Jump to content

விலாசம் மறந்த வீரனின் சுவடுகள் தளபதி ஜெயம் (பாலகுரு சுவேந்திரன் )


Recommended Posts

விலாசம் மறந்த வீரனின் சுவடுகள் தளபதி ஜெயம் (பாலகுரு சுவேந்திரன்)
(பாலகுரு சுவேந்திரன் - பிறப்பு - 1965ம் ஆண்டு)
 
jeyam+anna.jpg

வெற்றிகளுக்கு விழுதான வேர்களை உலகம் என்றைக்கும் உணர்ந்து கொள்வதில்லை. வீரத்தின் வேர்களுக்கான விலாசங்களும் அப்படியே வெளியில் அவை ஒருபோதும் வெளிச்சமிடப்படுவதில்லை. இத்தகைய வேராக வெளியில் வராத விலாசமாக எங்களோடு எங்கள் மக்களோடு வாழ்ந்து வரலாறாகிப் போனவர்களில் தளபதி ஜெயமண்ணாவும் ஒருவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புத மனிதன்.
 
கதாநாயகத் தகுதியையோ கவர்ச்சியான மேடைப்பேச்சு வல்லுனர்களையோ புலிகளின் பாசறைகள் வளர்த்ததில்லை. தலைவனின் வேதம் போல ‚'சொல்லுக்கு முன் செயல்' இதுவே விடுதலைப்புலகள் வரலாற்றின் வெற்றி.  திறமைகள் மட்டுமே அந்தந்த தகுதிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பாசறைகளிலிருந்து வளர்ந்து வெளிவந்த வரலாறுகளே ஜெயமண்ணா போன்ற தளபதிகளுக்கான விலாசங்களும் தகுதிகளும். 
 
வன்னிக்கிராமங்களில் ஒன்றான பாவற்குளம் மண்தான் சுவேந்திரன்  என்ற ஜெயமண்ணாவைப் பெற்ற தாய்மடி. பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் தொடந்து வவுனியா மகாவித்தியாலயத்திலும் கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தார். 
 
சிங்களம் திட்டமிட்டு தொடர்ந்த தமிழின அழிப்பானது வன்னிக் கிராமங்களையும் அச்சுறுத்திக் கொண்டேயிருந்தது. சிங்கள எல்லைக் கிராமங்களிலிருந்து வருகிற சிங்களத்தினால் பாவற்குளம் போன்ற கிராமங்களின் வாழ்வுரிமையும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டேயிருந்தது. 
 
விவசாயத்தையே பலமாகக் கொண்ட இந்தக் கிராமங்களில் விவசாயிகளின் கால்நடைகளை திருடுவது முதல் இங்கு வாழ்ந்த தமிழர்களின் உயிர்களுக்கும் உத்தரவாதமில்லாத காலம் அது. ஒவ்வொரு தமிழரையும் போராடு என்ற விதியையும் எழுதிய காலமும் அதுவே. 
 
காலம் சுவேந்திரனை புலியாக்கியது. இந்தியாவில் 3வது பயிற்சிப்பாசறை போராளியாய் புடம்போட்டு வளர்த்துத் தாயகம் அனுப்பியது. அச்சுறுத்திக் கொண்டிருந்தவர்களுக்கு அச்சுறுத்தலாக ஜெயமண்ணா ஆயுதம் தாங்கிய வீரனாய் தோழர்களுடன் நிலத்தில் வந்திறங்கிய போது அந்தப் பாதங்கள் பதிந்த இடங்களெங்கும் தலைநிமிர்ந்தது. வன்னியின் வீரவரலாற்றுக் கதைகளாக வீழ்ந்த வீரத்தின் நிமிர்வாக ஜெயமண்ணாவின் பணி வன்னி நிலத்திலும் வன்னிக் காடுகளிலும் ஆரம்பித்திருந்தது. 
111-300x202.jpg
 
இந்தியாவிலிருந்து பயிற்சி முடித்து தாயகம் திரும்பிய ஜெயமண்ணா புதிய போராளிகளை உருவாக்கும் பொறுப்பில் பணியை ஆரம்பித்தார். துணுக்காய் தென்னியங்குளம் பயிற்சி முகாமின் பயிற்சியாசிரியராகினார். இங்கிருந்தே வன்னிக்கான பணிகளுக்கான அணிகள் பிரித்து அனுப்பப்பட்டது. இங்கிருந்தே ஜெயமண்ணா வவுனியா மாவட்ட பணிக்காக போராளிகளோடு அனுப்பப்பட்டிருந்தார்.
 
ஆரம்பகால சண்டைகளான கொக்குளாய் தாக்குதல் அணியில் ஒரு அணியோடு களம் சென்றது மட்டுமன்றி பூனகரி 4ம் கட்டைச் சண்டை , ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல் என பல சண்டைகளிலும் பங்கேற்றிருந்தார். ஆரம்ப காலம் மிகவும் சிரமங்களைச் சந்தித்த கடுமையான சண்டையனுபவங்கள். பின்னர் பெரும் தளபதியாய் நிமிரும் வரையான ஜெயமண்ணாவின் ஆற்றலின் அடையாளங்களும் சாதனைகளும் கால நதியோடு தானும் கைகோர்த்துக் கொண்டே நடந்தது.
 
