Jump to content

தமிழ் அறிக


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அறிக - 1

கையெழுத்தும் தலையெழுத்தும்

சகாயம் பற்றிய இரண்டாம் கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர் அதில் கையாண்டிருந்த இரு சொற்கள் குறித்து வினவினார். அவரது முதல் வினா கையெழுத்து , கையொப்பம் ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதாகும். இன்று பேச்சு வழக்கில் Hand writing , signature ஆகிய இரண்டு பொருள்களுக்கும் கையெழுத்து என்னும் ஒரே சொல்லைக் கையாள்கிறோம். அது சரியல்ல. 'புரியாத மாதிரி அவன் கையெழுத்து இருக்கிறது', 'புரியாத மாதிரி அவன் கையெழுத்துப் போடுகிறான்' இந்த இருதொடர்களிலும் வெவ்வேறு பொருள்களில் கையெழுத்து என்னும் சொல் வருகிறது. 'கையெழுத்துப் போடுதல்' என்று வந்துவிட்டால் அது Signature எனப் புரிந்துகொள்கிறோம். ஆனால் கையொப்பம் என்பதுதான் அதற்குச் சரி. வெவ்வேறு பொருள்களுக்கு வெவ்வேறு சொற்கள் இருக்கையில் எதற்கு ஒன்றையே பயன்படுத்த வேண்டும்?

Initial என்பதற்கு முன்னெழுத்து என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். அது சரியா என்பது நண்பரின் அடுத்த வினா. இனிசியல் என்பதற்குத் தலையெழுத்து, தலைப்பெழுத்து ஆகிய சொற்களை முன்னோர் சிந்தித்திருக்கின்றனர். தலை என்பது முதன்மை என்னும் பொருளில் வரும் சொல். 'எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்பதால். தலை மாணாக்கர் என்றால் முதல் மாணாக்கர் எனப் பொருள். தலைவன் எனில் முதல்வன். ஆகவே பெயருக்கு முதலில் வரும் எழுத்து என்னும் பொருளில் தலையெழுத்து எனச் சொல்வது பொருந்துமா? 'கடவுள் நம் தலையில் எழுதும் எழுத்து' என்னும் பொருளில் 'தலையெழுத்து' மக்கள் வழக்கில் மிகுதியாக உள்ளது. ஆகவே இது வேண்டாம். தலைப்பெழுத்து? நூல் தலைப்பு, கட்டுரைத் தலைப்பு, செய்தித் தலைப்பு எனத் தலைப்பைப் பலவிதமாகப் பயன்படுத்துகிறோம். ஒன்றின் மேல் வருவது தலைப்பு. ஆகவே இதுவும் வேண்டாம். பெயருக்கு முன்னால் வரும் எழுத்து என்னும் பொருளில் 'முன்னெழுத்து' என்பதைப் பயன்படுத்துகிறேன். இவ்வாறு பயன்படுத்துவோர் பலர் உள்ளனர்.

சிலரது கையெழுத்து மட்டும் தலையெழுத்தைப் போல ஒன்றும் புரியாமலிருக்கும். ஆனால் எல்லாரின் கையொப்பமும் தலையெழுத்துத்தான்.

http://www.perumalmurugan.com/2011/01/1_11.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையெழுத்து , கையொப்பம் ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன

 

 

 

 

பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அறிக - 2

விவரமானவரா நீங்கள்?

தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு விண்ணப்பம் எழுதும் முறையைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தேன். வேலைக்கு விண்ணப்பித்தலில் 'இத்துடன் எனது தன்விபரக் குறிப்பை இணைத்துள்ளேன்' எனப் பலர் எழுதியிருந்தனர். Bio-data என்பதற்கு நிகராகத் தமிழில் 'தன்விபரக் குறிப்பு' எனப் பெரும்பாலானவர்களும் 'தன் விவரக் குறிப்பு' என மிகச் சிலரும் பயன்படுத்தியிருந்தனர். எப்படி இந்தக் குழப்பம் ஏற்படுகிறது? பகரமும் வகரமும் மயங்குவதற்கான காரணம் புரியவில்லை.

மாணவர்கள் அல்லாத பலரும் 'விபரம்' , 'விவரம்' என்னும் இரண்டில் குழம்பி எதைப் பயன்படுத்துவது என்று தெரியாமல் அவ்வப்போது கைக்கு எது வருகிறதோ அதை எழுதிவிடுகின்றனர். நம் கல்வி முறையில் 'விவரி' என்னும் சொல்லை அறியாதவர்கள் இல்லை. எந்த வினாத்தாளை எடுத்தாலும் நான்கைந்து வினாக்களாவது 'விவரி' என முடிந்திருக்கும். விவரி என்பது வினையடி. அதிலிருந்து விவரித்தல், விவரம் ஆகிய தொழிற்பெயர்கள் உருவாகின்றன.

