Jump to content

புதுமையும் பித்தனும் குழந்தையும்


Recommended Posts

xputhai_1861536h.jpg.pagespeed.ic.XSp6ed

 

சுமார் நூறு சிறுகதைகளைத் தமிழுக்குக் கொடையாக வழங்கிச் சென்றிருக்கும் புதுமைப்பித்தன் என்ற சொ. விருத்தாசலம் தன் காலத்தின் மிக முக்கியமான அறிவுஜீவிகளுள் ஒருவராக விளங்கியவர். உலகச் சிறுகதைகளைத் தமிழாக்கித் தந்தவர். டி.எஸ். சொக்கலிங்கத்துடன் சேர்ந்து தினமணியிலும் தினசரியிலும் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அவர், திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வம்காட்டினார்.

குடும்பம், சமூகம், நாட்டு நடப்பு இவற்றிலிருந்து விலகிய தனிமனிதனின் அக உலகப் பயணங்களில் சஞ்சாரங்களில், வீணை மீட்டல்போல, தியான நிலைகள்போலச் சிறுகதைகளை வடித்திருப்பவர் மௌனி. மௌனியைச் சிறுகதையின் திருமூலர் என்று பாராட்டிய புதுமைப்பித்தன், சமூக நிகழ்வுப் போக்குகளைப் பரிசீலிப்பவராக அவலங்கள் கண்டு சீற்றம்கொள்பவராக, தனிமனிதனின் சிக்கல்களை - முரண்பாடுகளை வெளிப்படுத்துபவராக, நாகரிகங்களை, பண்பாடுகளை மதிப்பீடு செய்பவராக, இதிகாசக் கதைகளை மறுஉருவாக்கம் செய்பவராகச் சிறுகதைகள் எழுதினார். யதார்த்தப் போக்கில், திருநெல்வேலி வட்டார நிலவியல் பின்புலம் அல்லது சென்னையின் நகர நெருக்கடியுடன் வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கும்போது ஒரு கலைஞனிடமிருந்து சீறும் தார்மீகக் கோபத்தை அவர் கச்சிதமாக வெளிப்படுத்தினார்.

வறுமை நெருக்கடியால் அடித்தட்டு மக்கள் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்குப் புலம்பெயர்ந்தது அல்லது கிறித்தவ மதத்துக்கு மாறியது அல்லது பிச்சைக்காரர்களாகத் திரிய நேர்ந்தது போன்றவற்றையெல்லாம் தன் கதைகளில் பதிவுசெய்தார். நடுத்தரக் குடும்பங்களின் பிரச்சினைகள், ஆண்-பெண் உறவில் விரிசல்கள், சாதிய மோதல்கள் போன்றவற்றைத் தன் கதைகளில் அலசிப்பார்த்தார். பண்பாட்டின் போக்கில் ஏற்பட்ட சரிவுகளையும் மனிதப் பலவீனங்களையும் அவர் பரிகசித்தார்.

குழந்தைகளின் உலகம்…

புதுமைப்பித்தன் கதைகளில் உள்ள பல்வேறு அம்சங்களைப் பற்றி நிறைய எழுதியாயிற்று. புதுமைப்பித்தனின் கதைகளில் குழந்தைகளை மையமாக வைத்து அல்லது குழந்தைகள் தொடர்பாக உருவாகும் சூழல்களில், அமானுஷ்யமான அதிசயமான விவரிப்புகள் கூடிவந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே கொஞ்சம் பேசலாம் என்று எண்ணுகிறேன்.

இரவெல்லாம் மழை பெய்து - இதமாகப் புலர்ந்த விடியலில், சிரிப்புடன் தொட்டிலிலுள்ள குழந்தையைப் பார்த்துக் கனிவுகொள்ளும் மனைவியைப் பற்றி ‘புதிய ஒளி’ கதையில் எழுதிவிட்டு, புதுமைப்பித்தன் இப்படிக் குறிப்பிடுகிறார் : “அன்று விடியற்காலம். கீழ்த்திசையிலே தாயின் ஆதரவு, குழந்தையின் கனவு இரண்டும் கலந்த வான் ஒளி. என் மனதில் ஒரு குதூஹலம்....”

