Jump to content

யாரும் சொல்லமாட்டார்களா....


Recommended Posts

லண்டனுக்குள் என் வீடு...

என் வீட்டுக்கு முன்பாக...ஒரு

பேரூந்து தரிப்பிடம்..

நான் வேலைக்கு

செல்லும் நேரங்களில்..

அந்த சோதரி..

அங்கே.. பேரூந்துக்காக

காத்திருப்பாள்..

ஒழுக்கமான.. உடை..

நீறிட்ட நெற்றி..

மண்வாசனையோடிருப்பாள்...

ஒரு காத்திருப்பின் போது

சில காலிப்பையன்கள்..

சுற்றிக் கலாட்டா..

கலங்கிக்கொண்டிருந்தாள்..

நானும்..என்

நண்பனும்..அவர்களை...

விரட்டியதும்..

நன்றி அண்ணாவென்றாள்..

தினசரி சிரிப்பாள்..

வணக்கம் சொல்லுவாள்...

காலம் போய்க்கொண்டிருந்தது..

ஆடை மாறிக்கொண்டிருந்தது..

அலங்காரம் கூடிக்கொண்டிருந்தது...

நவநாகரீக நங்கையானாள்..

ஒருபோது..வைபத்தில்..

மது அருந்திக்கொண்டிருந்தாள்....

அருவருப்பையும்...

முகம் சுளிப்பையும்..

சில பெண்கள் பெருஞ்சிரமத்துடன்...

விழுங்கிக்கொண்டிருந்தார்கள

Link to comment
Share on other sites

  • Replies 125
  • Created
  • Last Reply

விகடகவி அந்தபெண் அப்படி என்ன செய்hவிட்டாள் இப்ப வெள்ளைகாரனோடு சுத்தி தண்ணியடிச்சா இது பெரிய குற்றமா?? ஏன் இங்கு தமிழன்கள் யாரும் வெள்ளை காரிகளோடு சுத்தி தண்ணியடித்ததே இல்லையா?? அதை தமிழிச்சி செய்தால் மட்டும் உடைனே குத்துதா?

Link to comment
Share on other sites

மன்னிக்கனும் சாத்திரி...

உங்களை மாதிரி

மனபக்குவம்..

எனக்கு வராதென நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி அந்தபெண் அப்படி என்ன செய்hவிட்டாள் இப்ப வெள்ளைகாரனோடு சுத்தி தண்ணியடிச்சா இது பெரிய குற்றமா?? ஏன் இங்கு தமிழன்கள் யாரும் வெள்ளை காரிகளோடு சுத்தி தண்ணியடித்ததே இல்லையா?? அதை தமிழிச்சி செய்தால் மட்டும் உடைனே குத்துதா?

யதார்த்தமாக எமது வாழ்வியல் முறையோடு தங்கள் கருத்தை இணைத்துப்பார்த்தால் தங்களுடைய கருத்து ஏற்கக்கூடியது அல்ல. அது உங்களுக்கும் தெரியும்.. சும்மா விதண்டாவதம்போல் தான் தென்படுகிறது.

இதில் யார் அவ்வாறு செய்தாலும் பிழைதானே தவிர பெண் ஆண் என்றது அல்ல பிரச்சனை..

தங்களுடைய கருத்து இருபாலாரையும் ஊக்குவிப்பதுபோல் உள்ளது..

Link to comment
Share on other sites

கொஞ்சக் காலமா யாழ்க்களம் அமைதியான நீரோடையா இருந்தது. இப்ப எந்தப் பக்கம் போனாலும் சூறாவளியாக்கிடக்கு

:):):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சக் காலமா யாழ்க்களம் அமைதியான நீரோடையா இருந்தது. இப்ப எந்தப் பக்கம் போனாலும் சூறாவளியாக்கிடக்கு

:):):lol:

வாழ்க்கையொன்றும் பூந்தோட்டம் அல்ல.. அது ஒரு போராட்டம்.

:)

Link to comment
Share on other sites

வாதாட்டங்கள் இல்லாமல்

நியாயமில்லை..

போரயட்டங்கள் இல்லாமல்

வெற்றியில்லை...

கண்ணில் விழுந்த சம்பவத்தை..

மனதில் தோன்றிய வேதனையை எழுதிவிட்டேன்..

அது சாத்திரியை எவ்வித்தில் கோபமுற வைத்ததென தெரியவில்லை..

நான் பெண்ணைத் தாக்கியோ..

ஆணை ஆதரித்தோ பேசவில்லை..

தவறு..

யார் இழைத்தாலும் தவறுதான்..

