுதி, விகுதிமேல் விகுதியாயும் வரும்.

197. துவ் விகுதியை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணையொன்றன் பாற் படர்க்கைப் பெயர்களாம்.

உ-ம்.

குழையது

198. வை, அ, கள், வ், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்களாம்.

உ-ம்.

குழையவை, குழையன, மரங்கள், அவ்.

199. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களுஞ் சில உண்டு. அவை வருமாறு:-

நம்பி, விடலை, கோ, வேள், ஆடூஉ, முதலியன உயர்திணையாண்பாற் பெயர்கள்.

மாது, தையல், மகடூஉ, நங்கை முதலியன உயர்திணைப் பெண்பாற் பெயர்கள்.

கடுவன், ஒருத்தல், போத்து, கலை, சேவல், ஏறு முதலியன அஃறிணையாண்பாற் பெயர்கள்

பிடி, பிண, பெட்டை, மந்தி, பிணா முதலியன பெண்பாற் பெயர்கள்.

தேர்வு வினாக்கள் - 193. படர்க்கைப் பெயர்கள் எவை? 194. உயர்திணையாண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை? 195. உயர்திணைப் பெண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை? 196. உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை? 197. அஃறிணையொன்றன்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை? 198. அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை? 199. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களும் உண்டோ?

இருதிணைப் பொதுப் பெயர்

200. தந்தை, தாய்; சாத்தான். சாத்தி; கொற்றன், கொற்றி; ஆண், பெண்; செவியிலி, செவியிலிகள்; தான், தாம் என வரும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்களாம். பொதுப் பெயரெனினும், பொருந்தும்.

உ-ம்.

தந்தையிவன்

தந்தையிவ்வெருது தந்தையென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று.

தாயிவள்

தாயிப்பசு தாயென்பது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று.

சாத்தனிவன்

சாத்தனிவ்வெருது சாத்தானென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று.

சாத்தியிவள்

சாத்தியிப்பசு சாத்தியென்பது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று.

கொற்றனிவன்

கொற்றனிவ்வெருது கொற்றனென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று.

கொற்றியிவள்

கொற்றியிப்பசு கொற்றியென்கது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று.

ஆண் வந்தான்

ஆண்வந்தது ஆணென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று.

பெண் வந்தாள்

பெண்வந்தது பெண்னென்பது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று.

செவியிலியவன்

செவியிலியிவள்

செவியிலியிவ்வெருது

செவியிலியிப்பசு செவியிலி என்பது இருதிணை யெருமைக்கு பொதுவாயிற்று.

செவியிலிகளிவர்

செவியிலிகளிவை செவியிலிகளென்பது இருதிணைப் பன்மைக்கு பொதுவாயிற்று.

அவன்றான்

அவடான்

அதுதான் தானென்பது இருதிணை யொருமைக்கும் பொதுவாயிற்று.

அவர்தம்

அவைதம் தாமென்பது இருதிணைப் பன்மைக்கு

பொதுவாயிற்று.

தாம் என்பது தாங்கள் எனவும் வரும்.

தேர்வு வினா - 200. உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்கள் எவை?

இரு திணை மூவிடப் பொதுப்பெயர்

201. எல்லாம் என்னும் பன்மைப் பெயர் இரு திணை மூவிடங்கட்கும் பொதுப்பெயரம்.

உ-ம்.

நாமெல்லாம், நீரெல்லாம், அவரெல்லாம், அவையெல்லாம்.

தேர்வு வினா - 201. எல்லாம் என்னும் பன்மைப் பெயர் எவைகளுக்குப் பொதுப்பெயர்?

உயர்திணையிற் பாற் பொதுப்பெயர்

202. ஒருவர் பேதை, ஊமை, என வரும் பெயர்கள் உயர்திணையான் பெண்ணென்னும் இரு பாற்கும் பொதுப் பெயர்களாம்.

உ-ம்.

ஆடவளொருவர் பெண்டிளொருவர்

பேதையவன் பேதையவள்

ஊமையிவன் ஊமையிவள்

ஒருவர் என்னும் பாற்பொதுப்பெயர், பொருட்கேற்ப ஒரமைச் சொல்லைக் கொள்ளாது, ஒலுவர் வந்தார் எனச் சொற்கேற்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடியும். இன்னுஞ் சாத்தனார், தேவனார் என்பனவும், பொருட்கேற்ப ஒருமைச் சொல்லைக் கொள்ளாது, சொற்கேப்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடியும்.

தேர்வு வினா - 202. உயர்திணை ஆண் பெண் என்னும் இரு பாற்கும் பொதுப் பெயர்கள் எவை?

அஃறிணையிற் பாற் பொதுப் பெயர்

203. து என்னும் ஒருமைவிகுதியையாயினும், வை, அ, கள் என்னும் பன்மை விகுதிகளையாயினும் பெறாது வரும். அஃறிணைப் பெயர்களெல்லாம், அத்திணை ஒன்று பல என்னும் இருபாற்கும் பொதுப்பெயர்களாம். இவை பால்பகாஃறிணைப் பெயர் எனவும், அஃறிணையியற் பெயர் எனவுங் கூறப்படும்.

உ-ம்.

யானை வந்தது யானை வந்தன

மரம் வளர்ந்தது மரம் வளர்ந்தன

கண் சிவந்தது கண் சிவந்தன

தேர்வு வினாக்கள் - 203. அஃறிணை ஒன்றன் பால் பலவின் பால் என்னும் இரண்டற்கும் பொதுப்பெயர்கள் எவை? இவை எப்படிப் பெயர் பெறும்ஃ

ஆகுபெயர்

204. ஒரு பெருளின் இயற் பெயர், அப்பொருளோடு சம்பந்தமுடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்று தொட்டு வழங்கி வரின், அது ஆகு பெயரெனப்படும்.

205. அவ்வாகு பெயர், பதினா வகைப்படும். அவையாவன:- பொருளாகு பெயர்,

இடவாகு பெயர், காலவாகு பெயர், சினையாகு பெயர், குணவாகு பெயர், தொழிலாகு பெயர், எண்ணலளவையாகு பெயர், எடுத்தளவையாகு பெயர், முகத்தளவையாகு பெயர், நீட்டலளவையாகு பெயர், சொல்லாகு பெயர், தனியாகு பெயர், கருவியாகு பெயர், காரியவாகு பெயர், கருத்தாவாகு பெயர், உவமையாகு பெயர் என்பனவாம்.

உ-ம்.

(1). தாமரை போலுமுகம்: இங்கே தாமரையென்னு முதற்பொருளின் பெயர் அதன் சினையாகிய மலருக்காதலாற் பொருளாகு பெயர்.

(2). ஊரடங்கிற்று: இங்கே ஊரென்னுபமிடப்பெயர் அங்கிருக்கிற மனிதருக்காதலால் இடவாகு பெயர்.

(3). காரறுத்தது: இங்கே காரென்னும் மழைக்காலப் பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்காதலாற் காலவாகு பெயர்

(4). வெற்றிலை நட்டான்: இங்கே வெற்றிலை யென்னும்ஞ் சினைப்பெயர் அதன் மதலாகிய கொடிக்கதலாற் சினையாகு பெயர்.

(5). நீலஞ் சூடினான்: இங்கே நீலமென்னும் நிறக்குணப் பெயர் அதனையுடைய குவளை மலருக்காதலாற் குணவாகு பெயர்.

(6). வற்றலோடுண்டான்: இங்கே வற்றலென்னுந் தொழிற்பெயர் அதனைப் பொருந்திய உணவிற்காதலாற் றொழிலாகு பெயர்.

(7). காலாலே நடந்தான்: இங்கே காலென்னும் எண்ணளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட உறுப்பிற்காதலால் எண்ணலவையாகுபெயர்.

(8). இரண்டுவீசை தந்தான்: இங்கே வீசை யென்னும் எடுத்த லளவைப்பெயர் அவ்வளவைக் கொண்ட உறிப்பிற்காதலால் எண்ணலவையாகு பெயர்.

(9). நாழியுடைந்தது: இங்கே நாழியென்னும் முகத்தளவைப் பெயர் அவ்வளவைக் பருவிக்காதலால் முகத்தளவையாகு பெயர்.

(10). கீழைத்தடி விளைந்தது: இங்கே தடி யென்னும், நீட்டளவைப்பெயர் அதனால் அளக்கப்பட்ட விளைநிலத்திற் காதலால் நீட்டலளவையாகு பெயர்.

(11). இற்நூற்குரை செய்தான்: இங்கே உரையென்னுஞ் சொல்லின் பெயர் அதன் பொருளுக்காதலாற் சொலாகு பெயர்.

(12). விளக்கு முறிந்தது: இங்கே விளக்கென்னுந் தானியின் பெயர் அதற்கு தானமாகிய தண்டிற்காதலாற் நானியாகு பெயர்.

(13). திருவாசகமோதினான்: இங்கே வாசகமென்னுங் கருவிப் பெயர் அதன் காரியமாகிய ஒரு நூலிற்காதலாற் கருவியாகு பெயர்.

(14). அலங்காரங்கற்றான்: இங்கே அலங்காரமென்னுங் காரியத்தின் பெயர் அதனையுணர்த்துதற்குக் கருவியாகிய நூலிற்காதலாற் காரியவாகு பெயர்.

(15). திருவள்ளுவர் படித்தான்: இங்கே திருவள்ளுவர் என்னுங் கருத்தாவின் பெயர் அவராற் செய்யப்பட்ட நூலிற்காதலாற் கருத்தாவாகு பெயர்.

(16). பாவை வந்தாள்: இங்கே பாவை என்னும் உவமையின் பெயர் அதனை யுவமையாகக் கொண்ட பெண்ணுக்காதலால் உவமையாகு பெயர்.

கார் என்னும் கரு நிறத்தின் பெயர், அதனுடைய மேகத்தை யுணர்த்தும் போது ஆகு பெயர்: அம் மேகம் பெய்யும் பருவத்தை உணர்த்தும் போது இரு மடியாகு பெயர்: அப்பருவத்தில் விளையும் நெற்பயிரை உணர்த்தும் போது மும்மடியாகு பெயர்.

வெற்றிலை நட்டான், திருவாசகமோதினான், என்பவற்றுள், இலையென்பது வெறுமையென்னும் அடையினையும், வாசகமென்பது திருவென்னும் அடையினையும் அடுத்து, ஆகு பெயராய் வருவதால் அடையடுத்தவாகு பெயர்.

தேர்வு வினாக்கள் - 204. ஆகு பெயரென்பது யாது? 205. அவ்வாகு பெயர் எத்தனை வகைப்படும்? அவை எவை?

வேற்றுமை

206. பெயர்களனைத்தும், முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை, என எட்டு வ

Link to comment
Share on other sites

207. முதல் வேற்றுமையினது உருபாவது திரிபில்லாத பெயரேயாம்.

இது வினையையும், பெயரையும், வினாவையுங் கொள்ளும்.

உ-ம்.

சாத்தான் வந்தான், சாத்தனிவன், சாத்தன் யார்

வேற்றுமையுருபினாலே கொள்ளப்படுஞ் சொல், முடிக்குஞ் சொல் எனவும், பயனிலை எனவும், பெயர் பெறும்.

இத்திரிபில்லாத பெயர், தானே தன் பொருளை வினைமுதற் பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட வினைமுதற் பொருளே இதன் பொருளாம்.

வினைமுதல், கருத்தா, செய்பவன் என்பன ஒரு பொருட் சொற்கள்.

இவ் வெழுவாய்க்கு வேறுருபு இல்லையாயினும், ஆனவன், ஆகின்றவன், ஆவான், என்பவன், முதலிய ஐம்பாற் சொற்களுஞ் சிறுபான்மை சொல்லுருபாக வரும்.

உ-ம்.

சாத்தனானவன் வந்தான்

சாத்தியானவன் வந்தான்

சாத்தரானவர் வந்தார்

மரமானது வளர்ந்தது

மற்றவைகளும் இப்படியே.

208. இரண்டாம் வேற்றுமையினது உருபு ஐயொன்றேயாம்.

இது வினையையும், வினைக்குறிப்பையுங் கொள்ளும்.

இவ்வையுருபு தன்னையேற்ற பெயர்ப்பொருளைச் செயற்படு பொருளாக வேறுபடுத்தும், அப்படி வேறுபட்ட செயற்பட பொருளே இவ்வுருபின் பொருளாம்.

செயப்படுபொருள், கருமம், காரியம், என்பன ஒரு பொருட் சொற்கள்.

அச்செயற்படு பொருளானது, ஆக்கப்படுபொருள், அழிக்கப்படு பொருள், அடையப்பட பொருள், ஒக்கப்படபொருள், உடமைப்பொருள், முதலியனவாகப் பல திறக்கப்படும்.

(உதாரணம்)

குடத்தை வனைந்தான் - ஆக்கப்படு பொருள்

கோட்டையைப் பிடித்தான் - அழிக்கப்படு பொருள்

ஊரையடைந்தான் - அடையப்படுபொருள்

மனைவியைத் துறந்தான் - துறக்கப்படு பொருள்

புலியையொத்தான் - ஒக்கப்படுபொருள்

பொன்னையுடையான் - உடைமைப் பொருள்

209. மூன்றாம் வேற்றுமையினுடை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு என்பனவைகளாம்.

இவை வினையைக் கொள்ளும்.

இவ்வுருபுகளுள், ஆன், ஆன் என்னும் இரண்டுருபுகளும, தம்மையேற்ற பெயர்ப் பொருளைக், கருவிய பொருளாகவும், கருதாப்பொருளாகவும், வேறுபடுத்தும் அப்படி வேறு பட்ட கருவிப் பொருளுங் கருதாப்பொருளும் இவ்வுருபுகளின் பொருளாம். கருவி, காரணம் என்பன ஒரு பொரட் சொற்கள்.

கருவி, முதற்கருவி, துணைக்கருவி, என இருவகைப்படும். கருத்தாவும், இயற்றுதற்கரத்தா, ஏவுதற் கருத்தா என இரு வகைப்படும்.

ஒடு, ஓடு என்னும் இரண்டுருபுகளும், தம்மையேற்ற பெயர்ப்பொருளை உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட உடனிகழ்ச்சிப் பொருளே இவ்வுருபு களின் பெர்ருளாம்.

(உதாரணம்)

மண்ணாலாகிய குடம்

மண்ணனாகிய குடம் முதற்கருவி

திரிகையாலாகிய குடம்

திரிகையானாகிய குடம் துணைக்கருவி

தச்சனாலாகிய கோயில்

தச்சனானாகிய கோயில் இயற்றுதற்கருத்தா

அரசனாலாகிய கோயில்

அரசனானாகிய கோயில் ஏவுதற்கருத்தா

மகனோடு தந்தை வந்தான்

மகனொடு தந்தை வந்தான் உடனிகழ்ச்சிப் பொருள்

இவ்வுருபுகளுள், ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரிய விடத்துக் கொண்டென்பதும், ஓடு, ஒடு உருபுகள் நிற்றற்குரிய விடத்து உடனென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும்.

உ-ம்.

வாள் கொணடு வெட்டினான்

தந்தையுடன் மைந்தன் வந்தான்

210. நான்காம் வெற்றுமையினது உருபு குவ்வொன்றேயாம்.

இது வினையையும் வினையோடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும்.

இக்குவ்வுருபு, தன்னையேற்ற பெயர்ப் பொருளைக் கோடற்பொருளாகவும், பகைதொடர் பொருளாகவும், நட்புத் தொடர் பொருளாகவும், தகுதியுடை பொருளாகவும், முதற்காரண காரியப்பொருளாகவும், நிமித்த காரண காரியப்பொருளாகவும், முறைக்கியை பொருளாகவும். வேறுபடுத்தும். அப்படி வேறு பட்ட கொடற் பொருண் முதலியன இவ்வுருபின் பொருள்களாம்.

(உதாரணம்)

இரப்பவர்க்குப் பொன்னைக் கொடுத்தாள் - கோடற்பொருள்

பாம்புக்குப் பகை கருடன் - பகைத்தொடர்ப் பொருள்

சாத்தனுக்குத் தோழன் கொற்றன் - நட்புத் தொடர் பொருள்

அரர்க்குரித் தருங்கலம் - தகுதியுடைபொருள்

குண்டலத்திற்கு வைத்த பொன் - தகுதியுடைப் பொருள்

கூலிக்கு வேலை செய்தான் - நிமித்தகாரணகாரியப் பொருள்

சாத்தனுக்கு மகனிவன் - முறைக்கியை பொருள்

குவ்வுருபு நிற்றற் குரிய சில விடயங்களிலே, பொருட்டு நிமித்தம் என்பனவும், குவ்வுருபின்மேல் ஆகவென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும்.

