Jump to content

அகதிகள்


vasee

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேரூந்தில் அவனுக்கு நேர் எதிரே அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த அந்த வெள்ளையின மூதாட்டி பார்வையில் ஓர் அருவருப்பு தெரிந்தது.அந்த பார்வயை தவிர்க்க அவன் இடது புறமாக திரும்பி யன்னல் ஊடாக வெளியே பார்வையை ஒட விடுகிறான்.

 

மழை வெளியே பெய்து கொண்டிருந்து வானம் இருட்டிக்கிடந்தது யன்னல் கண்ணாடியில் இன்னமும் அந்த வெள்ளையின மூதாட்டி இவனை பார்த்து கொண்டிருப்பது தெரிந்தது. அந்த விம்பத்தின் விழிகளைப்பார்க்க சக்தியற்றவனாக் பார்வையை தாழ்த்திக்கொள்கிறான்.

தனது கைத்தொலைபேசியை எடுத்து நோட்டம் விட்டான் அதில் கடைசியாக வந்த அழைப்பு கரன் என்றிருந்தது,அழைப்பு பத்து நிமிடங்களுக்கு முன்னர்தான் வந்திருந்தது.உரையாடலை நினைவுக்கு கொண்டுவர முயன்றான்.

பொதுவாக பதினேழு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக உறங்காமல் விழித்திருந்தால் மது போதைக்கு ஆளானவர்களின் நிலைக்கு சமமாக மூளை செயற்படும் என கேள்விப்பட்டிருக்கின்றான்.தொடர்ச்சியாக இரண்டு வேலைகள் சனி காலையில் இரண்டாவது வேலை முடிந்திருந்தது,இன்று நாள் முளுவதும் ஓய்வு ஞாயிறு இரவுதான் வேலை மீண்டும் ஆரம்பம் , தொடர்ந்து வேலை மீண்டும் அடுத்த சனிகாலை வரை.

இன்னும் இரண்டு நிறுத்தங்களில் அவனது இடம் வந்துவிடும் தூங்காமல் இருக்க முயற்சித்தான் அதற்குள் மீண்டும் கரனிடமிருந்து அழைப்பு வந்திருந்து. கரன் அவுஸ்திரேலியாவில் கண்க்காய்வாளராக இருப்பவர் மனதில் பட்ட எதையும் முகத்திற்கு நேராக சொல்லிவிடுவார் இவனது நண்பன் மூலமாக அறிமுகமானவர் முதல் சந்திப்பிலேயே கடுமையாக நடந்து கொண்டார்.இவர்களது அறிமுகம் நல விசாரணையுடன் ஆரம்பிக்கவில்லை மாறாக கரன் இவனைப்பார்த்து ஏண்டா நீங்களெல்லாம் அகதிகளாக இந்த நாட்டிற்கு வாறியள் உங்களால உள்ள சிறிலங்கன்ஸ் எல்லாரையும் உங்கள மாதிரியெல்லோ நினைக்கிறாங்கள் உங்களால எங்களையும் அகதிகளாக கேவலமாக பார்க்கிறங்கள். இவனிடம் அதற்கு சரியான பதிலிருக்கவில்லை அண்ணை ஊரிலை பிரச்சினை அதால என்று இழுக்கவும் கரன் சாம்யாட தொடங்கவும் சரியாக இருந்தத்து

ஒரு மாதிரி அவனை சமாதானப்படுத்தவே பெரும்பாடாயிற்று சரி வேற நாட்டிற்கு போறதுதானே ஏன் இங்க வந்தனி என்று கேட்டான் அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. ஆரம்ப அறிமுகத்திலிருந்தே பந்து கரன் பக்கமேயிருந்தது கரனது அடுத்த கேள்வி அவன் எதிர்பார்த்ததுதான் முகாமில் இருந்து வெளியே வந்தது முதல் அந்த கேள்வி அவனை துரத்துகிறது ஆனால் அதற்கு பதில் சொல்ல விருப்பமிருக்கவில்லை காதில் வாங்காமல் நின்றவனிடம் மீண்டும் அதிகார தொனியுடன் என்ன படிச்சிருக்கை இவன் நிமிர்ந்து கரனின் கண்களைப்பார்த்தான் ஆதில் ஏளனம் தெரிந்தது அவனுக்கு தெரியும் இவனிடம் பறைசாற்ற எதுவுமில்லை என்று நிலமையின் இறுக்கத்தை குறைக்க அதற்கு நகைச்சுவையாக பதிலளித்தான் குமுதம் ஆனந்த விகடன் அவன் முடிக்க முன்னர் இங்க அவுஸ்திரேலியாவில் படிச்சாக்கள்தான் இருக்கினம் மற்ற நாடுகள் மாதிரியில்லை,இவன் நகைச்சுவை கரனது ஆளுமையை அடித்திருந்திருக்கும் அதனாலேயே அவன் சீற்றமாக அதை குடிவரவு அதிகாரி மாதிரி சொல்லி முடித்தான்.

