Jump to content

வழிகாட்டும் மனிதர்கள், முன்னுதாரண மானிடர்.


Recommended Posts

மழைநீரை சேமித்து 300 ஏக்கரில் விவசாயம் : சிவகங்கை அருகே வறட்சியை வென்று விவசாயி சாதனை

vivasaayi_2455797f.jpg
 

வறண்ட பூமியான சிவகங்கை மாவட்டத்தில் சொந்தமாகக் குளம் வெட்டி 300 ஏக்கரில் மா, தென்னை விவசாயம் செய்து வருகிறார் ஆ. கருங்குளத்தை சேர்ந்த விவசாயி ஒருவர்.

இதன்மூலம், மழைநீர் சேகரிப் பிலும் அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே ஆ.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (60). இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இதன்மூலம் கிடைக்கும், வருவாயில் விவசா யத்தில் ஈடுபட முடிவு செய்து முழு மூச்சுடன் இறங்கினார்.

சிவகங்கையில் தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாமல், சொந்த நிலங்களை தரிசாக போட்டுவிட்டு கண்ணீரோடு வெளி மாவட்டங்களுக்கு கூலி வேலைக்குச் செல்லும் விவசாயிகள் கடைசிவரை வறுமையில் அல்ல ல்பட்டு வருகின்றனர்.

இந்த பிற்போக்கான சிந்தனையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், சிவகங்கை வறட்சி மாவட்டம் அல்ல; வளர்ச் சிக்கு உகந்த மாவட்டம்தான் என்பதை நிரூபிக்கும் வகையிலும், விவசாயத்தில் பசுமைப் புரட்சி செய்துள்ளார்.

இதுபற்றி முருகேசன் கூறியதாவது: பிற தொழில்கள் மூலம் வருமானம் கிடைத்தாலும், விவசாயத்தில் ஈடுபடுவதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி, வேறு எதிலும் கிடைக்காது. சிவகங்கை மாவட்டத்தில் மண் வளம், நீர்வளம் இருந்தும் மழைநீரைத் தேக்கி விவசாயம் செய்ய முடியாமல், பொன் விளையும் பூமியை தரிசாகப் போட்டுவிட்டு, விவசாயிகள் வெளியூர்களுக்கு கூலி வேலைக்குச் செல்கின்றனர். இந்த சிந்தனையை மாற்றி, விவசாயம் லாபகரமான தொழில் தான் என்பதை நிரூபிக்க, நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதால், விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

இதற்காக 15 ஆண்டுகளுக்கு முன், கருங்குளத்தில் உள்ள எனது நிலத்தில் 10 ஏக்கருக்கு மேல் சுமார் ரூ. 1 கோடி மதிப்பில் குளம் வெட்டினேன். அக்குளத்தில் சுமார் 20 அடி ஆழத்துக்கு மழைத் தண்ணீரைத் தேக்கி 300 ஏக்கரில் மா, தென்னை விவசாயம் செய்து வருகிறேன்.

குளத்தில் 25 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டுள்ளதால், ஒருபக்கம் மீன் வளர்ப்பும் நடக்கிறது. 100 செம்மறி ஆடுகளை வளர்த்து வருவதால் பயிர்களுக்குத் தேவையான இயற்கை உரம் தாராளமாகக் கிடைத்து விடுகிறது. விவசாயம் மூலம் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் அளிக்க முடிகிறது.

கடின உழைப்புடன், அறிவியல் பூர்வமாக தொழில்நுட்பத்தையும் இணைத்து பயன்படுத்தினால் வறட்சியான நிலத்திலும் விவசா யத்தில் சாதிக்கலாம். விளை பொருள்களை பாடுபட்டு உற்பத்தி செய்தால் மட்டும் போதாது. அவற்றை சந்தைப்படுத்துவதிலும் விவசாயிகள் கவனம் செலுத் தவேண்டும். விவசாயி வியாபாரியாகவும் மாறினால்தான் 90 சதவீதம் லாபம் கிடைக்கும் என்கிறார் முருகேசன்.

http://tamil.thehindu.com/tamilnadu/மழைநீரை-சேமித்து-300-ஏக்கரில்-விவசாயம்-சிவகங்கை-அருகே-வறட்சியை-வென்று-விவசாயி-சாதனை/article7366937.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply

தழைக்கும் மனிதம்! உயிர்காக்க உதவும் 'நல்விதைகள்

Tamil_News_large_1287907.jpg

சென்னை:பொறியியல் பட்டதாரி மாணவர் ஒருவரின் முயற்சியில் உருவான 'நல்விதைகள்' என்ற மாணவர் அமைப்பு, சத்தமில்லாமல், பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதில், மரணத்தின் விளிம்பில் சிக்கி தவிக்கும் நோயாளிகளுக்கு, ரத்தம் கொடுத்து உயிர்காக்க உதவுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வது போன்ற பணிகள் குறிப்பிடத்தக்கவை. 

சென்னை, அமைந்தகரையை சேர்ந்த முகமது அசாருதீன் என்ற இளைஞர், கல்லுாரி மாணவ, மாணவியரை உறுப்பினர்களாக கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கிய அமைப்பு தான் 'நல்விதைகள்'. அந்த அமைப்பின் செயல்பாடு குறித்து அசாருதீன் கூறியதாவது:
கடந்த, 2006ம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கும் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ, மாணவர்களை அனுப்பி வைப்பர். அப்போது முதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எண்ணம் ஏற்பட்டது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு எங்கு நிகழ்ச்சி நடந்தாலும், எங்கள் அமைப்பினர் அங்கு அவர்களுக்கு உதவியாக இருப்பர். முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், எழுந்து உட்காரவே இன்னொருவர் உதவியை நாட வேண்டும். அதற்கு உதவியாட்கள் வைத்து கொண்டாலும், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில், அந்த பணியாளர் தன் வீட்டில் பண்டிகையை கொண்டாட சென்றுவிடுவார்.

அவர்களை போன்றோர், தீபாவளி பண்டிகையை கொண்டாட, எங்கள் அமைப்பின் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மாணவர்கள், அன்றைய தினம் அவர்கள் வீட்டிற்கே சென்று, தேவையான உதவிகளை செய்வர். இதைத் தவிர தந்தையை இழந்த மாணவர்களுக்கு, கல்வி கட்டணம் செலுத்துவது போன்ற கல்வி பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இவை எதற்குமே, நாங்கள் நன்கொடை எதிர்பார்ப்பதில்லை. உதவும் உள்ளம் கொண்டோரையும், உதவி எதிர்பார்ப்போரையும் இணைக்கும் ஒரு பாலமாக மட்டுமே செயல்படுகிறோம். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரத்ததான முகாம் நடத்தி வருகிறோம். 'பிரஷ் பிளட் சர்வீஸ்' என்ற அடிப்படையில், ரத்ததானம் செய்ய ஆர்வம் உள்ள, சென்னையில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், ஒரு லட்சம் பேரின் தகவல்களை திரட்டி வருகிறோம். இதற்காக மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகள், மற்றும் வணிகவளாகங்கள் உள்ளிட்ட இடங்களில், எங்கள் அமைப்பினர், ரத்ததானம் செய்ய ஆர்வம் உள்ளோரின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

அவசரத்திற்கு ரத்தம் தேவைப்படும் நோயாளிகள் மட்டும், நேரடியாக எங்களை, 97101 01020 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எங்கள் அமைப்பில் இணைந்து பணியாற்றவோ, ரத்ததானம் செய்யவோ முன்வரும் இளைஞர்கள், மாணவர்கள், nalvidhaigal.org என்ற இணையதள முகவரி யில் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அசாருதீன் கூறினார்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1287907

Link to comment
Share on other sites

பிறர் வயிறை நிரப்பி தன் மனதை நிறைக்கிறார்!

Niraikkirar others, his mind filled stomach!

 

கருணை: காந்திமதி

“ஆண்டவன் ஏந்தான் இந்த உசுரப் படைச்சானோன்னு அடிக்கடி அலுப்பா இருக்கும். எதுலயுமே திருப்தியில்லாம...  குடும்ப  வாழ்க்கையிலயும் கொஞ்சம் குழப்பம். மனசு அமைதியில்லாம தவிச்சுக்கிட்டே கிடக்கும். வீட்டுக்காரரும் செல்லூர்ல என்னை  விட்டுட்டு வருத்தமா திருப்பாச்சேத்திக்குப் போயிட்டாரு... தனியாளா நின்னு எல்லாப் புள்ளைகளுக்கும் கல்யாணம் முடிச்சுட்டு  அதது வாழ்க்கையை அதது பாத்துக்கிற காலக்கட்டம் வந்தபிறகு, அந்த அருட்பெருஞ்சோதி என்னை சன்மார்க்க சங்கத்துல  கொண்டு போய் விட்டுச்சு... உலகத்துலயே கொடிய நோயி பசி நோயிதான். தினமும் பத்துப்பேரு பசியாத்துற பெரிய  புண்ணியத்துக்காகத்தான் ஆண்டவன் இந்த உசுரப் படைச்சிருக்கான்னு இப்போ புரியிது...’’ - கனிவும் கருணையும் ததும்பும்  எளிய தமிழில் வாழ்வின் புதிரை அவிழ்க்கிறார் காந்திமதி!

காந்திமதியை தினமும் மதியம் 12 மணிக்கு மதுரை கீழமாசி வீதியில் உள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வாசலில் பார்க்கலாம்.  ஒரு தள்ளுவண்டியில் பெரிய பாத்திரங்களை வைத்து தள்ளிக் கொண்டு வருவார். அவருடைய வருகையை எதிர்நோக்கி 70க்கும்  அதிகமானோர் காத்திருப்பார்கள். அனைவரையும் அந்த வெளியில் அமர வைத்து, வாழை இலை போட்டு உணவு பரிமாறுவார்.  தாகம் தீர்க்க மோர் தருவார். கைவிடப்பட்டவர்கள், மன நோயாளிகள், வெயிலுக்கு ஒதுங்கி நிற்போர் என எந்த விலக்கும்  இல்லாமல் எல்லோருக்கும் போதும் என்று கூறும் அளவுக்கு அள்ளி அள்ளி வைப்பார். வயிறார சாப்பிட்டவர்கள் ‘தாயே  மகராசி...’ என்று வாய் நிறைய வாழ்த்துகிறார்கள். உணவு தீர்ந்ததும், பாத்திரங்களை அள்ளிக்கொண்டு தன் இருப்பிடம் நோக்கி  வண்டியைத் தள்ளுகிறார் காந்திமதி.

இன்று நேற்றல்ல... 3 வருடங்களாக மக்களின் பசிப்பிணி ஆற்றுவதையே சேவையாக கருதி செய்து வருகிறார்... காந்திமதிக்கு இப்போது வயது 65. செல்லூர் சொந்த ஊர். கணவர் ஆறுமுகம் தையற்கலைஞர். 2 ஆண், 2 பெண் என்று 4  பிள்ளைகள்... எல்லோருக்கும் திருமணமாகி பேரன், பேத்தி பார்த்து விட்டார். இப்போது முழுநேரப் பணி அன்னதானம்  வழங்குவது...  “எங்கப்பாவுக்கு நாங்க அஞ்சு பிள்ளைக. அப்பா கொத்தனார். நான்தான் மூத்தவ. ‘பசின்னா என்ன? அது எப்படி வலிக்கும்’னு அனுபவப்பூர்வமா உணர்ந்தவ நானு. எங்கூர்கள்ல மூத்ததா பெறக்கிற பிள்ளைகளுக்கு வெளியுலகமோ,  பள்ளிக்கூடமோ வாய்க்காது. அடுத்தடுத்து பெத்துப்போடுற புள்ளைகளை தூக்கிச் சுமக்குற வேலை ஒண்ணுதான் மிஞ்சும். 

என்னையும் மூணாவதோட பள்ளிக்கூடத்தை நிறுத்திட்டு புள்ளை தூக்க வச்சிட்டாங்க. 16 வயசுல கல்யாணம் முடிஞ்சிடுச்சு.  வீட்டுக்காருக்கு ஊரு திருப்பாச்சேத்தி. பெரிசா ஒண்ணும் வருமானம் இல்லை. நான் வயக்காடு, கொல்லைக்காடுன்னு கிடைக்கிற  வேலைகளுக்குப் போவேன். ஏதோ குடும்பம் ஓடுச்சு.  அடுத்தடுத்து புள்ளைக பெறந்துச்சுக... புள்ளைகளுக்கு நல்லது கெட்டது  பண்ணி, முழுசா பட்டினியைப் போக்க முடியலே. திருப்பாச்சேத்தியில இருந்து வாழமுடியாதுங்கிற நிலைமையில செல்லூருக்கே  வந்தோம். அப்பா வீட்டுக்குப் பக்கத்துல ஒரு குடிலைப் போட்டுக்கிட்டு இருந்தோம். 

எம் வீட்டுக்காருக்கு செல்லூர்ல இருக்கப் பிடிக்கலே. கோபத்துல என்னைய விட்டுட்டு திருப்பாச்சேத்திக்கே திரும்பவும்  போயிட்டாரு. ஒத்தையா நின்னு புள்ளைகளை வளர்த்தெடுத்து கல்யாணம் பண்ணி முடிச்சேன். எல்லா கடமைகளையும் முடிச்ச  பிறகு தனியாத்தான் கிடந்தேன்.  ஒரு நாளு, ‘சமரச சங்கத்துக்கு வர்றீங்களா’ன்னு பக்கத்து வீட்டுப்புள்ள கேட்டுச்சு.  அன்னைக்குன்னு ஆட்டுக்கறி வாங்கி சமைச்சிருந்தேன். கொஞ்சம் யோசனையா இருந்துச்சு. ‘சரி... புள்ள கூப்பிடுதே’ன்னு  போனேன். நிறைய ஜனங்க இருந்தாங்க... நானும் போயி உக்காந்தேன். 

எல்லாரும் சேந்து பிரார்த்தனை செஞ்சாங்க. வள்ளலார் சாமியைப் பத்தியும் சொன்னாங்க. ‘அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்
கருணை’ங்கிற மந்திரத்தைச் சொல்லச் சொல்ல ஏனோ மனசுக்கு நிம்மதியா இருந்துச்சு. தனிமை போன மாதிரி இருந்துச்சு.  வீட்டுக்கு வந்து கறிக்குழம்பை திறந்தா வயித்தைப் பெறட்டிக்கிட்டு வந்திருச்சு. ‘இனிமே கவுச்சி சாப்பிடுறதில்லை’ன்னு  அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன். அதுக்குப்பிறகு, நேரம் கிடைக்கிற போதெல்லாம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்துக்கு  போக ஆரம்பிச்சேன். அப்போத்தான் சிவ.அன்பானந்தம் அய்யாவை பாத்தேன். 

அவரு, ‘எங்கப்பகுதியிலயும் சன்மார்க்க சங்கம் இருக்கும்மா... வாங்க’ன்னு கூப்பிட்டாரு. அப்போ கீழமாசி வீதியில தாசில்தார்  பள்ளிவாசல் தெருவுல இருந்துச்சு அன்பானந்தம் அய்யா நடத்தின சங்கம். அங்கே மூணு வேளையும் அன்னதானம்  பண்ணிக்கிட்டு இருந்தார். அங்கே போய் பிரார்த்தனையில கலந்துக்கிறதும், சமையல் வேலைக்கு உதவறதுமா இருந்தேன்.  அன்பானந்தம் அய்யா வள்ளலார் சாமியைப் பத்தி நிறைய சொல்லுவார். மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருந்துச்சு. அங்கேயே  தங்கிட்டேன். அய்யா, ஊருக்குள்ள தெரிஞ்சவங்ககிட்ட போயி அரிசி, பருப்பு, காய்கறியெல்லாம் வாங்கிட்டு வருவாரு. நான்  சமையல் செய்வேன். 

மூணு வருஷம் முன்னாடி அன்பானந்தம் அய்யா ஜோதியாகிட்டாரு. அய்யா ஜோதியான பிறகு அன்னதானத்தை எடுத்து நடத்த  யாரும் வரலே. ‘இந்த சேவை அய்யாவோட போயிடக்கூடாதே’ன்னு மனசுக்குள்ள தவிப்பா இருந்துச்சு. ஏதோ தைரியத்துல  நான் கையில எடுத்துட்டேன். முதல்ல அச்சமாத்தான் இருந்துச்சு. அன்பானந்தம் அய்யா, இதை ஒரு தவம் மாதிரி செஞ்சாரு. யாரெல்லாம் இதுக்கு உதவி செய்வாங்கன்னு அவருக்குத் தெரியும். அவங்களைப் போய் பாப்பாரு. ‘நாம அப்படியெல்லாம் போயி நின்னா கொடுப்பாங்களா’ன்னு தோணுச்சு. எல்லாத்தையும் வள்ளலார் சாமி பாத்துக்குவாருங்கிற நம்பிக்கையில இறங்கிட்டேன்.