உ-ம்.

கூழின் பொருட்டு வேலை செய்தான்

கூலியினிமித்தம் வேலை செய்தான்

கூலிக்காக வேலை செய்தான்

211. ஐந்தாம் வேற்றுமையினுடைய உருபுகள் இன், இல் என்பனவாகும்.

இவை வினையையும், வினையோடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும்.

இவ்வுருபுகள், தம்மையேற்ப பெயர்ப்பொருளை நீக்கப் பொருளாகவும், ஒப்புப்பொருளாகவும், எல்லைப் பொருளாகவும், ஏதுப்பொருளாகவும், வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட நீக்கப் பொருள் முதலியன இவ்வுருபுகளின் பொருள்கலாம்.

உ-ம்.

மலையின் வீழருவி

மலையில் வீழருவி நீக்கப் பொருள்

பாலின் வெளிது கொக்கு

பாலில் வெளிது கொக்கு ஒப்புப் பொருள்

சீர்காழியின் வடக்குச் சிதம்பரம்

சீர்காழியில் வடக்குச் சிதம்பரம் எல்லைப் பொருள்

கல்வியினுயர்ந்தவன் கம்பன்

கல்வியிலுயர்ந்தவன் கம்பன் ஏதுப் பொருள்

பாலின் வெளிது கொக்கு என்னுமிடத்து, உயர்வு கருதின் எல்லைப் பொருளாம்.

நீக்கப்பொருளினும். எல்லைப் பொருளினும், இன், இல், உருபுகளின் மேல், நின்று, இருந்து என்பவை, உம் பெற்றும், பெறாதுஞ் சொல்லுருபுகளாக வரும்.

உ-ம்.

நீக்கப்பொருள்

ஊரினின்றும் போயினான், ஊரினின்று போயினான்

ஊரிலிருந்தும் போயினான், ஊரிலிருந்தும் போயினான்

எல்லைப் பொருள்

காட்டினின்றுமூர் காவதம், காட்டினின்றூர் காவதம்

காட்டிலிருந்துமூர் காவதம், காட்டிலிருந்துமூர் காவதம்

ஒரொவிடத்து எல்லைப் பொருளிலே, காட்டிலும் பார்க்கிலும் என்பவைகள், முன் ஐகாரம் பெற்றுச் சொல்லுருபுகளாக வரும்.

உ-ம்.

அவனைக் காட்டிலும் பெரியவனிவன்

இவனைக் காட்டிலும் சிறியனவன்

212. ஆறாம் வேற்றுமையினுடை உருபுகள் அது, ஆது, ஏ என்பனவாம்.

இவைகளுள், அது, ஆது உருபுகள் அஃறிணை யொருமைப் பெயரையும், அ உருபு அஃறிணைப் பன்மைப் பெயரையுங் கொள்ளும்.

உ-ம்.

சாத்தனது கை, தனது கை, தன கைகள்

இவ்வுலுபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை வருமொழிப் பெயராகி தற்கிழமைப் பொருளோடும் பிறிதின் கிழமைப் பொருளோடுஞ் சம்பந்த முடைய பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட சம்பந்தப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.

தற்கிழமைப் பொருளாவது, தன்னோடு ஒற்றுமையுடைய பொருள். அது, உறுப்பும், பண்பும், தொழிலும், ஒன்றன் கூட்டமும், பலவின் கூட்டமும், ஒன்று திரிந்தொன்றாயதும் என, ஆற் வகைப்படும்.

(உதாரணம்)

சாத்தானது கை - உறுப்புத்தற்கிழமை

சாத்தனது கருமை - பண்புதற்கிழமை

சாத்தனது வரவு - தொழிற்றற்கிழமை

நெல்லது குப்பை - ஒன்றன்கூட்டற்தற்கிழமை

சேனையது தொகுதி - பலவின்கூட்டத்தற்கிழமை

மஞ்சளது பொடி - ஒன்று திரிந்தொன்றாயதன் தற்கிழமை

பிறிதின்கிழமைப் பொருளாவது, தன்னின் வேறாய் பொருள். அது, பொருள், இடம், காலம், என மூவகைப்படும்.

(உதாரணம்)

முருகனது வேல் - பொருட்பிறிதின் கிழமை

முருகனது மலை - இடப்பிறிதின்கிழமை

மாரனது வேனில் - காலப்பிறிதின் கிழமை

இவ்வுருபுகள் நிற்றற்குரிய இடங்களில், உடைய என்பது சொல்லுருபாக வந்து, இரு திணையொருமை பன்மைப் பெயரையுங் கொள்ளும்.

உ-ம்.

சாத்தனுடைய புதல்வன், சாத்தனுடைய புதல்வர்

சாத்தனுடைய வீடு, சாத்தனுடைய வீடுகள்

சிறு பான்மை அதுவுருபு, அரனது தோழன், நினதடியாரொடல்லால் என உயர்திணையொருமை பன்மைப் பெயர்களையுங் கொள்ளுமென வறிக.

இவ்வீடானது, அத்தோட்டமவனது என வவுருவன வற்றில், எனது, அவனது, என்பன துவ்விகுதியும் அகராச்சாரியையும் பெற்று நின்ற குறிப்பு வினை முற்று. எனது போயிற்று, அவனதை வாங்கினேன், என வருவனவற்றில், எனது, அவனது என்பன, மேற்கூறியபடி வந்த குறிப்பு விணையாலணையும் பெயர். இங்ஙணமன்றி, இவ்விடங்களில் வரும் அது என்பது ஆறாம் வேற்றுமையுருபன்று.

213. ஏழாம் வேற்றுமையினுடைய உருகள், கண், இல், உள், இடம் முதலியனவாம்.

இவை வினையையும், வினையோடு பொருந்நும் பெயரையுங் கொள்ளும்.

இவ்வுருபுகள், தம்மையேற்ற பொருள். இடம், காலம். சினை, குணம், தொழில் என்னும் ஆறு வகைப் பெயர்பொருளையும், வருமொழிப் பொருளாகிய தற்கிழமைப் பொருளுக்காயினும், பிறிதின்கிழமைப் பொருளுக்காயினும் இடப்பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுப்பட்ட இடப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.

(உதாரணம்)

மணியின் கணிருகின்ற தொளி

பனையின்கண் வாழ்கின்றதன்றில் தற் பிறி பொருளிடமாயிற்று

ஊரின் கணிருக்குமில்லம்

ஆகாயத்தின்கட் பறக்கின்றது பருந்து தற் பிறி இடமிடமாயிற்று

நாளின் கணாழிகையுள்ளது

வேனிற்கட்பாதிரி ப10க்கும் தற் பிறி காலமிடமாயிற்று

கையின் கணுள்ளது விரல்

கையின்கண் விளங்குகின்றது கடகம் தற் பிறி சினையிடமாயிற்று

கறுப்பின்கண் மிக்குள்ளதழகு

இளமையின்கண் வாய்த்தது செல்வம் தற் பிறி குணமிடமாயிற்று

ஆடற்கணுள்ளது சதி

ஆடற்கட்பாடப்பட்டது பாட்டு தற் பிறி தொழிவிடமாயிற்று

மற்றவைகளும் இப்படியே

214. எட்டாம் வேற்றுமையினுடைய உருபுகள், படர்க்கைப் பெயாPற்றில் ஏ ஓ மிகுதலும், அவ்வீறு திரிதலும், கெடுதலும், இயல்பாதலும், ஈற்றயலெழுத்துத் திரிதலுமாம்.

இவை ஏவல் வினையைக் கொள்ளும்.

இவ்வுருபுகள், தம்மையேற்ற பெயர்ப் பொருளை முன்னிலையின் விளிக்கப்படுபொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட விளிக்கப்பட்ட பொருளே இவ்வுருபுகளின் பொருளாம். விளித்தல் - அழைத்தல்.

(உதாரணம்)

சாத்தனே ஏ மிகுந்து

அப்பனோ வுண்ணாய் ஓ மிகுந்து

வேனிலாய் கூறாய் ஈறு திரிந்தது

தோழ சொல்லாய் ஈறு கெட்டது

பிதா வாராய் ஈறியல்பாயிற்று

மக்கள் கூறிர் ஈற்றயலெழுத்துத் திரிந்தது.

215. நுமன், நுமள், நுமர் என்னுங் கிளைப் பெயாகளும். எவன் முதலிய வினைப் பெயர்களும், அவன் முதலிய சுட்டுப் பெயர்களும், தான், தாம், என்னும் பொதுப் பெயர்களும், மற்றையான், பிறன் முதலிய மற்றுப் பிற என்பன அடியாக வரும் பெயர்களும் விளி கொள்ளாப் பெயர்களாம்.

216. சிறுபான்மை ஒரு வேற்றுமையுருபு நிற்றற் குரிய விடத்தே, மற்றதொரு வேற்றுமையுருபு மயங்கி வரும்; வரின் அவ்வுருபைப் பொருக்கியைந்த உருபாகத் திரித்துக் கொள்ள வேண்டும்.

உ-ம்.

ஆலத்தினாலமிர்தமாக்கிய கோன்; இங்கே ஐயுருபு நிற்றற்குரிய விடத்தில் ஆலுருபு மயங்கிற்று.

காலத்தினாற் செய்த நன்றி; இங்கே கண்ணுருபு நிற்றற்குரிய விடத்தில் ஆனுருபு மயங்கிற்று.

நாகுவேயொடு நக்கு வீங்கு தோள்; இங்கே ஐயுருபு நிற்றற் குரிய விடத்தில் ஓடுருபு மயங்கிற்று.

ஈசற்கியான் வைத்தவன்பு; இங்கே கண்ணுருபு நிற்றற்குரிய விடத்தில் குவ்வுருபு மயங்கிற்று.

217. ஒரு வேற்றுமைப் பொருள் மற்றொரு வேற்றுமை யுருபோடுந் தகுதியாக வருதலும் உண்டு.

உ-ம்.

சாத்தனோடு சேர்ந்தான்; இங்கே செயப்படு பொருள் மூன்றனுருபோடு வந்தது.

மதுரையை நீங்கினான்; இங்கே நீங்கப் பொருள் இரண்டனுருபோடு வந்தது.

சீர்காழிக்கு வடக்குச் சிதம்பரம்; இங்கே எல்லைப் பொருள் நான்கனுருபோடு வந்தது.

வழியைசல் சென்றான்; இங்கே இடப் பொருள் இரண்டனுருபோடு வந்தது.

இன்னும் இப்படி வருவனவற்றையெல்லாம் ஆராய்ந்தறிந்து கொள்க.

தேர்வு வினாக்கள் - 206. பெயர்களனைத்தும் எத்தனை வேற்றுமைகளை ஏயற்கும்? முதல் வேற்றுமை எப்படிப் பெயர் பெறும்? எட்டாம் வேற்றுமை எப்படிப் பெயர் பெறும்? 207. முதல் வேற்றுமையினது உருபு யாது? வேற்றமையுருபினாலே கொள்ளப்படுஞ் சொல் எப்படிப் பெயர் பெறும்? எழுவாய் வேற்றுமையுருபு செ; சொற்களை பயனிலையாகக் கொள்ளும்? எழுவாய்யுருபுக்குப் பொருள் என்ன? வினைமுதற்குப் பரியாய நாமங்கள் எவை? எழுவாய்க்கு எவை சொல்லுருபாக வரும்? 208. இரண்டாம் வேற்றுமையினது உருபு யாது? இவ்வையுருபு எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்? ஐயுருபுக்கு பொருள் என்ன? செயப்படுபொருட்குப் பரியாய நாமங்கள் எவை? செயப்படு பொருள் எத்தனை வகைப்படம்? 209. மூன்றாம் வேற்றுமையினுடைய உருபுகள் எவை? இம் மூன்றாம் வேற்றமையுருபுகள் எதனை பயனிலையாகக் கொள்ளும்? இவைகளுள் ஆல், ஆன் என்னும் இரண்டுருபுகளுக்கும் பொருள் என்ன? கருவியென்பதற்குப் பாரியாய நாம் என்ன? கருவி எத்தனை வகைப்படும்? கருத்தா எத்தனை வகைப்படும்? ஓடு, ஒடு என்னும் இரண்டுருபுகளுக்கும் பொருள் என்ன? ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரிய விடத்து எது சொல்லுருபாக வரும்? ஓடு, ஒடு உருபுகள் நிற்றற்குரிய விடத்து எது சொல்லுருபாக வரும்? 210. நான்காம் வேற்றுமையினது உருபு யாது? இக் குவ்வுருபு எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்? குவ்வுருபுக்கு பொருள் என்ன? குவ்வுருபு நிற்றற்குரிய விடத்தே எவை சொல்லுருபாக வரும்? 211. ஐந்தாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை? இவ்வைந்தாம் வேற்றுமையுருபுகள் எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்? ஐந்தாம் வேற்றுமையுருபுகளுக்கு பொருள் என்ன? நீக்கப் பொருளினும், எல்லைப் பொருளினதும் எவை சொல்லுருபுகளாக வரும்? எல்லைப் பொருளிலே வேறு சொல்லுருபுகள் வாராமோ? 212. ஆறாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை? இவ்வாறாம் வேற்றுமைகளுள், எவ்வெவை எவ்வெச் சொல்லைப் பயனிலையாகக் கொள்ளம்? ஆறாம் வேற்றுமையுருபுகளுக்கு பொருள் என்ன? தற்கிழமைப் பொருளாவது யாது? அத் தற்கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும்? பிறிதின்கிழமைப் பொருளாவது யாது? அப்பிறிதின்கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும்? ஆறாம்வேற்றுமையுருபுகள் நிற்றற்குரிய இடங்களில் எது சொல்லுருபாக வரும்? அது வுருபு உயர்திணை யொருமை பன்மைப் பெயர்களைக் கொள்ளுதலில்லையோ? இவ் வீடெனது, அத்தோட்டமவனது, என வருவனவற்றில் அது என்பது ஆறாம் வேற்றுமை உருபு தானோ? 213. ஏழாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை? ஏழாம் வேற்றுமையுருபுகள் எவைகளைப் பயனிலைகளாகக் கொள்ளும்? ஏழாம் வேற்றுமையுருபுகளுக்கு பொருள் என்ன? 214. எட்டாம் வேற்றுமையுருபுகள் யாவை? எட்டாம் வேற்றுமையுருபுகள் எதனைப் பயனிலையாகக் கொள்ளும்? எட்டாம் வேற்றுமையுருபுகளுக்குப் பொருள் என்ன? 215. இவ்விளியுருபுகளை ஏலாப் பொருள்களும் உளவோ? 216. ஒரு வேற்றுமையுருபு நிற்றற்குரிய விடத்தே மற்றொரு வேற்றுமையுருபு மயங்கி வருதல் உண்டோ? 217. ஒரு வேற்றுமைப் பொருள் மற்றொரு வேற்றுமையுருபோடுந் தகுதியாகவருதலும் உண்டோ?

பெயர்கள் உருபேற்று முறை

218. ஐ முதலிய உருபேற்குமிடத்து, யான், கான் என்னுந் தன்மையொருமைப் பெயர்கள், என் எனவும், யாம், நாம், யாங்கள், நாங்கள் என்னுந் தன்மைப் பன்மை பெயர்கள், எம், நம், எங்கள், நங்கள் எனவும், விகாரப்பட்வரும்.

உ-ம்.

என்னை, எம்மை, நம்மை, எங்களை, நங்களை, மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக.

நீ என்னும் முன்னிலை யொருமைப் பெயா, நின் உன் எனவும், நீர் முதலிய முன்னிலைப் பண்மைப் பெயர்கள், நும், உம், எனவும், நீங்கள் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர், நுங்கள், உங்கள் எனவும், விகாரப்பட்டு வரும்.

உ-ம்.

நின்iனை, உன்னை, நும்மை, நுங்களை, உங்களை மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக.

தான், தாம், தாங்கள், என்னும் படர்க்கைப் பெயர்கள், தன், தம், தங்கள் என விகாரப்பட்டு வரும்.

உ-ம்.

தன்மை, தம்மை, தங்களை மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக.

இவைகளுள்ளே, தனிக்குற்றொற்றிறுதியாக நின்ற பெயர்களோடு குவ்வுருபு புணருமிடத்து, நடுவே அகாரச்சாரியை தொன்றும். இச்சாரியை அகரத்தின் முன்னும், தனிக்குற்றெற்று இரட்டாவாம்.

உ-ம்.

தனக்கு, தனது, தனாது. தன

219. உயிரையும் மெய்யையும், குற்றியுலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச்சொற்கள், இன்னுருபொழிந்த உருபுகளை ஏற்குமிடத்துப் பெரும்பாலும் இன்சாரியை பெறும்.

