Jump to content

யாருக்கு துரோகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேலை முடிந்து வழமையாக வீடு செல்லும் பாதையால் பராக்கு பாாத்த படி சென்று கொன்டிருந்த வாசனை வணக்கம் என்ற ஒரு பெண்  குரல்  இடை  மறித்தது.நிமிர்ந்து பார்த்தவன் தானும் ஒரு வணக்கத்தை உதிர்த்து  விட்டு  நடையை தொடர்ந்தவனை  உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும் என்ற வாாத்தை தடுத்தது.

நின்றவன் ஒரு கணம் தாறுமாறாய் குழம்பி தெளிந்தான்

 

.அது வேறுயாரும் இல்லை அவனது நன்பன் கரனின் மனைவி தான்.குழப்பத்துக்கு காரணம் வழமையாக வணக்கத்துடன் போறவா இன்று கதைக்க வேணும் என்று சொன்னது தான்.தான் அவாகளிடம் கடணாக வாங்கிய பணம் ஞாபகம் வர தெளிந்தான்.

ஓம் சொல்லுங்கோ அக்கா என்றவன் தவனைசொல்வதற்க்குஅவசரமாக வசதியான திகதியை தேடிக்கொன்டிருந்தான்.வாசன் நீங்கள்  அந்தக்காசை கரனிடம் கொடுக்க வேண்டாம் என்னிடம் தாங்கோ அதையும் ஆறுதலாக தாங்கோ என்றவ வாசனுக்கு எந்த அவகாசமும் வழங்காமல் தானே தொடர்ந்தா.

 

வாசன்
உங்களுக்கு தொியுமே கரன் ஊருக்கு போய் கலியானம் கட்டிப்போட்டு வந்திட்டார்.இனியும் அவரை நம்பி ஏமாற நான் தயார் இல்லை. வீட்டிலை ஒரே சன்டை நாலு தரம் பொலிசிலும் பிடிச்சு குடுத்திட்டன்.என்று இன்னும் அவா தொடர

வாசனுக்கோ தலைக்கு மேல் மிக அருகில் காத்தாடி  சுழல ஆரம்பிச்ச மாதிரி ஒரு உணர்வு வர மெல்ல காய் வெட்டிக்கொன்டு இடத்தை காலி பண்ணினான்

 

.இப்போதைக்கு
காசு குடுக்க தேவையில்லை என்ற அற்ப்ப ஆறுதல் ஒரு பக்கமும் கரன் இப்படி செய்திருப்பானோ என்ற குடைச்சலும்
சோ்த்து அலைக்களிக்க பக்த்திலிலந்த கடைக்குள் நுளைந்தான்

அங்கு போய் நாலு பியரை வாங்கிக்கொன்டு பக்கத்திலிருந்த புங்காவை நோக்கி நடந்தவனின் மனதில் கரன்.

 

அப்படி ஒன்றும் பொிய நட்ப்பு இல்லை என்றாலும் இருக்கிற நாலைந்து நன்பர்களில பத்தோடு பதினொன்று காதலித்து திருமணம் முரட்டு சுபாவம் இப்ப இரன்டு பிள்ளைகள்.

அவனவன் ஒன்டுக்கே பஞ்சாய் பறக்கிறான் இவனுக்கு சின்ன வீடு வேறை என்று ஒரு கற்ப்னை குதிரைக்குட்டி எட்டிப்பாக்க
நாலு தரம் பொலிஸ் பிடித்து குளிருக்கை கரனை விட்டது நிநைவுக்கு வர குதிரைக்குட்டி வந்த வேத்திலேயே பறந்திட்டுது.ஒரு ஒதுக்குப்புறமாய் இருந்து பியரை எடுத்து திறக்க கை பேசி கன்டாங்கி கன்டாங்கி  என்று சிணுங்கியது.
கொஞ்சம் தாமதமானாலும் இவளவை தொடங்கிடுவாளவாய் என்று மனைவியை செல்லமாக திட்டியவாறு
கைபேசியை எடுத்து பாத்தவனுக்கு பியர் திறக்காமலையே தலை கிர்ர்ர் என்றது.

