Jump to content

வழிகாட்டும் மனிதர்கள், முன்னுதாரண மானிடர்.


Recommended Posts

தி இந்து செய்தி எதிரொலி: அரசுப்பள்ளி மாணவரின் 'ரஷ்ய கனவு' நனவானது

அரசுப்பள்ளி மாணவருக்கு உதவிய விஜயகுமார், தன் மனைவியுடன். உள்படம்: மாணவர் ஜெயக்குமார்
அரசுப்பள்ளி மாணவருக்கு உதவிய விஜயகுமார், தன் மனைவியுடன். உள்படம்: மாணவர் ஜெயக்குமார்
 
 

சிவகாசி அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், அறிவியல் ஆராய்ச்சிக்காக ரஷ்யா செல்ல ரூ.1.75 லட்சம் தேவைப்பட்டது குறித்த செய்தி 'தி இந்து' தமிழ் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் இச்செய்தியைப் பார்த்த ரஷ்யாவில் வசித்துவரும் தமிழர் விஜயகுமார், பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

சிவகாசி அருகே நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், வெடிவிபத்தைத் தடுக்கும் தானியங்கி தீயணைப்பான் இயந்திரத்தை உருவாக்கி இருந்தார். இதன்மூலம் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ரஷ்யா செல்லும் இளம் விஞ்ஞானிகள் பட்டியலில் இணைந்தார்.

அங்கே அறிவியல் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான வழிகாட்டுதல் அவருக்கு அளிக்கப்படும் எனவும் அங்கே விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்கி ஆய்வு மேற்கொள்வார் எனவும் கூறப்பட்டிருந்தது. ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 8 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு ரூ.1.75 லட்சம் தேவைப்பட்டது.

ஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக ரூ.1.75 லட்சத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதுகுறித்து அரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா? என்ற தலைப்பில் 'தி இந்து' தமிழ் இணையத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அச்செய்தியைப் பார்த்த ரஷ்யாவில் வசித்துவரும் தமிழர் விஜயகுமார், பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகுமார் பேசும்போது, ''சமூக ஊடகங்களில் எனக்குப் பெரியளவில் ஈடுபாடு இல்லை. என்னுடைய மனைவிதான் இந்த செய்தியைப் பாருங்கள் என்று கூறினார். பார்த்தவுடன் உடனே அந்த மாணவருக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. நாரணாபுரம் என் சொந்த ஊர். என்னுடைய அம்மா அங்கேதான் அரசுப்பள்ளியில் படித்தார். எப்போது இந்தியா வந்தாலும் என் சொந்த ஊருக்குச் செல்வேன்.

ரஷ்யாவில் குறிப்பாக மாஸ்கோவில் வசிக்கும் நாம் ஏன் ஜெயக்குமாருக்கு உதவக்கூடாது என்று தோன்றியது. எதையும் யோசிக்காமல் உடனே ஆசிரியரை அழைத்துப் பேசிவிட்டேன்'' என்றார்.

ஒன்றேமுக்கால் லட்சம் பணத்தை அளிப்பது எப்படிச் சாத்தியமானது என்று கேட்டதற்கு, ''ரஷ்யாவில் கண் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறேன். இந்தப் பணம் எனக்குப் பெரிய தொகையாகத் தோன்றவில்லை. எதற்கெல்லாமோ செலவு செய்கிறோம். படிப்பை ஊக்குவிக்கவும் செய்யலாம் அல்லவா?

என்னால் கொடுக்கமுடியும் என்ற நிலையில் இருக்கிறேன். கொடுத்துவிட்டேன்!'' என்கிறார் விஜயகுமார்.

இந்த செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/தி-இந்து-செய்தி-எதிரொலி-அரசுப்பள்ளி-மாணவரின்-ரஷ்ய-கனவு-நனவானது/article9594252.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 106
  • Created
  • Last Reply
  • 3 weeks later...

