Jump to content

வழிகாட்டும் மனிதர்கள், முன்னுதாரண மானிடர்.


Recommended Posts

தி இந்து செய்தி எதிரொலி: அரசுப்பள்ளி மாணவரின் 'ரஷ்ய கனவு' நனவானது

அரசுப்பள்ளி மாணவருக்கு உதவிய விஜயகுமார், தன் மனைவியுடன். உள்படம்: மாணவர் ஜெயக்குமார்
அரசுப்பள்ளி மாணவருக்கு உதவிய விஜயகுமார், தன் மனைவியுடன். உள்படம்: மாணவர் ஜெயக்குமார்
 
 

சிவகாசி அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், அறிவியல் ஆராய்ச்சிக்காக ரஷ்யா செல்ல ரூ.1.75 லட்சம் தேவைப்பட்டது குறித்த செய்தி 'தி இந்து' தமிழ் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் இச்செய்தியைப் பார்த்த ரஷ்யாவில் வசித்துவரும் தமிழர் விஜயகுமார், பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

சிவகாசி அருகே நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், வெடிவிபத்தைத் தடுக்கும் தானியங்கி தீயணைப்பான் இயந்திரத்தை உருவாக்கி இருந்தார். இதன்மூலம் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ரஷ்யா செல்லும் இளம் விஞ்ஞானிகள் பட்டியலில் இணைந்தார்.

அங்கே அறிவியல் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான வழிகாட்டுதல் அவருக்கு அளிக்கப்படும் எனவும் அங்கே விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்கி ஆய்வு மேற்கொள்வார் எனவும் கூறப்பட்டிருந்தது. ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 8 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு ரூ.1.75 லட்சம் தேவைப்பட்டது.

ஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக ரூ.1.75 லட்சத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதுகுறித்து அரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா? என்ற தலைப்பில் 'தி இந்து' தமிழ் இணையத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அச்செய்தியைப் பார்த்த ரஷ்யாவில் வசித்துவரும் தமிழர் விஜயகுமார், பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகுமார் பேசும்போது, ''சமூக ஊடகங்களில் எனக்குப் பெரியளவில் ஈடுபாடு இல்லை. என்னுடைய மனைவிதான் இந்த செய்தியைப் பாருங்கள் என்று கூறினார். பார்த்தவுடன் உடனே அந்த மாணவருக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. நாரணாபுரம் என் சொந்த ஊர். என்னுடைய அம்மா அங்கேதான் அரசுப்பள்ளியில் படித்தார். எப்போது இந்தியா வந்தாலும் என் சொந்த ஊருக்குச் செல்வேன்.

ரஷ்யாவில் குறிப்பாக மாஸ்கோவில் வசிக்கும் நாம் ஏன் ஜெயக்குமாருக்கு உதவக்கூடாது என்று தோன்றியது. எதையும் யோசிக்காமல் உடனே ஆசிரியரை அழைத்துப் பேசிவிட்டேன்'' என்றார்.

ஒன்றேமுக்கால் லட்சம் பணத்தை அளிப்பது எப்படிச் சாத்தியமானது என்று கேட்டதற்கு, ''ரஷ்யாவில் கண் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறேன். இந்தப் பணம் எனக்குப் பெரிய தொகையாகத் தோன்றவில்லை. எதற்கெல்லாமோ செலவு செய்கிறோம். படிப்பை ஊக்குவிக்கவும் செய்யலாம் அல்லவா?

என்னால் கொடுக்கமுடியும் என்ற நிலையில் இருக்கிறேன். கொடுத்துவிட்டேன்!'' என்கிறார் விஜயகுமார்.

இந்த செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/தி-இந்து-செய்தி-எதிரொலி-அரசுப்பள்ளி-மாணவரின்-ரஷ்ய-கனவு-நனவானது/article9594252.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 106
  • Created
  • Last Reply
  • 3 weeks later...

