Jump to content

திருக்கைலாய யாத்திரை அற்புத அனுபவம் தரும் பயணக்கட்டுரை. (படங்கள் இணைப்பு)


Recommended Posts

திருக்கைலாய யாத்திரை பகுதி 23

 
திருக்கையிலாய யாத்திரைக்கு என நான் கொண்டு சென்ற ஒரே பூசைப்பொருள் நறுமணம் கமழும் ஊதுபத்திகள் மட்டுமே..டோல்மாலாபாஸ் உச்சியை அடைந்தபோது, அங்கே நிறைய காகிதத்தால் ஆன கொடிகள் கட்டி அவைகளை இறைவனின் அடையாளங்களாக கருதி அவற்றிற்கு ஊதுபத்தி காட்டி வழிபடுகின்றனர். 

சிவசக்தி ஸ்தலமாக கருதப்படும் இந்த இடத்தில் இருந்துதான் சிவன் மோக மாயை விடுத்து யோகீஸ்வராராக யோகத்தில் அமர கயிலை சென்றார் என்பதும், பார்வதி தேவியின் இருப்பிடமாகவும் நம்பபடுகிறது.அந்த குளிரிலும், சிறு சிறு பனிமழைத் தூரல் இருந்த போதும் யாத்திரீகர்களின் தொடர்ந்த வருகையால் நெருப்பு அணையாமல் இருக்க நானும் ஊதுபத்தியினை ஏற்றி வைத்து வழிபட்டேன்.

dolmala%2Bpass%2Btop%252C%2Bkailash%2Bya
 
dolmalapass%2Bclosewiew%252C%2Bkailash%2
 
dolmalapass%252C%2Bkailashyatra.JPG
 
கூட வந்த நண்பர்கள் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட எனக்கோ தனியே அமர்ந்து செய்ய வேண்டிய நிலை இல்லாததால் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். கொஞ்ச தூரம் சென்ற உடன் இறக்கம். அதுவும் செங்குத்தான இறக்கம். டோல்மாலாவில் இருந்து வலதுகைப்பக்கம் அதாவது கிழக்கு நோக்கி இறங்க கொஞ்ச நேரம் நடந்தபின் கெளரிகுந்த் எனப்படும் பார்வதி குளம் தென்பட்டது. பார்வதி தேவி டோல்மாலாவில் இருந்து இறங்கி இங்குதான் நீராடுவதாகவும் நம்பப்படுகிறது. தூரத்தில் இருந்து பார்க்க சிறிய குட்டை போல் தோன்றினாலும் இறங்க இறங்க சுமார் 40 அடி அளவில் வட்டமாக குளம் இருந்தது. இந்த குளத்தில் நீர் பெரும்பாலும் பனியாக உறைவதே இல்லை. பனிப்படலம் வேண்டுமானால் இருக்கிறது. குளத்தில் மரகதப்பச்சை நிறத்தில் தெளிவாக நீர் நிறைந்து இருக்கிறது. ஆழம் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன்.
 
kowrikund%2Bview%2Bfrom%2Bheight.%2Bkail
 
kowrikund%252Ckailash%2Byatra.JPG
 
gowrikund%252C%2Bkailashyatra.JPG
 
நாங்கள் சென்ற பாதையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் முழுக்க முழுக்க பாறைகளின் மேல் நடந்து இறங்கினால் பார்வதி குளத்தை அடையலாம். பெரும்பாலும் யாரும் அங்கு செல்வதில்லை. தரிசனத்துடன் சரி. காரணம் டோல்மாலா பாஸ் இடத்தை அடைய எடுக்கும் கடும் பிரயத்தனம் ஒரு கர்ரணமாக இருக்கலாம். மளமள வென்று அந்த மலையைத் தாண்டிவிட்டோம்.

யாத்திரை தொடரும்

 
Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 24

 
கெளரிகுந்த் குளத்தைத் தாண்டி இறங்கி அதன்பின் இரண்டு குன்றுகளைத் தாண்டி வந்தபோது கண்முன்னே விரிந்தது கிட்டத்தட்ட குதிரை லாட வடிவிலான பள்ளத்தாக்கு. சுற்றிலும் மலைகள் ஓங்கி உயர்ந்து நின்றன.
 
kailash%2Byatra%252C%2B2nd%2Bday%252C%2B
 
பள்ளத்தாக்கில் பனி ஆறு நீண்டு கிடந்தது. அதில் நடந்த அனுபவம் மனம் குழந்தைபோல் துள்ளச் செய்தது. கிட்டத்தட்ட பல இடங்களில் கையில் ஸ்டிக் இல்லாமல் நடக்க இயலவில்லை. வழுக்கவும், சறுக்கவும் செய்தது.
 