உ-ம்.

கிளியினை பொன்னினை நாகினை

கிளியினால் பொன்னினால் நாகினால்

கிளியிற்கு பொன்னிற்கு நாகிற்கு

கிளியினது பொன்னினது நாகினது

கிளியின்கண் பொன்னின்கண் நாகின்கண்

இப்பெயர்கள், குவ்வுருபேற்குமிடத்துக் கிளியினுக்கு, நாகினுக்கு, என இன்சாரியையோடு உகாரச்சாரியையும், பெறுமெனவுங் கொள்க. மற்றைவைகளும் இப்படியே வரும்.

220. ஆ, மா, கோ என்னும் இம் மூன்று பெயர்களும், உருபேற்குமிடத்து, இன்சாரியையேயன்றி, னகரச்சாரியையும் பெறும். குவ்விருபிற்கு னகரச்சாரியையோடு உகரச்சாரியையும், னகரச்சாரியையின்றி உகரச் சாரியையும் வரும்.

உ-ம்.

ஆவினை ஆனை

ஆவினால் ஆனால்

ஆவிற்கு ஆனுக்கு, ஆவுக்கு

ஆவின் ஆனின்

ஆவினது ஆனது

ஆவின்கண் ஆன்கண்

மா, கோ, என்பவற்றோடும் இப்படியே யொட்டுக. இங்கே மா - விலங்கு, கோ - அரசன்.

221. அது, இது, உது என்னுஞ் சுட்டுப் பெயர்களும், எது, ஏது, யாது என்னும் வினாப் பெயர்களும், உருபேற்கு மிடத்து, அன்சாரியையும், சிறுபான்மை இன்சாரியையும் பெறும்.

உ-ம்.

அதனை, அதனால், அதினால்

இதனை, இதனால், இதினால்

எதனை, எதனால், எதினால்

மற்றவைகளும் இப்படியே

இவை சிறுபான்மை, அதை, இதை, எதை எனச் சாரியை பெறாதும் வரும்.

222. அவை, இவை, உவை, எவை, காரியவை, நெடியவை முதலிய ஐகார வீற்றிணைப் பன்மைப் பெயர்கள், உரு பேற்குமிடத்து, ஈற்றைகாரங் கெட்டு, அற்றுச்சாரியை பெறும். நான்குருபும் ஏழனுருபும் ஏற்குமிடத்து, அற்றுச்சாரியை மேல் இன்சாரியையும் பெறும்.

உ-ம். அவற்றை எவற்றை கரியவற்றை

அவற்றால் எவற்றால் கரியவற்றால்

அவற்றிற்கு எவற்றிற்கு கரியவற்றிற்கு

அவற்றின் எவற்றின் கரியவற்றின்

அவற்றது எவற்றது கரியவற்றது

அவற்றின்கண் எவற்றின்கண் கரியவற்றின்கண்

மற்றவைகளும் இப்படியே

223. பல, சில, சிறிய, பெரிய, அரிய முதலிய அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும், யா என்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரும், உருபேற்று மிடத்து, அற்றுச்சாரியை பெறும். நான்கனுருபும், ஏழனுருபும், ஏற்குமிடத்து, அற்றுச் சாரியைமேல் இன் சாரியையும் பெறும்.

உ-ம்.

பலவற்றை சிறியவற்றை யாவற்றை

பலவற்றால் சிறியவற்றால் யாவற்றால்

பலவற்றிற்கு சிறியவற்றிற்கு யாவற்றிற்கு

பலவற்றின் சிறியவற்றின் யாவற்றின்

பலவற்றது சிறியவற்றது யாவற்றது

பலவற்றின்கண் சிறியவற்றின்கண் யாவற்றின்;கண்

மற்றவைகளும் இப்படியே

224. மகரவீற்றுப் பெயர்ச்சொற்கள், உருபேற்குமிடத்து, அத்துச்சாரியை பெறும்; பெறுமிடத்து, ஈற்று மகரமுஞ் சாரியை முதல் அகரமுங் கெடும். சில விடத்து அவ்வத்துச் சாரியையின் மேல் இன் சாரியையும் பெறும்.

உ-ம்.

மரத்தை மரத்தினை

மரத்தால் மரத்தினால்

மரத்துக்கு மரத்திற்கு

மரத்தின் . . . .

மரத்தது மரத்தினது

மரத்துக்கண் மரத்தின்கண்

225. எல்லாமென்னும் பெயர், அஃறிணைப் பொருளில் உருபேற்குமிடத்து, ஈற்று மகரங்கெட்டு, அற்றுச்சாரியையும், உருபின் மேல் முற்றும்மையும் பெறும்; உயர்திணைப் பொருளில் உருபேற்றுமிடத்து, நம்மூச்சாரியையும், உருபின்மேல் முற்றும்மையும் பெறும்.

உ-ம்.

எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்

எல்லாநம்மையும் எல்லாநம்மாலும்

எல்லாநம்மையும் என்பது உயர்திணைத் தன்மைப் பன்மை.

226. உருபேற்குமிடத்து, எல்லாரென்பது, தம்முச்சாரியையும், எல்லீரென்பது நும்முச்சாரியையும் பெற்று உருபின் மேல் முற்றும்மையும் பெறும்.

உ-ம்.

எல்லார்தம்மையும் எல்லீர்நும்மையும்

எல்லார்தம்மாலும் எல்லீர்நும்மாலும்

எல்லாரையும், எல்லாராலும், எ-ம். எல்லீரையும், எல்லீராலும், எ-ம். சாரியை பெறாதும் வரும்.

227. இவ்வாறு உருபு புணர்ச்சிக்குக் கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட்புணர்ச்சிக் கண்ணும், வரும்.

உ-ம்.

என்கை, எங்கை, எங்கள் கை, நங்கை, நங்கள் கை, நின்கை, உன்கை, நுங்கை, நுங்கள் கை, உன்கை, உங்கை, உங்கள் கை, தன்கை, தங்கை, தங்கள் கை, எ-ம். கிளியின் கால், கொக்கின் கண், ஆவின் கொம்பு, பலவற்றுக்கோடு, மரத்துக்கிளை, எல்லாவற்றுக்கோடும். எ-ம். வரும்.

தேர்வு வினாக்கள் - 218. ஐ முதலிய உருபேற்குமிடத்துத் தம்மைப் பெயர்கள் எப்படி விகாரப் பட்டு வரும்? முன்னிலைப் பெயர்கள் எப்படி விகாரப் பட்டு வரும்?

தான், தாம், தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர்கள் எப்படி விகாரப் பட்டு வரும்?

இவைகளுள்ளே, தனிக்குற்றொற்றிறுதியாக நின்ற பெயர்களோடு நான்கனுரும் ஆறனுருபுகளும் புணருமிடத்து எப்படியாம்? 219.உயிரையும், மெய்யையும், குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச் சொற்கள் உருபேற்குமிடத்து எப்படியாம்? 220. ஆ, மா, கோ என்னும் பெயர்கள், உருபேற்கு மிடத்து இன்சாhயையேயன்றி, வேறு சாரியையும் பெறுமோ? 221. அது, இது, உது, என்னுஞ் சுட்டுப்ப் பெயர்களும், எது, ஏது, யாது, என்னும் வினாப் பெயர்களும் உருபேற்குமிடத்து, எப்படியாம்? 222. அவை, இவை, உவை, எவை, கரியவை, நெடியவை, முதலிய ஐகாரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும் உருபேற்கு மிடத்து எப்படியாம்? 223. பல, சில, சிறிய, பெரிய, அரிய, முதலிய அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும், யா வென்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரும் உருபேற்கு மிடத்து எப்படியாம்? 224. மகரவீற்றுப் பெயர்கள் உரு பேற்குமிடத்து எப்படியாம்? 225. எல்லாமென்னும் பெயர் அஃறிணைப் பொருளில் உருபேற்குமிடத்து எப்படியாம்? 226. உருபேற்குமிடத்து எல்லார் என்பது எப்படியாம்? எல்லீர் என்பது எப்படியாம்? 227. இவ்வாறு ஊருபு புணர்ச்சிக்குக் கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட் புணர்ச்சிக் கண்ணும் வருமோ?

பெயரியல் முற்றிற்று.

Link to comment
Share on other sites

270. வினையெச்சமாவது பால் காட்டும் முற்றுவிகுதி பெறாத குறைசெ சொல்லாய் வினைச்சொல்லைக் கொண்டு முடியும் வினையாம்.

இவ்வினையெச்சங் கொள்ளும் வினைச்சொற்களாவன உடன்பாடும் எதிர்மறையும் பற்றிவரும் தெரிநிலையுங் குறிப்புமாகிய வினைமுற்றும் பெயரெச்சமும், வினையெச்சமும், வினையாலணையும், பெயரும், தொழிற்பெயரும் ஆகிய ஐ வகை வினைச்சொற்களுமாம்.

உ-ம்.

1. தெரிநிலைவினையெச்சந் தெரிநிலை வினை விகற்பங்கள் கொள்ளுதற்கு

உ-ம்.

உண்டு வந்தான்; உண்டுவாரான் - தெரிநிலை வினைமுற்று

உண்டுவந்த் உண்டுவராத - தெரிநிலைப்பெயரெச்சம்

உண்டுவந்து; உண்டுவராது - தெரிநிலை வினையெச்சம்

உண்டுவந்தவன்; உண்டு வாராதவன் - தெரிநிலை வினையாலணையும் பெயர்

உண்டுவருதல்; உண்டுவராதவன் - தெரிநிலைத் தொழிற் பெயர்

2. தெரிநிலை வினையெச்சங் குறிப்புவினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-

கற்றுல்லவன் - குறிப்புவினைமுற்று

கற்றுவல்ல - குறிப்பு வினைப்பெயரெச்சம்

கற்றுவல்லவன் - குறிப்புவினையாலனையும் பெயர்

கற்று வன்மை - குறிப்புத் தொழிற்பெயர்

3. குறிப்பு வினையெச்சந் தெரிநிலைவினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-

அறமன்றிச் செய்தான்; அறமன்றிச் செய்யான் - தெரிவினைமுற்று

அறமன்றிச் செய்த் அறமன்றிச் செய்யாத - தெரிபெயரெச்சம்

அறமன்றிச் செய்து; அறமன்றிச் செய்யாமை - தெரிதொழிற் பெயர்

4. குறிப்பு வினையெச்சங் குறிப்பு வினையெச்சங் குறிப்பு வினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-

அறமன்றியிலன் - குறிப்பு வினைமுற்று

அறமன்றியில்லாது - குறிப்பு வினைப்பெயரெச்சம்

அறமன்றியில்லாது - குறிப்பு வினையெச்சம்

அறமன்யில்லாதவன் - குறிப்பு வினையாலணையும் பெயர்

அறமன்யின்மை - குறிப்புத் தொழிற்பெயர்

271. பதவியலிற் கூறப்பட்ட வினையெச்ச விகுதிகளும் உகர விகுதி இறந்தகால விடைநிலையோடு கூடிவரும் என விகுதி, இறந்தகாலவிடைநிலையோடும் விகாரப்பட்டிருந்த காலங்காட்டும் பகுதியோடும் கூடிவரும். மற்றை விகுதிதி யெல்லாம் இடைநிலையின்றித் தாமே காலங்காட்டும்.

272. தெரிநிலை வினையெச்சங்கள் செய்து என்னும் வாய்ப்பாட்டிறந்த கால வினையெச்சம் எனவும், செயவென்னும் வாய்ப்பாட்டு முகலத்திற்குமுரிய வினையெச்சம் எனவும் செயின் என்னும் வாய்பாட்டெதிர்கால வினையெச்சம் எனவும் மூவகைப்படும்.

273. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள், உ, இ, ய் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்று தன் கருத்தாவின் வினையையே கொண்டு முடிவனவாம்.

இங்கே இறந்தகாலம் என்பது முடிக்கும் சொல்லால் உயரப்படும் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும். தொழில்முன்னிகழ்தலை.

(உதாரணம்)

உகரவிகுதி நடந்து

உண்டு

சென்று தேர்ந்து

கேட்டு

கற்று வந்தான்

இகரவிகுதி

யகரவிகுதி ஆடி

ஆய் எண்ணி

போய் வந்தான்

இங்கே வினையெச்சத்தால்உயரப்படுந் தொழிலை நிகழ்த்தினா வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினைமுதலாகக் காண்க.

விகுதி விகரப்பட்டு, விகுதிபெறாது சில பகுதியே விகாரப்படும் இச்செய்தெனடவாய்ப்பட்டிறந்த கால வினையெச்சங்களாய் வரும்.

தழுவிக்கொண்டான்

மருவிவந்தான் தழீஇக்கொண்டான்

மாPஇவந்தான் விகுதி விகாரப் பட்டு வந்தன

புகு

விடு

பெறு புக்கு வந்தான்

விட்டு வந்தான்

பெற்று வந்தான் விகுதி பெறாது சில பகுதியே விகாரப்பட்டு வந்தன

இச்செய்னெச்சம், ஒரோவிடத்து காரப் பொருட்டாயும் வரும்.

உ-ம்.

கற்றறிந்தான்

அறம் செய்த புகழ்பெற்றான்

செய்யுளிலே இச்செய்தென்வாய்பபாட் டிறந்தகால வினையெச்சங்கள், பு, ஆ. ஊ, என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும்.

உ-ம்.

புகரவிகுதி

ஆவிகுதி

ஊவிகுதி உண்குபு

உண்ணா

உண்ணுh தேடுபு

தேடா

தேடு வந்தான்

274. செய என்னும் வாயடப்பாட்டு முக்காலத்திற்கும் உரிய வினை யெச்சம் அகரவிகுதியை இறுதியிற் பெற்றுத் தான் கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு முடிவதாம்.

(3) செய வெண் வாய்ப்பாட்டு வினையெச்சம் இறந்த காலத்திலே காரணப் பொருளில் வந்து தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.

காரணப் பொருளில் வருதலாவது முடிக்குந் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில் காரணம் என்பது பட வருதல்.

உ-ம்.

மழை பெய்ய புகழ்பெற்றது - தன்கருத்தாவின் பெயர்

மழை பெய்ய நெல் விளைந்நது - பிறகருத்தாவின் வினை

மழை பெய்ய புகழ்பெற்றது என்றவிடத்து வினையெச்சந்தால் உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினைமுதலாதல் காண்க.

மழைபெய்ய நெல்லு விளைந்தது எனற விடத்து வினையெச்சத் தால் உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலும் வேறே: முடிக்குஞ் சொல்லால் உணலப்படும் தொழிலை நிஷைகழ்த்தின வினைமுதலும் வேறேயாதல் காண்க.

செய்யுளிலே இச் செயன்வென்வாய்ப்பாட்டிறந்தக

Link to comment
Share on other sites

302.எதிர்மறை வினை அடுத்து வருமிடத்து முற்றும்மை எச்சவும்மையுமாம்.

உ-ம்.

எல்லாரும் வந்திலர். அவர் பத்துங் கொடார்.

இங்கே, சிலர் வந்தார், சில கொடுப்பார் எனவும் பொருள் படதலால், எச்சவும்மையுமாயிற்று.

303. எச்சவும்மையாற் றழுவப்படம் பொரட் சொல்லில் உம்மையில்லையாயின், அச் சொல் எச்ச வும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படும்.

உ-ம்.

சாத்தன் வந்தான்; கொற்றனும் வந்தான்.

இங்கே சாத்தன் எச்சவும்மையாற் றழுவப்படு பொருள்

304. என, என்று என்னும் இரண்டிடைச் சொற்களும் வினையும், பெயரும், எண்ணும், பண்பும், குறிப்பும், இசையும், உவமையும் ஆகிய ஏழபொருளிலும் வரும்.

உ-ம்.

வினை மைந்தன் பிறந்தானெனத் தந்தையுவந்தான் இங்கே வினையோடியைந்தத.

பெயர் அழுக்கா றெனவொரு பாவி. இங்கே பெயரோடியைந்நது.

எண் நிலமென நீரெனத் தீயென வளியென வானெனப் பூதங்களைந்து, இங்கே என்ணோ டியைந்தது.

பண்பு வெள்ளென விளர்த்தது. இங்கே பண்போ டியைந்தது.

குறிப்பு பொள்ளென வாங்கே புறம் வேரார். இங்கே குறிப்போ டியைந்தது.

இசை பொம்மென வண்டலம்பும் புரிகுழலை. இங்கே இசையோ டியைந்தது.

உவமை புலி பாய்தெனப் பாய்ந்தான். இங்கே உவமையோ டியைந்தது.