000       000           000
 
1987 யாழ்மாவட்டம் மிகுந்த சிக்கலை எதிர் நோக்கியிருந்த காலமது. „'லிபரேசன் ஒபரேசன்' நடவடிக்கை மூலம் வடமராட்சியின் பெரும் நிலப்பரப்பு இலங்கையரச படைகள் வசமானது. யாழ்மண்ணின் இதர பகுதிகளும் சிங்களத்தின் கைகளில் போய்விடும் என்ற நிலமையைத் தோற்றுவித்து மக்களின் மனங்களில் யுத்தத்தின் பாதிப்பு உள ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் காலம் யாழ்மண் உணவு தொடக்கம் மருந்துகள் அடிப்படைத் தேவைகளுக்கெல்லாம் மிகவும் அவதிப்பட்டகாலம். 
அயல் நாடான இந்தியா தனது பிராந்திய நலனில் எப்போதுமே அடுத்த நாடுகளையோ அல்லது அயல்நாடுகளையோ அண்டவிடாதது. இக்காலத்தில் இந்தியா திடீரென யாழ்மாவட்டத்தின் பல பகுதிகளில் வானிலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 
 
காப்பதற்கு இந்தியா கட்டாயம் வருமென்று நம்பிய தமிழர்களின் நம்பிக்கைக்கு உற்சாகத்தை வழங்கியது போல 04.06.1987 இந்திய விமானங்கள் போட்ட உணவுப்பொதியில் ஈழத்தமிழரின் விடிவின் காலமும் நெருங்கியதாகவே உணர்ந்தது தேசம். புலிகள் மட்டும் இந்திய அரசின் போலி இரக்கத்தைப் புரிந்து கொண்டார்கள். 
 
04.06.1987 அன்று யாழ்குடாவில் இந்திய வான்படையினரால் போடப்பட்ட உணவுப்பொதிகளும் அதன் ஏற்பாடுகளும் பற்றிய செய்தியானது அப்போதைய இந்திய ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்ட விடயமாகும்.
‚'ஒப்பிரேசன் பூமாலை' என பெயரிடப்பட்டு நடைபெற்ற மேற்படி உணவுப்பொருட்களை இந்தியா போடுவதற்கான காரணத்தை இப்படித்தான் அந்நாளில் சொல்லப்பட்டது.
 
'கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.'
 
இப்படித்தான் அன்றைய ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருந்தது. இந்தியா எங்களைக் காக்கும் எங்களின் நேச சக்தியென்றுதான் நம்பியது தமிழினம். 
000           000              000
 
புலிகளின் வீரமும் இக்கட்டு நிறைந்த காலங்களையெல்லாம் தங்கள் மனபலத்தால் வென்ற தைரியமும் அந்த இக்கட்டு மிகுந்த காலத்தை கப்டன் மில்லர் என்ற மாவீரனின் தியாகத்தால் மீட்டுத் தந்தது. 
 
05.07.1987 அன்று வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலயத்தில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது உயிராயுதமாக மில்லர் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தில் உட்சென்று வெடித்து பெரும் அழிவை இராணுவப் படைகளுக்கும் அரசுக்கும் ஏற்படுத்திய பேரிடியில் சிங்களத்தின் மனபலமும் உடைந்து போனது. 
 
அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கனவை உடைத்து கரும்புலியின் வரலாற்றை எழுதிய முதல் கரும்புலி வீரன் கப்டன்.மில்லரின் அந்தத் தாக்குதலோடு அதுவரை திமிரோடு ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட இராணுவ வல்லமையின் ஆணவமும் அடங்கிப்போனது. 
 
புலிகளின் வரலாற்றில் குறைந்த இழப்பின் மூலம் எதிரி மீதான பெரும் அழிவைக் கொடுக்கும் உயிராயுதங்களின் திறனை ஆடி 5, 1987 உலகிற்கும் சிங்களத்திற்கும் உணர்த்தியிருந்தது. இனி போர் மூலம் வெற்றியைப் பெற முடியாத உண்மையை ஜனாதிபி ஜே.ஆர்.ஜெயவர்த்தன உணர்ந்து கொண்டார். 
 
புலிகளுடன் தோற்றுப்போன ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி அவர்களுக்குமிடையில் 29.07.1987 அன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டது. இவ்வொப்பந்தமானது ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் முகமாக எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்ல.
 