kailash%2Byatra%252C%2B2nd%2Bday%252C%2B
 
சுற்றிலும் சூழ்ந்திருந்த மலைகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நடந்தோம். கால்கள் பனியில் புதைய புதைய இங்கும் கவனமாக முன்னர் யாத்திரீகர்கள் சென்ற பாதையில் மட்டுமே கவனமாகச் சென்றோம்
 
kailash%2Byatra%252C%2B2nd%2Bday%252C%2B
 
கீழே இருக்கும் படத்தில் கொடி பறப்பது போன்ற தோற்றம் தெரிகிறதா? மிகப்பெரிய பாறையின் மேல் அமைந்த சிறு பாறை வடிவம் த்வஜஸ்தம்பம் போல
 
kailash%2Byatra%252C%2B2nd%2Bday%252C%2B
 
இந்த பனி மிகுந்த பகுதியைத் தாண்டி முடிவில் குன்றின் மறுபுறத்தில் செங்குத்தாக கீழே இறங்கத் தொடங்கினோம். கீழே கண்ணுக்கு எதோ ஒரு கூடாரம் மாதிரி தெரிய மெள்ள மெள்ள இறங்கிச் சேர்ந்தோம். அங்கு கூடாரத்தில் சீன பாக்கெட் உணவு வகைகள் இருந்தன.தங்குமிடமாக இருக்கும் என நினைத்த எனக்கு,சற்று ஏமாற்றமாகவே இருந்தது. எதுவும் வாங்கவோ, அருந்தவோ பிடிக்காமல தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.
 
kailash%2Byatra%252C%2B2nd%2Bday%2Beveni
 
இனி இது போன்ற இரு புறமும் மலைகள் தொடர்ந்து வர நடுவில் பரந்த பள்ளத்தாக்கு சமவெளியில் சுமார் நான்கு மணிநேரம் நடந்தோம்.  இதுவரை வந்த இடங்கள் வாகனங்கள் அணுக முடியாத மலைகள். இப்போது வந்திருப்பதோ யாத்திரை நிறைவு பெறும்  இடத்திலிருந்து வாகனத்தில் அணுக முடியும். அப்படி ஒரு சமவெளிதான். வழி நெடுக சூரிய ஒளி மின்சாரம் பெரிய அளவில் தயாரிப்பதற்கு உரிய மின்சக்தி நிலையங்கள் இருந்தன. அதைப்பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டே வந்தேன். மாலை சுமார் 4.30 மணி அளவில் இரண்டாம் நாள் தங்குமிடமான திராபுக் வந்தடைந்தோம். இங்கும் படுக்கை மட்டும் கிடைத்தது. இரவு உணவு ஆப்பிள் மற்றும் பாக்கெட் ஜீஸ்.  உடல் அசதியினால் தூக்கம் வரவேண்டும். ஆனாலும் சுமாராக தூங்கி காலையில் எழுந்தேன்.,.

யாத்திரை தொடரும்
 
Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 25

 
திருக்கைலாய யாத்திரையில் பரிக்ரமாவின் மூன்றாவது நாள் காலை 6.30 மணி அளவில் கிளம்பினோம். முன்னதாக பையில் வைத்திருந்த உலர்பழங்களை காலை உணவாக எடுத்துக்கொண்டோம். மற்றபடி புறப்படுவதில் எந்த சிரமமும் இல்லை. கூடவே யாத்திரை நிறைவு அடையும் நாள் வேறு. நாங்கள் தங்கி இருந்த திராபுக் இடத்திற்கு சற்று முன்னதாக முந்தய நாள் மாலை எடுத்த படம் கீழே 
kailash%2Byatra%2B2nd%2Bday%2Bevening.JP
 
காலை கிளம்பிய உடன் இரவு தங்கிய இடம் ஏதோ சொல்வது போல் உணர்ந்தேன். பிரியாவிடை கொடுத்தது போல் இருந்தது. சற்று தூரம் வந்தபின் எடுத்த படம் கீழே.
 
kailash%2Byatra%2B3rd%2Bday%2B1.JPG
 
kailash%2Byatra%2B3rd%2Bday%2B2.JPG
 
காலை கிளம்பி தொடர்ந்து நடந்தோம். உணவு எதுவும் தரப்படவில்லை. எங்களுக்கும் பசி எடுக்கவில்லை. இன்று எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என வழிகாட்டி இடம் கேட்டபோது மொத்தம் 5 மணி நேரம் ஆகலாம் என்றார்.பாதை எளிதாகவே இருந்தது. 
 