பாடசாலைக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலாப்பயணியின் செயற்பாட்டால் சந்தோசத்தில் திளைத்த மாணவர்கள், ஆசிரியர்கள்

நாட்டை சுற்றிப் பார்க்க ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுப்பயணி ஒருவர் தனது செயற்பாட்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமொன்று சிகிரியா பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

16107956_1347264312010890_439713962_o.jp

டேவிட் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இவர் ஒருவார காலம் இலங்கையில் தங்கியிருந்து சிகிரியா, கண்டி, நுவரெலியா, மிரிஸ்ஸ மற்றும் சிவனொளிபாதமலை போன்ற சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதற்காக திட்டமிட்டு சாரதியுடன் ஒரு வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

அவரது திட்டத்தின்படி முதலாவது சுற்றுலா விஜயமாக சிகிரியாவுக்கு சென்றுள்ளார். அங்கு சுற்றுலாவினை முடித்துவிட்டு செல்கையில் சிகிரியாவில் இருந்து 6 கிலோ மீற்றர் தொலைவில் பின்தங்கிய நிலையில் இருந்த சிகிரியா உடவெலயாகம கனிஷ்ட வித்தியாலயத்தை அவதானித்துள்ளார்.

கற்றலுக்கான எவ்வித அடிப்படை வசதிகளுமற்று அப் பாடசாலை இடம்பெறுவதை சுற்றுலாப்பயணி அவதானித்துள்ளார். 

இந்நிலையில் தான் சுற்றுலாவுக்காக வாடகைக்கு அமர்த்திய வாகனத்தையும் சாரதியையும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள கடைகளில் பாடசாலைக்குத் தேவையான வெண்பலகை, பாடசாலை சுவர்களுக்கு பூசுவதற்காக பெயின்ற் மற்றும் பாடசாலை உபகரணங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்துள்ளார். 

குறித்த பாடசாலையில் உள்ள  11 வகுப்புகளுக்கும் தேவையான வெண்பலகைகைளை கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை, குறித்த பாடசாலையில் எவரது உதவியுமின்றி தானே முன்வந்து பாடசலைக்கு நிறப்பூச்சு பூசும் பணியையும் குறித்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி மேற்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் மற்றும் ஆசரியர்கள் அவருக்கு உதவியாக இருந்து வருகின்றனர். 

இவ்வாறான உதவிகளை தான் எதிர்காலத்திலும் இலங்கைக்கு வரும்போது மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

16121675_1347263202011001_1043717724_o.jpg

16121603_1347262358677752_973113374_o.jpg

http://www.virakesari.lk/article/15480

Link to comment
Share on other sites

மர வியாபாரியின் இலவச கல்விச் சேவை: கிராமப்புற மாணவர்கள் அரசுப் பணியில் சேர பயிற்சி - இதுவரை 200 பேர் தேர்வாகியுள்ளனர்

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கிராமப்புற மாணவர்களுக்காக மர வியாபாரி சேகர் நடத்தி வரும் ‘சொந்தம் கல்வி சோலை’ இலவச பயிற்சி மையத்தில் பயிலும் மாணவிகள் | சேகர்
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கிராமப்புற மாணவர்களுக்காக மர வியாபாரி சேகர் நடத்தி வரும் ‘சொந்தம் கல்வி சோலை’ இலவச பயிற்சி மையத்தில் பயிலும் மாணவிகள் | சேகர்
 
 

அரசுப் பணியில் சேர விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்காக கும்மிடிப்பூண்டியில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தை இலவசமாக நடத்திவருகிறார் மர வியாபாரி ஒருவர். இந்த மையத்தில் இருந்து இதுவரை 200 பேர் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சேகர். மர வியாபாரம் செய்கிறார். கிராமப்புறங்களில் படித்துவிட்டு அரசுப் பணிக்குத் தயாராகும் மாணவர்களுக்காக கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ‘சொந்தம் கல்விச் சோலை’ என்ற இலவச பயிற்சி மையத்தை தொடங்கி நடத்திவருகிறார். இங்கு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த கல்விச் சேவை குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