அய்யா மூணுவேளையும் சோறு போட்டாரு. என்னால அவர் அளவுக்கு பொருள் திரட்ட முடியலே. மத்தியானம் மட்டும்தான்  போட முடியுது. தினமும் 70 பேருக்கு அன்னம். வடக்கு வெளிவீதி மூங்கில் கடைத் தெருவுல சமைச்சு, கீழமாசி வீதி  எக்ஸ்சேஞ்ச் வாசல்ல பரிமாறுவோம்.  என்னோட மூத்த மக பழங்காநத்தத்துல இருக்கா. இளையவ செல்லூர்ல இருக்கா. ரெண்டு  பேரும் தினமும் வந்திடுவாங்க. அவனியாபுரத்துல இருந்து இன்னொரு பொண்ணும் வருவா. அவளும் எம்மகளப் போலத்தான். காலையில 7 மணிக்கு சமைக்க ஆரம்பிச்சா 12 மணிக்குள்ள சமையலை முடிச்சிருவோம். 

எங்காலம் வரைக்கும் இதை விடாம செஞ்சுபுடணும். சிவானந்தம் அய்யா இருக்கிற வரைக்கும் அவருக்குப் பிறகு இதை நான்  எடுத்துச் செய்வேன்னு நினைச்சுக் கூட பாத்ததில்லை. அந்த அருட்பெருஞ்சோதி என்னை இந்த வேலையில இறக்கி  விட்டுட்டாரு. எனக்குப் பிறகு யாரு இதைச் செய்றதுன்னு அவங்களே தீர்மானிச்சு வச்சிருப்பாங்க. கண்டிப்பா இது  தலைமுறைக்கும் தொடரும்...’’ -  நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் காந்திமதி.

இப்போது காந்திமதியை தேடி வந்து பலர் நிதியுதவி செய்கிறார்கள். பிறந்த நாள், திருமண நாள் என்று அன்றாட அன்னதானப் பொறுப்பை ஏற்றுக்கொள்வோரும் உண்டு. நிறைய உதவிகள் கிடைத்தால், அப்பளம், பாயசம், வடை என இனிப்போடு  விருந்து. உதவி குறைந்தால், சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், மோர்... எதுவுமே கிடைக்கவில்லை என்றால், அரிசியையும் காய்கறிகளையும் ஒன்றாக்கி கூட்டாஞ்சோறு, ஊறுகாய், மோர்... “சன்மார்க்க சங்க பிரார்த்தனையில ‘என்னைய  நல்லா வச்சுக்கோ’ன்னு சொல்ல மாட்டோம். ‘எல்லாரையும்  நல்லா வச்சுக்கோ’ன்னுதான் வேண்டுவோம். 

‘எல்லா உயிர்களும் இன்புற்று  வாழணும்’கிறதுதான் எங்க எண்ணம்... நாலு பேருக்கு சாப்பாடு போடுறதுல கிடைக்கிற திருப்தி  வேறு எதிலயுமே கிடைக்காது. அன்னதானத்துக்கு இணையான தானம் வேறெதுவும் இல்லை. சாப்பாடு ஒண்ணைத்தானே  போதும்னு சொல்லி ஒதுக்க முடியும்?  இப்போ எனக்குன்னு தனியா வாழ்க்கை இல்லை. நல்லது கெட்டதுன்னு எந்த  சொந்தக்காரங்க வீட்டுக்கும் போக முடியாது. யாராவது என்னை பாக்கணும்னா இங்கே வந்திடுவாங்க. கோபமா போன என்  வீட்டுக்காரரும் இப்போ வந்துட்டாரு.  

தினமும் மத்தியானம் என்னை எதிர்பார்த்து 70 வயிறுங்க காத்திருக்கும். அந்த வயிறுகளை சாந்தப்படுத்துறதுதான்  அருட்பெருஞ்சோதி எனக்குக் கொடுத்திருக்கும் பணி. ‘தாயே... மகராசி’ன்னு சாப்பிட்டவங்க வாழ்த்துறது உண்மையான ஆன்ம  பலத்தைக் கொடுக்கும். மூணுவேளையும் அன்னம் கொடுக்க அந்த அருட்பெருஞ்சோதி கருணை காட்டணும். அதுதான் என்  பிரார்த்தனை...’’ என்கிறார் காந்திமதி. அவரின் முகத்தில் தவழும் கருணையில் அருட்பெரும் ஜோதி ஒளிர்கிறது.

http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=3498

Link to comment
Share on other sites

கலெக்டர் ஆகிறார் கார் டிரைவர் மகள்: சத்தியமங்கலம் வான்மதி சாதனை

வான்மதி
வான்மதி

ஐஏஎஸ் தேர்வில் 2 முறை நூலிழையில் வெற்றியை நழுவ விட்ட கார் டிரைவரின் மகள் 3-வது முயற்சியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்தவர் சென்னி யப்பன் என்கிற ராஜா. கார் டிரைவர். இவரது மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதியரின் மகள் வான்மதி (வயது 26), சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பண்ணாரி அம்மன் மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார். தனது தோழியின் தந்தையான கஸ்டம்ஸ் கண்காணிப்பாளரைப் பார்த்து தானும் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை வான்மதிக்கு துளிர்விட்டது. இதைத்தொடர்ந்து இவர் மேற்கொண்டு கோபி பிகேஆர் கலை கல்லூரியில் பகுதி நேரத்தில் எம்சிஏ படித்தார்.

இந்நிலையில் கல்பனா என்ற ரிசர்வ் வங்கி அதிகாரி மூலம் சென்னையில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். தீவிர பயிற்சிக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதினர். நேர்முகத்தேர்வு வரை சென்றவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், முயற்சியைக் கைவிடவில்லை.

2013-ம் ஆண்டு மீண்டும் தேர் வெழுதினார். முன்பு போலவே நேர்முகத்தேர்வு வரை சென்று நூலிழையில் வெற்றியை நழுவவிட் டார். இருப்பினும் வான்மதி மனம் தளரவில்லை. 3-வது முறையாக கடந்த ஆண்டு முயற்சி செய்தார். அவரது முயற்சிகளின் பலனாக, வெற்றிக்கனி கைகூடியுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 152-வது ரேங்க் எடுத்து வான்மதி வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு வங்கி அதிகாரி தேர்வெழுதியதில் வெற்றிபெற்று தற்போது ஈரோடு நம்பியூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக அவர் பணியாற்றி வருகிறார். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்றது குறித்து “தி இந்து”விடம் வான்மதி கூறியதாவது:-

கல்லூரியில் படிக்கும்போது தான் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. படித்து முடித்துவிட்டு ஐஏஎஸ் தேர்வுக்காக படிக்கப் போகிறேன் என்றதும் மற்ற பெற்றோரைப் போலவே எனது பெற்றோரும் யோசித்தனர். அதற்கு பொருளாதாரப் பிரச் சினைதான் முக்கிய காரணம். என்னால் ஐஏஎஸ் அதிகாரி ஆக முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், நான் முதல் முயற்சி யில் நேர்முகத்தேர்வு வரை சென்றதும் என் மீது அவர்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. எனது முயற்சிக்கு பக்கபலமாக இருந் தனர்.

ஐஏஎஸ் தேர்வைப் பொருத்த வரையில், அனைத்துப் பாடங் களைப் பற்றிய அடிப்படை அறிவு முக்கியம். நமது அறிவை அவ்வப்போது கூர்மைப்படுத்தி வர வேண்டும். கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் போதும், எந்த தடைகளையும் தாண்டிவிடலாம்.

இவ்வாறு வான்மதி கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/கலெக்டர்-ஆகிறார்-கார்-டிரைவர்-மகள்-சத்தியமங்கலம்-வான்மதி-சாதனை/article7388827.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

சபாஷ் சப்ரினா!

கிழக்கு சீனாவின் ஹிஃபேய் பகுதியில் வசிக்கிறார் ஷெங் ரு ஸி. இவருடைய மகன் ஸாங் கை, புற்றுநோயால் 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகனின் நண்பர்கள் 7 பேரும் இன்று வரை ஷெங்கைக் கவனித்து வருகிறார்கள். 2001ம் ஆண்டு, பள்ளி மாணவராக இருந்த ஷாங் கைக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து தாயையும் மகனையும் நண்பர்கள் ஏழு பேரும் அன்புடன் கவனித்துக்கொண்டார்கள்.

அடுத்த மூன்றாவது ஆண்டு ஸாங் இறந்து போனார். ஒரு மகனையும் இழந்து, தனியாக நின்ற ஷெங்கைக் கவனித்துக்கொள்ள நண்பர்கள் முடிவு செய்தனர். “மகனை இழப்பது ஒரு தாய்க்கு எவ்வளவு கொடுமையான விஷயம்? அந்தத் துயரத்திலிருந்து என்னை மீட்டவர்கள் இந்தக் குழந்தைகள்தான். இந்த ஏழு பேரிலும் என் மகன் வாழ்கிறான். கல்லூரிப் படிப்பு முடித்து, அவரவர் குடும்பம், குழந்தை என்று ஆகிவிட்டாலும் கூட இந்தத் தாயை ஒருவரும் மறக்கவில்லை’’ என்கிறார் ஷெங்.

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-திமிங்கலத்துடன்-செல்பி/article7398467.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

பத்து ரூபாய் டாக்டர்...

gallerye_161521262_1293139.jpg

gallerye_161614970_1293139.jpg

உடம்புக்கு முடியாமல் போனால் டாக்டரிடம் காண்பிக்கும் பழக்கம் கொஞ்ச காலத்திற்கு முன் வரை இருந்தது ஆனால் இப்போது முடிந்த வரை நமக்கு நாமே பாணி வைத்தியத்திலும் அது முடியாமல் போகும் போது மருந்து கடைக்காரர்கள் ஆலோசனையின் அடிப்படையிலும் வைத்தியத்தை தேடிக்கொள்கிறார்கள்.

இதற்கு காரணம் இன்றைய தேதிக்கு டாக்டர்களிடம் கன்சல்டிங் என்று போனால் ஆயிரம் ரூபாய்க்கு குறைவின்றி செலவு வந்துவிடுகிறது, அதே டாக்டர் ஆஸ்பத்திரி வைத்திருந்தால் எக்ஸ்ரே ஸ்கேன் இசிஜி என்று பணம் பஞ்சாய் பறக்கும்

இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு எம்பிபிஎஸ் படித்த, பல ஆண்டு அனுபவம் உள்ள டாக்டர் ஒருவர் வரக்கூடிய பேஷண்ட்களிடம் பத்து ரூபாய்க்கு மேல் கன்சல்டிங் வாங்குவதில்லை என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

யார் அவர்? என்ற உங்கள் கேள்விக்கு விடை காண தென்காசிக்கு(திருநெல்வேலி மாவட்டம்) பயணம் செல்லவேண்டும்.

தென்காசியில் உள்ள புகழ்பெற்ற பழமையான குலசேகரநாதர் கோவில் தெருவில் கிளினிக் வைத்து நடத்திவருகிறார் டாக்டர் கே.ராமசாமி.தென்காசி பஸ் நிலையத்தில் இற்ங்கி பத்து ரூபாய் டாக்டரை பார்க்கவேண்டும் என்றால் போதும் எந்த ஆட்டோக்காரராக இருந்தாலும் கொண்டு போய் அவரது கிளினிக்கில் இறக்கிவிடுவர் அந்த அளவிற்கு பிரபலமாகி உள்ளார்.

நான் போகும் போது கிளினிக் பூட்டியிருந்தது.' டாக்டரய்யா வீட்டிலேதான் இருப்பார்கள் வாங்க' என்று அடுத்த தெருவில் இருந்த டாக்டர் வீட்டிற்கே கொண்டு போய் ஆட்டோக்காரர் இறக்கிவிட்டார்.

சின்ன வீடு எளிமையாக காணப்பட்டது, டாக்டரின் துணைவியார் பகவதி அன்போடு வரவேற்றார் வீட்டின் உள்அறையில் இருந்து 'வாங்கோ' என்று வாய்நிறைய சிரிப்போடும் வரவேற்றபடி வந்தார் டாக்டர்.

அறிமுக சம்பிரதாயம் எல்லாம் முடிந்த பிறகு, இண்டர்நெட் பேஷ்புக் ஸ்மார்ட் போன் என்றெல்லாம் இல்லாமலம் வாழும் என் எளிய வாழ்க்கைக்கு ஒரு நோயாளியிடம் பத்து ரூபாய் வாங்கினால் போதும் என்று நினைப்பதால் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு இருக்கிறேன், அதற்கு எதற்கு விளம்பரம் எல்லாம் என்று கூச்சப்பட்டார்.

இது விளம்பரம் அல்ல மருத்துவத்தை மகத்துவமாக பார்க்கும் உங்களை போன்றவர்களை அடையாளம் காட்டுவது எங்கள் கடமை என்ற பிறகு பேசஆரம்பித்தார்.

நான் திருநெல்வேலி மருத்துவக்கல்லுாரியில் எம்பிபிஎஸ்ம் சென்னையில் மேற்படிப்பும் படித்தேன் படித்து முடித்த உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவராக வேலை. பல ஊர்களில் வேலை பார்த்துவிட்டேன் தென்காசி வந்த பிறகு ஊர் பிடித்துப்போனதால் இங்கேயே ஒரு வீட்டை வாங்கி நிரந்தரமாக இருந்துவிட்டேன், வேறு ஊர்களுக்கு டிரான்ஸ்பர் என்ற போது கூட இங்கிருந்து போய்விட்டு திரும்பிவிடுவேன்.

ஒரே மகள் திருமணம் செய்து கொடுத்த பிறகு என்னுடைய தேவைகள் குறைந்துவிட்டது அதற்கு மேல் என் துணைவியார் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற வார்த்தைக்கு வாழ்க்கை கொடுத்துகொண்டு இருப்பவர். இந்த நிலையில் அரசு பணி வேண்டாம் என்று விட்டுவிட்டு தென்காசியில் சிறிதாக கிளினிக் வைத்து மக்களுக்கான மருத்துவத்தை தொடர்கிறேன்.

கிளினிக் காலை பத்து மணியில் இருந்து ஒரு மணிவரையிலும் பின் மாலை ஐந்து மணியில் இருந்து இரவு ஒன்பது மணிவரையிலும் திறந்து இருக்கும்.தென்காசியில் இருந்து மட்டுமல்லாது சுற்றுப்புறத்தில் உள்ள கிராமமக்கள் பலரும் என்னை தேடி வருவார்கள்.நான் நோயின் தன்மைக்கேற்ப ஆலோசனைகளை வழங்கி மருந்து மாத்திரைகளை எழுதிதருவேன்.பெரும்பாலும் ஒருமுறை நான் எழுதிதரும் மருந்து மாத்திரைகளிலேயே நோய் சரியாகிவிடும் அதன்பிறகு வந்தால் நன்றி சொல்லதான் வருவார்கள்.

இப்படித்தான் கடந்த 33 வருடங்களாக இயங்கிக்கொண்டு இருக்கிறேன், இப்போது எனக்கு வயது அறுபத்தாறு ஆகிறது.எனது அனுபவமும் படிப்பும் மக்களுக்கு உதவட்டுமே என்ற மனநிலைதான் எனக்கு, ஒரு போதும் மருத்துவத்தை காசாக்கி பார்க்க விரும்பியது இல்லை. இலவசமாக பார்த்தால் ஒரு மரியாதை இருக்காது என்பதால் இந்த பத்து ரூபாய் வாங்குகிறேன் அது கூட எனது உதவியாளர்களுக்கான சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே. 

ஆரம்பத்தில் ஒரு ரூபாய்தான் வாங்கிக்கொண்டு இருந்தேன் ரொம்பகாலம் அதுதான் ஒடிக்கொண்டு இருந்தது பிறகு எனக்கு உதவியாளர்கள் நியமித்தபிறகுதான் பத்து ரூபாயானது அந்த பத்து ரூபாயைக்கூட நான் கையில் வாங்குவது இல்லை கிளினிக் பக்கத்தில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கும்போது கடைக்காரர்கள் டாக்டர் பீஸ் பத்து ரூபாய் எடுத்துக்கொள்ளலாமா? எனகேட்டு எடுத்துக்கொள்வார்கள் அதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை அடுத்த முறை முடிந்தால் கொடுங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள் இதுதான் என்கதை என்றவர் கிளினிக்கிற்கு நேரமாச்சு கிளம்பலாமா? என்றவர் கூடவே நானும் கிளம்பினேன்.

