Jump to content

அம்மா ...!!!


Recommended Posts

அம்மா ...!!!

பெண்களை கொண்டாட ஆயிரம் காரணம் தேவையில்லை இந்த ஒரு வார்த்தை போதும் " அம்மா "

இது அண்மையில் நான் படித்ததில் பிடித்த வசனம்.

எனக்கும் நான் பிறக்கும் போது கிடைத்த வரங்களில் இந்த உருவத்துடன் என் அம்மாவும் ஒன்று. இன்று நான் அம்மாவை பற்றி ஒரு கட்டுரையை எழுதுகிறேன் என்றால், அதற்கு பின்னும் அந்த மனுசி தான் இருக்கிறா.

நான் நடை பழகி, ஆரம்ப கல்வி கற்கும் நாட்களில், ஒருமுறை எனது சைக்கிளின் திறப்பை தொலைத்துவிட்டு, வீட்டுக்கு வர பயத்தில் அம்மாவின் நண்பி ஒருவரின் வீட்டிலேயே அழுது கொண்டிருந்த வேளை, வந்து கட்டி அணைத்து, இதுக்கெல்லாம் பயபிடுவதா என்று கூட்டி சென்றா ..அன்று அவ தந்த அந்த தன்னம்பிக்கை , என்னை பின்னர் ஒரு நாளில் பயம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு, எறிகணைகளின் நடுவே நெஞ்சை நிமிர்த்தி நிற்க வைத்தன.

புலமைப்பரிசில் பரீட்சையாகட்டும், பாடசாலைகளுக்கான தேர்வு பரீட்சைகளாகட்டும், கோயில்களிலே இடம்பெறும் சைவ சமய பரீட்சைகளாகட்டும் என்னை கூட்டி சென்று முன்னிறுத்தி, அந்த பரீட்சைகள் முடியும்வரை காத்திருந்து எனது ஆரம்ப கல்வியை,எனது வாழ்விற்கான அத்திவாரத்தை திடமாக நிலை நிறுத்திய பெருமை இந்த உலகத்தில் ஒருவருக்கே சேரும் என்றால் அது எனது அம்மாவுக்கு மட்டும் தான்.

இது ஏதோ புலமைப்பரிசில் பரீட்சைக்கு என் அம்மா என்ற தலைப்பில் எழுதும் கட்டுரையாக எண்ணிவிடாதீர்கள்.இது என் எண்ணம், இது என் உணர்வு, இந்த நிமிடத்தில் நான் எதை எண்ணுகிறேனோ அதை வார்த்தைகளால் வடிக்கிறேன். எழுதப்பட்டு திருத்தங்கள் செயப்பட்ட கட்டுரை அல்ல. இது அம்மாவை மனசிலே நிறுத்தி தோணுவதை எல்லாம் எழுதும் ஒரு கலை. இதை உங்களாலும் செய்யமுடியும். அதற்கு உங்கள் அம்மா உங்கள் உள்ளே இருக்க வேண்டும்.

எனது அம்மாவுக்கு ஏன் எல்லா அம்மாகளுக்குமே தனது மகன் தான் இந்த உலகத்திலேயே முதலாவதாக வரவேண்டும் என்ற எண்ணம், ஆசை, ஏன் ஒரு வெறி இருக்கும். அது என் அம்மாவுக்கும் இருப்பதில் தவறு இல்லைத்தானே. எப்பவுமே இலங்கையில் முதலாவதாக வரவேண்டும் என்பது தான் அவவின் ஒரே கனவு. அதில் புலமைப்பரிசில் பரீட்சையில் இலங்கையில் மூன்றவாதகவும், சாதாரண தர பரீட்சையில் இலங்கையில் பதினானன்காவதாகவும், உயர்தர பரீட்சையில் இலங்கையில் 82 ஆவதாகவுமே என்னால் வரமுடிந்தது. இருந்தாலும் என்னால் முடிந்ததை செய்து கொடுத்த திருப்தி என்னிடம் இருக்கிறது. அவவிடம் இருக்கிறதா என்று அவ என்னை பற்றி ஒரு கட்டுரை எழுதினால் தான் தெரியும்.

எங்கள் பரம்பரையில் ஒரு மருத்துவர் இல்லாத குறையை போக்க, என்னை மருத்துவ துறையில் படிப்பிக்க தான் என் அம்மாவுக்கு ஆசை, ஆனாலும் ஒரு வாய்ப்பு பார்த்தலில் நான் வெற்றி பெற்று, நான் விரும்பிய கணித துறையிலேயே கல்வி கற்று அவ விரும்பிய பொறியியலாளனாக என்னை மாற்றி கொண்டேன்.

