Jump to content

ஊழிக்காலம் (நாவல்) - தமிழ்க் கவி


Recommended Posts

  • Replies 55
  • Created
  • Last Reply

தமிழ்க்கவி

புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவர். பாடகி, கேமிரா விமன், எடிட்டர், தயாரிப்பாளர், எழுத்தாளர். ஊடகத்தின் அத்தனை துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் மூன்று மொழிகளையுமே சரளமாகப் பேசக்கூடியவர்.

ஈழத்தின் கடைசிக்கட்ட போர் அனுபவங்களை நாவலாக எழுதியிருக்கிறார். ‘ஊழிக்காலம்’, தமிழினி வெளியீடாக வெளிவந்திருக்கிறது. போரின் வலி நேரடி சாட்சியமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நாவலை எழுத எவருக்குமில்லாத தகுதி அன்னை தமிழ்க்கவிக்கு உண்டு. ஏனெனில் தன்னுடைய இரண்டு மகன்களை போரின் பசிக்கு உணவாக கொடுத்த அவலமான அனுபவம் அவருக்கு இருக்கிறது.

போரிலக்கியம் என்கிற வகையில் வகைப்படுத்தக்கூடிய இந்நாவல், தமிழின் மிக முக்கியமான ஆக்கங்களில் ஒன்றாக நிச்சயம் இடம்பெறப் போகிறது என்று நம்புகிறேன்.

நன்றி : யுவகிருஷ்ணா
முகனூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நூல்கள் வெளியாகின்றன என்ற செய்திகள் வருகின்றன. நல்லவிடயம். ஆனால் இவற்றையெல்லாம் எப்படி இலகுவாக வாங்கலாம் என்பதைப் பற்றிய தகவல்கள் இல்லை. தெரிந்தவர்கள் கூறவும்.

Link to comment
Share on other sites

india+996.JPG
தமிழ்க்கவியுடனான ஒரு சந்திப்பு

தமிழ்க்கவி என்கிற தமயந்தி (வயது 66)மக்களாலும் போராளிகளாலும் நன்கு அறியப்பட்டவர். இவரது இரண்டு மகன்களும் ஒரு பேத்தியும் புலிகள் அமைப்பில் மாவீரர்களாகிப் போனதோடு இவரது கணவரும் இறுதி யுத்தத்தில் இறந்து போனார். ஆரம்ப காலப் போராளிகளிற்கு அவர் அக்கா.அடுத்த கட்ட போராளிகளிற்கு அன்ரி.அல்லது மம்மி. அதற்குமடுத்த கட்ட போராளிகளிற்கெல்லாம் அவர் அம்மம்மா.இப்படி புலிகள் அமைப்பின் மூன்று தலைமுறை போராளிகளிற்கு நன்கு அறிமுகமானதும் அவர்களின் அன்பு கொண்டவருமான தமிழ்க்கவி புலிகள் அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு தவிர்ந்த புறக் கட்டமைப்புக்களான  அரசியல்.பிரச்சாரம்.கலை பண்பாட்டுக் கழகம். தொலைக்காட்சி. வானொலி. பத்திரிகை . இருபது வருடங்களிறகு மேலாக  பணியாற்றியவர்.இலங்கை இராணுவத்தால் கைதாகி முகாமில் அடைக்கப் பட்டு  புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப் பட்டு  விடுதலையானர்.இன்று  வன்னி இறுதி யுத்தத்தின் நேரடி சாட்சியமாகி நிற்பதோடு தனது அனுபவங்களை  ஊழிக்காலம் என்கிற ஒரு நாவல் வடிவத்தில் தந்துள்ளார்.