வீட்டிலிருந்து நடந்தே கிளினிக்கிற்கு வருகிறார் வழியில் பார்க்கக்கூடிய பலரும் வணக்கம் டாக்டர் என மிகுந்த மரியாதையுடன் வணக்கம் செலுத்துகின்றனர் பதிலுக்கு வணக்கத்தையும் சிலரிடம் வாஞ்சையுடன் உடல் நலனையும் விசாரித்தபடி கிளினிக்கை அடைகிறார்.

கிளினிக் என்பது வீட்டைவிட மிக எளிமையாக இருக்கிறது,இரண்டு சிறிய அறைகள் கொண்ட பழமையான வாடகை கட்டிடம்.டாக்டர் வந்ததும் நோயாளிகள் வரிசைக்கிரமமாக அவரைப்பார்த்து தங்கள் குறைகளை சொல்லி மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர் நோயாளிகளிடம் அவர் பேசும் அந்த அன்பிலும் அக்கறையிலுமே பாதி நோய் குணமானதாக நோயாளிகள் உணர்கிறார்கள்.

டாக்டர் தோல் சிகிச்சையில் மேற்படிப்பு படித்தவர் என்பதால் பொது மற்றும் தோல் சிகிச்சை தொடர்பான நிறைய நோயாளிகள் அன்றைக்கு வந்திருந்தனர்.மேலும் நிறைய பேர் காத்துக்கொண்டிருந்தனர் அவர்களது மருத்துவத்திற்கு இடையூறாக இல்லாமல் டாக்டரிடம் இருந்து விடைபெற்றேன்.

டாக்டரிடம் பேசவிரும்புவர்கள் அவரது வீட்டு லேண்ட் லைனில் (கிளினிக் நேரம் தவிர்த்து) தொடர்பு கொள்ளவும் எண்:04633-224922.

gallerye_161537771_1293139.jpg

http://www.dinamalar.com/news_detail.asp?id=1293139

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வங்கிக் கணக்கு போன்றது சேமிக்கும் மழைநீர்!

Tamil_News_large_1299738.jpg
'மழை இல்லம்' தொண்டு அமைப்பின் இயக்குனர் சேகர் ராகவன்: நம்முடைய தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு முதன்மையான தீர்வு, மழைநீர் சேகரிப்பாக மட்டுமே இருக்கும். உலகிலேயே இந்தியர்கள் தான், மழை நீர் சேமிப்புக்கு முன்னோடிகளாக இருந்தனர்.கடந்த, 20 ஆண்டு களாக நீராதாரங்கள் அதிகப்படியாக உபயோகப் படுத்தப்படுகிறது. ஒருபுறம் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது; அதேநேரம் நன்னீரின் அளவும் குறைந்து வருகிறது. இது, எதிர்காலத்தில் வரவுள்ள தண்ணீர் பஞ்சத்தை உறுதி செய்வதாக உள்ளது.தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க, மழை நீரை இருவகையாக சேகரிக்கலாம். உடனடி தேவையை பூர்த்தி செய்ய சேமிப்பது, பூமியில் செலுத்தி நிலத்தடி நீராக மாற்றிச் சேமிப்பது. தண்ணீரின் முக்கியத்துவம், மக்களுக்கு தெரியவில்லை.

குழாயில் தண்ணீர் வந்தால் போதும்; வறட்சி காலங்களில் மட்டும், மழை நீரை சேமித்தால் போதும் என நினைக்கின்றனர். ஆனால், மழை பெய்யும் போதெல்லாம் சேமிக்க வேண்டும். 100 சதவீதம் மழை நீரை சேமித்தால், நாள் ஒன்றுக்கு ஒவ்வொருவருக்கும், 124 லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.மற்ற மாநிலங்களை போல, தமிழகத்தை பொறுத்த வரை தண்ணீருக்கு மீட்டர் கிடையாது; பயன்படுத்த அளவும் கிடையாது என்பதால், தண்ணீரை தேவையில்லாமல் வீணாக்குபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திலும் தண்ணீர் பயன்படுத்தும் அளவை நிர்ணயம் செய்ய வேண்டும். 

மின்சாரத்தை போன்று, தண்ணீருக்கும் மீட்டர் பொருத்த வேண்டும்.முன்பு, நாம் குளிக்கும், துணி துவைக்க பயன்படும் தண்ணீர், வாழை மரம், தென்னை மரத்துக்கு செல்லும். ஆனால், இன்று நாம் குளித்து, துணி துவைக்கப் பயன்படுத்தும், 40 சதவீதம் தண்ணீர் அப்படியே கழிவுநீர் குழாய்க்குச் செல்கிறது. சென்னையை பொறுத்த வரை, ஆண்டுக்குச் சராசரியாக, 57 நாட்கள் மழை பெய்கிறது. அந்நாட்களில் பெய்யும் மழை நீரை சேமித்தால் தான், மழை பெய்யாத நாட்களில் நம்முடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.மேலும், வீட்டிலிருந்து ஒரு துளி தண்ணீரை கூட வெளியேற விடக் கூடாது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதற்கு இலவச ஆலோசனைகள் தர தயாராக உள்ளோம். நாம் சேமிக்கும் மழை நீர் என்பது, வங்கிக் கணக்குப் போன்றது. பணத்தை சேமித்து வைத்து விட்டால், எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்!

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

உதவ நினைத்தால்கொடுக்கிற மனசுதானா வந்துவிடும்!

Tamil_News_large_1298268.jpg

ஒரு ரூபாய்க்கு, முழுச்சாப்பாடு வழங்கும், ஏ.எம்.வி., மெஸ் வே.வெங்கட்ராமன்: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். ஒருமுறை என் கடைக்கு வந்த ஒரு பெண், இட்லி கேட்டார். 'இட்லி தீர்ந்து விட்டது; தோசை வாங்கி போய், நாளை மீதி காசு கொண்டு வாருங்கள்' என்றேன். 
அதற்கு அப்பெண், 'ஐயா... என் கணவர் உடம்பு சரியில்லாமல், அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். இந்த காசுக்கு, இட்லின்னா ஆறு கிடைக்கும். நாங்கள் இருவரும் பசியாற முடியும். தோசைன்னா ஒண்ணு தானே கிடைக்கும்' என்றார்.'எத்தனை பேர் இப்படி சிகிச்சைக்காக வந்து, சாப்பிட காசு இல்லாமல் பட்டினி கிடக்கின்றனரோ, தேடிப் பிடித்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்' என அன்று, என் மனதில் உறுதி எடுத்தேன். 

பெரும்பாலும் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழைகள் தான், நீண்டதூரம் பயணம் செய்து, அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். 'அட்மிட்' ஆகும் வரை, நோயாளிக்கும், மருத்துவமனையில் இருந்து உணவு கிடைக்காது. துணைக்கு கூட வருபவர்களுக்கும் இதே நிலை தான்.வயது முதிர்ந்தவர்கள், யாரும் இன்றி தனியாக வருபவர்கள், பசி மயக்கத்தில் சுருண்டு கிடப்பர். இம்மாதிரியானவர்களை கண்டுபிடித்து, சாப்பாட்டு டோக்கன் கொடுத்து வரவே, என் கடையில் ஒருவர் வேலைக்கு இருக்கிறார். அவர்கள் வந்து, உணவு வாங்கிச் செல்கின்றனர். காலையில், 20 பேருக்கும், மதியம், 50 பேருக்கும் தினமும், ஒரு ரூபாய் வாங்கி உணவு தருகிறேன். வருகிறவர்கள் ஏழைகள் தான். பிச்சைக்காரர்கள் இல்லை; அதுவும் கிராமத்து மக்கள். வறுமையிலும் மானம் பார்ப்பர். பணம் கொடுத்து வாங்கியது என்ற பெருமிதம் இருக்கும். இன்னொன்று, இலவசமாக கிடைக்கும் எப்பொருளின் மேலும் இளக்காரமாகி விடும். காசு கொடுத்து வாங்கினால், மீதம் ஆனாலும், அடுத்த நேரத்துக்கு உதவும் என்று, அக்கறையாக பத்திரப்படுத்துவர்.உதவி என்பது பணமாக, பொருளாக கொடுப்பது மட்டும் தான் என, நினைப்பது தவறு. கர்ணன் மாதிரி கொடுத்து தான், வள்ளல் ஆகணும்ங்கிற அவசியம் இல்லை. 

நம் பக்கத்து வீட்டில் படிக்க கஷ்டப்படுற குழந்தைகளுக்கு கொஞ்சம் நேரம் பாடம் சொல்லிக் கொடுத்தால், அதுகூட ஒரு உதவி தான். உதவணும்ன்னு மனதில் நினைப்பு வந்துவிட்டால், நம்மால் ஏதாவது ஒரு விஷயத்தை நிச்சயமாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். இதை நம்பினாலே, கொடுக்கிற மனது தானாக வந்துவிடும்

http://www.dinamalar.com/m/spl_detail.php?id=1298268

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இக்கட்டான தருணத்தில் திருச்சி மாணவிக்கு கிடைத்த அரிய உதவி : வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

stus_2504972f.jpg

ஏழை மாணவிக்கு மனிதநேய அடிப்படையில் கலந்தாய்வின் போது உதவி வழங்கி, கல்வி என்பது கற்போருக்கு வழங்கும் மிகப் பெரிய சேவை என்பதை நிரூபித்துள்ளது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த ராஜேந்திரன் - தங்கப்பொண்ணு தம்பதியினரின் மகள் ஆர்.சுவாதி. அரசுப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 1,017 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பி.எஸ்சி. வேளாண் படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

ஏனைய போட்டி மாணவர் களைக் காட்டிலும் கட்-ஆப் மதிப் பெண் குறைவாக இருந்ததால், உடனடியாக அவருக்கு இடம் கிடைக்கவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கலந்தாய்வின்போது இடம் கிடைத்து வேளாண் படிப்பைத் தேர்வு செய்த மாணவர்கள் சிலர், வேறு படிப்புக்குச் சென்றுவிட் டதைத் தொடர்ந்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுவாதிக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு பல்கலைக் கழகம் சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.

தவறுதலாக சென்னைக்கு..

அழைப்புக் கடிதத்தில், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அண்ணா அரங் கில் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட் டிருந்தது. ஆனால், கோவை யில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்துக்கு வருவதற்கு பதிலாக, மாணவியும், அவரது தாயாரும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 8-ம் தேதி காலை 6.30 மணி அளவில் சென்றபோதுதான் தவறுதலாக மாறி வந்தது, அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

கலக்கத்துடன் அங்கு நின்ற அவர்களை சந்தித்த மனிதநேய மிக்க ஒரு நபர், விவரங்களைக் கேட்டறிந்தார். வேளாண் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு அழைத்து பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார் தொலைபேசி எண்ணைப் பெற்று விவரத்தைக் கூறியுள்ளார். அந்த மாணவியை விமானத்தில் அனுப்பி வைப்பதாகவும், ஒரு மணிக்கு பல்கலைக்கழகம் வந்துவிடுவார்கள் என்பதால் கலந்தாய்வுக்கு அனுமதிக்கு மாறும் கோரியுள்ளார்.

விமான டிக்கெட்

இதனை ஏற்றுக்கொண்ட பதிவாளர், மாணவியின் விவரங்களைப் பெற்று கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித் துள்ளார். இதையடுத்து, சென்னை யில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு நேற்று முன்தினம் பகல் 11.30 மணிக்கு வந்தடைந்த மாணவியையும், அவரது தாயா ரையும் பல்கலைக்கழகத்தின் காரை அனுப்பிவைத்து அழைத்துவரச் செய்துள்ளார் துணைவேந்தர். பின்னர், பிற்பகலில் நடைபெற்ற கலந்தாய் வுக்கு நேரம் ஒதுக்கித் தரப் பட்டது.

மாணவி ஆசைப்பட்ட பி.எஸ்சி. வேளாண் படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். உணவுத் தொழில்நுட் பவியல் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. மனிதாபிமானம் உள்ள ஒரு நபர், தனது சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்ததன் மூலமாகவும், பல்கலைக்கழகம் தகுந்த நேரத்தில் வழங்கிய உதவி காரணமாகவும் மாணவியின் வேளாண் படிப்பு ஆசை நிறைவேறியுள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார் கூறும்போது, "அன்றைய தினம் காலையில் ஓர் அழைப்பு வந்தது. அந்த மாணவியின் நிலை குறித்து கூறினர். அந்த மாணவிக்கான கலந்தாய்வு பதிவு எண், விவரங்களை குறுந்தகவலாக பெற்று, கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்தேன்.

அவர்கள் கூறியபடி உரிய நேரத்தில் வந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு படிப்பைத் தேர்வு செய்தனர். நான், எனது பணியைத்தான் செய்தேன். எனக்கு அழைத்த அந்த நபரின் எண்ணை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன்" என்றார்.

முகம் தெரியாத நபரின் மனிதாபிமானம்

பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி கூறும்போது, "மனிதநேயம் இல்லாத வாழ்க்கை நல்ல வாழ்க்கை கிடையாது. மாணவியின் நிலையை அறிந்து சமயோசிதமாக செயல்பட்டு அனுப்பி வைத்த முகம் தெரியாத அந்த நபருக்குத்தான் எல்லா பெருமையும் சேரும். இருப்பினும், பிளஸ் 2 படித்த மாணவி, தனக்கு வந்த கடிதத்தை சரியாகப் படிக்காமல் இருந்ததை நினைத்து வருத்தம் கொள்கிறேன். அந்த மாணவிக்கு உரிய நேரத்தில் அந்த நபருடைய உதவி கிடைத்ததால் தான் வர முடிந்தது. இல்லையென்றால் நாங்கள் நினைத்தாலும் இடம் வழங்க முடியாது. சமூகத்தில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அதை நாம்தான் சரியாக பயன்படுத்த வேண்டும். அனுமானத்தில் ஒருபோதும் செயல்படக்கூடாது" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/இக்கட்டான-தருணத்தில்-திருச்சி-மாணவிக்கு-கிடைத்த-அரிய-உதவி-வேளாண்-பல்கலைக்கழக-துணைவேந்தர்-தகவல்/article7521452.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மரம் வளர்க்க கரம் நீட்டும் இளைஞர்களின் ஐந்திணைப் படை

ainthinai_2530538f.jpg

உங்களிடம் நேரம் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை; இதயம் இருந்தால் போதும்.

ஐந்திணை என்ற அமைப்பு, தமிழக வனத்துறையுடன் இணைந்து 'மரக்கன்றுகள் நடும் திட்ட'த்தின் கீழ் கிட்டத்தட்ட 1500 மரக்கன்றுகளை வெற்றிகரமாக நட்டிருக்கிறது.

சென்னை தாம்பரத்துக்கு அருகில், படப்பை சிறுவாஞ்சூரில் 350-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், நேற்று ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் இலுப்பை, கருவேலம், மருதம், வில்வம், ஆலம், அரசமரம், நாவல் மரம், புங்கை, வேம்பு மற்றும் பனை உள்ளிட்ட மரங்களின் கன்றுகள் நடப்பட்டன.

சென்னை மலையேற்றக் குழுவின் (CTC), ஓர் அங்கம் ஐந்திணை. இயற்கை பாதுகாப்புக்கான அமைப்பான ஐந்திணை மூலம், மக்களிடம் பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மரம் நடுவிழாக்கள் நடத்தப்படுகின்றன. ஐந்திணை அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, அமைப்பின் ஒருங்கிணப்பாளர்களில் ஒருவரான சிவா நம்மிடம் பேசியது:

சென்னை மலையேற்றக் குழு, முழுக்க முழுக்க இயற்கை நேசிப்பாளர்களுக்காகத் தொடங்கப்பட்டது. பெல்ஜியத்தில் பிறந்து சென்னையில் குடியேறிவிட்ட பீட்டர் வேன் கெயித் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இது. ஏழு வருடங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இக்குழுவில் பதிவு செய்யப்பட்ட 25,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

சிடிசி நிகழ்வுகள்

சென்னை மலையேற்றக் குழுவின் மூலம் பறவை நோக்குதல், புகைப்படக்கலை, பாம்புகளுடன் பயணம், உள்ளிட்ட நிகழ்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்க சென்னை மலையேற்றக் குழுவின் வலைத்தளத்தில் இருக்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து மெயில் அனுப்ப வேண்டும்.

இதன் மூலம் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியின் விவரங்கள் நமக்கு அனுப்படுகின்றது. ஆர்வம் கொண்டவர்கள் தங்களுக்கு வசதிப்படும் நாட்களில், சென்னை மலையேற்றக் குழுவுடன் இணைந்துகொள்கின்றனர். சிடிசி மலையேற்றத்துக்காக, சென்னையின் அறியப்படாத பல பக்கங்களுக்கு, ஆர்வமுள்ளவர்களை அழைத்துச் செல்கிறது.