என்று என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக்கொள்க

305. மேற்கூறிய ஏ, உம், என என்று என்னு நான்கிடைச் சொற்களன்றியும், என்றா, எனா, ஒடு, என்னும் இம்மூன்றிடைச் சொற்களும் என்னுப் பொருளில் வரும்.

உ-ம்.

நிலலென்ற நீரென்றா தீயென்றா

நிலலென்னா நீரெனாத் தீயெனா

நிலனொடு நீரொடு தீயொடு

306. பெயர்ச் செவ்வெண்ணும், எண்ணிடைச் சொற்கள் ஏழனுள்ளும் ஏ, என்றா, எனா, என்னு மூன்றும், தொகைச் சொற் பெற்று வரும். உம், என்று, என, ஒடு, என்னு நான்கும், தொகைச் சொற் பெற்றும் பெறாதும் வரும்.

பெயர்ச் சொவ்வெண்ணாவது, பெயர்களினிடத்தே எண்ணிடைச் சொற்றொக்கு நிற்ப வருவது.

(உதாரணம்)

செவ்வெண் சாத்தன் கொற்ற னிருவரும் வந்தார்.

ஏகாரவெண் சாத்தனே கொற்றனே யிருவரும் வந்தார்.

என்றாவெண் சாத்தனென்றா கொற்றனென்றா விருவரும் வந்தார்.

எனாவெண் சாத்தனெனாக் கொற்றனெனா விருவரும் வந்தார்.

உம்மையென் சாத்தனுங் கொற்றனு மிருவரும் வந்தார்.

என்றெண் சாத்தனென்று கொற்றனெனன் றிருவருளர்.

எனவென் சாத்தனெனக் கொற்றனெனன விருவருளர்.

ஒடுவெண் சாத்தனொடு கொற்றனொ டிருவருளர்.

உம்மையெண் சாத்தனுங் கொற்றனும்; வந்தார்.

என்றெண் நிலனென்று நீரென்று தீயென்று காற்றென்றளவறு காயமென் றாகிய வுலகம்.

எனவெண் நிலவென நீரெனத் தீயெனக் காற்றென வளவறு காயமென் வாகிய உலகம்.

ஒடுவெண் நிலனொடு நீரொடு தீயொடு காற்றொ டவளறு காயமொடாகிய வுலகம்.

307. என்று, என, ஒடு என்னும் இம் மூன்றிடைச் சொற்களும், எண்ணப்படும் பொருட்டோறு நிற்றலேயன்றி ஒரிடத்து நிற்கவும் பெறும்; அப்படி நிற்பினும், பிரிந்து மற்றைப் பொருடோறும் பொருந்தும்.

உ-ம்.

என்றெண் வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும். இங்கே என்றென்பது வினையென்று பகை யென்று என நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது.

எனவெண் பகைபாவ மச்சம் பழியென நான்கு - மிகவாவா மில்லிறப்பான் கண். இங்கே என என்பது, பகையெனப் பாவமென அச்சமெனப் பழியென என்று நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது..

ஒடுவெண் பொருள் கருவி காலம் வினையிடனொ டைந்து - மிருடீர வெண்ணிச் செயல். இங்கே ஒடுவென்பது பொருளோடு கருவி யோடு காலத்தோடு வினையோடு இடனொடு என நின்றவிடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது.

308.வினையெச்சங்கள், எண்ணப்படுமிடத்து ஏற்பன வாகிய எண்ணிடைச் சொல் விரியப் பெறும், தொகாப்பெற்றும், ஒரிடத்து நின்று பிரிந்து கூடப் பெற்றும் வரும். அவை தொகைபெறுதலில்லை.

உ-ம்.

உம்மையெண் - கற்றுங் கேட்டுங் கற்பனை கடந்தான்

என்றென் - உண்ணவென் றுடுக்கவென்று வந்தான்

எனவெண் - உண்ணவென வுடுக்கவென வந்தான்

செவ்வென் - கற்றுக் கேட்டுக் கற்பனை கடந்தான்

பிரிந்து கூடு மென் - உண்ண வுடுக்கவென்று வநதான்

309. அ, இ, உ, என்னு மூன்றிடைச் சொற்களும் சுட்டுப்பொருளையும், எ, ஆ, யா, என்னு மூன்றிடைச் சொற்களும் வினாப்பொருளையும் தரும்.

உ-ம்.

அக்கொற்றான், இக் கொற்றான், உக்கொற்றான்

எக்கொற்றன், கொற்றனா, யாவன்

310.கொல் என்னும் இடைச்சொல், ஐயமும் அசை நிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.

உ-ம்.

ஐயம் இவ்வுருக் குற்றிகொன் மகன்கொல். இற்கே குற்றியோ மகனோ என்னும் பொருளைத் தருதலால் ஐயம்.

அசைநிலை கற்றதனா லாய பயனென்கொல். இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை

311. மற்று என்னும் இடைச்சொல், வினைமாற்றும், பிறிதும், அசைநிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.

இங்கே வினைமாற்றென்றது கருதியதற்கு இனமாகிய மறுதலை வினை; பிறிதென்றது கருதியதற்கு இனமாகிய பிறிது.

(உ-ம்)

வினைமுற்று மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது. இஙங்கே கருதிய வினையாவது நல்வினையை வினைந்தறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலை வினையாவது நல்வினையை விரையாதறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலைவினையாவது நல்வினையை விரையாதறிவாம் என்பது. மற்றென்றது, இங்கே விரையாதறிவாம் என்னும் மறுதலைவினையைத் தருதலால், வினைமாற்றுப் பொருளில் வந்தது.

பிறிது ஊளிற் பெருவலியாவுள மற்றொன்று, இங்கே கருதியதாவது ஊழொன்றென்பது.

அதற்கினமாகிய பிநிதாவது ஊழல்லதொன்றென்பது மற்றென்றது இங்கே ஊழல்லதொன்றென்னும் பொருளைத் தருதலால் பிறிதென்னும் பொருளில் வந்தது.

அசை நிலை மற்றென்னையாள்க. இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தபப்பட்டு நிற்றலால் அசை நிலை

312. மன் என்னும் இடைச்சொல், ஒழியிசையும், ஆக்கமும், கழிவும், மிகுதியும், அசை நிலையுமாகிய ஐந்து பொருளையும் தலுஷரும்.

உ-ம்.

ஒழியிசை கூரியதோர் வாண்மன் இங்கே இரும்பை அறத்துணித்தது என்னும் ஒழிந்த சொற்களைத் தருதலால் ஒழியிசை

ஆக்கம் பண்டு காடுமன் இங்கே இன்று வயலாயிற்று என்னும் ஆக்கர் பொருளைத் தருதலால் ஆக்கம்

கழிவு சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே. இங்கே இப்பொழுது அவன் இறந்ததனால் எமக்குக் கொடுத்தல் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் கழிவு.

மிகுதி எந்தை யெமக்கருளுமன இங்கே மிகுதியும் அருளுவன் என்னும் பொருலைத் தருதலால் மிகுதி

அசைநிலை அதுமற் கொண்கன்றேரே. இங்கே வேறு பொருளின்றிச் சார்ததப்படடு நிற்றலால் அசைநிலை.

313. கொன் என்னும் இடைச்சொல், அச்சமும், பயனிலையும், காலமும், பெர்மையும் ஆகிய நான்கு பொருளையுந் தரும்.

உ-ம்.

அச்சம் கொன்வாளி இங்கே அஞ்சும் வாளி என்னும் பொருளைத் தருதலால் அச்சம்.

பயனின்மை கொன்னே கழிந்தன் றிளமை இங்கே பயனின்றிக் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் பயனின்மை.

காலம் கொன்வரல் வடை இங்கே காதலர் நீங்கிய காலம் அறிந்து வருதலையுடைய வாடை என்னும் பொருளைத் தருதலாற் காலம்

பெருமை கொன்னுர் துஞ்சினும் இங்கே பெரிய வூருறங்கினும் என்னும் பொருனைத் தருதலாற் பெருமை

314. அந்தில் என்னும் இடைச்சொல், ஆங்கென்னும் இடமும், அசைநிலையுமாகிய இரண்டு பொருளைத்தரும்.

உ-ம்.

ஆங்கு வருமே - சேயிழை யந்திற் கொழுநற் காணிய இங்கே அவ்விடத்து வரும் என்னும் பொருளைத் தருதலால் ஆங்கு.

அசை நிலை அந்திற் கழலினன் கச்சினன் இங்கே வேறு பொருளின்றிச் சார்ததப்படடு நிற்றலால் அசைநிலை.

315. மன்ற என்னும் இடைச் சொல், தெளிவுப்பொருளைத் தரும்.

உ-ம்.

தெளிவு இரத.தலி னின்னாது மன்ற இங்கே தலையாக என்னும் பொருளைத் தருதலாற் றெளிவு.

316. அம்ம என்னும் இடைச் சொல், ஒன்று சொல்வேன் கௌ; என்னும் பொருளிலும், எரையசைப் பொருளிலும் வரும்.

உரையசை - கட்டுரைக்கண் வரும் அசை நிலை

ஒன்று சொல்வேன் கேள் - அம்ம வாழி ’’தோழி“

உரையசை - ’’ அது மற்றம்ம’’

317. ஆங்க என்நும் இடைச் சொல், உரையசைப் பொருளில் வரும்.

உ-ம்.

உரையசை - ’’ஆங்கத்திறனல்ல யாங்கழற’’

318. ஆர் என்னும் இடைச் சொல், உயர்தற் பொருளிலும், அசைநிலைப் பொருளிலும் வரும்.

உயர்த்தற்பொருட்டு வரும் போது ஒரமைச் சொல்லீற்றில் வரும். அசை நிலையாகும் போது உம்மை முன்னும், உம்மீற்று வினைமுன்னும் வரும்.

(உதாரணம்)

உயர்தற் பொருள் தொல்காப்பபியனார் வந்தார். தந்நையார் வந்தார்.

அசை நிலை பெயரினாகிய தொகையுமா ருளவே. இங்கே ஆர் அசை நிலையாக உம்மை முன் வந்தது. எல்லா வுயிரோடுஞ் செல்லுமார் முதலே. இங்கே ஆர் அசைநிலையாக உம்ம{ற்று வினைமுன் வந்தது.

319. தொறும், தோறும், என்னும் இவ்விரண்டிடைச் சொற்களும், இடப்பன்மைப் பொருளையுந் தொழிற் பயில்வுப் பொருளையுந் தரும்.

உ-ம்.

இடப்பன்மை - சோழநாட்டி லூர்தொறுஞ் சிவாலயம்

தொழிற்பயில்வு - படிக்குந் தொறு மறிவு வளறும்

தோறும் என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக் கொள்க.

320. இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.

உ-ம்.

காலவெல்லை - இனி வருவேன்

இடவெல்லை - இனியெம்மூர்

321. முன், பின் என்னும் இடைச் சொற்கள், காலப் பொருளையும், இடப்பொருளையுந் தந்து, ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வரும்.

உ-ம்.

காலம் - முன் பிறந்தான். பின் பிறந்தான்

இடம் - முன்னிருந்தான், பின்னிருந்தான்

முன். பின் என்பவைகள், முன்பு, பின்பு, எ-ம்.

முன்னை, பின்னை, எ-ம். முன்னர், பின்னர், எ-ம்.

விகாரப்பட்டும் வழங்கும்.

322. வளா, சும்மா என்னும் இடைச்சொற்கள், பயனின்மைப் பொருளைத் தரும்.

உ-ம்.

வளா விருந்தான், சும்மா வந்தான்

323. ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னம் இடைச் சொற்கள் விகற்பப் பொருளைத் தரும்.

விகப்பமாவது, அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது.

உ-ம்.

ஆவது - தேவாரமாவது திருவாசகமாவது கொண்டு வா

ஆதல் - சோறாதல் கூழாதல் கொடு

ஆயினும் - வீட்டிலாயினுங் கோயிலிலாயினும் இருப்பேன்

தான் - பொன்னைத்தான் வெள்ளியைத்தான் கொடுத்தானா

324. அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ, ஆஅ, ஒஓ, என்றாற் போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

325. சீ, சீசீ, சிச்சீ, சை என்றாற்போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

326. கூ, கூகூ, ஐயோ, ஐயையோ என்றாற்போல வருவன, அச்சப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

Link to comment
Share on other sites

327.ஆஅ, ஆகா, ஓஒ, ஓகோ, அம்மா அம்மம்மா, அச்சோ என்றாற் போல வருவன, அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.

தேர்வு வினாக்கள் - 298. பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச் வொற்கள் எவை? 299. ஏகாரவிடைச் சொல் எப்பொருளைத் தரும்? 300. ஒகார விடைச்சொல் எப்பொருளைத் தரும்? சிறப்பு எத்தனை வகைப்படும்? உயர்வு சிறப்பாவது யாது? இழிவு சிறப்பாவது யாது? இங்கே சிறப்பித்தலென்றது என்னை? 301. உம் என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளைத் hரும்? எச்சம் எத்தனை வகைப்படும்? 302. ஒரு பொருளில் வரும் உம்மை மற்நொரு பொருளையுந் தருமோ? 303. எச்சவும்மையாற் றழுவப்படும் பொருட் சொல்லில் உம்மையில்லையாயின் அச்சொல் எச்சவும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படுமோ ஈற்றிலே சொல்லப்படுமோ? 304. என, என்று என்னும் இரண்டிடைச்சொற்களும் எவ்வௌ; பொருளைத் தரும்? 305. எண்ணுப் பொருளில் வரும் இடைச் சொற்கள் எவை? 306. எவ்வௌ; எண்கள் தொகைச் சொற் பெற்று வரும்? எவ்வௌ; வெண்கள் தொகைச் சொற் பெற்றும் பெறாதும் வரும்? பெயர்ச் செவ்வெண்ணாவது யாது? 307. எண்ணிடைச் சொற்கள் எணப்படும் பொருடோரும் நிற்கவே பெறுமோ? 308. வினை, எணப்படுமிடத்து, எண்ணிடைச் சொற் பெறாதோ? 309. அ, இ, உ, எ-ம். ஆ, யா, எ-ம். வரும் இடைச் சொற்கள் எவ்வௌ; பொருனைத் தரும்? 310. கொல் னெ;னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்? 311. மற்று என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்? இங்கே வினை மாற்றென்றது என்ன? பிறிதென்றது என்ன? 312. மன் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்? 313. கொன் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்? 314. அந்தில் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருளைத் தரும்? 315. மன்ற என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளைத் தரும்? 316. அம்ம என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளில் வரும்? 317. ஆங்க என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளில் வரும்? 318. இது உயர்தற் பொருட்டு வரும் போது எவ்விடத்து வரும்? அசைநிலையாகும் போது எவ்விடத்து வரும்? 319. தொறும், தோறும், என்னும் இரண்டிடைச் சொற்களும் எவ்வௌ; பொருளைத் தரும்? முன், பின், என்னம் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? 320. இனி என்னும் இடைச் சொல் எப்பொருளைத் தரும்? 322. வாளா, சும்மா என்னும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? 323. ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? விகற்பமாவது என்ன? 324. இரக்கப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? 325. இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 326. அச்சுப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 327. அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை?

குறிப்பின் வரும் இடைச்சொற்கள்

328. அம்மென், இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென, எ-ம். கடகடென, களகளென, திடுதிடென, நெறுநெறென, படபடென, எ-ம். வருவன, ஒலிக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச் சொற்களாம்.

329. துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென, என்றாற் போல்வன, அச்சக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச்சொற்களாம்.

330. பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்றாற் போல்வன, விரைவுக் குறிப்புப் பொருளைத்தரும்.

தேர்வு வினாக்கள் - 328. ஒலிக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 329. அச்சக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை? 330. விரைவுக் குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை?

இசைநிறை

331. ஒடு, தெய்ய என்பன, இசை நிறையிடைச் சொற்களாம்.

தேர்வு வினா - இசைநிறைச் சொற்கள் எவை?

அசைநிலை

332. மா என்பது, வியங்கோளைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச் சொல்லாம்.

333. மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ என்னும் பத்தும், முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசையிடைச் சொற்களாம்.

334. யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், போலும், அன்று, ஆம், தாம், தான், இசின், ஐ, ஆல், என், என்ப என்னும் இருபத்தொன்றும், மூவிடத்துக்கும் வரும் அசைநிலையிடைச் சொற்களாம்.

தேர்வு வினாக்கள் - 332. வியங்கோளைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச் சொல் எது? 333. முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைநிலையிடைச் சொற்கள் எவை? 334. மூவிடத்துக்கும் வரும் அசையிடைச் சொற்கள் எவை?