இவர் சென்னை வந்திருந்ததை அறிந்து அவரது விலாசத்தினை பெற்றுக் கொண்டு அவர் இருந்த முகப்பேர் பகுதிக்கு என்னுடைய ஒரு நண்பரோடு  சென்றிருந்தேன். சென்னையில் இப்போ இருக்கின்ற சிறிய இடத்திலெல்லாம் குடியிருப்புக்களை சிறிது சிறிதாகக் கட்டி வாடைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது  முக்கிய தொழில். அப்படி ஒரு சிறிய அடுக்கு மாடி கட்டிடம் தான் அவரது விலாசம். ஒடுங்கிய படிக் கட்டுக்களில் அவரது வீட்டைத் தேடி  முதலாவது  இரண்டாவது என ஏறி நான்காவது மாடியை கடந்து மொட்டை மாடிவரை போய் விட்டேன்  அவரது வீட்டைக் காணவில்லை. மொட்டை மாடியில் ஏறி நின்று சுற்றி வர பார்த்தபோது அங்கு அமைக்கப் பட்ட சிறிய ஒரு அறையில் இருந்து சிரித்தபடியே இதுதான் எனது மாளிகை வாருங்கள் என வரவேற்றவர்.கவனம் குனிந்து உள்ளை வாங்கோ என்றார்.
மொட்டை மாடியில் இரண்டு மீற்றர் சதுர அளவில்  சுவர் எழுப்பி மேலே சீற் போட்ட கூரை.இதுதான் அவரது வீடு இங்கு அவரும் அவரது ஒரு பேரனும் வசிக்கிறார்கள்.நான் கவனமாய் குனிந்து உள்ளே போனதும் இஞ்சை கதிரையெல்லாம் கிடையாது என்றபடி ஒரு பாயை விரித்து விட்டு அவசரமாக தேனீருக்காக அடுப்பை மூட்டி தண்ணீரை கொதிக்க வைத்து விட்டு ஒரு பிஸ்கற் பக்கற்றை பிரித்தவர் அங்கு மிங்கும் பார்த்து விட்டு அங்கு கிடந்த ஆனந்த விகடன் புத்தகத்தை எடுத்து நிலத்தில் வைத்து இதுதான் தட்டு என்றபடி அதில் பிஸ்கற்றுக்களை கொட்டி சாப்பிட சொல்லி விட்டு ரின் பால் பேணியை உடைத்து பால்தேனீர் போட்டு  கொண்டு வந்து அமர்ந்தார்.நீண்ட நேரம் அவரோடு உரையடிவிட்டு விடை பெற முன்னர் நாங்கள் வாங்கிப் போன அவரது புத்தகத்தில் வீரமும் தீரமும் விலை பேச முடியாதவை. வெற்றி அல்லது வீர மரணம் இதுவே எமது தாரக மந்திரம் அன்புடன் தமிழ்க்கவி என்று கையெழுத்திட்டு தந்தார்.

india+1251.JPG
 நான் சென்னையை விட்டு புறப்பட முன்னர் அவரை தொடர்பு கொள்வதாக சொல்லி விடை பெற்றோம்.
நான் சென்னையை விட்டு புறப்படு முன்னர் அவரை புத்தக சந்தையில் சந்தித் திருந்த போது தான் அவசரமாக வேறு வீடு தேடுவதாக சொன்னார். காரணம் நாங்கள் மற்றும் வேறு பத்திரிகையாளர்களும் அடிக்கடி அவரை சந்திக்கச் சென்றதில் ஆத்திரமடைந்த வீட்டு முதலாளி வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி விட்டாராம் என்றார்..வேண்டு மானால் வீட்டு முதலாளியோடு  நாங்கள் கதைத்து பார்க்கவா என்றதற்கு வேண்டாம் எங்களிற்கும் மான ரோசம் இருக்கு றோட்டிலை படுக்கிறது ஒண்டும் எனக்கு புதிசில்லை வீட்டை விட்டு போ.. எண்டு சொன்னதுக்கு பிறகு எனக்கு அங்கை இருக்க விருப்பம் இல்லை பாலத்துக்கு கீழை படுத்தாலும் இனி அங்கை இருக்க மாட்டன் வீடு தேடுறன் என்றார்.முடிந்தளவு நானும் உதவுவதாக கூறி விடை பெற்றேன்.அவரது ஊழிக்காலம் இன்னமும் முடியவில்லை...

 