பாடசாலைக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலாப்பயணியின் செயற்பாட்டால் சந்தோசத்தில் திளைத்த மாணவர்கள், ஆசிரியர்கள்

நாட்டை சுற்றிப் பார்க்க ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுப்பயணி ஒருவர் தனது செயற்பாட்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமொன்று சிகிரியா பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

16107956_1347264312010890_439713962_o.jp

டேவிட் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இவர் ஒருவார காலம் இலங்கையில் தங்கியிருந்து சிகிரியா, கண்டி, நுவரெலியா, மிரிஸ்ஸ மற்றும் சிவனொளிபாதமலை போன்ற சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதற்காக திட்டமிட்டு சாரதியுடன் ஒரு வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

அவரது திட்டத்தின்படி முதலாவது சுற்றுலா விஜயமாக சிகிரியாவுக்கு சென்றுள்ளார். அங்கு சுற்றுலாவினை முடித்துவிட்டு செல்கையில் சிகிரியாவில் இருந்து 6 கிலோ மீற்றர் தொலைவில் பின்தங்கிய நிலையில் இருந்த சிகிரியா உடவெலயாகம கனிஷ்ட வித்தியாலயத்தை அவதானித்துள்ளார்.

கற்றலுக்கான எவ்வித அடிப்படை வசதிகளுமற்று அப் பாடசாலை இடம்பெறுவதை சுற்றுலாப்பயணி அவதானித்துள்ளார். 

இந்நிலையில் தான் சுற்றுலாவுக்காக வாடகைக்கு அமர்த்திய வாகனத்தையும் சாரதியையும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள கடைகளில் பாடசாலைக்குத் தேவையான வெண்பலகை, பாடசாலை சுவர்களுக்கு பூசுவதற்காக பெயின்ற் மற்றும் பாடசாலை உபகரணங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்துள்ளார். 

குறித்த பாடசாலையில் உள்ள  11 வகுப்புகளுக்கும் தேவையான வெண்பலகைகைளை கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை, குறித்த பாடசாலையில் எவரது உதவியுமின்றி தானே முன்வந்து பாடசலைக்கு நிறப்பூச்சு பூசும் பணியையும் குறித்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி மேற்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் மற்றும் ஆசரியர்கள் அவருக்கு உதவியாக இருந்து வருகின்றனர். 

இவ்வாறான உதவிகளை தான் எதிர்காலத்திலும் இலங்கைக்கு வரும்போது மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

16121675_1347263202011001_1043717724_o.jpg

16121603_1347262358677752_973113374_o.jpg

http://www.virakesari.lk/article/15480

Link to comment
Share on other sites

மர வியாபாரியின் இலவச கல்விச் சேவை: கிராமப்புற மாணவர்கள் அரசுப் பணியில் சேர பயிற்சி - இதுவரை 200 பேர் தேர்வாகியுள்ளனர்

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கிராமப்புற மாணவர்களுக்காக மர வியாபாரி சேகர் நடத்தி வரும் ‘சொந்தம் கல்வி சோலை’ இலவச பயிற்சி மையத்தில் பயிலும் மாணவிகள் | சேகர்
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கிராமப்புற மாணவர்களுக்காக மர வியாபாரி சேகர் நடத்தி வரும் ‘சொந்தம் கல்வி சோலை’ இலவச பயிற்சி மையத்தில் பயிலும் மாணவிகள் | சேகர்
 
 

அரசுப் பணியில் சேர விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்காக கும்மிடிப்பூண்டியில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தை இலவசமாக நடத்திவருகிறார் மர வியாபாரி ஒருவர். இந்த மையத்தில் இருந்து இதுவரை 200 பேர் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சேகர். மர வியாபாரம் செய்கிறார். கிராமப்புறங்களில் படித்துவிட்டு அரசுப் பணிக்குத் தயாராகும் மாணவர்களுக்காக கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ‘சொந்தம் கல்விச் சோலை’ என்ற இலவச பயிற்சி மையத்தை தொடங்கி நடத்திவருகிறார். இங்கு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த கல்விச் சேவை குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