இடையியல் முற்றிற்று

4. உரியியல்

335. உரிச்சொல்லாவது, பொருட்கு உரிமை பூண்டு நிற்கும் பண்பை உணர்த்துஞ் சொல்லாம்.

336. உலகத்துப் பொருள், உயிர்ப் பொருளும், உயிரல் பொருளும் என, இரு வகைப்படும்.

337. இப்பொருள்களுக்குரிய பண்பு, குணப்பண்புந் தொழிற்பண்பும் என இரு வகைப்படும்.

338. உயிர்ப் பொருள்களின் குணப்பண்புகளாவன: அறிவு, அச்சம், மானம், பொறுமை, மயக்கம், வருப்பு, வெறுப்பு, இரக்கம், நன்மை, தீமை முதலியனவாம்.

339. உயிர்ப்பொருள்களின் றொழில் பண்புகளாவன: உண்ணல், உடுத்தல், உறங்கள், அணிதல், தொழுதல், நடத்தல், ஆக்கல், காத்தல், அழித்தல் முதலியனவாம்.

340. உயிரல் பொருள்களின் குணப்பண்புகளாவன: பல்வகை வடிவங்களும், இரு வகைநாற்றங்களும், ஐவகை நிறங்களும், அறு வகைசுவைகளும், எண்வகைப் பரிசங்களுமாம்.

பல்வகை வடிவங்களாவன: வட்டம், இருகொணம், முக்கோணம், சதுர முதலியன.

இருவகை நாற்றங்களாவன: நறு நாற்றம், தீநாற்றம் என்பவைகளாம்.

ஐவகை நிறங்களாவன: வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என்பவைகளாம்.

அறு வகைசுவைகளாவன: கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு என்பவைகளாம்.

எண்வகைப் பரிசங்களாவன: வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, இழு மெனல், சருச்சரை என்பவைகளாம்.

341. உயிர்ப்பொருள், உயிரல் பொருள் என்னும் இரு வகைப் பொருள்களுக்கும் உரிய தொழிற்பண்புகளாவன: தோன்றல், மறைதல், வளர்தல், சுரங்கள், நீங்கள், அடைதல், நடுங்கள், ஒலித்தல் முதலியவைகளாம்.

342. மேற்கூறிய குணப்பண்பும், உண், உறங்கு முதலிய முதனிலையளவிற் பெறப்படுந் தொழிற்பண்பும், ஆகிய பொருட் பண்பை உணர்த்துஞ் சொற்கள் வினைச் சொற்கள் எனப்படும்.

343. இவ்வுரிச் சொற்கள், ஒரு குணத்தையும் பல குணத்தையும் பல குணத்தையும் உணர்த்தி வரும்.

344. சால், உறு, தவ, நனி, கூர், கழி, என்பன, மிகுதி என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாம்.

உ-ம்.

சால் - தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்

உறு - உறுயுனறந் துலகூட்டி

தவ - ஈயாது வீயு முயிர் தவப் பலவே

நனி - வந்து நனி வருந்தினை வாழிய நெஞ்சே

கூர் - துணிகூ ரெவ்வமொடு

கழி - கழிகண் ணோட்டம்

345. செழுமை என்பது வளனுங் கொழுப்பும் என்னும் இரு குணத்தை உணர்த்தும் உரிச்சொல்லாம்.

உ-ம்.

வளம் - செழும் பல் குன்றம்

கொழுப்பு - செழுந் தடிதின்ற செந்நாய்

இவ்வாறே ஒரு குணத்தையும் பல குணத்தையும் உணர்த்தி வரும் உரிச்சொற்களெல்லாவற்றையும் நிகண்டு வாயிலாக அறிந்து கொள்க.

Link to comment
Share on other sites

தேர்வு வினாக்கள் - 335. உரிச் வொல்லாவது யாது? 336. உலகத்துப் பொருள் எத்தனை வகைப்படும்? 337. இப்பொருள்களுக்குரிய பண்பு எத்தனை வகைப்படும்? 338. உயிர்ப் பொருள்களின் குணப்பண்புகள் எவை? 339. உயிர்ப் பொருள்களின் றொலிற்பண்புகள் எவை? 340. உயிரல் பொருள்களின் குணப்பண்புகள் எவை? 341. உயிர்ப்பொருள், உயிரல் பொருள் என்னம் இரு வகைப் பொருள்களுக்குமுரிய தொழிற்பண்புகள் எவை? 342. தொழிற் சொல்லை மேலே வினைச் சொல்லென்றும் இங்கே உரிச்சொல்லென்றுஞ் சொல்லியது என்னை? 343. இவ்வுரிச் சொற்கள் பொருட் குணங்களை எவ்வாறு உணர்த்தி வரும்? 345. பல குணங்களை உணர்த்தும் உரிச் சொல் எது?

உரியியல் முற்றிற்று.

சொல்லதிகாரம் முற்றுப் பெற்றது.

மூன்றாவது

தொடர்மொழியதிகாரம்

(1) தொகை நிலைத் தொடரியல்

346. தொடர் மொழியாவது, ஒன்றோடொன்று பொருள் படத் தொடர்ந்து நிற்கும் இரண்டு முதலிய சொற்களினது கூட்டமாம்.

347. சொல்லோடு சொற்றொடருந் தொடர்ச்சி, தொகைநிலைத் தொடர், தொகா நிலைத் தொடர் என இரு வகைப்படும்.

348. தொகைநிலைத் தொடராவது, வெற்றுமையுருபு முதலிய உருபுகள் நடுவே கெட்டு நிற்ப, இரண்டு முதலிய சொற்கள் ஒரு சொற்றன்மைப்பாட்டுத் தொடர்வதாம்.

ஒரு சொற்றன்மைப்பட்டுதலாவது பிளவு படாது நிற்றல்.

தேர்வு வினாக்கள் - 346. தொடர் மொழியாவது யாது? 347. சொல்லோடு சொற்றொடருந் தொடர்ச்சி எத்தனை வகைப்படும்? 348. தொகைநிலைத் தொடராவது யாது?

தொகைநிலைத் தொடர்ப்பாகுபாடு

349. அத்தொகைநிலைத் தொடர் வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என, அறு வகைப்படும்.

தேர்வு வினா - 349. தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

வேற்றுமைத் தொகை

350. வேற்றுமைத் தொகையாவது, ஐ, முதலிய ஆறு வேற்றுமையுருபும் இடையிலே கெட்டு நிற்கப், பெயரோடு பெயரும் பெயரோடு பெயரும் பெயரோடு வினை வினைக்குறிப்புப் பெயர்களுந் தொடர்வதாம்.

உ-ம்.

நிலங்கடந்தவன் - இரண்டாம் வேற்றுமைத்தொகை

தலைவணங்கினவன் - மூன்றாம்; வேற்றுமைத்தொகை

சாத்தன்மகன் - நான்காம் வேற்றுமைத்தொகை

ஊர்நீங்கினவன் - ஐந்தாம் வேற்றுமைத்தொகை

சாத்தன்கை - ஆறாம் வேற்றுமைத்தொகை

குன்றக்கூகை - ஏழாம் வேற்றுமைத்தொகை

கையையுடைய களிறு என்பது கைக்களிறு எனவும், பொன்னாற் செய்தகுடம் என்பது பொற்குடம் எனவும், வருவன, உருபும் பொருளும் ஒருங்கு கெட்ட வேற்றுமைத் தொகை எனக் கொள்க.

351. ஐயுருபுங் கண்ணுருபும், தொடர் மொழியின் இடையிலன்றி, இறுதியிலுங் கெட்டு நிற்கும்.

உ-ம்.

கடந்தானிலம் - ஐயுருபு தொக்கது

இருந்தான்மாடத்து - கண்ணுருபு தொக்கது

இவ்வாறு வருவனவெல்லாம், உருபு கெட்டு நிற்கினும் ஒரு சொற்றொன்மைப் படாது பிளவுபட்டு நிற்றலினாலே, தொகாநிலைத் தொடரெனவே கொள்ளப்படும்.

352. வேற்றுமையுருபுகள், விரிந்து நிற்குமிடத்து எப்பொருள் படுமோ அப்பொருள் படுமிடத்தே, தொக்கு நிற்கப் பெறும்; அப்பொருள் படாவிடத்தே தொக்கு நிற்கப் பெறவாம்.

உ-ம்.

சாத்தனை யடித்தான் என ஐயுருபு விரிந்து நிற்குமிடத்துச் செயப்படு பொருள் படுதல் போலச் சாத்தானடித்தான் என ஐயுருபு தொக்கு நிற்குமிடத்து அப்பொருள் படாமையால், இங்கே ஐ யுருபு தொக்கு நிற்கப்பெறா தென்றறிக.

சாத்தனொடு வந்தான் என ஒடுவுருபு விரிந்து நிற்குமிடத்து உடனிகழ்ச்சிப் பொருள் படுதல்போலச் சாத்தன் வந்தான் எனத் தொக்கு நிற்குமிடத்து அப்பொருள் படாமையால், இங்கே ஒடுவுருபு தொக்கு நிற்கப் பெறாதென்றறிக.

தேர்வவு வினாக்கள் - 350. வேற்றுமைத் தொகையாவது யாது? 351. தொடர்மொழியின் இடையிலன்றி, இறுதியிலுங் கெட்டு நிற்கும் உருபுகள் உளவோ? 352. வேற்றுமையுருபுகள் எவ்விடத்துந் தொகாப்பெறுமோ?

வினைத் தொகை

353. வினைத் தொகையாவது, பெயரெச்சத்தின் விகுதியுங் காலங்காட்டும் இடைநிலையுங் கெட்டு நிற்க, அதன் முதனிலையோடு பெயர்ச் சொற் றொடர்வதாம்.

உ-ம்.

நேற்றுக் கொல் களிறு

முன் விடு கணை இறந்தகால வினைத்தொகை

இன்று கொல் களிறு

இப்பொழுது விடு கணை நிகழ்கால வினைத்தொகை

நாளைக் கொல் களிறு

பின் விடு கணை எதிர்கால வினைத்தொகை

இவை, விரியுமிடத்துக் கொன்ற, கொல்கின்ற, கொல்லும், எ-ம். விட்ட, விடுகின்ற, விடும். எ-ம். விரியும் எனக் கொள்க.

கொள்களிறு, விடுகணை என்றாற் போல் வன, முக்காலமும் பற்றி வரின், முக்காலவினைத் தொகை எனப்படும்.

வருபுனல், தருகடர், நடந்திடு குதிரை என வினைப்பகுதி விகாரப்பட்டும் வினைத் தொகை வரும்.

தேர்வு வினாக்கள் - 353. வினைத் தொகையாவது யாது? கொல்களிறு முதலியன, முக்காலமும் பற்றி வரின், எவ்வாறு பெயர் பெறும்? வினைப்பகுதி விகாரப்பட்டும் வினைத் தொகை வருமோ?

பண்புத் தொகை

354. பண்புத் தொகையாவது, ஆகிய என்னும் உருபு கெட்டு நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப்பெயர் தொடர்வதாம்.

பண்பு, வண்ணம் ,வடிவு, அளவு, சுவை, முதலியனவாம்.

ஆகிய என்பது, பண்புக்கும், பண்பிக்கும், உளதாகிய ஒற்றுமையை விளக்குவதோரிடைச் சொல்.

(உதாரணம்)

செந்தாமரை

கருங்குதிரை வண்ணப் பண்புத்தொகை

வட்டக்கல்

சதுரப்பலகை வடிவுப் பண்புத்தொகை

ஒருபொருள்

முக்குணம் அளவுப் பண்புத்தொகை

துவர்க்காய்

இன்சொல் சுவைப் பண்புத்தொகை

இவை, விரியுமிடத்துச் செம்மையாகிய தாமரை, வட்டமாகிய கல், ஒன்றாகிய பொருள், துவர்ப்பாகிய காய் என விரியும்.

இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாவது, ஆகிய என்னும் பண்புருபு கெட்டு நிற்கப், பொதுப்பெயரோடு பொதுப் பெயராயினும் ஒரு பொருண்மேல் வந்து தொடர்வதாம்.

உ-ம்.

ஆயன் சாத்தன் - பொதுப்பெயரோடு சிறப்புப் பெயர்

சாரைப்பாம்பு - சிறப்புப் பெயரோடு பொதுப்பெயர்

இவை விரியுமிடத்து, ஆயனாகிய சாத்தன், சாரையாகிய பாம்பு என விரியும். ஆயன் சாரை என்பன பண்பல்லவாயினும் பண்பு தொக்க தொகைபோல விசேடிப்பதும் விசேடிக்கப்படுவது மாகிய இயைபுபற்றி , இவை போல்வனவும் பண்புத்தொகை எனப்பட்டன.

தேர்வு வினாக்கள் - 354. பண்புத் தொகையாவது யாது? பண்பென்பன எவை? ஆகிய என்பது என்ன சொல்? இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாவது யாது?

உவமைத் தொகை

355. உவமைத் தொகையாவது, போல முதலிய உவமவுருபு கெட்டு நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொற்றொடர்வதாம்.

இவ்வுவமை, வினை, பயன், மெய், உரு, என்பன பற்றி வரும்.

(உதாரணம்)

புலிக்கொற்றன் - வினையுவமைத் தொகை

மழைக்கை - பயகுவமைத் தொகை

துடியிடை - மெய்யுவமைத் தொகை

பவளவாய் - உருபுவமைத் தொகை

இவை விரியுமிடத்துப், புலிபோலுங் கொற்றன், மழை போலுங் கை, துடி போலு மிடை, பவளம் போலும்வாய் என விரியும்.

தேர்வு வினாக்கள் - 355. உவமைத்தொகையாவது யாது? இவ்வுவமை எவை பற்றி வரும்?

உம்மைத் தொகை

356. உம்மைத் தொகையாவது, எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகையளவைகளாற் பொருள்களை அளக்குமிடத்து, எண்ணும்மை இடையிலும் இறுதியிலுங் கெட்டு நிற்கப், பெயரோடு பெயர் தொடர்வதாம்.

உ-ம்.

இராப்பகல்

ஒன்றேகால் எண்ணலளவையும்மைத் தொகை

கழஞ்சேகால்

தொடியேகஃசு எடுத்தலளவையும்மைத் தொகை

கலனேதுணி

நாழியாழாக்கு முகத்தலளவையும்மைத் தொகை

சாணரை

சாணங்குலம் நீட்டலளவையும்மைத் தொகை

இவை விரியுமிடத்து, இராவும் பகலும், ஒன்றுங் காலும், கழஞ்சுங் காலும், காலனுந் தூணியும், சாணுமரையும் என விரியும்.

357. உயர்திணை யொருமைப்பாலில் வரும் உம்மைத் தொகைகள், ரகரமெய்யுங் கள்விகுதியுமாகிய பலர்பால் விகுதியுடையனவாய் வரும்.

உ-ம்.

சேரசோழ பாண்டியர்

தேவன்றேவிகள்

அஃறிணையொருமைப் பாலிலும் பொதுத் திணை விகுதி பெறாதும், பெற்றம் வரும்.

உ-ம்.

நன்மை தீமை நன்மை தீமைகள்

தந்தை தாய் தந்தை தாய்கள்

தேர்வு வினாக்கள் - 356. உம்மைத் தொகையாவது யாது? 357. உயர்திணையொருமையில் வரும் உம்மைத் தொகைகள், ஒருமை விகுதியோடு நிற்குமோ பரர்பால் விகுதி பெறுமோ? அஃறிணை யொருமைப் பாலிலும் பொதுத்திணையொருமைப் பாலிலும் வரும் உம்மைத்தொகைகள் பன்மைவிகுதி பெற்ற வரவோ?

அன்மொழித் தொகை

358. அன்மொழித் தொiயாவது, வேற்றுமைத் தொகை முதலிய ஐந்து தொகைநிலைத் தொடருந் தத்தம் பொருள்படுமலவிற் றொகாது தத்தமக்குப் புறத்தே தாமல்லாத பிற மொழிப் பொருள் படத், தொகுவதாம்.

உ-ம்.

1 பூங்குழல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலை கலத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பூவையுடைய குழலினையுடையாள் என விரியும்

போற்கொடி என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை நிலைக்கலத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னாலாகிய தொடியினையுடையாள் என விரியும்

கவியிலக்கணம் என்பது நான்காம் வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கவிக்கிலக்கணஞ் சொல்லப்பட்ட நூல் என விரியும்.

பொற்றாலி என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னாகிய தாலியினையுவடயாள் என விரியும்.

கிள்ளிக்குடி என்பது ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கிள்ளியினது குடியிருக்குமூர் என விரியும்.

