Jump to content

இந்திய அரசாங்கம் புலிகளுக்கு உதவும் சாத்தியம் உருவாகிறது


Recommended Posts

இந்திய அரசாங்கம் புலிகளுக்கு உதவும் சாத்தியம் உருவாகிறது

[09 - September - 2006] [Font Size - A - A - A]

இந்திய அரசு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடு உடையது என்பது உண்மைதான். ஆயினும், இதனைவிட இந்தியா, பாகிஸ்தானுக்கு விரோதமாக உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இந்தியாவுக்குப் பெரும் சவாலாகவும் முக்கிய விரோதியாகவும் இருந்து வருவது பாகிஸ்தானே. இந்தியா புலிகள் இயக்கத்துடன் ஒரு யுத்தத்தில் முன்னர் ஈடுபட்டிருந்தாலும் பாகிஸ்தானுடன் மூன்று பெரிய யுத்தங்களைச் செய்த நாடாகும். இந்திய அரசு, இந்தியாவின் தெற்கு வாசலில் ஒரு தனியான தமிழ் நாடு.

(குறிப்பாக, புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில்) உருவாகுவதை விரும்பாது விட்டாலும், அதைவிட, விரோத நாடாகிய பாகிஸ்தான் ஸ்ரீ லங்காவில் செல்வாக்குப் பெறுவதை இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது.

இதேவேளை, அண்மையில் கொழும்பு - பாகிஸ்தான் தூதரகம் அருகே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் புலிகள் இயக்கத்தின் வேலை இல்லையென்றும் இந்திய "றோ" அமைப்பினரே அந்தத் தாக்குதலை மேற்கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர் வாலி மொஹமட் அறிவித்திருப்பது துரதிர்ஷ்டமான ஒரு சம்பவமாக இருப்பதற்குக் காரணம் மேற்படி இந்தியா பாகிஸ்தான் விரோத நிலைப்பாடேயாகும். ஸ்ரீ லங்காவும் பாகிஸ்தானுக்குமிடையே ஏற்பட்டுள்ள அதிகரித்துவரும் நெருக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்ற இந்தியாவின் தலைவர்கள், அதிகாரிகள், புத்திஜீவிகள் கொண்டுள்ள அபிப்பிராயம் மேற்படி பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் உறுதிப்படவே செய்யும்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக இருக்கும்வரை, இந்திய அரசு புலிகள் இயக்கத்தினருக்கு வெளிப்படையான முறையில் உதவி செய்யப்போவதில்லை. ஆயினும், பாகிஸ்தானும் இந்தியாவும் பரஸ்பரம் விரோத நாடுகள் என்ற வகையில் ஸ்ரீ லங்காவில் இந்தியாவுக்கு விரோதமான முறையில் பாகிஸ்தான் தலையிட்டுள்ளது என்ற புதுடில்லியின் இந்திய மத்திய அரசு தரப்பில் நிலவும் அபிப்பிராயம் தற்போது அது ஒரு வல்லரசு ரீதியிலான ஏகாதிபத்திய அபிப்பிராயமாக மாறிவரும் நிலை மேற்படி பாகிஸ்தான் தூதரக அறிக்கயைால் ஏற்படக்கூடும்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழ்நாடு மாநிலம் மூலமாக உதவிகள் கிடைப்பதற்கு இடம்கொடுத்து இந்திய மத்திய அரசு பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது புலிகள் இயக்கத்தினர் தேவைப்படும் முக்கிய ஆயுதங்களைக் கடல்மார்க்கமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இரு நாடுகளுக்குமிடையேயுள்ள கடல்பிராந்தியங்களில் இந்திய கடற்படையினரின் புலிகளுக்குப் பாதகமான நடவடிக்கைகளை விலக்கிக் கொள்வதன் மூலம் புலிகள் தேவைப்படும் ஆயுதங்கள், உதவிகளைப் பெற்று பலமடைவதற்கு இந்திய அரசு இடமளிக்கக்கூடும். - லங்காதீப விமர்சனம்: 6.9.2006 -

http://www.thinakkural.com/news/2006/9/9/s...s_page10348.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவையின்ர உதவியை யார் கேட்டது? உவத்திரம் செய்யாமல் இருங்கோ எண்டுதான் கேட்கிறோம்.. அதுவே இந்தியா செய்கின்ற பெரிய புண்ணியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தன்னுடைய மோட்டுச் சனத்திற்கு எழுதிய மொக்கனுடைய பிரசாரக் கதையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ இவையின்ர ஆயுதங்களை எதிர்பார்த்துத்தான் தலமை இருக்கிறமாதிரி! கதையும் ஆட்களும்..

35 வருடம் கழிஞ்சிட்டுது.. போராட்டம் எங்கயோ போயிட்டுது.. இப்பபோய் ஆயுதம் தரினமாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு நாடும் தன் நாட்டிற்காகத் தான் எதையுமே செய்யத் துணியுமே தவிர, மனரீசமாக உதவிகள் என்பது, அந்த நாட்டு மக்களில் இருந்து வருவதே!

எம் தாயகத்தை நாம் தான் போராடி வெற்றி பெற வேண்டும் என்பது தான் முடிவு. ஆனால், வருகின்ற எந்த ஆதரவையும் வரவேற்கத் தான் வேணும்

Link to comment
Share on other sites

நானும் தூயவனின் கருத்துடன் உடன்படுகிறேன்.

