Jump to content

வரப்புயர (விவசாயம்/கைத்தொழில் சார்ந்த பதிவுகள்)


Recommended Posts

வெள்ளைப்பூண்டு சாகுபடி.

 

E_1404198764.jpeg

 

வெள்ளைப்பூண்டு சாகுபடி :

 

 இது ஒரு மணமூட்டும் பயிர். வணிக ரீதியில் நம் நாட்டில் பயிரிடப்படுகிறது. வைட்டமின் பி6, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, காப்பர், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. பச்சைப்பூண்டில் அஸ்கார்பிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் மலைப்பூண்டு பிரபலம். மேல்பழநி மலைப்பகுதிகளான பூம்பாறை, பூண்டி, மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை பகுதிகளில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

 

இரகங்கள் : 

 

ஊட்டி 1, சிங்கப்பூர் ரெட், மதராசி, ஆகிய பூண்டு இரகங்கள் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஊட்டி 1 ரகம் 120 முதல் 130 நாட்களில் எக்டருக்கு 17 டன்கள் மகசூல் கொடுக்கும். இலைப்பேன், இலை நூற்புழு, இலைக்கருகல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.
சிங்கப்பூர் உள்ளூர் ரகம் கொடைக்கானல், ஊட்டி, போடி மலைப்பிரதேசங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. யமுனா சபேத்-1 (ஜீ-1), யமுனா சபேத் -2 (ஜீ-50), யமுனா சபேத் -3 (ஜீ-282), அக்ரிபவுண்ட் ஒயிட் (ஜீ-40), யமுனா சபேத்-4 (ஜி-323) ஆகிய ரகங்கள் தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுவாக ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ச்சி, நல்ல சூரிய ஒளி என வேறுபட்ட தட்பவெப்ப நிலையில் நன்றாக வளரும் வளமான வடிகால் வசதி கொண்ட மண் மிகவும் அவசியம். கார அமிலத்தன்மை 5 முதல் 6 வரை மண்ணில் இருக்க வேண்டும். நிலத்தை நன்கு பண்படுத்தி அடியுரமாக எக்டருக்கு 30 டன் தொழுஉரம், 40 கிலோ தழைச்சத்து, 75 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து, 500 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 50 கிலோ மெக்னீசியம் சல்பேட் போன்ற உரக்கலவைகளை அடியுரமாக இடவேண்டும்.
நன்றாக பண்படுத்திய மண்ணை 1மீ அகலமும், 15 செ.மீ. உயரமும் தேவையான அளவு நீளமும் கொண்ட மேட்டுப்பகுதிகளாக தயாரிக்க வேண்டும். ஒரு எக்டர் நடவுக்கு சுமார் 500 முதல் 600 கிலோ பூண்டு பற்கள் தேவைப்படும். விதைப்பூண்டிலிருந்து 8 முதல் 10 மிமீ விட்டம் மற்றும் 4 கிராமிற்கும் அதிகமான எடை கொண்ட பூண்டு பற்களை தேர்வு செய்ய வேண்டும். 
நடுவதற்கு முன்பு பூண்டுகளை முதலில் நீரில் அமிழ்த்தி எடுக்க வேண்டும். பின்பு 1 லிட்டர் நீருக்கு 1மிலி பாஸ்போமிடான் 1 கிராம் கார்பன்டாசிம் கலந்த கரைசலில் விதைப்பற்களை 
15 நிமிடங்கள் ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின் நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.
மலைப்பகுதிகளில் அக்டோபர் - நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விதைக்க வேண்டும். விதைகளை பாருக்கு பாராக 15 செ.மீ. இடைவெளியிலும், விதைக்கு விதை 10 செ.மீ இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும். பூண்டின் வளர்ச்சி காலத்தில் 7 முதல் 8 நாட்களுக்கு ஒருமுறையும், முதிர்ச்சியடையும் போது 10-15 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் அளிக்கப்படுகிறது. மழைக்காலத்தில் வடிகால் வசதி அனைத்து நிலத்திலிருந்து நீரை வடிப்பது அவசியம். நடவு செய்த 
45வது நாள் மேலுரமாக 35 கிலோ தழைச்சத்து இடுவதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

 

அறுவடை : 

 

நடவு செய்த 120 முதல் 130 நாட்களுக்குள் மஞ்சளாக மாறியபின் அறுவடை செய்யலாம். 10 நாட்களுக்கு முன்பே நீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும். மகசூலாக எக்டருக்கு 6 முதல் 8 டன்கள் கிடைக்கிறது. அறுவடைக்கும் பின் புகை மூட்டம் செய்யப்பட்டு பூண்டுகள் பாதுகாக்கப்படுகிறது. அறுவடை செய்யும் போது பூண்டை வேருடன் அகற்றி எடுத்து, வேரையும் பொய்த் தண்டையும் அறுத்து விட்டு பூண்டை காய வைத்து பிறகு விற்பனை செய்ய வேண்டும்.
இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவு செய்த 30வது நாளில் ஒரு லிட்டர் நீரில் 5மிலி வேப்பெண்ணெயை கலந்து தெளிக்க வேண்டும். மேலும் 45வது நாளில் 1லிட்டர் நீருக்கு 1 கிராம் அசிப்பேட் மருந்தை தெளிக்க வேண்டும்.
வெட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்த பயிரின் தண்டுப் பகுதியில் குளோரிபைரிபாஸ் 2மிலி / லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து மாலை நேரங்களில் ஊற்ற வேண்டும். இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்த 1லிட்டர் தண்ணீரில் 2 கிராம் கேப்டான் அல்லது 3 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை 15 நாள் இடைவெளியில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
சாம்பல் நோய், அழுகல் நோய், வெண்நுனி இலை, நூற்புழு ஆகியவற்றை தக்க முறைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும். (தகவல் : முனைவர் ஜே.ராஜாங்கம், முனைவர் இரா.முத்துச்செல்வி, முனைவர் செந்தமிழ் செல்வி, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கொடைக்கானல் -624 103, போன் : 04542 - 240 931).

டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

 

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20988&ncat=7

Link to comment
Share on other sites

  • Replies 162
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாவல் சாகுபடியில் சாதனைரூ. 6 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி

 

Tamil_News_large_999171.jpg

 

நிலக்கோட்டை:தமிழ் இலக்கியங்களில் நாவல் பழத்திற்கு முக்கிய இடம் உண்டு. சுட்ட பழமா...சுடாத பழமா எனக்கேட்டு, மாடு மேய்க்கும் சிறுவனுக்கும் புத்திசாலித்தனம் உண்டு என்பதை அவ்வை பாட்டிக்கு உணர்த்த, முருகக் கடவுள் பயன்படுத்தியது நாவல் பழத்தை தான். பழம் சிறியது தான்; அதன் மூலம் கிடைத்த ஞானம் பெரிதல்லவா...

அவ்வை பாட்டிக்கு கிடைத்த ஞானத்தை போல, நாவல் பழத்தின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மெட்டூர் விவசாயி ஜெயக்குமார். இவரது, பண்ணையில் 1.5 ஏக்கரில் குட்டை ரக நாவல் மரங்களையும், மீதி இடத்தில் நெல்லியும் வளர்க்கிறார். தனது நர்சரிக்காக, ஆந்திராவிற்கு செடிகள் வாங்கப் போன போது, பெரிய நாவல் கனியை பார்த்து சாகுபடி செய்ய ஆவல் கொண்டார்.

ஒன்றரை ஏக்கரில் 80 செடிகளை 22 அடி இடைவெளியில் நட்டு, சொட்டு நீர் பாசனம் அமைத்தார்; மரமாகும் வரை இயற்கை உரங்களை மட்டுமே அளித்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில், மரத்திற்கு 5 கிலோ பழம் கிடைத்தது. படிப்படியாக விளைச்சல் அதிகரித்து, 11 வது ஆண்டிலிருந்து மரத்திற்கு 60 கிலோ பழம் கிடைக்கிறது.

பொதுவாக, நாவல் மரம் 40 அடி வரை வளரும்;

பழங்களை பறிப்பது சிரமம். இவரது தோட்டத்தில் தொடர் கவாத்து மூலம் மரம் அதிக உயரம் வளரவில்லை; தரையில் அமர்ந்து கொண்டு பழங்களை பறிக்கலாம்.

ஒவ்வொரு பழமும் 15 கிராம் எடையில், தித்திப்பு அதிகம்.

ஜெயக்குமார் கூறுகையில்,

ஒவ்வொரு மரத்திலிருந்தும் 60 கிலோ பழங்களை தாராளமாக பறிக்கலாம். கிலோ 150 ரூபாய்க்கு விற்கிறேன். இரண்டு மாதத்தில் 6.75 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளேன். செலவு போக 6 லட்ச ரூபாய் கிடைக்கும். ஒரு பழத்தின் விலை 2 ரூபாய்,” என்றார். இவரிடம் பேச - 98659 25193.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=999171

 

நாவல் பழத்தைப்பார்க்க ஆசையாக உள்ளது, இங்கு இந்த மரமில்லை. முருங்கமரத்தை வீட்டில் நட்டால் நல்லது, அதன் இலை காய்கள் என வருடம் முழுவதும் உணவுக்கு பயன்படும், இந்த முறை காய்கள் அதிகம் நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு மிகுதியை இன்னும் குளிரூட்டியில் பதனிட்டு வைத்துள்ளேன்.

 

மரவள்ளியை வீட்டில் நட்டல் தேவைக்கேற்ப கிட்டியெடுத்து சமைக்கலாம், அத்துடன் ஊடு பயிராக கீரை விதைகளை விதைத்துவிட்டால், கீரைக்கு நிழல் கிடைக்க வசதி. கீரையை பிடுங்கி எடுக்காமல் மேல் தண்டுடன் வெட்டியெடுத்தால், கீழ்தண்டு கிளைவிட்டு வளரும்,

 

இப்படி பல பயிர்களை வீட்டிலேயே வளர்ந்து எடுக்கலாம்.

 

உடலுக்கும் மனதிற்க்கும் வீட்டுத்தோட்டம் நல்ல மருந்து

Link to comment
Share on other sites

விவசாயத்திலும்தினமும் ரூ.2,000சம்பாதிக்கலாம்!

 

ஒரு ஏக்கர் நிலத்தில் பப்பாளியை பயிரிட்டு, ஆண்டிற்கு, 7 லட்சம் லாபமீட்டலாம் என்கிறார், தேனி விவசாயி, சண்முக வேல் பாண்டி யன்: நான், தேனி அருகில் உள்ள, கீழப்பூலானந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவன். சர்க்கரை நோய், கண் நோய், பி.பி., உள்ளிட்ட நோய்களை தீர்ப்பதால், பப்பாளியின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பப்பாளி, வறண்ட பூமி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களிலும் நன்கு வளரும். ஏனெனில், 10 நாட்கள் வரை தண்ணீர் இல்லாவிட்டாலும், பப்பாளி கன்று வாடாது.பப்பாளி கன்றை நடவு செய்வதற்கு முன், நிலத்தை, களை இல்லாமல் நன்றாக உழ வேண்டும். ஏக்கருக்கு, 700 பப்பாளி கன்றுகள் தேவைப்படும். இவற்றை, விவசாய பண்ணைகள் மற்றும் நாற்று பண்ணைகளில் வாங்கி, 7 அடி நீளம், 7 அடி அகலம் விட்டு, நடவு செய்யலாம்.பெரிய பெரிய பாத்திகள் அமைத்து, நடவுக்கு முன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அப்போது தான், நிலத்தில் மண்ணின் வெப்பம் குறைந்து, நடவு கன்றுகளின் வேர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். நடவு செய்த இரண்டு மாதத்திற்கு, நிலத்தை காய விடாமல் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சினால், நன்கு வளரும்.மேலும், இரு மாதத்திற்கு எந்த ரசாயன உரமும் கொடுக்காமல், இயற்கை உரங்களான சாணம் மற்றும் கோமியத்தை தரலாம். அப்போது தான், 'நசுவினி' எனும், வைரஸ் தாக்காமல் நன்றாக வளர்ச்சி அடையும். நான்காவது மாதத்தில் பூ பிடித்து, பிஞ்சு விட ஆரம்பிக்கும் போது, பிஞ்சுகளில் வைரஸ் தாக்காமலிருக்க, அவற்றை அழிக்கும் மருந்து வகைகளை, தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். ஏனெனில், வைரஸ் தான், பப்பாளியின் முதல் எதிரி.ஏழாம் மாதம் முதல், பப்பாளியை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். காய்ப்பிற்கு வந்த ஏழு மாதத்திற்குப் பின், மாதத்திற்கு இரு முறை, ஒரு ஏக்கருக்கு, 50 கிலோ மணிச்சத்து, சாம்பல் சத்து, இரும்புச்சத்து உள்ள உரங்களை, அடியுரமாக வைக்க வேண்டும். அப்போது தான், காய் எடை குறையாமல், அதிக அளவில் தொடர்ந்து காய்க்கும்.மேலும், குறைந்தது ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வரை, பப்பாளி மரம் தொடர்ந்து நல்ல காய்ப்போடு, காய்கள் நிறைந்து இருக்கும்.