10-ம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். அதன்பிறகு மரம் வியாபாரம் செய்யத் தொடங்கி விட்டேன். கும்மிடிப் பூண்டியைச் சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு படித்து முடித்துள்ள ஏராளமானவர்கள் அரசுப் பணிகளுக்குத் தயாராகி வருவதைப் பார்த்தேன். இவர் களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதுபற்றி நண்பர்களுடன் ஆலோசித்தேன். ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கும் வகையில் ‘சொந்தம் கல்விச் சோலை’ என்ற இந்த மையத்தை தொடங்கினோம். இங்கு தினமும் சுமார் 250 பேர் பயிற்சி பெறுகின் றனர். கடந்த 4 ஆண்டுகளில் இங்கு பயிற்சி பெற்று 200 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, விஏஓ, ஆசிரியர் பணி என தேர்வாகி யிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

பயிற்சி மையத்தின் ஒருங் கிணைப்பாளர் முகுந்தன் கூறிய தாவது:

கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்கள் பலர் அரசுப் பணிக்கு செல்லவேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், அதிக கட்டணம் செலுத்திப் படிப்பது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே, கிராமப் புற மாணவர்களுக்கு தரமாகவும், இலவசமாகவும் பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்த மையம் 2012-ல் தொடங்கப்பட்டது.

சேவை மனப்பான்மையோடு...

இதற்காக எம்.சேகர் என்பவர் தனது 15 சென்ட் நிலத்தைக் கொடுத்து கட்டிடத்தையும் கட்டிக் கொடுத்தார். அதன்பிறகு நாற்காலிகள், நகலெடுக்கும் கருவி, கம்ப்யூட்டர் என நிறைய பொருட்கள் நன்கொடையாகக் கிடைத்தன. சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனாலும், வாரம் முழுவதும் மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். சேவை மனப்பான்மையோடு இந்த மையம் செயல்படுவதால், பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களும் பெரிய அளவில் ஊதியத்தை எதிர்பார்க்காமல் பணியாற்று கின்றனர் என்றார்.

இங்கு பயிற்சி பெற்று தமிழக அரசுப் பணியில் இருக்கும் உமா மகேஸ்வரி, ஸ்ரீதர், டில்லிபாய் ஆகியோர் கூறியதாவது:

எங்களைப் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு தரமான பயிற்சி கிடைப்பது கடினம். சென்னை போன்ற பெரிய நகரங்களில் வந்து தங்கி பயிற்சி மேற்கொள்ள போதிய பண வசதி இல்லை. கும்மிடிப்பூண்டியிலேயே சேகர் என்பவர் இலவசப் பயிற்சி மையம் நடத்துவதைக் கேள்விப்பட்டோம். அதன்பிறகு அங்கு சேர்ந்து பயிற்சி பெற்றோம். இலவசம் என்றாலும்கூட, மிகச் சிறப்பாக, தரமான பயிற்சி எங்களுக்கு அளிக்கப்பட்டது.

அதனால்தான், எங்களால் அரசுப் பணியில் சேரமுடிந்தது. இந்த மையத்துக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எங்களைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் பல்வேறு அரசுப் பணிகளுக்கு வரவேண்டும். அதற் காக, அந்த பயிற்சி மையத்துக்கு நாங்கள் என்றென்றும் துணையாக இருப்போம். வாய்ப்பு கிடைக்கும் போது நாங்களும் நேரில் சென்று, மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். எங்கள் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/மர-வியாபாரியின்-இலவச-கல்விச்-சேவை-கிராமப்புற-மாணவர்கள்-அரசுப்-பணியில்-சேர-பயிற்சி-இதுவரை-200-பேர்-தேர்வாகியுள்ளனர்/article9697508.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கற்றல் குறைபாடு இருந்ததால் பள்ளி படிப்பை கைவிட்டவர் வருமான வரித்துறை அதிகாரி ஆனார்: வாழ்க்கை திறன் பற்றி ஆண்டுக்கு 4 லட்சம் பேருக்கு பயிற்சி