 

 

இன்னும் வரும் :)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ படிக்கும் ஆவலுடன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைபிரியன் தொடருங்கோ...சின்னவீடு செட் பண்ணுகிற டெக்னிக் எதாவது தெரிந்தால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதியவர்களுக்கும் பச்சை முலம் என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் மிக்க நன்றிகள்.  :)

Link to comment
Share on other sites

இது ஏதோ வில்லங்கமான கதையா இருக்கும்போல இருக்கு..  :wub: நானும் ஆவல்.. :D

Link to comment
Share on other sites

தொடருங்கள் சுவைப்பிரியன்...

 


அவனவன் ஒன்டுக்கே பஞ்சாய் பறக்கிறான் இவனுக்கு சின்ன வீடு வேறை என்று ஒரு கற்ப்னை குதிரைக்குட்டி எட்டிப்பாக்க

 

இந்த வயிற்றெரிச்சல் வராமல் இருக்குமா என்ன... சேம் பிளட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தருக்கும் நீங்கள் துரோகம் செய்யேல்லை
பணம் உங்கள் கையில் இருக்கும் வரை லாபம் தானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், சுவைப்பிரியன்..!

 

கதையின் முடிவு, எக்கச்சக்கமாய் ஆரையும் மாட்டிவிடுகிறமாதிரி இருக்கும் வரையும் நமக்கு ஒக்கே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கள் சுவைப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞசம் நேரப்பற்றாக்குறை விரைவில் அடுதடத பகுதி வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாசிக்க ஆவல்.

Link to comment
Share on other sites

கைபேசி கன்டாங்கி கன்டாங்கி  என்று சிணுங்கியது.

கொஞ்சம் தாமதமானாலும் 'இவளவை தொடங்கிடுவாளவாய்' என்று மனைவியை செல்லமாக திட்டியவாறு

கைபேசியை எடுத்து பாத்தவனுக்கு பியர் திறக்காமலையே தலை கிர்ர்ர் என்றது.

எழுத்து நடை பல சின்னவீடுகளைத் தாண்டிச் செல்வதை உணர்த்துகிறது. சுவைப்பிரியன் என்றால் சும்மாவா..! உங்கள் காட்டில் மழை. வாழ்த்துக்கள்!! தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலை பேசியில் கரன்.எடுத்த எடுப்பிலேயே அந்தக்காசை என்னட்டை தான் தர வேணும்.அல்லாட்டால் வீண் பிரச்சனை வரும் என்று வெடித்தான்.இது வாசன் எதிர் பாத்ததுதான்.அது பிரச்சனை இல்லை உன்னிடம் தானே தர வேணும் அது தானே முறை என்று சொல்லி வைத்தான் வாசன்.கிழிஞ்சுது இவங்கடை பிரச்சனையால நான் இப்ப டபிளா கொடுக்க வேண்டி வருமோ என்று யோசித்த படியே பியரை உறுஞ்சினான்.

 

அடுத்த சில தினங்களில் கரனை நோில் சந்திக்கும் வாயப்பு கிடைத்தது வாசனுக்கு.என்னடாப்பா உன்ரை மனிசி இப்படி ஒரு குண்டைத்துக்கிப்போடுது என்று கேட்டான் வாசன்.ஒமடாப்பா ஊரிலை போய் மகளின் சாமத்திய வீடு செய்தனான் எல்லோ அப்ப வந்த தொடர்பு அது மனிசிக்கும் சாடைமாடையாய் தொியும் என்று அவனும் வஞ்சகம் இல்லாமல் கொஞ்சம் பொிய குண்டாய் துக்கிப்போட்டான்.அப்ப வாற கிழமை நடக்கப்போற உன்ரை மகளின் பிறந்த நாளுக்கு என்ன செய்யப்போறாய் எனறு கேட்டான் வாசன்.அவளைப்பற்றிக் கதைக்காதே அவள் தானே பொலிசுக்கு அடித்தது அல்லாட்டி மனிசிக்கு உதுக்கெல்லாம் பாசை தொியுமே என்றவன் தனிய நின்டு செய்யட்டும் என்று பொருமினான்.