ஓப்பந்தம் எழுதப்படுவதற்கு முதல் விடுதலைப்புலகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள விரும்பியது இந்திய அரசு. இப்பேச்சுவார்த்தையில் தலைவர் பிரபாகரனை பங்கேற்ற வேண்டுமென இந்தியா வேண்டிக் கொண்டதற்கு அமைவாக தலைவர் பிரபாகரன் அவர்களும் மற்றும் போராளிகள் சிலரும் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 
 
அசோகா கொட்டலில் தங்கவைக்கப்பட்ட தலைவரும் போராளிகளும் அங்கே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு வழங்கப்படும் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்பட்டனர். 16வயதில் தன் இனத்தின் விடுதலையை நெஞ்சில் சுமந்து கடினங்கள் துரோகங்களையெல்லாம் தாங்கிப் போராட்ட வாழ்வையேற்று தன்னினத்தின் விடுதலையை மட்டுமே நேசித்த தலைவன் இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்தார். ஆனால் பலம் மிக்கவர்கள் வென்றார்கள். இந்தியாவினால் தமிழினம் ஏமாற்றப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டது. இந்திய இராணுவம் ஈழத்தில் குவிக்கப்பட்டது.
 
எனினும் நேசநாடான இந்தியாவைத் தொடர்ந்தும் நம்பிய புலிகள் மக்களைக் காக்க ஏந்திய ஆயுதங்களையும் இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு தமிழர்களுக்கான நியாமான தீர்வை பேச்சுவார்த்தைகள் தருமென்று நம்பி மக்களுக்காக தங்கள் கைகள் சுமந்த ஆயுதங்களையெல்லாம் இந்தியப்படைகளிடம் ஒப்படைத்து நிராயுதபாணிகளாயினர். 
 
இந்தியா வாக்குறுதியளித்தபடி தமிழர்களுக்கான எந்தவிதமான தீர்வையும் எட்டும் வழிகளைத் தரவில்லை. இன அழிப்பும் தமிழரின் நிலப்பறிப்பும் நடந்து கொண்டேயிருந்தது. ஆயுதம் ஏந்தி களத்தில் விழுப்புண்ணடைந்தும் தனது பணியை அரசியலில் நிலைநாட்டிய தியாகி திலீபன் அவர்கள் இந்தியாவின் கபடத்துக்கு முன்னால் 5அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் மேற்கு வீதியில் உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை பசித்தீமூட்டியெரித்து பாடையில் ஏறினார்.  இந்தியா பேசாதிருந்தது. 
 
கடலில் போன கடற்புறாக்களான தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளும் பலாலியில் சயனைட்டை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவியும் இந்தியா மௌனமாயே இருந்தது. தமிழின அழிப்பும் தமிழர் நிலப்பறிப்பும் தொடராகவே....!
 
தன்னினம் காக்கப்பட ஏந்திய துப்பாக்கிகளை மீண்டும் புலிகள் தமிழினம் காக்கப்பட ஏந்த வேண்டிய விதியை எழுதியது இந்தியா. குறைந்தளவிலான போராளிகளோடு பெரும் படைபலமும் ஆயுத பலமும் கொண்ட இந்தியப் படைகளுடன் புலிகள் சண்டையிட வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவே ஏற்படுத்தி 10.10.1987இன்று இந்தியப்படைகளுடன் யுத்தம் மூண்டது.
காக்க வந்த படைகளால் தமிழினம் அழிக்கப்படத் தொடங்கியது. வயது வேறுபாடின்றி கொன்று குவித்து பெண்களை பாலியல் வன்புணர்வு புரிந்து ஈழம் மறந்து போகா வடுவை இந்தியப் படைகள் ஈழத்தில் செய்து கொண்டிருந்தது. பெரும் படையின் பெரும்பலத்தோடு புலிகள் போராடத் தொடங்கினார்கள். 
 
மக்கள் பலம் புலிகளுக்கு எப்போதுமே பெரும்பலமாய் வீடுகளில் அடைக்கலம் கொடுத்து போராளிகளைப் பாதுகாத்து சமராடும் புலிகளுக்கு ஆதரவழித்தனர். ஆதரவு கொடுத்தவர்கள் இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்னிய இராணுவத்தின் கையில் எங்கள் தேசம்....!
 
87களில் வன்னி மாவட்டத்தின் பொறுப்பாளராயிருந்த ஜெயமண்ணாவின் பணிகளானது மிகவும் முக்கியம் வாய்ந்தது. போராளிகள் மக்களுடன் மக்களாக கிராமங்களில் விழித்திருந்த காலங்கள்.  அக்காலத்தில் காட்டில் தலைவனைக் காவல் காத்துக் கொண்டிருந்த போராளிகள் தளபதிகளுடன் தளபதி ஜெயமண்ணாவும் தலைவனைக் காக்கும் பணியில் நியமனம் பெற்று தலைவனின் அருகில் தனது பணிகளைத் தொடர்ந்தார்.
4226058649_b27d092ab1.jpg
 
புதிய போராளிகளை உருவாக்குதல் தொடக்கம் அந்தக்கால இறுக்கத்திற்கு ஏற்ப திட்டமிடல் பணிகளை விரிவுபடுத்தல் செயற்படுத்தல் என ஓய்வு மறந்து இயங்கிக் கொண்டிருந்த போராளி. பல சண்டைகளில் தனது ஆழுமையை சாதுரியத்தை வெளிப்படுத்திய சத்தமில்லாத சாதனையாளன். இயல்பிலே அமைந்த தனித்துவப் பண்புகள் மக்களின் மனங்களை வென்ற தளபதியாக இனங்காட்டியது. 
000             000             000
 
1990இந்திய இராணுவ வெளியேற்றம் நிகழ்ந்து புலிகளின் போரியல் வீச்சும் மாற்றம் கண்ட காலம். 90இற்குப் பின்னர் தலைவரின் பாதுகாப்பணியில் செயற்படத் தொடங்கினார். தலைவனின் நம்பிக்கை , தலைவனின் பாதுகாப்பு , போராளிகளின் அன்பையெல்லாம் பெற்றிருந்த போராளியின் தியாகத்திற்குச் சவாலாக 1993காலப்பகுதி அமைந்தது. 
 
