Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20140315_111008.jpg

அண்மையில் தாயகத்தில் ஒரு புத்தக கடையில் கண்டேன். :rolleyes:

Link to comment
Share on other sites

யாராவது எண் சாத்திரி அலுவல குடுத்திட்டாரோ?

Link to comment
Share on other sites

சிங்களக் கலப்பினால் வந்தது. சிங்களம் தெரிந்தவர்கள் விளக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வன்னித் தமிழாக இருக்குமோ?  அவங்களும் ஏதோ மாற்றித்தான் போட்டிருந்தார்கள்.  யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்க.

Link to comment
Share on other sites

பொருள்

பொத்தகம்:

 நூல், பனுவல்
கணக்குகள் எழுதிவைக்கப்பட்ட ஓவியம்; புத்தகம் :rolleyes:

 

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

புலிகளின் காலத்தில் பொத்தகம் என்பதே சரியான தமிழாக ஏற்கப்பட்டது..

மேலும் விபரத்திற்கு

http://valavu.blogspot.co.nz/2008/10/1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பேபி சுப்பிரமணியம்  அன்ணரின்  காலத்தில் கொண்டுவரப்பட்ட  தமிழ்  சொற்கள் 

Link to comment
Share on other sites

அப்பவும் யோசிச்சனான் அவர்களின் விளையாட்டு என்று . :icon_mrgreen:


ஒரு கவரகொய்யாவைய கயிற்றில் கட்டி வைத்து இதுதான் ஸூ என்று சொன்னவர்கள் .

Link to comment
Share on other sites

அப்பவும் யோசிச்சனான் அவர்களின் விளையாட்டு என்று . :icon_mrgreen:

ஒரு கவரகொய்யாவைய கயிற்றில் கட்டி வைத்து இதுதான் ஸூ என்று சொன்னவர்கள் .

அர்ஜீன் அண்ணா உங்கள் பதிலைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்த பழமொழி
"**** **** செக்கென்ன சிவலிங்கமென்ன"
 
அண்ணன் தயவு செய்து கீழிருக்கும் அந்த லின்க் ஐ முழுமையாக வாசிக்கவும்..
Link to comment
Share on other sites

எனக்கு விளக்கம் தர முதல் ,

 

முதல் நான்கு பின்னோட்டகளையும் வாசிக்கவும் .

 

அண்ணை பொத்தகம் நான் இன்றுதான் கேள்வி படுகின்றேன் ,

 

உங்களுக்கு பொத்தகம் பற்றி எப்ப தெரியும் ?

 

வாழ்க்கை வாழ்வது ஒருதரம் அதை --------- ஆக வாழா நான் விரும்பவில்லை .


பேபி நல்ல தமிழ் சொல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவும் யோசிச்சனான் அவர்களின் விளையாட்டு என்று . :icon_mrgreen:

ஒரு கவரகொய்யாவைய கயிற்றில் கட்டி வைத்து இதுதான் ஸூ என்று சொன்னவர்கள் .

 

அதைப் பாக்கப் போன உங்களை...

கட்டி வைத்து... காண்டாமிருகம் என்று சொல்லியிருக்க வேண்டும். தப்பி விட்டீர்கள். :D

Link to comment
Share on other sites

எனக்கு விளக்கம் தர முதல் ,

 

முதல் நான்கு பின்னோட்டகளையும் வாசிக்கவும் .

 

அண்ணை பொத்தகம் நான் இன்றுதான் கேள்வி படுகின்றேன் ,

 

உங்களுக்கு பொத்தகம் பற்றி எப்ப தெரியும் ?

 

வாழ்க்கை வாழ்வது ஒருதரம் அதை --------- ஆக வாழா நான் விரும்பவில்லை .

பேபி நல்ல தமிழ் சொல் .

நன்றி அண்ணன்..  

நான் வட்டுக்கோட்டைக்கு வழி என்ன என்று கேக்க நீங்கள் துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு என்கிறீர்கள்..

 

வணக்கம்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவும் யோசிச்சனான் அவர்களின் விளையாட்டு என்று . :icon_mrgreen:

ஒரு கவரகொய்யாவைய கயிற்றில் கட்டி வைத்து இதுதான் ஸூ என்று சொன்னவர்கள் .

 

அவர்கள் சொன்னதா?

எதிர்க்கவேண்டியது தான்..... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இது தப்பில்லை.என்னடா இது புத்தக கடையிலேயே தமிழை இப்படி எழுதி இருக்கிறாங்களே என்டு தான் இங்கு இதை பதிந்தேன். கருத்து இட்ட உறவுகளுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

இந்தக் காலத் தமிழ் அகரமுதலிகளில் பொத்தகம், புத்தகம் என இரண்டுமே சுட்டிக் காட்டப் படுகின்றன. ஆனாலும் பொத்தகம் என்ற சொல்லே முந்தையது; வேர்ப்பொருள் பொதிந்து வருவது; இணைச்சொற்கள் கொண்டது; நம் பனையோலை மரபோடும் ஒத்து வருவது. [பனை பற்றிய சிந்தனை இல்லாமல் பொத்தகம் பற்றி அறியமுடியாது.] புத்தகம் என்பது பொத்தகத்தின் மரூஉ. ஒகரம் உகரமாவது தென்மாவட்டங்களில் பெரிதும் உள்ள பழக்கம். ”கொடுத்தானா?” என்பதைக் ”குடுத்தானா?” என்று சொல்லுவது பெரும்பாலோருக்கு உள்ள பழக்கம். ”குடுத்தல்” என்ற இந்தச் சொல்லாட்சி பேரரசுச் சோழர்களின் கல்வெட்டுக்களில் கூடப் பெரிதும் புழங்கும். இதுபோன்றதொரு பலுக்கற் சிதைவிற் பொத்தகம் என்பது புத்தகம் என்று ஆகும். 
 