 

அடப்பாவிகளா மனிசிக்கு பாசை தொியாததை எப்படி எல்லாம் பயன் படுத்துறாங்கள் என்று நினைத்துக்கொன்டு அப்ப பொலிஸ் உன்னை எங்கை கொன்டு போனது எனறு விடுப்பினான்.வாசன்.அவங்கள் என்ன 5 ஸ்ரார் கொட்டலுக்கே அனுப்புவாங்கள் வீட்டில நிக்ககுடாது எங்கையாவது போய்த்துலை என்று கலைத்து விட்டாங்கள் அந்த சாமத்தில எங்க போறது. நேசனுக்கும் கமலுக்கும் போன் அடித்தேன் அவங்கள் எதுக்கும் நீ நாளைக்கு வா என்று மறை முகமாய் மறுத்திட்டாங்கள் துரோகிகள்.என்றவன் அநதக்குளிலருக்குள்ள காருக்குள்ள தான் படுத்தனான் என்றான் கரன்.ஆக இரன்டுக்கு ஆசைப்பட்டால் கடைசியில ஒன்டும் இல்லாமல் காருக்குள்ள தான் படுக்க வேணும் என்ற உலக மாகா உண்மை புரிய குடவே மனைவியின் ஞாபகம் வந்தவனாய் அப்போதைக்கு கரனிடமிருந்து விடை பெற்றான் வாசன்.

 

அடுத்த கிழமை அப்பன் இல்லாமல் நடந்த மகளின் விழாவின் முலம் இந்த வள்ளி தெய்வானை பிரச்சனை  சுற்று வட்டாரத்தின் பேசுபொருள் ஆனது.அப்படியாம் ஒமாம் என்ற பெண்களின் குசுகுசுப்பும் அவன் சுழியனடா அவனுக்கு மச்சமடா என்ற ஆண்களின் அங்கலாய்புடனும் அடுத்த சில தினங்கள் நகன்றன.தாயுடன் பாதையை கடக்கும் போது தனது பொம்மையை தவற விட்ட குழந்தைக்கு அதை எடுத்து கொடுத்து விட்டு நிமிர்ந்த வாசன் கையில் ஒரு கடிதத்துடன் கரன் நிற்பதைக்கண்டு அவனிடம் சென்றான்.டேய்  நீதிமன்றத்தில் இருந்து கடிதம் வந்திருக்கு.நாளை மறுநாள் விசாரனையாம் எனக்கு அவசரமாய் ஒரு வக்கீல் ஒழுங்கு பண்ண வேண்டுமடா என்று  படபடத்தான் .எனக்கு பொிசாய் ஒருத்தரையும் தொியாது நீ தேவனைக்கேள் அவனுக்குத் தொிந்திருக்கும் என்று சொல்லி முடிக்க முன்பே தேவன் வீடு நோக்கி பறந்தான் கரன்.

 

தேவனும் ஒரு நாள் தவனையில் வக்கீலை ஒழுஙகு பண்ணி கொடுத்து கரனின் மனைவி மற்றும் மகளிடமிருந்து துரோகிப் பட்டத்தை வெற்றிகரமாக பெற்றுக்கொன்டான்.நீதிமன்ற விசாரனையில் மறந்து மன்னித்து சோ்ந்து வாழப் போகீறீர்களா என்றதுக்கு மனைவி அது கனவிலும் நடக்காது என்று சொல்ல பிரிவு என்று தீர்ப்பானது. இந்தப்புடுங்குப்பாடால வாசன் கொடுக்க வேண்டிய காசு காலவரையறை இன்றி பிற்போடுப்பட்டு விட்டது என்று நினைத்துக்கொன்டிருந்தவனின் எண்ணத்தில் மண்ணை போட்டது அவர்களின் அடுத்த சந்திப்பு