தலைவனை தலைவனின் பாதுகாப்பை தமிழரின் விடிவையுமே சிந்தித்துக் கொண்டிருந்த ஜெயமண்ணா அக்காலத்தில் நிகழ்ந்த அத்தனை துயர்களையும் தாங்கினார். தனது கொள்கையில் என்றுமே தலைவனுக்குரிய போராளியாகவே வாழ்ந்தார். அக்காலத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் யாவையும் உறுதியோடு கடந்தார். தளபதியாக என்றும் கோலோச்ச விரும்பாத தளபதி. ஒரு வீரவேங்கையாக இறுதி வரை வாழ்ந்து வன்னியில் அமைந்த துயிலிடம் ஒன்றில் தன்னை விதையாக்கவே விரும்பிய சுயநலம் மறந்த மக்கள் மனங்களை வென்ற மாவீரன்.
 
‚'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் கலங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே'' என்ற பாடலை சக தோழர்களுக்கு எழுதிக்காட்டி தைரியம் கொடுத்து நடந்து முடிந்த எல்லாத்துயரையும் தலைவனை நினைத்தபடியே வென்றார். அரிச்சந்திரன் கதையை மட்டுமே அறிந்த போராளிகள் முன்னே அரிச்சந்திரனாய் வாழ்ந்து காட்டிய அதிசயம் ஜெயமண்ணா.
 
உண்மைகள் ஒருபோதும் உறங்காது என்ற உண்மையை ஜெயமண்ணாவின் காலம் மீண்டுமொருமுறை உணர்த்தியிருந்தது. அமைதியோடு ஏற்பட்ட கசப்புகளை கவலைகளையெல்லாம் தகர்த்தெறிந்து மெல்லெனப் பாய்ந்தோடிய ஜெயம் என்ற நதியின் கால்கள் உண்மையை வெளியில் கொண்டு வந்து தன் இலக்கில் உறுதியோடு பயணித்தது.
000         000      000
 
காலம் 1997....,
வன்னியை இரு துண்டமாகப் பிரித்து உட்புக முயன்று கொண்டிருந்த சிங்களப்படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிங்களத்திற்கு யாழ்ப்பாணத்திற்கான சகல விநியோகமும் கடல் மார்க்கமாகவே நடந்து கொண்டிருந்தது. அதுவும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களினால் பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருந்தது. 
 
சிங்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த வவுனியா நகருக்கும் யாழ்ப்பாணத்திற்குமான வழியான ஏ9 நெடுஞ்சாலையானது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. யாழ்ப்பாணத்துக்கான விநியோகத்தினை ஏ9 ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏ9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றினால் மட்டுமே சிங்களத்தால் இலகுவான வழங்கலை யாழ்பகுதிக்கு செய்ய முடியும். 
 
ஏ9 பாதையை கைப்பற்றுவதற்கு முதல் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் பாதையைப் பிடிப்பதற்கான முயற்சியில் „'எடிபல' என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது சிங்களம். அந்நடவடிக்கையின் மூலம் தமிழர்களின் வீடுகள் சொத்துக்கள் பெரும் அழிவை எதிர்கொண்டு இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நிலத்தைவிட்டு இடம்பெயர்ந்தார்கள். 
அடுத்த கட்டமாக 13.05.1997அன்று ஜெயசிக்குறு பெயரிடப்பட்டு சிங்களம் ஏ9பாதை கைப்பற்றும் நோக்கில் 20ஆயிரம் படைகளைக் கொண்டு சமரைத் தொடங்கியது. 
111-300x202.jpg
 
இந்நடவடிக்கையானது ஒரேநாளில் இருமுனைகளின் ஊடாக சிங்களம் படைநகர்வை ஆரம்பித்தது. தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தையை நோக்கிய ஒரு நகர்வும் , மணலாற்றிலிருந்து நெடுங்கேணி நோக்கிய மறு நகர்வாகவும் சிங்களப்படைகள் நகர்வை மேற்கொண்டனர்.
 
இந்நடவடிக்கை மூலம் ஓமந்தையை கைப்பற்றி அதன் ஊடாக ஏ9 பாதையூடாக முன்னேறும் படைகளும் , நெடுங்கேணியிலிருந்து முன்னேறி வரும் படைகள் புளியங்குளம் வரையும் கைப்பற்றி இரு நகர்வும் புளியங்குளத்தில் சந்தித்து கிளிநொச்சியை கைப்பற்ற ஏ9 பாதைவழியே முன்னேறும் திட்டமிடலுடன் தொடங்கப்பட்டது. அரசின் உச்ச பலமும் இந்நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது. வான், தரை உள்ளிட்ட சகல ஆதரவோடும் நகரத் தொடங்கியது சிங்களம்.
 
