Jump to content

விழிப்புணர்வில் நாம். . .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள பக்கங்கள்...! தொடருங்கள் ஆதவன்...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஆதவன்.தொடருங்கள்...இந்தப் பகுதி பல பக்கங்களைத் தாண்டி ஒரு தொகுப்பாக "மஞ்சரி" யாக வரும் என்று எதிர் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

நல்ல அனுபவப் பகிர்வுகள் ஆதவன்.. "புலம்பெயர் வாழ்வியல் கருவூலம்" என்கிற பெயரில் (கோமகனின் தமிழரின் வாழ்வியல் கருவூலம் தந்த பாதிப்பினால்) எழுதலாம் என்கிற யோசனை முன்பு இருந்தது. நீங்கள் எழுதுவது மகிழ்ச்சி.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள திரி

முயற்சிக்கு தலை வணங்குகிறேன்

 

யாழில் வரும் பதிவுகளில் எல்லாம் இப்போது பார்வையாளராக மட்டுமே அணிவகுக்க முடிகிறது...நேரம் கிடைக்கும்போது நிச்சயமாக உங்கள் திரியில் பங்காளி ஆகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக நிறைய இடை வெளி விடாமல் எந்தப் பக்கத்தையும் எடுத்து சென்றால் நன்று...ஆனாலும் எல்லாலோருக்கும் நேரம் இருக்கனும்,இருந்து எழுதக் கூடிய மனோ நிலை இருக்க வேண்டும்..எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறேன்..
 

Link to comment
Share on other sites

  • 1 month later...
Air Traffic Controller விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் (சரியான தமிழ் மொழிபெயர்ப்புத் தெரியவில்லை)
 
Air Traffic Controller இனை சுவிசில் மிக இலகுவாகக் கற்கலாம், சுவிசிலுள்ள மாணவர்கள் இதில் அக்கறை குறைவு, அதிகளவில் வெளி நாட்டு மாணவ்ர்கள் இங்கு வந்து கற்று வேலை செய்கிறார்கள்.
 
Air Traffic Controller க்குரிய அடிப்படைச் சம்பளம் 7000-8000 பிராங்குகளில் தொடங்குகிறது, 
 
இத்துறையில் பல மேலதிக படிப்புகள் உள்ளன, படித்து உச்ச சம்பளம் பெறலாம்.
 
உலகம் முழுவதும் வேலை செய்யலாம்.
 
Air Traffic Controller படிப்ப‌தற்குரிய தகுதியாக சுவிசில் என்றால் ஒரு Lehre (EFZ) முடிதிருந்தாலே போதுமானது. 
Deutschland மாணவர்களுக்கு Für Bewerber aus Deutschland wird die Allgemeine Hochschulreife vorausgesetzt.
 
 
எமது மாணவர்கள் Lehre  முடித்து நல்ல வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் இத்துறையில் பயிலலாம். Deutschland உள்ள எமது இளையோர்  உங்களுக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
 
Training இன் போதே சம்பளமும் தருகிறார்கள்(Paid training courses over a 2 ½ year period.)
 
விபரங்கள் பின் வரும் இணையத்திலுள்ளன. 
 
 
 
 
 
நான் தற்சமயம்   பின்வரும் திரியில் கொஞ்சம் busy யாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போது இத்திரியிலும் பதிகிறேன்.
 
 

 

Link to comment
Share on other sites

கனடா /ஒன்ராரியோவில் குடும்பத்துடன் போய்ப் பார்க்க கூடிய இடங்கள்: என் அனுபவம்  

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104672

 

நன்றி நிழலி

Link to comment
Share on other sites

  • 2 months later...
பிறந்தநாளும் தொ(ல்)லை பேசி அழைப்புகளும்.
 
அண்மையில் எனது நண்பரின் மகனின் பிறந்தநாள் அன்று (6 வயது) அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். வேறும் சிலர் வந்திருந்தனர். அப்போது  தொலை பேசி அழைப்புச் சத்தம் கேட்டது.
உடனே நண்பரரின்  மகன் ஓடி வந்து தாயிடம் தொலை பேசியை எடுக்க வேண்டாம் என சொன்னார். ஆனாலும் அவர் தொலை பேசி அழைப்புக்கு பதிலளித்து விட்டு மகனிடம் கொடுத்தார் அவரும் ஏனோ தானோ எனக் கதைத்தார்.
 