Link to comment
Share on other sites

ஊழிக்காலம் பக்கம்.90.....மாவீரர்களின் உடல்கள் வரிசையாக அடுக்கப் பட்டிருந்தது.அதைக் கடந்து அலுவலகத்தினுள் நுளைந்தபோது பொறுப்பாளர் தியாகம் ஜயா முகம் நிறைந்த தாடி மீசையுடன் அமர்ந்திருந்தார்
வணக்கம் ஜயா
வாங்கம்மா
என்றவர் மாவீரர் பதிவுகள் சரியாக மேற் கொள்ளப் படுகிறதா என்றதை கவனித்தபடி இருந்தார்.அங்கு நின்ற பத்மாவிடம் எங்கை இருக்கிறீங்கள் என பார்வதி சம்பிரதாயமாக கேட்டதும் அவளது கண்கள் பனித்தன.மூங்கிலாத்திலைதான்.சொந்தக் காரரோடை போயிருப்பன்.எல்லாரும் தனியாத்தான் போகினம் என்னை வாறியா எண்டு ஒருத்தர் கூட கேக்கேல்லை.எங்கடை நிலைமையை பாத்தியளா??.போரிலை வெற்றியெண்டா எத்தினை பேர் வீட்டை வந்திருப்பினம்.இப்ப நான் தனி மரம்.நானும் சண்டைக்கு போகப் போறன் என்றாள்.
பத்மா அங்கு நின்றதற்கான காரணம் பார்வதிக்கு புரிந்தது களத்திலிருந்து வரும் வித்துடல்களோடு அல்லது வேறு வகையில் அவளது கணவனுடன் நிற்பவர்கள் வரக் கூடும் அவனும் வரக்கூடும் எனவே அவனை சந்திக்கவோ அல்லது அவனைப் பற்றி அறிய சந்தர்ப்பம் அவளிற்கு கிடைக்கும் .அதற்காக மாவீரர் துயிலும் இல்லத்தில் காத்திருந்தாள்

Link to comment
Share on other sites

ஊழிக்காலம்.பக்கம்.95..உடையார் கட்டு மைதானத்தில் அதிகாரிகள் நிவாரணம் வழங்கினார்கள்.முல்லை மாவட்ட மக்கள் கிழக்கு மேற்காகவும்.கிளிநொச்சி மாவட்ட மக்கள் வடக்கு தெற்காகவும்.இன்னொரு வரிசை சுதந்திர புரம் வீதியை அடைத்து நின்றது.மன்னார் மாவட்ட மக்கள் தனி வரிசையில் நின்றனர்.பகல் 11 மணி இரண்டு எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்தது ஓ..என்று அலறல் சத்தம் கேட்டது ஆனாலும் எவரும் வரிசையை விட்டு விலகவில்லை.எறிகணைகள் கூவிக் கொண்டு வரவும்.சிலர் நெளிந்து கொடுத்தார்கள் சிலர் இருந்தார்கள்.சிலர் படுத்தார்கள்.ஓடவோ வரிசையை கைவிடவோ இல்லை.உயிரின் விலை நிவாரணப் பொருட்களை விட குறைந்து போயிருந்தது.உயிரா??பசியா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இப்படி ஒவ்வொரு பக்கமாக போட்டு கொண்டு வந்தால் எப்படி புத்தகத்தை வேண்டி வாசிக்க மனம் வரும் :( நூலைப் பற்றி அறியத் தந்த சயந்தனுக்கு நன்றி
 
Link to comment
Share on other sites

ஊழிக்காலம்.பக்கம்155.காயமடைந்திருந்த பாலகுமார் பதுங்கு குழிஒன்றினுள் கதிரை போட்டு அமர்ந்திருந்தார்.பார்வதியை கண்டவர் வாங்கோ இருங்கோ என்றார்.காயமடைந்த இடது கையை மடக்கி தொங்க விட்டிருந்தார். புலிகளின் பொது நிருவாகங்கள் ஆரம்பித்த பின்னர் தலை தூக்கிய கீழ் மட்ட ஊழல்களால் பாலகுமார் மனமுடைந்து போயிருந்தார்.இருபது வருட காலத்தில் அவர் எந்த பதவியிலும் அமர்ந்ததில்லை.புலிகளின் மூத்த உறுப்பினர் என்பதோடு சரி.அவர் பேசட்டும் என்று பார்வதி மெளனமாக இருந்தாள்.கவலையோடை முகத்தை சுழித்தவர் காது குடுத்து கே்ககேலாது முககுடுக்கேலாத கதையள் .நாயள்.பேயள். தாங்க முடியேல்லை. வெற்றி எண்டது சண்டையிலை எடுக்கிறதில்லை யுத்தத்திலை வெற்றி தோல்வி சகஜம் ஆனால் மக்களை வெண்டிருக்கவேணும்.அதிகாரம் போட்டி எல்லாம் அழியும்.மக்களை காப்பாத்த எடுத்த ஆயுதத்தை மக்களை நோக்கி திருப்புவாங்கள்.நண்பர்களை கூட பார்க்க மனமில்லாமல் போகும்...