kailash%2Byatra%2B3rd%2Bday%2B3.JPG
 
kailash%2Byatra%2B3rd%2Bday%2Bend.JPG
 
மிதமான வேகத்திலேயே நடந்தோம். சுமார் இரண்டு மணி நேரம் நடந்தபின் தூரத்தில் கூடாரம் தெரிய சரி இங்கும் ஒரு டீக்கடைபோல என நினைத்துக்கொண்டு நடந்தேன். அருகில் செல்ல செல்ல கார்கள் நின்றிருந்தன. ஆம், நாங்கள் யாத்திரையில் சென்று சேர வேண்டிய இடத்தை இரண்டு மணிநேரத்திலேயே அடைந்துவிட்டோம்.

வழிகாட்டி வேண்டுமென்றே எங்களை தமாஷ் பண்ணவே 5 மணி நேரம் என்று சொல்லி இருந்திருக்கிறார். அந்த இடத்தை அடைந்தவுடன் இந்த யாத்திரையில் என்னோடு மனப்பூர்வமாக நெருக்கமாக பழகிவந்த சேலத்தை சேர்ந்த திரு.தனுஷ்கோடி ஐயா அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார்.

கூட வந்த வழிகாட்டி என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு நாங்கள் போதுமான ஒத்துழைப்பு கொடுத்தற்கு மிகவும் நன்றி எனச் சொன்னார்... அவரில்லையேல் இந்த முழுசுற்று யாத்திரை சாத்தியேமே இல்லை என்பதை பதிலாகச் சொன்னேன்.

சரி இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்று அவர் கேட்க., இப்பொழுதே இன்னொருமுறை திருக்கைலையை வலம் வர வேண்டும் என்றேன். ஆம் உண்மையிலேயே, உடலும் மனமும் விரும்பியே என் உணர்வினைத் தெரிவித்தேன். உடலில் எந்த ஒரு வலியோ, அலுப்போ எதுவும் இல்லாமல் முழுத்தகுதியுடன் முன்னெப்போதும் இல்லாத அளவு உற்சாகமாக உணர்ந்தேன். திருக்கையிலையின் சக்தி வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதது என்பதையும் உணர்ந்தேன்...

யாத்திரை தொடரும்

 
 
 
 
 

திருக்கைலாய யாத்திரை பகுதி 26

 
எங்களை அழைத்துச் செல்ல இரண்டு ஜீப்கள் காத்திருந்தன. அனைவரும் அதில் ஏறி மானசரோவர் ஏரியை நோக்கி சென்றோம்.  அன்றைய தினம் காலையில் மற்ற யாத்திரீகர்கள் அனைவரும் முன்னதாக டார்சன் முகாமிலிருந்து மானசரோவர் சென்றுவிட்டனர்.

மானசரோவர் ஏரியில் அன்று இரவு தங்கினோம். பூசைகள் செய்து வழிபட்டும் பின்னர் இரவு ஆன்மிக உரையாடல்கள் நிகழ்த்தியும் உற்சாகமாக இரவைக்கழித்தோம். அடுத்தநாள் காலை கிளம்பி ஏற்கனவே தங்கிய பழைய டோங்பா ஊரில் தங்காமல் கொஞ்சம் முன்னதாக இருந்த புதிய டோங்பா நகரில் தங்கினோம். திபெத்தில் சீனர்களை குடியமர்த்தும் முயற்சிகளில் ஒன்றாக இந்த நகரம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இங்கு நல்ல செளகரியமாகவே இருந்தது. அடுத்த நாள் காலையில் கிளம்பி எங்கும் தங்காமல் நியாலம் வந்து சேர்ந்தோம். வரும் வழியில் எடுத்த சில படங்கள் உங்களுக்காக.