பிச்சை பெறக் காத்திருக்கும் ஒருத்தி, பாலருந்தும் கைக்குழந்தையின் ஆனந்தத்தில் தெய்வத்தையோ லட்சியத்தையோ தரிசித்து நிற்பவளென பிரமித்துப் போகிறாள் ‘நம்பிக்கை’ கதையில். புதுமைப்பித்தனின் வரிகள் இப்படித் தொடர்கின்றன: “அந்தத் தாயும் குழந்தையும்... அவள் நீட்டிய கை... அதற்குத்தான் என்ன நம்பிக்கை. அந்தக் கண்கள் ஒளியிழந்துதான் இருக்கின்றன. அதில் என்ன நம்பிக்கை! சோர்வினாலா?... வேறு கதியில்லாமலா... இருந்தாலும் நம்பிக்கைதானே... அந்தப் பிரமையாவது இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிடித்துக்கொள்ள வேறு என்ன இருக்கிறது?”

கடவுளைக் கேள்வி கேட்கும் குழந்தை

“மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.” இருவருக்குமிடையே போட்டி. யார் வென்றவர் என்று சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் ஒரு சாமியாருக்குப் படித்துறையில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுமி சீடையைக் கொறித்துக்கொண்டிருக்கும்போது, சூரியக் கதிர்கள் பட்டு அவளுடைய கால்காப்புகள் ஒளிர்வதை ‘சாமியாரும் குழந்தையும் சீடையும்’ கதையில் புதுமைப்பித்தன் அபூர்வ வாசகமாகத் தருகிறார் - ‘சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிருந்து வெளிவரும்போது ஓய்ந்துபோன சூரிய கிரணம் அதன்மேல் கண்சிமிட்டும். அடுத்த நிமிஷம் கிரணத்துக்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்றுவிடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் தூளிக்குத் தவம் கிடந்துதான் ஆக வேண்டும்.”

‘மனக்குகை ஓவியங்கள்’ சிறுகதையில் வரம் தருவதற்குத் தன்னை நாடிவரும் விஷ்ணுவைப் பொருட்படுத்தாமல் தவமிருக்க விரைகிறது ஒரு குழந்தை; இன்னொரு நிகழ்வில், குழந்தை நசிகேதன், மரணத்தின் புதிரை அவிழ்த்துக்காட்டுமாறு எமனை நச்சரித்து, சஞ்சலத்துக்குள்ளாக்குகிறான். அழிக்கும் தன் திறனில் பெருமிதம் கொண்டிருக்கும் சிவனுடைய அகந்தையைத் தவிடுபொடியாக்கிவிடுகிறது ஒரு குழந்தை:

“உமக்கு எல்லாவற்றையும் அழிக்க முடியும், உம்மை அழித்துக்கொள்ள முடியுமா? நீர் மட்டும் மிஞ்சுவதுதான் சூன்யம் என்று அர்த்தமா? உம்மையும் அழித்துக்கொள்ளும்படி நீர் தொழிலை நன்றாகக் கற்றுவந்த பின்பு நெஞ்சைத் தட்டிப்பார்த்துக்கொள்ளும்.”

மகாமசானம்

‘மகாமசானம்’ கதையில் கிழட்டு முஸ்லிம் பிச்சைக்காரர் ஒருவர் இறந்துகொண்டிருக்கும் தருணங்கள். அவருக்குத் துணையாக இன்னொரு பிச்சைக்காரர். நடைமேடையில் நிகழும் இந்த அவலத்தை ஏறெடுத்துப் பார்க்காமலேயே கூட்டம்கூட்டமாக மக்கள் சென்றுகொண்டிருக்க, ஒரு குழந்தை மட்டும் குறுகுறுப்புடன் பார்த்துக் கொண் டிருக்கிறது. தன்னிடமுள்ள புதுத் துட்டை (காசு) அந்தப் பிச்சைக்காரருக்குத் தருகிறது. இறந்து கொண்டிருப்பவரின் உதட்டில் அமரும் ஈயை விரட்ட அவர் முற்படும்போது, கோணுகின்ற வாயைப் பார்ப்பது குழந்தைக்கு வேடிக்கையாயிருக்கிறது. “பாவா” என்று அழைக்கிறது.