பிறந்தநாட்களின் போது பல நாடுகளிலிருந்தும் பலரும் வாழ்த்து சொல்வார்கள் . பெரும்பாலானோர் வாழ்த்துகளுடன் நின்று விடாமல் , அப்பா என்ன வாங்கித் தந்தவர் , அம்மா  என்ன வாங்கித் தந்தவா, என்ன  சட்டை போட்டு இருக்கிறீங்கள், ...........என பல கேள்விகளைக் கேட்பார்கள். இப்படி எல்லாரும் மாறி மாறி கேட்டு பிள்ளைகளைச் சலிப்படைய வைத்து விடுவார்கள். 
சில குடும்பங்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் அதிகமாக இருந்தால் அவர்களின் நிலை சொல்லத் தேவையில்லை ...........
தொலைபேசியுடனே அவர்களது பிறந்தநாள் போய்விடும்.
 
 இதனைப் புரிந்து கொண்டு நாம் பின்வரும் வழிமுறைகளை கையாளலாம் என நிணைக்கிறேன்.
 

 பிறந்தநாள் வாழ்த்தினை மட்டும் முடிந்த வரை சுருக்கமாகச் சொல்லி விட்டு தொலைபேசியை வைத்தல்

 

பிறந்தநாளுக்குரியவருடன் மட்டும் கதைத்தல், அவரது பெற்றோர்களுடன்  தொடர்ந்து கதைத்து அவர்களது நேரத்தினை வீணாக்கத் தேவையில்லை( வீட்டிற்கு விருந்தினர் வருவார்கள் உணவு தயாரிப்பு, உபசரிப்பு என அவர்களுக்கும் வேலை இருக்கும்)

 

Facebook அல்லது sms மூலம் வாழ்த்தினைத் தெரிவித்தல்

 

அடுத்த நாள் கூட வாழ்த்தைத் தெரிவிக்கலாம் , முதல் நாள்  அழைப்பு எடுக்காதற்கான உண்மையான காரணத்தைத்  தெரிவிக்கலாம்.("நேற்று உங்களுக்கு கணக்க call  வரும் என்று தெரியும்  நாங்களும் கதைத்து உங்களது நேரத்தினைக் குறைக்க விரும்பவில்லை" என்று கூறலாம் )
 
குடும்பத்திலுள்ள எல்லாரும் தனித் தனியே வாழ்த்தவேண்டும் என்பதில்லை, எல்லோர் சார்பாகவும் ஒருவர் வாழ்த்தினாலே போதுமானது(நட்பைப் பொறுத்து).
 
 
 
நீங்களும் உங்கள் ஆலோசனைகளை எழுதுங்கள்
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆரார் வந்தவை....என்ன வாங்கித்தந்தவை..... பொன்னம்மாக்கா என்ன பலகாரம் செய்து கொண்டு வந்தவ....ஆரார் குடிச்சவை....ஆர் முன்னுக்கு நிண்டு தேத்தண்ணி பலகாரம் குடுத்தது.....அம்மா என்ன சாறி உடுத்தவ....சரசு தனியத்தான் வந்தவவோ....?????
 
உப்பிடியான கேள்விகளுக்கும் பதில் தேவையாய் கிடக்கு.. :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாளுக்குரிய, பிள்ளைக்கு வாழ்த்தும் போது....
காலையில் அவர் பாடசாலைக்குப் போகும் நேரத்திற்கு சிறிது முன்பாக வாழ்த்துவது சிறந்தது,

அந்த வாழ்த்து அவரை அன்று முழுவதும் மகிழ்ச்சிக் கடலில் வைத்திருக்கும். 
 

அதற்காக.... பிள்ளையை நித்திரையாலை, எழுப்பி  வாழ்த்தி... பிள்ளையின் எரிச்சலுக்கு ஆளாக வேண்டாம்.
பிள்ளை எத்தனை மணிக்கு எழும்பும், என்பதை பெற்றோரிடம் முற்கூட்டியே கேட்டு அறிந்து வைத்திருப்பது நல்லது. :)

Link to comment
Share on other sites

தொடருங்கள் ஆதவன் அண்ணா :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
என்னோடு வேலை செய்யும் மசடோனியா காரர் ஒருவரின் சேமிப்பு முறை இது.
 
இவர் ஒவ்வொரு மாத சம்பளம் வரும் போதும் 5 அல்லது 10 கிராம் தங்க நாணயத்தினை வங்கியில் வாங்கி அப்படியே வங்கியிலுள்ள தனது சேமிப்புப் பெட்டகத்தினுள் வைத்து விடுவார்.
இதனை இவர் பல வருடங்களாகத் தொடர்ந்து செய்துவருகிறார்.
 
