Jump to content

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கூட்டணிக் கட்சிகளுக்கென மொத்தமாக எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்க வழியில்லை.

 

55 தொகுதிகளை எந்த தனிக்கட்சியும் வெல்லவில்லையெனில், எதிர்க்கட்சியே இல்லாமல்தான் இந்தமுறை பாராளுமன்றம் அமையும்

 

நன்றி அண்ணா... தங்கள் விளக்கத்திற்கு. :)

Link to comment
Share on other sites

  • Replies 474
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் இன்றில் இருந்து தான் நாம் தமிழரின் அரசியல் பயணம் தொடங்குகின்றது. எனிவரும் இரண்டு வருடங்களும் ஒரு உத்வேக பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய தேவை உள்ளது. தமிழகத்தின் சரியான தலைமையாக அது மாற வேண்டிய தேவை உள்ளது. நான் நாம் தமிழரின் உறுப்பினர் அல்ல. அதன் எல்லாக் கொள்கையிலும் எனக்கு உடன்பாடில்லை. தமிழனாக தங்களை நினைத்து வாழ்கின்றவர்களுக்கு இன வேறுபாடு காண்பதில் முழுமையான உடன்பாடே இல்லை. ஆனால் இதை எல்லாவிற்றிலும் இருந்து மாறுபட்ட மாற்று சக்திகளுக்கு நிகராக நாம் தமிழர் மாற வேண்டிய அவசியம் உள்ளது.

கலைஞரோ, ஜெயலலிதாவோ இல்லை, வடநாட்டு அரசியல்வாதிகளோ வெல்ல வைப்பதை விடத் தமிழன் என்ற உணர்வோடு வாழ்கின்ற நம்மவர்கள் வெற்றி பெறுவதில் அதிக மகிழ்ச்சி உள்ளது. இன்று நாம் தமிழர்களைப் பற்றிக் கேலி செய்பவர்கள் அதை விடச் சரியான தெரிவு இருப்பின் காட்டுங்கள். இல்லாவிடில் பொத்திக் கொண்டு இருங்கள்...

ஆனால் இப்படியான அரசியல் செய்து நாம் தமிழரால் வெற்றி பெற முடியாது. மக்களின் தேவைகளை உணரவேண்டும். மக்களோடு கட்சியைக் கொண்டு செல்ல வேண்டும். தெளிவான சிந்தனை அரசியலை உருவாக்க வேண்டும். சமீபத்தில் நண்பர் சொன்னார், இலவசத்தை ஒழிப்போம் என்ற நாம் தமிழரின் கொள்கை பற்றி. அப்படி வைத்தால் நிச்சயம் கட்சி தோற்றே விடும். இலவசத்தை ஒழித்தால், அதற்கு நிகராக என்ன உயர்ந்த பலனை மக்கள் பெறுவார்கள் என்பதைச் சொல்ல வேண்டும். எல்லோருடைய மனமும் தேவைகளும் ஏதாவது ஒன்றைக் குறிமத்த கட்சி செய்யுமா என்றே எதிர்பார்;ககின்றது. அதை நிறைவு செய்ய வேண்டும்.

இந்தக் திண்ணை விமர்சனம், கேலி செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதல்ல. இன ஆதரவர்களுக்கானது இது. நரேந்திர மோடியைத் Nனீர் போடச் சொல்லி மணி சங்கர் ஐயர் கேலி செய்தார். இன்று அவரது முகவரியே தெரியவில்லை. ஆனால் அந்தக் கேலியை நரேந்திரமோடி சாதகமாக்கினார். தன் மீதான அனுதாபமாக மாற்றினார். பல இடங்களில் தேனீர்கடைகளுக்கு அவர் பெயரை வைத்தார். அது கிராமப் புறங்களுக்களில் நல்ல எதிர்பார்ப்பினை உருவாக்கியது....

கேலி பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருங்கள்...

Link to comment
Share on other sites

Vaiko

5 மணிகள் ·

கே :தொடர் தோல்விகள், உங்களை மனரீதியாகப் பலவீனம் அடையச் செய்துள்ளதா?'

ப: ''போராட்ட வாழ்வின் அங்கமே தோல்விகளும் படிப்பினைகளும்தான். இடையறாது தோல்விகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து வெற்றிகளைப் பெற்ற மாவீரர்கள், மாமனிதர்களின் வரலாறுகள்தாம் என்னை இயக்கிக்கொண்டே இருக்கின்றன.

எந்தக் கட்டத்திலும், தோல்வியால் மனம் கலங்கியது இல்லை. மாறாக, தோல்விச் செய்தி கிடைத்தவுடன், அந்தக் கணத்திலேயே எழுந்து வேகமாகப் பணி ஆற்றத் தொடங்கிவிடுவேன். 96 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. முழுமையாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்த அரங்கத்தை ஏற்பாடு செய்ய நானே விரைந்தேன்.