 

ஏக்கருக்கு, 700 மரம். ஒரு பப்பாளி கன்றை வாங்கி, உரமிட்டு, பராமரிக்க, 50 ரூபாய் செலவாகும். ஒரு மரத்திலிருந்து ஆண்டிற்கு, 300 முதல் 400 கிலோ பப்பாளியை அறுவடை செய்யலாம். 1 கிலோவை, 4 முதல் 6 ரூபாய் வரை விற்கலாம். இப்படி ஒரு மரத்திலேயே, 1,000 ரூபாய் வரை லாபமீட்டினால், 700 மரத்திற்கு, 7 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

வத்திப்பட்டி எனும் "பப்பாளி கிராமம்"
 
E_1404802009.jpeg
 
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திப்பட்டி கிராம விவசாயிகள் தங்களது தொழில் திறமையை விவசாயத்தில் புகுத்தி சாதனை படைத்து வருகின்றனர். இவர்கள் இயற்கை உரத்தை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இதனால், இங்கு விளைவிக்கப்படும் பயிர்கள் செழுமையாகவும், உயிர்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் விளங்குவதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தட்பவெட்ப நிலை, தண்ணீர் பற்றாக்குறைக்கு ஏற்ப விளைவிக்கப்படும் பயிர்களை மாற்றியமைத்து லாபம் ஈட்டி வருகின்றனர்.
வத்திப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சி. ஆண்டிச்சாமி,65. இவர், தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் நிதிப்பிரிவு இணை செயலராக 34 ஆண்டுகள் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது விவசாயத்தில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். வத்திப்பட்டியை பப்பாளி கிராமமாக மாற்றிய பெரும்பங்கு இவருக்குண்டு.
அவர் கூறியதாவது:
 
தமிழகத்தில் சப்னா (மஞ்சள் நிறம்), ரெட் லேடி (சிவப்பு நிறம்), ரெட் ராயல் (சிவப்பு நிறம்), சிந்தா (மஞ்சள் நிறம்) என நான்கு வகையான ஒட்டுரக பப்பாளிகள் விளைவிக்கப்படுகிறது. இதன் விதை 100 கிராம் ரூ.3,500. 100 கிராம் எடைக்கு சுமார் 1000 விதைகள் இருக்கும். சப்னா, சிந்தா வகை பப்பாளிகள் எண்ணெய் நாடுகளான குவைத், துபாய் நாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பப்பாளி விவசாயத்தை குழந் தையை போன்று பராமரிக்க வேண் டும். இந்த விவசாயத்தில் முறையான வகையில் ஈடுபட்டால் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.
கிணற்றுப்பாசனம் மூலம் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பப்பாளி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறோம். ஆண்டு தோறும் மாசியில் நடவு செய்ய வேண்டும். 45 நாட்களுக்கு பின் விளைச்சல் கிடைக் கும். 8 முதல் 14 மாதங்கள் வரை காய்கள் கிடைக்கும். இயற்கை உரம் பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் காணலாம். மார்க்கெட் மதிப்புக்கு ஏற்ப கிலோ ரூ.8 முதல் ரூ.9 வரை விற்கலாம். சிந்தா வகை பப்பாளியை கர்நாடக மாநில பழ வியாபாரிகள் அதிகளவு கொள்முதல் செய்கின்றனர். நான், சகோதரர்கள் உட்பட சிலர் பப்பாளி விவசாயத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறோம், என்றார்.
தொடர்புக்கு சி.ஆண்டிச்சாமி, ஓய்வு பெற்ற தலைமை செயலக இணை செயலர், வத்திப்பட்டி கிராமம், நத்தம் வட்டாரம், திண்டுக்கல் மாவட்டம்.
-கா.சுப்பிரமணியன், 
மதுரை.
 
Link to comment
Share on other sites

கரிசல்மண்ணில் முருங்கையா

 

E_1404802025.jpeg

 

நமது தமிழகத்தின் சில கரிசல் மண்பகுதியில் செடிமுருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் முழுமையாக அதன் பலனைப் பெற அவசியம் நுண்ணீர்ப் பாசனம் மேற்கொள்ள வேண்டும். கரிசல் மண்ணிற்கு அதிக நீர்ப் பாய்ச்சுவது ஆபத்தாகும். இது மண்ணை சத்துக்களை பிடித்து வைத்துக் கொள்ள செய்வதுடன் உப்பு தன்மை அதிகமானால் செடியே மஞ்சள் நிறமாகி, அடி இலைகளைக் கடுமையாக பாதிக்கும்.

மண்ணில் உப்புநிலை அறிந்து நீரின் உப்புநிலை அறிந்து தான் பயிரைத் தேர்வு செய்ய வேண்டும். நல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி மேட்டுப்பாத்திகள் அமைத்து பயிர் செய்தால் உப்பு நீர்ப்பாதிப்பைக் குறைக்கலாம். களர் உள்ள பகுதிகளில் அதிகம் ஜிப்சம் இட்டு நீரை வடித்தால் நல்லது. தக்கைப்பூண்டு செடிகள் நன்கு வளர்ந்ததும் மடக்கி உழுதால் கண்டிப்பாக உப்பு மண் தன்மை மாறும். 3அல்லது 4 முறை இத்தகைய பசுந்தழை உர பயன்பாடு மூலம் கணிசமாக உப்பைக் குறைக்கலாம். 
 
 
மேலும் இத்தகைய பகுதிகளில் பல மரங்கள் சாகுபடி செய்தும் சேதத்தைத் தவிர்க்கலாம். குறிப்பாக உப்புத்தன்மை ஓரளவு உள்ள மண்ணில் அகத்திக்கீரை, புளி மற்றும் சீதா ஓரளவு வளரும். கொடுக்காப்புளி, வெஸ்ட்இண்டிய செர்ரி மற்றும் இலவன் பஞ்சு முதலிய மரங்களை லாபகரமாக வளர்க்கலாம்.
தீவனப்புற்கள், கம்பு நேப்பியர் மற்றும் கொழுக்கட்டைப்புல் வகைகளை நல்ல மகசூல் தரத்தக்க அளவு மேட்டுப்பாத்தி உத்திகள் மற்றும் அதிக மண்புழு இடல் மூலம் பெறலாம். கிளைரிசிடியா, வேலி மசால், குதிரை மசால் முதலிய பயிர்களையும் நாம் நட்டு நல்ல பலன் பெறலாம். தேவைப்படும் இடங்களில் நல்ல மண், மணல், தொழு உரம், செம்மண் மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா கலவைகளை குழிகளில் இட்டு மரக்கன்றுகள் வளர்த்து பலன் பெறலாம்.
இரசாயன உரங்களை தொழுஉரம் அல்லது மண்புழு உரத்துடன் 3 நாட்கள் நன்கு கலக்கி வைத்து பின்னர் அவற்றை செடிக்கு அருகில் பாக்கெட் உரமிடல் உத்தி மூலம் வைத்து பலன் பெறலாம். நிலச்சீர்த்திருத்தம் தேவைப்படும் விவசாயிகள் மண் நீர் ஆய்வு அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
- டாக்டர் பா.இளங்கோவன்
உடுமலை, 
திருப்பூர் மாவட்டம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் நீங்கள் இப்டியான விவசாய துறையில் இருக்கிறீர்களா அல்லது பொது நோக்குடன் இணைக்கிறீர்களா

Link to comment
Share on other sites

ஆதவன் நீங்கள் இப்டியான விவசாய துறையில் இருக்கிறீர்களா அல்லது பொது நோக்குடன் இணைக்கிறீர்களா

 

 

நான் விவசாய துறையிலில்லை  பொது நோக்குடன் தான் இணைக்கிறேன்.
 
நான் எமது தாயக  மக்களை மிகவும் நேசிக்கின்றேன் பாவம் அவர்கள் சொந்த அரசாங்கத்தாலும், மிகப்பெரிய அயல் நாட்டினாலும் ஏன் முழு உலகத்தினாலும் கைவிடப்பட்டவர்கள்  . மிகப் பாரிய அவலத்தினையும் துன்பங்களையும் சந்தித்தவர்கள் அவர்கள். அவர்களுக்கிருக்கிற ஒரேயொரு நம்பிக்கை புலம்பெயர் உற‌வுகள் தான் , நாம் தான் அவர்களை மீட்க வேண்டும். (ஆனால் நாம் கோயில்கள் எனும் பெயரில் புலத்தில் மிகப் பெருந்த்தொகை பணத்தினை அழித்துக் கொண்டிருக்கிறோம்.)
ஊரிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளில் கூட என‌க்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. உமது உறவுகள் பலர் தமது கணவரையும் பிள்ளைகளையும் இருக்கிறார்களா? இல்லையா? எனத் தெரியாது தேடித் தேடி அலைகிறார்கள். ஆனால் அண்மையில் எமது த.தே.கூ பாரளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மணிவிழாவினை ஆடம்பரமாகக் கொண்டாடியிருந்தார். எப்படித்தான்  இவர்களுக்கு மணிவிழா கொண்டாட மனம் வருகிறதோ தெரியவில்லை? 
 
புலம்பெயர் வாழ்வில் பல நாட்டு மக்களைசந்தித்த அனுபவத்தில் சொல்கிறேன் தமிழர் நாம் மிகத் திறமையானவர்கள், ஒழுக்கமானவர்கள், கற்கும் திறன் கொண்டவர்கள் உலகில் மிகச்சிறந்த இனக்குழுவாக இருக்கக்கூடிய முழுத் தகுதியும் ஊடையவர்கள்.
 
ஆனால் சிறந்த த‌லமையும் ஒருவித‌ ஒருங்கிணைப்பும் இன்றி தவிக்கிறோம். எமக்கான  ஒருங்கிணைப்பினை மணிவிழா கொண்டாடும் தாயக அரசியல் வாதிகளிடமோ அல்லது கோயில் கும்பாவிசேகத்துக்குரிய ஒரு நாள் செலவாக மட்டும் ஒரு லட்சம் பிராங்குகளை சேர்க்கும் மூடர்களிடமோ தேடுவது எனது மடமையென்பதினையும் நானறிவேன்.
 
ஏதோ என்னால் முடிந்ததை செய்கிறேன். எனது எண்னங்களை வெளிப்படுத்த களம் அமைத்து தந்த yarl.com இனருக்கும், ஊக்கம் தரும் உங்கள் போன்ற கள உறவுகளுக்கும் நான் என்றும் கடமைப் பட்டிருக்கின்றேன்.
Link to comment
Share on other sites

100 நாளில் ரூ.20 ஆயிரம் வருவாய் - எள் உற்பத்தியில் சாதித்த விவசாயி.

 

E_1405413117.jpeg

 

கண்மாயில் தண்ணீர் இல்லாத போதும், ராஜபாளையம் விவசாயி ஒருவர் எள் பயிரிட்டு, 100 நாட்களில் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து சாதித்து உள்ளார் .

கடந்த இருஆண்டுகளாக ராஜபாளையத்தில் பருவமழை பெய்யாததால், விவசாயிகள் பலவிதத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தென்னை விவசாயிகள், மரங்களை வெட்டி, மா விவசாயத்திற்கு மாறுகின்றனர். மா விவசாயத்திலும் கடந்த ஆண்டை போல வருமானம் இல்லை. கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால், நெல் விவசாயமும் பாதித்தது. இதையெல்லாம் கணக்கிட்டு, எள் விவசாயத்தில் இறங்கி சாதித்து உள்ளார் விவசாயி மதுரை பாண்டி.
ராஜபாளையம் பிரண்டைகுளம் கண்மாயில், 120 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடந்த நிலையில், தண்ணீர் இல்லாததால் பலர் காய்கறி, கீரை போன்ற விவசாயம் செய்து வந்தனர். வரவுக்கு மேல் செலவு இருந்தது. கண்மாய் பாசன நிலத்தில், விவசாயி மதுரை பாண்டி கடந்த மார்ச்சில் எள் விதைத்தார். இரு மாதங்களுக்கு முன் திடீரென மழை பெய்தது.இது, எள் செடி வளர்ச்சிக்கு உதவியது.
அண்மையில் அறுவடை செய்து, தண்ணீர் இல்லாத கண்மாயின் ஓரத்தில் களம் அமைத்து, செடிகளை அடித்து எள்ளை சேமித்தார். 100 கிலோ உள்ள எள் மூடை ஏழு ஆயிரம் ரூபாய்க்கு, வியாபாரிகளுக்கு விற்றார்.
மதுரை பாண்டி கூறுகையில், ""எள் நடுவதால் களை எடுப்பு, இதர கூலி வேலைகளுக்கு 
அதிக ஆள்கள் தேவை இல்லை. விதைத்த நூறு நாளில் அறுவடை செய்யலாம். மாசியில் விதைத்து வைகாசியில் அறுவடை செய்தால் எள் கிடைக்கும். எண்ணெய் மில்கள் அதிகமாகி வருவதால், எள் விவசாயத்திற்கு வரவேற்பு உள்ளது. இந்த முறை ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு மூடை எள் கிடைத்தது, செலவு போக 20 ஆயிரம் ரூபாய் கையிருப்பு உள்ளது,'' என்றார்.
-கற்பகநாதன், ராஜபாளையம்
 
Link to comment
Share on other sites

விவசாயத்தில் சாதித்த தமிழன்! '

 

பச்சைக்காய்' என்ற புதிய வகை ஏலக்காய் ரகத்தை கண்டுபிடித்ததற்காக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமிருந்து விருது பெற்ற, தமிழக விவசாயி, முருகன் : நான், தேனி மாவட்டம், மேகமலை அருகில் உள்ள, பொம்மராஜபுரத்தை சேர்ந்தவன். என்னுடைய, 12 ஏக்கர் நிலத்தில், 40 ஆண்டுகளாக காபியும், ஏலக்காயும் பயிரிட்டு வருகிறேன். ஒரு முறை, 'மலபார்' ரக ஏலக்காயை பயிரிட்டு, அதை அறுவடை செய்யும்போது, ஒரு செடியின் காய்கள் மட்டும், மற்ற காய்களை விட பெரியதாகவும், கரும்பச்சை நிறத்தில், அதிக காய்களுடனும் இருந்தன. மலபார் ரகத்தில், ஒரு செடிக்கு, 1 கிலோ ஏலக்காய் தான் கிடைக்கும். ஆனால், குறிப்பிட்ட செடியில் மட்டும், 3 கிலோ ஏலக்காய் காய்த்திருந்ததால், இது ஏதோ புதிய ரகம் என தோன்றியது. உடனே, அச்செடியிலிருந்து நாற்றுகளை எடுத்து, தனியாக நட்டு, பராமரிக்க ஆரம்பித்தேன். நான் நினைத்தது போன்றே, அதிக ஏலக்காய் கிடைத்ததால், அந்த புதிய ஏலக்காய் ரகத்திற்கு, 'பச்சைக்காய்' என, நானே பெயரிட்டு, அதிக நாற்றுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தேன். பயிரிட்ட, 10ம் மாதத்தில் ஏலக்காய் காய்க்கும். மாதம் ஒரு முறை, அறுவடை செய்யலாம். 45 நாட்களுக்கு ஒருமுறை, அதே செடியில் மீண்டும் காய்க்கும். நான் கண்டுபிடித்த பச்சைக்காய் ரகத்தில், செடிக்கு, 4 கிலோ ஏலக்காய் காய்ப்பதோடு, ஏக்கருக்கு, 1,200 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. இதுவே சாதாரண ரகத்தில், செடிக்கு ஒரு கிலோ ஏலக்காயும், ஏக்கருக்கு, 500 கிலோ மகசூல் மட்டுமே கிடைக்கும். ஏலக்காயை பொறுத்த வரை, எடை தான் முக்கியம். ஏலக்காய்க்குள் இருக்கும் அதிகப்படியான விதைகளே, அதிக எடை கொடுக்கும். பச்சைக்காய் ரகத்தில், ஒரு ஏலக்காயில், 28 விதைகள் இருப்பதுடன், 5,000 காய்கள் இருந்தாலே, 1 கிலோ எடை வரும். ஆனால், சாதாரண ரக ஏலக்காயில், 15 முதல் 20 விதைகளே இருப்பதுடன், 1 கிலோவுக்கு, 8,000 காய்கள் தேவைப்படும். சாதாரண ரக ஏலக்காய், 1 கிலோ, 600 ரூபாய் என்றால், பச்சைக்காய், 1,000 ரூபாய்க்கு விலை போகும். ஏலக்காய் செடி, 15 முதல் 18 அடி வரை வளரும். செடியின் அடிப்பகுதியில், சரம் சரமாக தட்டை வரும். அந்த சரத்திலிருந்து, சின்ன சின்ன காம்பில், ஏலக்காய் காய்க்கும். இரண்டு ஏக்கர் நிலத்திற்கு, 1 கிலோ ஏலக்காய் விதைகளே போதுமானது. பச்சை ஏலக்காய் ரகத்திற்கு, விதை போட்டு பயிர் செய்யாமல், நாற்று எடுத்து நட்டால் தான், இயல்பான தன்மையும், வண்ணமும் கிடைக்கும். ஒரு ஏலக்காய் செடியின் நாற்று, 100 ரூபாய்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கலாம்!

