Jump to content

குண்டலினி: உங்களுக்குள் இருக்கும் மர்மப் புதையல்


Recommended Posts

x2_1894763h.jpg.pagespeed.ic.QP07YhXfe5.
 

குண்டலினி,உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. குண்டலினியைப் பற்றி உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே நான் விவரிக்கிறேன். ஏனென்றால், இதைப் பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன. உங்கள் வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை உருவாக்குவதில்லை. எங்கோ ஓரிடத்தில் ஒரு பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம் இருக்கிறது. அதுதான் மின்சாரத்தை உருவாக்குகிறது, ஆனால் அது உங்களுக்கு நேரடியாக மின்சாரத்தை வழங்க முடியாது.

இந்த பிளக் பாயிண்ட்தான் உங்களுக்கு மின்சாரத்தைக் கொடுக்க முடியும். பெரும்பலானவர்கள் அந்த மின் நிலையத்தை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை, இல்லையா? அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தாலும், ஒரு மின் சாதனத்தை இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால், அந்த சாதனம் வேலை செய்யும் என்பது மட்டும் தெரிந் திருக்கிறது.

இந்தக் குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட் போலத்தான், அதுவே ஒரு மின் நிலையம் அல்ல. இது 3 பின்களைக் கொண்ட பிளக் பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக் பாயிண்ட்.

இதை இப்படிப் பார்க்கலாம். உடலில் இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக் பாயிண்டைப் போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5 பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும் இருக்கிறது. ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப் போன்றது. இப்போது பிளக்கை பிளக் பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப் பற்றிய அனைத்தும் ஒளி விடுகின்றன. இப்போது உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க முடியும்.

இப்படி உங்களுடைய பிளக் அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக சொருகப்பட்டுவிட்டால், பிறகு விளக்குகள் இருபத்தி நான்கு மணி நேரமும் பிரச்சினை யின்றித் தொடர்ந்து எரியும். பேட்டரி தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. அணைந்துவிடுமோ என்ற பயமின்றி, விளக்கை வெளிப்படையாக, கவனமின்றி எரியவிடலாம். ஏனென்றால் நீங்கள் இப்போது மின்சாரத்தின் மூலத்துடனேயே தொடர்பில் இருக்கிறீர்கள்.

இப்போதும்கூட உங்களுக்குள் சக்தி இருக்கிறது. உங்கள் உயிர் சக்திகள் வேலை செய்கின்றன, ஆனால் அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே வேலை செய்வதால் மிகவும் குறைவான அளவே உயிர் சக்தி வெளிப்படுகிறது. ஆனால் அந்த உயிர் சக்தி முழுவதுமாக இயங்கி, பிளக்கும் சரியாகச் சொருகப்பட்டிருந்தால், அதை வைத்துக்கொண்டு நீங்கள் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு அளவே இல்லை.

உங்கள் வீட்டில் உள்ள பிளக் பாயிண்ட்டில்கூட, ஒருமுறை பிளக் சொருகப்பட்டுவிட்டால், பிறகு விளக்கை எரியவிடலாம், ஏசி போட்டுக்கொள்ளலாம், ஹீட்டர் போட்டுக்கொள்ளலாம், டிவியை ஆன் செய்துகொள்ளலாம், எதை வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளலாம். ஒரே ஒரு சக்தி மையம்தான் இருக்கிறது. ஆனால் அதை வைத்துக்கொண்டு உங்களால் எண்ணற்ற விஷயங்களைச் செய்ய முடியும்.

ஆனால் நீங்களோ பிளக் பாயிண்டில் பிளக்கைச் சொருகாமல், சொந்தமாக சக்தியை உருவாக்க முயற்சிக்கிறீர்கள். அதனால் ஒரு நாளைக்கு ஐந்து வேளை சாப்பிடுகிறீர்கள், இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் களைப்பாகவே இருக்கிறீர்கள். இதனால் வாழ்க்கை நடத்துவதே கூட போராட்டமாக இருக்கிறது.

சக்தி என்பது வெறும் உடல் சக்தியோ அல்லது ஒரு செயலினால் வரும் சக்தியோ கிடையாது. சக்தி என்பது உயிர்த்தன்மை இயங்கும் விதத்தைப் பொறுத்தே அமைகிறது. இந்த சக்திதான் பிரபஞ்சமாகவும் இருக்கிறது. எனவே சக்தி நிலையின் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டால், உங்களுக்குப் படைப்பின் முழு நுட்பமும் புரியும்.

எனவே உங்களில், பிளக் சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் எல்லையில்லாத சக்தியின் மூலத்தோடு தொடர்புகொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி. இப்போது, சக்தி எங்கே எப்படி உருவாகிறது என்று உங்களுக்குத் தெரியா விட்டாலும், சக்தி என்றால் என்ன, அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரியும்.

ஒரு சாதனத்தின் பிளக்கை பிளக் பாயிண்டில் சொருகும்போது, உங்கள் கைகள் நடுங்கினால், அந்த பிளக்கைச் சரியாக பிளக் பாயிண்டிற்குள் சொருக மாட்டீர்கள்.

இது பலருக்கும் கஷ்டமான விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் உடல், மனம், உணர்ச்சி, சக்திநிலை ஆகியவற்றில் அவர்கள் ஒரு சமநிலையில் இல்லை. யோகா செய்வதன் அடிப்படையே அவர்களுக்குள் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதுதான். அந்தச் சமநிலை வந்துவிட்டால், பிறகு பிளக்கை பிளக் பாயிண்டில் சரியாகச் சொருகிவிடுவீர்கள். அப்படிச் சரியாகத் தொடர்புகொள்ளும்போது, எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பீர்கள். இதற்காக நீங்கள் அந்த மின்நிலையத்தையே தேடிச் சென்று, அதைப் பற்றி ஒவ்வொன்றும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. நீங்கள் பிளக்கை சரியாகச் சொருகினால் போதும், ஒவ்வொன்றும் சரியாக இயங்கும்.

தடையில்லாத சக்தி மூலத்துடன் அப்படி ஒரு முறை தொடர்புகொண்டுவிட்டால், இந்த உயிர் எப்படிச் செல்ல வேண்டுமோ அதே வழியில் நீஙகளும் செல்வீர்கள். இந்த உயிர் எதற்காக ஏங்குகிறதோ, அதை நோக்கியே நீங்களும் இயல்பாக செல்வீர்கள்.

உங்கள் கவர்ச்சியான கருத்துக்கள், கனவுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், உலகத்தின் சிக்கல்களில் சிக்கித் தொலைந்து போக மாட்டீர்கள். நீங்கள் நேரான வழியில்தான் செல்வீர்கள். ஏனென்றால், இப்போது நீங்கள் படைப்பின் ஆதாரமான சக்தியின் மூலத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்கள்.

http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/article6011463.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

 

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.