உடல் நலனைப் பேணும் பொருட்டு, வார இறுதிகளில் முத்தரப்பு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தயம் முதலியவை நடத்தப்பட்டு, விருதுகள் அளிக்கப்படுகின்றன. அத்துடன் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த எச்சரிக்கையும்,மரங்களின் தேவை குறித்த விழிப்புணர்வும் ஊட்டப்படுகிறது.

லாப நோக்கமற்று செயல்படும் இந்த அமைப்பில் நீண்ட பயணங்களுக்கான செலவு உறுப்பினர்களிடம் திரட்டப்படும். போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகள் போக மீதமிருக்கும் பணம், நிகழ்ச்சியின் முடிவில் அங்கேயே சமமாகப் பிரிக்கப்பட்டு, பகிர்ந்தளிக்கப்படும்.

ஐந்திணை அமைப்பு

சென்னை மலையேற்றக் குழுவின் ஓர் அங்கமான ஐந்திணை 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மரம் வளர்ப்பே ஐந்திணையின் முக்கிய இலக்காக இருக்கிறது. மரம் நடுதலோடு மட்டுமல்லாமல், அதை முறையாகப் பராமரிக்கவும் செய்கிறோம். மழைக் காலங்களில் நட்ட மரக்கன்றுகளைச் சுற்றி வேலியிடுவது, கோடைக்காலங்களில் ஏற்படும் தண்ணீர்ப் பிரச்சனைகளை சமாளிப்பது உள்ளிட்ட பணிகளும் இதில் அடக்கம்.

ஒரு முறை தண்ணீர்ப்பற்றாக்குறையால் குறிப்பிட்ட பகுதியில் நட்ட கன்றுகள் அனைத்தும் காய்ந்துவிடும் தறுவாயில் இருந்தன. அப்போது தண்ணீர்த்தொட்டியில் வாடகைக்கு தண்ணீர் வாங்கி நிரப்பி எடுத்துச் சென்று, தண்ணீர் விட்டோம். தண்ணீர் ஆவியாகி விடாமல் இருக்க தேங்காய் நார் கழிவுகளையும் இட்டோம். இப்போது அவை வளர்ந்த நிலையில் செழித்து நிற்கின்றன.

இதுவரைக்கும் சுமார் 6,000 மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். இதில் 70 சதவீத மரக்கன்றுகள் உயிர் பெற்று வளர்ந்துவிட்டன. கடந்த வருடம், தமிழக வனத்துறையோடு இணைந்து, தென்னேரியில் 1100 மரக்கன்றுகளை நட்டோம், 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் கலந்துகொண்டனர். வருடத்துக்குப் பதினைந்து முறையாவது, நட்ட மரக்கன்றுகளின் நிலையை நேரில் சென்று பார்க்கிறோம். மரம் நடுவதை விட முக்கியமானது அதை முறையாகப் பராமரிப்பது. அதில் தவறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

ஐந்திணையின் குழுவில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள் ஆகியோர் பொறுப்புப் பணிகளில் உள்ளனர். இதன் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மென்பொருள் ஊழியர்களே. தங்களின் அலுவலக பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், இயற்கையின் மீதான அக்கறையாலும், தங்களின் விடுமுறை நாட்களை ஐந்திணை அமைப்போடேயே கழிக்கின்றனர். கல்லூரி மாணவர்களும், மற்ற அலுவலக ஊழியர்களும் பசுமையைப் பேணுவதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர். தமிழ்நாடு தவிர்த்து, ஆந்திரா, கேரளா, கர்நாடக மக்களும் எங்களோடு இணைந்து செயல்படுகின்றனர்.

இத்துடன், இயற்கை விளைநிலங்களைச் சென்று பார்ப்பது, மொட்டை மாடித் தோட்டம், ஏரி, குளங்களைச் சுத்தப்படுவது ஆகிய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். கழிவுகள் நிறைந்திருந்த பெரும்பாக்கம் ஏரியொன்று சமீபத்தில் புனரமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு மரம் நடும் நிகழ்ச்சி, திரிசூலம் மலைப்பகுதியில் மரம் நடும் விழா உள்ளிட்ட நிகழ்வுகள் வரும் வார இறுதிகளில் நடக்க இருக்கின்றன.

பசுமை நோக்கிய ஐந்திணை பயணம் குறித்த விவரங்கள் எங்களின் முகநூல் பக்கத்தில்பதிவிடப்படுகிறது. விருப்பமும், நேரமும் கொண்டவர்கள் ஐந்திணையோடு பயணிக்கலாம் வாருங்கள்.

http://tamil.thehindu.com/tamilnadu/மரம்-வளர்க்க-கரம்-நீட்டும்-இளைஞர்களின்-ஐந்திணைப்-படை/article7599861.ece

Link to comment
Share on other sites

  • 1 month later...

‘கூடுதலாகச் சமையுங்கள் - எங்களை அழையுங்கள்’- ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ‘பசியாற சோறு’

soru_2583098h.jpg

‘உணவை அளவாகச் சமையுங்கள், வீணாக்காதீர்கள்’ என விழிப்புணர்வு வாசகங்களைக் கேட்டிருக்கலாம். ஆனால் ‘கூடுதலாக உணவைச் சமையுங்கள்; மீதமிருப்பதை எங்களிடம் கொடுங்கள்’ எனக்கூறி மீதமாகும் உணவுகளை சேகரித்து ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார் கோவையைச் சேர்ந்த ராஜாசேதுமுரளி.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த இவர் ‘பசியாற சோறு’ என்ற அமைப்பைத் தொடங்கி தற்போது நண்பர்கள் 20 பேருடன் இணைந்து இந்த சேவையை செய்து வருகிறார். நாடகங்களிலும், திரைப்படங்களிலும் குறிப் பிடத்தகுந்த வேடங்களில் இவர் நடித்து பெயர் பெற்றிருந்தாலும், ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பதையே தனது முழுநேர சேவையாகவும், அதுவே மனநிறைவைத் தருவதாகவும் கூறுகிறார்.

அவர் கூறியதாவது: சாலையோரங்களில் உணவுக்காக ஏங்கியிருப்பவர்களைப் பார்க்கும் போது, ஒருவேளை உணவாவது அவர்களுக்கு கொடுக்க வேண்டுமெனத் தோன்றும். அதற்காகவே 20 வருடங்களாக இந்த அமைப்பை நடத்தி வருகிறேன். என்னால் எல்லா ஆதரவற்றவர்களுக்கும் உணவளிக்க முடியாது. ஆனால், எங்கெல்லாம் உணவு கொடுக்கிறார்களோ, எங்கெல்லாம் உணவு மீதமிருக்கிறதோ அதைச் சேகரித்துக் கொடுக்க முடியும்.

சிறுவயதில், ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் மரவள்ளிக் கிழங்கின் தோலை தின்று நான் பசியாறியிருக்கிறேன். ஒருவேளையாவது நல்ல உணவு கிடைக்காதா என நான் ஏங்கிய நாட்கள் எல்லாம் இருக்கின்றன. எவ்வளவு முன்னேறினாலும் சிரமப்பட்ட காலத்தை மறக்கக்கூடாது என்பார்கள். அவ்வப்போது எனது கடந்த காலத்தை யோசித்து பார்க்கும்போது, நான் இப்போது உண்கின்ற உணவின் அருமை தெரிகிறது.

தொடக்கத்தில் ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதிலிருந்து எங்கள் பணி தொடங்கியது. பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளின்போது அன்னதானம் வழங்கத் தயாராக இருப்பவர்களை வாகனம் வைத்து அழைத்துச் சென்று ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுத்து உதவும் திட்டத்தையும் கையில் எடுத்தோம். அதன் பிறகு, ஏன் நாமே உணவுகளை சேகரித்து ஆதரவற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் நேரடியாக களம் இறங்கியுள்ளோம். தீபாவளிப் பண்டிகைக்கு 70 ஏழை, எளிய குடும்பங்களுக்கு, தேவையான அளவு மளிகைப் பொருட்கள் வழங்க வேண்டுமென்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறோம் என்றார் ராஜாசேதுமுரளி.

உணவு இல்லாதவர்களுக்கு ஒரு நேர உணவளிக்க நினைக்கிறீர்களா? தகவலை எங்களிடம் கூறுங்கள். ஒரு படி அரிசியை அதிகமாகப் போட்டு சமையுங்கள். அதைத் தேடி வந்து வாங்கிச் சென்று தேவையானவர்களிடம் சேர்க்கிறோம் என்ற வாக்குறுதியுடன் மக்களை தேடி பயணிக்கிறது இந்த ‘பசியாற சோறு’ அமைப்பு.

http://tamil.thehindu.com/tamilnadu/கூடுதலாகச்-சமையுங்கள்-எங்களை-அழையுங்கள்-ஆதரவற்றோருக்கு-உணவளிக்கும்-பசியாற-சோறு/article7757306.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

29 வருடங்களாக சம்பளம் வாங்காமல் சேவை செய்த சென்னை டாக்டர் டி.வி.தேவராஜன் 

gallerye_212353614_1376149.jpg

டாக்டர் டி.வி.தேவராஜன் MBBS, MD, FRCP(G), D.Sc.,

நாட்டின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவர்
அப்துல்கலாம் கையால் பிசிராய் விருது வாங்கியவர்.

சமீபத்தில் கூட எப்ஐசிபி எனப்படும் மருத்துவர்களுக்கு தரப்படும் மிக உயர்ந்த விருதை பெற்றவர்.
சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவகுழுமத்தில் அட்வான்ஸ் பீவர் கிளினிக் பிரிவின் தலைவராக இருப்பவர்.

பத்திற்கும் அதிகமான மருத்துவ புத்தகங்கள் எழுதியவர் இவர் எழுதிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழ் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அதிகம் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது.
இவர் நாற்பது வருடமாக சம்பளம் வாங்காமல் மருத்துவக்கல்லுாரி பேராசிரியராக வேலை பார்த்தார் என்று ஒரு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை உறுதிப்படுத்திக்கொள்ளவதற்காக எங்கெங்கோ தேடி அவரது மொபைல் எண்ணைக்கண்டு பிடித்தேன். அவரிடம் இதுவரை அறிமுகம் இல்லை என்பதால் நான் உங்களிடம் பேசவேண்டும் என குறுஞ்செய்தி(sms) கொடுத்தேன்.சிறிது நேரத்தில் அவரே போன் செய்தார்.மிகவும் அன்புடனும் நட்புடனும் தனக்கான தகவலை பகிர்ந்து கொண்டார்.
நாற்பது வருடம் என்பது தவறு, சரியாக சொல்வதானால் 29 வருடம் நான் சம்பளம் வாங்காமல் பணியாற்றினேன்.சம்பளம் வாங்காமல் பணியாற்றியதால் நான் பணக்காரனோ என எண்ணிவிடவேண்டாம் நடுத்தர குடும்பத்தில் பிறந்து சிரமப்பட்டு படித்தவன்தான்.

வெறுமனே எம்பிபிஎஸ் மட்டும் படிக்காமல் எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு படித்துவிடுவது என படித்தேன் அதனால்தான் என் பெயருக்கு பின்னால் அத்தனை ஆங்கில எழுத்துக்கள்.
படித்த படிப்புக்கு உடனடியாக சென்னை மருத்துவக்கல்லுாரியில் உதவி பேராசிரியர் வேலை கிடைத்தது.காலையில் பேராசிரியர் மாலையில் சொந்த கிளினிக்கில் மருத்துவம்.

மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது எனக்கு பிடித்துப்போனது எந்த வகுப்பை மிஸ் பண்ணினாலும் என்னுடைய வகுப்பை மிஸ் பண்ணமாட்டார்கள் நானும் எதை வேண்டுமானாலும் விட்டுவிடுவேன் ஆனால் கல்லுாரிக்கு சென்று பாடம் நடத்துவதை விடமாட்டேன்.
சென்னை மருத்துவக்கல்லுாரியும் அதன் மாணவர்களும் எனக்கு மிகவும் பிடித்துப்போன காலகட்டத்தில்தான் ஒரு சிக்கல் எழுந்தது.சம்பளம் வாங்கக்கூடிய உதவி பேராசிரியர்களுக்கு இடமாற்றம் உண்டு, சம்பளம் வேண்டாம் கவுரவ பேராசிரியராக இருந்து கொள்கிறேன் என்றால் இடமாற்றம் கிடையாது என்று ஒரு விதி இருந்தது, எனக்கு கிளினிக் வருமானமே போதுமானதாக இருந்ததது என்பதைவிட என் மாணவர்களைவிட்டு வேறு இடத்திற்கு செல்ல விருப்பம் இல்லை என்பதுதான் உண்மை என்பதால் சம்பளம் வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துவிட்டேன்.


நான் எழுதிக்கொடுக்கும் போதே பல ஆயிரம் ரூபாய் சம்பளம் அதன்பிறகு 29 வருடங்களில் எத்தனை எத்தனை ஆயிரமோ உயர்ந்தது அதை எல்லாம் கணக்கு பார்த்தால் பல லட்சம் இருக்கும் ஆனால் அதை எப்போதுமே நினைத்ததும் இல்லை வருத்தப்பட்டதும் இல்லை. நான் எடுத்த முடிவும் எடுத்துக்கொண்ட காரியமும் சரியானதே என்பதை இப்போதும் என் மனதும் சொல்கிறது. என்னிடம் படித்ததை பெருமையாக என் மாணவர்களும் சொல்கிறார்கள் எனக்கு அது போதும். இன்று பல மருத்துவர்கள் என் பெயரை சொல்லி என் ஆசிரியர் என்று சொல்லும்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

ஒய்வு பெற்ற பிறகு பல பல்கலைக்கழகங்களுக்கு கெளரவப் பேராசிரியராக இருந்துள்ளார். இதே போல் பல கல்லூரிகளுக்கு எக்சாமினராக சென்று வந்துள்ளார். இந்திய மருத்துவரில் சிறந்தவர் யார் என்ற பிஎம்ஜே விருதுக் குழுவில் ஒரு நீதிபதியாகவும் இருந்துள்ளார்.

இப்போது 71 வயதாகிறது கொஞ்சமும் சுறுசுறுப்பு குறையாமல் ஒரு பக்கம் மருத்துவத்தையும், இன்னோரு பக்கம் 'டெக்ஸ்ட் புக் ஆப் மெடிசின்' என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் எழுதி முடித்துள்ளார். நவீன மருத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த புத்தகம் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மகத்தான பொக்கிஷமாக விளங்கப்போகிறது.

இது ஒரு பிரம்மாண்டமான புத்தகம்தான் இருந்தாலும் இதில் இருந்து ஒரு பைசா கூட தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு முழுக்க முழுக்க அதன் பலன் அனைத்தும் வாங்கும் மாணவர்களுக்கு போய் சேரட்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

சந்தேகம் இல்லாம் டாக்டர் டி.வி.தேவராஜன் மகத்தான மருத்துவர்தான்.

இவரது மெயில் முகவரி:drtvd1944@gmail.com

http://www.dinamalar.com/news_detail.asp?id=1376149

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

தமிழகத்தில் பல்லாயிரம் 'நான் கடவுள்' மகேந்திரன்கள்!

சென்னை - வளசரவாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் தன்னார்வலர்கள். | படம்: ஆர்.சரவணன்
சென்னை - வளசரவாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் தன்னார்வலர்கள். | படம்: ஆர்.சரவணன்

வெள்ளம் சூழத் தொடங்கியதும் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தேன். பின்னர், இரண்டு நாட்கள் கழித்து கடுமையான மழையில் எனது வீட்டில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக பயணிக்கத் தொடங்கினேன்.

ஒரு தெருவை கடந்துதான் என் வீடு இருக்கும் தெருவை அடைய முடியும். அந்தத் தெருவில் இடுப்பளவு மேல் தண்ணீர். அங்கே ஒருவர் ப்ளூ கலரில் இருக்கும் தண்ணீர் ட்ரம்மை தண்ணீரில் நீந்தியபடி தள்ளிக் கொண்டிருந்தார். நானும் அவருக்கு உதவலாமே என்று தள்ளினேன். ட்ரம்மை தள்ள முடியவில்லை, மிகவும் கடினமாக இருந்தது.

ட்ரம்முக்குள் என்ன இருக்கிறது என்று கேட்பதற்கு கூச்சமாக இருந்தது. சிறிது தூரம் தள்ளிவிட்டு, "உள்ளே என்ன சார் இருக்கு?" என்றேன். "பிஸ்கட்ஸ், மில்க் பாக்கெட்ஸ், பிரெட்ஸ், சில மளிகை பொருட்கள்" என்று ஆங்கிலத்தில் பேசினார். ஆங்கிலத்தில் பேசுகிறார், நமது தெருவில் இப்படி ஒருவரா என்று அடுத்ததாக "நான் உங்களை இந்த ஏரியாவில் பார்த்ததில்லையே.. எங்கு இருக்கிறீர்கள்?" என்றேன்.