 

Tamil_News_large_1027899.jpg

 

 

 

மக்களின் வரவேற்பை பெற்றுள்ள எவர்சில்வர் பொருட்களை தயாரிப்பதன் மூலம், அதிக லாபம் ஈட்டலாம் என்கிறார், ஆறுமுகம்: நான், திருச்சியில், 'ஆறுமுகம் எவர்சில்வர் பட்டறை'யை நடத்தி வருவதுடன், இத்தொழிலில், 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். எவர்சில்வர் பொருட்கள், எடை குறைவானவை; நீடித்து உழைக்கும்; துரு பிடிக்காது; உணவில் எந்த ரசாயன மாற்றமும் ஏற்படாது; இன்டக்ஷன் அடுப்பிலும் பயன்படுத்தலாம் என்பதுடன், விலையும் குறைவு. எனவே தான், சமையல் பாத்திரங்கள் முதல், மருத்துவ உபகரணங்கள் வரை, எவர்சில்வர் பொருட்களின் ஆதிக்கம் காணப்படுகிறது. மேலும், எவர்சில்வர் பொருட்களில், ஒட்டும் தன்மை இல்லை என்பதால், கையாள்வதும் எளிது.

 

'ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தகடுகள்' தான், இதன் மூலப்பொருள். தகடுகள், நமக்கு தேவையான தடிமன்களில் கிடைக்கின்றன. 1 கிலோ தகடு, 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாத்திர அச்சுக்கு தேவையான அளவில், இத்தகடுகளை வெட்டி, அச்சில் வைத்து, 'ஹைட்ராலிக்' இயந்திரம் மூலம், அழுத்த வேண்டும். இதில், நாம் செய்ய விரும்பும் பாத்திரத்தின், ஒரு பகுதியோ அல்லது முழு பகுதியோ கிடைக்கும். உதாரணமாக, தாம்பூல தட்டை ஒரே அச்சிலிருந்து எடுக்கலாம். ஆனால், குடம், கேன்கள் போன்றவற்றை, இரண்டு, மூன்று பகுதிகளாக தயாரித்து, தேவைக்கு ஏற்ப இணைக்க வேண்டும். அதாவது, குடம் தயாரிக்க, முதலில் அதன் அடிப் பாகத்தையும், பின் அதன் மேல்பகுதியையும் தயாரித்து, பின் இரண்டையும், 'காஸ் வெல்டிங்' மூலம் இணைக்க வேண்டும். சாதாரணமாக, அனைத்து எவர்சில்வர் தகடுகளுமே, பழுப்பு நிறத்தில் பளபளப்பு இல்லாமல் இருக்கும். எனவே, பாத்திரங்களை முழுமையாக தயாரித்து முடித்த பின், மெருகூட்டும் இயந்திரம் மூலம், 'பாலிஷ்' செய்தால், கண்ணாடி போல பளபளக்கும். 350 டன் டீப் டிராயிங் பிரஸ், ஸ்பின்னிங் இயந்திரம், கட்டிங் பிரஸ், இன்டக் ஷன் ஹீட்டிங் இயந்திரம், பற்ற வைப்பு இயந்திரம், ரன்னர், பாலிஷ் இயந்திரம், தேவையான அச்சுகள் வாங்க என, 40 லட்சம் ரூபாய் செலவாகும். நமது பங்கு, 5 சதவீதம், அரசு மானியம், 25 சதவீதம், வங்கி கடன், 70 சதவீதம் மூலம் இத்தொழிலை துவங்கலாம். 13 பணியாளர்களை நியமித்து, மாதம், 25 நாட்கள் வேலை செய்தால், 3,000 கிலோ எடையுள்ள பாத்திரங்களை உற்பத்தி செய்யலாம். 1 கிலோ எவர்சில்வர் பாத்திரங்களை, 400 முதல் 450 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இப்படி, எல்லா செலவுகளும் போக மாதம், 1.45 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டலாம்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

போட்டியை சமாளிக்க பிராண்டிங் உதவும்!
 
விற்பனையை அதிகரித்து, தொழில் போட்டிகளை சமாளிக்க, பிராண்டிங் அவசியம் என்கிறார், பிராண்ட் ஆலோசகர், ராமானுஜம் ஸ்ரீதர்: சிறிய அளவில் தொழில் செய்யும் சிலர், பொருட்களை தரமாக தயாரித்து, நல்ல முனைப்போடு சந்தைப்படுத்தினாலும், தங்கள் பொருளை, வாடிக்கையாளர் மனதில் பதிய வைக்க முடியாமல் திணறுகின்றனர். இதனால், அவர்களின் தயாரிப்புகளுக்கு, தனி அடையாளம் கிடைக்காமல் நஷ்டமடைகின்றனர். இப்பிரச்னைக்கு பல தீர்வுகள் இருந்தாலும், அதில் முக்கியமான தீர்வாக இருப்பது, 'பிராண்டிங்!' அதாவது, எந்தவொரு பொருளுக்கும், தனி முத்திரைப் பெயர் கொடுப்பது. இந்தப் பெயரை, நுகர்வோர் மனதில் பதிய வைப்பது தான் பிராண்டிங்.
 
ஆனால், அதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்து விளம்பரம் செய்வது தான் பிராண்டிங் என, சிலர் தவறாக எண்ணுகின்றனர்.சில ஆயிரம் ரூபாயில் கூட, எளிமையாக பிராண்டிங் செய்யலாம். அதாவது, உங்கள் ஊரில் உள்ள, அமைப்புகள் அல்லது அரசு நடத்தும் கண்காட்சிகளுக்கு சென்று, உங்கள் நிறுவனம் மற்றும், தயாரிப்பு பற்றி எடுத்து சொல்வதுடன், 'விசிட்டிங் கார்டும்' தரலாம். அப்போது தான், உங்கள் தயாரிப்புகளை, மக்கள் ஏறெடுத்து பார்ப்பர்.மேலும், உங்கள் தயாரிப்பு பற்றி, பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ஏதேனும் கட்டுரைகள் வெளியானால், அதை வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு எடுத்து சென்று, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கலாம். வித்தியாசமான அணுகுமுறை தான், உங்கள் தயாரிப்பை எளிதாக பிராண்டிங் செய்யும் வழிமுறை.முதலில், உங்கள் பொருட்களை பெரிய அளவில் விளம்பரம் செய்யாமல், 'டார்கெட்டட் குரூப்' எனும், குறிப்பிட்ட மக்களிடம் கொண்டு சேர்த்தாலே போதும்.
 
இந்த அளவு பெரிதாக பெரிதாக, உங்கள் தயாரிப்பின் பிராண்டிங் அதிகரிக்கும். இப்படி, தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், ஓரளவு பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்யலாம்.பிராண்டிங் என்பது, நாம் தொழில் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே, கவனத்தோடு செய்ய வேண்டிய விஷயம். துவக்கத்தில் பெரிய அளவில் இதை செய்யாவிட்டாலும், சிறிய அளவிலாவது நிச்சயம் செய்ய வேண்டும். ஏனெனில், மக்களுக்கு எப்போதுமே பிரபலமான தயாரிப்புகளை வாங்குவதிலேயே, அதிக ஆர்வம் இருக்கும்.இன்றைக்கு பெரிதாக இருக்கும் நிறுவனங்கள் அனைத்துமே, ஒரு காலத்தில் சிறியதாக இருந்தவை தான். அன்றைக்கே பிராண்டிங் பற்றிய விழிப்புணர்வோடு செயல்பட்டதால், இன்றைக்கு அந்த நிறுவனங்களின் பிராண்டுகள், நம் எல்லாருக்கும் நன்றாகவே தெரிகிறது.
 
Link to comment
Share on other sites

white_spacer.jpg

மகசூல்

ஊடுபயிர் வரலாற்றில் உற்காக வரவு...
 
மா, தென்னையில் மலைக்க வைக்கும்

அன்னாசி!

வயதில் பெரியவர்களை 'அண்ணாச்சி' என்று அன்பாக அழைப்பது தெற்கத்தி வழக்கம். கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள், 'எங்களை வாழவைக்கும் அண்ணாச்சி' என்று அன்னாசியைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். காரணம்... வாழையைப் போல வெட்ட, வெட்ட வருமானத்தைத் தருவதுதான்.

 

அதுமட்டுமல்ல... "வருங்காலத்தில் தமிழகம் முழுக்கவே இந்த அன்னாசி யைக் கொண்டாடினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. ஊடுபயிராகவே வளர்ந்து லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது'' என்கிறார் இந்த மாவட்டத்திலிருக்கும் கொட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹென்றி.

 

 

p27.jpg

 

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் அமைந் திருக்கும் தக்கலை நகரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கொட்டூர். ஏற்றம், இறக்கம் நிறைந்த மலைப்பாங்கான தமிழக பூமி.

 

இந்தப் பகுதியில் பெரும்பாலும் ரப்பர், தென்னை, வாழை வெள்ளாமைதான் அதிகம். ஆனால், கொட்டூரைப் பொறுத்தவரை அன்னாசிக்கே முதலிடம். முக்கிய வெள்ளாமை அன்னாசிதான்.

 

இங்கே சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அன்னாசி பயிரிட்டுள்ளனர்.

 

அவர்களில் ஒருவராக இருபது வருடங்களாக அன்னாசி விவசாயம் செய்து வருகிறார் ஹென்றி (அலைபேசி 94424-06393). இவர், திருவட்டார் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும் இருக்கிறார்.

 

அவருடைய அன்னாசித் தோட்டத்துக்குச் சென்றோம். பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தவர், அன்போடு வரவேற்று சாகுபடி பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

 

p27a.jpg

 

"மழையை மட்டுமே நம்பியிருக்கற மானாவாரி பயிர்தான் அன்னாசி.

 

இதன் வளர்ச்சிக்கு வெப்பமும், நிழலும் சரிசமமா இருக்கணும்.

 

தென்னை, ரப்பர் இது லயெல்லாம் ஊடுபயி ராவும் இதை பயிர் செய்யலாம்.

 

பல இடங்கள்ல மண் அரிப்பைத் தடுக்குறதுக்காகவே இதை நடுறாங்க.

 

ஒரு முறை செடிகளை வாங்கி நட்டா போதும்.... அதுக்குப் பிறகு அறுவடை மட்டும் தான்.

 

வாழை மாதிரியே இதுவும் பக்கக் கன்னு விடும். அதிகபட்சமா ஏழு, எட்டு கன்னுங்க வரைக்கும் வரும்.

 

ஆனா, அதுவரைக்கும் பொறுக் காம... நாலு இல்லனா... அஞ்சாவது தடவையே கன்னுகளை பெயர்த்து வேற இடத்துல நட்டுடுவாங்க.

 

அப்படி செய்யலனா, மகசூல் குறையும்கிறது அவங்களோட கணிப்பு. ஆனா, என்னைப் பொறுத்தவரை எட்டு தடவைகூட நல்லபடியாவே மகசூல் எடுத்திருக்கேன். நான் மூணு ஏக்கர்ல அன்னாசி நட்டிருக்கேன்.

 

ஒரு செடிக்கு ஒரு பழம்னு தொடர்ந்து வருமானம் வந்துகிட்டே இருக்கு''

 

என்று சொன்ன ஹென்றி, சாகுபடிக் குறிப்புகளைச் சொல்லத் தொடங்கினார்.

"அன்னாசியோட ஆயுள் ஒரு வருஷம். மே, ஜூன் மாசம்தான் நடவுக்கு ஏத்தது. மணல், செம்மண், கரிசல் மண் இது மூணும் கலந்த மண்ணாயிருந்தா... நல்ல மகசூல் கிடைக்கும். செம்மண்ணுலயும் நடவு செய்யலாம்.

 

ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரத்துல இருந்து 10 ஆயிரம் செடிகளை நடலாம். நெருக்கி நட்டா, 20 ஆயிரம் வரைக்கும் கூட நடலாம். இதன் மூலமா... அதிக வருமானம் கிடைக்கும். ஊடுபயிரா நடறப்ப, ஏக்கருக்கு 5 ஆயிரம் செடி வரைக்கும் அதிகபட்சமா நடலாம்.

p27b.jpg

 

செடிக்கு செடி ஒரு அடி, வரிசைக்கு வரிசை ஒரு அடினு இடைவெளி விட்டு நடணும். இப்படி பத்து வரிசை நடவு செய்தபிறகு, ரெண்டடி இடைவெளி விட்டு அடுத்த வரிசையை நடணும். நடக்கறது, களை எடுக்கறது, உரம் தெளிக்கறது இதுக்கெல்லாம் இந்த இடைவெளி வசதியா இருக்கும். செடிகளை நடுறப்ப, மண்ணைக் கையால தோண்டி, தொழுவுரத் தைப் போட்டு நடணும்.

 

அன்னாசியோட இலை... செங்குத்தாகவும், முள்ளோ டயும் இருக்கறதால தோட்டத்துக்குள்ள சுலபமா போய் உரம் போட முடியாது. களை அதிகம் வளரும். அதுங்களை அழிக்க மண்வெட்டி மாதிரியான கருவியையும் பயன்படுத்த முடியாது. கையால மட்டும்தான் பறிச்சி அழிக்கணும்.

