Jump to content

தொடர்மாடிக் கட்டிடம்


Recommended Posts

தொடர்மாடிக் கட்டிடத்தின் அறையொன்று அதிர்ந்துகொண்டிருந்தது. வயலின் கருவியின் தந்திகளிற்குள்ளால் மனித மனமொன்று பேசிவிட முனைந்து கொண்டிருந்தது. பேச்சு, யாரையும் நோக்கியதாய்த் தோன்றவில்லை. பேசவேண்டியது தவிர்க்கமுடியாததாய்த் தந்தி அதிர்ந்துகொண்டிருந்தது.
 
நேற்றைய இரவில் ஓரு உணவகத்தில் மாயை கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. 'நம்புங்கள்' என்ற கோரிக்கைக்கு அவசியமற்று நம்பிக்கை பிரவாகித்துக்கொண்டிருந்தது. எதிர்ப்பின்றிப் பிரவாகிப்பதாய்த்தோன்றும் ஆற்றில் துருத்திக்கொண்டு வெளித்தெரியும் மரக்கட்டைபோல, இந்த வயலின்காரன் அங்கு துருத்திக்கொண்டமர்ந்திருந்தான். பேச்சால் நிறைந்திருந்த மண்டபத்தில் இவன்மட்டும் வார்த்தைப்பிரவாகம் வெளிவராது, ஆட்டுக்குட்டியினை விழுங்கிக்கொண்டிருக்கும் பாம்பைப் போலப் புடைத்துக்கொண்டிருந்தான்.
 
இப்போது அதிர்கின்ற வயலினின் கொதிப்பு இவன் எழுதியது அல்ல. தனது மனநிலை தனக்கு மட்டுமானது அல்ல என்றுணர்ந்த பொழுதொன்றில், தன்னால் பேசமுடியாததை முன்னால் எவனோ பேசியது மட்டுமன்றி ஆவணப்படுத்தியும் வைத்துள்ளான் என இவன் அறிந்தபோது, வார்த்தை தேடுவதை நிறுத்திவிட்டிருந்தான். வயலின் தந்திகள் கொண்டு முன்னையவனின் ஆவணத்தை வாசித்தவன், கரைந்துபோனான். வார்த்தைகள் அனைத்தும் அன்று முதல் இவனிற்கு மலடாகத் தெரிந்தன—ஏனெனில் வார்த்தை என்பது கேட்போனிருப்பினே வினைத்திறனுடையது. கேட்போர் இலகுவில் இவனிற்குக் கிடைத்தார்கள். ஆனால் சடங்களாய் இருந்தார்கள். வார்த்தைகளின் கனதியினைக் கைப்படுத்தும் கற்பனை அற்றவராய் இருந்தார்கள். அதனால் வார்த்தைகள் இவனிற்குள் ஏற்படுத்திய பிரளயத்தைக் கேட்போரிற்குள் இவனால் கடத்திவிட முடியவில்லை. 
 
வயலின், தொண்டை மட்டுமல்ல அது கேட்போனின் செவியாகவும் இருந்தததை உணர்ந்தபோது, இவன் பறந்துகொண்டிருந்தான். தனக்குள் நினைப்பதைத் தான் வயலின் தந்திகளில் அழுத்தியதையே இவன் தனது பேச்சாகக் கருதிக்கொண்டான். தனது அழுத்தத்தால் வயலினில் இருந்து எழுந்த இசையினைத் தனது கேட்போனின் பதிலாக இவன் புரிந்து கொண்டான். அப்படிப் பார்க்கையில், தான் என்ன சொல்ல முனைகிறானோ, அதே அலைவரிசையில் தனது கேட்போன் எப்போதும் தன் முன் அமர்ந்திருக்கிறான் என்பது இவனிற்குப் புரிந்தது. சுதந்திரமடைந்த அடிமைபோன்று நெஞ்சில் அடித்துக் கூச்சலிட்டு விடுதலையினைக் கொண்டாடினான். பின்னர், வயலினோடு அடங்காது பேசத்தொடங்கிவிட்டான்.
 
************************************************************
 
'உருவான குழந்தையினைப் பிரசவிப்பது பற்றியே நீ சிந்திப்பதாய் உனக்குத் தோன்றவில்லையா? வயலின் கேட்கிறது என்பதனால், அறுந்து தொங்கும் குதிரை மயிர்களைப் புடுங்கி எறிந்தபடி நீ பேசிக்கொண்டிருக்கிறாய். பேசவேண்டியவை என்று எவையும் தோன்றாதபடி இருக்கும் ஒரு நிலையினை நீ எப்படிப் பார்ப்பாய்? தடையின்றிப் பேசுவது விடுதலையா இல்லைப் பேசுவதற்கான அவசியமற்றிருப்பது விடுதலையா?' புதிதாய் அடைந்திருந்த சமநிலையினைக் குழப்பிப் போடும் இந்தக் கேழ்வியினை நேற்றைய இரவில், அந்த உணவக மண்டபத்தில் இவனை நோக்கி அவள் கேட்டிருந்தாள். 
 