 

.இனி அந்த ஏரியாவில இருக்க ஏலாது இங்க  சின்ன வீீடாய் ஒன்று பாரடா என்று வந்து நின்றான் கரன்.அதுக்கு அட்வானஸ் கொடுக்க உன்ரை காசைத்தான் நம்பியிருக்கிறேன்.என்றான்.
என்னடா மீன்டும் சின்ன வீடா உதால தானே இவளவு பிரச்சனையும் என்று கேட்டு சின்ன வீடு பற்றிய விடுப்புக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தான் வாசன்

.
அடுத்து வந்த மாதங்கள் எல்லாம் தனி வாழக்கை என்பதால் கரனின் ஓய்வு நேரங்கள் பெரும்பாலும் வாசனுடனே கழிந்ததால் தேவைக்கும் அதிகமாகவே தகவல்கள் கிடைத்தன வாசனுக்கு. நான் அவளை வேலையால் நிற்பாட்டிப்போட்டன்.ஒருக்கா இங்கை ஸ்பொன்சரிலையாவது அழைத்து முன்னால மனைவிக்கு கடுப்பேத்த வேணும் .அதுக்குரிய அலுவல் எல்லாம் நடக்குது அவளும் தன்னிடம் உள்ளதை அடைவு வைத்து கட்ட வேண்டிய காசெல்லாம் கட்டிப்போட்டாள்.முந்தி தான் ஒழிச்சு மறைச்சு கதைக்க வேணும் இப்தானே என்ரை முன்னால் லைனை கிளியராக்கிப் போட்டாள்.என்றெல்லாம் தனது சாதனைகளை அடுக்கும் போது வாசனும் தனது பங்கிற்க்கு அப்ப அவாவிற்கு்கு ஊரில உள்ள உறவுகளால பிரச்சனை ஒன்டும் இல்லையோ என்று கேட்டான்.பிரச்சனை இல்லாமல் இருக்குமே அவளுடன் தாய் சகோதரங்கள கதைப்பது இல்லை நானும் முன்னால் மனிசியும் வாங்கிய வீட்டில தான் இப்ப இருக்கிறாள் என்றவன் நானும் அடுத்த வருடம் ஒரேயடியாய் அங்கு போய் விடுவேன் என்றவனை இடைமறித்த வாசன் ஒரு வேளை நீ அங்கு நிரந்தரமாக போனால் அவா உன்னை நிராகரித்தால் என்டு இழுக்க.அது கடைசி வரைக்கும் நடக்காது என்று உறுதியாய் மறுத்தான்.

 

எப்படியும் கிழமைக்கு இரன்டு நாட்கள் ஆவது சந்திப்பார்கள்.ஆனால் ஒரு கிழமை காண வில்லை இரன்டாவது கிழமையும் காண வில்லை வாசனும் தனது வேறு சோலிகளில் இருந்து விட்ட நிலையில் ஒரு நாள் எதிர்பாராமல் கரனை சந்தித்தவன் எங்கையடா கன நாளாய் கானவில்லை  ஊருக்கு போட்டாய் என்று நினைத்தேன்.என்ற வாசனை உணர்ச்சி இல்லாமல் பார்த்தவன் நான் இப்ப அவையோட எல்லோ இருக்கிறன் என்றவனின் நாக்கு வறன்டு இருந்தது.அப்ப பிரச்சனை எல்லாம் இப்ப சரியோ சந்தோசம் என்று விரைவாக விடை பெற்றவனுக்கு கொஞ்சம் தலை சுற்றுவது போல் இருந்தது

 