புளியங்குளம், கனகராயன்குளம், ஒலுமடு, கரிப்பட்ட முறிப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சமர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் நிகழ்ந்த பெரும் சமர்களாகும். நீண்டகாலம் நீடித்த இச்சமரில் எதிரியால் மாங்குளம் வரையுமே நகர முடிந்தது. 
 
புலிகளின் போராட்ட வரலாற்றில் ஜெயசிக்குறு சமரானது புதிய வடிவத்தில் நடைபெற்ற சமராக வரலாற்றில் பதிவாகியது. இப்பெரும் சமரில் களமுனைத்தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயமண்ணாவின் படையணிகளின் பங்கானது அந்தச் சமரின் வெற்றியில் கணிசமான பங்கை வழங்கியது.
 
அடுத்து புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட கிளிநொச்சி முகாம் அழிப்பு நடவடிக்கையில் திருவையாறு பகுதியால் சென்ற அணியின் தளபதியாக ஜெயமண்ணாவும் அவரது படையணியும் சென்றிருந்தது. புலிகளினால் வெல்லப்பட்ட கிளிநொச்சி வெற்றியில் ஜெயமண்ணாவும் அவரது படையணியும் தங்களுக்கான கடமையை முடித்தார்கள். மீண்டது கிளிநொச்சி. 
 
எப்போதுமே தனக்கு வழங்கப்படும் பணியை நேர்த்தியுடன் செய்து முடிக்கும் தளபதியாகவே ஜெயமண்ணா வெற்றி தந்த சமரான கிளிநொச்சி மீட்பிலும் பங்காற்றியிருந்தார்.
 
அடுத்து வீழ்ந்தது ஆனையிறவு முகாம். எத்தனையோ இழப்புகளை 1991இல் இருந்து ஆனையிறவு மீட்புக்காக இழந்ததற்கான பலன் 2000ம் ஆண்டு புலிகளால் ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டது. உப்பளக்காற்றில் வாசனையில் ஜெயமண்ணாவின் பணிகளும் கலந்தேயிருந்தது. ஆனையிறவு வீழ்ச்சியைத் தொடர்ந்து யாழ்மண்நோக்கிய புலிகளின் பாச்சலிலும் ஜெயமண்ணாவின் தடங்களும் அந்த வெற்றியில் பதிந்திருந்தது. 2001இல் நடைபெற்ற தீச்சுவாலை நடவடிக்கையிலும் ஜெயம் என்ற ஆழுமையும் ஆற்றலும் தனது கடமையில் பின்செல்லாமல் முன்னேறிச் சென்ற சாதனையாளன். 
248772_215275091840521_100000740956535_6
 
காலஓட்டம் ஜெயமண்ணாவின் திறனையும் தன்னோடு எழுதிக் கொண்டே சென்றது. புலிகளின் வேவு அணியின் வளர்ச்சியானது புதிய பரிமாணத்தையும் புதிய வடிவத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டிய காலத்தின் வேகத்தில் வேவு அணியின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் ஜெயயமண்ணா. 
 
அதிகளவிலான போராளிகளை உள்வாங்கி உருவாக்கி வேவு அணியின் வீரியத்தை வேகப்படுத்திய பெருமையின் வேரில் ஜெயமண்ணாவின் அர்ப்பணிப்பும் தியாகமும் வெளியில் தெரியாத ஆனால் வேங்கைகளின் வரலாற்றில் மாற்றத்தைக் கண்ட அணியாகும்.
000                  000                     000
 
1998காலம் மன்னார் மாவட்டத்தின் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு மன்னாரில் தனது பணிகளை ஆரம்பித்திருந்தார். போராட்டத்தில் இன்னொரு இக்கட்டான காலத்தை புலிகள் எதிர் கொண்ட காலமாக அமைந்த அக்காலத்தில் ஜெயமண்ணாவின் ஆற்றலும் சாதனைகளும் காலங்களால் மறக்க முடியாத பதிவுகள். 
 
அப்போது தலைவரால் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் மாவீரர் துயிலுமில்லங்கள் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. மாவீரர் துயிலுமில்ல வடிவமைப்பு , பாதுகாப்பு , கவனிப்பு அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு உரிய கடமைகளுடன் ஒன்றாக வழங்கப்பட்டிருந்தது.
 
களமுனைப்பகுதி பிரதான தளபதிகளான தளபதி தீபன் கிளிநொச்சி துயிலுமில்லம் ,தளபதி பானு வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம் ,தளபதி துர்க்கா ஆலங்குளம் துயிலுமில்லம், தளபதி கேணல் சங்கர் முள்ளியவளை துயிலுமில்லும் , பாலதாஸ் பண்டிவிரிச்சான் துயிலுமில்லம் , கேணல் ரமேஸ் விசுவமடு துயிலுமில்லம் என வழங்கப்பட்டிருந்தது.
 