கீழ்வயிற்றுக்கழலை என்பது ஏழாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கீழ் வயிற்றின்கண் எழுந்த கழலைபோல்வான் என விரியும்.

2 தாழ்குழல் என்பது வினைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது தாழ்ந்த குழலினையுடையாள் என விரியும்.

3 கருங்குழல் என்பது பண்புத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கருமையாகிய குழலினை யுடையாள் என விரியும்.

4 தேன்மொழி என்பது உவமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது தேன் போலு மொழியினை யுடையாள் என விரியும்.

5 உயிர்மெய் என்பது உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது உயிருமெய்யுங் கூடிப்பிறந்த எழுத்து என விரியும்.

தேர்வு வினா - 358. அன்மொழித் தொiயாவது யாது?

தொகைநிலைத் தொடர் மொழிகள் பலபொருள் படுதல்

359. தொகைநிலைத் தொடர் மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து, ஒரு பொருளைத் தருவன வன்றி, இரண்டு முதல் ஏழெல்லையாகிய பல பொருள்களைத் தருவனவும் உளவாம்.

உ-ம்.

(1) தெய்வ வணக்கம் - இரண்டு பொருள்

1. தெய்வத்தை வணங்கும் வணக்கம், 2. தெய்வத்திற்கு வணங்கும் வணக்கம்.

(2) தற்சேர்ந்தார் - மூன்று பொருள்

1. தன்னைச் சேர்ந்தார், 2. தன்னோடு சேர்ந்தார், 3. தன்கட் சேர்ந்தார்.

(3) சொல்லிணக்கம் - நான்கு பொருள்

1. சொல்லினதிலக்கணம், 2. சொற்கிலக்கிணம், 3. சொல்லின் கணிலக்கணம் 4. சொல்லினதிலக்கணஞ் சொன்ன நூல்.

(4) பொன்மணி - ஐந்து பொருள்

1. பொன்னாலாகிய மணி, 2. பொன்னாகிய மணி, 3. பொன்னின் கண் மணி, 4. பொன்னோடு சேர்ந்த மணி, 5. பொன்னு மணியும்.

(5) மர வேலி - ஆறு பொருள்

1. மரத்தைக் காக்கும் வேலி, 2. மரத்திற்கு வேலி, 3. மரத்தினது வேலி, 4. மரத்தின புறத்து வேலி, 5. மரத்தாலாகிய வேலி, 6. மரமாகிய வேலி.

(6) சொற்பொருள் - ஏழு பொருள்

1. சொல்லாலறியப்படும் பொருள், 2. வொல்லினது பொருள், 3. சொற்குப் பொருள், 4. சொல்லின் கட் பொருள், 5. சொல்லும் பொருளும், 6. வொல்லாகிய பொருள், 7. சொல்லானது பொருள்.

தேர்வு வினாக்கள் - 359. தொகை நிலைத் தொடர்மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து, அவைகளுள், ஒரு பொருளைத் தருவனவன்றிப் பல பொருள்களைத் தருவனவும் உளவோ?

தொகைநிலைத் தொடர்மொழிகளிற் பொருள் சிறக்கும் இடங்கள்

360. தொகைநிலைத் தொடர்மொழிகளுள்ளே, வேற்றுமைத் தொகையிலும், பண்புத்தொகையிலும், முன் மொழியிலாயினும், பின் மொழியிலாயினும் பொருள் சிறந்து நிற்கும்; வினைத் தொiயிலும், உவமைத் தொகையிலும், முன் மொழியிற் பொருள் சிறந்து நிற்கும்; உம்மைத் தொகையில் அனைத்து மொழியிலும் பொருள் சிறந்து நிற்கும்; அன்மொழித் தொகையில் இரு மொழியுமல்லாத புற மொழியிற் பொருள் சிறந்து நிற்கும்.

(உதாரணம்)

வேங்கைப்பூ, வெண்டாமரை என வரும் வேற்றுமைத் தொகை பண்புத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால், அம் முன் மொழிகளிற் பொருள் சிறந்தன.

கண்ணிமை, செஞ்ஞாயிறு என வரும் வேற்றுமைத் தொகை பண்புத் தொகைகளிலே, முன் மொழிகள் இனம் விலகுதலின்றி நிற்றலால், பின் மொழிகளிற் பொருள் சிறந்தன.

ஆடு பாம்பு, வேற்கண் என வரும் வினைத் தொகை எவமைத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால், அம்முன் மொழிகளிற் பொருள் சிறந்தன.

இராப்பகல், சேரசோழ பாண்டியர் என வரும் உம்மைத் தொகைகளிலே, அனைத்து மொழிகளும் இனம் விலக்கலும் விலாக்காமையுமின்றி நிற்றலால், அவ்வனைத்து மொழிகளிலும் பொருள் சிறந்தன.

பொற்றொடி, உயிர்மெய் என வரும் அன்மொழித் தொகைகளிலே, வொல்லுவொனுடைய கருத்து இவ்விரு மொழிப் பொருண் மேலதகாது, இவ்விரு மொழியுமல்லாத உடையாண் முதலிய புறமொழிப் பொருண்மேலேதாதலால், அப்புற மொழிகளிற் பொருள் சிறந்தன.

தேர்வு வினா - 368. தொகைநிலைத் தொடர்மொழிகளுள், எந்தெந்தத் தொடரில் எந்தெந்த மொழியிற் பொருள் சிறந்து விளங்கும்?

தொகைநிலைத் தொடரியல் முற்றிற்று.

2. தொகாநிலைத் தொடரியல்

361. தொகநிலைத் தொடராவது, இடையே வேற்றுமையுருபு முதலிய உருபுகள் கெடாமலும்., ஒரு சொற்றன்மைப்படாமலும், சொற்கள் பிளவு படத் தொடர்வதாம்.

தேர்வு வினா - தொகாநிலைத் அதாடராவது யாது?

தொகா நிலைத் தொடர்ப்பாகுபாடு

Link to comment
Share on other sites

362. அத்தெபாக நிலைத்தொடர், எழுவாய்த் தொடர், விளித் தொடர், வேற்றுமைத் தொகாநிலைத் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற் றொடர், அடக்குத் தொடர் என ஒன்பது வகைப்படும்.

உ-ம்.

1 சாத்தன் வந்தான் எழுவாய்த் தொடர்

2 சாத்தா வா விளித்தொடர்

3 குடத்தை வனைந்தான்

வாளால் வெட்டினான்

இரப்போர்க்கீந்தான்

மலையினிழிந்தான்

சாத்தனது கை

மணியின்க ணொளி வேற்றுமைத் தொகா நிலைத் தொடர்

4 உண்டான் சாத்தன்

குழையன் கொற்றன் வினைமுற்றுத் தொடர்

5 உண்ட சாத்தன்

காரிய சாத்தன் பெயரெச்சத் தொடர்

6 உண்டு வந்தான்

இன்றி வந்தான் வினையெச்சத் தொடர்

7 மற்றொன்று இடைச் சொற் தொடர்

8 கடிக்கமலம் உரிச்சொற் தொடர்

9 பாம்பு பாம்பு அடுக்குத் தொடர்

363. வேற்றுமைத் தொi, விரிந்த விடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடராம். வினைத் தொகை, விரிந்த விடத்து பெயரெச்சத் தொகாநிலைத் தொடராம். பண்புத்தொகையும், உண்மைத் தொகையும் விரிந்த விடத்து முன்னது இடைச்சொற்றொடரும், பின்னது இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினையெச்சச் தொடருமாம். அன்மொழித் தொகை விரிந்தாவிடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் முதலேற்பனவாம்.

தேர்வு வினாக்கள் - 362. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? 363. வேற்றுமைத் தொகை விரிந்த விடத்து என்ன நிலைத் தொடராம்? வினைத் தொகை விரிந்த, விரிந்த விடத்து என்ன தொகாநிலைத் தொடராம்? பண்புத் தொகையும், உம்மைத் தொகையும் விரிந்த விடத்து என்ன தொடராம்? உவமைத் தொகை, விரிந்த விடத்து என்ன தொடராம்? அன்மொழித் தொகை, விரிந்த விடத்து என்ன தொடராம்?

எழுவாய்த் தொடர்க்கும் வினைமுற்றுத் தொடர்க்கும் வேற்றுமை

364. எழுவாய்க்கு வினைமுற்றைப் வினைமுற்றைப் பயிலையாகக் கொள்ளுமிடத்து, வினைமுதல் விசேடணமாக வினைமுக்கிய பொருளாம்.

உ-ம்.

சாத்தன் வந்தான்: இங்கே சாத்தன் இது அசய்தான் என வினைமுதல் விசேடணமாக வினை முக்கியப் பொருளாயிற்று.

வந்தான் சாத்தன்: இங்கே சாத்தன் இது அசய்தான் என வினைமுதல் விசேடணமாக வினை முக்கியப் பொருளாயிற்று.

தேர்வு வினா - 364. சாத்தான் வந்தான் என்னம் எழுவாய்த் தொடர்க்கும், வந்தான் சாத்தன் என்னும் வினைமுற்றுத் தொடர்க்கும் வேற்றுமை என்ன?

இடைப்பிற வரல்

365. வேற்றுமையுருபுகளும், வினைமுற்றுக்களும், பெயரெச்சங்களும், வினையெச்சங்களுங் கொண்டு முடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையே, வருமொழியோடு இயைத்தக்க பிற செற்கள் வரவும் பெறும்.

உ-ம்.

1 சாத்தன் (வயிரார) உண்டான்

அறத்தை (அழகுஅபறச்) செய்தான்

வாளான் (மாய) வெட்டினான்

தேவர்க்கு (செல்வம் வேண்டிச்) சிறப்பெடுத்தான்.

மலையினின்று (உருண்டு) வீழ்ந்தான்

சாத்தனது (இத்தடக்கை) யானை

ஊர்க்கண் (உயர்ந்த வொளி) மாடம்

சாத்தா (விரைந்து) ஒடி வா வேற்றுமையுருபு

2 வந்தான் (அவ்வூர்க்குப்போன) சாத்தன் வினைமுற்று

3 வந்த (வடகாசி) மன்னன் பெயரெச்சம்

4 வந்து (சாத்தனின்றவனூர்க்குப்) போயினான் வினையெச்சம்

உண்டு விருந்தோடு வந்தான் என்னுமிடத்து, இடையில் வந்த விருந்தென்னும் சொல் வருமொழியோடு இயைதலன்றி, விருந்தோடுண்டு வந்தான் என நிலைமொழியோடும் இயைதலால், இது போல்வன இடையில் வரப்பெறாவென்றறிக.

தேர்வு வினாக்கள் - 365. வேற்றுமையுருபுகளும், வினைமுற்றுக்களும், பெயரெச்சங்களும், வினையெச்சங்களுங் கொண்டு முடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையே, பிற சொற்கள் வருதல் உண்டோ?

முடிக்குஞ் சொன்னிற்கு மிடம்.

366. ஆறனுபொழிந்த வேற்றுமையுருபுகளையும், வினைமுற்றையும், வினையெச்சத்தையும் முடிக்கவருங் சொற்கள், அவைகளுக்குப் பின்னன்றி முன் வருதலுமுண்டு.

உ-ம்.

1 வுந்தான் சாத்தன்

வெட்டினான் மரத்தை

வெட்டினான் வாளால்

கொடுத்தானந்தணர்க்கு

நிங்கினானூரின்

சென்றான் சாத்தன் கண்

வா சாத்தா வேற்றுமையுருபு

2 சாத்தன் போயினான் வினைமுற்று

3 போயினான் வந்து வினையெச்சம்

தேர்வு வினா - 366. வேற்றுமையுருபுகளையும், வினைமுற்றையும், வினையெச்சத்தையும் முடிக்கவருங் சொற்கள், அவைகளுக்குப் பின்னன்றி முன் வருதலுமுண்டோ?

தொகாநிலைத் தொடரியல் முற்றிற்று.

3. ஒழியியல்

தொடர்மொழிப் பாகுபாடு

367. தொடர் மொழி,முற்றுத் தொடர் மொழியும் எச்சத்தொடர் மொழியும் என இருவகைப்படும்.

368. முற்றுத் தொடர் மொழியாவது, எழுவாயுஞ் செயப்படுபொருண் முதலிவைகளோடு கூடாதாயினுங் கூடியாயினும் முடிபு பெற்று நிற்குந் தொடர் மொழியாம். வடநூலார் இம்முற்றுத் தொடர் மொழியை வாக்கிய மென்பார்.

உ-ம்

சர்தன் வந்தான்

சாத்தன் சோற்றையுண்டான்

369. எச்சத் தொடர்மொழியாவது, முடிவு பெறாது அம்முற்றுத் தொடர் மொழிக்கு உறுப்பாக வருந் தொடர் மொழியாம்.

உ-ம்.

யானைக் கோடு

யானையாவது கோடு

தேர்வு வினாக்கள் - 367. தொடர்மொழி எத்தனை வகைப்படும்? 368. முற்றுத் தொடர் மொழியாவது யாது? 369. எச்சத் தொடர்மொழியாவது யாது?

வாக்கியப் பொருளுணர்வுக்குக் காரணம்

370. வாக்கியத்தின் பொருளை உணர்த்தற்குக் காரணம், அவாய்நிலை, தகுதி, அண்மை, கருத்துணர்ச்சி என்னு நான்குமாம.

371. அவாய் நிலையாவது, ஒரு சொற் றனக்கு எச்சொல் இல்லாவிடின் வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாதோ அச்சொல்லை அவாவி நிற்றலாம்.

உ-ம்.

ஆவைக்கொணா என்னுமிடத்து, ஆவை என்பது மாத்திரஞ் சொல்லிக் கொணாவெண்பது சொல்லாவிடினும், கொணாவெண்பதுமாத்திரஞ் சொல்லி ஆவை என்பது சொல்லாவிடினும், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாதல அறிக.

372. தகுதியாவது, பொருட்குத் தடையுணர்ச்சி இல்லாமையாம்.

உ-ம்.

நெருப்பானனை என்னுமிடத்து நனைலின் நெருப்புக் கருவியன்று என்கிற உணர்ச்சி தடையுணர்ச்சி. அவ்வுணர்ச்சி இருத்தலால், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாது.

நீலானனை என்னுமிடத்து நனைலின் நீர் கருவியாதலாற் றடையுணர்ச்சி யில்லை: ஆகவே தகுதி காரணமக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

373. அண்மையாது, காலம் இடையின்றியும் வாக்கயப் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத சொல் இடையீடின்றியுஞ் சொல்லப்படுதலாம்.

உ-ம்.

ஆவைக்கொணா என்பது யாமத்துக்கு ஒவ்வொரு சொல்லாக சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. ஒரு தொடராக விரையச் சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

மலையுண்டானெருப்புடையது தேவதத்தன் என்னுமிடத்து, மலை நெருப்புடையது என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத உண்டாக் என்னுஞ் சொல் அற்சொற்கட்கு இடையீடாக நின்றது: உண்டான் றேவதத்தன் என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத நெருப்புடையது என்னுஞ் சொல் அற்சொற்கட்கு இடையீடாக நின்றது. இப்படி இடையிட்டுச் சொல்லாது, மலை நெருப்புடையது: உண்டான் றேவதத்தன் எனச் சொல்லின, அண்மை காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

374. கருத்துணர்ச்சியாவது, ஒரு சொல் எப்பொருளைத் தரல் வேண்டும் என்னுங் கருத்தாற் சொல்லப்பட்டதோ அக்கருத்தைச் சமயவிசேடத்தால் அறிதலாம்.

உ-ம்.

மாவைக் கொண்டுவா என்னுமிடத்து மாவெண்பது பல பொருளொரு சொல்லாததால் வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. இது பசித்தோனாற் சொல்லப்படிற் றின்னுமாவெனவும், கவசம் பூண்டு நிற்பானாற் சொல்லப்படிற் குதிரை யெனவும், சொல்லுவான் கருத்துச் சமயவிசேடத்தால் அறியப்படும். அப்போது அக்கருத்துணர்ச்சி காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

தேர்வு வினாக்கள் - 370. வாக்கியத்தின் பொருளை உணர்த்தற் காரணம் என்ன? 371. அவாய்நிலையாவது யாது? 372. தகுதியாவது யாது? 373. அண்மையாவது யாது? 374. கருத்துணர்ச்சியாவது யாது?

உருபும் வினையும் அடுக்கி முடிதல்

375. வேற்றுமையுருபுகள் விரிந்தாயினும் மறைந்தாயினும் ஒன் பல வடுக்கி வரினும், கலந்து பல வடுக்கி வரினும், வினைமுற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பரவுந் தம்மை முடித்தற் குறிய ஒரு சொல்லைக் கொண்டு முடியும்.