எனது கணித அறிவையும், மனனம் செய்யும் திறமையையும் சின்ன வயசிலேயே தெரிந்து கொண்ட என் அம்மா என்னை ஊக்கபடுத்தி அந்த துறையில் இன்றும் யாவரும் போற்றும் ஒரு பொறியியலாளனாக மாறியதில் அவவின் பங்கு நிறையவே உண்டு.

எனக்கு சின்ன வயசில் அம்மாவில் நிறைய பிரியம். படுக்கும்போது அவவின் தலை மயிரை சுருட்டி கொண்டு படுப்பதில் இருந்து, வரிசைப்படி எழுதி வைத்த தேவராங்களை பாடி முடித்த பின்னர் கடவுளிடம் கேட்கும் வரங்களில் முதலாவதாக அம்மா நல்லா இருக்க வேண்டும் என்பதில் இருந்து, இந்திய ராணுவ காவலரணை கடக்கும்போது இந்து மகளிர் சந்தியில் சாலி மோட்டர் சைக்கிளில் அடிபட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் காணும் வரை எனக்குள் இருந்த வேதனையின் போதும் நான் அவவின் மேல் வைத்த பாசத்தை நானே தெரிந்து கொண்டேன்.

ஏனோ தெரியவில்லை எனது பின்னைய நாட்களில் அவவை பிரிந்தே இருக்கவேண்டிய காலத்தின் கட்டாயமாக எனது வாழ்க்கை மாற்றப்பட்டுவிட்டது. அந்த பிரிவு காலங்களில் நான் அவவை நிறையவே நினைத்ததுண்டு. சின்ன வயசிலே பிடிக்காத மரக்கறிகளை தூக்கி எறிந்த போது தெரியாத வலி, அம்மாவின் சாப்பாடு கிடைக்காத போது தெரிந்திருக்கிறது. எங்கள் வீட்டு முற்றத்திலே அம்மாவின் கையால் பழம்சோறு நிலவை பார்த்து கொண்டு சாப்பிட்டது, இப்போதும் நிலவை காணும் போது தோனுகிறது. மறுபடியும் சிறுபிள்ளை ஆக மாட்டோமா..???

கண்டதை திண்டால் வண்டியன் ஆவான், கண்டதை படித்தால் பண்டிதன் ஆவான். என் அம்மா சொல்லும் வசனங்களில் ஒன்று. அது எனக்கு நல்லாவே பொருந்தும். ஒரு கதை புத்தகம் படிக்க ஒரு ரூபாய் தந்து எனக்கு படிக்க வைத்தா. அதுவே பழக்கமாகி, அம்மாவின் வடிக்காத சோற்றையும், சோற்றுக்குள் வேகவைத்த முட்டையையும், அவியாத பருப்பையும் கூட எத்தனயோ நாட்கள் நான் சாப்பிட அந்த புத்தக வாசிப்பு தான் உதவியது என்றால் நீங்கள் நம்பவா போறீங்கள்.

இன்று நான் இப்படி எழுத கூட அந்த வாசிப்பு தான் எனக்கு உதவுகிறது.

சின்ன வயசிலே ஒரு நாள் தம்பிக்கு காய்ச்சல் என்று நாங்கள் வளர்த்த மாட்டை எங்கள் பனை வளவுக்குள் கட்டும் பொறுப்பு எனக்கு வந்தது. நான் அதை கொண்டு போய் கட்ட இடம் இல்லாமல், மூன்று வாழை மரத்தை சேர்த்து கட்ட, அது வாழையை புடுங்கி சென்று எங்கள் தோட்டத்தை எல்லாம் மேய்ந்து முடித்தது. அன்று முதல் என்னை புத்தக பூச்சியாக, உலக அனுபவம் இல்லாதவனாக எல்லோரும் பார்க்க தொடங்கிய போதும் என் அம்மா என்னை விட்டு கொடுக்கவில்லை.

இன்று இந்த கட்டுரை வாயிலாக அவவுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன், இன்று நான் வேலைசெய்யும் ஒரு சர்வதேச நிறுவனம், மூன்று நாடுகளை, அதில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வழிநடத்தும் ஒரு முகாமைத்துவ பொறுப்பில் என்னை நியமித்து இருக்கிறது. ஒரு மாட்டை வாழை மரத்தில் கட்டியவன், என்று நாடுகளை நிர்வகிக்கும் பொறுப்புக்கு உயர்ந்தமைக்கு என் அம்மா தான் காரணம்.