உழைக்கும் மக்கள் மாமன்றத் தலைவர் குசேலர் அவர்கள், அதற்கு முன்பு எனக்குப் பழக்கம் இல்லாதவர். அந்த வேளையில் என் வீட்டுக்கு வந்தார்.

'நீங்கள் சோர்ந்துவிடக் கூடாது; ஊக்கத்தோடு தொடர்ந்து இயங்க வேண்டும் என்று சொல்லலாம்என உங்கள் வீட்டுக்கு வந்தேன். இங்கே, நீங்கள் இயங்குகின்ற வேகத்தைப் பார்த்துத் திகைத்துப்போனேன்’ என்றவர், கோடானுகோடி மக்களின் ஆதரவைப் பெற்று இருந்த ஒரு தலைவர், தேர்தல் களத்தில் ஒரு முறை தோற்றவுடன், மிகவும் மனம் உடைந்து சோர்ந்ததையும், அவரது பலத்தை நினைவூட்டி தான் ஆறுதல் கூறியதையும் சொல்லிவிட்டு, எனது போர்க் குணம் தன்னை வியக்கவைத்துவிட்டது என்றார்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் என் தோல்விச் செய்தி வந்துகொண்டு இருந்தபோது, அதற்காக வருந்தித் தீக்குளித்த தலித் சகோதரன் அய்யனாரைக் காப்பாற்ற, வத்திராயிருப்புக்கு விரைந்து சென்று, அவரை மதுரை அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசேர்த்து, உடன் சிகிச்சை தந்து காப்பாற்றியபோதுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது!''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலூர் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன் 203125 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

கடலூர் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன் 203125 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் உதயகுமார் 127845 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தஞ்சையில் அதிமுக வேட்பாளர் பரசுராமன் 1.44 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

கரூரில் தம்பிதுரை 1.95 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

லடாக் தொகுதியில் முதல் வெற்றி: பா.ஜனதா வரலாற்று சாதனை

கன்னியாக்குமரி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 128662 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ

 

1- காங்கிரசுக்கும்

2- திமுகவுக்கும்

3- தேமுகவுக்கும் 

ஒரு இடம் கூட  வரக்கூடாது என்றும்

 

4- பாரதீயஐனதாவை ஆதரிக்காதீர்கள் என்றும்

5- அதிமுக  எல்லா இடங்களிலும் வெல்லணும் என்றும்

உலகத்தில் எவருமே கணிக்கவில்லை

ஆனால் சீமான் சொன்னார்

அது நடந்திருக்கிறது

 

யாழில் கூட எவரும் கணிக்கவில்லை

இப்ப  வந்து அறிக்கைவிடுவது போலித்தனமானது

காலத்துக்கு ஏற்ப ஆடக்கூடாது

அது இந்தப்பழம் புளிக்கும் என்பது போன்றது

 

உங்களால் முடியாததை ஒருவர் செய்திருக்கின்றார்

வெற்றி  பெற்றிருக்கின்றார்

ஏற்றுக்கொள்ளப்பழகுங்கள்.

விடுங்கோ அண்ணா
அவர்களுக்கு தெரிந்தது சிரிப்பும் ஒன்றுக்கும் உதவாத வெட்டிக் கதையும் தான்...சீமான் அன்று சொன்னான் இன்று அதை செய்தும் காட்டி விட்டான்...இனி அவரின் வளர்சியை பொறுத்துக் கொள்ள முடியாத கூட்டத்தோடை நம்மடையலும் செர்ந்து ஜொல்லு விட்டு சிரிக்கட்டும்...அவன் சொன்னான் அதை செய்தான் அவன் தான் உண்மையான அரசியல் வாதி , ஆனால் நம்மவர்கள் அந்த நாள் தொட்டு இந்த நாள் வர சிரிப்பும் கேலி செய்ததும் தான் சாதனை.....! இப்படி பட்டவர்களுக்கு நானாக்க இருந்தால் பதில் கருத்து எழுதி இருக்க மாட்டேன்.... :wub:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்


கூட்டணி    முடிவு
பா ஜ க                  340
காங்கிரஸ்             58
மாற்று அணி        53
மற்ற கட்சிகள்      88
ஆம் ஆத்மி             4

மொத்தம்             543





 


2/3 பெரும்பான்மைக்கு 22 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் பா ஜ க வின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வைகோவின் அரசியல் அல்ல பிரச்சனை புலி அரசியல் இனி எங்கும் செல்லாது.இதை விளங்கிகொள்ளாமல் கத்திக்கொண்டு இருந்தால் ஆகப்போவது எதுவுமில்லை .

இலங்கை ,தமிழ் நாடு ,இந்தியா,சர்வதேசம் எங்கும் நிரூபிக்கபட்டுவிட்டது . 

