Jump to content

மகனதிகாரம் ..!


Recommended Posts

1

இறுக்கி பற்றி பிடித்து இருந்த ..

உன் கைகள் லேசாய் பிடி தளரும் ..

போது நான் புரிந்து இருக்க வேணும் ..

நீ வளர்த்து வருகிறாய் என்று ..

மகனே ...

 

2

ஓடும் உன் மகனை ...

பிடிக்கும் வயதில் நான் ..

இல்லை மகனே ..

முதுமை .!

 

3

அப்பா என்று என்னை நீ அழைத்தபோது ..

இன்னும் ஒருமுறை கூப்பிட மாட்டானா ..

என் பிள்ளை என்னை என்று ஏங்கிய..

என்னை இப்பொழுது உனக்கு ஒன்னும் ..

தெரியாது போப்பா அங்கால என்கிறான் ...

லையிட்டா வலிக்குது மகனே மனது ..!

 

4

என்ன உனக்கு தொப்பை எட்டி பார்க்குது ..

என்று கேட்பவர்களுக்கு தெரியுமா ..

அது உனக்காக வளர்த்து தொப்பை என்று ..

நீ சிரித்து சறுக்கி விளையாட மகனே ..!

 

5

உன்னுடன் மிட்டாய்க்கு இட்டா ..

சண்டையை விட உன் எச்சில் ..

முத்தத்துக்கு இட்ட சண்டைதான் ..

நினைவிருக்கு மகனே ..!

 

6

உன் ஊச்சா என் நெஞ்சை ...

நனைக்கும்போது தான் ..

என் மனது குளிருது மகனே ..!

 

7

நீ அப்பா என இழுக்கும் இழுவையில் ..

தெரிந்து விடும் எனக்கு உனக்கு ..

மிட்டாய் வேணும் என்று மகனே ..!

 

8

நான் தடி எடுப்பது பார்த்து ...

உன் கண்கள் கலங்கியது போது....

என் அப்பா நினைவில் வந்து போனார் ..

நான் கலங்கிய கணங்களும் அவ்வேளையே..

மகனே ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகன் ஏறி விளையாடத் தான் தொப்பை வளர்க்கிறார்கள் என இன்டைக்குத் தான் தெரியும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு சுற்றி சுழலும் சக்கரம் . உங்களுனர்வுகள் புரிகிறது :)

Link to comment
Share on other sites

மகனதிகாரம் மிக அருமை அஞ்சரன்!

 

ஆனால்....

 

"மகனைப்பெற்ற  அப்பாக்களுத்தான் தெரியும்... சில்லறைக்காசை வெளியில் வைக்கக் கூடாது என்று..!"

 

என நீங்கள் மகனதிகாரத்தில் எங்கேயோ ஒரு சுவரில் எழுதிய  ஞாபகம்.

தங்கமீன்கள் திரைப்படத்தில் வரும் வசனத்தைப்போல அப்படி நீங்கள் எழுதியிருந்ததை நினைத்து

மனதுக்குள் சிரித்து ரொம்பவும் இரசித்திருந்தேன். :lol::D

 

இதிலும்...

 

உன் ஊச்சா என் நெஞ்சை ...

நனைக்கும்போது தான் ..

என் மனது குளிருது மகனே ..!

 

7

நீ அப்பா என இழுக்கும் இழுவையில் ..

தெரிந்து விடும் எனக்கு உனக்கு ..

மிட்டாய் வேணும் என்று மகனே ..!

 

8

நான் தடி எடுப்பது பார்த்து ...

உன் கண்கள் கலங்கியது போது....

என் அப்பா நினைவில் வந்து போனார் ..

நான் கலங்கிய கணங்களும் அவ்வேளையே..

மகனே ....!

 

 

இந்த இறுதி பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. ரசித்தேன்... சிந்தித்தேன்! அனுபவிக்கும் காலம் இன்னும் வரவில்லை! :rolleyes:  :)

Link to comment
Share on other sites

மகனிற்கும் அம்மாவிற்கும் இடையேயான உறவு தான் பிணைப்பு என்பார்கள்....