10-ம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். அதன்பிறகு மரம் வியாபாரம் செய்யத் தொடங்கி விட்டேன். கும்மிடிப் பூண்டியைச் சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு படித்து முடித்துள்ள ஏராளமானவர்கள் அரசுப் பணிகளுக்குத் தயாராகி வருவதைப் பார்த்தேன். இவர் களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதுபற்றி நண்பர்களுடன் ஆலோசித்தேன். ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கும் வகையில் ‘சொந்தம் கல்விச் சோலை’ என்ற இந்த மையத்தை தொடங்கினோம். இங்கு தினமும் சுமார் 250 பேர் பயிற்சி பெறுகின் றனர். கடந்த 4 ஆண்டுகளில் இங்கு பயிற்சி பெற்று 200 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, விஏஓ, ஆசிரியர் பணி என தேர்வாகி யிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

பயிற்சி மையத்தின் ஒருங் கிணைப்பாளர் முகுந்தன் கூறிய தாவது:

கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்கள் பலர் அரசுப் பணிக்கு செல்லவேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், அதிக கட்டணம் செலுத்திப் படிப்பது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே, கிராமப் புற மாணவர்களுக்கு தரமாகவும், இலவசமாகவும் பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்த மையம் 2012-ல் தொடங்கப்பட்டது.

சேவை மனப்பான்மையோடு...

இதற்காக எம்.சேகர் என்பவர் தனது 15 சென்ட் நிலத்தைக் கொடுத்து கட்டிடத்தையும் கட்டிக் கொடுத்தார். அதன்பிறகு நாற்காலிகள், நகலெடுக்கும் கருவி, கம்ப்யூட்டர் என நிறைய பொருட்கள் நன்கொடையாகக் கிடைத்தன. சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனாலும், வாரம் முழுவதும் மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். சேவை மனப்பான்மையோடு இந்த மையம் செயல்படுவதால், பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களும் பெரிய அளவில் ஊதியத்தை எதிர்பார்க்காமல் பணியாற்று கின்றனர் என்றார்.

இங்கு பயிற்சி பெற்று தமிழக அரசுப் பணியில் இருக்கும் உமா மகேஸ்வரி, ஸ்ரீதர், டில்லிபாய் ஆகியோர் கூறியதாவது:

எங்களைப் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு தரமான பயிற்சி கிடைப்பது கடினம். சென்னை போன்ற பெரிய நகரங்களில் வந்து தங்கி பயிற்சி மேற்கொள்ள போதிய பண வசதி இல்லை. கும்மிடிப்பூண்டியிலேயே சேகர் என்பவர் இலவசப் பயிற்சி மையம் நடத்துவதைக் கேள்விப்பட்டோம். அதன்பிறகு அங்கு சேர்ந்து பயிற்சி பெற்றோம். இலவசம் என்றாலும்கூட, மிகச் சிறப்பாக, தரமான பயிற்சி எங்களுக்கு அளிக்கப்பட்டது.

அதனால்தான், எங்களால் அரசுப் பணியில் சேரமுடிந்தது. இந்த மையத்துக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எங்களைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் பல்வேறு அரசுப் பணிகளுக்கு வரவேண்டும். அதற் காக, அந்த பயிற்சி மையத்துக்கு நாங்கள் என்றென்றும் துணையாக இருப்போம். வாய்ப்பு கிடைக்கும் போது நாங்களும் நேரில் சென்று, மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். எங்கள் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/மர-வியாபாரியின்-இலவச-கல்விச்-சேவை-கிராமப்புற-மாணவர்கள்-அரசுப்-பணியில்-சேர-பயிற்சி-இதுவரை-200-பேர்-தேர்வாகியுள்ளனர்/article9697508.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கற்றல் குறைபாடு இருந்ததால் பள்ளி படிப்பை கைவிட்டவர் வருமான வரித்துறை அதிகாரி ஆனார்: வாழ்க்கை திறன் பற்றி ஆண்டுக்கு 4 லட்சம் பேருக்கு பயிற்சி