Link to comment
Share on other sites

முழுப் புத்தகத்தையும் உப்பிடி ஒவ்வொரு பக்கமாகப் போட்டால் நாங்கள் சுகமாய் வாசிப்பமல்லே  :D நன்றி சாத்!

Link to comment
Share on other sites

முழுப் புத்தகத்தையும் உப்பிடி ஒவ்வொரு பக்கமாகப் போட்டால் நாங்கள் சுகமாய் வாசிப்பமல்லே  :D நன்றி சாத்!

 

317 பக்கம் யார் தட்டச்சு செய்யிறதாம்.

Link to comment
Share on other sites

பச்சையும் வாழ்த்தும் சொன்னவர்கள் இனி சிவப்பும் பேச்சும் தரப்போகின்றார்கள் .

தமிழ்கவியும் ஓடிவந்தவர்கள் கைகளிலில் துரோகியாகி வதை பட போகின்றார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகத்தில் நிறைய விடயங்கள் இருக்கும்போல...! பரீசுக்குப் போனல் நிறைய சாமான்கள் வாங்க வேண்டும் ..ம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுப் புத்தகத்தையும் உப்பிடி ஒவ்வொரு பக்கமாகப் போட்டால் நாங்கள் சுகமாய் வாசிப்பமல்லே  :D நன்றி சாத்!

 

ஓ அந்த அம்மா வன்னியில் இருந்து கஸ்டப்பட்டு,படாத பாடுபட்டு தப்பி இந்தியா போய் ஒரு புத்தகம் எழுதினால் அதைக் கூட காசு கொடுத்து வேண்டிப் ப்டிக்காமல் ஓசியில் படியுங்கோ <_<
Link to comment
Share on other sites

 

ஓ அந்த அம்மா வன்னியில் இருந்து கஸ்டப்பட்டு,படாத பாடுபட்டு தப்பி இந்தியா போய் ஒரு புத்தகம் எழுதினால் அதைக் கூட காசு கொடுத்து வேண்டிப் ப்டிக்காமல் ஓசியில் படியுங்கோ <_<

 

 

 

பகிடிகளுக்கு எல்லாம் ரென்ஷனாகாதீர்கள் ரதியக்கா  :)

Link to comment
Share on other sites

ஊழிக்காலம்.பக்கம் 175...என்ன அவல வாழ்க்கை எப்ப முடியப் போகுது என்றாள் சீராளனின் மனைவி. எங்கை முடியிறது இரண்டொருத்தர் அழியவேணும் அப்பதான் முடிவுக்கு வரும் என்றாள் பார்வதி. அவலப்பட்டு ஓடிக்கொண்டிருந்த வேளையிலும் போராட்டத்திற்கு ஆட்சேர்ப்பு தொடர்ந்து நடந்தது.யார் போவார் அதனால் பலவந்தமாக கூடாரங்களிற்குள் புகுந்து பிள்ளைகளை பிடித்துக் கொண்டு போனார்கள்.ஊரிழந்து உறவுகளையிழந்து உடைமைகளை இழந்து ஓடிக்கொண்டிருந்த மக்களிற்கு மற்றொரு பேரிடியாக ஆட் சேர்ப்பும் வந்து விழுந்தது.சனங்கள் யாவராலும் கைவிடப் பட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் புத்தகங்களை இணையத்தினூடாக எப்படி வாங்கலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

ஊழிக்காலம் - தமிழ்க்கவி

வேட்டைத் தோப்பு – கருணாகரன்

இனி எனது நாட்களே வரும் – நிலாந்தன்

ரகசியத்தின் நாக்குகள் - நெற்கொழுதாசன்

கொலம்பசின் வரைபடங்கள் - யோ.கர்ணன்

Link to comment
Share on other sites

தோல்வி அடைந்த போராட்டத்தை விமர்சிக்கும் முன்னாள் போராளிகள் வரிசையில் தமிழ்க்கவியும் இணைந்திருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே

Link to comment
Share on other sites

சில மாதங்களாகவே தமிழகத்தில் தலைவருன் பெயரை கூறத்தடை படத்தை போடத்தடை என்று இருக்கும்பொழுது ஒருவர் அங்கயே இருந்து கொண்டு ஒரு புத்தகத்தை எழுதி நேர்மையாக வெளியிட முடியாது என்பதே எமது கருத்து அப்பிடியே வெளியிட்டாலும் அதில் என்ன வகையான எழுத்துக்கள் இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.....