தவறை கண்டுகொள்வதும்..

வந்து சொல்வதும் தவறென்றால்..அது

சரியல்லவே...

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை நாங்கள் கட்டாய்படுத்தி அடக்கி வைத்திருக்கிறோம் போல கிடக்கிறது அது தான் வெளிநாடுகளில் நம்மவர்கள் வந்தவுடன் இப்படியான செயல்களும் நடைபெறுகின்றன விவாகாரத்து வீதங்களும் இங்கு தான் அதிகம் இதில நாங்கள் குறை சொல்ல முடியாது அப்படி வாழ நினைப்பவர்கள் வாழலாம் ஒழுங்காக வாழ நினைப்பவர்களும் வாழலாம்.தனி மனித சுகந்திரம்.இதை நாம் நாட்டின் குறை என்று கூறமுடியாது ஒவ்வொரு தனிபட்டவரின் புத்தி..

Link to comment
Share on other sites

ஆமாம்..

இந்த நாட்டின் சுதந்திரம்தான்..

12 வயது பள்ளி மாணவி குழந்தை பெறும் நிலைக்கு

கொண்டு சென்றுவிட்டிருக்கிறது. monday(yesterday) 10pm..channel 4இல்

programme(about bad behaving of 11 -15yrs children )

அதிலே.. கல்லூரி அதிபர் முதல்..ஆசிரியர்..பெற்றோர் அனைவருமே.... வருத்தம் நிறைந்த பேட்டிகள்..

சுதந்திரம் தந்த பரிசு

பிறகென்ன இவற்றையும் கூட சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே..

தாய்...தந்தை..ஆசான்.. புத்தியால்தான்...

சுயபுத்தி வரும்..

இல்லையேல் முதல்கோணல் முற்றுங்கோணல்தான்...

Link to comment
Share on other sites

சுதந்திரம் என்ற பெயரில் சூதும் தந்திரமும் தான் இங்கு நடந்துகொண்டிருக்கின்றன. உங்கள் வரிகள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. உண்மையாக நடந்திருக்கின்றது என்னும் போது மனம் கொஞ்சம் கலங்கத்தான் செய்கின்றது.

சாத்திரியின் கருத்திலிருந்து நான் வேறுபடுகின்றேன். விகடகவி தான் பார்த்த ஒரு சம்பவத்தை எழுதியிருக்கின்றார். தமிழ்க் கலாச்சாரத்தின் சீரழிவுக்கு பெண்கள்தான் காரணம் என்ற ஒரு கட்டுரை எழுதவில்லை. எனவே அவரைக்குற்றம் சொல்வது முறையில்லை.

Link to comment
Share on other sites

ம்...காலம் கலிகாலம் .... கவிதை தங்கள் மனதை நெருடிய ஒரு காட்சி.... எனது மனதையும் நெருடியது.... நன்று இணைந்திருங்கள்.... :D

Link to comment
Share on other sites

கொஞ்சக் காலமா யாழ்க்களம் அமைதியான நீரோடையா இருந்தது. இப்ப எந்தப் பக்கம் போனாலும் சூறாவளியாக்கிடக்கு

:D:lol::lol:

ஹாய் ஆதி

எல்லாம் உங்கள் வால் பண்ணிய வேலை...

ஆதியைப்பார்த்து எல்லோரும் வால் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்... :D

Link to comment
Share on other sites

ஒரு சோகமான உணர்வை உங்கள் கவிவரிகளால் நம்முடன் பகிர்ந்து இருக்கின்றீர்கள். ஒரு பெண்ணின் வாழ்வு உங்கள் கண்ணுக்கு முன் அழிந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கின்றீர்கள். மிகவும் வருத்தமான விடயம் தான். ஆனாலும் அந்த பெண்ணுக்குள்ளும் என்ன பிரச்சனையோ?

Link to comment
Share on other sites

சிலருடைய.. வாழ்வியல்

இசைவாக்கம்.. மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது....

இன்னும் நம்மில் பலரும் நம் கலாச்சாரம்.. பண்பாட்டில் நம்பிக்கை

வைத்திருப்பதையிட்டு....நாங்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுபது வயது கிழவிகூட ஆறுமுழ சேலையை விட ஜீன்ஸ் தான் வச்தி யாக இருக்குது என்று சொல்லுதுகள்........இந்த இலட்ச்சனத்தில கலாச்சாரம் பண்பாடு??????????

Link to comment
Share on other sites

விகடகவி உங்கள் மனதை பாதித்த விடயத்தை கவிதையா எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இந்த விடயத்தை ஒரு கதையாக எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறன்.