 

 

அப்போ ஆனந்தி???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்திய பாராளுமன்ற தேர்தல் - 2014 திருவிழாவின் இறுதி முடிவு பட்டியல்.

 

13zmxeb.jpg

 

 

Source: Dinamalar.

Link to comment
Share on other sites

இடதுசாரிகளுக்கு பெருத்த அடியாகிவிட்டது.. அதுபோல சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்றவையும் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்க்கட்சித்தலைவராக பதவியை ஏற்றுக் கொண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசியல் பாடம் படிக்க ராகுல் காந்தி அவர்களை வேண்டிக் கொள்வோம்

Link to comment
Share on other sites

ம தி மு க என்ற கட்சியை கலைத்து விடுவது தான் வைக்கோ தன் தொண்டர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாய் இருக்கும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம தி மு க என்ற கட்சியை கலைத்து விடுவது தான் வைக்கோ தன் தொண்டர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாய் இருக்கும்.....

 

திமுக விற்கு கிடைத்த இந்த பெருத்த அடி அதன் தொண்டர்களை யோசிக்க வைக்கும், ஸ்ராலின் தலைமையில் ஒரு குழுவும்

அண்ணன் அழகிரியின் தலைமையில் இன்னொரு குழுவும் உருவாகும் பொழுது

வை கோ தமிழ் நாட்டின் இரண்டாவது பலமாக வருவார்.

சீம்மனும் வை கோவும் இணையும் பொழுது தமிழ் நாட்டில் தமிழர்களின் ஆட்சி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக விற்கு கிடைத்த இந்த பெருத்த அடி அதன் தொண்டர்களை யோசிக்க வைக்கும், ஸ்ராலின் தலைமையில் ஒரு குழுவும்

அண்ணன் அழகிரியின் தலைமையில் இன்னொரு குழுவும் உருவாகும் பொழுது

வை கோ தமிழ் நாட்டின் இரண்டாவது பலமாக வருவார்.

சீம்மனும் வை கோவும் இணையும் பொழுது தமிழ் நாட்டில் தமிழர்களின் ஆட்சி வரும்.

 

 

உண்மை

அத்துடன் திமுகவின் இரு குழுக்கள் மீதும் அதிருப்தி  கொண்டோர்    

வைகோவிடமே வருவார்கள்

பொறுத்தார் பூமியாழ்வார்

Link to comment
Share on other sites

ஆமாம். சீமான், வைக்கோ, நெடுமாறன் போன்றோர் தமிழகத்தின் தனித்தன்மையை காத்துவைப்பதற்கு உதவுவார்கள்,

 

ஆனால் இங்குள்ள மக்கள் அந்த இன உணர்வோடு சில புறக் காரணிகளையும் மனதில் சேர்த்துக்கொண்டே வாக்குகளை முடிவு செய்கின்றனர்.

 

இந்த வெற்றி ஜெ.யின் அரசியல் காய் நகர்த்தல்மட்டுமே... தமிழக மக்களின் ஈழமக்களிற்கான இரக்க நிலை, தேர்தலுக்காக திமுக எடுக்க நினைக்கும் ஈழத் தமிழர்கள் சார்பான நிலைப்பாடு... இவற்றை எல்லாம் துல்லியமாக கணக்கெடுத்து, விவேகமான முடிவுகளை ஜனநாயக ரீதியில் சட்டசபையில் நிறைவேற்றியதும், அதிமுக வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேர்தல் கருத்துக்களை, கடந்த மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக...
தொடர்ந்து... வாசிக்க வைத்த, சில கருத்துக்களை... மீண்டும் அசை போட்டு வைக்க வைத்தமை....
அருமையாக இருந்தது. :)

வைகோ தோற்றது... கவலை. :(

 

c0c7bf5c-4d6c-4e11-94d6-a9601d805c841.jp

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால்... படுகொலைகளுக்கு, துணை போன... தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும்.
அங்கு... இறந்த லட்சக்கணக்கான, ஆத்மாக்களின் சாபம் வீண் போகவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால்... படுகொலைகளுக்கு, துணை போன... தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும்.

அங்கு... இறந்த லட்சக்கணக்கான, ஆத்மாக்களின் சாபம் வீண் போகவில்லை.

 

 

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதே 19 வைகாசியில் உலகத் தமிழர்கள் எல்லோரும் வீதியில் இறங்கி ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கதறினார்கள். ஆட்சியில் இருந்த  கிந்திய வெறிபிடித்த காங்கிரசோ கருணாநிதியோ கண்டுகொள்ளவில்லை.

 

இன்று இந்த இரு கட்சிகளின் நிலையையும் நினைக்கும் போது

அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும்

என்ற தொடர்மொழி மனதில் வந்து போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதே 19 வைகாசியில் உலகத் தமிழர்கள் எல்லோரும் வீதியில் இறங்கி ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கதறினார்கள். ஆட்சியில் இருந்த  கிந்திய வெறிபிடித்த காங்கிரசோ கருணாநிதியோ கண்டுகொள்ளவில்லை.