வாழ்க்கைத் திறன் அறிதல் குறித்து மாணவிகளுடன் உரையாடும் வருமானத் வரித்துறை இணை ஆணையர் வி. நந்தகுமார்
வாழ்க்கைத் திறன் அறிதல் குறித்து மாணவிகளுடன் உரையாடும் வருமானத் வரித்துறை இணை ஆணையர் வி. நந்தகுமார்
 
 

‘டிக்ஸ்லக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டால் 6-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை கைவிட்ட போதிலும் தனது விடா முயற்சியால் இன்று வருமான வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்து வருகிறார் நந்தகுமார்.

சென்னையில் உள்ள வருமான வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்து வருபவர் வி.நந்தகுமார். இவர் பள்ளியில் படிக்கும்போதே கற்றல் குறைபாட்டால் அவதிப்பட்டுள்ளார். இதனால் படிக்க முடியாமல் 6-ம் வகுப்பில் தோல்வியடைந்து, பின்னர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு, சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.

படிப்பில் ஆர்வம்எனினும், படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அவர் விடா முயற்சியுடன் தொடர்ந்து படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இன்று வருமான வரித்துறை இணைஆணையராக பதவி வகித்து வருகிறார். அத்துடன், ‘துணிந்து நில்’என்ற பெயரில் அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்க்கைத் திறன் அறிதல்

குறித்து போதித்து வருகிறார். அவர் இந்த நிலையை அடைந்தது குறித்து ‘தி இந்து’விடம் கூறிய தாவது: “எனக்கு ஏன் படிப்பு ஏறவில்லை என எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், பெற் றோர்களுக்கும் தெரியவில்லை. காரணம், கற்றல் குறைபாடு குறித்து ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியதால் பெற்றோர் வருத்தம் அடைந்தனர். வயது ஆக ஆக, எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

வீட்டிலேயே படிப்புஆனால், மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல மிரட்சியா இருந்தது. அப்போது அமல்ராஜ் என்ற நண்பன்,‘பள்ளிக்கூடம் போய்த்தான் படிக்கணும்னு இல்லை, வீட்டில் இருந்து படித்தே தேர்வு எழுதலாம்’என்று சொன்னான். உடனடியாக தேர்வுக்கு விண்ணப்பித்தேன். வேலை செஞ்சுகிட்டே படித்து தேர்வு எழுதினேன்.

சிவில் சர்வீஸ் ஆர்வம்

வீட்டிலேயே பாடங்களைப் படித்து எழுதி எழுதிப் பார்ப்பேன். நாலு தடவை தப்பா எழுதினா, அஞ்சாவது தடவை சரியா எழுதிடுவேன். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதும் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் ஆங்கில இலக்கியமும், பிரசிடென்சி கல்லூரியில் எம்ஏ ஆங்கிலமும் படித்து தேர்ச்சி பெற்றேன்.

அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கும்போது தப்பு தப்பாக படிப்பதையும், அவற்றை திருப்பி எழுதும் போது ஏகப்பட்ட பிழைகளுடன் எழுதுவதையும் எனது நண்பர் சேஷாத்ரி என்பவர்தான் கண்டுபிடித்துக் கூறினார். அப்போதுதான் எனக்கு ‘டிக்ஸ்லக் சியா’ எனப்படும் கற்றல் குறைபாடு இருப்பது தெரியவந்தது. எனினும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினேன். இவ்வாறு கடினமாக உழைத்ததன் விளைவாக ஐ.ஆர்.எஸ். (இந்திய வருவாய் பணி) பணியில் சேர்ந்தேன்.

இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என மனதில் தோன்றியதால், நண்பர்கள் உதவியுடன் ‘துணிந்து நில்’ என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்க்கைத் திறன் அறிதல் குறித்து போதித்து வருகிறேன்.

இதற்காக ஆண்டொன்றுக்கு சுமார் 4 லட்சம் அரசுப் பள்ளி, மாணவர்களைச் சந்தித்து போதித்து வருகிறேன்.

ஆசிரியர்களுக்கும் பயிற்சி

தற்போது ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள் ளேன். அண்மையில் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 700 ஆசிரியர்

களுக்கு பயிற்சி அளித்தேன். பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட முடிவு செய்த மாணவர்கள் சிலர் எனது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தாங்களும் வாழ்வில் ஓர் உன்னத நிலையை அடைவோம் எனக் கூறினர். இதுதான் எனது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்” என்றார்

 

http://tamil.thehindu.com/tamilnadu/கற்றல்-குறைபாடு-இருந்ததால்-பள்ளி-படிப்பை-கைவிட்டவர்-வருமான-வரித்துறை-அதிகாரி-ஆனார்-வாழ்க்கை-திறன்-பற்றி-ஆண்டுக்கு-4-லட்சம்-பேருக்கு-பயிற்சி/article9716562.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • 1 month later...

பசித்த வயிற்றுக்கு கொஞ்சம் கல்யாணச் சாப்பாடு

bangaluru%20photo

ஒரு விழாவில் இருந்து உபரி உணவு சேகரித்து எடுத்துவந்து மக்களுக்கு விநியோகிக்கிறார் யுவராஜ்   

இரு இளைஞர்கள் ஏழைகளைத் தேடி கல்யாணச் சாப்பாடு பரிமாறிவருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், திருமணத்திற்குப் பிறகு மீதமுள்ள உணவைத்தான் அவர்கள் கேட்டுப் பெற்றுவந்து கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பசியால் வாடுவோருக்கு வழங்குகிறார்கள்.

தினம் தினம் கேளிக்கை விருந்துகள் முடிந்தபிறகு, சாலையோர யதார்த்தம் ஜெயித்த கதை இது.

திருமணத்தைவிட்டு விருந்தினர்கள் வெளியேறியதும், விழா அமைப்பு காண்ட்ராட்காரர்கள் வழக்கமாக உணவுப்பொருட்கள் மீந்திருப்பதைப் பார்த்து அதை அப்புறப்படுத்திவிடுவார்கள். ஆனால் யுவராஜ் எம், மற்றும் சிவகுமார் பத்ராய்யா போன்ற நல்ல உள்ளங்கள், அந்த தேங்கிப்போன உணவை நகரத்தின் நலிந்த பிரிவினர் நிறைந்த பகுதிகளுக்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள்.

மார்க்கெட்டிங் செய்யும் யுவராஜ்

மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு வரும் யுவராஜ் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது வேலை நேரம் போக கிடைக்கும் சிறிது நேரங்களில் திருமண விழாக்களுக்குச் சென்று உபரி உணவை கட்டுமானத் தளங்களுக்கும், குடிசைப் பகுதிகளுக்கும் மற்றும் ரெயில்வே நிலையங்களுக்கும் எடுத்துச்சென்று அங்கு பசியால் வாடுவாருக்கு உணவளித்து வருகிறார். குறிப்பாக மேற்கு வங்காளம், சாமராஜ்பேட்டை மற்றும் பசவனகுடி போன்ற பகுதிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். காலையில் திருமணம் இருந்தால், கட்டுமான தளங்களுக்கு உணவை எடுத்துக் செல்கிறார். அதுவே ஒரு மாலை நிகழ்வு என்றால், அவர் ரயில் நிலையங்களுக்கு உணவை எடுத்துச் செல்கிறார். போக்குவரத்து செலவை தற்போது லயன்ஸ் கிளப் தந்து உதவுகிறது.