உ-ம்.

சாத்தனையுங் கொற்றனையும்

வாழ்த்தினான். சாத்தனுக்குங் கொற்றனுக்குந் தந்தை.

அருளற முடையன். உருபுகள் விரிந்தும் மறைந்தும் ஒன்று பல வடுக்கல்

அரசன் பகைவனை வாளால் வெட்டினான். அரசன் வாள் கைக் கொண்டான். உருபுகள் விரிந்தும் மறைந்தும் கலந்து பல வடுக்கல்

ஆடினான் பாடினான் சாத்தன் இளையண் வினைமுற்று ஒன்று பல வடுக்கல்

கற்ற கேட்ட பெரியோர்

நெடிய கரிய மனிதன் பெயரெச்சம் ஒன்று பல வடுக்கல்

கற்றுக் கேட்டறிந்தார் விருப்பின்றி வெறுப்பின்றியிருந்தார். வினையெச்சம் ஒன்று பல வடுக்கல்

376. வேற்றுமையுருபு, ஒன்று பல வடுக்கி வருமிடத்து, ஒரு தொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றைப் பெயர்களெல்லா வற்றினுந் தொக்கு வருதலு முண்டு.

உ-ம்.

பொருளின் பங்களைப் பெற்றான்

சேசோழபாண்டியர்க்கு நண்பன்

தந்தை hகயி னீங்கினான்

377. ஒரு தொடரினுள் ஒரு பொருளுக்கே பல பெயர் வருதலும், அப்பெயர் தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவாம். வரினும், பொருலொன்றே யாதலால் எண்ணும்மை பெறுதலில்லை.

உ-ம்.

சங்கரனை யென்குணனைச் சம்புவைநால் வேதனொரு

கங்கரனை நெஞ்சே கருது.

தேர்வு வினாக்கள் - 375. வேற்றுமையுருபுகள் ஒன்று பல வடுக்கி வரினும், கலந்து பலவடுக்கி வரினும், வினைமுற்றம் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பலவும் எப்படி முடியும்? 376. வேற்றுமையுருபு, ஒன்று பலவடுக்கி வருமிடத்து, ஒரு தொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றப் பெயர்களௌ;லாவற்றிலுந் தொக்க வருதலும் உண்டோ? 377. ஒரு தொடரினுள்ளே ஒரு பொருளுக்கே பல பெயர் வருதலும், அப் பெயர்தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவோ?

திணைபாலிட முடிபு

378. முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது, திணைபால் இடங்களின் மாறு படாது இயைந்து நிற்றல் வேண்டும். இயைந்து நில்லாதாயின் வழுவாம்.

உ-ம்.

நம்பி வந்தான்

நங்கை வந்தான்

அந்தனர் வந்தார்

நான்வந்தேன்

நீ வந்தாய் வழாநிழை

நம்பி வந்தது

நங்கை வந்தான்

அவன்வந்தான் தியைவழு

பால்வழு

இடவழு

379. இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கை எழுவாய் அடுக்கி வரின், பலர்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும். இரணடு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், பலர்பாலின்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும்.

உ-ம்.

நம்பியு நங்கையும் வந்தார்

யானையுங் குதிரையும் வந்தன

380. முன்னிலையெழுவாயோடு படர்க்கை எழுவாய் அடுக்கிவரின், முன்னிலைப் பன்மைப்பயனிலை கொண்டு முடியும். அது உளப்பாட்டு முன்னிலைப்பன்மை எனப்படும்.

உ-ம்.

நீயு மவனும் போயினீர்.

381. தன்மையெழுவாயோடு முன்னிலையெழுவாயேனும் படர்க்கை யெழுவாயுமேனும் இவ்விரண்டெழுவாயு மேனும் அடுக்கி வரின், தன்மைப்பன்மைப் பயனிலை கொண்டு முடியும். இது உளப்பாட்டுத் தன்மைப்பன்மை எனப்படும்.

உ-ம்.

யானு நீயும் போயினோம்

யானு மவனும் போயினோம்

யானு நீயு மவனும் போயினோம்.

382. திணையைந் தோன்றிய விடத்து உருபு வடிவு என்னும் பொதுச் சொற்களாலும், உயர்திணைப் பாலையந் தோன்றியவிடத்து அத்திணைப் பண்மைச் சொல்லாலும், அஃறிணைப்பாலையந் தோன்றியவிடத்துப் பால்பகாவஃறிணைச் சொல்லாலுங் கூறல் வேண்டும்.

உ-ம்.

1 குற்றியோ மனுடனோ

அங்கு தோன்றுகிற உரு?

.... திணையையம்

2 ஆண்மகனோ

பெண்மகளோ அங்கே தோன்றுகிறவர்? ... உயர்திணைப்பாலையம்

3 ஒன்றோ பலவோ அங்கு வந்த குதிரை? ... அஃறிணைப்பாலையம்

383. இரு திணையில் உருதிணை துணிந்தவிடத்தும், இருபாலில் ஒரு பால் துணிந்தவிடத்தும், மற்றொன்றல்லாத தன்மையைத் துணிந்த பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும். இது சுரங்கள் சொல்லல் என்னும் அழகைப் பயப்பித்தலாற் சிறப்புடையதாம்.

உ-ம்.

1 (குற்றியெனின்)

(மனுடனெனின்) மனுடனன்று

குற்றியல்லன் எ-ம்.

எ-ம்.

2 (ஆண்மகனெனின்)

(பெண்மகனெனின்) பெண்மகளல்லன்

ஆண்மகனல்லன் எ-ம்.

எ-ம்.

3 (ஒற்றெனின்)

(பலவெனின்) பலவன்று

ஒன்றல்ல எ-ம்.

எ-ம். கூறுக.

தேர்வு வினாக்கள் - 378. முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது எப்படி இயைந்து நிற்றல் வேண்டும்? 379. இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்? இரண்டு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கிவரின், எப்பயனிலை கொண்டு முடியும்? 380. முன்னிலையெழுவாயோடு படர்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்? 381. தன்மையெழுவாயோடு, முன்னிலையெழுவாயேனும், படர்க்கையெழுவாயேனும் இவ்விரண்டெழுவாயேனும் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்? 382. திணையையத்தையும் பாலையத்தையும் எந்தெந்த சொல்லாற் கூறல் வேண்டும்? 383. இருதிணையில் ஒரு திணை துணிந்த விடத்தும், மற்றொன்றல்லாத தன்மையை எப்பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும்?

திணைபாலிடப் பொதுமை நீங்குநெறி

384. திணை பாலிடங்கட்குப் பொதுவாகிய பெயர் வினைகட்கு முன்னும் பின்னும் வருஞ் சிறப்புப் பெயருஞ் சிறப்பு விணையும், அவற்றின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை யுணர்த்தும்.

உ-ம்.

சாத்தனிநன்: சாத்தனிது,. எ-ம். சாத்தன் வந்தான்: சாத்தன் வந்தது, எ-ம். பெயர்திணைப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி உரு திணையை யுணர்த்தின.

ஒருவரென்னையர்: ஒருவரென்றாயர். எ-ம். மரம் வளர்ந்தது: மரம் வளர்ந்தன,எ-ம். பெயர்ப்பாற் பொதுமைப் பின் வந்த சிறப்புப் பெயரும் வினையும் நீக்கி ஒரு பாலையுணர்த்தின.

யாமெல்லாம் வருவோம்: நீயிரெல்லாம் போமின்: அவரெல்லாமிருந்தார் எனப் பெயரிடப் பொதுமையை முன்வந்த சிறப்புப் பெயரும் பின் வந்த சிறப்பு வினையும் நீக்கி ஒவ்வோரிடத்தை யுணர்த்தின.

வாழ்க அவன், அவள், அவர், அது, அவை, யான், யாம், நீ, நீர் என வினைத்திணை பாலிடப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி ஒரு திணையையும் பாலையும் இடத்தையும் உணர்த்தின.

385. பெயர் வினையிரண்டும் உயர்திணை யாண் பெணிரண்டற்கும் பொதுவாகவேணும், அஃறிணை யாண்பெணிரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து, அப்பாலிரண்டனுள் ஒருபாற்கே யுரிய தொழின் முதலிய குறிப்பினால், அப்பாலானது துணியப்படும்.

உ-ம்.

ஆயிரமக்கள் போர் செய்யப் போயினார் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் போயினரென்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், போர் செயலென்னுந் nhழிற்குறிப்பினால் ஆண்பால் துணியப்பட்டது.

பெருந்தேவி மகவீன்ற கட்டிலினருகே நால்வர் மக்களுளர் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் உளர் என்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், ஈனுதலென்னுந் தொழிற்குறிப்பினாற் பெண்பால் துணியப்பட்டது.

இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், உழவென்னுந் தொழிற்குறிப்பினால் எருது துணியப்பட்டது.

இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், கறத்தலென்னுந் தொழிற்குறிப்பினால் பெண்பசு துணியப்பட்டது.

தேர்வு வினாக்கள் - 384. திணை பால் இடங்கட்குப் பொதுவாகிய பெயர் விணைகளின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை உணர்த்துவன யாவை? 385. பெயர் வினை இரண்டும் உயர்திணை யாண், பெண் இரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து, அப்பாலிரண்டனுள் ஒன்று எதனாலே துணியப்படும்?

உயர்திணை தொடர்ந்த அஃறிணை

386. உயர்திணையெழுவாயோடு கிழமைப்பொருள் படத் தொடர்ந்து எழுவாயாக நிற்கும் அஃறினைப் பொருளாதியாறும், உயர்திணை விணையான் முடியும்.

உ-ம் நம்பி பொன்பெரியன்

நம்பி நாடு பெரியன்

நம்பி வாழ்நாள் பெரியன்

நம்பி மூக்குக் கூரியன்

நம்பி குடிமை நல்லன்

நம்பி நடை கடியன் இங்கேஉயர்திணையெழுவாயின் பயனிலையோடு அஃறிணை யெழுவாயும் முடிந்தறிக

மாடு கோடு கூரிது என்னுமிடத்தும், மாடு என்னும் அஃறிணையெழுவாயின் பயனிலையாகிய கூரிது என்னும் வினையோடு அதன்கிழமைப் பொருள்பட எழுவாயாக நின்ற கோடு என்பது முடிதறிக.

தேர்வு வினா - 386. உயர்திணை யெழுவாயோடு கிழமைப் பொருள் படத் தொடர்ந்து, எழுவாயாக நிற்கும் அஃறிணைப் பொருளாதியாறும் எத்திணை வினையான் முடியும்?

கலந்த திணை பால்களுக்கு ஒரு முடிபு

387. இரு திணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்து, ஆண், பெண், என்னும் இருபாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வலுமிடத்தும், சிறப்பினாலும், ஒரு முடிபைப் பெறும்.

உ-ம்.

’’திங்களுஞ் சான்றோரு மொப்பர்’’ என் இருதிணைப் பொருள்கள் கலந்துசிறப்பினால் உயர்திணைமுடிபைப் பெற்றன. சான்நோர் திங்கள் போல மறுத் தாங்கமாட்டாமை இங்கே சிறப்பு.

’’பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தோர் குழவியெனு மிவர்கள்’’ என இரு திணைப் பொருள்கள் கலந்து மிகுதியால் உயர்திணை முடிபைப் பெற்றன. அஃறிணைப் பொருள் ஒன்றேயாகா உயர்திணைப் பொருள் ஐந்தால் இங்கே மிகுதி.

’’மூர்க்கனு முதலையுங் கொண்டது விடா’’ என இருதிணைப்பொருள்கள் கலந்து இழிவினால் அஃறிணை முடிபைப் பெற்றன. மூர்க்க குணமுடை இங்கே இழிவு.

தேவதத்தன் மனைவியுந் தானும் வந்தான் எனப்பாற் பொருள்கள் கலந்து சிறப்பினால் ஆண்பான் முடிவிபைப் பெற்றன. பெண்ணினும் ஆண் உயர்ந்தமை இங்கே சிறப்பு.

தேர்வு வினா- 387. இருதிணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும், ஆண் பெண் என்னும் இரு பாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும் அவை பலவும் எப்படி முடியும்?

திணை பால் வழுவமைதி

388. மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு என்னும் இவைகளுள் ஒரு காரணத்தினால், ஒரு திணைப்பொருள் வேறுதிணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் றேறுபாற் சொல்லாகவுஞ் சொல்லப்படும்.

உ-ம்.

ஒராவினை என்னமை வந்தாள் என்றவிடத்து, உவப்பினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.

பசுங்கிளியார் தூது சென்றார் என்ற விடத்து, உயர்வினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.

’’தம்பொருளெம்ப தம்மக்கள்’’ என்ற விடத்துச் சிறப்பினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

பயனில்லாத சொற்களைச் சொல்லும் ஒருவனை இந்நாய் குரைக்கின்றது என்றவிடத்து, கோபத்தினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

நாங்களுடமை என்றவிடத்து இழிவினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

தன்புதல்வனை என்னம்மை வந்தாள் என்றவிடத்து, மகிழ்ச்சியினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.

ஒருவனை அவர் வந்தார் என்ற விடத்து, உயர்வினால் ஒருமைப்பால் பன்மைப்பாலாகச் சொல்லப்பட்டது.

தேவன் மூவுலகிற்குந் தாய் என்றவிடத்துச் சிறப்பினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.

‘எனைத்துணைய ராயினு மென்னாந் திணைத்துணையுந் தேரான் பிறனில் புகல்’ என்றவிடத்துக் போடத்தினாற் பன்மைப்பால் ஒரமைப்பாலாக சொல்லப்பட்டது.

பெண்வழிச் செல்வானை இவன் பெண் என்ற விடத்து இழிவினால் ஆண்பால் பெண்பாலகச் சொல்லப்பட்டது.

தேர்வு வினா - 388. ஒரு திணைப்பொருள் வேறு திணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் வெறுபாற் பொருளாகவுஞ் சொல்லப்படுமோ?

ஒருமை பன்மை மயக்கம்

389. ஒருமைப்பாலிற் பன்மைச்சொல்லையும், பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையும் ஒரோவிடத்துச் தழுவிச் சொல்லுதலும் உண்டு.

உ-ம்.

வெயிலெல்லா மறைத்தது மேகம். என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைப்பாலில் எலலாமென்னும் பன்மைச் சொற்சேர்த்து சொல்லப்பட்டது.

இரண்டு கண்ணும் சிவந்நது என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைச் சொற்சேர்த்து ச் சொல்லப்பட்டது.

தேர்வு வினா - 389. ஒருமைப்பாலிற் பன்மைச் சொல்லையும் பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையுஞ் சொல்லதல் உண்டோ?

இடவழுவமைதி

390. ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச் செல்லுதலும் உண்டு.

உ-ம்.

சாத்தன்றா யிவை செய்வேனோ என்னுமடத்து, யானெனச் சொல்லல் வேண்டுந் தன்மையிலே சாத்தன்றாயெனப் படர்க்கைச் சொற் சேர்த்து சொல்லப்பட்டது. சாத்தன்றாயாகிய யான் என்பது பொருள்.

’’எம்பியை யீங்கப் பெற்றே னென்னெனக் கரிய தென்றான்.’’ என்னுமிடத்து, நின்னையெனச் சொல்லல்வேண்டு முன்னிலையிலே எம்பியையெனப் படர்க்கைச் சொற் சோர்த்துச் சொல்லப்பட்டது. எம்பியாகிய உன்னை என்பது பொருள்.

யானோ வவனோ யாரிது செய்தார்;

நீயோ வவனோ யாரிது செய்தார்;

நீயோ யானோ யாரிது செய்தார்;

நீயோ வவனோ யானோ யாரிது செய்தார்;

என ஒரிடத்திற் பிறவிடம் விரவி வருதலும் உண்டெனக் கொள்க.

தேர்வு வினா - 390. ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச் செல்லுதலும் உண்டோ?

காலவழுவமைதி

391. முக்காலத்தினுந் தந்தொழில் இடையறாமல் ஒரு தன்மையவாய் நிகழும் பொருள்களின் வினையை நிகழ்காலத்தாற் சொல்லத் தகும்.

உ-ம்.

மலை நிற்கின்றது

தெய்வமிருக்கின்றது

கடவு ளளிக்கின்றார்

மலைக்கு நிற்றலும், தெய்வத்திற்கு இருத்தலும், கடவுட்கு அளித்தலும் முக்காலத்திலும் உள்ளனவாதல் காண்க.