சங்கதம் தவிர்த்த வடபால் மொழிகளிலும் (potthaka - Pali, Putha - Prakrit, Puuthi - Kashmiri, pothu - Sindhi, Pottha - Punjabi, Pothi - Kaumuni, Nepali, Assamese, Pothaa - Bengali, Oriya, Maithili, Poothi - Bhojpuri, Potha - Awadhi, Pothuu - Gujarati, Pothi - Marathi,), ஏன் சிங்களத்திலும் கூடப் (Pota) என்றே அமைந்து, பொத்தகம் எனும் பலுக்கிற்கு நெருங்கி வரும். சங்கதத்தில் மட்டுமே பொத்தகம் புத்தகம் ஆகிப் பின் மேலும் திரிந்து புஸ்தகம் ஆகும். இந்தக் கால வடபால் மொழிகளிற் சிலவும் “புஸ்தக்” என்ற சங்கதப் பலுக்கலையே எடுத்தாளுகின்றன. இது புரியாது, நம்மில் பலரும் புஸ்தகம் தான் தமிழிற் புகுந்து புத்தகம் ஆயிற்று என்று எண்ணிக் கொள்கிறோம். அதையே சிலர் சாதிக்கவும் செய்வார்கள். உண்மை அதுவல்ல. 
 
தமிழராகிய நாம், நம்முடைய மூலங்களை உணராமல் எவ்வளவு காலத்திற்குத் தான் இருப்போமோ, தெரியவில்லை. அளவுக்கு மீறிச் சங்கத ஆளுமைக்கு நம்மிற் பலரும் ஆட்பட்டுப் போனதால், "புஸ்தகம்" தெரிந்தவர்க்கு "பொத்தகம்" என்னவோ புதிதாகவே தோற்றுகிறது. காலத்தின் கோலம் கண்டு நொந்துகொள்ளுவதைத் தவிர்த்து, வேறு ஒன்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை :-) எதைச் சொன்னாலும், ”அது எப்படிச் சங்கதம் வழிவந்ததை இவன் மறுக்கலாம்?” என்ற முட்டாள் தனமான பூசனைப் போக்கில், ”தமிழ்வெறியன்” என்று சாடுவதே நடக்கும் நிலையில் ’அளவிற்கும் அதிகமாகப் பிறசொற் பலுக்கல்களை நம்மொழியின் இடையே ஆளுவது’ பற்றி என்னைப் போன்றவர் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது,சொல்லுங்கள்?
 
(இன்னொரு திராவிட மொழியின் நிலையும் இங்கு எனக்கு நினைவிற்கு வருகிறது. பலோச்சி என்னும் மொழியை அளவிற்கு மீறிக் கலந்த திராவிடமொழியான பிராகுயி இன்று 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே திராவிடச் சொற்களைக் கொண்டிருக்கிறதாம். ”இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் இல்லாமல் போகக் கூடிய திராவிடமொழி அது” என்றும் அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். இதனால், கூடிய விரைவில் பிராகுவிக்கள் தங்களை பலோச்சி என்றே அடையாளப் படுத்திக் கொள்வார்களாம். இதே போல, அளவுக்கு மீறிய ஆங்கிலக் கலப்பைப் பற்றி இத்தாலி மொழியினர் கூடக் கவலைப் படுகிறார்கள் என்று பி.பி.சி. வலைத்தளத்தில் படித்தேன். இடைவிடாமல் ஆங்கிலம் பழகும் தமிழ் இளையர் கூட 
எதிர்காலத்திற் தங்களைத் தமிழர் எனச் சொல்லாது தமிங்கிலர் என்று அடையாளப் படுத்திக் கொள்வார்களோ, என்னவோ?) 
 
பொத்தகம் பற்றிப் புரிய வேண்டுமானால், நாம் பனையோலையில் இருந்து, (கூடவே பனை பற்றிய பல செய்திகளையும் அறிந்து கொண்டு) தொடங்க வேண்டும். பட்டம்>பத்ரம், தால்>
தாள்> தாளி, தாலம், சுவடி, பனுவல், பொத்துதல், ப(ன்)னை, பாளை, போந்தை போன்ற சொற்களின் வழி, நம் புரிதலைக் கொண்டுசெல்ல வேண்டும்.
 
புல்லுதல் = பொருந்துதல். 
 
பொரு - பொருந்து - பொருத்து - பொத்து - பொத்து - பொட்டு.
 
பொத்துதல் = பொருந்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல்.
 
பொத்து - பொத்தகம் = பொத்திய (சேர்த்த) ஏட்டுக்கற்றை,எழுதிய ஏட்டுத்தொ்குதி.
 
சுவடி சேர்த்தல் என்னும் வழக்கை நோக்குக.
 
- மேலே கண்டது பாவாணர் ஐயாவின் விளக்கம்.
 
 
 
இராம.கி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வயதான பெரியவர்கள்  பொஸ்தகம்  என்றும் சொல்வார்கள், (அனேகமாய் முன் பல்லு இல்லாவிட்டால்  பு , பூ வராது.) இதெல்லாம் பேச்சு வழக்கில்தான் வரும். எழுதும்போது புத்தகம்தான் சரியாய் இருக்கும்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.