தமிழீழக் கனவோடு களமாடி வீரச்சாவடையும் ஒவ்வொரு மாவீரரின் கல்லறைகளையும் தானே நேரில் நின்று வடிவமைப்பாளர்களோடு தானும் பணியாளனாகி மாவீரர்களின் கல்லறைகளை வடிவமைத்து முழுமையான வெற்றியை அடைந்தவர் என்றால் அதில் ஜெயமண்ணாதான் முதன்மையானவர். 
 
மாவீரர் துயிலுமில்லங்களை வடிவமைக்க வழங்கப்படும் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. ஆனால் கொடுக்கப்பட்ட வளங்களை வைத்து மிகவும் பிரமாண்டமாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் மாவீரர் துயிலுமில்லங்களை செய்து முடித்த தளபதியாக தலைவரால் பாராட்டுப் பெற்ற ஒரேயொரு தளபதி ஜெயமண்ணாவே.
 
ஆண்டான்குளம் துயிலுமில்லத்தின் உறுதியின் உறைவிடத்தின் கல்லறை வடிவமைப்பை மிகவும் நேர்த்தியாகச் செய்து முடித்தார். அதேபோல மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தின் கல்லறைகள் வடிமைப்பில் ஜெயமண்ணாவின் பணியை அர்ப்பணிப்பை மறக்கவே முடியாதளவு சிறப்பாகச் செய்து முடித்தார். 
 
மாவீரர் துயிலுமில்லங்களில் அமைக்கப்பட்ட களஞ்சிய அறைகளில் சிலமணிகள் ஓய்வெடுத்துக் கொண்டு கால நேரமின்றிச் செயற்பட்டு மாவீரர்கள் உறங்கிய மாவீரர் உறங்குமிடங்களை உருவாக்கும் பணியில் ஒரு சாதாரண பணியாளனாகிச் செயற்பட்ட தளபதி.
 
ஒரு தளபதியாக அந்த மாவட்டத்தின் நிர்வாக விடயங்கள் முதல் கிராமங்கள் ரீதியான நிர்வாக ஒழுங்குகளையெல்லாம்; ஒருங்கே கவனிக்கும் பாரிய பொறுப்பினை இலகுவாகச் செய்து கொண்டதோடு மக்களோடு மக்களாகி அவர்களது பிரச்சனைகள் இடைஞ்சல்களை அறிந்து அதற்கான தீர்வை வழங்கும் முதன்மையான போராளியாத் திகழ்ந்தார்.
 
புலிகளின் அரசியல் நிர்வாக ஒழுங்குகளில் எங்கேனும் ஏற்படும் மக்களுக்கான அசௌகரியங்களை என்றுமே அலட்சியம் செய்ததில்லை. அங்கெல்லாம் தானே நேரடியாக நின்று மக்களுடன் உறவாடி அவர்களது பிரச்சனைகளை தலைமைக்கு எடுத்துச் சென்று தீர்வைப் பெற்றுக் கொடுக்கிற துணிச்சல் மிக்க மனிதன். 
 
குறிப்பாக தமிழீழ ஆயத்துறையின் வரி அறவீட்டு விடயத்தில் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளை தானே தலைமையிடம் கொண்டு சென்று சரியான தீர்வையும் பெற்றுக் கொடுத்து ஆயத்துறைப் போராளிகளின் தொடர்ந்த பணிகளுக்கான வழிகாட்டியாகவும் மாறியிருந்தார். மக்களின் மனங்களை வென்று மக்களோடு நல்லுறவைப்பேணி மக்களுடனேயே வாழ்ந்தார்.
 
போராட்டத்திற்குத் தேவையான ஆட்திரட்டலை மிகவும் திறம்படச் செய்தவர்களில் ஜெயமண்ணாவின் பங்கு மறக்க முடியாதது. தனது பேச்சாற்றலால் உண்மைகளை உரிய நேரத்தில் வெளிப்படுத்தி பறிபோகும் நிலத்தை மீட்க போராளிகளை இணைக்க அந்த நாட்களில் மன்னாரில் ஜெயமண்ணாவின் பங்கை காலத்தினால் மறக்க முடியாது.
 
000                  000                     000
சமாதான காலம். ஆற்றலின் வடிவமாய் அமைதியின் உருவாய் கடந்து வந்த பாதைகளின் காலத்தை வென்ற போராளியாயிருந்த தளபதி அரசியல் பேச்சு மேடைகளில் கூட வெளிநாடுகளிற்கும் சென்று வந்த அரசியல்ஞானி. என்றுமே தனது வாழ்வை தனது தாயக விடுதலைக்காயே கொடுத்து வாழ்ந்ததோடு தனது வாழ்க்கைத் துணைவியையும் போராளியாகவே தேர்ந்தெடுத்தார். 
colonel-jeyam.jpg
 
வெளிநாட்டு வாழ்வையும் பணபலத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளையெல்லாம் பெற்றிருந்தும் கடைசிவரை தலைவனுடன் தலைவனின் பாதையில் சென்று முடியும் நினைவோடே இறுதிக்காலம் கணவன் மனைவி இருவருமே களத்தில் நின்றார்கள். 
 