என்னை தனது அண்ணனை போல ஒரு பேராசிரியனாக பார்க்கும் எண்ணமே அவவுக்கு அதிகம் இருந்தது, நான் ஒரு விரிவுரையாளனாக இருந்த பொது அவவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் அன்றைக்கு நான் என் அம்மாவை போல, இனத்தில் இருந்த அவ்வளவு அம்மாவையும் நேசித்த காரணத்தால் அந்த வேலையை விட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதை என்னால் எந்த கட்டுரை எழுதியுமே என் அம்மாவுக்கு விளங்கபடுத்த முடியாது என்றும் எனக்கு தெரியும்.

எனது தம்பியின் இழப்புக்கு பின்னரும் தலை நிமிர்ந்து நிற்கும் என் அம்மாவுக்கு தலை வணங்குகிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ முடிவுகளை என் அம்மாவின் பேச்சினை கேட்காது நானே எடுத்திருக்கிறேன். ஏறத்தாள பதினைந்து வருடங்களின் பின்னர் என் அம்மாவை நான் சந்தித்தேன். எனக்கு நான் சின்ன வயசிலே கண்ட அம்மாவாக தான் தெரிந்தார். என்னை காணாத நாட்களில்,என்னை காண துடித்த நாட்களில், என்னை காணுவதற்காக விரதம் இருந்து நேர்த்தி வைத்து, காலிலே கல்லடித்து விரலை இழந்த நாட்களில் பட்ட வேதனையை எனக்கு சொன்னார்.

மீண்டும் தெரியாத காலத்துக்காக பிரியும் போதும் என்னிடம் ஒரு சத்தியம் வாங்கி கொண்டார், அவவிற்கான இறுதி கிரிகைகளை நான் தான் செய்ய வேண்டும் என்று. அது எனக்கு சத்திய வாக்காக இப்போதும் ஒலித்து கொண்டிருக்கிறது. எனக்கு என்ன நடந்தாலும் நான் வருவேன் என்பதை இத்தால் உறுதி கூறுகிறேன்.

ஒரு மகனாக என் அம்மாவின் அருகிலே நான் இருக்காவிட்டாலும், என் உணர்வுகளால் அம்மா எப்பொழுதுமே என்னுடன் இருப்பா . எனது வளர்ச்சியில் அவவின் பங்களிப்பு எப்பவுமே இருக்கும்.

என் அம்மா நீடுழி காலம் வாழ வேண்டும்.

என் அம்மா என்னிடம் தொலைபேசி வாயிலாக அடிக்கடி கேட்கும் வாக்கியம் என்னை அம்மா என்று கூப்பிடு என்று தான்.

இப்போது கூப்பிடுகிறேன்.

அம்மா ...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவை பொறுத்தவரை  வஞ்சகமில்லாது    எண்ணியதை  எண்ணிய படியே

 

எழுத வைத்த அந்த தாய்க்கு என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுக் காலையில்  எனது அம்மாவைப் பார்த்தபோது கொஞ்சம் உடல்நலக் குறைவாய் இருந்தா. அவ மருந்தே சாப்பிடமாட்டா , ஊரில் எப்பவாவது தமிழ் பரியாரியிடம்தான் போவா. மனைவி doliprane ஒன்று நீரில் கரைத்து குடுத்திருந்தாள் .நேற்று முழுதும் மனம் சரியில்லை . இன்று அம்மா பற்றி  தோனுறது ஏதாவது எழுதுவம் என்று சாமம் போல் ஒரு தலைப்பை எழுதி வைத்து விட்டு படுத்து விட்டேன்.

 

இப்ப நீங்கள் எழுதியதப் படித்த பொழுது நான் நினைத்த பல விடயங்கள் காண்கின்றேன். பார்க்க சுகமாய் இருந்தது. இதைவிட நான் எதை எழுத....!

Link to comment
Share on other sites

கருத்துக்களை பதிந்த விருப்புகளை அளித்த உறவுகளுக்கு நன்றி.