காவிபுரத்தில் கட்டுமான வேலை நடக்கும் ஒரு இடத்தில் வீட்டு வேலைகளில் உதவிசெய்யும் வேளாங்கண்ணி இந்த சேவையின் பயனாளிகளில் ஒருவர். ''இது போன்ற உணவை வாங்கிச் சாப்பிட எங்களுக்கு கட்டுபடியாகாது'' என்கிறார் அவர்.

விழாவுக்கு வரும் ஒரு விருந்தினர் ஒரு பந்தியில் அதிகபட்சம் 500 கிராம் உணவை சாப்பிடுவார். ஆனால் அவருக்கு 1,500 கி.கிராம் வரை உணவு வழங்கப்படுகிறது என்று கூறும் யுவராஜ் தான் உணவைப் பெற்றுவர 10 அழைப்புகளைப் பெறுவதாகக் கூறுகிறார். ''சில கிலோமீட்டர் தொலைவுகளிலேயே பலர் பசியால் வாடிக்கிடக்க அதை ஏன் நாம் வீணாக்க வேண்டும்'' என்று கேட்கிறார்.

வெற்றிலைப்பழக்கடை பத்ரய்யா

யுவராஜைப்போல இன்னொருவரும் இதே பெங்களூருவில் இருக்கிறார்.

ராஜாஜி நகரில் 16 வருடங்களாக வெற்றிலைப்பாக்கு மற்றும் வாழைப்பழக் கடை வைத்திருக்கும் பத்ரய்யா, தான் விழாக்களில் பெறும் உணவை ஏழைக்கு அளித்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இங்கு வறுமையில் உள்ளவர்களும் திருமணங்களுக்கு உணவு வழங்கும் கைம்மாறு கருதாமல் உதவி

செய்பவர்களும் இருபிரிவாக பரவலாக பிரிந்துகிடப்பதைக் கவனித்த அவர், "பயிர்களை வளர்க்கும் விவசாயி ஒரு கைநிறையப் பெறும் தானியத்திற்காக விவசாயிகள் எவ்வளவு உழைக்கிறார்கள், எவ்வளவு போராடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இந்த மக்கள் ஒரு மோகத்தோடு விழாவிருந்தை உண்பதும் அதை வெட்கமின்றி வீணடிப்பதும் முரண்பாடுமிக்க ஒன்றாகும்."

இந்த இரட்டையர்கள் தங்கள் வேலை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை. அவர்கள் இருவரும் உணவு தயாராகும் இடங்களில் அவை வீணாக்கப்படுவதையும் தடுக்க சட்டத்தை உருவாக்கும் நம்பிக்கையில் அரசியல்வாதிகளையும் கொள்கைத் திட்டங்கள் வகுப்பவர்களையும் சந்தித்திருக்கிறார்கள்.

பெங்களூருவில் விருந்து உணவு
  • பெங்களூரில் பதிவுசெய்யப்பட்ட திருமண அரங்குகள்: 530
  • வருடாந்திர திருமணங்கள் எண்ணிக்கை: 85,000
  • பரிமாறும்முன் உணவு மதிப்பீடுகள்: 943 டன்
  • பரிமாறும்முன் உணவு செலவு: ₹ 339 கோடி
  • தகவல்: வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் படிப்பு, 2012

திருமணங்களில் உணவு விரயத்தை கட்டுப்படுத்த முடியுமா?

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு திருமண மண்டபத்திலும் கிட்டத்தட்ட ஒன்பது டன் உணவு வீணாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன மற்றும் வீண்செலவுகளின் அளவுகளைப் பார்த்து அதைத் தள்ளிவிடும் விழா அமைப்பாளர்கள், ஆடம்பரமான திருமணங்களை ஒரு வரன்முறைக்குள் கொண்டுவர முடியுமா?