மற்றது கலாச்சாரம் பண்பாடு என்றுறது அவையவைண்ட மனசில இருக்கணும். நான் காலாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறன் எண்டதுக்காக இந்த குளிருக்கு ஏற்ற உடுப்பு போடாமல் சாறியைக் கட்டிக் கொண்டு போக ஏலுமோ?? அந்த அந்த நாட்டுச்சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறத்தான் வேணும். அதுக்கா அந்த பெண் செய்தது போல் இல்லை.

Link to comment
Share on other sites

அறுபது வயது கிழவிகூட ஆறுமுழ சேலையை விட ஜீன்ஸ் தான் வச்தி யாக இருக்குது என்று சொல்லுதுகள்........இந்த இலட்ச்சனத்தில கலாச்சாரம் பண்பாடு??????????

இப்ப என்ன சொல்ல வாறியள் புத்தன். அப்ப புத்தன் நீர் சிட்னில கலாச்சாரத்தை காப்பாற்றுரன் எண்டு வேட்டியோடையோ திரியுறீர்???

:evil: :evil: :evil: :evil: அந்தப் பெண் சொன்னதில் என்ன தப்பு. நானும் சொல்லுறன் நான் இருக்கிற நாட்டுக்கு சாறியை விட பான்ட்ஸ் தான் வசதியாக இருக்கு. இதையே ஊருல இருக்கிற ஒரு பெண்ணிடம் கேட்டீர்கள் என்றால் சாறி தான் வசதி ஏண்டு சொல்லுவா ஏன் என்றால் அங்கத்தை சூழல் அப்படி? எங்க இருந்தால் என்ன அந்த சூழலோடை தானே ஒன்றி வாழ முடியும்.

Link to comment
Share on other sites

நல்ல கவிதை.

நாம் வாழும் நாடுகளின் நடை உடை பாவனை சட்ட திட்டங்களுக்கேற்ப எங்கள் வாழ்க்கை முறையை அமைத்துகொள்வது அந்தந்த நாட்டு மக்களுடன் ஒத்து வாழ்வதற்குரியது.

கலாசாரம் பண்பாடு என்பது பழக்கவழக்கம் ஒழுக்கம் போன்ற பலவிடயங்கள் சம்மந்தபட்டது.

இரண்டையும் போட்டு குழப்புவதாலேயே இந்த சீர்கேடுகள்.

Link to comment
Share on other sites

நல்லவேளை.... நான் விகடகவி மாதிரி யோசிக்க தேவை இல்லை...! எனக்குத்தான் கல்யாணம் ஆகீட்டுதே..!

Link to comment
Share on other sites

நல்லவேளை.... நான் விகடகவி மாதிரி யோசிக்க தேவை இல்லை...! எனக்குத்தான் கல்யாணம் ஆகீட்டுதே..!

ஓ... தலயா....

என்ன தல

இப்பிடி மாட்டிவிட்டுட்டீங்க.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்ல வாறியள் புத்தன். அப்ப புத்தன் நீர் சிட்னில கலாச்சாரத்தை காப்பாற்றுரன் எண்டு வேட்டியோடையோ திரியுறீர்???

:evil: :evil: :evil: :evil: அந்தப் பெண் சொன்னதில் என்ன தப்பு. நானும் சொல்லுறன் நான் இருக்கிற நாட்டுக்கு சாறியை விட பான்ட்ஸ் தான் வசதியாக இருக்கு. இதையே ஊருல இருக்கிற ஒரு பெண்ணிடம் கேட்டீர்கள் என்றால் சாறி தான் வசதி ஏண்டு சொல்லுவா ஏன் என்றால் அங்கத்தை சூழல் அப்படி? எங்க இருந்தால் என்ன அந்த சூழலோடை தானே ஒன்றி வாழ முடியும்.[/

அதை தான் நானும் சொல்லுகிறேன் வசதி சூழ்நிலைகேற்ப கலாச்சாரம் பண்பாடு எல்லாம் மாறிவிடும் இங்கே ஜீன்ஸ் போட்டது இலங்கைக்கு போய் அரைகாற்சட்டையோடு நிற்கிறது இதுக்கு என்ன சொல்லுகிறீர்

:?: :?:

அது சரி நான் 60 வயது கிழவியை பற்றி தான் சொன்னனான் நீங்க ஏன் கோவிக்கீறிங்க

:):(:(

:(:(:(:(:(

Link to comment
Share on other sites

விகடகவி நன்றாக சொன்னீர்கள் உங்கள் மனவுணர்வு புரிகின்றது. தொடர்ந்து இணைந்து இருங்கள். வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.