Jump to content

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதவாத சக்திகளுக்கும் இன துரோகிகளுக்கும் மரண அடி கொடுத்த தமிழ் வாக்காளர்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அதுகுறிகட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் மூலமாக மதவாத சக்திகளுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழத் துயரங்களுக்குத் தீர்வு கேட்டும் தனித் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தும் மூவர் தூக்கு விவகாரத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தும் தமிழர் நலன் போற்றும் முதல்வராக திகழ்ந்த மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு அபரிமிதமான வெற்றியை ஈட்டிக் கொடுத்து வரலாற்றுப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள் தமிழக மக்கள்.

தமிழகத்தின் தேவைகளை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக முழங்கவும் தமிழக உரிமைகளைப் பாதுகாக்க உரியபடி போராடவும் அ.தி.மு.க.வே சரியான கட்சி என்பதை மக்கள் திட்டவட்டமாக தீர்மானித்திருக்கிறார்கள்.ஈழ கோரங்களுக்கு துணை போனவர்கள்மூன்றாவது அணி என்கிற பெயரில் பரப்பப்பட்ட பொய்ப் பிரசாரங்களுக்கு இடம் கொடுக்காமல் இனமானப் பிள்ளைகளாக மதவாத சக்திகளை வீழ்த்திக் காட்டி இருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழக் கோரங்களை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சியையும் அதற்குத் துணை போன தி.மு.க.வையும் வேரோடு வீழ்த்திக் காட்டி நம் இனம் பட்ட ரணத்தின் வலியை தமிழக மக்கள் தக்கபடி திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.மோடி அலையை ஊதித் தள்ளிய தமிழகம் பாரதீய ஜனதா கூட்டணி அகில இந்திய அளவில் வென்றாலும், தமிழகத்தில் அந்தக் கட்சி தளிர்விட முடியாத நிலையை வாக்காள பெருமக்கள் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். பல கட்சிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட கூட்டணிபோல் காட்டியும் மோடி அலை என மூச்சடங்கப் பேசியும் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியால் எந்தவிதப் பலனையும் பெற முடியாமல் போய்விட்டது. இந்தியா முழுக்க எழுந்த மோடி அலை தமிழகத்தில் மட்டும் ஊதித்தள்ளப்பட்டதற்கு தமிழக மக்களின் அரசியல் தெளிவும் அறிவுமே காரணம். முதல்வருக்கு வாழ்த்துகள்எந்தக் கட்சியையும் கூட்டணிக்கு அழைக்காமல் மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலைச் சந்தித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் நல்ல நம்பிக்கையைப் பரிசளித்திருக்கிறார்கள். இலையை ஆதரித்து தமிழகம் முழுக்க பரப்புரை செய்தபோதே அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என நான் அழுத்தமாக முழங்கி வந்தேன். மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தின் நலன் பேணும் நடவடிக்கைகளை முதல்வர் எந்நாளும் தொடர்வார் என்றும், நாடாளுமன்றத்திலும் மிகுந்த பலத்தோடு தமிழகத்துக்கான‌ உரிமைகளை முழங்க வைப்பார் என்றும் நாம் தமிழர் கட்சி நம்புகிறது. சுயநல திமுகஇதுகாலம் வரை மத்தியில் செல்வாக்கு இருந்தும் பதவி பகட்டுகளுக்காக ஈழம் தொடங்கி தண்ணீர் விவகாரம் வரை சுயநல நோக்கில் மட்டுமே செயல்பட்ட தி.மு.க.வை வீட்டில் உட்கார வைத்து தக்கபடி பதிலடி கொடுத்திருக்கும் தமிழக மக்கள் அறிவிற்சிறந்தவர்களாக தங்களை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நியாயத்தின் வழி நின்று தக்க தீர்வை அளித்த தமிழக மக்களுக்கும் நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்

http://tamil.oneindia.in/news/tamilnadu/seeman-s-statement-on-election-results-lse-201134.html

Link to comment
Share on other sites

  • Replies 474
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏம்ப்பா வாங்குன காசுக்கு கூவுனேன் இது ஒரு தப்பா....தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கா இல்லையா...

10367745_675688212468547_759818267811974

 

யாருங்க இது? :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருங்க இது? :(

 

திமுக பிரச்சார பீரங்கி..Manushya puthiran :D

 

முகநூலில ஒரு சவுன்டையும் காணோம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில்  காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை
பா ஜ க இரண்டாம் இடத்தில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ வெற்றி பெறவில்லை என்பது வருத்தமாயிருக்கிறது.காங்கிரசும்,திமுகவும் தோற்றது மகிழ்சியளிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திக் சிதம்பரம் டூ ப சிதம்பரம் :-)) டேய் தகப்பா.. டெப்பாசிட் கூட தேறாதுன்னு தெரிஞ்சே என்னை சிக்க வைச்சுக்க நீ..

10363807_254405998078074_193778726170799

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய அளவில் பா ஜ க 338
காங்கிரஸ்                            59
மற்றயவை                        149

 

தொகுதிகளில் முன்னிலை
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியால் இந்திய அரசியலில் இருந்து காங்கிரசு ஒதுங்காது - ஞாதேசிகன்

தமிழக அரசியலில் இருந்து ஒதுங்கலாம் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியால் இந்திய அரசியலில் இருந்து காங்கிரசு ஒதுங்காது - ஞாதேசிகன்

தமிழக அரசியலில் இருந்து ஒதுங்கலாம் தானே?