"நான் இந்த ஏரியாவே இல்ல ஜி.. நான் தாம்பரத்துல இருக்கேன்" என்றார். "இங்கே சொந்தக்காரங்க இருக்காங்களா" என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன். "நோ ஜி... இந்த ஏரியாதான் ரொம்ப பாதிப்பு, தேர் இஸ் நோ ஃபுட்ஸ், மில்க்ஸ் என்று டி.வியில் பார்த்தேன். அதான் தாம்பரத்தில இருந்து வந்தேன்" என்றார்.

நாமும் இதே தெருவில்தான் இருக்கிறோம்; பாதிப்பில் இருந்து மீளாததால்தான் என்னவோ நமக்கு இந்த எண்ணம் இன்னும் வரவில்லையே என்று எனக்கு நானே வெற்று ஆறுதல் சொல்லிக்கொண்டேன். அடுத்த நொடியே "உங்கள் பெயர் என்ன?" என்றேன். "மகேந்திரன் ஜி.. ஐ.டி.ல ஒர்க் பண்றேன்" என்றார்.

"தாம்பரத்துல இருந்து எப்படி வர்றீங்க. பல்லாவரம் தாண்டி பஸ், டூவிலர் எல்லாம் வந்திருக்காதே.. எப்படி வந்தீங்க" என்று அடுத்த கேள்வியை ட்ரம்மை தள்ளிக்கொண்டே கேட்டேன். "என் பைக் குரோம்பேட்டை பெட்ரோல் பங்க்ல இருக்கு. பல்லாவரத்துல இருந்து லிஃப்ட் கேட்டு இங்க வந்தேன். அப்புறம் இப்ப வாக் பண்ணிட்டு வர்றேன்" என்றார்.

அவர் சொன்ன அடுத்த நிமிடம், நாம் கடவுள்களில் ஒருவரை கண்டுவிட்டோம் என்ற உத்வேகத்தில் ட்ரம்மை முழூவீச்சில் தள்ளினேன். நாங்கள் தள்ளிக்கொண்டே போகும்போது, இடது பக்கமாக ஒரு தெரு திரும்பியது. அப்போது, "ஜி... ஐயம் கோயிங் டு திஸ் ஸ்ட்ரீட் ஃபார் ஹெல்ப்" என்று தனியாக ட்ரம்மை தள்ளிக்கொண்டு திரும்பினார்.

நான் நின்றுக் கொண்டே அந்தக் கடவுள் ட்ரம்மை தள்ளிக்கொண்டே போவதைப் பார்த்து கொண்டிருந்தேன். அதுவரை நம்ம வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் போச்சே என்று சோகமாக இருந்தவன், கடவுளைச் சந்தித்த அடுத்த நொடி "என்ன பொருள் போனால் என்ன, சம்பாதித்து வாங்கிவிடலாம்... நம்மால் முடிந்தததைச் செய்வோம்" என்ற உற்சாகத்துடன், வெள்ளத்தால் மூழ்கியிருந்த எனது வீடு உள்ள தெருவை நோக்கி நீந்தினேன்!

'நான் கடவுள்' என்று சொல்லாமல் எனக்கு தரிசனம் தந்த மகேந்திரனைப் போன்ற பல்லாயிக்கணக்கானோரை இப்போது தமிழகத்தில் காணலாம். நீங்களும் கூட மகேந்திரனாக செயல்பட்டிருக்கலாம் அல்லது மகேந்திரன்களை தரிசித்திருக்கலாம்.

மகேந்திரன்களால் நிச்சயம் குறையும் பெருமழை!

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%A

 

Link to comment
Share on other sites

  • 3 months later...

தனி ஒருவன்...

பச்சை அரக்கனை அழிக்கும் யுத்தத்தில் தனி ஒருவன்...


ஆறு,குளம்,ஏரிகளில் முன் எப்போதும் இல்லாத அளவு ஆக்ரமித்துவரும் நீர்வாழ் தாவாரம் அது.

இந்த தாவரம் வந்துவிட்டால், வளர்ந்துவிட்டால் அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் முடியாது, அவ்வளவு சீக்கிரம் அழித்துவிடவும் முடியாது.

தனது தடிமனான இலைகளால் தண்ணீரை அதிகம் உறிந்து குடித்து வெகு சீக்கிரம் ஆறு குளம் ஏரியையை வறட்சிக்கு உள்ளாக்கும்.
 

gallerye_150758415_1488023.jpg
next.png

கோடை காலங்களில் ஏரி,குளங்களின் நீர் வெகு சீக்கிரம் வெப்பமடைந்து ஆவியாக மாறி வீணாவதற்கு இந்த தாவரமே காரணம்

வெள்ள நேரத்தின் போது ஆற்றுப்போக்கினை தடுத்து நீரினை ஊருக்குள் திருப்பி பெரும் ஊறு விளைவித்து நாசம் செய்யவல்லது இந்த தாவரம்

யானைக்கால் போன்ற கொடிய நோயினை பரப்பும் கொசுக்களுக்கு அடைக்கலம் தரும் நண்பன்,மீன்கள் மற்றும் கால்நடைகளுக்கு எமனும் இந்த தாவரமே.

விவசாயத்திற்கும் குடிநீர் ஆதாரத்திற்கும் இயற்கை சுற்றுச்சூழலுக்கும் நாசம் மட்டுமே ஏற்படுத்தும் இந்த தாவரம் முப்பதாண்டுகளுக்கு வாழும் தன்மை கொண்டது, அதன்பிறகும் மக்கி விஷமாகி தான் வளர்ந்த நிலத்தை பாழ்படுத்தும் தன்மை கொண்டது.

இருக்கும் நீர் ஆதாரத்தை எல்லாம் சொட்டு நீர் கூடவிடாமல் குடித்து எங்கும் பச்சை பசலென காட்சிதரும் இந்த பச்சை அரக்கனின் பெயர் ஆகாயத்தாமரை இதற்கு வெங்காயத்தாமரை என்றும் ஒரு பெயர் உண்டு.

நாட்டின் எதிர்காலம் அல்ல நிகழ்காலமே இந்த பச்சை அரக்கனால் அழிந்து போய்விடக்கூடாது என விவசாயிகள் சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள் ஆனாலும் களமிறங்கி உறுதியாய் உழைப்பவர்கள் ஒரு சிலரே.

அந்த ஒரு சிலரில் தனி ஒருவனாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒருவர் ஆகாயதாமரை செடியை வேருடன் பிடுங்கி எடுத்து அழித்துவருகிறார்.

அவர்தான் ஆறுமுகம் பொன்னுசாமி

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர், நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். குடும்ப சூழ்நிலை காரணமாக அதற்கு மேல் பள்ளிக்கு போகாமல் கிடைத்த வேலைகளை பார்த்து வந்தார். இப்போது சின்ன சின்னதாய் சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருவதால் அதில் கொஞ்சம் தீவிரமாய் இருப்பவர்.அது கூட சினிமா ஆசையால் அல்ல தான் இதில் பிரபலமானால் தான் சொல்லும் ஆகாயதாமரைக்கு எதிரான கருத்தும் பிரபலமாகுமே என்ற ஆதங்கத்திற்காகவும் கொஞ்சம் வாழ்வாதாரத்திற்காகவும்.

இவர் கோவை குறிச்சி குளக்கரையில் உள்ள பொங்காளியம்மனின் தீவிர பக்தர் ,கோவிலுக்கு வரும் போதெல்லாம் குளக்கரையில் குப்பையாக சேர்ந்துள்ள ஆகாயதாமரையை பார்த்து வருத்தப்படுவார்.இந்த ஆகாயதாமரை நாளாக நாளாக அதிகமாகிக்கொண்டே போவதை பார்த்து வேதனைப்பட்டவர் திடீரென ஒரு முடிவினை எடுத்தார்.

நம்மால் முடிந்த வரை இந்த ஆகாயதாமரையை அழிப்போம் என்ற எண்ணத்துடன் அதற்கான கொக்கியை தயார் செய்து கொண்டு குளத்தில் இறங்கிவிட்டார்.இது நடந்து கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாகிறது.

குறிச்சி குளம் 330 ஏக்கர் பரப்பளவில் 6 கிலோ மீட்டர் சுற்றளவில் விரிந்து பரந்து கிடக்கிறது.இதை எப்போது சுத்தம் பண்ணி எப்போது முடிப்பது என்பது பற்றி எல்லாம் யோசிக்கவில்லை,நேரம் கிடைக்கும் போதெல்லாம் குளத்தில் இறங்கி ஆகாயதாமரையை வேரோடு பிடுங்கி எடுத்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்.

சினிமா தொடர்பான சூட்டிங்குகளுக்கு வெளியூர் சென்று விட்டால் மட்டும் இவரை இங்கு காணமுடியாது மற்றபடி இவருக்கு புத்தாண்டு பொங்கல் தீபாவளி எல்லாம் இந்த குளத்தில்தான் ,காலை என்றும் மாலை என்றும் பராமல் தனி ஒருவனாக இவர் குளத்தை சுத்தம் செய்வதை அந்த வழியாக போகும் போது பார்க்கலாம்.

விபத்தில் சிக்கி கை எலும்பு எல்லாம் உடைந்து போன நிலையில்கூட கட்டுப்போட்டபடி வந்து ஆகாயதாமரையை அழித்தவர்.காரணம் கேட்டால்,' இவ்வளவு தீவிரமாக நான் இயங்கினாலும் கூட, என்னைவிட தீவிரமா இது வளருதுங்க. நான் ஒரு பக்கம் எடுத்து முடிக்கிறதுக்குள்ளார இன்னோரு பக்கம் வளர்ந்துருது...இதுல நான் அழிஞ்சாலும் பராவாயில்லை இதுகளை இந்த குளத்தவிட்டு அழிக்காம நான் விடப்போறதில்லை' என்கிறார் உறுதியாக.

கொளுத்தும் உச்சி வெயிலில் வேர்வை ஊற்றெடுக்க இவர் இப்படி வேலை செய்வதை பார்த்து சிலர் இவரை நெருங்கி உங்களுக்கு ஏதாவது பண உதவி தேவையா? என்று கேட்பர்.

ஒரு பைசா கூட வேண்டாம், எனக்கு கொடுப்பதாக நினைக்கும் பணத்தை ஏழை பிள்ளைகள் படிப்பு செலவிற்கு கொடுங்கள், பணமில்லாத உதவி என்றால் உங்கள் ஊர் நீர்நிலையில் உள்ள ஆகாயதாமரையை சுத்தம் செய்யுங்கள், மற்றவர்களையும் சுத்தம் செய்ய உற்சாகப்படுத்துங்கள் அது போதும் என்று மட்டும் சொல்வார்.

நான் சின்ன வயதில் தண்ணீருக்கு ரொம்ப சிரமப்படிருக்கேணுங்க போத்தனுார் ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய வெளியூர் ரயில் பெட்டி தண்ணீரை பிடித்து வாழ்ந்த அனுபவம் எல்லாம் உண்டு.

இனி நம்மால் ஒரு ஏரி குளத்தை உண்டு பண்ணமுடியாது இருக்குற ஏரி குளத்தை காப்பாத்தினாலே போதும் அந்த காப்பாத்திற முயற்சியில ஒண்ணுதாங்க இந்த ஆகாயதாமரையை அழிக்கிறது...

இது இயக்கமா மாறி நம் நீர் நிலைகளை நாமே காப்பாத்தணும் என்கிற முடிவோடு ஆகாயதாமரையை அழிக்கிற களத்துல நிச்சயம் ஒரு நாள் மக்களே இறங்குவாங்க அதுவரை நான் இந்த குளத்துலதான் இருப்பேன்...என்று சொல்லும் இவருடன் பேசுவதற்கான எண்:9443720563.(ஆகாயதாமரையை அழிக்கும் வேலை செய்யும் போது மட்டும் போன் பேசமாட்டார் ஆகவே போனை எடுக்கவில்லை என்றால் அவர் வேலையில் அல்ல..அல்ல... ஆகாயதாமரையை அழிக்கும் வேள்வியில் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்)

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

http://www.dinamalar.com/news_detail.asp?id=1488023

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் நடத்தும் ஏடிஎம் செக்யூரிட்டி

குழந்தைகளுக்கு இலவசப் பாடம் எடுக்கும் விஜயேந்தர்
குழந்தைகளுக்கு இலவசப் பாடம் எடுக்கும் விஜயேந்தர்

டெகரடூனின் அலகாபாத் வங்கியின் ஏடிஎம் அறையின் பாதுகாவலராக முன்னாள் ராணுவ வீரர் விஜயேந்தர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16 வருடங்களாக தனது பணியுடன் சேர்த்து ஏழைக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகராக இருப்பது டெகரடூன். இதன் ஐ.எஸ்.பி.டி பேருந்து நிலையம் அருகில் அலகாபாத்தின் வங்கி அமைந்துள்ளது. இதை ஒட்டியுள்ள வங்கியின் ஏடிஎம் இரவு நேரக் காவலராக விஜயேந்தர்(54) எனும் முன்னாள் ராணுவ வீரர் பணியாற்றி வருகிறார். இவர் அக்கம் பக்கம் வசிக்கும் ஏழைக் குழந்தைகள் மற்றும் தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் பாடம் சொல்லித் தருகிறார். துவக்கப்பள்ளியின் பாடங்களை விஜயேந்தரிடம் படிக்கும் குழந்தைகளில் பலர் பள்ளிக்கு செல்லாதவர்கள். இவர்களில் சிலர், விஜயேந்தர் அளிக்கும் ஊக்கத்தினால் கவரப்பட்டு பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய விஜயேந்தர் கூறுகையில், ‘பாதுகாப்பு எனும் பெயரில் பலசமயம் வெறுமனே அமர்ந்து இருக்க வேண்டியதாக உள்ளது. இத்துடன், குழந்தைகளுக்கு துவக்கக் கல்விப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பது ஒன்றும் சிரமமாக இல்லை. என்னிடம் படித்து பல குழந்தைகள் இன்று பல பிரபல கல்லூரிகளில் இணைந்து பயின்று வருகின்றனர்.’ எனத் தெரிவித்தார்.

இதற்காக, குழந்தைகளிடம் எந்தவிதக் கட்டணமும் பெறாமல் இலவசமாகவே சொல்லித் தருகிறார் விஜயேந்தர். மாலைவேளைகளில் அப்பகுதியில் மூடப்பட்டு விடும் கடைகளின் வாசலில் குழந்தைகள் அமர்ந்து கல்வி பயில்கின்றனர். இதற்கு உதவியாக அந்த வங்கிப் பலகையின் விளக்குகள் உள்ளன. நாட்டில் பலரும் செய்து வரும் பல்வேறு வகையான சமூகத் தொண்டுகளில் விஜயேந்தரின் பணி தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0

Link to comment
Share on other sites

சுவான்சி நகரம்- 1   (Swansea City, UK)

இங்கிலாந்து வந்து மூன்று நாட்கள் ஆகிறது. ஆனாலும் மனம் ஜப்பானை சுற்றியே வந்து கொண்டு இருந்தது. அதுவும் இலண்டன் மாநகரின் இரயில் தொடர்வண்டிகளில் செல்லும் போது ஒரே இரைச்சலும், அழுக்கான சூழலும், தோக்கியோ நகரின் நிசப்தமான தொடர்வண்டிகளின் அருமையினை   உணர்த்திக் கொண்டே இருந்தது. 
 
ஏன்  என் மனம் ஜப்பானோடு ஒப்பிடுகிறது என எனக்கே தெரியவில்லை. முக்கியமாக‌, ஜப்பானின் பெரும்பாலான இரயில் நிலையங்களில் லிப்ட் வசதி உண்டு. ஆகவே பெரும் சுமையோடு வரும்போது இந்த லிப்ட் வசதி பெரும் வரப் பிரசாதம். அது மட்டுமில்லாமல், விழிச்சவால் உடைய மாற்று திறனாளிகளுக்கு எளிதாக இரயில் நிலையம் முழுவதும் சென்று வர‌ அவர்களுக்கென்று வழிகாட்டும் பிரத்யோக கற்கள் பதித்த தடங்கள் இருக்கும். இப்படி எந்த வசதியும் இலண்டன் மாகரின் மெட்ரோவில் காண முடியவில்லை. ஒரு சில இரயில் நிலையங்களிம் மட்டும் மாற்றுத் திறனாளிகளின் சக்கர வண்டிகள் செல்லும் வசதி உள்ளது. இத்தனைக்கும் உலகிற்கே முன்னோடியாக நூறு வருடங்களுக்கு முன்பு நிலவறை தொடர் வண்டி நிலையங்களை (under ground train station - Tube) அமைத்தவர்கள் பிரித்தானியர்கள். 
 