இப்பொழுது அவனுக்க்கு புரிந்தது ஏன் இந்த நாட்டிற்குள் இவன் வந்திருக்ககூடாது என்ற அவனது ஆதங்கம்.அவர்களது அறிமுகம் கேள்வி பதிலாக தொடர்ந்தது கரனது சீற்றம் அவன் கண்களில் தெரித்த காரணமற்ற வெறுப்பு எல்லாம் அவனை சிறிது நிலகுலைய வைத்தது கொப்பர் என்ன விவசாயமோ கேள்வி பறந்தது கரனிடமிருந்து இல்லை பல தொழில் செய்தவர் எல்லாம் பிரச்சனையால நஸ்டம் இப்ப சும்மா இருக்கிறார்

கொஞ்சம் இடைவெளிவிட்டு கரன் கேDகாமலேயே அண்ணை நாங்கள் உயர்ந்த சாதி இல்லை (?) சாதி என்றான் இப்ப கரன் மெதுவக இயல்புக்கு வந்தான் முரட்டு குதிரை ஒன்றை அடக்கிய கர்வம் கண்ணில் தெரிந்தது,

தொலைபேசியில் கரனின் குரல் இரைந்தது இவன் பழைய நினவுகளிலிருந்து மீண்டான் கரனது முந்தய அழைப்புக்கு உறக்கத்திலிருந்து அலறி அடித்து கொண்டு ஏதொ பதிலளித்திருக்கிறான் என்பது புரிந்தது. கரன் எதற்காக அழைத்திருந்தான் என்பதும் புரிந்தது

முதல் சந்திப்பின் பின் இவனை கரன் தனது காரில் ஏற்றி அவனை அவனது இடத்தில் இறக்கிவிடுவதாக அழைத்து சென்றான் போகும் வழியில் தனது தொழில் சம்பந்தமாக ஒருவரை சந்திக்க வேண்டும் என்று கூறி இவனது இருப்பிடத்தை தாண்டி நகரை நோக்கி வண்டி வேகம் எடுத்தது,போகும் வழியெல்லம் எவ்வாறு வெள்ளையர்களுடன் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதையும் கரன் சொல்லிக்கொண்டே வந்ததிலிருந்து புரிந்து கொண்டான் சந்திக்கப்போவது ஒரு வெள்ளையினத்தவர் என்று,

அவள் பெயர் அலிஸ் என்பதை கரன் அறிமுக வணக்கத்தில் புரிந்து கொண்டான் கரன் கைகளை குலுக்க முற்பட்ட போது அவள் செய்கை இவன் கவனத்தை திசை திருப்பியது கரனது மேலாதிக்க கை குலுக்கலை தவிர்க்க தனது வலது காலை முன்வைத்து கரனது அந்தரங்க வளையத்திற்குள் நுழைந்து மேலாதிக்க நிலையில் கை குலுக்கினாள்,

அவுஸ்திரேலியா வரும் எம்மவர்களுக்கு எவ்வாறு கணக்கியல் மிகைப்படுத்தப்பட்ட கல்வியோ அதே போல் மேலைத்தேயத்தவர்களுக்கு உளவியல் கல்வி அலிஸ் உளவியல் படித்தவள் என்பது புரிந்தது இப்போது இவனது முறை கை குலுக்கல் , இவனுக்கு தெரியும் இவனை பறை சாற்ற ஒரு சந்தர்ப்பம் அவள் வலது கால் எடுத்து இவனது அந்தரங்க வளையத்திற்கு நுழையும் போது இவன் வலது கால் ஒரு தப்படி முன்னேறினால் தானாகவே இவன் கை மேலாதிக்க நிலையில் கை குலுக்கலாம் ஆனால் தோள்களை விறைப்பின்றி உள்ளங்கை வானம் பார்க்க அவளை மேலாதிக்கம் செலுத்த அனுமதிதவாறே வணக்கம் அலிஸ் என்றன் அவள் பொங்கி வந்த சிரிப்பை அடக்க முயற்சிக்க இவனாலும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தான் அவள் இவனது கையை நிமிர்த்தி நேராக வைத்து இருவரது அளுமையையும் சரிசமமாக்கி விட்டு என்றைக்குமே உன்னை தாழ்த்தாதே என்று அறிவுரை சொன்னாள்.