விபரம் என்பதற்கு எது வினையடி? விபரி எனச் சொல்வது எப்படிப் பொருந்தும்? அப்படிச் சொன்னால் 'விபரீத'மாகிவிடும். ஆகவே விவரி, விவரித்தல், விவரம் எனபவையே சரியானவை. விவரமானவர்களுக்கு விளங்கும். 'தன்விவரக் குறிப்பு' என்பதைச் சுருக்கித் 'தன்விவரம்' எனப் பயன்படுத்தலாம். முடிந்த அளவு செறிவாகவும் நீளம் குறைவாகவும் இருக்கும் கலைச்சொற்கள் வழக்கில் நிலைபெறும்.

http://www.perumalmurugan.com/search/label/தமிழ்%20அறிக?updated-max=2011-01-19T05:50:00%2B05:30&max-results=20&start=14&by-date=false

சுயவிவரக் கோவை என்றும் பயன்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுய விவரக் குறிப்பு  / கோவை...! என்றும் எழுதப் படுகின்றது  கிருபன் , இதுவும் சரிதானே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுய விவரக் குறிப்பு  / கோவை...! என்றும் எழுதப் படுகின்றது  கிருபன் , இதுவும் சரிதானே...!

ஆமாம்.

இதுவரை தமிழில் எழுதப்பட்ட கோவை/குறிப்பு எதையும் நான் கண்டிருக்கவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அறிக - 3

சுயமும் தகைமையும்

Bio-data என்பதைச் 'சுயவிவரம்' எனவும் வழங்கலாமா என நண்பர் ராஜா கேட்டிருக்கிறார். 'சுயம்' என்பது சமஸ்கிருதச் சொல். சுயம், சுயம்பு, சுய சரிதை என இச்சொல் தமிழில் பல இடங்களில் பயன்படுகிறது. சுயம்பு என்பதைத் 'தான்தோன்றி' என மக்கள் வழங்குகின்றனர். 'தான்தோன்றி', தான்தோன்றிப்பயல்', 'தான்தோன்றித்தனம்' ஆகியவை வசையாகப் பயன்படுகின்றன. கரூரில் கோயில் கொண்டுள்ள சிவன் பெயர் 'தான் தோன்றீஸ்வரர்' (சுயம்புலிங்கம்). சரிதம், சரிதை, சரித்திரம் எல்லாம் 'வரலாறு' என்றானபின் 'சுயசரிதை - தன்வரலாறு' ஆகிவிட்டது. ஆகவே சுயம் என்பதைத் தமிழில் 'தன்' என்று பயன்படுத்துவது பொருத்தம். சுயவிவரம் வேண்டாம்; தன்விவரம் நல்லது. தன்னைப் பற்றிய விவரம் என விரிந்து பொருள் தரும்.

இன்னொரு நண்பர் பாலாஜி 'தகைமை திரட்டி' என்னும் சொல்லை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தப் பயன்பாட்டை இப்போதுதான் அறிகிறேன். இந்தப் பயன்பாடு மிகவும் சிந்தித்தற்குரியது.

திரட்டு என்பது பெயராக நம் மரபில் வழங்கி வருகிறது. தனிப்பாடல் திரட்டு, பன்னூல் திரட்டு என்பன உண்டு. சமீபத்தில் ப. சரவணன் பதிப்பில் 'அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு' வெளிவந்திருக்கிறது. திரட்டு எனில் தொகுப்பு எனப் பொருள். சிதறிக் கிடப்பவற்றைத் திரட்டித் தருவதால் திரட்டு. மிகப் பழைய காலத்தில் இதைத் 'தொகை' எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 'திரட்டி' என்பது புதிதாக ஆக்கப்பட்டிருக்கிறது. இணையத்தில்தான் இது பயன்படுகிறது என நினைக்கிறேன். சுட்டி, காட்டி ஆகியவை பெயராக ஏற்கனவே பயன்படுகின்றன.

திருக்குறளிலேயே 'தகைமை' இருக்கிறது. 'கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்' என்பது குறள். தகைமை என்பதற்குத் தகுதி, பெருமை, அழகு, மதிப்பு எனப் பல பொருள்களைத் தமிழ்ப் பேரகராதி தருகிறது. 'தகைமை திரட்டி'யில் தகுதி எனப் பொருள்படும். தகுதிக்கு உரியவற்றைத் திரட்டித் தருவதால் 'தகைமை திரட்டி' என்பது மிகவும் பொருத்தம். தகைமைசால் பெரியோர் முதலிய ஓரிரு இடங்களில் மட்டுமே இச்சொல் இன்று அருகிய வழக்காகப் பயன்படுகின்றது. ஆகவே 'தகைமை' என்பதையே Bio-data வுக்குக் கலைச்சொல்லாகப் பயன்படுத்தலாம். திரட்டியைச் சேர்க்கத் தேவையில்லை.

ஆனால் 'தன்விவரம்' ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கிறது. தன்விவரத்திற்குப் பதிலாக அருகியதும் பொருத்தமானதுமான 'தகைமை'யை வழக்கிற்குக் கொண்டு வர இயலுமா? தமிழர்களைப் பொருத்தவரை மொழி உணர்வு மிகக் குறைவு. ஏற்கனவே வழக்கில் உள்ளதும் சட்டெனப் புரிவதுமான சொல்லையே பயன்படுத்தத் தயங்குகிறார்கள். 'தகைமை'யை ஏற்று வழக்கிற்குக் கொண்டு வர முடியுமா? முடிந்தால் மிகவும் நல்லது. அருமையான கலைச்சொல் ஒன்றை நம் மரபிலிருந்து பெறுவதாகவும் அச்சொல்லுக்கு மீள்வாழ்வு கொடுத்து அதைத் தக்க வைத்துக் கொள்வதாகவும் இச்செயல் அமையும்.

http://www.perumalmurugan.com/2011/01/3.html

Link to comment
Share on other sites

  • 5 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.