திருமணங்கள் மற்றும் பிற விழா செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டம் குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது, ஆனால் சிறிய அளவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில், ஆடம்பர திருமணங்களுக்கு வரி விதிக்கும் நம்பிக்கையில், கர்நாடகா அரசு,

திருமணங்கள் தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில், உணவு மற்றும் சிவில் விவகாரங்கள் அமைச்சர் யு.டி. காதர், ''உணவுப் பாதிப்பைக் குறைப்பதற்கும் ஏழைகளுக்கு மத்தியில் மறுபகிர்வு செய்வதற்கும் அரசாங்கம் ஒரு திட்டத்தை பரிசீலனை செய்துவருவதாக'' கூறினார்.சட்டமும் கொள்கைகளும் இன்னும் பலனளிக்கவில்லை.

சட்டங்கள் அரிதாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மக்களின் வாழ்வாதார உரிமைகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருவதால், உணவு விரயம் குறித்த விழிப்புணர்வுக்கு முதன்மை இடம் தர வேண்டும் என ஆர்வலர்கள் நம்புகின்றனர். "சட்டங்களை உருவாக்கும் முன் மக்களிடையே விழிப்புணர்வு இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டங்கள் பயனற்றதாக இருக்கும்" என்கிறார் குடகு மாவட்டம், குஷால்நகரைச் சேர்ந்த என்.கே. மோகன். இவர் குடகு மாவட்ட பஞ்சாயத்து சார்பாக 2012ல் உணவு விரயக் கட்டுப்பாட்டுக்கான தீர்மானத்தை நிறைவேற்றியவர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு விரயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த அவர், உணவுப்பொருட்களை வீணடிக்காத பழக்கவழக்கம் சிறுவயது முறையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் நம்புகிறார்.லயன்ஸ் கிளப்பின் கேபினட் உறுப்பினரான பி.வி.துவாரகநாத் தண்ணீர் சேமிப்புக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அதற்கு இணையாக உணவு விரயக் கட்டுப்பாடும் இருக்கவேண்டுமென விரும்பினார். திருமண மண்டபங்களிலிருந்து எடுக்கப்பட்ட உணவுப்பொருட்கள் வீணாவதைத் தடுக்க குளிர்ப்பதன சேமிப்பு காப்பகங்களை உருவாக்க அரசாங்க உதவி தேவை என்று அவர் விரும்புகிறார்.

உணவுப் பற்றாக்குறைக்கு செக்...

உணவுப் பற்றாக்குறை எனும் கொடுமையான சொல்லாடலுக்கு திருமணங்களில் உணவு விரயமாவதைத் தடுத்து நிச்சயம் செக் வைக்கமுடியும். அது ஒரு விழாவில் விருந்தினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, 1960 களில் விருந்தினர் கட்டுப்பாட்டு சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜி.கே. ஜெயின் பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஜி.கே.ஜெயின் ''இந்த சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்'' என்று விரும்புகிறார்.

"இது பஞ்சம் மற்றும் போர்கள் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. உணவு பற்றாக்குறை ஏற்படும்போது, வாழ்வதா இல்லையா இரண்டில் ஒன்று என்ற நிலை ஏற்பட்டதால் அச்சமயம் உணவு விரயங்களை எப்படி கையாள்வது என்பது குறித்த கடுமையான அமலாக்கத்தை உத்தரவாதப்படுத்தவே இச்சட்டம் இயற்றப்பட்டது" என்று அவர் கூறினார்.

நம்மால் உணவை தயாரித்து ஊருக்கு வழங்கமுடியாது. விருந்துக்காக யாரோ தயார் செய்த உணவு வீணாகாமல் ஏழைகளுக்குச் சென்றுசேரட்டுமே என உதவும் யுவராஜ், பத்ரய்யாக்களின் முயற்சிகள் நம்மூரிலும் பரவுமா?

தமிழில்: பால்நிலவன்

http://tamil.thehindu.com/india/article19315900.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.