நேற்றைய இரவில் இலண்டன் நகரில் இருந்து 3 மணி நேர இரயில் பயணம் செய்து சுவான்சி நகருக்கு வந்து சேர்ந்தேன். அழகான கடற்கரை நகரம். இலையுதிர் காலத்தின் மிரட்டலில் தவித்து கொண்டு மரங்கள், பசும் புல்வெளிகள் நிறைந்த வீடுகள், பூங்கா என அழகியல் நிறைந்த ஊராக தெரிந்தது. 
 
உள்ளூர் பேருந்துகள் அனைத்தும் தெற்கு மற்றும் மேற்கு வேல்ஸ் மாகாணத்தினை அடிப்படையாக கொண்ட பர்ஸ்ட் குழும‌ம் (First groups) எனப்படும் தனியார் நிறுவனத்தினரால் இயக்கப்படுகிறது.  ஸ்ட்ரீட் கார் எனப்படும் மெட்ரோ பேருந்துகள், கிரேகவுண்ட், சிமுரு கிளிப்பர் என பல்வேறு பெயர்களின் தனது பேருந்து சேவையினை செய்து வருகிறது. இதில் பல பிரத்யோக வசதிகள் உள்ளது. முக்கியமானது எனச் சொன்னால், சக்கர நாற்காலியில் பயணிக்கும் மாற்றுதிறனாளிகள் நேரடியாக சாலையில் இருந்து பேருந்தில் ஏறி கொள்ளலாம். விழிச்சவால் உடைய மாற்றுத் திறனாளிகளுக்காக பயிற்றுவிக்கப்பட்ட நாய்களை இலவசமாக உடன் பயணிக்க என எல்லா வசதிகளும் உள்ளது.  பெருவாரியான  பேருந்துகளில் வைபை (WiFi) இணைய வசதி வந்து விட்டது. நாளை வெளியில் சுற்றி விட்டு வந்து நிறைய‌ எழுதுகிறேன்.
 
சுவான்சி நகரின் கடற்கரை  பாதையான‌ ஆய்ஸ்டர் மவுத் சாலையில் (Oyster Mouth Road) சுவான்சி பல்கலைக் கழகம் (Swansea University Main Campus) உள்ளது. அதன் பின்புறம் மலைப் பகுதியில் ஸ்கெட்டி (Sketty) எனப்படும் பகுதி உள்ளது. அங்குள்ள "ஸ்கொயர் பெக் தேநீர் நிலையம்" எனப்படும் (Square Peg Coffee House) சிற்றுண்டி சாலைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என அங்கு சென்றேன். 
 
DSC_0980.JPG
Square Peg Coffee House, Sketty, Swansea City, UK

 

 

 
 
தேநீர் அருந்தி கொண்டே அங்கு வாசிக்க நிறைய ஆங்கில நாவல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த மாதத்திற்கான ஓவியர்கள் என தலைப்பிட்டு    சில அற்புதமான வண்ண ஓவியங்களை வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்திருந்தார்கள். முற்றிலும் வித்தியாசமாக இருந்ததால், அந்த கடையினை ஒரு முறை முழுதாக சுற்றிப் பார்த்தேன். அப்பொழுது அங்கே வைக்கப்பட்டிருந்த  கரும்பலகையில் அந்த கடையின் இலக்கு என்ன என எழுதி இருந்தார்கள். 
 
DSC_0976.JPG
Square Peg Coffee House, Sketty, Swansea City, UK

 

DSC_0974.JPG
Square Peg Coffee House, Sketty, Swansea City, UK

 

DSC_0975.JPG
Square Peg Coffee House, Sketty, Swansea City, UK
 
 
ஒரு தேநீர் கடைக்கு என்ன பெரிய இலக்கு இருக்கும் என ஆச்சரியத்துடன் படித்தேன். இக்கடையில் வரும் இலாபத்தின் பெரும்பகுதியினை கென்யாவில் (Kenya) வசிக்கும் ஏழைக் குழந்தைகளின்  வாழ்க்கை மேம்பாட்டிற்கு செலவிடுகிறோம் என எழுதி இருந்தது. 
 
வியப்பின் உச்சிக்கு சென்ற நான், அங்கிருந்த யுவதியிடம் நான் ஜப்பானில் இருந்து வந்துள்ளேன், உங்கள் கடையினை பற்றிய மேலதிக தகவலை சொல்ல முடியுமா எனக் கேட்டேன். அந்த யுவதியும் சிரித்துக் கொண்டே அக்கடையில் இருந்த மற்றொரு இளைஞரான ஜோஸ் என்பவரை அழைத்தார்.   சற்றே நீண்ட தாடி  வைத்திருந்த இளைஞர் ஒருவர் வந்தார். ஏறத்தாழ பார்ப்பதற்கு ஆங்கில புராதன படங்களில் வரும் போர் வீரனைப் போல இருந்த ஜோஸ் (Jose) சிரித்து கொண்டே என்னிடம் கைகுலுக்கினார். 
 
 
DSC_0984.JPG
With Mr. Jose, Square Peg Coffee House, Sketty, Swansea City, UK
 
என்னை அறிமுகப் படுத்திக் கொண்ட பின்பு உங்கள் கடையின் வருமானத்தில் கென்ய குழந்தைகளுக்கு உதவி செய்கிறீர்கள் என எழுதி இருந்ததை படித்தேன், மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் என்றேன். ஜோஸ் சிரித்து கொண்டே நன்றி என்றார். பின்னர் ஜப்பானில் இருந்து முழுமதி அறக்கட்டளை (Muzhumathi Foundation, Japan) மூலம் எமது நண்பர்கள் எவ்வாறு இந்தியாவில், தமிழ் மாணவர்களின் உயர் கல்விக்கு உதவுகிறோம் என சொன்னேன். அவரும் எனக்கு வாழ்த்துகள் சொன்னார். 
 
பின்னர் எப்படி இவ்வாறு ஒரு சமூக தொண்டு செய்ய திட்டமிட்டீர்கள் என கேட்டேன். அவரது நண்பர்கள் உட்பட சிலர் சேர்ந்து ஒரு அறக்கட்டளை நோக்கம் உடைய வர்த்தக நிறுவனம் ஒன்றினை தொடங்கி, அதில் வரும் இலாபத்தில் ஏழை நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு உதவ திட்டமிட்டதாக தெரிவித்தார். இது மட்டுமில்லாமல், நிறைய சமூக பணிகளையும் இவர்களது நண்பர்கள் முன்னெடுப்பதாக கூறினார். எதிர்வரும் நவம்பர் 11ஆம் தேதி இந்திய முன்னாள் இராணுவத்தினருக்கு நல நிதி வசூலிக்கும் தேநீர் சந்திப்பினை நிகழ்த்தவிருப்பதாகவும், இங்கு இருந்தால் அவசியம் வரவும் என அழைப்பும் விடுத்தார். 
 
இது போன்ற விழாக்களில் குறும்படங்கள் மற்றும் சிறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி அதில் சேரும் பணத்தினை எங்களது அறக்கட்டளையின் மூலம் உள்ளூரில் தெருவோரத்தில் வசிக்கும் வீடடற்ற மக்களுக்கு தங்கும் வசதியும், கென்யாவில் கைவிடடப்பட்ட நிலையில் தெருவில் வசிக்கும் குழந்தைகளின் வாழ்க்கைக்கான‌ மேம்பாட்டிற்கும் உதவுகிறோம் எனச் சொன்னார்.  
 
உண்மையில் இது போன்ற இளைஞர்கள்தான் நிகழ் கால மனித மேம்பாட்டின் ஆதர்சனமாக பார்க்கிறேன். நிச்சயம் இது போன்ற இளைஞர்கள் கூட்டம் தமிழகத்தில் வர வேண்டும். அவ்வாறு வரும் இளைஞர்களை நம் மக்கள் ஊக்குவிக்க வேண்டும்.
 
நீங்கள் எப்பொழுதாவது சுவான்சி நகருக்கு சென்றால் இந்த தேநீர் விடுதிக்கு செல்லுங்கள். இதன் மூலம் ஒரு ஆப்ரிக்க குழந்தைக்கு உதவ முடிந்தால் அந்த புண்ணியமும் உங்களுக்கு சேரும். 
 
இக்கடையினை பற்றி மேலும் தகவல் அறிய‌
 

http://vedichi-sudhagar.blogspot.ch/2015/11/1-swansea-city-uk.html

Link to comment
Share on other sites

  • 3 months later...

ஊருக்கு உழைத்திடல் யோகம்..

gallerye_203622749_1554800.jpg

gallerye_203630769_1554800.jpg

gallerye_203644717_1554800.jpg

 

gallerye_203650503_1554800.jpg

மதுரை மாவட்டம் மேலுார் வட்டத்தில் உள்ளது அரிட்டாபட்டி
ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்த குடைவரை கோவிலும்,இரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்த சமணர் படுக்கைகளும் என்று புராதனப்புகழ் கொண்ட இடமாகும்.

இவ்வளவு அரிதான சரித்திர புகழ் மிக்க இடத்தை பார்க்கவரும் பார்வையாளர்களுக்கு ஒரு சிரமம் உண்டு.
கண்மாய்க்குள் இறங்கி நடந்துதான் போகவேண்டும் தண்ணீர் இருக்கும் காலத்தில் போவதற்கு மிகவும் சிரமம், வெளிநாடுகளில் இருந்து வெளியூர்களில் இருந்தும் ஆர்வமாகவருபவர்கள் கரை வரை வந்துவிட்டு அதற்கு மேல் போகமுடியாமல் சோகத்துடன் திரும்பிச்செல்வர்.

ஒரு முன்னுாறு மீட்டர் துாரம் கரையை பலப்படுத்திவிட்டால் போதும் எளிதில் நடந்தும், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் குடைவரை கோவில் வரை போய்வரலாம்.

ஆனால் இந்தக்கரையை யார் பலப்படுத்துவது என்றவுடன் நாமே பலப்படுத்துவோம் என்று ஊர்மக்கள் ஒன்று கூடினர்.இதற்கான ஒருங்கிணைப்பாளராக இருப்பவர்தான் ரமேஷ்

அரசு அலுவலகத்தில் பொறுப்பான பதவியில் இருப்பவரான ரமேஷ்க்கு ஊர் பாசம் அதிகம் இதன் காரணமாக கண்மாய் கரையை பலப்படுத்தும் பொறுப்பை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று முன்வந்தார்.
இவர் இந்தப்பகுதியில் சக நண்பரும் ஆசிரியருமான பாண்டியராஜ் என்பவருடன் சேர்ந்து நானுாறுக்கும் அதிகமான மரங்களை நட்டிருக்கிறார்.இந்த மரங்கள் முழுவதும் பறவைகளுக்கு பசியாற உதவும் ஆலமரம்,அரசமரம்,நாவல்மரம்,அத்திமரம் போன்றவைகளாகும்.

தனது வருமானத்தில் ஐந்து சதவீதம் ஒதுக்கி மரக்கன்றுகள் வாங்கிவிடுவார் பின் அதை தண்ணீர் ஊற்றி பராமரிப்பதற்காக சனி,ஞாயிறு நாட்கள் முழுவதும் குடம் குடமாய் தண்ணீர் சுமப்பார்.இதன் காரணமாக வெட்டவெளியாக வெயில் காய்ந்து கிடந்த இடங்கள் எல்லாம் இப்போது மரங்கள் வளர்ந்து சோலையாக காட்சிதருகிறது.
இதைச் செய்தவர், செய்துவருபவர் நிச்சயம் கரையை உயர்த்தி பலப்படுத்தும் வேலையுைம் தரமாக செய்வார் என்று நம்பினர் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

நாம் போகும் பேது கண்மாய்கரையின் மீது வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக தலையில் ஒரு துண்டை போட்டுக்கொண்டு உட்கார்ந்து வேலையை மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தார்.
கடந்த ஒரு மாதமாக இதே போல நடந்த இந்த வேலை காரணமாக இப்போது கண்மாய் கரை தொன்னுாறு சதவீதம் பலப்பட்டுவிட்டது இன்னும் பத்து சதவீத வேலை முடிந்தால் போதும் பொதுமக்கள் சிரமமின்றி குடைவரைக்கோவில் வரை போய்வரலாம்.

பணம் கொடுத்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டும்,டிராக்டர் வைத்திருப்பவர்களிடம் டிராக்டர் சேவையை பயன்படுத்திக்கொண்டும்,உடல் உழைப்பை கொடுத்தவர்களின் உழைப்பை பயன்படுத்திக்கொண்டும் இவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து பலப்படுத்திய கண்மாய் கரை கம்பீரமாக எழுந்துவருகிறது.

அரிட்டாபட்டியின் புகழ் அகிலமெல்லாம் பரவவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு,பிறந்த மண்ணை நேசிக்கும் மகத்தான ரமேஷ் போன்ற மனிதர்களை எவ்வளவு பராட்டினாலும்தகும்.அவரது எண்:9894397964.
-எல்.முருகராஜ்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1554800

Link to comment
Share on other sites

ஏழை மாணவர்கள் வாழ்க்கையில் ஆனந்தம்,ஆனந்தம்,ஆனந்தமே...

gallerye_172125111_1535474.jpg

gallerye_172132837_1535474.jpg

gallerye_172142594_1535474.jpg

ஏழை மாணவர்கள் வாழ்க்கையில் 


ஆனந்தம்,ஆனந்தம்,ஆனந்தமே...


இது கொஞ்சம் வித்தியாசமான ஆனால் ஆரோக்கியமான முயற்சி.
ஒவ்வொரு வருடமும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் ஏழரை லட்சம் பேரில் எப்படிப்பார்த்தாலும் ஒரு லட்சம் பேர் உயர்படிப்பு படிக்கமுடியாமல் திணறுகின்றனர்.


இந்த திணறுலுக்கு சந்தேகமில்லாமல் வறுமைதான் காரணம்.

1200க்கு 1150ற்கு மேல் வளமையான மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும்,உயர்கல்வி படிக்கும் கனவுகள் சுமந்திருந்தாலும்,உண்மையில் அதற்கான கல்லுாரியில் சேர்வதற்கான விண்ணப்ப மனு வாங்கத்தேவையான இருநுாறு முன்னுாறு ரூபாய் பணம் கூட இல்லாத கொடுமை இவர்களுடையது.

இவர்களில் சிலர்
அப்பா,அம்மா இல்லாதவர்கள்

உடுத்த மாற்று ஆடை கூட இல்லாதவர்கள்
ஒரு வேளை மட்டுமே சாப்பிடுபவர்கள்

பகலில் பள்ளிக்கு போய்விட்டு இரவு வீட்டு வேலை பார்ப்பவர்கள்
செருப்பு வாங்கக்கூட காசு இல்லாதவர்கள்

என்று வறுமையின் உச்சகட்டத்தில் இருந்தாலும் எப்படியோ தட்டுத்தடுமாறி பிளஸ் டூ முடித்துவிடுகின்றனர்,அதுவும் நல்ல மதிப்பெண்களோடு.
உயர்கல்வி மட்டுமே இவர்களையும், இவர்களைச் சார்ந்தவர்களையும் மாற்றிப்போடும் என்ற நிலையில் யார் இந்த மாணவர்களுக்கு உதவுவர்,அதுவும் மெடிக்கல்,என்ஜீனிரிங் போன்ற அதிகம் செலவாகும் படிப்புகளுக்கு..

பாங்க லோன் என்பது இத்தகைய மாணவர்களுக்கு கிடைக்காது என்பதுதான் கசப்பான உண்மை.ஒன்று யாராவது உதவி செய்தால் படிப்பார்கள் அல்லது டீகடையில் கிளாஸ் கழுவுதல் உள்ளீட்ட கிடைத்த வேலைகளை பார்த்துக்கொண்டு முடங்கிப்போவர்.

இப்படிப்பட்ட மாணவ,மாணவியரை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான கல்வியை முழுமையாக தரும் அறக்கட்டளைதான் ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு.


பணம் புகழ் சம்பாதிப்பது அல்ல வாழ்க்கை, அதையும் தாண்டி நாம் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எனது எண்ணத்தோடு ஒத்த கருத்து கொண்ட நண்பர்களுடன் துவங்கப்பட்டதுதான் இந்த ஆனந்தம் அமைப்பு. ஆரம்பத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடத்தினர். 

ஆனால் தேவைக்கு அதிகமான விழிப்புணர்வுடன் இருந்த அந்த கிராமப்புற மாணவர்களுக்கு தேவைப்பட்டது எல்லாம் கல்லுாரியில் சேர்வதற்கான பணம்,பணம் மட்டுமே.