 

மூணு மாசத்துக் கொரு தடவை, களையெடுக்கறது அவசியம்.

நடவு செய்த ரெண்டாவது மாசத்துல ஒரு தடவை... பூ வந்ததும் (8-ம் மாத இறுதியிலோ அல்லது 9-ம் மாத தொடக்கத்திலோ பூ வரும்.)

 

ஒரு தடவைனு பொட்டாஷ், யூரியா, காம்ப்ளக்ஸ் இதையெல்லாம் ஒண்ணா கலந்து ஏக்கருக்கு நூறு கிலோ வீதம் தெளிக்கலாம். இப்படி ரசாயன உரத்தைத் தெளிக்கறப்ப ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.

 

அன்னாசியோட குருத்து, காய் இதுலயெல்லாம் உரம் பட்டுடக்கூடாது.

 

அப்படி பட்டா குருத்து கருகி, மகசூல் கிடைக்காம போயிடும். அதனால இயற்கை உரங்களை பயன்படுத்தினா பிரச்னை வராது. என்னைப் பொறுத்தவரை மண்புழு உரம் போடுறேன். எப்பவாவது ரசாயனத் தையும் பயன்படுத்தறேன்.

 

ரசாயன உரங்களைப் பயன்படுத்தறவங்க, செடிகளுக்கு இடையில பல இடங்கள்ல பிளாஸ்டிக் புனல்களை நட்டு வெச்சி, அதுல உரத்தைப் போடுவாங்க. அது மழையில கரைஞ்சி அப்படியே எல்லா செடிகளுக்கும் பரவிடும். மழை வர்ற சமயத்துலதான் இதைச் செய்யமுடியும்.

 

வருஷத்துக்கு ரெண்டு தடவை இப்படி செய்யணும். ரசாயன உரம் போட்டா, மண்புழு உரம் தேவையில்ல'' என்றவர் பராமரிப்பு முறைக்குள் புகுந்தார்.

 

p27c.jpg

 

"இயல்பாவே அன்னாசிக்கு நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம். அதனால நோய் தாக்குதல்ங்கறது ரொம்ப அரிது. மழைக் காலத்துல 'தூர் அழுகல் நோய்’ தாக்குதல் இருக்கும். ஏக்கருக்கு அதிகபட்சம் பத்து செடிகள்லதான் இந்தத் தாக்குதல் இருக்கும்.

 

அதனால, இதைப் பத்தி ரொம்ப அலட்டிக்கத் தேவையில்லை. எலி, அணில் மாதிரியான பிராணிங்க, அன்னாசி காய்களைச் சாப்பிட்டுடும். இதைத் தவிர்க்க முடியாது. ஆனா, இதனால பெரிய அளவுல நஷ்டம் வந்துடாது. அதுங்க கடிச்சது போக இருக்கற பழத்துலயே நமக்கு போதுமான வருமானம் கிடைச்சிரும்.

 

பதினோராவது மாசத்துல காய் நல்லா முத்தி வந்துடும். காய்களைப் பார்த்தாலே ஒரு கலரா தெரியும். அதையெல்லாம் வரிசையா அறுவடை செய்துடலாம். நாகர்கோவில்ல இருக்கற 'அப்டா' சந்தை, வடசேரி சந்தை, மாத்தூர் தொட்டிப் பாலம் பகுதியில இருக்கற வியாபாரிங்கனு அனுப்பிவிட்டுடுவேன்.

 

விற்பனையில எந்தப் பிரச்னையும் இல்ல. ஒரு விவசாயி தொடர்ந்து அன்னாசியை பயிர் செய்யுறப்ப, ஒரு வருஷத்துல ஏக்கருக்கு 50 ஆயிரத்துக்குக் குறையாம வருமானம் கிடைக்கும்'' என்று சொன்ன ஹென்றி,

"அன்னாசியைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாதிரியான பகுதியிலதான் வரும்னு எல்லாரும் நினைக்கிறாங்க.

 

ஆனா, தமிழ்நாட்டோட எல்லா பகுதியிலயும் இதை வளர்க்கலாம். தஞ்சாவூர் மாவட்டத்துல இருக்கற வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி மையம், நெல்லை மாவட்டத்துல சேரன்மாதேவினு சில இடங்கள் இருந்து என்கிட்ட விதைச் செடிகளை வாங்கிட்டுப் போய், ஊடுபயிரா செஞ்சிருக்காங்க. அவங்கள் லாம் தண்ணீர் பாசனம் உள்ள பகுதிங்கறதால... மாசம் ஒரு தடவை தண்ணி பாய்ச்சி செடிகளை வளர்க்கறாங்க. அங்கெல்லாம் நல்ல மகசூல் வருதுனுதான் சொல்றாங்க'' என்று சொன்னார்.

 

உற்சாகமாக ஓர் ஊடுபயிர்!

 

அவர் சொன்னபடி தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் அன்னாசி விளைகிறது? என்று தேடியபோது... வறட்சி வாட்டியெடுக்கும் சிவகங்கை மாவட்டத்திலும்கூட அசத்தலாக அன்னாசி விளைந்து நிற்கிறது என்ற தகவல் கிடைத்தது. கல்லல் அருகேயுள்ள முத்துப்பட்டியில் இருக்கும் 'ராசி இயற்கை விவசாய பண்ணை'யில் கடந்த நான்கு ஆண்டுகளாக அன்னாசியை ஊடுபயிராக சாகுபடி செய்து வருகின்றனர்- முழுக்க இயற்கை முறையில்!

 

p27d.jpg

 

 

இதைப்பற்றி பண்ணையின் உரிமையாளர் ராஜரீகா (அலைபேசி 98655-82142) நம்மிடம் விவரித்தார்.

 

"நாலு வருஷத்துக்கு முன்ன கேரளாவுல இருந்து அன்னாசிச் செடிகளை வாங்கி வந்தேன்.

 

என்னோட மாந்தோப்பு, தென்னந்தோப்பு, காய்கறித் தோட்டம்னு எல்லா இடத்திலயும் ஊடுபயிரா அன்னாசியை நடவு செய்தேன்.

 

இந்தப் பயிருக்கு வெயில் அதிகமா இருக்கக் கூடாது. அதனால, சிவகங்கை, தஞ்சாவூர் மாதிரியான பகுதியில கட்டாயம் ஊடு பயிராத்தான் இதை பயிரிட்டாகணும். மாந் தோப்பு, தென்னந்தோப்பு இதெல்லாம் நல்லா அடர்த்தியான நிழலோட இருந்தா ரொம்ப நல்லது.

 

மகசூல் நல்லபடியா கிடைக்கும்.

எங்க தோட்டம் பூராவுமே சொட்டுநீர்ப் பாசனம் தான். அதனால, தண்ணிக்கு கவலையில்ல. நடவுக்கு முன்ன தொழுவுரம் போட்டு, அதுமேல நடவு செய்தோம். பிறகு, மூணு மாசத்துக்கு ஒரு தடவை பஞ்சகவ்யா, வருஷத்துக்கு ரெண்டு தடவை மண்புழு உரம் இதையெல்லாம் போட்டோம். காய் பெரிசா வந்த சமயத்துல ஒரு தடவை பஞ்சகவ்யா தெளிச்சோம். இதனால பழம் ரொம்ப ருசியா இருக்கறதோட, பெருசாவும் இருக்குது.

 

சின்ன காயா இருந்தா 6 ரூபாய். பெருசா இருந்தா 10 ரூபாய்னு கன்னியாகுமரி, கேரளாவுல விற்கிற விலைக்கு நாங்களும் கொடுக்கிறோம்.

 

அன்னாசியைப் பொறுத்தவரை 2,500 செடி வாங்கி, நடவு செஞ்ச வகையில 25 ஆயிரம் ரூபாய் செலவு. நாங்க ஊடுபயிரா செஞ்சிருக்கிறதால நாங்களே கொஞ்சம், கொஞ்சமா அறுவடை பண்ணி, உள்ளூரிலேயே வித்துடறோம்.

 

வியாபாரிங்களும் அப்பப்ப வந்து வாங்கிட்டு போறாங்க. சராசரியா ஒரு காய் 7 ரூபாய் வீதம், 2,500 காய்க்கு 17,500 ரூபாய் கிடைக்குது. நடவு செஞ்சி நாலு வருசமாச்சி. இதுவரைக்கும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வித்திருக்கோம்.

 

ஆரம்பச் செலவு போக இருபத்தஞ்சாயிரம் லாபம். ஊடுபயிர்லயே இத்தனை லாபம். இதையே தனிப் பயிரா போட்டிருந்தா இன்னும் லாபம் அதிகமா கிடைக்கும்.

 

 

அன்னாசிக்குனு நாங்க தனியா எந்த பராமரிப்பையும் செய்யுறதில்ல. இயற்கை முறையில ஊடுபயிரா போட்டா.... லாபம் அதிகம்தான்!

பொதுவா மா, தென்னை மாதிரி அடர்த்தியா இருக்கற தோட்டத்துக்கு ரொம்பவும் ஏத்த ஊடுபயிர் அன்னாசி.

 

என்னோட தோட்டத்துல நல்ல வருமானம் கிடைச்சதை வெச்சிதான் இதைச் சொல்றேன். ஆனா, கோகோ போடறதுக் காக ஒரு கம்பெனியோட ஒப்பந்தம் போட்டி ருக்கேன். அதனால தென்னந்தோப்புல இருக்கற அன்னாசிச் செடிகளை மட்டும் அழிச்சிட்டேன். மத்தபடி மாந்தோப்புலயும், காய்கறி தோட்டத் துலயும் அன்னாசி செழிப்பா வளர்ந்து நிக்குது'' என்று உற்சாகம் பொங்கச் சொன்னார் ராஜரீகா!

 

400 ஆண்டு வரலாறு

 

அன்னாசி, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசியர்களால் மொரீசியஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது என்பது வரலாற்று ஆய்வாளர்கள் தரும் தகவல். செரிமான சக்தியை அதிகரிக்கும் குணமுடைய அன்னாசி, நம் வயிற்றி லுள்ள பூச்சிகளை அழிக்கவும் செய்யும்.

ஜாம் மற்றும் ஜூஸ் தயாரிப்புக்கு அதிகமாக அன்னாசி பயன்படுத்தப்படுகிறது.

 

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=70511

 

Link to comment
Share on other sites

கலக்குது கற்பூரவள்ளி !
 

 

 

 

 
white_spacer.jpg
மகசூல்
 
மருந்துக்கு விதைத்தார்..... மகசூலில் திளைத்தார்
 
 
 
 

 

 

 

 

கலக்குது கற்பூரவள்ளி

களர் மற்றும் மணல் இல்லாத மண் ஏற்றது....

ஏக்கருக்கு 900 கன்றுகள்...

அதிக செலவு வைக்காதது...

ஏக்கருக்கு 50 ஆயிரம் வருமானம்.

ஆயிரம் விதமான பயிருங்கள விவசாயம் செய்தாலும், வாழைக்கு நிகர் வாழைதாங்க. அதனாலதான் விவசாயிங்களோட தோட்டத்திலயும், வீட்டுலயும் ரெண்டு வாழை மரமாவது கட்டாயம் இருக்கும். காரணம், வாழை வாரிக் கொடுக்கற பலன் அப்படி! வாழை விவசாயம்னு எடுத்துக்கிட்டா பல ரகங்கள் இருக்கு. ஆனாலும் விவசாயிங்களுக்கு அதிக சிரமத்தைக் கொடுக்காதது கற்பூரவள்ளி ரக வாழைதாங்க..." என்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பவனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பொன்னு ராமன்.

 

 

pv17a.jpg

ஆசிரியர் வேலையில் இருந்தாலும்... ஒரு ஓரமாக விவசாயத்தையும் கவனிக்கத் தவறவில்லை பொன்னுராமன். தென்னை, காய்கறி, நெல், உளுந்து மற்றும் எள் என்று ரசாயன முறை விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டி ருந்தார். திடீரென்று ஞானோதயம் வந்த வராக கற்பூரவள்ளி வாழையை வீட்டுத் தோட்டத்தில் கொஞ்சம் போல பயிரிட்டவர், தற்போது அதையே ஒரு ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்திவிட்டார்- இயற்கை முறையில்! அதுமட்டுமல்ல... இரண்டு ஏக்கர் தென்னை, அரை ஏக்கர் காய்கறி, நான்கு ஏக்கரில் நெல், அந்த நான்கு ஏக்கரில் கோடையின் போது உளுந்து மற்றும் எள் என்று அனைத்தையும் முழுக்க இயற்கை முறையிலேயே அசத்திக் கொண்டிருக்கிறார்.

 

இத்தகைய மாற்றத்துக்குக் காரணம்?

 

"மொந்தன், ரஸ்தாளி, பச்சைநாடன், மலை வாழை என்று பலவகை இருந்தாலும் அவை யெல்லாம் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பவை. ஆனால், கற்பூரவள்ளி வாழையானது சுவையோடு சூட்டையும் கொடுக்கும். அதனால், குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் போன்றோருக்கு மிகவும் ஏற்றது கற்பூரவள்ளி" - இப்படி ஒரு விஷயத்தை பொன்னுராமன் கேள்விப்பட்டதுதான்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தன்னுடைய தேவைக்காகத்தான் முதலில் கற்பூரவள்ளி மீது கண் பதித்திருக்கிறார். அது நன்றாக கைகொடுக்கவே... முழுக்க தன் சாகுபடி முறையையே இயற்கை அன்னையிடம் சரணடைய வைத்துவிட்டார்.

உணவுப் பழக்க குளறுபடியே

நோய்க்கான முதல் காரணி!