2006 தொடக்கம் 2007 4ம் மாதம் வரையிலும் கிழக்கு மாகாணத்தில் நின்று அந்தக் களங்களை வழிநடத்திய ஆற்றலின் வடிவம். எப்போதுமே சுயநலமற்ற தேசக்காதலை மட்டுமே நெஞ்சில் சுமந்து வாழ்ந்த எளிமையின் பெருமையெல்லாம் ஜெயமண்ணாவின் போராட்ட வாழ்வின் வித்தியாசமான சாட்சிகள். பல விடயங்களில் உதாரணமாகவும் உயர்ந்தவராகவும் வாழ்ந்து காட்டிய வரலாற்றின் புதல்வன்.
 
களத்தி;ன் கடைசிச் சாட்சியங்களும் அழியவிருந்த 2009மே மாதம் 17ம் திகதி வரையும் களமாடிய வீரன். கையுயர்த்திச் சாவடையும் நிலமையை வெறுத்துக் கடைசிச் சொட்டு உயிருள்ள வரையும் எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அந்த மக்களின் நினைவோடும் அந்த மண்ணின் கனவோடும் தங்கள் இறுதி மூச்சையும் இலட்சியக்கனவையும் சுமந்து கொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் கணவன் மனைவி இருவரும் சுடுகலன்களோடே காவலிருந்தார்கள். 
 
வெளிநாடுகளில் இருந்த நண்பர்கள் ஜெயமண்ணாவின் துணைவி நளாக்காவை பிள்ளைகளுடன் வெளியே வருமாறு வேண்டினர். கோல்சர் கட்டீட்டன்....பிள்ளைகளை நீங்கள் பாப்பியள் தானே...எனச் சொல்லிவிட்டு குழந்தைகள் சிந்துசை , அகரன் இருவரையும் கூட மறந்து இறுதி வரை போராடுவோம் என உறுதியோடு நின்ற அந்த வித்தியாசமான தம்பதிகள் இருவரையும் நினைவு கொள்ளும் நண்பர்களிடம் அவர்களது தேசம் மீதான காதலும் தேசியத்தலைவர் மீதான அன்பையும் பற்றிய ஆயிரக்கணக்கான கதைகளும் கனவுகளும் நிறைந்து கிடக்கிறது.
 
கடைசிக்கள முடிவினை உலகம் எப்படியோ எல்லாம் எழுதியும் ஆய்வுகள் செய்தும் கொண்டிருக்க அந்த முள்ளிவாய்க்கால் கரைகளில் தங்கள் இருவரின் உயிரையும் விதைத்து வீழ்ந்து வீ(மீ)ளாத கனவுகளோடும் கலந்து போனார்கள் தளபதி ஜெயமண்ணாவும் அவரது துணைவி நளாக்காவும். அவர்களது குழந்தைகளை குடும்ப உறவுகளை யாரையுமே எண்ணாது மண்ணுக்காகவே வாழ்ந்து அந்த மண்ணிலேயே மடிந்து போனார்கள்...மறக்க முடியாத வீரமாக....வீரர்களாக....! 
 
முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்துக் கொண்டது. ஆற்றல் மிக்க தளபதிகள் , போராளிகள் உயிர்கள் அந்தக் கடற்காற்றின் ஓலத்தோடு கலந்து ஒரு காலத்தின் கதையை தன் காற்றோடு சுமந்து கடந்தது....! அந்தக் காற்றோடும் கடல் அலைகளோடும் ஜெயமண்ணா, நளாக்கா இருவருமே காலம் கடந்தும் வாழும் தம்பதிகளாக ஈழ விடுதலை வரலாற்றில் எழுதப்பட்ட வீரர்களாக எங்களோடு வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். 
05.2014
நினைவுப்பகிர்வு :-  சாந்தி   
Email :- rameshsanthi@gmail.com
Link to comment
Share on other sites

கசப்பான கால விசாரணை முடிந்து தலைமைக்கு முடிவு எடுக்கம் படி அறிக்கை போகிறது ...பார்த்த தலைமை சரி ஆள் வீடுக்கு போகும்படி பதில் கொடுக்கிறார் அதை ஜெயம் அண்ணைக்கு கூறினார்கன் அண்ணை உங்களை வீடுக்கு போகட்டம் என்று ..

சிரித்தபடி ஜெயம் அண்ணை சொன்ன பதில் சுட்டுபோட்டு உடலை கொடுக்கபடி அதை கேட்ட தலைவர் இவன் என்ன இப்படி இருக்கிறான் என்று திகைத்து ஜெயம் அண்ணையின் மனஉறுதி கண்டு மீண்டும் அவரை போராட்ட வாழ்வில் இணைக்கிறார் 1997 ஆம் ஆண்டு தாண்டிக்குளம் மீதான தாக்குதலுக்கு கருணாம்மான் தலமையில் ஒரு பிளாட்டுன்  லீடரா ஜெயம் அண்ணை வருகிறார் ...அப்பொழுது விஷேட வேவுக்கு தளபதியா லெப்டினன்  கேணல் தனம் பொறுப்பாக இருந்தார் ..