அவர்களில் மெடிக்கல்,என்ஜீனிரிங் சீட்டு கிடைத்தும் பணம் கட்டாமல் இருந்த மாணவர்களில் சிலரை தேர்வு செய்து நான்கு வருட படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டு படிக்கவைக்க முடிவு செய்தனர்.

இதைக்கேட்டதும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், உற்றோர், நண்பர்கள் மட்டுமல்ல, மொத்த கிராமமே கையை காலாக நினைத்து நன்றி கூறுகிறோம் என்றனர்.அன்று தொட்டு இன்று வரை இந்த தொண்டு தடையின்றி தொடர்கிறது.

கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள்.

பெற்றோரை இழந்த அல்லது இல்லாத மாணவர்கள்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள்.

குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருக்கப்போகிறவர்கள்.

உயர்கல்வியில் தகுதி அடிப்படையில் சேர்வதற்கான மதிப்பெண் பெற்றவர்கள்.

இப்படிப்பட்ட மாணவ,மாணவியரை பற்றி பள்ளி தலைமையாசிரியருக்குதான் நன்கு தெரியும் ஆகவே அவர் முதலில் சிபாரிசு செய்யவேண்டும்,பின்னர் ஆனந்தம் குழு நேரிடையாக போய் விசாரித்து உண்மையை உறுதி செய்யும்

இவர்களில் முப்பது பேர் தேர்வு செய்யப்பட்டதும் அவர்கள் விரும்பும் படிப்பு படிக்கலாம்.கல்வி தொடர்பான அனைத்து செலவுகளையும் படித்து முடிக்கும் காலம் வரை ஆனந்தம் ஏற்கும்.

தேர்ந்து எடுக்கப்படும் ஒவ்வொரு மாணவரையும் ஆனந்தம் அமைப்பை சார்ந்தவர் படித்து முடிக்கும் காலம் வரை வழிகாட்டியாக இருந்து உதவுவார்.

படிப்பு மட்டுமின்றி உடல்நலம்,மனநலம்,ஆளுமைத்திறன் மற்றும் வாழ்விற்கு தேவையான நற்பண்புகளை மேம்படுத்துவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

மேலும் அவர்களை பட்டதாரியாக்கியதோடு நிறுத்திவிடாமல் வாழ்வின் சவால்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு ஆனந்தமாகவும்,சமூக அக்கறையோடும் வாழக்கூடிய சிறந்த மனிதர்களாக உருவாக்குதல்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்த சேவையின் காரணமாக இப்போது பலர் இன்போசிஸ்,டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர்.சிலர் டாக்டர்களாக வரவிருக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் காரணமாக முப்பது மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்து படிக்கவைக்கின்றனர்,நீங்க சரியா செய்றீங்க உங்க நோக்கமும் செயல்பாடும் தெளிவா இருக்கு, உங்ககிட்ட கொடுக்கிற ஒவ்வொரு பைசாவும் மாணவர்களுக்கு மட்டுமே பயன்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது ஆகவே எங்களது நன்கொடையையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என பலர் இப்போது மனமுவந்து ஆனந்தம் அமைப்பிற்கு உதவ தயராகிவருகின்றனர்.இதன் காரணமாக இன்னும் கொஞ்சம் கூடுதல் மாணவர்களை படிக்கவைத்து அவர்களது இல்லத்திலும்,உள்ளத்திலும் விளக்கு ஏற்றிவைக்க ஆனந்தம் அமைப்பு விரும்புகிறது.

கொடுக்கும் பணத்திற்கு கணக்கு காட்டுவதுடன் உங்கள் பணத்தால் எந்த மாணவன் எந்த மாணவி படித்துக்கொண்டு இருக்கிறார்,எங்கு படித்துக்கொண்டு இருக்கிறார்,என்ன செய்கிறார் என்பது உள்பட எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் தெளிவான நடைமுறையை ஆனந்தம் மேற்கொண்டு வருகிறது.

சந்திராயன் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை,சொல்வேந்தர் சுகிசிவம்,யுசிஜி துணைத்தலைவர் எச்.தேவராஜ்,சரவணா ஸ்டாக்ஸ் நிர்வாக இயக்குனர் டி.சத்யமூர்த்தி உள்ளீட்டோர் ஆனந்தம் அமைப்பின் செயல்பாடுகளை நேரில் பார்த்து பாராட்டி அவர்களது தொண்டுக்கு தோள்கொடுத்து வருகின்றனர்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,ஆலயம் பதினாயிரம் நாட்டல்,அன்னயாயினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் என்று முழங்கிய பாரதியின் வரிகளை நிஜமாக்க நம்மில் பலருக்கு மனமும் உண்டு பணமும் உண்டு.

அப்படி பணமும் மனமும் கொண்ட உங்களாலும், உங்களுக்கு தெரிந்தவர்களாலும் இது போன்ற மாணவர்களுக்கு தேவைப்படும் கல்வித்தொகை கிடைத்தாலும் ஆனந்தமே.

உங்களுக்கு தெரிந்த வறுமையில் வாடும் கிராப்புற அறிவுபூர்வமான மாணவர்கள் பற்றி அமைப்பினருக்கு தகவல் தந்தாலும் ஆனந்தமே.

இதைப்படித்துவிட்டு உங்களது கருத்துக்களை அமைப்பின் நிறுவனர் தலைவர் எஸ். செல்வகுமாரிடம் (எண்:98410 13532)பகிர்ந்து கொண்டாலும் ஆனந்தமே.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

http://www.dinamalar.com/news_detail.asp?id=1535474

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நமக்கேன் என ஒதுங்கவில்லை...: குப்பையை பூங்காவாக மாற்றிய நல்ல மனிதர்

Tamil_News_large_1599282_318_219.jpg

விருதுநகர்: பொது இடங்களை கடக்கும் போது குப்பை காணப்பட்டால் அகற்றலாம்,இல்லையேல் செடி வளர்க்கலாமே என ஒரு சிலருக்கு ஏற்படும் எண்ணத்திற்கேற்ப, ராஜபாளையத்தில் தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவர் குப்பையாக கிடந்த இடத்தை பூங்காவாக மாற்றி உள்ளார்.

ராஜபாளையம் அடுத்த செட்டியார்பட்டியை சேர்ந்த ராமர், 46. மதர் தெரஸா கல்வி அறக்கட்டளை நிர்வாகியான இவர், கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், வீடற்றவர்களுக்கு சேவை செய்து வருகிறார். இவரது சேவையை மதுரை மாநகராட்சி நிர்வாகம் கேள்விப்பட்டு, இவரது தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, ஆதரவற்றோர் காப்பகத்தை மதுரை செல்லுாரில் நடத்தி வருகிறது.

தினசரி பணி : தினமும் செட்டியார்பட்டியில் இருந்து ராஜபாளையம் வந்து அங்கிருந்து மதுரைக்கு செங்கோட்டை ரயிலில் செல்கிறார். காப்பகத்தில் பணிகளை செய்துவிட்டு, இரவு மீண்டும் வீடு திரும்புகிறார். இது தான் ராமரின் தினசரி பணி. ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் முன் சிறிய அளவில் பூங்கா ஒன்று உள்ளது. பராமரிப்பின்றி பாக்கு பொட்டலம், சிகரெட் காலி பாக்கெட் போடும் இடம், வெற்றிலை எச்சிலை துப்பும் இடமாக மாறியது. இதை பார்த்து முகம் சுளிக்காத ரயில் பயணிகளே இல்லை எனலாம்.

குப்பை பூங்கா : ரயில்வே நிர்வாகம், ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் எச்சரிக்கை போர்டு வைத்தும் இந்த பிரச்னை தொடர்ந்தது. இதை கவனித்த ராமர், இதை பராமரிக்க ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். நிர்வாகத்தினரும் அனுமதி கொடுத்தனர். தற்போது குப்பையாக கிடந்த பூங்கா சுத்தம் செய்யப்பட்டு செடி, புல் தரையுடன், மரங்களும் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கான தனி தண்ணீர் பைப் லைன் அமைத்து தண்ணீரும் தினமும் ஊற்றப்படுகிறது. அருவருப்பாக இருந்த இடத்தை அழகாக மாற்றி, ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதியை அழகுற செய்து உள்ளார் ராமர்.

மரத்தால் மேலும் அழகு : அவர் கூறுகையில், “ரயில்வே ஸ்டேஷனை கடந்து செல்லும்போது, இப்படி வைத்துள்ளார்களே என நினைப்பேன். பராமரிக்க ஆள் இல்லையா, மக்களுக்கு விழிப்புணர்வு இல்லையா என பல கேள்விகள் என்னிடம் எழுந்தது. மற்றவர்களை பற்றி கவலையில்லை, முடிந்தவரை நாம் செய்வோம் என, ரயில்வே கண்காணிப்பாளர் செங்கோல் ராஜை சந்தித்தேன்.அவர்,“ உங்களை போன்றவர்களை தான் தேடுகிறேன்” என கூறி அனுமதி அளித்தார். தண்ணீருக்கும் ஏற்பாடு செய்தனர். இதற்கென உபகரணங்களை வாங்கி பராமரிக்க துவங்கினேன். தற்போது பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுகின்றனர். மரம் வளர்ந்தால் மேலும் இதற்கு அழகு சேரும்,” என்றார்.

வாழ்த்தலாமே : அரசையே நம்பி, நிர்வாகத்தை குற்றம் சொல்லி காலத்தை கழிக்கும் நபர்களுக்கு மத்தியில், தினமும் ரயில் ஏறும் முன் பூங்கா பராமரிப்பை செய்யும் ராமர், பாராட்டப்படவேண்டியவர் தான். நாமும் அவரை வாழ்த்துவோம்.அலைபேசி எண் 94430 83095.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1599282

 

Link to comment
Share on other sites

பார்வையாளர்களை ஈர்க்கும் வேப்பமர பூங்கா: முன்மாதிரியாகத் திகழும் மதுரை வேளாண் கல்லூரி

மதுரை வேளாண் பல்கலைக்கழக கல்லூரியில் பராமரிக்கப்படும் வேப்பமர பூங்கா.
மதுரை வேளாண் பல்கலைக்கழக கல்லூரியில் பராமரிக்கப்படும் வேப்பமர பூங்கா.

தமிழகத்தில் இரண்டரை லட்சம் வேப்ப மரங்கள் இருப்பதாக வேளாண் துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆனாலும், தேவையைவிட மிகக் குறை வாகவே வேப்ப மரங்கள் இருக்கின்றன. புதிய மரக்கன்றுகளை நட்டு, பெரிய மரங்களாக வளர்க்கும் ஆர்வம் இளைய தலைமுறையினரிடம் குறைவாக இருக்கிறது. இவர்களுக்கு முன் மாதிரியாக மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் திகழ்கின்றனர்.

மதுரை வேளாண்மை பல் கலைக்கழக கல்லூரி வளாகத் தில் 2,000-க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அடையாளப்படுத்த வும், அதன் பாரம்பரிய பெருமை கள் குறித்து அடுத்தடுத்த தலைமுறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடந்த பல ஆண்டுகளாக தமிழ கத்தின் பல இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பல வகையான வேப்பமரங்களை கல்லூரியின் ஆரம்பகால மாணவர்கள் நட்டு மரங்களாக்கி உள்ளனர்.

தற்போது, அந்த மரங்களை உள்ளடக்கிய பகுதியை வேப்பமர பூங்காவாக உருவாக்கி மாணவர்கள் பராமரிக்கின்றனர். அதனால், தமிழகத்தில் அதிக அளவு வெப்பநிலை பதிவாகும் நகரமாக மதுரை இருந்தாலும், மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் மட்டும் ஆண்டு முழுவதும் குளுமையான சூழல் நிலவி வருகிறது. இந்த வேப்பமர பூங்காவும், அங்கு நிலவும் குளிர்ச்சியான சூழலும் கல்லூரிக்கு வரும் விவசாயிகள், பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த வேப்பமர பூங்காவில் திறந்த வயல்வெளி பயிலரங்குகள், கருத்தரங்குகள், விருந்தினர்களைக் கவுரவிக் கும் நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படு கின்றன.

இதுகுறித்து கல்லூரி பூச்சியியல் துறை பேராசிரியர் மா.கல்யாணசுந்தரம் கூறியதாவது: மரங்களில், வேப்பமரம் கற்பக விருட்சமாகக் கருதப்படு கிறது. வேப்பமரத்தின், அனைத் துப் பாகங்களும் பயன்படுகின் றன. தீக்குச்சி, பற்பசை, சோப்பு, பூச்சிக் கொல்லி மருந்துகள், வேப்ப எண்ணெய், புண்ணாக்கு போன்றவை தயாரிக்க பயன் படுகிறது.

வேப்ப மரத்தில் இருந்து செய்யப்படும் ஜன்னல், கதவு களுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. கரையான்கள் அரிக்காது. வேப்ப முத்துக்கு நல்ல விலை கிடைக்கிறது. வேப்பமரத்தின் ஒரு சதுர அடி மரக்கட்டை மதிப்பு அதிகம். 20, 25 ஆண்டுகள் வரை இருக்கும் ஒரு நல்ல வேப்ப மரம் ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வருமானத்தை தரக்கூடியது என்றார்.

வெயில் காலத்திலும் தளிர் விடும் தன்மை

பேராசிரியர் மா.கல்யாண சுந்தரம் மேலும் கூறும்போது, “பள்ளி, கல்லூரி, சாலைகளில் வேப்ப மரங்களை அதிக அளவு நட வேண்டும். இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வேப்ப மரங்கள், சிறந்த வாகனக் காப்பானாக திகழ்கின்றன. வேப்பமரங்கள், வெயில் காலத்தில் புதிய தளிர் விடும். வேற எந்த மரங்களுக்கும் இந்த தனித்தன்மை கிடையாது.

செடியாக இருக்கும் ஆரம்ப காலத்தில் மட்டுமே இந்த மரத்துக்கு தண்ணீர் தேவை. அதன் பின்னர் தண்ணீர் தேவையில்லை. பெரிய வறட்சியைக்கூட எளிதாக தாங்கும். இன்றைக்கும் கிராமங்களில் அம்மை உள்ளிட்ட கொடிய வைரஸ் நோய்களுக்கு வேப்பஇலையை அரைத்து போடுவது ஒரு பழக்கமாக இருக்கிறது. உலகம் முழுவதும் வேப்பரம் இருந்தாலும், தமிழகத்தில் காணப்படும் வேப்பமரத்தில் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் இருப்பது பெரிய விசேஷம். இதை மாணவர்களுக்கு புரிய வைக்கவே, வேப்பமர பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

வேப்ப மரத்தில் இருந்து செய்யப்படும் ஜன்னல், கதவு களுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. கரையான்கள் அரிக்காது. வேப்ப முத்துக்கு நல்ல விலை கிடைக்கிறது.

 

http://tamil.thehindu.com/tamilnadu/பார்வையாளர்களை-ஈர்க்கும்-வேப்பமர-பூங்கா-முன்மாதிரியாகத்-திகழும்-மதுரை-வேளாண்-கல்லூரி/article9080080.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

குடிசையில் நூலகம் நடத்தும் 9 வயது சிறுமி

Tamil_News_large_1603777_318_219.jpg

போபால்: போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி முஸ்கான் அஹ்ரிவார். மூன்றாம் வகுப்பு படிக்கும் முஸ்கான், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், வீட்டின் வாசலில் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை கடைவிரித்து, அப்பகுதியில் உள்ள எழுத்தறிவில்லாத குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
அப்பகுதியில் உள்ள பிரபல பள்ளிக்கூடம் நன்கொடையாக அளித்த 25 புத்தகங்களை கொண்டு தனது வீட்டின் வாசலில் கடந்த ஆண்டு ஒரு சிறிய நூலகத்தை முஸ்கான் ஆரம்பித்தார். அந்த புத்தகங்களில் உள்ள ராஜா-ராணி கதைகள் மற்றும் நமது நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை கதை வடிவில் படிப்பறிவில்லாத அப்பகுதி குழந்தைகளுக்கு கற்பிக்கும் முஸ்கானிடம் தற்போது நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

படிக்க தெரிந்த சில சிறுவர் - சிறுமியர் இந்த கட்டணமில்லாத நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்துச் சென்று, வாசித்துவிட்டு, மறுநாள் கொண்டுவந்து திருப்பி தந்துவிட்டு, வேறு புத்தகங்களை கொண்டு செல்கின்றனர். வேறு சிலர் முஸ்கான் வீட்டு வாசலிலேயே அமர்ந்து படித்துவிட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவரிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெறுகின்றனர். நன்றாக படித்து, எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்பதுதான் தனது எதிர்கால லட்சியம் என்று கூறும் மஸ்கானின் கல்வித் தொண்டை பாராட்டி மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின்கீழ் விரைவில் 'சிந்தனை தலைவர்' பட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த சிறு வயதிலேயே சமூக மாற்றத்துக்காக பாடுபடும் முஸ்கானின் சேவை எங்களை பெருமைப்படுத்தியுள்ளது என இவரது தாயார் மாயா கூறுகிறார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1603777

Link to comment
Share on other sites

விதைத்தது துளிர்விடஉழைக்க வேண்டும்!