வார்த்தைகள் கொண்டு இவன் உரையாடுவதற்காய் மிஞ்சியிருக்கும் ஒரு சிலரில் மிக முக்கியமானவள் அவள். அவளோடு பேசிய அனைத்துத் தருணங்களிலும் தனது சமநிலை சிதைவது இவனிற்குத் தெரியும். ஆனால், உயரிய விடுதலை நோக்கிய ஓயாத முன்னேற்றத்திற்கு இவனும் அடிமை. விடுதலைக்கு நேரெதிரான பொருளுடைய அடிமை என்ற சொல்லின் உயிரின் ஆழம், விடுதலை பற்றிய அவாவில் மட்டுமே இவனிற்குப் புலப்படும். விட்டு விடுதலையான நிலையொன்று மனிதனிற்குச் சாத்தியம் என்ற நம்பிக்கை இவனிற்குள் எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. அதனால், சமநிலை என்ற கழ்ளுண்டு மயங்கிக் கிடக்கும் இலகு காலங்களிலும், அவளை நோக்கி இவன் வந்துகொண்டே இருந்திருக்கிறான்.
 
வயலினை நிசப்த்தமாக்க இப்போது இவன் முனைந்துகொண்டிருக்கிறான். தனது அழுத்தல்கள் நிசப்த்தமாகவே வெளிவரும் நிலைவேண்டி வயலின் தந்திகளை அழுத்திக்கொண்டிருக்கிறான். வாழ்வின் நிலையின்மையினைக் கணந்தோறும் மறவாதிருக்கவேண்டி, பிணங்கள் மத்தியில் உழன்று பிணங்களை உண்ணும் அகோரிகள், தாமுண்ணும் பிணங்களின் ஊட்டத்தால் வாழ்வின் நிலையின்மையினை நீட்டிக்கொண்டிருக்கும் முரண்நகை போல, பேசுவது அவசியமற்றுப்போகும் நிலைவேண்டி இவன் இப்போது பேசிக்கொண்டிருக்கிறான்.
 
****************************************
 
"ஓம் என்று சொல்லும் அனைத்துப் பெண்ணோடும் உறவுகொள்ளும் எந்த ஆணும் உயிர்ப்பற்றவன். சுய பச்சாதாபத்தில் ஊறிக்கிடப்பவன். கதாநாயகியினை மட்டும் கலப்பவன் உயிர்ப்பானவன்." 
 
வயலின் கேட்கிறது என்பதனால் பேசிக்கொண்டிருக்கும் பேச்சுக்கள் ஆழத்தோண்டுகையில் சுய பச்சாதாபங்கள். எத்தனை குதிரை முடியினைப் புடுங்கி எறியினும், எத்தனை உயிர்ப்பானதாய்த் தந்தி பிறசெவிகளில் அதிரினினும், இப்பேச்சுகள் ஓமென்று சொல்லும் அனைத்துப் பெண்ணோடும் கலப்பதனை ஒப்பனவே...என்று இவன் உணர்ந்த தருணத்தில்...
 
நாண் ஒன்று அறுந்த அதிர்வினால் நாயொன்று துடித்தது. அந்தத் தொடர்மாடிக்கட்டிடம் வயலின் இசைதொலைத்துக் காற்றைத் தடுத்துத் தானாய் நின்றது. 
 
 
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்! உங்கள் கதையை வாசிக்கத் தொடங்கவே முகத்துக்கெதிரே எதுவோ ஒன்று வாசிக்க விடாது தடுப்பது போன்ற பிரமை. தொண்டையில் உமிழி விழுங்கமுடியாது எதோ இறுக்குவது போல் ...... ஏனென்று விளங்கவே இல்லை எனக்கு.

Link to comment
Share on other sites

வணக்கம் மெபொப்தேமியா சுமேரியர்.
 
ஏதாவது ஒன்று உள்ளுர ஏற்படுத்தும் தொணதொணப்பில் ரைப்பண்ணத் தொடங்கியது தான் யாழ்களத்தின் எனது அனைத்துப் பதிவும். ரைப்பிங் முடிகையில் தொணதொணப்பு திருப்த்திப்படுத்தப்பட்டிருக்கும். மிகச் சொற்பமானவை தான் பதிவிடத்தோன்றும். மற்றவற்றை நான் சேமித்துக் கூட வைப்பதில்லை. அழித்துவிட்டுச் சென்றுவிடுவது.
 
இந்தக் கதை மே மாதம் 18ம் தேதி பதியப்பட்டது. ஆனால் உண்மையில், இதை எழுதிய அதிகாலைப்பொழுதில் எனக்கு அது மே.18ம் தேதி என்பது நினைவில் இருக்கவில்லை. எங்கோ ஒரு இடத்தில் எப்போதோ படித்தேன், அதிகாலையில் ஆழத்தூங்கி எழுந்தபின் எதையுமே வாசிக்காது எழுதத்தொடங்குகையில் எமது பிரக்ஞை எமது எழுத்தில் வெளிப்படும் என்று. ஏறத்தாள அதில் உடன்பாடு இருககவே செய்கிறது. அந்தவகையில் இதை எழுதிப் பதிந்த பின்னர் தான் அன்று மே.18 என்பது தெரிந்தது. தொணதொணப்பிற்கு இன்னுமொரு அர்த்தம் கிடைத்தது.
 
ஒருவேளை, இந்தக்கதையினை எழுதிய எனது தருணங்கள் உங்களிற்கானவை அல்லாதாதக இருக்கலாம். சில புத்தகங்களை வாசிக்கும்போது எனக்கும் இவ்வாறு இருக்நிருக்கிறது. எவ்வளவு முயன்றும் மனம் ஒருமிக்க மறுத்துவிடும். ஒரு புத்தகத்தை ஏறத்தாள 7 ஆண்டுகளாக வாசிக்க முயல்கிறேன். 100 பக்கங்களைத் தாண்டி அது நகர்வதாய் இல்லை. ஏறத்தாள அதை வாசிப்பதில்லை என்று விட்டுவிட்டேன்.
 
இந்தப் பதிவு சார்ந்த உங்களது கருத்து எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. நன்றி.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.