ஒரு வருடத்தில் விலையில் சில தளம்பல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் 4 , 5 வருடங்களில் விலை கணிசமான அளவில் கூடியிருக்கும் என்கிறார் .
இதுவரை இவர் 39,000 பிராங்குகளுக்கு வாங்கியுள்ளார், அதன் இன்றய பெறுமதி கிட்டத்தட்ட‌ 62,000 பிராங்குகள். தான் முதன் முதல் வாங்கிய போது இருந்ததை விட இப்போது கிட்டத்தட்ட‌3 மடங்கு விலை அதிகம் என்றார்
 
அப்படி விலை குறைவது என்றாலும் ஒரேயடியாக பாதாளத்துக்கு குறையாது   என்கிறார்,
 
அப்படி குறைவது தெரிந்தால் உடனடியாக வங்கியில் கொடுத்து அன்றைய விலைப்படி பணத்தினை திரும்ப வாங்கி விடலாம் (சுவிசில் அந்த வசதி உண்டு)
 
அண்மையில் சேமிப்பு பற்றிய கட்டுரை ஒன்றினை வாசித்த போது அவர்களும் தங்கத்தில் சேமிப்பது நல்லது எனக் கூருகிறார்கள், ஆனாலும் மொத்த சேமிப்பில் 10%- 15% வீதத்திற்கு மேல் தங்கத்தில் வேண்டாம் என்கிறார்கள்.
 
 தமிழர்களின் பாரம்பரியமான சேமிப்பு முறையும் தங்கத்தில் சேமிப்பது தான் ஆனால் நாம் தங்கமாக சேமிக்காமல் , ஆபரணமாகச் சேமிக்கிறோம்
 
 இதில் சில பிரதி கூலங்கள் இருக்கின்றன‌
 
தமிழர்களின் பாரம்பரியமான சேமிப்பு முறையும் தங்கத்தில் சேமிப்பது தான் ஆனால் நாம் தங்கமாக சேமிக்காமல் , ஆபரணமாகச் சேமிக்கிறோம்
இதில் சில பிரதி கூலங்கள் இருக்கின்றன‌
ஆபரணம் வாங்கும் போது சேதாரம் , செய்கூலி எனவும் , விற்கும் போது பழைய தங்கம், கல்லுக்குரிய கழிவு எனவும் பண இழப்பு ஏற்படுகிறது.
 
வங்கியில் தங்க நாணயமாக வாங்கி சேமிக்கும் போது இந்த பிரச்சனைகள் இல்லை.
 
நீங்களும் தங்க நாணயத்தில் சேமிக்கலாம் அதற்கு முதல் சகல விபரங்களையும் வங்கியில் கேட்டுத் தெரிந்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
 
சுவிசில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 37.70 பிராங்குகள்
 
suisse-1g.jpg
சுவிசில் தங்க நாணயத்தில் 999.9 என பபொறிக்கப் பட்டிருக்கும்
 
 
 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

winter tyres (வின்டர் டயர்)

 

112290-_9IO5DFsyYS3BW6AP2OTLw.jpg

http://www.20min.ch/schweiz/news/story/18614988

 

சுவிசில் இன்னமும் 84% விகிதமாணோர், வின்டர் டயர் மாற்றவில்லையென நேற்றய பத்திரிகையில் செய்தி வந்திருந்தது.
 
7º வெப்பனிலயிலேயே சம்மர் டயர்கள் கடினமாகிவிடும் என்றும் இதனால் பிரேக் பிடித்தால் கார் போய் நிற்கும் தூரம் கூடும் என்றும்  நிபுனர்கள் சொல்கிறார்கள். (எனவே snow கொட்டும் வரை காத்திருக்காமல் வெப்பனிலை குறையும் போதே டயரினை மாற்ற‌வும்)
 
மேலே உள்ள படத்தில் பனிபடர் சாலயில் 60 km/h வேகத்தில் பயணிக்கையில் பிரேக் பிடிக்கும் போது கார் போய் நிற்கும் இடம்(தூரம்) காட்டப்படுகிறது. வின்டர் டயருடன் ஒப்பிடும் போது  சம்மர் டயர்கள் இரு மடங்கு தூரம் செல்கிறது என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.( இங்கே இந்ததூரம் பிரேக் பிடித்தபின் கார் போய் நிற்கும் தூரம் + உங்களின் உணர்திறன் காலம் ஆகிய இரண்டும் சேர்த்துக் கணிக்கப்படுகின்றன. )
(Bremsweg+ der Reaktionszeit)
 
உங்கள் வின்டர் டயர் பூவின் ஆழம் (Profiltiefe)ஆகக்குறைந்தது 4 mm ஆவது இருக்க வேண்டும் என நிபுனர்கள் சொல்கிறார்கள்.
 
பாரிஸ் , லண்டன் போன்ற நகரங்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் வின்டர் டயர் மாற்றுவதில்லை, எனினும் நீங்கள் கிறிஸ்மஸ் காலங்களில் சுவிஸ், ஜேர்மனி க்கு வாகனத்தில் வருவதாக இருந்தால் வின்டர் டயரினை மாற்றுவது நல்லது. அல்லாவிடின் நீங்கள் எல்லையில் வைத்து பொலிசினால் திருப்பி அனுப்பப் படும் சாத்தியம் உண்டு.
Link to comment
Share on other sites

  • 1 year later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.