"நான் இடைநிலைப் பள்ளி ஆசிரியரா இருக் கேன். ஆஸ்துமா நோயால பாதிக்கப்பட்டிருக் கறதால தினமும் ஊசியைப் போட்டாதான் தூங்கவே முடியும்கிற சூழ்நிலையில வாழ்க்கை வண்டியை எப்படியோ ஓட்டிக்கிட்டிருந்தேன். இந்த நிலையில எதேச்சையா, 'உயிருள்ள உணவுகள்', 'ஒற்றை வைக்கோல் புரட்சி'னு சில புத்தகங்ளைப் படிச்சேன். 'உணவுப் பழக்கம்தான் நோய்க்கு முதல் காரணம்'னு அதுல தெளிவா சொல்லியிருந்தாங்க. உடனே என்னோட உணவுமுறையை முழுக்க இயற்கை சார்ந்ததா மாத்தினதோட... அதுக்காகவே ரசாயனம் இல்லாத உணவுப் பொருளுங்களையும் நானே உற்பத்தி செய்ய ஆரம்பிச்சேன்.

pv17b.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

ஆடாதொடை இலைக்கு, ஆஸ்துமாவைச் சரிசெய்ற ஆற்றல் உண்டுனு தெரிஞ்சிக்கிட்டு, அந்த இலையைப் பொடி செஞ்சி சாப்பிட்டு ஆஸ்துமாவைக் கட்டுக்குள்ள வெச்சிருக்கேன். அதேமாதிரிதான் நான் சாப்பிடுறதுக்காகவே கற்பூரவள்ளி வாழையை வீட்டுக்குப் பின்னாடி நடவு செஞ்சேன். 'வாழையிலயே நோய் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகாத, அதிக செலவு வைக்காத வாழை... கற்பூரவள்ளிதான்'னு சொல்வாங்க. அதை என் அனுபவத்துலயும் உணர்ந்த பின்னாடி, ஒரு ஏக்கர் அளவுக்கு கற்பூரவள்ளி சாகுபடியை விரிவுபடுத்திட்டேன்" என்று முன்கதைச் சுருக்கம் சொன்ன பொன்னுராமன், சாகுபடி முறையை பாடமாகவே நடத்த ஆரம்பித்து விட்டார்.

ஆறடிக்கு ஆறடி.. ஏக்கருக்கு 900 வாழை!

"நல்ல வடிகால் வசதியோடு கூடிய களர் மண் மற்றும் மணல் இல்லாத அனைத்து மண் வகைகளும் கற்பூரவள்ளி பயிரிட ஏற்றது. ஆடிப் பட்டம்தான் இதற்குச் சிறந்ததாக இருக்கும். குறுக்கு-நெடுக்காக, நான்கு உழவு போட்டு, ஏக்கருக்கு ஐந்து கிலோ உளுந்து விதைத்து, மீண்டும் ஒரு உழவு போட்டு, ஆறு அடிக்கு ஆறு அடி இடைவெளியில் வாழைக் கட்டைகளை நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 1,200 கட்டைகள் வரை தேவைப்படும். நான் 900 கட்டைகள் நடவு செய்திருக்கிறேன். அரையடி ஆழத்துக்குக் குழி எடுத்து நடவு செய்யவேண்டும். அதற்கு முன்பாக, இரண்டு கிலோ சூடோமோனஸ், இரண்டு கூடை எரு, வண்டல் மண் ஆகியவற்றைக் கலந்து, அதில் தண்ணீருக்குப் பதிலாக பஞ்ச கவ்யாவை சேர்த்து கூழ் தயாரிக்கவேண்டும். அதில் வாழைக் கட்டையை நனைத்து நடவு செய்தால் வேர்அழுகல் நோய் தாக்காது.

 

pv17c.jpg

 

 

 

 

 

 

 

நடவு செய்த இரண்டாம் நாள் தண்ணீர் பாய்ச்சியதும், வாழைக் கட்டையைச் சுற்றி மண்ணை நன்றாக கிடித்துவிட வேண்டும். மூன்று மாதம் வரை வாரம் ஒரு தண்ணீர் பாய்ச்சினால் போதும். மூன்றாவது மாதத்தில் மண்புழு உரம்-250 கிலோ, கடலைப்பிண்ணாக்கு -அரை மூட்டை, அசோஸ்பைரில்லம்-ஐந்து கிலோ, பாஸ்போ-பாக்டீரியா-ஐந்து கிலோ ஆகியவற்றோடு தேவையான அளவு பஞ்சகவ்யாவை விட்டுப் பதமாக கலந்து, கன்றுக்கு 500 கிராம் வீதம் வைத்து மண்ணை அணைக்க வேண்டும். இதேபோல 5 மற்றும் 7 மாதங்களிலும் செய்யவேண்டும். முதல் தடவை, அதாவது மூன்றாவது மாத்தில் மண் அணைக்கும்போது மட்டும் கன்றுக்கு ஒரு கூடை வீதம் எருவும் சேர்த்து வைக்க வேண்டும்.

அடுத்து, மாதம் ஒரு முறை இரண்டு லிட்டர் பஞ்சகவ்யாவை 13 லிட்டர் (ஒரு டேங்க்) தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். தார் போடுவதற்கு முன்பே... செழிப்பாக இருக்கும் ஒரு கட்டையை விட்டு விட்டு மற்ற கட்டைகளைப் பெயர்த்து எடுக்கவேண்டும். இப்படிச் செய்யும்போது மரங்களில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். கட்டைகளைப் பெயர்த் தெடுப்பதால் தார் பெரியதாகவும், செழிப்பாகவும் இருக்கும். இரண்டு மாத இடைவெளியில், காய்ந்த மட்டைகளை அறுத்து மூடாக்காக போட்டுக் கொண்டே வரலாம். அதைத் தொடர்ந்து வாரம் ஒரு தண்ணீர் மட்டும் கொடுத்து வந்தால், மரம் செழிப்பாக வளரும்.

மட்டைக் காய்ச்சலை விரட்டும் புங்கன்!

வாழையில் மட்டைக் காய்ச்சல் நோய் தாக்குவது ஒரு தொல்லையான சமாச்சாரம். இதைத் தடுக்க.. புங்கன் இலையை இடித்து, கோமியத்தில் 21 நாள் ஊறவைத்து தெளித்தால் போதும், நோய் தாக்குதல் ஏற்படாது. வேர்ப்புழு தாக்குதல் காரணமாக மரம் வளர்ச்சி இல்லாமல் இருந்தால், அந்த மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான் மற்ற மரங்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும். காற்றடித்து மரம் சாய்ந்தால், அதை நிமிர்த்தி மண்ணை மட்டும் அணைத்து விட்டாலே மரம் பிழைத்துக் கொள்ளும். 11-ம் மாதத்தில் தார் அறுவடைக்கு வந்துவிடும். நம்முடைய கழுத்து உயர அளவுக்கு மரத்தை விட்டுவிட்டு, அதற்கு மேலே வெட்டினால் மரம் சாயும்போது, தாரை மட்டும் பிடித்துக் கொண்டு மெள்ள இறக்கிவிடலாம். ஏக்கருக்கு 800 முதல் 900 தார்கள் கிடைக்கும். ஒரு தாரில் 10 முதல் 15 சீப்புகள் இருக்கும். சராசரியாக ஒரு தார் 100 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்பனை ஆகும்."

 

 

100 கிராம் கற்பூர வாழைப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

27.2 கிராம் கார்போ-ஹைட்ரேட், 1.2 கிராம் புரோட்டின், 0.3 கிராம் கொழுப்பு, 17 மில்லி கிராம் கால்சியம், 36 மில்லி கிராம் பாஸ்பரஸ், 0.36 மில்லி கிராம் இரும்புச் சத்து அடங்கியுள்ளது

 

 

 

 

பாடத்தை பக்குவமாக நடத்தி முடித்த ஆசிரியர் பொன்னுராமன், "என்னோட தேவைக் குனு ஆரம்பிச்சி, இப்ப நாட்டோட தேவைக்காக முழுக்க இயற்கை முறை விவசாயம்கிறத தொடர ஆரம்பிச்சிட்டேன். அக்கம்பக்கம் உள்ளவங் களுக்கும் இதை சொல்லித் தந்துகிட்டிருக்கேன். ஆனா, ரசாயன விவசாயத்து மேல காட்டுற அளவுக்கு இயற்கை விவசாயத்து மேல வேகமா ஆர்வம் காட்ட விவசாயிக பெரிய அளவுல முன் வராம இருக்காங்க. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தற மாதிரி மானியம், விற்பனை செய்றதுக்கு உழவர் சந்தையில இடம்னு நிறைய சலுகைகளை அரசாங்கம் செய்து கொடுத்தா... நிறையபேரு இதுக்கு மாறிடுவாங்க. அதுக்குப் பிறகு, நாட்டுல சுகாதாரத் துறையினு தனியா ஒண்ணு தேவையே இருக்காது. நிச்சயமா மக்கள் நோய் நொடியில்லாம... விவசாயிகளும் கடன் இல்லாம சந்தோஷமா இருப்பாங்க" என்று ஏக எதிர்பார்ப்போடு சொன்னார்.

பூச்சி, நோய்களை விரட்டுவது எப்படி?

pv17d.jpg

 

 

 

 

 

 

 

வாழையைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய் களைத் தடுப்பது எப்படி? அவற்றுக்கான கரைசல்களைத் தயாரிப்பது எப்படி என்பது பற்றி திருவண்ணாமலை, அருணோதயம் இயற்கை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் சொல்லும் குறிப்புகள்-

விதைநேர்த்தி பஞ்சகவ்யா-பத்து லிட்டர், மஞ்சள் தூள்-அரைகிலோ, வசம்பு தூள்-ஒரு கிலோ, தேவையான அளவு பசுமாட்டுச் சாணம் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் கூழ். இதில் வாழைக் கட்டையை நனைத்து நடவு செய்தால் பூச்சி, நோய் தாக்குதல் குறையும்.

முடிகொத்து நோயை முடிக்க வாழையை அதிகமாகத் தாக்கும் முடிகொத்து நோயைத் தடுக்க... வசம்பு-1 கிலோ, கடுக்காய்-1 கிலோ, மஞ்சள்-1 கிலோ, காய்ந்த வேப்பம் பட்டை-1 கிலோ இவை அனைத்தையும் அரைத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, கட்டைக்கு ஒரு லிட்டர் வீதம் ஊற்றினால் போதும்.

வாடல், மஞ்சள் நோய்களை விரட்ட வாடல் மற்றும் மஞ்சள் நோய்க்கு புங்கன் இலை-25 கிலோ, வேப்பிலை-10 கிலோ, நொச்சி இலை அல்லது தும்பைச் செடி-10 கிலோ, வசம்பு-2 கிலோ, மஞ்சள்-2 கிலோ, வெல்லம்-1 கிலோ சேர்த்து இடித்து, அதில் தயிர் ஒரு லிட்டர் கலந்து 21 நாள் ஊற வைத்து, 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும். 7 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, கிழங்கில் ஊற்றவும் பயன்படுத்தலாம

 

 

pv17e.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வேர் அழுகல் வேர் அழுகல் நோய்க்கு வெப்பாலை அல்லது ஆடுதின்னாபாலை-10 கிலோ, ஊமத்தை- 5 கிலோ, பச்சை மிளகாய்- 2 கிலோவை சேர்த்து இடித்து, 40 லிட்டர் தண்ணீரில் 21 நாள் ஊற வைக்க வேண்டும். இதில் கிடைக்கும் கரைசலை பத்து லிட்டர் தண்ணீ ருக்கு 3 லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து, வேர் அழுகல் நோய் பாதிப்பு இருந்தால் வாரம் ஒரு முறையும், சாதாரணமாக இருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் கிழங்கு பகுதியில் ஊற்றவேண்டும். இதன் மூலம் வேர் அழுகல் நோயை இருந்த இடம் தெரியாமல் விரட்டலாம்.

சுண்ணாம்புக் கரைசல் கல் சுண்ணாம்பு ஐந்து கிலோ எடுத்து, பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுக்க ஊற வைத்து, மறுநாள் தெளிந்த நீராக தனியே எடுக்கவேண்டும். பிறகு... இளநீர்-5 லிட்டர், பெருங்காயத் தூள்- அரை கிலோ, வெல்லம்- 1 கிலோ, தயிர் - 2 லிட்டர் ஆகியவற்றை அந்த நீரில் கலந்து மூன்று நாள் ஊற வைக்கவேண்டும். இந்தக் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் வீதம் கலந்து தெளித்தால் காய்கள் திரட்சியாகவும், புள்ளிகள் இல்லாமலும் இருக்கும்.

படங்கள் மு. நியாஸ் அகமது.

pv17.jpg

white_spacer.jpg   white_spacer.jpg

                            
    

 

Link to comment
Share on other sites

விதை நடவு முறையில் கத்திரி சாகுபடி! 
 
கத்திரிக்காய் சாகுபடி யில், நாற்றங்கால் இல்லாமலேயே, விதைகளை நேரடியாக விதைத்து, நல்ல மகசூல் பார்த்து வரும், இயற்கை விவசாயி கார்த்திகேய சிவராமன்: நெல்லை மாவட்டம், வடகரை கிராமம் தான், என் சொந்த ஊர். கத்திரி சாகுபடியில், நாற்றங்கால் அமைத்து பயிரிட்டால் தான், வளமான நாற்றுகளைப் பெற்று, நல்ல மகசூலைப் பெற முடியும் என, சொல்லப்படுகிறது.
 
ஆனால், நாற்றங்கால் அமைக்காமல், விதைகளை நேரடியாக ஊன்றிப் பயிரிடும்போது, நாற்றங்கால் முறை பயிர் மூலம் கிடைக்கும் அதே மகசூல், விதை நடவு முறையிலும் கிடைக்கிறது. பயிர்களும், ஆரோக்கியமானதாகவே வளர்ந்து, நல்ல மகசூல் கொடுக்கின்றன.
 
நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப் பொருட்கள் நிரம்பிய அனைத்து மண்ணி லும், கத்திரி நன்கு வளரும். ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட, 200 கிராம் விதை போதும். விதைக்க உள்ள நிலத்தை நன்கு உழுது, ஏக்கருக்கு, 20 வண்டி மக்கிய தொழு உரத்தைப் பரப்பி நன்கு உழ வேண்டும். அதற்குப் பின், நடவு பாத்திகளில், 75 செ.மீ., இடைவெளியில் பார்கள் அமைத்து, பார்களின் கீழ்ப் பகுதியில் அடியுரம் இட வேண்டும்.நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை, 
 
உயரமான பாத்திகளில், 10 செ.மீ., இடைவெளியில், அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போட்டு, அதில் விதைகளைப் பரவலாகத் தூவ வேண்டும். விதைத்த பின், மணல் போட்டு மூடி, உடனே நீர் பாய்ச்ச வேண்டும்.பின், வாரமொரு முறை நீர் பாய்ச்சினால் போதும். மழைக் காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இயற்கை விவசாய முறையில், பாசனச் செலவில் மிச்சம் ஏற்படும். அவ்வப்போது களை எடுக்க வேண்டும்.கத்திரி சாகுபடியில், பூச்சித் தாக்குதல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே, கவனமுடன் பயிர்களைக் காக்க வேண்டும். விதைத்த, 40-50 நாட்களில், முதல் அறுவடை ஆரம்பிக்கும். 
 