நாம் தனித்துச் சாதிப்போம் என்று மார்தட்டுவது இலகு. ஆனால் செயல்முறையில் எத்தனை கடினம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் எங்கள் களத்தில் கூடத் தனித்துச் சாதிப்போம் என்று மார்தட்டும் பலர் வன்னியிலே குழந்தைகள் மீது குண்டுபோட்டதுமே ஐயோ சர்வதேசமே கண்டுகொள்ளவில்லையே என்று கூப்பாடு போடுகின்றனர்.

எனவே கிடைக்கின்ற உதவிகள் அத்தனையும் எங்களுக்கு இப்பொழுது தேவை.

அதற்காக இந்தியா உதவிகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது என்று நான் நம்பவில்லை. சிலவேளைகளில் அள்ளிக் கொடுப்பதைப் போலச் சிங்களத்திற்குப் புூச்சாண்டி காட்டலாம்.

Link to comment
Share on other sites

எதிரிக்கு எதிரி நன்பன் என்றரீதியில் இந்தியா உதவ முன் வரலாம். ஆயினும் ரோவிற்குள் இருக்கும் பார்ப்பாணீயப் படைகள் உள்ளவரை அது சாத்தியமாகுமா என்பது கேள்வி. எது எப்படியாயினும் இந்தியா எம் போராட்டங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமலிருந்தால் அதுவே தமிழீழமக்களுக்கு அவர்கள் செய்யும் பேருதவீ. ஆயுதத்;தைக் கொடுத்து விட்டு இப்படிச் செய் அப்படிச் செய்யாதே என்ற முனங்கல்களுக்கு அடிபணியாமல் எம் உறுதியால் உதவியால் எம் போராட்டத்தை வெல்வதே சிறப்பாகும்.

ஈழத்திலிருந்து

ஐhனா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைக்கு, "லங்காதீப"வின் அதியுயர் கற்பனையால், நாலு தமிழர்கள் சந்தோஸம் அடைந்திருக்கிறார்கள்!!!... நன்றிகள் லங்காதீப!!! :wink:

Link to comment
Share on other sites

எதிரிக்கு எதிரி நன்பன் என்றரீதியில் இந்தியா உதவ முன் வரலாம்.

"லங்கா தீப" வின் கட்டுரைக்கு (கற்பனைக்கு) நாங்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லையென்றாலும் இந்தியா இனி நமக்கு உதவ வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இங்கு ஆபத்து என்னவென்றால் இது இந்தியாவும் பாகிஸ்தானும் தமது பலத்தை பரீட்சிக்கும் தளமாக இலங்கை தீவை மாற்றவே வழி கோலும். இவ்விரு நாடுகளும் தமது சண்டயை எம்மூலமாக அரங்கேற்ற தொடங்கினால் விளைவு: யுத்தம் இன்னும் பெரிதாகி இழப்புகள் இரு பக்கமும் அதிகமாகும்.

பிறகு இரு பகுதியும் நினைத்தால் கூட விடுபடுவது கடினம்.

Link to comment
Share on other sites

இந்தியா மீது தென்னிலங்கையில் சீற்றம் அதிகரித்து வருவதையே லங்காதீபவின் கட்டுரை உணர்த்துகிறது. நம்மைப் பொறுத்தவரை எமது விடுதலையை நாம் தான் போராடிப் பெற முடியும் ஆனால் அதன் பின்னரான சர்வதேசத் தொடர்புகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இந்தியாவின் அனுசரணை மிக அவசியம்.பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் இன்றைய உலக ஒழுக்கின் பிரகாரம் இந்தியாவின் நிலைப்பாட்டையே மற்றைய சர்வதேச நாடுகள் பெரும்பான்மையாக அங்கீகரிக்கும், பின் பற்றும்.ஆகவே இது நம்மைபொறுத்தவரை மிக நல்ல சகுனம், தொடர்ந்தும் சிங்கள தேசம் இந்தியா மீது பகை கொண்டு எழுவது எமக்கு அவசியம் ஆகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The only private ship was the South Indian cargo ship, "City of Liverpool," that was unloading cement in Point Pedro port during the daytime and stays anchored in KKS during the nights in the recent days http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19510

இதன் அர்த்தம் என்ன? உண்மையில் சிமெந்து இறக்கிறதா? ஏன் இந்த இந்திய கப்பல் இரவில் KKSல்? இந்தியாவை ஒருமுறை நம்பினோம், நம்பிக் கெட்டோம்! இம்முறையும் யாருக்காவது தமிழகத்தில் ஒரு சிலரைத்தவிர மற்றைய முந்திய, இன்றைய ஆளும் தரப்பினரும் புலி எதிர்ப்பாளராகவே இருக்கின்றனர். எந்த நிலையிலும் இந்தியா எங்களுக்கு உதவப் போவதில்லை. தமிழகத்தின் எதிர்ப்பினாலேயே, சிங்களத்திற்கு நேரடியாக உதவமுடியாமலிருக்கிறதே ஒழிய, மற்றப்படி வடக்கிலுள்ளவர்கள் எமக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். ஆனால், பலமான தமிழீழம், இந்தியப்பாதுகாப்பிற்கு அனுசரனையாக இருக்கும் என்பதை எப்போதுதான் இந்தியா உணரப்போகிறதோ தெரியாது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.