குழந்தையைக் கொல்லும் கொடூரம்

‘கொடுக்காப்புளிமரம்’ கதையில் இடம்பெறும் பணக்காரரான ஜான் டென்வர் சுவாமிதாஸ் ஐயர் பிச்சையிடுவதை ஒரு சடங்காகக் கொண்டிருக்கிறார். தவறாது அவர் பிச்சையிடும் பெர்னாண்டஸுடன் வந்த அவரது குழந்தை, சுவாமிதாஸுக்குத் தெரியாமல் அவருடைய வீட்டுக் கொடுக்காப்புளிப் பழங்களைப் பொறுக்குவது சுவாமிதாஸ் ஐயருக்கு அநீதியாகப் படுகிறது. தடிக் கம்பால் எறிந்து குழந்தையைக் கொன்றுவிடும் அவரை மண்டையில் அடித்துச் சாய்க்கிறார் பெர்னாண்டஸ்.

இருளகற்றும் ஒளி

சாமியார், பிச்சைக்காரர், தெய்வம் உள்ளிட்டவர்களெல்லாம் குழந்தையிடம் பெரும் நம்பிக்கையையும் அளவற்ற ஆனந்தத்தையும் காணுகின்றார்கள். அது மட்டுமல்ல; தெய்வம்/ ஞானி என யாராயினும் குழந்தையால் பரிகாசம் செய்ய முடிகிறது. கள்ளமற்ற மனம் என்பது அவ்வளவு ஆற்றல் மிக்கது, ஆனந்தமானது என்பது புதுமைப்பித்தனின் அழுத்தமான நம்பிக்கை. அத்தகைய குழந்தையைக் கூட தடியால் அடித்து ஒருவர் கொன்றுவிடுகிறாரெனில், அவரது தர்மமும் மதமும் என்ன நற்பேற்றினை வழங்கிடும் என்னும் கேள்விதான் பூதாகாரமாக எழுகின்றது. “கோடீஸ்வரர்கள் அன்னதான சமாஜம் கட்டிப் பசிப் பிணியைப் போக்கிவிட முயலுவதுபோல்” என்று ‘மகாமசானம்’ கதையில் இதனைப் புதுமைப்பித்தன் குறிப்பிடுவார்.

பொதுவாக, புதுமைப்பித்தன் கதைகளில் துன்பம், நம்பிக்கை வறட்சி, முடிவற்ற சோகம் மேலோங்கியிருக்கும் என்று கூறப்படுவதுண்டு. இந்தத் தன்மையை மாற்றுவதற்குத் துணைபுரிபவர்களாக, இருளகற்றும் ஒளியாகக் குழந்தைகள் இருக்கின்றனர்.

படைத்த தெய்வம் தன் பொறுப்பை நிறைவேற்ற வில்லை. அதனை நிறைவேற்ற வேண்டிய மதங்கள் போலியான சடங்குமுறைகளாகிப் பிரச்சினைகளைப் பூதாகாரமாக வளர விடுகின்றன. மனிதர்களுக்குள் தார்மீக உணர்வில்லை. இந்தச் சூழலில் அவர்களுக்கு யார்தான் அன்பும் ஆறுதலும் அளிக்க இயலும், மாசுமறுவற்ற குழந்தையைத் தவிர?

(இன்று புதுமைப்பித்தன் பிறந்த நாள்) 
- சா. தேவதாஸ், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். 
ஓவியம்: ஆதிமூலம்

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5946234.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மகிந்த படுத்த கட்டிலில் தம்பி படுத்து எழுந்து வந்திட்டார். மற்றவர்களுக்கும் அந்த ஆசை வரும் தானே? (நான் ஜனாதிபதிக்கட்டிலை சொன்னேன் ராசா😜)
    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.