வாழ்க்கைத் திறன் அறிதல் குறித்து மாணவிகளுடன் உரையாடும் வருமானத் வரித்துறை இணை ஆணையர் வி. நந்தகுமார்
வாழ்க்கைத் திறன் அறிதல் குறித்து மாணவிகளுடன் உரையாடும் வருமானத் வரித்துறை இணை ஆணையர் வி. நந்தகுமார்
 
 

‘டிக்ஸ்லக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டால் 6-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை கைவிட்ட போதிலும் தனது விடா முயற்சியால் இன்று வருமான வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்து வருகிறார் நந்தகுமார்.

சென்னையில் உள்ள வருமான வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்து வருபவர் வி.நந்தகுமார். இவர் பள்ளியில் படிக்கும்போதே கற்றல் குறைபாட்டால் அவதிப்பட்டுள்ளார். இதனால் படிக்க முடியாமல் 6-ம் வகுப்பில் தோல்வியடைந்து, பின்னர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு, சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.

படிப்பில் ஆர்வம்எனினும், படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அவர் விடா முயற்சியுடன் தொடர்ந்து படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இன்று வருமான வரித்துறை இணைஆணையராக பதவி வகித்து வருகிறார். அத்துடன், ‘துணிந்து நில்’என்ற பெயரில் அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்க்கைத் திறன் அறிதல்

குறித்து போதித்து வருகிறார். அவர் இந்த நிலையை அடைந்தது குறித்து ‘தி இந்து’விடம் கூறிய தாவது: “எனக்கு ஏன் படிப்பு ஏறவில்லை என எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், பெற் றோர்களுக்கும் தெரியவில்லை. காரணம், கற்றல் குறைபாடு குறித்து ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியதால் பெற்றோர் வருத்தம் அடைந்தனர். வயது ஆக ஆக, எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

வீட்டிலேயே படிப்புஆனால், மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல மிரட்சியா இருந்தது. அப்போது அமல்ராஜ் என்ற நண்பன்,‘பள்ளிக்கூடம் போய்த்தான் படிக்கணும்னு இல்லை, வீட்டில் இருந்து படித்தே தேர்வு எழுதலாம்’என்று சொன்னான். உடனடியாக தேர்வுக்கு விண்ணப்பித்தேன். வேலை செஞ்சுகிட்டே படித்து தேர்வு எழுதினேன்.

சிவில் சர்வீஸ் ஆர்வம்

வீட்டிலேயே பாடங்களைப் படித்து எழுதி எழுதிப் பார்ப்பேன். நாலு தடவை தப்பா எழுதினா, அஞ்சாவது தடவை சரியா எழுதிடுவேன். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதும் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் ஆங்கில இலக்கியமும், பிரசிடென்சி கல்லூரியில் எம்ஏ ஆங்கிலமும் படித்து தேர்ச்சி பெற்றேன்.

அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கும்போது தப்பு தப்பாக படிப்பதையும், அவற்றை திருப்பி எழுதும் போது ஏகப்பட்ட பிழைகளுடன் எழுதுவதையும் எனது நண்பர் சேஷாத்ரி என்பவர்தான் கண்டுபிடித்துக் கூறினார். அப்போதுதான் எனக்கு ‘டிக்ஸ்லக் சியா’ எனப்படும் கற்றல் குறைபாடு இருப்பது தெரியவந்தது. எனினும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினேன். இவ்வாறு கடினமாக உழைத்ததன் விளைவாக ஐ.ஆர்.எஸ். (இந்திய வருவாய் பணி) பணியில் சேர்ந்தேன்.

இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என மனதில் தோன்றியதால், நண்பர்கள் உதவியுடன் ‘துணிந்து நில்’ என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்க்கைத் திறன் அறிதல் குறித்து போதித்து வருகிறேன்.

இதற்காக ஆண்டொன்றுக்கு சுமார் 4 லட்சம் அரசுப் பள்ளி, மாணவர்களைச் சந்தித்து போதித்து வருகிறேன்.

ஆசிரியர்களுக்கும் பயிற்சி

தற்போது ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள் ளேன். அண்மையில் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 700 ஆசிரியர்

களுக்கு பயிற்சி அளித்தேன். பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட முடிவு செய்த மாணவர்கள் சிலர் எனது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தாங்களும் வாழ்வில் ஓர் உன்னத நிலையை அடைவோம் எனக் கூறினர். இதுதான் எனது உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்” என்றார்

 

http://tamil.thehindu.com/tamilnadu/கற்றல்-குறைபாடு-இருந்ததால்-பள்ளி-படிப்பை-கைவிட்டவர்-வருமான-வரித்துறை-அதிகாரி-ஆனார்-வாழ்க்கை-திறன்-பற்றி-ஆண்டுக்கு-4-லட்சம்-பேருக்கு-பயிற்சி/article9716562.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • 1 month later...

பசித்த வயிற்றுக்கு கொஞ்சம் கல்யாணச் சாப்பாடு

bangaluru%20photo

ஒரு விழாவில் இருந்து உபரி உணவு சேகரித்து எடுத்துவந்து மக்களுக்கு விநியோகிக்கிறார் யுவராஜ்   

இரு இளைஞர்கள் ஏழைகளைத் தேடி கல்யாணச் சாப்பாடு பரிமாறிவருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், திருமணத்திற்குப் பிறகு மீதமுள்ள உணவைத்தான் அவர்கள் கேட்டுப் பெற்றுவந்து கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பசியால் வாடுவோருக்கு வழங்குகிறார்கள்.

தினம் தினம் கேளிக்கை விருந்துகள் முடிந்தபிறகு, சாலையோர யதார்த்தம் ஜெயித்த கதை இது.

திருமணத்தைவிட்டு விருந்தினர்கள் வெளியேறியதும், விழா அமைப்பு காண்ட்ராட்காரர்கள் வழக்கமாக உணவுப்பொருட்கள் மீந்திருப்பதைப் பார்த்து அதை அப்புறப்படுத்திவிடுவார்கள். ஆனால் யுவராஜ் எம், மற்றும் சிவகுமார் பத்ராய்யா போன்ற நல்ல உள்ளங்கள், அந்த தேங்கிப்போன உணவை நகரத்தின் நலிந்த பிரிவினர் நிறைந்த பகுதிகளுக்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள்.

மார்க்கெட்டிங் செய்யும் யுவராஜ்

மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு வரும் யுவராஜ் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது வேலை நேரம் போக கிடைக்கும் சிறிது நேரங்களில் திருமண விழாக்களுக்குச் சென்று உபரி உணவை கட்டுமானத் தளங்களுக்கும், குடிசைப் பகுதிகளுக்கும் மற்றும் ரெயில்வே நிலையங்களுக்கும் எடுத்துச்சென்று அங்கு பசியால் வாடுவாருக்கு உணவளித்து வருகிறார். குறிப்பாக மேற்கு வங்காளம், சாமராஜ்பேட்டை மற்றும் பசவனகுடி போன்ற பகுதிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். காலையில் திருமணம் இருந்தால், கட்டுமான தளங்களுக்கு உணவை எடுத்துக் செல்கிறார். அதுவே ஒரு மாலை நிகழ்வு என்றால், அவர் ரயில் நிலையங்களுக்கு உணவை எடுத்துச் செல்கிறார். போக்குவரத்து செலவை தற்போது லயன்ஸ் கிளப் தந்து உதவுகிறது.