 

ஜெயம் அண்ணையை பார்த்த அனைவருக்கும் ஒரு வியப்பு இவ்வளவு உயரம் ஆள் ஒரு இராணுவ மிடுக்கு பக்கத்தில் போகவே பயம் வரும் பார்ப்பவர்களுக்கு ஆனால் மிக இளகிய பாசக்காரன் பேசும்போது கண் கலங்கினா மீண்டும் பேசாமல் சரி போ என்று அனுப்பி விடுவார் ..

தாண்டிக்குளம் சண்டையில் தொடையில் காயப்பட்டு இரண்டுநாள் களமுனையில் நின்றார் எவருக்கும் சொல்லவில்லை காயம் என்று பின்னர் சோர்வு வரும்போதுதான் கண்டுபிடித்து பின்னணிக்கு அனுப்பபட்டார் ....

 

அதே காலப்பகுதியில் பெரியமடு நோக்கி முன்னேறிய ராணுவத்தின் மீதான தாக்குதலின் தனம் அண்ணை வீரச்சாவு அடைகிறார் சண்டை முடிந்து வேவு போராளிகள் சோகமா முகாம் திரும்ப ஒரு புத்துணர்வா வந்து இறங்கினார் தளபதி ஜெயமா விஷேட வேவு புலிளை பொறுப்பெடுக்க வந்தவுடன் சொன்ன வார்த்தை வ தகடு என்றால் வண்டில் இருந்து சோறு சாப்பிட வேணும் தம்பியா ..

அன்றில் இருந்து மன்னார் மாவட்டம் பொறுப்பு எடுக்கும் வரை தனது பணிகளை மிக சிறப்பா செய்து கொண்டு இருந்தார் ..

 

பின்னர் திருமண பேச்சு எழும்போது ஜெயம் அண்ணையை விசாரணை செய்த புலனாய்வு துறை ஞானம் அக்காதான் அவரை திருமணம் செய்ய போறாவாம் என்று கதை வரும்போது எல்லோருக்கும் அவரை பார்க்கும் ஆர்வம் இவரை விசாரிச்சவா என்றால் அவர் பெரியா ஆள் என்று சும்மா பகிடி கதைப்பாங்கள் ....

 

திருமணத்தை நடத்தி வைத்த தலைவர் மாலை எடுத்து கொடுத்துவிட்டு சொன்னது உன்னுடைய சீதனக்காணி நீயே அடிச்சு பிடிச்சது எடு என்று அப்பொழுதான் தெரியும் ஞானம் அக்கா மன்னார் மாவட்டத்ததை சேர்த்தவர என்று ...

 

ஓயாத அலைகள் மூன்றை தொடக்கி வைத்தவரும்  ஜெயம் அண்ணையே பெயரில் வெற்றியை சுமந்த தளபதி  :(  :(

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

இறுதி யுத்தத்தில் இதே நாள் மே 15 இல், ஒரு திகைப்பு தாக்குதலுடன், முக்கிய போராளிகளை நகர்த்தும் பொறுப்புக்கு ஜெயம் அண்ணை நியமிக்கபட்டு இருந்தார்.

கடல்வழியாக அளம்பிலுக்கும் கொக்குதொடுவாயிற்கும் இடைபட்ட ஒரு காட்டு பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட படகுகளில் கடற்புலிகளின் உதவியுடன் நடாத்தும் ஒரு தரையிறக்க தாக்குதலை ஜெயம் அண்ணை தீட்டி இருந்தார்.

7 அடுக்கு சிங்கள கடல் பாதுகாப்பை மீறி ஏற்படுத்த போகும் அந்த திகைப்பு தாக்குதல்.

அன்று தான் நான் கடைசியாக ஜெயம் அண்ணையை கண்டேன்.

அந்த உயரமான ஆளுமை மிக்க, மென்மையான உள்ளம் கொண்ட, நகங்களை புடுங்கியும், புடுங்கிய அதே இயக்கத்துக்காக உயிரை கொடுக்க கூடிய ஒரு மன உறுதி மிக்க போராளியை, தளபதியை மீண்டும் என் வாழ்வில் காணப்போவது இல்லை என்று அன்று எனக்கு தெரியவில்லை.

Link to comment
Share on other sites

ஜெயமண்ணா பற்றிய உங்கள் நினைவுகளையும் பகிர்ந்த அஞ்சரன், பகலவன் மற்றும் விருப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். 


அந்த உயரமான ஆளுமை மிக்க, மென்மையான உள்ளம் கொண்ட, நகங்களை புடுங்கியும், புடுங்கிய அதே இயக்கத்துக்காக உயிரை கொடுக்க கூடிய ஒரு மன உறுதி மிக்க போராளியை, தளபதியை மீண்டும் என் வாழ்வில் காணப்போவது இல்லை என்று அன்று எனக்கு தெரியவில்லை.

இலட்சியவாதிகள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் இறுதிவரை இலட்சியத்துக்காகவே வீழ்ந்தார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.