Jump to content

சென்னையில் 'வலைப்பூக்கள்' குறித்த மாநாடு


Recommended Posts

சென்னையில் 'வலைப்பூக்கள்' குறித்த மாநாடு

20060909165652bolg-conf_203.jpg

வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் சென்னையில் தான் அதிகம் என கூறப்படுகிறது

இணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழக தலைநகர் சென்னையில் இன்று சனிக்கிழமை தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று துவங்கியது.

அதாவது, தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

பத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்பிரதிகள் நடத்தப்பட்டன. அதாவது தனிமனிதர் ஒருவர் தனக்கு பிடித்த விடயங்கள் பற்றிய தனது கருத்துக்களை கையால் எழுதி தனிச்சுற்றுக்கு விடுவது கையெழுத்துப்பிரதியாக விளங்கிவந்தது. ஏறக்குறைய அதேபோன்றதொரு விடயம் தான் இணையத்தில் வலைப்பதிவுகளாக உருவெடுத்திருக்கிறது.

அதாவது, இணையத்தில் உலவத்தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. பேசுவதில், எழுதுவதில் மற்றவர்களோடு கருத்துப்பரிமாறுவதில் ஆர்வம் இருக்கும் யாரும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம்.

ஒருவகையில் இந்த வலைப்பதிவுகள், தனிமனிதர்களின் இணையதள தகவல் மற்றும் கருத்துப்பரிமாற்றத்திற்கான எதிர்கால தனிமனித ஊடகங்களாக உருவெடுத்து வருகின்றன.

இந்திய அளவில் இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் அதிகம்பேர் சென்னையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியான வலைப்பதிவாளர்களின் தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று இன்று சனிக்கிழமை சென்னையில் துவங்கியுள்ளது.

banner.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.