392. விரைவு, மிகுதி, தெளிவு, என்னும் இம்மூன்று காரணங்களாலும், இக்காரணங்கள் இல்லாமலும், ஒருகாலம் வேறொருகாலமாகச் சொல்லவும் படும்.

உ-ம்.

உண்பதற்கிருப்பவனும் உண்கின்றவனும் விரைவிலே தம்மை உடன்கொண்டு போக அழைப்பவனுக்கு, உண்டேன்

உண்டேன்; வந்தேன் வந்தேன் என்ற விடத்து, விரைவு பற்றி எதிர்காலமும் நஜகழ்காலமும், இறந்தகாலமாகச் சொல்லப்பட்டன.

களவு செய்ய நினைப்போன் கையறுப்புண்டான் என்ற விடத்துக், களவு செய்யிற் கையறுப்புண்ணல் மிகுதியாதலால், எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. கையறுப்புண்ணல் தவறிறுந் தவறுமாதலால் மிகுதிணெனப்பட்டது.

எறும்பு முட்டைகொண்டு திட்டையேறின் மழைபெய்தது என்ற விடத்து, எறும்பு முட்டையெடுத்து மேட்டிலேறினால் மழைபெய்தல் தெளிவாதலால், nதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.

யாம் பண்டு விளையாடுவ திச்சோலை; யாம் பண்டு விளையாடுகிறதிச் சோலை இவைகளில், அக்காரணங்கள் இல்லாமலே, இறந்தகாலம், எதிர்காலம் நிகழ்காலம், சொல்லப்பட்டன.

தேர்வு வினாக்கள் - 391. முக்காலத்தினுந் தந்தொழில் இடையறமல் ஒரு தன்மையவாய் நிகழும் பொரள்களின் வினையை எக்காலத்தாற் சொல்லத் தகும்? 392. ஒரு காலம் வேறொரு காலமாகச் சொல்லப்படுமோ?

வினைமுதலல்லனவற்றை வினைமுதல் போலச் சொல்லல்

393. செயப்படுபொருளையும், கருவியையும், இடத்தையும், செயலையும், காலத்தையும், வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும் உண்டு.

உ-ம்.

இம்மாடியான் கொண்டது - செயப்படுபொருள்

இவ்வெழுத்தாணியானெழுதியது - கருவி

இவ்வீடியானிருநடதது - இடம்

இத்தொழில் யான் செய்தது - செயல்

இந்நாள் யான் பிறந்தது - காலம்

தேர்வு வினா - 393. செயப்படுபொருளையுங் கருவியையும் இடத்தையும் செயலையுங் காலத்தையும் வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும் உண்டோ?

அடைமொழி

394. பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறும், இனமுள்ள பொருள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும், அடைமொழிகளாய் வரும்.

அடையினால் அடுக்கப்பட்டது அடைகொளி எனப்படும். அடையெனினும் விசேடணமெனினும் பொருந்தும். அடைகொளியெனினும் விசேடியமெனினும் பொருந்தும்.

(உதாரணம்)

இனமுள்ளன

நெய்க்குடம்

குளநெல்

கார்த்திகை விளக்கு

பூமரம்

செந்தாமரை

ஆடுபாம்பு இனமில்லா

உப்பளம்

ஊர்மன்று

நாளரும்பு

இலைமரம்

செம்போத்து

தோய்தயிர் பொருள்

இடம்

காலம்

சினை

குணம்

தொழில்

தேர்வு வினா - 394. பொருளாதியாறும், இனமுள்ள பொரள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும் அடைமொழிகளாய் வருமோ?

சிறப்புப் பெயர் இயற்பெயர்

395. ஒரு காரணம் பற்றிவருஞ் சிறப்புப்பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற் பெயரினாலும், ஒரு பொருளைச் சொல்லமிடத்துச், சிறப்புப் பெயரை முன்வைத்து இயற்பெயரைப் பின் வைத்தல் சிறப்பாம்.

உ-ம்.

சோழியன் கொற்றன்

பாண்டியன் குழசேகரன்

தமிழ்ப்புலவன் கம்பன்

இனிக் கொற்றன் சோழியன் என இயற்பெயர் முன்னும் வருதல் காண்க. இன்னும் இயற்பெயர் முன் வருமிடத்து, வைத்தியநாத நாவலன் கச்சியப்பப்புலவன் என இறுதி விகாரமாக வருதலுங் காண்க.

தேர்வு வினாக்கள் - 395. ஒரு காரணம் பற்றிவருஞ் சிறப்புப் பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற்பெணரினாலும் ஒரு பொருளைச் சொல்லமிடத்துச், எதை முன்வைத்து எதைப் பின் வைத்தல் சிறப்பாம்? இயற்பெயர் சிறப்புப் பெயருக்கு முன் வருதல் இல்லையோ? இயற்பெயர் முன் வருமிடத்து, அதனிறுதி விகாரமாக வருதலும் உண்டோ?

வினாவிடை

396. வினாவாவது, அறியக்கருதியதை வெளிப்படுத்துவதாம். விடையாவது, வினாவாகிய பொருளை அறிவிப்பதாம்.

வினா, உசா, சுடா, என்பன ஒரு பொருட்சொற்கள். விடை, செப்பு, உத்தரம், இறை என்பன ஒரு பொருட்சொற்கள்.

397. வினாவையும் விடையையும் வழுவாமற் காத்தல் வேண்டும்.

உ-ம்.

உயிரெத்தன்மைத்து வினாவழாநிலை

உயிருணர்தற்றன்மைத்து விடைவழாநிலை

கறக்கின்ற வெருமை

nhலோ சினையோ? வினாவழு

தில்லைக்கு வழியாது?

எனின் சிவப்புக்காளை

முப்பது பணம் என்பது விடைவழு

398. வினா, அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல், என அறுவகைப்படும்.

உ-ம்.

1 ஆசிரியரே இப்பாட்டிற்கு பொருள் யாது? அறியாமை வினா

2 குற்றியோ மகனோ? ஐயவினா

3 மாணாக்கனே, இப்பாட்டிற்குப் பொருள் யாது? அறிவினா

4 பயறுண்டோ செட்டியாரே? கொளல்வினா

5 தம்பிக்காடையில்லையா? கொடைவினா

6 தம்பீ யுண்டாயா? ஏவல்வினா

399. விடை, சுட்டு, எதிர்மறை உடன்பாடு, ஏவல், வினாவெதிர்வினாதல், உற்றுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என, எட்டு வகைப்படும். இவற்றுள் முன்னைய மூன்றுஞ் செவ்வனிறை: பின்னைய ஐந்தும் பயப்பன.

(உதாரணம்)

வினா விடை

1 தில்லைக்கு வழி யாது? இது சுட்டு

2 இது செய்யவா? செய்யேன் எதிர்மறை

3 இது செய்யவா? செய்வேன் உடன்பாடு

4 இது செய்யவா? நீ செய் ஏவல்

5 இது செய்யவா? செய்யேனோ வினாவெதிர் வினாதல்

6 இது செய்யவா? உடம்பு நொந்தது உற்றுரைத்தல்

7 இது செய்யவா? உடம்பு நோம் உறுவது கூறல்

8 இது செய்யவா? மற்றையது செய்வேன் இனமொழி

தேர்வு வினாக்கள் - 396. வினாவாவது யாது? விடையாவது யாது? 397. வினாவையும் விடையையும் எவ்வாறு காத்தல் வேண்டும்? 398. வினா எத்தனை வகைப்படும்? 399. விடை எத்தனை வகைப்படும்?

சுட்டு

400. படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அப்படர்க்கைப் பெயர் முடிக்குஞ் சொற் கொள்ளுமிடத்து அதற்குப்பின் வரும்: முடிக்குஞ் சொற் கொள்ளாவிடத்து அதற்றுப் பின்னு முன்னும் வரும்.

உ-ம்.

(1) நம்பி சந்தான்; அவனுக்குச் சோறிடுக

எருது வந்த் அதற்குப் புல்லிடுக

(2) நம்பியவன்; அவனம்பி

தேர்வு வினா - 400. படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அச் சுட்டுப்பெயர் அப்படர்க்கைப் பெயர்க்கு எவ்விடத்து வரும்?

மரபு

401. மரபாவது, உலக வலக்கிலுஞ் செய்யுள் வழக்கிலுஞ் எப்பொருட்கு எப்பெயர் வழங்கி வருமோ, அப்பொருளை அச் கொல்லாற் கூறுதலாம்.

உ-ம்.

ஆணைமேய்ப்பான் பாகன் குதிரைக்குட்டி

ஆடுமேய்ப்பான் இடையன் பசுக்கன்று

ஆனையிலண்டம் கீரிப்பிள்ளை

ஆட்டுப்புழுக்கை கோழிக்குஞ்சு

யானைக்குட்டி தென்னம்பிள்ளை

யானைக்கன்று மாங்கன்று

தேர்வு வினா - 401. மரபாவது யாது?

முற்றும்மை

402. இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, முற்றும்மைபெற்று வரும்.

உ-ம்.

(1) தமழ் நாட்டு மூவேந்தரும் வந்தார்

(2) ஒளிமுன்னிருள் எங்குமில்லை

தேர்வு வினா - 402. இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, எவ்வாறு வரும்?

ஒரு பொருட் பன்மொழி

403. சொல்லின்பந் தோன்றுதற் பொருட்டு ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டு.

உ-ம்.

நாகிளங்கமுகு மீமிசைஞாயிறு

புனிற்றிளங்கன்று உயர்ந்தோங்கு பெரு வரை

தேர்வு வினா - 403. ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டோ?

அடுக்குச் சொல்

404.ஒரு சொல், விரைவு, வெகுளி, உவகை, அச்சம், துன்பம் முதலிய காரணம்பற்றி இரண்டு முதல் மூன்றளவு அடுக்கிக் கூறப்படும்.

உ-ம்.

1 உண்டேனுண்டேன்; போ போ போ விரைவு

2 எய்யெய்; எறி எறி எறி கோபம்

3 வருக வருக் பொலிக பொலிக பொலிக உவகை

4 பாம்பு பகம்பு; தீத் தீத் தீ அச்சம்

5 உய்யேனுய்யேன்; வாழேன் வாழேன் வாழேன் துன்பம்

அசைநிலைக்கு இரண்டளவும், இசைறிறைக்கு இரண்டு முதல் நான்களவும் அடுக்கிக் கூறப்படும்.

உ-ம்.

1 அன்றேயன்றே அசைநிலை

2 ஏயெயம்பன் மொழிந்தனன் யாயே

நல்குமே நல்குமே நல்குமே நாமகள்

பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ இசைநிலை

சலசல, கலகல, என்பவை முதலியன பிரியாது இரட்டைச் சொல்லாகவே நின்று பொருள் படுதலால், அடுக்கிய சொல்லல்ல.

தேர்வு வினாக்கள் - 404. அடுக்குத் தொடருள், ஒரு சொல்லே அடுக்கிக் கூறப்படும் போது, எவ்வௌ; விடத்தில் எத்தனை எத்தனை அடுக்கிக் கூறப்படும்? இக்காரணங்களின்றி ஒரு சொல் இங்ஙனம் அடுக்கிக் கூறப்படுதல் இல்லையோ? சலசல, கலகல என்பவை முதலியன அடுக்கிய சொல்லல்லவோ?

சொல்லெச்சம்

405. சொல்லெச்சமாவது, வாக்கியத்தில் ஒரு சொல் எஞ்சி நின்று வருவித் துரைக்கப்படுவதாம்.

உ-ம்.

பிறவிப் பொருங்கட னீந்நுவர் நீத்தா

ரிறைவ னடிசேரா தார்

இதிலே சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் எனச் சேர்ந்தார் என்னும் ஒரு சொல் வருவித்துரைக்கப்படுதலாற் சொல்லெச்சம்.

தேர்வு வினா - 405. சொல்லெச்சமாவது யாது?

இசையெச்சம்

406. இசையெச்சமாவது, வாக்கியத்தில் அவ்வவ் இடத்திற்கேற்ப் இரண்டு முதலிய பல சொற்கள் எஞ்சி என்று வருவித்துரைக்கப்படுவதாம்.

உ-ம்.

’’அந்தாமரையன்னமே நின்னையானகன்றாற்றுவனோ’’

இதிலே என்னுயிரினுஞ் சிறந்த நின்னை எனப் பல சொற்கள் வருவித்துரைக்கப்ப

Link to comment
Share on other sites

406. இசையெச்சமாவது, வாக்கியத்தில் அவ்வவ் இடத்திற்கேற்ப் இரண்டு முதலிய பல சொற்கள் எஞ்சி என்று வருவித்துரைக்கப்படுவதாம்.

உ-ம்.

’’அந்தாமரையன்னமே நின்னையானகன்றாற்றுவனோ’’

இதிலே என்னுயிரினுஞ் சிறந்த நின்னை எனப் பல சொற்கள் வருவித்துரைக்கப்படுதலால் இசையெச்சம்.

தேர்வு வினா - 406. இசையெச்சமாவது யாது?

ஒழியியல் முற்றிற்று

தொடர்மொழியதிகாரம் முற்றுப் பெற்றது.

பகுபத முடிபு

பெயர்ப்பகுபதங்கள்

அவன் என்னுஞ் சுட்டுப்பொருட் பெயர்ப்பகுபதம். ஆ என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, இடையில் வகர மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

தமன் என்னுங் கிளைப்பொருட் பெயர்ப் பகுபதம், தாம் என்னம் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதி குறுகி, இறுகி மகர மெய்யின் ஆமல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

பொன்னன் என்னும் பொருட்பெயர்ப் பகுபதம் பொன் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று பகுதியீற்று னகரமெய் இரட்டித்து இரட்டித்த னகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

நிலத்தன் என்னும் இடப்பெயர்ப் பகுபதம், நிலம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே அத்துச்சாரியையும் பெற்று பகுதியீற்று மகரமெய்யுஞ் சாரியையின் முதல் அகரமும் ஈற்று உகரமுங் கெட்டு, உகரங்கெட நின்ற மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேஙி முடிந்தது.

பிரபவன் என்னங் காலப்பெயர்ப்பகுபதம், பிரபவம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால், விகுதியும் பெற்று, பகுதியீந்நு அம் குறைந்து வகர மெய்யீராக நின்று, அவ்வகர மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

திணிதொளன் என்னுஞ் சினைப்பெயர்ப் பகுபதம்,திணிதோன் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று ளகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

நல்லன் என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், நன்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மைவிகுதி கெட்ட நல்ல என நின்று, லகர மெய் இரட்டித்து, இரட்டித்த லகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

கரியன் என்னுங் குணப்பெயர் பகுபதம், கருமை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண் பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மை விகுதி கெட்டு, இடை உகரம் இகரமாகத் திரிந்து, யகரவுடம்படுமெய் தோன்றி, அம் மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

செய்யன் என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், செம்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மை விகுதி கெட்டு, இடை நின்ற மகர மெய் யகரமெய்யாய் திரிந்து, அது இரட்டித்து, இரட்டித்த மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

ஓதுவான் என்னுந் தொழிற்பெயர்ப் பகுபதம், ஓது என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே வகரவிடைநிலையும் பெற்று, இடைநிலை மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது. ஓதுலுடையவன் என்பது பொருள்.

w ஓதுவான் என்பது எதிர்காலத் தெரிநிலைமுற்றுப் பகுபதமாயின்: ஓது பகுதி: ஆன் விகுதி: வகரமெய் எதிர்காலவிடைநிலை. எதிர்காலவினையெச்சப்பகுபதமா

Link to comment
Share on other sites

மிக நீளமாய் - செய்திட்டிங்க - நவம்!

கொஞ்சம் தலை சுற்றுறது இல்ல - நிறைய....

தேவைபட்டது .........

ழ ள வை எந்த இடத்தில் பாவிக்க என்பது பற்றி சுருக்கமாக ..........

அதுக்கு - ஒரு தலைப்பை ஆரம்பியுங்க .........

உங்க சொந்த ஆக்கமா மட்டுமில்லாம...

நிறைய பேருக்கு உதவுவதாகவும் இருக்கும் இல்லையா?

உதாரணத்துக்கு இப்பிடி :

வாழ்- வசி

வாள் -போர்க்கருவி

கேள்- செவிமடு

கீழ்- அடுத்த நிலை

மகிழ்ச்சி- சந்தோசம்

மகள்- புத்திரி

உழவு- விவசாயம்

உளவு- புலனாய்வு

இப்பிடி...

செய்தால் - நன்றி !

இப்பிடி............

எல்லாரும் அறிந்ததை- ஒரு தலைப்பில்

பகிர்ந்தால்...

எல்லாருக்கும் - பிரயோசனமா இருக்காதா?

செய்தால் - நன்றி! 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.