இவனால் இரன்டு பேருக்கு துரோகிப்பட்டம் இவனது முன்னால் ச்சா இன்னால் மனைவியால ஒருத்தனுக்கு துரோகிப்பட்டம்.இனி இவைக்கு என்ன நடக்கும்.எல்லாத்துக்கும் மேலால இவனை நம்பி தன்னையும் தனது வேலை தனது சிறு சேமிப்பு தனது உறவுகள் எல்லாத்தையும் இழந்த அந்த்பெண்ணுக்கு என்ன நடக்கும் எல்லாத்தையும் ஒன்டாய் யோசிக்க தலை எந்திரன் பாணியில் சுத்தியது.விளைவு தற்காலிய நிவாரனியுடன் அதே புங்காவிற்க்கு போய் ஒன்றை திறந்து வாய்க்கு கொண்டு போனவன் ஏதோ நினைவு வந்தவனாய் தனது அலை பேசியை
அணைத்து விட்டு பியரைக் குடிக்க தொடங்கினான்.

 

 

யாவும் கற்பனை இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைப்பிரியன் கதைகளும் நன்றாக எழுதுவார் என்று இப்போதுதானே தெரிகிறது பாராட்டுகள். ஆமா சயீவன்இப்படி கதாப்பாத்திரங்களை முடிவில்லாத அந்தர வழியில் விட்டு விட்டீர்களே....இந்தப்பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?????? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காவில இருந்து தண்ணி அடிச்சதில சுவைப்பிரியனுக்கு மிச்சக் கதை மறந்திட்டுது சகாரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலிக நிவாரணி எப்பவும் கைகொடுக்கும்   :D .....தற்கால கதைக்கு நன்றி சுவைப்பிரியன்  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதி : தண்ணியடிக்கும் போது  கட்டாயம் அலைபேசியை அணைக்க வேண்டும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் கதையை முடிக்க வேண்டும் என்ட அவசரத்தில் எழுதியிருக்கார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைப்பிரியன் கதைகளும் நன்றாக எழுதுவார் என்று இப்போதுதானே தெரிகிறது பாராட்டுகள். ஆமா சயீவன்இப்படி கதாப்பாத்திரங்களை முடிவில்லாத அந்தர வழியில் விட்டு விட்டீர்களே....இந்தப்பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?????? :blink:

நன்றிகள் சகாரா.அதுதான் சொல்லிட்டனே உண்மைச்சமபவம் என்று.உங்களை மாதிரித்தான் வாசனும் குழப்பத்தில் உள்ளார்.  :)

பூங்காவில இருந்து தண்ணி அடிச்சதில சுவைப்பிரியனுக்கு மிச்சக் கதை மறந்திட்டுது சகாரா

மேல சகாராவுக்கு எழுதிய பதில் தான் உங்களுக்கும்.நான் என்ன வைச்சுக்கொன்டா வஞசனை பண்னுறன்  :)

தற்காலிக நிவாரணி எப்பவும் கைகொடுக்கும்   :D .....தற்கால கதைக்கு நன்றி சுவைப்பிரியன்  :)

நன்றிகள் கு சா. நிவாரனி தற்காலிகமாக இருந்தால் ஒ கே

நீதி : தண்ணியடிக்கும் போது  கட்டாயம் அலைபேசியை அணைக்க வேண்டும்...! :)

இல்லையா பின்ன. பொல்லைக்கொடுத்து அடி வாங்குவதையாவது தவிர்க்கலாம் எல்லோ  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் கதையை முடிக்க வேண்டும் என்ட அவசரத்தில் எழுதியிருக்கார்

உண்மை தான் ரதி.3 பகுதியாக எழுதுவம் என்று தான் நினைத்தேன்.நேரப்பற்றாக்குறை அதோட இதை ஒரு சம்பவமாக எழுதுவம் என்று தான் நினைத்தேன்.பின்பு கதையாக முயற்ச்சி பண்ணுவம் என்றது தான் இந்த பரீட்சை.எனது நோக்கம் இந்த விடையத்தை கள உறவுகளுடன் பகிர்வதே.நன்றி ரதி.

மற்நறும் பச்சை குத்தி உற்ச்சபகப்படுத்திய புத்தனுக்கும் விசுகுவுக்கும் மிக்க நன்றிகள்.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.