 

இன்று இந்த இரு கட்சிகளின் நிலையையும் நினைக்கும் போது

அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும்

என்ற தொடர்மொழி மனதில் வந்து போகின்றது.

 

அந்தப் படுகொலை நேரம்... கருணாநிதிக்கு முதுகு வலி வந்து, ஆஸ்பத்திரிக்கு போய்... மருந்து எடுத்தவர்.

இப்ப... தமிழக மக்கள், நல்ல மருந்து கொடுத்திருக்கிறார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதே 19 வைகாசியில் உலகத் தமிழர்கள் எல்லோரும் வீதியில் இறங்கி ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கதறினார்கள். ஆட்சியில் இருந்த  கிந்திய வெறிபிடித்த காங்கிரசோ கருணாநிதியோ கண்டுகொள்ளவில்லை.

 

இன்று இந்த இரு கட்சிகளின் நிலையையும் நினைக்கும் போது

அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும்

என்ற தொடர்மொழி மனதில் வந்து போகின்றது.

 

 

நிச்சயமாக  இன்று முள்ளிவாய்க்காலை  இவர்களும் நினைவு கூருவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரட் தொகுதியில் நக்மா படுதோல்வி; நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரட் தொகுதியில் நக்மா படுதோல்வி; நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்

 

நக்மாவுக்கு என்ன... இழவு தெரியும் எண்டு, அரசியிலில் குதிச்சவ?

ந‌க்மா நாட்டு ம‌க்க‌ளுக்கு, இது வ‌ரை... ஜெயிலுக்கு போயிருக்கிறாவா?, உப்பு ச‌த்தியாக் கிர‌க‌த்தில் க‌ல‌ந்து கொண்ட‌வவா,

 

அல்ல‌து....

 

வாயிலை, தூச‌ண‌ம் வ‌ருது. வேணாம்....

 

என்னை, விட்டுப்புடுங்க‌ய்யா.... :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாநிலம்                             மொ  பாஜ,காங்,மற்றயவை 

 

 

 

 

 

அஸ்ஸாம்                          14    7    3    4

திரிபுரா                                  2    0    0    2

அருணாசலப்பிரதேசம்      2    1    1    0

மணிப்பூர்                              2    0    2    0

மேகாலயா                            2    1    0    1

மிúஸாரம்                             1    0    1    0

நாகாலாந்து                           1    0    0    1

பிகார்                                      40    31    7    2

சத்தீஸ்கர்                              11    10    1    0

ஹரியாணா                          10    7    1    2

ஹிமாசலப் பிரதேசம்          4    4    0    0

ஜம்மு காஷ்மீர்                     6    3    0    3

ஜார்க்கண்ட்                           14    12    2    0

கேரளம்                                  20    0    12    8

மத்தியப் பிரதேசம்              29    27    2    0

மகாராஷ்டிரம்                      48    42    6    0

ஒடிஸா                                  21    1    0    20

உத்தரப் பிரதேசம்               80    73    2    5

உத்தரகண்ட்                          5    5    0    0

அந்தமான், நிகோபர்            1    1    0    0

சண்டீகர்                                 1    1    0    0

லட்சத்தீவுகள்                       1    0    1    0

தில்லி                                      7    7    0    0

கோவா                                     2    2    0    0

கர்நாடகம்                               28    17    9    2

ராஜஸ்தான்                           25    25    0    0

மேற்கு வங்கம்                      42    2    4    36

பஞ்சாப்                                    13    6    3    4

தமிழ்நாடு                             39    2    0    37

புதுச்சேரி                                1    1    0    0

தாத்ரா, நாகர் ஹாவேலி    1    1    0    0

டாமன்-டையூ                       1    1    0    0

சிக்கிம்                                     1    0    0    1

ஆந்திரப்பிரதேசம்                42    19    2    21

குஜராத்                                  26    26    0    0




 





 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


புதிதாக அமைய இருக்கும் 16-வது பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற பெருமையை அ.தி.மு.க. பெற்று உள்ளது.

543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்று உள்ளது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 2-வது இடத்தை பெற்று இருக்கிறது.

காங்கிரசுக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்று 3-வது பெரிய கட்சி என்ற கவுரவத்தை பெற்று இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தை நடத்தி முடித்து கிட்டதட்ட 4,5 வருடஙகளுக்குப் பிறகு காங்கிரசும்,திமுகாவும் ஆட்சியில் இல்லாமல் போகிறார்கள்.இதை ஏதோ தாங்கள் சாதிச்ச மாதிரி தமிழன் கொண்டாடுகிறான்.அந்தளவிற்கு இருக்கு தமிழனின் நிலை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.