 
kailash+yatra+manasarover.JPG
 
kailash%2Byatra%252C%2Bdrongpa%2Bto%2Bny
 
kailash%2Byatra%2Breturn%2Bjourney.JPG
 
kailash%2Byatra%2Bnear%2Bnyalam.JPG
 
வழியில் நாங்கள் பார்த்த ஒரே விவசாயம் கடுகு விளைச்சல்தான். படம் மேலே.. கீழே உள்ள படத்தில் நானும் எங்களுக்கு உறுதுணையாக வந்த வழிகாட்டி கியான்..இவரோடு பேசியபோது எந்த படிப்பறிவும் இல்லாமல் போர்ட்டராக இருந்து அனுபவத்திலேயே ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை வளர்த்துக்கொண்டதாகவும், வருடத்தில் இந்த மூன்று மாதம் மட்டுமே வருமானம் எனவும், மற்ற மாதங்களில் சிரமமே எனச் சொன்னார். அதே சமயம் தனக்கு படிப்பு இல்லாததால் தன் மகளை காலேஜ் லெவலில் படிக்கவைத்துக்கொண்டு இருப்பதாகவும் சொன்னார். என் கையில் செலவு போக மீதி இருந்த 500யுவான் பணத்தை கல்விச் செலவுக்கென வைத்துக்கொள்ளுங்கள் என அன்போடு கொடுத்தேன். நன்றியுடன் பெற்றுக்கொண்டார். இதை இங்கே எழுத அவசியமில்லை என முதலில் நினைத்திருந்தாலும் இப்போது பகிர்ந்துகொள்ளத்தோன்றியது.
kailash%2Byatra%252C%2Bsiva%2Band%2Bguid
 
திரும்பி வரும் பயணம் முழுவதும் சற்று செளகரியமாகவே தங்குமிடங்கள் இருந்தன. நாங்கள் ஆட்சேபணை தெரிவித்திருததும் ஒரு காரணம்.நியாலத்திலும் போகும்போது தங்கிய அறைகளுக்குப்பதிலாக, செளகரியமான அறைகள் ஒதுக்கப்பட்டன. 

அடுத்த நாள் காலை கிளம்பி சுமார் ஒரு மணிநேரத்தில் அதாவது காலை 10 மணி அளவில் சீன செக்போஸ்டை அடைந்தோம். முதல் குழுவாக நின்று வெளியேறி கொஞ்ச தூரம் வந்து மதிய உணவினை அருந்தி மாலை காட்மண்டு திரும்பினோம்.முன்னர் தங்கிய ஓட்டலில் 19 ஜீலை 2011 அன்று இரவு தங்கினோம். கூடவே எடுத்துச் சென்ற ஸ்லீப்பிங்பேக் திரும்ப ஒப்படைத்துவிட்டு மறு நாள் காலை காட்மண்டுவில் விமானம் ஏறி டில்லி வழியாக சென்னை திரும்பினோம். விமானநிலையத்தில் உடன் வந்த நண்பர்களுடன் பிரியாவிடை பெற்று இல்லம் திரும்பினேன். 

யாத்திரை ஆரம்பிக்கும் முன் நேபாளத்தில் சில இடங்களை சென்று தரிசித்தோம். அதன் புகைப்படங்கள் சிலவற்றை பகிரும் அடுத்த பகுதியுடன் யாத்திரை நிறைவு பெறும். 

நிகழ்காலத்தில் சிவா.

 
 
Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்

 
திருக்கைலாய யாத்திரை ஆரம்பித்தபோது நாங்கள் நேபாளில் காட்மாண்டு சென்றபின் அன்றய தினமும் அதற்கு அடுத்த நாளும் தங்க வேண்டியதாயிற்று. அப்போது நேபாளத்தில் பசுபதி நாதர் கோயில்சென்று தரிசனம் செய்தோம்.இங்கு புகைப்படம் எடுக்கத் தடை இருப்பதால் எதுவும் எடுக்கவில்லை. இங்கு பசுபதிநாதர் சிவலிங்கத்தில் நான்குமுகங்களோடு காட்சி அளிக்கின்றார். தரிசனம் முடித்த பின் அன்றைய தினம் மதியம் தங்கி இருந்த ஓட்டலில் ஓய்வு. மாலை பயணம் குறித்த விளக்க மீட்டிங். 
அதற்கடுத்த நாள் 7ந்தேதி ஜீன் 2011, காலை 
பக்தாபூர் இங்கு புகைப்படங்கள் நிறைய எடுத்தேன். இந்த நகரத்தை சுற்றி வர நேரம் போதவில்லை. எல்லா இடங்களிலும் மரங்களினால் ஆன சிற்பங்கள் வேலைப்பாடுகள் என பார்க்க பார்க்க சலிப்பே ஏற்படவில்லை. புகைப்படங்களில் சிறந்தவை என தேர்ந்தெடுப்பதில் மலைபே ஏற்பட்டது. அதனால் இந்த புகைப்படம் ஹிஹி...
siva%2Bbaktapur%2Bkatmandu.JPG


இதன்பின் பெளத்தர் கோவில் சென்று வந்தோம்..எந்நேரமும் தனியறையில் தீபங்கள் எரிந்து கொண்டே இருந்தன. அதை இரு வெளிநாட்டவர் தொடர்ந்து பராமரித்துக்கொண்டே இருந்தனர். கோவிலைச் சுற்றி வந்தபின் வெளியே நிறைய புறாக்கள் இருந்தன. அவற்றையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.