 

காங்கிரஸுக்கு சூடு சொரணை இருந்தா.. அது தலைவி சோனியா தலைமையில்.. எல்லோரையும் கட்சியை விட்டு நிரந்தரமா விலக்கனும்..!  அப்படிச் செய்யாத வரை எனிக் காங்கிரஸுக்கு மீட்சி இல்லை. மோடி அலை வடக்கில் வீசி இருக்கலாம். தமிழகத்தில் இல்லை. அதற்கு நாம் தமிழர் என்ற உணர்வெழுச்சியும் ஒரு காரணம்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டின் பல தொகுதிகளில் எதிர்க் கட்சிகளான காங்கிரஸும் திமுகவும் எடுத்த வாக்குகளைக் கூட்டினாலும் அதிமுகவை வெல்ல முடியாத நிலை  தான் உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசின் முன்னிலை தொகுதிகள் 45 இக்கும் 60 இக்கும் இடையில் ஊசல் ஆடிக் கொண்டு இருக்கிறது. அரைச்சதம் அடிப்பாங்களா? மாட்டாங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... அதற்கு நாம் தமிழர் என்ற உணர்வெழுச்சியும் ஒரு காரணம்..! :icon_idea:

 

நீங்கள் குறிப்பது நாம் தமிழர் என்ற கட்சியையா? இல்லை, நாங்களெல்லாம் ஓரளவாவது "உணர்வுள்ள தமிழர்கள்" என இத்தேர்தலில் நிரூபித்த மக்களையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக தோல்வி: ட்விட்டரில் தயாநிதி அழகிரி கொண்டாட்டம்

"திமுகவின் தோல்விக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும். யாராவது தயாராக இருக்கிறார்களா.. அப்படி என்றால் அது யார்? திமுகவில் ஏதாவது நீக்கம் இருக்குமா? இது வரை வெளியான தேர்தல் முடிவுகளில் திமுக சந்தித்துள்ள மிகவும் தர்ம்சங்கடமான தோல்வி இதுதான். திமுக நிலைமை மிகவும் மோசமாக உள்ளது" 

10290603_1488224668074906_40778963451460

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில்  காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை
பா ஜ க 1  தொகுதி முன்னிலை


பா.ஜனதா கூட்டணி 340 தொகுதிகளில் முன்னிலை: காங்கிரஸ் 59 தொகுதிகளில் முன்னிலை


ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் 7.000 வாக்குகளால் முன்னிலையில் உள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா விளக்குமாத்தோட  ஒருத்தர் திரிஞ்சாரே  அவர்  என்ன ஆனார்  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா விளக்குமாத்தோட  ஒருத்தர் திரிஞ்சாரே  அவர்  என்ன ஆனார்  :D  :icon_idea:

 

அவர்கள் கட்சி பஞ்சாப்பில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டது! :o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்க எங்க கிளம்பியிடிங்க? இன்னும் முடிய இல்லை

sonia_gandi.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
லோக்சபாவில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 10% இடங்களைப் பெறும் கட்சிதான் எதிர்க்கட்சியாக அமர முடியும்.
 
அதாவது 54 இடங்களைப் பெறக் கூடிய கட்சிதான் எதிர்க்கட்சியாக அமர முடியும். ஆனால் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 46 இடங்களில்தான் முன்னிலையில் இருக்கிறது. 50 இடங்களைக் கூட தொட முடியாமல் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.
 
Thatstamil.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோடி தலைமையில் கூட்டணி ஆட்சியே அமையும்: நிர்மலா சீதாராமன்

நடந்து முடிந்திருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தனியாகவே அறுதிப்பெரும்பான்மை கிடைத்தாலும் நரேந்திர மோடி தலைமையில் அமையவிருக்கும் ஆட்சியில் தேர்தலுக்கு முன்னரே அமைத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாக அதை அமைக்கவே பாஜக தன்னால் இயன்ற அளவு முயலும் என்றும் பாஜகவின் பேச்சாளர் நிர்மலா சீதாராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமையுமா, அதிமுகவை பாஜக கூட்டணி அரசில் சேர்த்துக்கொள்வீர்களா என்கிற கேள்விக்கு அது பற்றி இப்போதைக்கு ஒன்றும் கூறமுடியாது என்றும் அப்படி ஒரு சூழல் உருவானால், அப்போது அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும், இன்றைய நிலையில் பாஜகவுடன் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்தவர்களை அரவணைத்துச் செல்வதிலேயே பாஜகவின் முதன்மையான கவனம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

BBC

இந்திய நேரம் மதியம் 2.15 மணி நிலவரம்

140513110449_sonia_gandi_rahul_gandhi_30

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவரது மகனும் அக்கட்சியின் துணைத் தலவருமான ராகுல் காந்தி அமேதி தொகுதியில் முன்னணியில் உள்ளார்.

 

பாஜகவின் ஒரு மூத்த தலைவர் அருண் ஜேட்லி அமிர்தசரஸ் தொகுதியில் தோல்வி. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அம்ரீந்தர் சிங் வெற்றி.

மத்திய அமைச்சர் கபில் சிபல் டில்லியில் சாந்தினி சவுக் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி ஈட்டியுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாளை-சனிக்கிழமை மன்மோகன் சிங் பதவி விலகுவதாகவும் அறிவிப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.