இசவன்குளம் கிராமத்தின் முதல் பட்டதாரியும், 'முன்னுதாரண மகளிர் விருது' வாங்கியவருமான, தாயம்மாள்: துாத்துக்குடி மாவட்டம், இசவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவள் நான். எங்கள் ஊரில் விவசாயம், கல்குவாரி மட்டும் தான் ஒரே வாழ்வாதாரம். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலை, விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துவது இங்கு சகஜம். நானே மூன்று தடவை படிப்பை இடையில் நிறுத்தி நிறுத்தி தான், பி.காம்., முடித்துள்ளேன். முதலில் பள்ளிக்கு போகாத குழந்தைகளை லிஸ்ட் எடுத்து, அவர்களின் பெற்றோரிடம் கல்வியின் முக்கியத்துவம், அரசு வழங்கும் ஸ்காலர்ஷிப் பற்றி எடுத்துக் கூறி, பள்ளியில் சேர்த்து விட்டேன்; அப்படி இருந்தும் சிலர் தயங்கினர். தொடர்ந்து அவர்களிடம் பேசி, கல்வி மட்டும் தான் உங்கள் வறுமையை ஒழிக்கும் என அறிவுறுத்தி, பிள்ளைகளை என் வீட்டுக்கு வரவழைத்து, மாலை நேரம் டியூஷன் எடுத்தேன். அதில், அவர்களுக்கும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

கடந்த, 2006 முதல் டியூஷன் எடுத்து வருகிறேன். இதுவரை, 450 பேருக்கும் மேல் வகுப்பு எடுத்துள்ளேன். பாடம் சொல்லி தர பணம் வாங்குவது இல்லை. வீட்டுக் கஷ்டம் அதிகமான போது ஒருமுறை, 10 ரூபாய் டியூஷன் பீஸ் கேட்டேன். அதற்கு அந்த குழந்தைகளின் பெற்றோர், 'நாங்களே கூலி வேலைக்கு போகிறோம். எங்களிடம் பணம் கேட்டால் எப்படி கொடுப்பது' என, கேட்டனர். இப்படி தான், என் ஊரில் எல்லாரது நிலைமையும் உள்ளது.

இதற்கிடையில், அஞ்சல் வழி கல்வியில், எம்.காம்., முடித்தேன். இப்போது, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்காக கோச்சிங் போய் வருகிறேன். இதற்காக தினமும், எங்கள் ஊரில் இருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு முறையான பேருந்து வசதி இல்லாததால், 6 கி.மீ., நடந்து, அங்கிருந்து திருநெல்வேலிக்கு கோச்சிங் போகிறேன்.

தினமும் இப்படி, 80 கி.மீ., சென்று, மாலை, 5:00 மணிக்கு வீட்டுக்கு வருவேன். பிள்ளைகள் டியூஷன் படிக்க எனக்காக காத்து கொண்டிருப்பர். களைப்பாக இருக்கும்; இருந்தாலும், டீ குடித்து, உடனே பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விடுவேன்.
'இப்பவாவது சேவை பணியில் ஈடுபடாமல், தேர்வில் மட்டும் கவனம் செலுத்து' என, உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால், என் சுயநலத்துக்காக அப்படி விட்டால், படிப்பை பாதியில் நிறுத்தும் வழக்கம் இந்த கிராமத்தில் மறுபடியும் ஆரம்பித்து விடும். விழிப்புணர்வு, மக்கள் மன மாற்றம், நான் விதைத்தது, அது துளிர்விட இன்னும் கொஞ்சம் ஆண்டு உழைக்க வேண்டியுள்ளது; உழைப்பேன்.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

சேகரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது! - பட்டாக்கத்தி கொள்ளையருடன் போராடி இளம்பெண்ணை காப்பாற்றிய வீரர்

சேகர் மற்றும் மனைவி கலாவதி
சேகர் மற்றும் மனைவி கலாவதி

டெல்லியில் நேற்று ஆள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் இளம் பெண் ஒருவர் சுமார் 30 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலையானபோது யாரும் உதவிக்கு வராதது போலவே டெல்லி சம்பவத்திலும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துவிட்டு சாதாரணமாக கலைந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் இளம் பெண்ணை கொடூரமான முறையில் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களிடம் தன்னந்தனி ஆளாக போராடி அந்தப் பெண்ணை காப்பாற்றியிருக்கிறார் சேகர்(42).

சென்னை துரைப்பாக்கம் அருகில் குமரன்குடில் பகுதியில் மளிகைக் கடை வைத்திருப்பவர் சேகர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு தனது கடையில் அமர்ந்திருந்தார். அப்போது சற்று தூரத்தில் இளம் பெண்ணின் அபயக்குரல் கேட்டது. அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தபோது சற்று தொலையில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்றுகொண்டிருந்தனர். அவரோ பையை விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவை ஓட்டியதால் கீழே விழுந்த அவர் நடுரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். ஆங்காங்கே பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் யாரும் உதவிக்கு வரவில்லை.

ஆனால், சேகர் ஓடோடிச் சென்று காயமடைந்திருந்த அந்தப் பெண்ணை தூக்கி மீட்டார். இதற்குள் அந்தப் பெண் மயக்கமடைந்துவிட்டார். ஆட்டோ வுக்குள் ஓட்டுநருடன் மொத்தம் 4 பேர் இருந்தனர். பின்னால் அமர்ந்தி ருந்தவர்கள் இருவரின் கையில் பெரிய பட்டாக் கத்திகள் இருந்தன. அதைக் காட்டி மிரட்டிக் கொண்டே அவர்கள் ஆட்டோவுடன் வேகமாக தப்பிச் செல்ல முயன்றனர்.

ஆனாலும் சேகர் வேகமாக ஓடி ஆட்டோவுக்குள் கையை விட்டு ஒருவரின் சட்டைக் காலரை பிடித்து சாலையில் தூக்கி வீசினார். அவரை மடக்கிப் பிடித்து தனது காலால் அழுத்திய நிலையில் ஆட்டோவிலிருந்து குதித்த இன்னொருவர் சேகரின் முதுகில் பட்டாக் கத்தியால் வெட்டினார். அப்போதும் விடாமல் திரும்பியவர் கத்தியை கையால் பிடித்து சமாளித்தார். அப்போது இன்னொருவர் சேகரின் கழுத்தை நோக்கி வேகமாக கத்தியை வீசினார். நொடிப் பொழுதில் சேகர் விலகிக்கொண்டபோதும் கத்தி பட்டு காது அறுந்தது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் 4 பேரும் ஆட் டோவில் ஏறி தப்பிவிட்டனர். சுமார் 10 நிமிடங்கள் நடந்த இந்தப் போராட் டத்தை அக்கம்பக்கத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துள்ளனர். பின்னர் படுகாய மடைந்த அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேகருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காது ஒட்டப்பட்டுள்ளது.

sekar1_3017577a.jpg

இந்த நிலையில்தான் ‘தி இந்து’-வுக்காக சேகரைச் சந்தித்தோம். “எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமம். என் கண் முன்னே ஏதாவது அநியாயம் நடந்தால் என்னால் பார்த்துக்கிட்டிருக்க முடியாது. என்ன ஆனாலும் சரி என்னால் முடிந்த வரை தட்டிக் கேட்பேன். நேற்று முன்தினம் (திங்கள்) அதைத்தான் செய்தேன். அதே சமயம் இங்கே கூடி நின்று வேடிக்கைப் பார்த்தவங்களையும் நான் குறை சொல்ல மாட்டேன். எல்லோரும் என்னைப் போலவே இருக்கணும்னு எதிர்பார்க்கிறது முட்டாள் தனம். அவர்கள் உயிர் அவர்களுக்கு முக்கியம் இல்லையா. அவர்கள் சார் பாகத்தான் நான் போராடு வதாக நினைத்துக்கொள் கிறேன்.

அதேசமயம் இது ஒன்றும் எனக்கு புதிது அல்ல. ஒரு வருடம் முன்பு இரவு 11.30 மணிக்கு பக்கத்தில் இருக்கும் எம்.சி.என். நகரிலிருந்து எனக்கு போன் வந்தது. அங்கே பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு எங்கள் பகுதியை நோக்கி ஒருவர் ஓடி வந்ததாக தகவல் சொன்னார்கள். நான் உடனே சென்று தெருவில் நின்று நோட்டமிட்டேன். தூரத்தில் வேகமாக ஒருவர் சட்டையை மாற்றிக்கொண்டு பின்பு நிதான மாக நடந்து வந்தார். மெதுவாகப் பதுங்கி அவர் பின்னால் சென்று அப்படியே மடக்கிப் பிடித்தேன்.

உடனே அவர் சிறு கத்தியால் என்னைக் குத்தினார். ஆனாலும் விடாமல் அவரை பிடித்துவிட்டேன். அதற்குள் பொதுமக்கள் உதவிக்கு வந்து விட்டார்கள். தங்கச் சங்கிலி மீட்கப் பட்டது. அதற்கு முன்பாக எங்கள் பகுதியில் பூட்டப்பட்ட ஒரு வீட்டுக்கு வெளியே ஒருவர் சந்தேகமான முறையில் நின்றுகொண்டிருந்தார். உன்னிப்பாக கேட்டபோது அந்த வீட்டுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. உடனே நான் அந்த வீட்டு உரிமையாளரிடம் போனில் தகவல் கொடுத்துவிட்டு பதுங்கிச் சென்று வெளியே நின்றிருந்தவரை மடக்கிப் பிடித்து சத்தம் போட்டேன். மக்களும் வந்துவிட்டார்கள். மொத்தம் 4 பேரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தோம். அவர்களில் வி.ஐ.பி. ஒருவரின் மகனும் அடக்கம்” என்றார்.

அவரிடம், “இப்படி செய்யும்போது உங்களுக்கு பயமாக இல்லையா? நேற்றைய சம்பவத்தில் உங்கள் உயிரே பறிபோயிருக்கலாம் இல்லையா?” என்று கேட்டோம். “நான் காந்தி ஜெயந்தி அன்னைக்கு பிறந்தவன். காமராஜரின் நினைவுநாள் அது. நான் பிறந்து 5 வயதிலேயே என் அப்பா தவறிட்டார். என்னுடன் பிறந்தவர்கள் 5 பெண்கள், ஒரு பையன். நான்தான் வீட்டில் மூத்த மகன். என்னால் பள்ளிக்குச் சென்று படிக்க முடியவில்லை. சிறுவனாக இருந்தபோதே கிடைத்த வேலைக்குச் சென்று எனது குடும்பத்தை பராமரித் தேன். நானாகவே எழுத்துக் கூட்டி படிக்கக் கற்றுக் கொண்டேன். ஓய்வு நேரத்தில் கிடைக்கும் செய் தித்தாள்களை புத்தகங் களை எல்லாம் படிப்பேன். பகவத் கீதை, பைபிள் மற்றும் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எல்லாம் படித்தேன். அவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்டது எவை என்றால் - உண்மையாக இருப்பது; நேர்மையாக இருப்பது; தவறுகளுக்கு எதிராக போராடுவது. இதைத்தான் நான் செய்து வருகிறேன்.

சென்னைக்கு 20 வருடங்களுக்கு முன்பு வந்தேன். திருவான்மியூரில் சிமென்ட் கிடங்கில் மூட்டை தூக்கிப் பிழைத்தேன். அதில் ஓரளவு திருப்தியான வருமானம் கிடைத்தது. எனது 4 தங்கைகளுக்கும் தம்பிக்கும் திருமணம் செய்து வைத்தேன். ஒரு தங்கை உயிரோடு இல்லை. மற்ற அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். நானும் திருமணம் செய்துகொண்டு இந்தப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடையை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறேன். 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். ஆண்டவன் கருணையால் நிம்மதியாக இருக்கிறது வாழ்க்கை” என்கிறார்.

இவரது மனைவி கலாவதி, கண் கலங் கிய நிலையில் நம்மை கையெடுத்து கும்பிட்டு, “இவரு போராட்டம் போராட் டம்ன்னு சொல்றாருங்க. எனக்கு பயமாக இருக்குது. எங்களோட பாது காப்புக்கு ஏற்பாடு செய்யுங்க. எங்க ளுக்கும் ரெண்டு குழந்தை இருக்கு இல்லையா” என்கிறார். அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. தமிழக அரசு சேகரை கவுரவிப்பதுடன் அவருக்கு பாதுகாப்பு அளிக்கவும் முன் வர வேண்டும். அப்போதுதான் பொது இடங்களில் இளம் பெண்கள் தாக்கப்படுவது போன்ற சம்பவங்களில் உதவிக்கு வருவதற்கு மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.

தங்கை இறந்த சோகத்திலும் சேவை

சேகரின் ஒரு தங்கை இறந்துவிட்டார் என்று கூறியிருந்தார் இல்லையா? அது பெரும் சோகச் சம்பவம். அவரது பெயர் தனலட்சுமி. அவரை மும்பையில் திருமணம் செய்து கொடுத்திருந்தார். 1992-ம் ஆண்டு மும்பைக் கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தில் இவரது தங்கையின் குடும்பத்தில் ஒருவர் விடாமல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். 7 மாதம் கர்ப்பமாக இருந்த இவரது தங்கையை மத வெறியர்கள் நடு ரோட்டில் நிற்க வைத்து பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக்கொன்றார்கள்.

பதறி அடித்துக்கொண்டு மும்பைக்கு ஓடிய சேகருக்கு தனது தங்கையின் எரிந்த சடலம்தான் கிடைத்தது. அப்போதும் கலவரம் ஓயவில்லை. ஆனாலும், மனதை திடமாக்கிக்கொண்டு கலவரப் பகுதியில் 10 நாட்கள் சமூக சேவை செய்தார் சேகர். காயம்பட்ட சுமார் 100 பேரை மருத்துவமனையில் சேர்த்தார். ஏராளமான சிறுவர்களை மீட்டு காவல் நிலையங்களில் ஒப்படைத்தார்.

இது தவிர தனி நபராக நுகர்வோர் விழிப்புணர்வு விஷயங்களிலும் சட்டப் போராட்டங்களை நடத்துகிறார் சேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆறே நாட்களில் சிகப்பழகு பெறுவீர்கள்’ என்று விளம்பரம் செய்த ஒரு கீரீம் நிறுவனத்துக்கு எதிராக ஒரு பெண்ணை வைத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிரபல டிவி தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். பொதுவெளியில் எது நடந்தாலும் சலனப்படாத பெருநகர சுயநல சமூகம் சேகரைப் பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

 

http://tamil.thehindu.com/tamilnadu/சேகரிடம்-கற்றுக்கொள்ள-நிறைய-இருக்கிறது-பட்டாக்கத்தி-கொள்ளையருடன்-போராடி-இளம்பெண்ணை-காப்பாற்றிய-வீரர்/article9130759.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ரயிலில் தனியாக பயணம் செய்த கேரள 'மாஜி' முதல்வர்

Tamil_News_large_1626211_318_219.jpg

திருவனந்தபுரம் வி.ஐ.பி., சலுகைகளை அனுபவிக்க விரும்புவோர் மத்தியில், எந்தவித பந்தாவும் இன்றி, ரயிலில் பயணம் செய்த, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் எளிமை, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கேரளாவில், இரண்டு முறை முதல்வராக இருந்தவரும், காங்., மூத்த தலைவருமான உம்மன் சாண்டி, 74, மிகவும் எளிமையான அரசியல்வாதி என பெயர் பெற்றவர். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கார்கள் புடைசூழ செல்லும், வி.ஐ.பி.,கள் மத்தியில், மிகவும் எளிமையாக ரயிலில் பயணம் செய்த உம்மன் சாண்டியின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
'வி.ஐ.பி., பயணத்தை விட, சாதாரண படுக்கை வசதி உடைய ரயிலில் பயணம் செய்வது பிடிக்கும் என்றும், கூட்டம் அதிகமில்லாத தொலைதுார ரயில்களில் பயணம் செய்யும்போது, பயணிகளின் அறிமுகமும் கிடைக்கும்' என்றும் கூறிய உம்மன் சாண்டி, இதற்கு முன், திருவனந்தபுரத்துக்கு, பஸ்சிலும் பயணம் செய்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1626211

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.