 

boutha%2Btemple.JPG

 

மதிய உணவிற்குப்பின் சயனகோலத்தில்  விஷ்ணு இருந்த தலத்திற்கு சென்றோம்.

 

Jal%2BNarayan%2Bnepal.JPG

 

nepal%2Bkathmandu%2Bjal%2Bnarayan.JPG

 

அடுத்ததாக சற்று உயரமான மலை ஒன்றில் இருந்த சுயம்பு புத்தா கோவில் தரிசனம் செய்தோம். இங்கு கற்களால் ஆன நிறைய வடிவங்கள் இருந்தன. இந்த கோவிலும் கண்டிப்பாக பார்த்து தரிசனம் செய்ய வேண்டியதே. இதன்பின் ஓட்டலுக்கு திரும்பி வந்தோம்.

 

nepal%2Bswayamu.JPG

 

nepal%2Bswayamu%2Btemple.JPG

 

மேற்கண்டவிதமாக திருக்கைலை யாத்திரையில் ஒருபகுதியாக நேபாள் திருத்தலங்களுக்கும் சென்று வரவேண்டி இருந்தது. 
 

இதுவரை இந்தத் திருக்கைலையாத்திரை தொடரை எழுத வாய்ப்பு அளித்த கையிலைநாதரை வணங்கியும், நீண்ட தொடராக இருப்பினும் கூடவே வந்து படித்தும், பாராட்டியும், ஊக்க்ப்படுத்திய என் நெருங்கிய நட்புகளுக்கு நன்றியறிதலையும் அன்பையும் தெரிவித்து இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

 

சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவசிவசிவ ஓம்

நிகழ்காலத்தில் சிவா

 

மேலும்  புகைப்படங்கள் தொகுப்பிற்கு...

 

http://sooryayatra.blogspot.ch/2011/08/blog-post_23.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அற்புதமான பயணத்தைத் தொடர்ந்து இணைத்தமைக்கு நன்றி...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி.கைலாயம் சொர்க்கத்தில் இருக்குது என்று தான் நான் இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்.அந்தளவிற்கு என் சமய அறிவு இருக்குது:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி.கைலாயம் சொர்க்கத்தில் இருக்குது என்று தான் நான் இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்.அந்தளவிற்கு என் சமய அறிவு இருக்குது :D

 

சிவலோகத்தில் இருந்து இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ள உயிர்களை பரிபாலிக்கும் சிவபெருமான், இந்த உலகத்தில் உள்ள உயிர்களை இவ்வுலகின் உயர்ந்த மலையான கைலாய மலையில் அமர்ந்து இருந்து பராமரிப்பதாக நம்பிக்கை....

Link to comment
Share on other sites

சிவலோகத்தில் இருந்து இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ள உயிர்களை பரிபாலிக்கும் சிவபெருமான், இந்த உலகத்தில் உள்ள உயிர்களை இவ்வுலகின் உயர்ந்த மலையான கைலாய மலையில் அமர்ந்து இருந்து பராமரிப்பதாக நம்பிக்கை....

கைலாயம் என்ன எவரஸ்ட் சிகரத்திலா இருக்கு?? :unsure::D

Link to comment
Share on other sites

கைலாயம் என்ன எவரஸ்ட் சிகரத்திலா இருக்கு?? :unsure::D

 

இல்லை படத்தில் பாருங்கள்.

 

tibet_map.gif

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூலோக கைலாயம் என்பார்கள்...!

 

அதேபோல் திருமாலின் 108 திருப்பதிகளில்  106 பூலோகத்திலும் ,  ஶ்ரீ வைகுந்தம் , திருப்பாற் கடல் ஆகியவை பூலோகத்துக்கு வெளியில் என்றும் சொல்வார்கள்...!