காவிபுரத்தில் கட்டுமான வேலை நடக்கும் ஒரு இடத்தில் வீட்டு வேலைகளில் உதவிசெய்யும் வேளாங்கண்ணி இந்த சேவையின் பயனாளிகளில் ஒருவர். ''இது போன்ற உணவை வாங்கிச் சாப்பிட எங்களுக்கு கட்டுபடியாகாது'' என்கிறார் அவர்.

விழாவுக்கு வரும் ஒரு விருந்தினர் ஒரு பந்தியில் அதிகபட்சம் 500 கிராம் உணவை சாப்பிடுவார். ஆனால் அவருக்கு 1,500 கி.கிராம் வரை உணவு வழங்கப்படுகிறது என்று கூறும் யுவராஜ் தான் உணவைப் பெற்றுவர 10 அழைப்புகளைப் பெறுவதாகக் கூறுகிறார். ''சில கிலோமீட்டர் தொலைவுகளிலேயே பலர் பசியால் வாடிக்கிடக்க அதை ஏன் நாம் வீணாக்க வேண்டும்'' என்று கேட்கிறார்.

வெற்றிலைப்பழக்கடை பத்ரய்யா

யுவராஜைப்போல இன்னொருவரும் இதே பெங்களூருவில் இருக்கிறார்.

ராஜாஜி நகரில் 16 வருடங்களாக வெற்றிலைப்பாக்கு மற்றும் வாழைப்பழக் கடை வைத்திருக்கும் பத்ரய்யா, தான் விழாக்களில் பெறும் உணவை ஏழைக்கு அளித்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இங்கு வறுமையில் உள்ளவர்களும் திருமணங்களுக்கு உணவு வழங்கும் கைம்மாறு கருதாமல் உதவி

செய்பவர்களும் இருபிரிவாக பரவலாக பிரிந்துகிடப்பதைக் கவனித்த அவர், "பயிர்களை வளர்க்கும் விவசாயி ஒரு கைநிறையப் பெறும் தானியத்திற்காக விவசாயிகள் எவ்வளவு உழைக்கிறார்கள், எவ்வளவு போராடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இந்த மக்கள் ஒரு மோகத்தோடு விழாவிருந்தை உண்பதும் அதை வெட்கமின்றி வீணடிப்பதும் முரண்பாடுமிக்க ஒன்றாகும்."

இந்த இரட்டையர்கள் தங்கள் வேலை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை. அவர்கள் இருவரும் உணவு தயாராகும் இடங்களில் அவை வீணாக்கப்படுவதையும் தடுக்க சட்டத்தை உருவாக்கும் நம்பிக்கையில் அரசியல்வாதிகளையும் கொள்கைத் திட்டங்கள் வகுப்பவர்களையும் சந்தித்திருக்கிறார்கள்.

பெங்களூருவில் விருந்து உணவு
  • பெங்களூரில் பதிவுசெய்யப்பட்ட திருமண அரங்குகள்: 530
  • வருடாந்திர திருமணங்கள் எண்ணிக்கை: 85,000
  • பரிமாறும்முன் உணவு மதிப்பீடுகள்: 943 டன்
  • பரிமாறும்முன் உணவு செலவு: ₹ 339 கோடி
  • தகவல்: வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் படிப்பு, 2012

திருமணங்களில் உணவு விரயத்தை கட்டுப்படுத்த முடியுமா?

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு திருமண மண்டபத்திலும் கிட்டத்தட்ட ஒன்பது டன் உணவு வீணாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன மற்றும் வீண்செலவுகளின் அளவுகளைப் பார்த்து அதைத் தள்ளிவிடும் விழா அமைப்பாளர்கள், ஆடம்பரமான திருமணங்களை ஒரு வரன்முறைக்குள் கொண்டுவர முடியுமா?