காய்களை, நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளியில், விதைகள் முற்றுவதற்கு முன், அறுவடை செய்ய வேண்டும். 
அறுவடை செய்யும்போது, காம்பின் நீளம், 4-6 செ.மீ., இருக்குமாறு, பார்த்து கொள்ள வேண்டும்.அறுவடை செய்யப்பட்ட கத்தரியை, நானே வாடிக்கையாளர்களிடம், நேரடியாக விற்பனை செய்கிறேன். இயற்கை முறை யில் விளைவிக்கப்பட்ட காய்கறி என்பதால், காய்கள் நல்ல விலைக்குப் போகின்றன.
 
Link to comment
Share on other sites

விளைநிலம் இல்லா விவசாயம்: சூலூர் ஒன்றியம் அசத்தல்

 

Tamil_News_large_1034751.jpg

 

சூலூர்:சூலூரில் விளைநிலம் இல்லாமல், 8 ஆயிரம் சதுர அடியில் கூரைத்தோட்டம் அமைத்து, காய்கறி மற்றும் கீரை சாகுபடி அபாரமாக நடக்கிறது.
 
கோவை மாவட்டம் சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில், கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மொட்டை மாடியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிதி உதவியுடன், 8 ஆயிரம் சதுர அடியில் கூரைத்தோட்டம் அமைக்கப்பட்டது. விளைநிலம் இல்லாமல், பூச்சி மருந்து இல்லாமல், மூங்கில் கூடையில் விவசாயம் செய்யும் முறை குறித்தும், கயிறு மூலம் பந்தல் அமைக்கவும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
 
சவுக்கு மரத்தால் ஆன ஸ்டாண்டில், சாணம் பூசப்பட்ட மூங்கில் கூடைகளில் எரு,தேங்காய் மஞ்சி மற்றும் ஒரு மடங்கு மண் நிரப்பப்பட்டு, அவற்றில் வெந்தயக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பாலாக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லி, பொன்னாங்கன்னி, பொதினா மற்றும் தண்டுக்கீரை வகைகள் பயிரிடப்படுகின்றன. மேலும், கத்திரி, வெண்டை, தக்காளி, அவரை, தட்டை, கொத்தவரை, முள்ளங்கி, நூல்கோல், பீட்ரூட் போன்ற காய்களும் குறைந்த தண்ணீர் கொண்டு பயிரிடப்பட்டு கடந்த ஓராண்டாக அறுவடை செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. பந்தல் காய்களான பீர்கன்காய், புடலங்காய், பாவக்காய் மற்றும் அவரைக்காயும் இங்கு விளைவிக்கப்படுகிறது. தற்போது, சூலூரை சேர்ந்த காசினி மகளிர் சுயஉதவிக் குழுவினர் கூரைத்தோட்டத்தை பராமரித்து வருகின்றனர்.
 
இதுபோன்ற கூரைத்தோட்டங்களை அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தவும், தனியாரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயிற்சி வகுப்புகளும் இங்கு நடக்கின்றன. இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகன் கூறுகையில்,'இது போன்ற கூரைத்தோட்டங்களை குறைந்த செலவில் அமைக்க முடியும். குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. பூச்சி மருந்து இல்லாமல், இயற்கையான உரத்தை கொண்டு அதிக விளைச்சல் எடுக்க முடியும். மாவட்டத்தின் அனைத்து வட்டார உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தோட்டத்தை பார்வையிட்டுள்ளனர். தனியாரும் தங்கள் இடங்களில் கூரைத்தோட்டம் அமைக்க முன் வரவேண்டும்,' என்றார்.
 
ஒன்றிய சேர்மன் பாலசுந்தரம் கூறுகையில்,'ஒன்றிய அலுவலக வளாகத்தில், கூரைத்தோட்டத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரைகள் விற்க, விற்பனை மையம் கட்டப்பட்டு வருகிறது. மையம் திறக்கப்பட்டவுடன், அருகம்புல் உள்ளிட்ட ஜூஸ் வகைகளையும் விற்க முடிவு செய்துள்ளோம்,' என்றார்.
 
 
 
Link to comment
Share on other sites

கொட்டில் முறை ஆடு வளர்ப்பு: கொட்டிக் கொடுக்கும் லாபம்

 

Tamil_News_large_1036082.jpg

 

கரமயமாதலின் காரணமாக, கால்நடை வளர்ப்பு என்பது இந்தக் காலத் தில் மிகவும் கடினமா கிக் கொண்டே வருகிறது. இச்சூழலில், வெள்ளாடுகளை கொட்டில் முறையில் வளர்ப்பது, தமிழகத்தில் தற்போது அதிகரித்து வருகிறது.
 
ஆடுகளை வெளியிடங்களில் வளர்க்காமல், ஒரே இடத்திலேயே வைத்து வளர்ப்பது தான் கொட்டில் முறை. கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்க வேண்டும் எனில், முதலில் இரண்டு ஏக்கர் அளவில் தண்ணீர் வசதியுள்ள தோட்டத்தைத் தயார் செய்ய வேண்டும். அகத்தி, சூபாபுல், வேலி மசால் ஆகியவற்றை வேலியாக நடலாம் அல்லது கம்பி வேலி அமைத்தால் மிகவும் நல்லது.ஒரு ஏக்கர் அளவில் பசுந்தீவனங்களை பயிரிட்டால், மீதி இடங்களை ஆடு வளர்ப்புக்குத் தயார் செய்யலாம். கொட்டில் தரையிலிருந்து, 5 அடி உயரத்தில் இருக்க வேண்டும். தூண்களுக்கு கான்கிரீட் தூண் அல்லது பனை மரத்தைப் பயன்படுத்தலாம்.சின்னச்சின்ன கொட்டில்களை தரையிலேயே அமைக்கலாம். எத்தனை யூனிட் அமைத்தாலும், நான்கு பக்கமும், 30 அடி இடைவெளி விட்டு, கட்டாயம் வேலியை அமைக்கவும். கொட்டிலுக்குக் கூரையாக தென்னை, பனை ஓலைகளை அமைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.
 
ஒவ்வொரு கொட்டிலையும் சுற்றி, சிமென்ட் வாய்க்கால் அமைத்தால், ஆடுகளின் சிறுநீர் மற்றும் கொட்டிலைக் கழுவும் தண்ணீரை, அதன் மூலம் சேகரித்து தீவனப்பயிருக்கு உரமாக உபயோகப்படுத்தலாம். தீவனங்களை தரையில் போடாமல் பக்கவாட்டு மூங்கில்களில் கட்டி வைத்தால் தேவைப்படும்போது ஆடுகள் சாப்பிட்டுக் கொள்ளும். இந்த கொட்டில் முறை, மிகவும் செலவு குறைவான முறை என்பதால், ஆடு வளர்க்க மிகவும் ஏற்றது என கால்நடை நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
கால்நடை மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், 'தரையிலிருந்து உயரமாக அமைக்கப்பட்ட மூங்கிலால் ஆன கொட்டில் போடுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். 'அடர் தீவனம் கொடுத்தால் ஆடுகளின் எடை சீக்கிரமே அதிகரித்து கூடுதல் லாபத்துக்கு வழிவகுக்கும். கொட்டில் முறையில் வளர்க்கும் போது அலைச்சல் இல்லாததால் சீக்கிரம் உடல் பெருக்கும். தீவனத் தேவை குறையும். எனவே கொட்டில் முறை ஆடு வளர்ப்பு லாபத்தைக் கொட்டிக்கொடுக்கும்' என்றனர்.
 
Link to comment
Share on other sites

புல் முளைப்பதற்காக காத்திருந்தேன்! - உவர் நிலத்தை விளை நிலமாக்கி சாதனை.

 

E_1407228197.jpeg

 

மதுரை சமயநல்லூரில் இருந்து தோடனேரியை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மூலக்குறிச்சி. மண்ணுக்கு வெள்ளையடித்தது போல், "பளிச்' என்று இருந்தது. விளைச்சலுக்கு உதவாது என்று "பிளாட்' ஆக மாற இருந்த நிலத்தை வாங்கி, இன்று விளைநிலமாக மாற்றிக் காட்டியுள்ளார் விவசாயி வி.சி.வெள்ளைச்சாமி.
புல் கூட முளைக்காத நிலத்தில், இன்று மரங்கள் வளர்ந்து நிற்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
பழைய இரும்புத் தொழில் தான் என் வியாபாரம். வயது அறுபதைத் தாண்டிவிட்டது. குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்து விட்டேன். இனி மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து தான் இந்த இடத்தை வாங்கினேன்.
நிலம் வாங்கிய போதே பள்ளமான இடத்தை ஆய்வு செய்து, அதில் மீன்வளர்க்க ஆசைப்பட்டேன். நிலத்தை வாங்கி ஆசையாய் கொய்யா, சப்போட்டா, மா மரக்கன்றுகளை நட்டேன். நட்டதோடு சரி, பாதி செத்துவிட்டது. மீதியிருப்பதும் வைத்த கடனுக்காக நின்றது. நிலம் வாங்கிய போது இங்கு புல், பூண்டு வளரவில்லை. காக்கை, குருவி கூட பறக்கவில்லை.
"அகத்தி மரம் வளர்த்துப் பார்' என்றார்கள். சரியென்று அகத்தி கன்றுகளை நட்டேன். அதன் காற்றை சுவாசித்து சப்போட்டாவும், கொய்யாவும் கூடவே வளர்ந்தன. மரங்கள் மெல்ல வளர்ந்தாலும் பரவாயில்லை என, ரசாயன உரம் பக்கமே போகவில்லை. மாட்டுச்சாணமும், ஆட்டுபுழுக்கையும் தான் உரமாக தந்தேன். மெல்ல மெல்ல புற்கள் வளர்ந்தன. 20 சென்ட் பள்ளமான இடத்தில் இன்னும் சற்று ஆழம் தோண்டினேன். கடந்தாண்டு அக்டோபரில் பெய்த இரண்டு நாட்கள் மழையில், 20 சென்ட் நிலத்திலும் தண்ணீர் நிறைந்தது. கட்லா, சி.சி., மீன்களை வாங்கி விட்டேன்.
அவ்வப்போது பெய்யும் சிறுமழையால் இன்னமும் தண்ணீர் பாதியளவு உள்ளது. இதுவரை 100 கிலோ மீன்களை எடுத்துவிட்டேன். இன்னமும் 150 கிலோ மீன்கள் உள்ளன. சுத்தமான மழைநீரில் மீன்கள் கொழுகொழுவென்று வளர்வதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
மூன்றரை ஏக்கரில் சப்போட்டா, கொய்யா, நெல்லி, நாவலுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துள்ளேன். பத்தடி நீள, அகல கிணற்று நீர் தான் ஆதாரம். புல்லைத் தாண்டி நெல் விளைந்தது. முதலாண்டில் ஏக்கருக்கு 
5 டன், அடுத்தாண்டு 12 டன், மூன்றாமாண்டு 20 டன் எடுத்தேன். இந்தமுறை மழைஇல்லாததால் வெறுமனே உழுது போட்டிருக்கேன். மழை பெய்தால், மண்ணாவது நல்ல உறிஞ்சும். காய்கறி, பந்தல் காய்கள் பயிரிடுவதற்காக, சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து தயாராக வைத்துள்ளேன்.
அஞ்சு ஆட்டுக்குட்டிகள் வாங்கி விட்டேன். இப்போது அஞ்சும் அடுத்த முறை குட்டிகளை உருவாக்கி விட்டது. அவற்றுக்கு தனியாக மரக்கொட்டில் அமைத்துள்ளேன். ஆட்டின் கோமியமும், புழுக்கையும் ஒன்றாக கலந்தால் நல்ல உரம் என்பதால், கொட்டிலின் கீழே சிமென்ட் சிலாப் அமைத்து, உரத்தை சேகரிக்கிறேன். மாட்டுக்கு தனியிடம் அமைத்து, மாட்டுச்சாணம் வாங்கியும் மண்புழு உரம் தயாரிக்கிறேன்.
என் நிலத்தில் இருந்து ஒரு சொட்டு மழைநீரை வெளியே விட மாட்டேன். அதற்கேற்ப ஆங்காங்கே வரப்பு வெட்டி மீன்குட்டையில் விழுமாறு செய்துள்ளேன். ஒற்றை ஈச்சமரத்தில் ஒரு ஜோடி சிட்டுக்குருவி கூடு கட்டியது. இப்போது 30 குருவிகள் வரை இங்கேயே சுற்றித் திரிகின்றன.
நிலமென்றால் புல், பூண்டு, பாம்பு, பூச்சி, தவளை, மரம், செடி, கொடி, பறவைகளோடு மனிதர்களும் இணைந்திருக்க வேண்டும். மூன்றரை ஏக்கர் தரிசு நிலத்தை ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றி, சாதித்துவிட்டேன். சுற்றிலும் வேலியும், வேலியையொட்டி சவுக்கு கன்றுகளும் நட்டுள்ளேன். இன்னமும் ஒருஏக்கர் நிலம் தரிசாகத் தான் உள்ளது. இதை இனிமேல் தான் புல் விளை விக்க முயற்சி செய்ய வேண்டும், என்றார்.
அனுபவம் பேச: 94431 49166.
 
Link to comment
Share on other sites

விவசாயியை வாழ வைக்கும் மாற்றுப்பயிர்! 

 

சிறு தானியங்களை பயிரிட்டு, வறட்சியை வெல்லலாம் எனக் கூறும், விவசாயி மாரிமுத்து: சிறுதானிய பயிர்களை விவசாயிகள் யாரும் பயிரிடாமல், முற்றிலுமாக நெல், கரும்பு, பருத்தி போன்ற தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய ஆரம்பித்து விட்டனர். இன்றைய தண்ணீர் பஞ்சத்துக்கு, இதுவும் மிகப்பெரிய காரணம்.நெல் சாகுபடி செய்ய, ஒரு ஏக்கருக்கு, 1,200 மி.மீ., உயரத்திற்குத் தேங்கும் வகையில் நீர் தேவை. ஆனால், இந்தத் தண்ணீர் மூலம், 3 ஏக்கரில், சிறுதானியங்கள் பயிர் செய்யலாம். நெல்லுக்கு சிறந்த மாற்றான மக்காச்சோளம், 105 நாட்கள் பயிர்; ஏக்கருக்கு, 550 மி.மீ., தண்ணீர் மட்டுமே போதுமானது. இது உணவுப் பொருள்கள் செய்யவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும் பயன்படுவதால், நல்ல விலை கிடைக்கிறது.கம்பிற்கு, ஏக்கருக்கு, 350 மி.மீ., தண்ணீர் போதுமானது. இதன் வயது 85 முதல் 100 நாட்கள். சிறுதானிய பயிர்களுக்கு, இப்போது அதிக வரவேற்பு இருப்பதால், கம்புக்கு சந்தையில் அதிகத் தேவை உள்ளது. ஏக்கருக்கு, 1,200 கிலோ வரை, மகசூல் தரும். அதேபோல், 90 முதல் 120 நாட்கள் பயிரான கேழ்வரகிற்கு, 450 மி.மீ., தண்ணீர் போதுமானது. இது குறுகிய காலத்தில், அதிக லாபம் தரக்கூடியது.