 

அப்பாவின் உணர்வுகளை அழகாக தந்துள்ளீர்கள்... 

 

அனுபவக் கவிதை அருமை அருமை  :lol:

 

Link to comment
Share on other sites

மிக்க நன்றி உறவுகளே உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான  பதிவு

 

அப்பனுக்கும் பிள்ளைக்குமான  இணைப்பு என்பது  ஒரு பரம்பரைத்தொடர்ச்சி

 

எனக்கு 2 பெரிய  பையன்கள் இருக்கிறார்கள்

அவர்களுடனான  எனது உறவு என்பது நட்பு ரீதியிலானது

அதேநேரம் அப்பா என்ற பொறுப்பிலிருந்து

எப்பொழுதும் விலகமாடடார் என்பதும் அவர்களுக்கு தெரியும்

 

ஒரு பருவத்தில் அப்பருக்கும் பிள்ளைக்குமிடையில்

சுயகொளரவப்போட்டி வரும்

அதுவே அவர்களை  தள்ளி  வைக்கும் என்று கேள்விப்பட்டதால்

அந்த பருவகாலத்தில் மிகக்கவனமாக இருந்தேன்

வெற்றியும் கிட்டியது

சுலபமாக அந்தப்பருவத்தை கடந்திருக்கின்றேன் என்று தான் நினைக்கின்றேன்

ஆனால் இன்னும் இருக்கு...

அதையும் கடக்கணும்

கடப்பேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகன் ஏறி விளையாடத் தான் தொப்பை வளர்க்கிறார்கள் என இன்டைக்குத் தான் தெரியும். :D

அப்பாவின் தொப்பையில் ஏறி விளையாடியபோதே எனக்குத் தெரிந்திருந்தது. :)நானும் வளர்க்கலாம் என்று யோசிக்கின்றேன். <_<

Link to comment
Share on other sites

நாவூறு, கண்ணூறு என்று எனக்கு இவற்றில் சிறிது நம்பிக்கை உண்டு. ஆதலால் நான் இங்கு எதுவும் எழுதப்போவதில்லை. :D  :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தருணங்கள். அனுபவித்திருக்கின்றேன் , மீன்டும் அனுபவிக்கின்றேன் பேரனுடன்...! நன்றி அஞ்சரன்...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அருமையான... கவிதை அஞ்சரன்.
வாசிக்கும் போது... கண்கள் பனித்து விட்டது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக இரசித்து எழுதியுள்ளீர்கள் அருமை அஞசரண்

Link to comment
Share on other sites

நன்றி உறவுகள் வரவுக்கு .

Link to comment
Share on other sites

அருமையான  பதிவு

 

அப்பனுக்கும் பிள்ளைக்குமான  இணைப்பு என்பது  ஒரு பரம்பரைத்தொடர்ச்சி

 

எனக்கு 2 பெரிய  பையன்கள் இருக்கிறார்கள்

அவர்களுடனான  எனது உறவு என்பது நட்பு ரீதியிலானது

அதேநேரம் அப்பா என்ற பொறுப்பிலிருந்து

எப்பொழுதும் விலகமாடடார் என்பதும் அவர்களுக்கு தெரியும்

 

ஒரு பருவத்தில் அப்பருக்கும் பிள்ளைக்குமிடையில்

சுயகொளரவப்போட்டி வரும்

அதுவே அவர்களை  தள்ளி  வைக்கும் என்று கேள்விப்பட்டதால்

அந்த பருவகாலத்தில் மிகக்கவனமாக இருந்தேன்

வெற்றியும் கிட்டியது

சுலபமாக அந்தப்பருவத்தை கடந்திருக்கின்றேன் என்று தான் நினைக்கின்றேன்

ஆனால் இன்னும் இருக்கு...

அதையும் கடக்கணும்

கடப்பேன்..

அன்பான கண்டிப்புக்கு அடங்காத ஆக்களே இல்லை அண்ணே .. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.