Link to comment
Share on other sites

எவரெசுட்டு
 
300px-Mount_Everest_by_Kerem_Barut.jpg
 
உயரம் : 8,848 மீட்டர்கள் (29,028 அடி) 
 
அமைவிடம்  : இமயமலை, கூம்பு வடிவ மடிப்பு மலை தொடர் 
 
இமயமலை சிறப்பு :  8,848 மீ உயரத்தில் முதன்மை
 
ஆள்கூறுகள் :  17px-WMA_button2b.png27°59′N, 86°56′E 
 
 
முதல் ஏற்றம் :1953, எட்மண்டு ஃகில்லரி+ டென்சிங்கு நோர்கே 
 
சுலப வழி: எவரெசுட்டுன் தெற்குப் பகுதி
 
கைலை மலை
 
300px-Kailash_south_side.jpg
 
உயரம் : 6,638 மீட்டர்கள்
அமைவிடம் :திபேத் (இமயமலை தொடர்)
தொடர் : இமயமலை
ஆள்கூறுகள் : 31°04′N, 81°18′E
 
கைலை மலை அல்லது கைலாயம் இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் மிக பெரும் சிந்து ஆறும், சட்லெச்சு ஆறும், பிரம்மபுத்திரா ஆறும் புறப்பட்டு ஓடுகின்றது. அருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன மானசரோவர் ஏரியும் ராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி என்பர். இந்து மதத்திலும் புத்த, சமண மதத்திலும் இக் கைலாய மலை பற்றி பல கதைகள் மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன. கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் சீனாவில் இமயமலையின் வடக்கில் அமைந்துள்ளது. மானசரோவர் ஏரியும் சிந்து முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.
 
 
 
கைலை மலை அமைந்துள்ள இடம்
 
கைலாய மலை பற்றிய இந்துக்களின் நம்பிக்கையை விளக்கும் ஒரு படம். சிவனும், பார்வதியும் குழந்தைகளான பிள்ளையார், முருகன் ஆகியோருடன் கைலாயத்தில் காணப்படுகின்றனர்.
சம்பந்தர் தென் கைலாயம் எனப்படும் திருக்காளாத்தியைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார். சேரமான் பெருமாள் இத்தலம் மீது திருக்கயிலாய ஞான உலா பாடியுள்ளார். இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவன் கைலாய மலையில் தனது துணைவியான பார்வதி தேவியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கையாயத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. கைலாய மலையை மிகப்பெரிய லிங்கமாகவும், மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. விஷ்ணு புராணம் கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.
 
கைலாச யாத்திரை
 
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கானவர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்ளுகிறார்கள். இது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு மரபாகக் கருதப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றிப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே வருகிறார்கள். கைலாய மலையை நடந்து சுற்றிவருவது சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. 52 கிமீ (32 மைல்) நீளம் கொண்ட இப் பாதையில் நடந்து மலையைச் சுற்றுவது யாத்திரீகர்களின் ஒரு முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது.
 
மலையேற்றம்
 
இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. இது பல மதங்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவதால் மலையேற அனுமதி கிடையாது. 1926 ஆம் ஆண்டு Hugh Ruttledge என்பவர் கைலாயத்தின் வடமுகமாக ஏற முனைந்தபோது அதன் உயரம் 6000 அடிக்கு செங்குத்தாக இருப்பதால் முயற்சியை கைவிட்டார். 1936 ஆம் ஆண்டு Herbert Tichy என்பவர் Gurla Mandhata ஏற முனைந்த போது அங்கிருந்த மலைவாழ் மக்களின் தலைவரிடம் கைலாய மலையை ஏறுவது பற்றி கேட்ட போது. " பாவங்களற்ற மனிதனால் மட்டும் தான் அதை பற்றி நினைக்க முடியும்" என்றார்.
 
விக்கிப்பீடியாவில் இருந்து.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைலாயம் என்ன எவரஸ்ட் சிகரத்திலா இருக்கு?? :unsure::D

 

பிள்ளாய், இசை,
 
இமயம் வந்து, அகக் கண்களை திறந்து பாரும் மகனே...
 
இறை அறிவிக்கப் படும்....
Link to comment
Share on other sites

மிக பயனுள்ள, சுவாரசியமான கட்டுரை, கண் கொள்ள காட்சிகள் . இங்கு போவது வாழ் நாளில் நாம் செய்த பாக்கியமே. இணைப்புக்கு நன்றி ஆதவன்

Link to comment
Share on other sites

மிக நல்ல பதிவு.....

 

வாசிக்கும் பொது அங்கு போகவேண்டும் என்னும் எண்ணமே தோன்றுகிறது....

சிவம் விரும்பினால் போவதற்கு வழி பிறக்கும் என்று இருப்போம்... :)

 

 

Link to comment
Share on other sites

  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.