 

கேழ்வரகைக் கொண்டு, இப்போது அதிக அளவில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுவதால், நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. ஏக்கருக்கு, 1,900 கிலோ வரை மகசூல் தரும். தண்ணீரே இல்லாத நிலத்தில் கூட, மழையை நம்பி மானவாரியாக வரகு பயிரை விதைக்கலாம். 120 நாட்கள் பயிரான இதற்கு, சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏக்கருக்கு, 600 முதல் 720 கிலோ வரை மகசூல் தரும். சாமை, 85 நாட்கள் குறுகியகாலப் பயிர். இதை மானாவாரியாக விதைக்கலாம். இது மருத்துவ குணம் கொண்டதால், நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. ஏக்கருக்கு, 350 கிலோ மகசூல் தரும். இதைத் தவிர்த்து, கொள்ளு, பனிவரகு, உளுந்து, பச்சைப்பயறு, துவரை போன்ற பயிர்கள், மிகவும் குறைந்த தண்ணீரில் விளைந்து, நிறைந்த லாபம் தரக்கூடிய பயிர்களாகும். இவை அனைத்துக்கும், சராசரியாக ஏக்கருக்கு, 300 மி.மீ., அளவு தண்ணீர் போது மானது.சிறு தானியங்களைக் கொண்டு, நிறைய உணவுப் பொருள்கள் சாகுபடி செய்ய முடியும் என்பதால், இப்போது மக்களிடமும், சந்தையிலும், நிறைய வரவேற்பு உள்ளது. விவசாயிகள் வாழ்வில் மாற்றம் வேண்டுமானால், மாற்றுப் பயிர்களால் மட்டுமே சாத்தியம்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

கை கொடுக்கிறதுதெளிப்பு நீர் பாசனம்!

 

தெளிப்பு நீர் பாசன முறை பற்றி விவரிக்கும் விவசாயி ராஜேந்திரன்: விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். பெரும்பாலும், சோளம், கம்பு, மணிலா போன்ற பயிர்களை தான் பயிரிடுவோம். கடந்த சில ஆண்டுகளாக, உரிய மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகளும் வற்றின. அதனால், விவசாயம் செய்வதே, பெரும் சவாலாக இருந்தது.இச்சூழலில், குறைந்த நீரில் தெளிப்பு நீர்ப்பாசனத்தின் மூலம், பயிர்களை சாகுபடி செய்து லாபம் பெறலாம் என்பதை, திண்டிவனம் வேளாண் பொறியியல் துறையின் வல்லுனர்கள் வாயிலாக அறிந்தேன். அதுமட்டுமின்றி, தெளிப்புநீர்ப் பாசனத்திற்கான கருவிகளை, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருவதும் தெரிந்தது.இதற்காக விண்ணப்பித்த போது, 5 ஏக்கருக்கு மேல் எனக்கு நிலம் இருப்பதால், 75 சதவீத மானியத்தில், தெளிப்புநீர்ப் பாசனத்திற்கான ரெயின்கன் கருவியையும், 30 மீட்டர் நீளமுள்ள டியூப் பைப்பையும், வேளாண் பொறியியல் வல்லுனர்கள் வழங்கினர்; மேலும், கருவியை பொருத்துவது குறித்த பயிற்சியையும் அளித்தனர்.வயலில் உள்ள மோட்டார் பைப்பில், டியூப் பைப்பை இணைத்து, அதனுடன் ரெயின் கன் கருவியின் பைப்பை இணைத்து, மோட்டாரை ஆன் செய்தால், நிலம் முழுவதும் சுழற்சி முறையில், 64 மீ., பரப்பளவிற்கு சாரல் மழை பொழிவது போன்று, நீர் தெளிக்கப்படும்.ரெயின் கன் கருவியை, சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பதால், அதிகபட்சமாக மூன்று முதல், நான்கு மணி நேரத்திற்குள், ஒரு ஏக்கரில் பயிர்களுக்கு நீர் அளித்து விடலாம்.கடந்த பருவத்தில், உளுந்து மற்றும் எள் பயிரை தெளிப்பு நீர்ப் பாசனத்தில் பயிர் செய்திருந்த போது, அதிகபட்சமாக, நான்கு முறை மட்டுமே நீர் அளித்தேன். விதைப்புக்கு முன் ஒருமுறையும், அதன் பின், 15 நாட்கள் இடைவெளியிலும், பயிர்களுக்கு நீர் அளித்தேன்.வழக்கமாக பெரும் மகசூலைவிட தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் பயிர் செய்தபோது, அதிக அளவில் மகசூல் கிடைத்தது. மணிலா, உளுந்து, எள் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் மண், 2 அங்குலம் உயரத்திற்கு ஈரப்பதத்துடன் இருந்தால், பயிர்களைப் பாதுகாத்து விடலாம்.

தெளிப்பு நீர் பாசன முறையில், 5 எச்.பி., திறன் கொண்ட மோட்டார் மூலம், கருவியைப் பயன்படுத்தி, வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், விவசாயிகள் லாபம் பெறலாம்.
 
Link to comment
Share on other sites

'தீமை செய்யும் பூச்சிகளும் நல்லது தான்!' 
 
வயல்களில் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கப்பதற்கான வழிமுறைகளை கூறும், பூச்சியியல் வல்லுனர் செல்வம்: வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன. தீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும். தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும்.பழங்காலங்களில் விவசாயிகள் இயற்கையான பூச்சி விரட்டிகளை பயன்படுத்தியதால், அது தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தியது. இப்போது எதற்கெடுத்தாலும் விவசாயிகள், பூச்சிக்கொல்லியை பயன்படுத்துகின்றனர். பயிர்களுக்கு பூச்சிக் கொல்லிகளை அடிக்கும்போது, முதலில் அழிவது நன்மை செய்யும் பூச்சிகள் தான்.
 
இதனால், நோய்களும் அதிகம் தாக்குகிறது; விளைச்சலும் குறைகிறது.பூச்சிக் கொல்லிகளால் பூச்சிகள் மட்டுமல்லாமல், வயலில் வாழும் பல நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து விட்டன. இன்றைய நிலத்தடி நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்வற்றிற்கு பூச்சிக்கொல்லிகளும் காரணம்.
 
வரப்புகளில் தட்டைப் பயிரை பயிர் செய்தால், அஸ்வினிப் பூச்சிகள் அதிகமாக இருக்கும். இவற்றை உண்ண, நன்மை செய்யும் பூச்சிகள் வருவதால், இது தடுப்பரண் போல, வயலில் செயல்பட்டு, தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.அதேபோல், மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும் பூச்செடிகளை பயிரிட வேண்டும். எடுத்துக்காட்டாக செண்டிப்பூ, சூரியகாந்தி போன்றவற்றை வரப்புகளில் நட்டு வைத்தால், அது நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும்.வரப்புகளில், மக்காச்சோளத்தை ஆங்காங்கே நட்டு வைக்கலாம். இது, 'லைவ் ஸ்டாண்ட்' போல செயல்பட்டு, பறவைகள், ஆந்தைகள் அமர்ந்து, தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்துத் தின்ன உதவும்.வரப்புகளில் பொறிப்பயிராக ஆமணக்கு செடியை, எட்டு அடிக்கு ஒன்றாக நட்டு வைக்கும் போது, இந்தச் செடியின் மூலமாக, வயலில் எந்தப் பூச்சி உள்ளது எனக் கண்டுப்பிடிக்கலாம்.மேலும், வயலை கசப்பாக மாற்ற வேப்பங்கொட்டையை அரைத்து, பயிர்களில் தெளிக்கலாம். இந்தக் கசப்பானது தீமை செய்யும் பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை, பக்கவாதம் போன்ற நோய்களை உண்டு பண்ணி, பூச்சிகளை அழித்துவிடும்.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வாழையின் தரத்தை உயர்த்த இலைவழி நுண்ணூட்டங்கள்

 

முக்கனிகளில் ஒன்றான வாழையானது தமிழகம் முழுவதும் சாகுபடி செய்யும் பழப் பயிர்களில் மிக முக்கியமானது. உரங்களை சரியான தருணத்தில் அளித்த போதிலும் வாழையில் எதிர்பார்த்த தரம் மற்றும் மகசூல் பெற முடியாமல் பல விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். வாழைக்கு தேவையான அளவுக்கு நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக் காததே இதற்கு காரணம்.

நுண்ணூட்டங்களான மக்னீசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் போரான் போன்றவை வாழையின் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. தண்டுகள் மெலிந்து காணப்படுதல், நுனி இலைகள் வெளுத்து காணப்படுதல், காய்கள் குட்டையாகவும் வளைந்தும் ஒல்லியாகவும் உருவாகுதல், பூ மற்றும் இலைகள் உருவாவது தாமதமாதல், பழங்கள் திரட்சி அடையாமல் காணப்படுதல் போன்றவை இத்தகைய நுண்ணூட்டப் பற்றாக்குறையால் பயிரில் ஏற்படும் அறிகுறிகளாகும்.

இத்தகைய குறைபாடுகள் பொதுவாக நான்கு மாதங்களுக்கு மேல்தான் பயிர்களில் தென்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் நுண்ணூட்டங்களை மண் மூலம் பயிருக்கு வழங்குவதை விட இலையில் தெளிப்பதன் மூலம் பயிர்கள் விரைவாக நுண்ணூட்டங்களை எடுத்துக் கொள்கின்றன.

இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமானது இத்தகைய நுண்ணூட்டங்கள் ஒன்றாக கிடைக்கும்வகையில் வாழைக்கென சிறப்பு நுண்ணூட்ட கலவையினை கண்டுபிடித்துள்ளது. இந்தக் கலவையில் 50 கிராம் எடுத்துக்கொண்டு 10 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். அதில் ஏதேனும் ஒரு ஒட்டும் திரவம் மற்றும் 2 எலுமிச்சை பழத்தின் சாறுகளை சேர்க்க வேண்டும்.

இந்தக் கலவையை வாழையின் இலைகளில் தெளிக்க வேண்டும். 5-வது மாதம் தொடங்கி 10- வது மாதம் வரை மாதம் ஒருமுறை இதனை தெளிக்கலாம். இதனால் நுண்ணூட்டக் குறைபாடுகள் விரைவில் களையப்படுவதுடன் அதிக எடை கொண்ட தார்கள் உற்பத்தியாகி அறுவடைக்கு கிடைக்கும். மேலும், எல்லா மரங்களிலும் ஒரே நேரத்தில் தார்களை அறுவடை செய்ய முடியும். இத்தகைய நுண்ணூட்டக் கலவையினை பயன்படுத்துவதன் மூலம் தரமான வாழைத் தார்கள் கிடைக்கின்றன.

 

தொடர்புக்கு: 98653 66075

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6356026.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

பலன் தரும் பப்பாளி சாகுபடி

 

pappali_2080159h.jpg

 

பழவகை மரச் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக பப்பாளி உள்ளது என்பதை நிரூபித்து வருகிறார் இளம் விவசாயி பாலமுருகன்.

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் கடந்த ஆண்டில் பப்பாளி சாகுபடி செய்து, தனது உழைப்பின் மூலம் நல்ல லாபத்தையும் பெற்று வருகிறார்.

பப்பாளி சாகுபடியில் தனது அனுபவங்கள் பற்றி பாலமுருகன் கூறியதாவது: “எங்கள் பகுதியில் கிணற்றுப் பாசனம்தான். ஏற்கனவே நெல், சோளம், சூரியகாந்தி போன்றவற்றைதான் பயிர் செய்து வந்தோம். எனினும் சந்தை வாய்ப்பு அதிகம் உள்ள பயிர்கள் பற்றியும், அவை நம் பகுதியில் சாகுபடி செய்ய உகந்ததுதானா என்பது பற்றியும் தொடர்ந்து தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டேன். நண்பர்கள் மூலமாகவும், தோட்டக் கலைத் துறையினர் மூலமாகவும் பல தகவல்களை பெற்றேன். இப்படி கிடைத்த தகவல்களின் அடிப் படையில்தான் பப்பாளி சாகுபடி செய்வது என முடிவெடுத்தேன்.

முதல் கட்டமாக 2 ஏக்கரில் செய்து பார்ப்போம் என முடிவு செய்தேன். இதற்கான விதையை தோட்டக்கலைத்துறையினரின் உதவியோடு பெற்றேன். தைவான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த விதை அதிக விளைச்சல் தரக் கூடியது. பழத்தின் சுவையும் நன்றாக இருக்கும். விதை விலைதான் அதிகம். ஒரு ஏக்கருக்கு 20 கிராம் விதை போதுமானது. இதன் விலை ரூ.4,500.

பாக்கெட்டில் மண் நிரப்பி, அதில் விதையைப் போட்டு, 60 நாள்களுக்கு நிழலில் வளர விட வேண்டும். அதன் பின்னர், வாழைக்கு பாத்தி கட்டுவது போன்று வயலை தயார் செய்ய வேண்டும். கன்றுகளை நடுவதற்கு சற்று மேடாக மண்ணை வைத்துக் கொண்டு அதில் கன்றுகளை நட்டு, தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். பப்பாளி சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. எனவே, சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருகிறேன். ஏக்கருக்கு 800 கன்றுகள் என்ற வகையில் 1,600 மரங்கள் தற்போது உள்ளன.

விதை முளைத்த 6 மாதத்தில் மரம் 5 அடி உயரத்துக்கு வளர்ந்து விடும். 7 முதல் 8 மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும். வாரம் ஒரு தடவை அறுவடை செய்யலாம். காய்ப்பு தொடங்கி 2 ஆண்டுகளுக்கு காய்கள் அதிக அளவில் காய்க்கும். அதன் பின்னர் குறைந்து விடும். அப்போது மரத்தை வெட்டி விட்டு, புதிதாக நடவு செய்யலாம்.