எங்கே நாடு கடத்தபடுவமோ என்ற அச்சத்தில் விமர்சனங்களை அதிகமாக தூவி எழுதி இருக்கார் போல......

விமர்சனங்களை முன்வைக்கும் போது அந்த போராட்டத்தின் தியாகங்கள் எந்த சூழ்நிலையில் எப்பிடி யாரால் சிலநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன போன்றவற்றையும் கணக்கில் எடுக்க வேண்டும் 30 வருட போராட்டத்தை எழுத்துக்களால் கூறும் போது மக்கள் மத்தியில் எவளவு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதனை ஒரு உண்மையான விடுதலை எழுத்தாளன் சிந்தித்தே எழுதுவான்

Link to comment
Share on other sites

உண்மைகள் கசக்கும் .(உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அப்படி நடந்தால் நல்லா விளங்கியிருக்கும் உங்களுக்கு )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் கசக்கும் .(உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அப்படி நடந்தால் நல்லா விளங்கியிருக்கும் உங்களுக்கு )

 

 

தமிழ்கவிக்கு மட்டும் தான் இப்படி ஒரு வாழ்வு என்று இல்லைத் தானே.

சுனாமி,முள்ளிவாய்கால் இது இரண்டின் பின்பும் ஊரில் உள்ள ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் ஏதோ ஒரு வகையில் உறவுகளை இழந்தவர்களாகத் தானே அந்த மக்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..ஒருவர் நல்லா இருக்கும் போது அவர்களைத் தலையில் தூக்கி வைச்சு கொண்டாடுவதற்கும், அவர் கொஞ்சம் கஸ்ரப்பட்டுட்டார் எண்டதன் பின் அவர்களை திட்டி தீர்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா...

 

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் எல்லாவற்றையும் சொல்ல சந்தர்பங்கள் அமைந்துவிடுவதில்லை .சந்தர்ப்பம் அமைந்தாலும் பலர் ஏன் வில்லங்கம் என்று ஒதுங்கி இருப்பவர்களும் இருக்கின்றார்கள். 

இதில் தூக்கி பிடித்த தூற்றிய என்ற ஒன்றிற்கே இடமில்லை .உண்மையில் நடந்ததை, தான் கண்டதை அவர் சொல்லுகின்றார் .அதை அவர் ஏன் சொல்லகூடாது என்று நினைக்கின்றிர்கள் .

கட்டிப்போட்டம் இனி அடித்தாலும் உதைத்தாலும் புருசனை விட்டுகொடுக்க கூடாது என்பது போலிருக்கு .

 

Link to comment
Share on other sites

நிறைய விடயங்கள் துயரமானவை. ஆனாலும், Desperate times call for desperate measures என்று சொல்வார்கள். அவற்றை விவாதித்துப் பயனில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் புத்தகங்களை இணையத்தினூடாக எப்படி வாங்கலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

ஊழிக்காலம் - தமிழ்க்கவி

வேட்டைத் தோப்பு – கருணாகரன்

இனி எனது நாட்களே வரும் – நிலாந்தன்

ரகசியத்தின் நாக்குகள் - நெற்கொழுதாசன்

கொலம்பசின் வரைபடங்கள் - யோ.கர்ணன்

 

 

ஒன்லைன் மூலம் வாங்க விருப்பம் என்டால் மருதங்கேணியிடம் கேளுங்கள்  

நிறைய விடயங்கள் துயரமானவை. ஆனாலும், Desperate times call for desperate measures என்று சொல்வார்கள். அவற்றை விவாதித்துப் பயனில்லை.

 

விட்ட பிழையில் இருந்து பாடம் படிக்கலாம்.இனி மேல் அப்படி ஒரு தவறு நிகழாமல் தவிர்க்கலாம்.
 
இறுதி யுத்தத்தின் இறுதி நேரம் வரை அங்கே இருந்த கர்ணன்,நிலாந்தன்,கருண்கரன் சொல்வது பிழை.தற்போது தமிழ்க்கவியையும் இங்கே இருந்து கொண்டு எம்மால் விமர்சிக்கத் தான் முடியும்.அதைத் தவிர எம்மால் என்ன செய்ய முடியும்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.