உண்மையில் அம்மா இருக்கும்போதே அவவுக்காக ஒரு புத்தகம் வெளியிடும் நோக்கில், அம்மாவின் சகோதரங்கள், நண்பர்கள், ஊரவர்கள், பிள்ளைகள், அவவின் மாணவர்கள் அனைவரிடமும் அம்மாவை பற்றி எழுத சொல்லியிருந்தோம். அதற்காக நான் எழுதியது தான் மேலே வந்த பதிவு.

இதை அவவுக்காக ஒரு முகநூலை திறந்து பதிவிடவும் எண்ணியுள்ளோம்.

உறவுகளே,ஒருவர் உயிருடன் இருக்கும்போதே, அவரைப்பற்றி எழுதி அந்த நூலை அவரின் கையால் வெளியிடுவது தான் சிறந்தது. அப்போது தான் வரலாறு திரிபுபடாமல் இருக்கும்.எங்களின் அன்பையும் பாசத்தையும் உரிமையோடு வெளிக்காட்டவும் முடியும்.

நீங்களும் உங்கள் அம்மாவுக்காக செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா எழுத வார்த்தைகள இல்லை......நன்றிகள் பகலவன்

Link to comment
Share on other sites

நன்றி புத்தன் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கட்டுரையில் உள்ள பல விடயங்கள் எனது வாழ்க்கையிலும்
நடந்துள்ளது என உணரும்போது உங்கள் அம்மாவையும் எனது அம்மாவாக நினைக்கத் தோன்றுகின்றது.
 

அம்மா !!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
எதையும் இலகுவாய் எடுத்து வெல்லும் சக்தி தம்பியே உனக்கு மட்டுமேயான தனித்துவம். நீ அடிக்கடி சொல்வது போல எது நடந்தாலும் எருமைபோலவே இருப்பாய்.  ஆனால் உனக்குள்ளும் ஈரம் நிறைந்த பாசம் நிரம்பியிருப்பதை சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். 
 
அம்மாவை குடும்பத்தை பிரிந்து உன் அம்மாபோன்ற ஆயிரக்கணக்கா அம்மாக்களின் அக்காக்களின் உரிமைகள் மீட்க போன நீ மீண்டு வந்ததே பெருமைதான். உன் கல்நெஞ்சுக்குள்ளிருந்து அம்மாவுக்காக கசிந்த மையாகவே உனது அம்மாவிற்கான பகிர்வை பகிர்ந்திருக்கிறாய். 
பாராட்டுக்கள் என்று சொல்லி தள்ளி நிற்காமல் உன்னருகில் நின்று நானும் உன் அம்மாவை வாழ்த்துகிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா மேல் மரியாதை வைத்திருக்கும் எல்லா ஆண்களும் மற்றப் பெண்களை தன்ட அம்மா மாதிரி நினைக்கா விட்டாலும் பரவாயில்லை.பெண்களை,பெண்களாகவும்/சக உயிர்களாகவும் நினைக்க வேண்டும்...இங்கு வந்து கருத்தெழுதின,பச்சை குத்தின ஆண்கள் தாங்கள் உண்மையிலே பெண்களை எப்படி நடத்தினோம்,நடத்துகிறோம் என்பதை மனச்சாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்

Link to comment
Share on other sites

அம்மா மேல் மரியாதை வைத்திருக்கும் எல்லா ஆண்களும் மற்றப் பெண்களை தன்ட அம்மா மாதிரி நினைக்கா விட்டாலும் பரவாயில்லை.பெண்களை,பெண்களாகவும்/சக உயிர்களாகவும் நினைக்க வேண்டும்...இங்கு வந்து கருத்தெழுதின,பச்சை குத்தின ஆண்கள் தாங்கள் உண்மையிலே பெண்களை எப்படி நடத்தினோம்,நடத்துகிறோம் என்பதை மனச்சாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்

 

அட.. இப்பதான் பச்சை குத்தினேன்.. :D இதை முதலே வாசித்திருந்தால் எஸ்கேப் ஆகியிருப்பேன்..  :wub:  :lol:

Link to comment
Share on other sites

கருத்துகளை பகிர்ந்த வாத்தியார், சாந்தி அக்கா, ரதி, இசைகலைஞன் ஆகியோருக்கும் விருப்புகளை அளித்தவர்கக்கும் நன்றி.

என் அம்மாவை தங்கள் அம்மாவாக நினைத்து வாழ்த்திய உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

எழுத்தில் அடக்க முடியா காவியம் அம்மா ..அருமையான மீள் நினைவு வாழ்த்துக்கள் பகல் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.