சொட்டு நீர் பாசனத்தின் வழியாகவே இதற்கு தேவையான உரங்களை செலுத்தலாம். ஓரளவுக்கு நல்ல முறையில் நீர் பாய்ச்சி பராமரித்தால், வாரம் ஒருமுறை ஏக்கருக்கு ஒரு டன் வரை மகசூல் எடுக்கலாம். தற்போது மழை இல்லை. நிலத்தடி நீரும் வற்றி விட்டதால் 2 ஏக்கருக்கு ஒரு டன் தான் மகசூல் கிடைக்கிறது.

அறுவடை செய்யப்படும் பப்பாளியை தனித்தனியே பேப்பரில் சுற்றி, அதை திருச்சி மார்க்கெட்டில் கொண்டு வந்து விற்பனைக்கு அளிக்கிறோம். தற்போது டன் ஒன்றுக்கு ரூ.12,000 வரை விலை கிடைக்கிறது. அதிக விளைச்சல் இருந்தால், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யலாம். விலையும் கூடுதலாக கிடைக்கும்.

பப்பாளியை பொறுத்தவரையில் களர், உவர் நிலங்கள் தவிர அனைத்து நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். தங்கள் பகுதியில் உள்ள சந்தையின் தேவையை அறிந்து கொண்டு சாகுபடி செய்வது அவசியம். பப்பாளி பயிரில் ஓராண்டு வரையில் ஊடு பயிராக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யலாம். அதன் பின்னர் ஊடுபயிர் சாகுபடி செய்வது பூச்சி அல்லது நோய் தாக்குதலை பப்பாளி மரங்களுக்கு ஏற்படுத்தி விடும்.

சந்தை வாய்ப்பை அறிந்து கொண்டு சாகுபடி செய்தால், எந்த சாகுபடியையும் வெற்றிகரமாக மேற்கொண்டு, அதில் நல்ல லாபமும் ஈட்டலாம்” என்கிறார் பாலமுருகன். மேலும் விவரங்களுக்கு 94864 93933 என்ற செல்பேசி எண்ணில் பாலமுருகனை தொடர்பு கொள்ளலாம்.​

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article6355684.ece?homepage=true&theme=true

 

 


pappali_2080159d.jpg

Link to comment
Share on other sites

வறட்சி பூமியிலும் லாபம் தரும் மிளகு சாகுபடி

 

varatchi_2067931h.jpg

 

வாசனைப் பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மிளகு. குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த மிளகு, புதுக்கோட்டை போன்ற வறட்சி பகுதிகளிலும் இப்போது சாகுபடி செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே அணவயல்-பட்டிபுஞ்சையைச் சேர்ந்த விவசாயி தங்கையன் தனது தென்னந்தோப்பில் ஊடு பயிராக மிளகு சாகுபடி செய்து வருகிறார்.

தனது மிளகு சாகுபடி அனுபவம் குறித்து தங்கையன் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கரில் மட்டும் தென்னையில ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்யத் தொடங்கினேன். தற்போது அது 3 ஏக்கராக விரிவடைந்திருக்கிறது. மிளகு கொடிகளை தென்னை மரம், பலா மரத்துல ஏத்தி விட்டேன். அதிகமான இடை வெளி உள்ள இடத்துல 5 அடி இடைவெளியில கிலுவை, முருங்கை, கொன்றை மரங்களை நட்டு வைத்து அதிலும் மிளகு கொடியைப் படரவிட்டுள்ளேன்.

எந்த அளவுக்கு தோட்டத்தில் குளிர்ச்சி தன்மையை ஏற்படுத்து கிறோமோ அந்த அளவுக்கு விளைச்சலும் அதிகமாக இருக்கும். ஏராளமான மிளகு ரகங்கள் உள்ளன. எனினும், வறட்சி பூமியில் பன்னியூர் 1 மற்றும் கரிமுண்டா ஆகிய இரண்டு ரகங்கள்தான் எனது அனுபவத்துல சிறப்பாக இருக்கு. ஏற்ெகனவே வளர்க்கப்படும் மிளகு கொடியில் இருந்தே அதன் பிறகு நமக்குத் தேவையான அளவுக்கு நாற்றுகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

மிளகு நடவு செய்து 3-வது ஆண்டிலிருந்தே செடிக்கு சுமார் 100 கிராம் வீதம் மிளகு விளைய தொடங்கிவிடும். சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு அரை கிலோவை எட்டும். ஏக்கருக்கு சுமார் 900 செடிகள் வளர்க்கலாம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை அறுவடை செய்தால் சுமார் 450 கிலோ மிளகு மகசூல் கிடைக்கும். தற்போது கிலோ ரூ. 900-க்கு விற்கிறோம்.

மிளகுக்காக தனியாக ரசாயன உரம் இடுவதில்லை. 6 மாதத்துக்கு ஒரு முறை ஒரு செடிக்கு சுமார் 6 கிலோ தொழு உரம் இடுவோம். இலைகள் உதிர்ந்து அதுவும் இயற்கை உரமாகிறது. காய்க்கும் தருணத்தில் கடலைப் புண்ணாக்கு இடு வோம். காய்களில் பூச்சிகள் இருந்தாலோ, காய்கள் திரட்சி யாக இல்லாதிருந்தாலோ பஞ்ச கவ்யம்தான் தெளிக்கிறோம்.

இதைப் பார்த்து இந்தப் பகுதியில் தென்னந்தோப்பு வைத்திருக்கும் விவசாயிகள் ஏராளமானோர் இப்போது மிளகு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்

தொடர்புக்கு: 89408 38900

 

http://tamil.thehindu.com/business/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article6334508.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

வேலிக்கு மாற்றாக வளர்க்கலாம் விளாம் மரம்!

 

நான்கு ஆண்டுகளில் பலன் தரும் விளாம் மர வகையை உருவாக்கியுள்ள ஜெகநாத ராஜா: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், என் சொந்த ஊர். என்னுடைய சிறு வயதில் எங்கள் பகுதியில் மட்டும், ஆயிரக்கணக்கான விளாம் மரங்கள் இருந்தன. அவற்றில், 100 வயதுடைய மரங்களும் அடங்கும்.

ஆனால், இப்போது அவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம். இதே நிலை தொடர்ந்தால், இன்னும், 20 ஆண்டுகளில் மீதமுள்ள விளாம் மரங்களும் காணாமல் போய்விடும். காய்ப்புக்கு வர, குறைந்தது 20 ஆண்டு காலம் எடுத்துக் கொள்வதே, விளாம் மரங்களின் அழிவுக்கு முக்கியக் காரணம்.
 
எனவே, குறைந்த ஆண்டில் பலன் தரும் விளாம் மரத்தை உருவாக்க முடிவு செய்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன், நன்கு வளர்ந்த தாய் விளாம் மரத்தில், மென்தண்டு ஒட்டு முறையில் ஒட்டுக்கட்டி, புதிய வகை மரக்கன்றை உருவாக்கினேன்.
 
இந்தப் புதிய வகை கன்று, நான்கு ஆண்டுகளிலேயே காய்ப்புக்கு வந்து விடுவதுடன், மூன்று ஆண்டுகளில் 20 அடி உயரம் வளரும். இந்தப் புது ரகத்திற்கு, ஆர்.ஜே.ஆர்.,1 என, பெயரிட்டு, காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளேன்.
 
பத்து ஆண்டுகள் மழை இல்லாவிட்டாலும், விளாம் மரம் தாக்குப் பிடிக்கும். வேறு எந்தத் தாவரமும் வளர தகுதியில்லை என, கூறப்படும் மண்ணில் கூட, இவை வளரும். பூச்சித் தாக்குதல் கிடையாது; களை வராது; உரம் ஏதும் தேவையில்லை. இதனால் செலவு, துளி கூட கிடையாது. மேலும், 20 அடிக்கு மேல் இவை வளரும் என்பதால், தங்கள் நிலங்களை சுற்றி வேலிக்கு பதிலாக, விளாம் மரங்களை விவசாயிகள் வளர்க்கலாம்.
 
மழைக்காலத்தில் கன்றுகளை நட்டால், அதன் பின் தண்ணீர் அளிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு கன்றுக்கும், 18 முதல், 20 அடி வரை இடைவெளி விட்டு நட வேண்டும். கன்று நட்ட முதல் மூன்று ஆண்டுகள், செடியில் பூ பூக்கும். அவற்றை வளர விடாமல் கிள்ளி விட வேண்டும். இல்லையெனில், காய் பிடித்து, செடி வளராது.
செப்., முதல் நவ., மாதம் வரை, விளாம் மரத்தின் சீசன் இருக்கும். பழச்சாறு, ஊறுகாய் போன்ற மதிப்பு கூட்டும் பொருள்களாக, விளாம் பழங்களை மாற்றி விற்கலாம்.
விவசாயிகளிடம் விளாம் மரத்தின் முக்கியத்துவம், அதன் பாரம்பரியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.ஆண்டுதோறும், 2,000 மரக்கன்றுகள் விற்பனையாகின்றன. ஒரு மரக்கன்றை, 80 ரூபாய்க்கு தருகிறேன்.விளாம் மரம் நம்முடைய பாரம்பரிய மரம் என்ற எண்ணம் மக்களிடையே வளர வேண்டும். அப்போது தான் அவற்றை அழியாமல் பாதுகாக்க முடியும்.
 
தொடர்புக்கு: 98421-22866.
 
Link to comment
Share on other sites

இன்று உலக தேங்காய் தினம்: வறட்சியிலும் தாக்குப்பிடிக்கும் ஈத்தாமொழி நெட்டை தென்னை

 

1_2088178h.jpg

பாரம்பரிய ரகமான ஈத்தாமொழி நெட்டை ரக தேங்காயில் இருந்து நெட்டியை உரிக்கும் தொழிலாளி.

“பிள்ளையை பெற்றால் கண்ணீரு.. தென்னையை நட்டால் இளநீரு” என்று கிராமப் பகுதிகளில் பழமொழி சொல்வர். தேங்காய், இளநீர், தேங்காய் பால், தென்னை மடல் என அதன் பல்வேறு உப பொருள்களுக்கும் சத்தான சந்தை வாய்ப்பு இருப்பதுதான் அதற்கு காரணம்.

தமிழக அளவில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது.

தொடக்க காலங்களில் கன்னியா குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தென்னை சாகுபடியே நடைபெற்று வந்தது. ரப்பர் பயிரில் கிடைத்த அதிக லாபம் காரணமாக விவசாயிகள் பெரும்பாலானோர் ரப்பர் சாகுபடிக்கு மாறினர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரப்பர் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் குமரி மேற்கு மாவட்டத்தில் ரப்பர் சாகுபடி செய்தவர்கள் இப்போது மீண்டும் தென்னைக்கு மாறி வருகின்றனர்.

வாடல் நோய்

இன்னொரு புறம் கேரள வாடல் நோய் குமரி மாவட்ட தென்னை சாகுபடியாளர்களை மிரட்டி வருகிறது. இது குறித்து பேசிய முன்னோடி விவசாயி செண்பகசேகரன், மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தேங்காய் சாகுபடி இருக்கும். பொதுவாக தேங்காய் அறுவடையை நல்வெட்டு, சில்வெட்டு என இரண்டாக பிரிப்போம். நல்வெட்டில் நல்ல மகசூல் இருக்கும். ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மகசூல் குறைவாக இருக்கும். அது சில்வெட்டு.

கேரள வாடல் நோய் தாக்கிய தென்னை ஓலையின் நீளம் குறைந்து விடும். ஓலையும் பச்சையத்தை இழந்து வெளிறி போய்விடும்.

இந்நோய் தாக்கிய தென்னையில் காய்ப்புத் திறன் குறைந்து விடும். இந்நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது. குமரி ஆட்சியர் நாகராஜனின் தொடர் முயற்சியால் இப்போது நோய் தாக்கிய மரத்தை வெட்டி அகற்ற 500 ரூபாயும், புதிய தென்னங்கன்றும் கொடுத்து வருகிறார்கள். இதை சிறிது உயர்த்தி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

தாக்குப்பிடிக்கும் ஈத்தாமொழி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய ரகமான ஈத்தாமொழி நெட்டை தென்னை மரங்கள் ஈத்தாமொழி சுற்றுவட்டாரப் பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த ரகங்களை கேரள வாடல் நோய் அதிகம் தாக்கவில்லை. மத்திய அரசின் புவிசார் குறியீட்டிலும் ஈத்தாமொழி நெட்டை தென்னை இடம்பிடித்துள்ளது. இது குறித்து தென்னை ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹென்றி லூயிஸிடம் கேட்டபோது, `கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய ரகமான ஈத்தாமொழி நெட்டை தென்னையில் காயின் பருப்பு அடர்த்தியாக இருக்கும்.

மன்னர் ஆட்சிக் காலங்களில் கிரேக்க வியாபாரிகள் பண்ட மாற்று முறையில் இங்கு வந்து தேங்காய் வியாபாரம் செய்ததாக சொல்வர். இன்றும் சென்னையில் இந்த தேங்காய்களுக்கு தனி சந்தை வாய்ப்பு உள்ளது” என்றார்.

52 ஆண்டுகளாக வருவாய்

ஈத்தாமொழி நெட்டை தென்னை நடவு செய்திருக்கும் எறும்புகாட்டை சேர்ந்த, குமரி மாவட்ட உழவர் பெருமன்ற தலைவர் மீனாட்சிசுந்தரம் கூறும்போது, பாரம்பரியமான இந்த ரகத்தை நடவு செஞ்சுருக்கேன். பொதுவா ஒட்டு ரக தென்னை மரங்கள் 30 முதல் 40 ஆண்டுகளில் மகசூலை முடிச்சுக்கும். என் தோட்டத்தில் இருக்குற இந்த பாரம்பரிய ரகத்துக்கு 52 வயசு ஆச்சு. இன்னிக்கும் அதே ஆளவு மகசூலை கொடுத்துட்டு இருக்கு. கேரள வாடல் நோயும் இந்த பாரம்பரிய ரகத்தை அண்டவில்லை”என்றார்.

என்னதான் விஞ்ஞான வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் பாரம்பரியத்தின் பெருமையே விவசாயிகளை கரை சேர்த்து கொண்டிருக்கிறது.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/article6371757.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.