அந்த சந்திப்பின் பின் காரில் வரும்போது கரன் மவுனமாகவே வந்தான் திடீரென கரன் அலிஸ் இப்பவும் அகதி முகாமில் வெலை செய்கிறாளா உனக்கெப்படி அவளை தெரியும் அவள் இரண்டு வருடத்திற்கு முன்னே அந்த வேலையை விட்டுவிட்டேன் என்று சொன்னாளே?

முற்றும்.

Link to comment
Share on other sites

வாசித்தவரையில் நன்றாக இருந்தது. இதற்குமேலும் வருமா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை எனக்கு கதை சொல்ல வராது என்பது எனக்கு தெரியும் ஆனால் எனது கருத்தை சொல்லும் ஒரு முயற்சிதான் இது. நன்றி இசை உங்கள் கருத்திற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதி முடியுங்கள் வசி. நீங்களாகவே எழுத வராது என்று முடிவு செய்யாது எழுத முயற்சி செய்யுங்கள். முதலில் மேலே போட்ட மொக்கை என்பதை மாற்றி நல்ல ஒரு பெயரை வையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா உங்கள் கருத்திற்கு,கதை சொல்லும் விதத்தில் உள்ள குறைபாடே கதையின் முடிவை புரிந்து கொள்ள முடியாது இருக்கிறது என் நினைக்கிறேன் கரனும் ஓர் முன்னாள் அகதி.

Link to comment
Share on other sites

vasee உங்கள் உணர்வை சொல்வதற்கு தடைகள் எதனையும் கவனிக்கக்கூடாது. அதுவும் இலக்கிய வடிவமென ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் அமைய வேண்டுமென்று எதிர்பார்க்காமல் எழுதுங்கள். நீங்கள் எழுதிய அகதிகள் என்ற இக்கதையானது கதைக்கான சகல கட்டுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கதையை வாசித்து முடிக்கிற போது கைதேர்ந்த ஒரு கதை சொல்லி உங்கள் கதையில் தன்னை பதியமிட்டுள்ளான். 

 
ஒரு சின்ன வேண்டுகோள் :- பந்தி பிரித்து விடுங்கள். வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்.
Link to comment
Share on other sites

இல்லை எனக்கு கதை சொல்ல வராது என்பது எனக்கு தெரியும் ஆனால் எனது கருத்தை சொல்லும் ஒரு முயற்சிதான் இது. நன்றி இசை உங்கள் கருத்திற்கு

உங்கள் கருத்துக்கள், பின்னூட்டங்களில் வரும் சொல்லாடல்களைப் பார்க்கும்போது "எனக்கு கதை சொல்ல வராது என்பது எனக்கு தெரியும்" என்று நீங்கள் சொல்வது... நம்புவதற்கில்லை. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாந்தி அக்கா,பான்ச் பல த்டவை பந்தி பிரிக்க முயன்றேன் முடியவில்லை மாற்ற, செய்த பின் மீண்டும் இவ்வாறே வருகிறது.எமது இனம் மட்டுமே ஒற்றுமையில் வேற்றுமை பார்க்கும் நான் இந்திய தமிழன், நான் இலங்கைத்தமிழன், நான் இன்ன சாதி, நான் இன்ன அணி இப்படியே போகும் இதற்கு நானும் விதி விலக்கல்ல ,அதன் பிரதிபலிப்பே இந்த கதையை எழுத தூண்டியது.அதனை இலை மறை காயாக சொல்ல வேண்டும் அது வாசிப்பவர்களை உறுதியாக சென்றடைய கூடியவாறு கதை சொல்லப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் வசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி.

Link to comment
Share on other sites

ஆரம்பமமே மிக அருமையாக இருக்கு, பல புதிய விடயங்கள் சொல்லி இருக்கின்றீர்கள் .

பந்தி விட்டு எழுதுங்கள் வாசிக்க இலகுவாக இருக்கும் . தொடருங்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அர்ஜூன் அண்ணா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.