திருமணங்கள் மற்றும் பிற விழா செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டம் குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது, ஆனால் சிறிய அளவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில், ஆடம்பர திருமணங்களுக்கு வரி விதிக்கும் நம்பிக்கையில், கர்நாடகா அரசு,

திருமணங்கள் தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில், உணவு மற்றும் சிவில் விவகாரங்கள் அமைச்சர் யு.டி. காதர், ''உணவுப் பாதிப்பைக் குறைப்பதற்கும் ஏழைகளுக்கு மத்தியில் மறுபகிர்வு செய்வதற்கும் அரசாங்கம் ஒரு திட்டத்தை பரிசீலனை செய்துவருவதாக'' கூறினார்.சட்டமும் கொள்கைகளும் இன்னும் பலனளிக்கவில்லை.

சட்டங்கள் அரிதாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மக்களின் வாழ்வாதார உரிமைகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருவதால், உணவு விரயம் குறித்த விழிப்புணர்வுக்கு முதன்மை இடம் தர வேண்டும் என ஆர்வலர்கள் நம்புகின்றனர். "சட்டங்களை உருவாக்கும் முன் மக்களிடையே விழிப்புணர்வு இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டங்கள் பயனற்றதாக இருக்கும்" என்கிறார் குடகு மாவட்டம், குஷால்நகரைச் சேர்ந்த என்.கே. மோகன். இவர் குடகு மாவட்ட பஞ்சாயத்து சார்பாக 2012ல் உணவு விரயக் கட்டுப்பாட்டுக்கான தீர்மானத்தை நிறைவேற்றியவர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு விரயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த அவர், உணவுப்பொருட்களை வீணடிக்காத பழக்கவழக்கம் சிறுவயது முறையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் நம்புகிறார்.லயன்ஸ் கிளப்பின் கேபினட் உறுப்பினரான பி.வி.துவாரகநாத் தண்ணீர் சேமிப்புக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அதற்கு இணையாக உணவு விரயக் கட்டுப்பாடும் இருக்கவேண்டுமென விரும்பினார். திருமண மண்டபங்களிலிருந்து எடுக்கப்பட்ட உணவுப்பொருட்கள் வீணாவதைத் தடுக்க குளிர்ப்பதன சேமிப்பு காப்பகங்களை உருவாக்க அரசாங்க உதவி தேவை என்று அவர் விரும்புகிறார்.

உணவுப் பற்றாக்குறைக்கு செக்...

உணவுப் பற்றாக்குறை எனும் கொடுமையான சொல்லாடலுக்கு திருமணங்களில் உணவு விரயமாவதைத் தடுத்து நிச்சயம் செக் வைக்கமுடியும். அது ஒரு விழாவில் விருந்தினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, 1960 களில் விருந்தினர் கட்டுப்பாட்டு சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜி.கே. ஜெயின் பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஜி.கே.ஜெயின் ''இந்த சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்'' என்று விரும்புகிறார்.

"இது பஞ்சம் மற்றும் போர்கள் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. உணவு பற்றாக்குறை ஏற்படும்போது, வாழ்வதா இல்லையா இரண்டில் ஒன்று என்ற நிலை ஏற்பட்டதால் அச்சமயம் உணவு விரயங்களை எப்படி கையாள்வது என்பது குறித்த கடுமையான அமலாக்கத்தை உத்தரவாதப்படுத்தவே இச்சட்டம் இயற்றப்பட்டது" என்று அவர் கூறினார்.

நம்மால் உணவை தயாரித்து ஊருக்கு வழங்கமுடியாது. விருந்துக்காக யாரோ தயார் செய்த உணவு வீணாகாமல் ஏழைகளுக்குச் சென்றுசேரட்டுமே என உதவும் யுவராஜ், பத்ரய்யாக்களின் முயற்சிகள் நம்மூரிலும் பரவுமா?

தமிழில்: பால்நிலவன்

http://tamil.thehindu.com/india/article19315900.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.