Jump to content

சிறு பொறி .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காமாட்சி அம்மா,  பேரன் விளையாடி கொண்டு இருப்ப தை பார்த்து கொண்டு அருகில் இருந்த  படிக்கட்டில் இருந்தார்.  பக்கத்து வீட்டு   பொபி .. பேரன்  சங்கர் ...முன் வீட்டு மைக் ...இவர்கள்  விளையாட  ஆரம்பித்தால் பொழுதுபோவதே தெரியாமல் விளையாடுவார்கள் .கால  நிலை நன்றாக் இருந்தால் மட்டு இது  நடக்கும்  இடையிடையே பேரன் சங்கர் ... அம்மம்மா  ஜூஸ் என்றும் சிப்ஸ் என்றும் உள்ளே வந்துபோவான். குளிர் காலங்களில் கம்புட்டர்  கேம்  என்று ... கூப்பிடுவதும் கேட்காமல்  வி ளை யாடுவார்கள்.

 

 

அன்று வழக்கம்போலவே    விளையாடி விட்டு . குளிக்க செல்லும்போது அம்மாம்மா எனக்கு முட்டையும் பானும் தாங்கோ என்றான். ஓம் ராசா என்றவள் ..இவள் வேணி யையும் இன்னும் காணவில்லை மணி  ஏழாகி விட்டது பேரனுக்கு பசி  போலும் என்று .. முட்டை  பொரிக்க  ஆயத்தமானார்.  தேவையான வெங்காயம்  பாதி  பச்சை  மிளகாய் .சிறு டெலி மீட்  துண்டுகள் என்று ... பேரனுக்கு  விருப்ப  மான  முறையில்  ஆயத்தப் படுத்தினாள் . முதலில்   முன்னிருந்த அடுப்பை போட்டவள்   அது உள்ளே இருந் சமையல்  நுனிக்கைகளினால்   புகைக்க ஆரம்பித்த து ... உடனே அணைத்து விட்டு .. மறு  அடுப்பை போட்டு  பொரிக்க  ஆரம்பித்தாள் . . . இரண்டுமுட்டை களை உடைத்து  ஊற்றினாள்  முட்டை பெட்டியை ..ஏற்கனவே  அணைத்த  அடுப்பின் மீது வைத்தாள்   ...முட்டை யை பொரித்து கொண்டு இருக்கும்போது ஒரு வாசனை...... பேப்பர் எரிவது போல..அட டா.. முட்டை பெட்டியில்  புகை வந்துவிட்டதே  என  ..அதை ஊதி அனைத்து விட்டு  மீண்டும் பிரிட்ஜ்  இனுள் வைத்து விட்டாள் . 

 

 

முட்டை பொரி த்து  பாணும் முட்டை யும்  சாப் பிட்டு  விட்டு பேரன்  விட் டுப் பாடம் செய்வதில் மும்முரமாக் இருந்தான்.  இடையில்  அடுப்பில்  ஏதும்  சமைக்கிரீங்க்க்ளா  அம்மம்மா  எனக் கேட்டான். இல்லை யே எல் லாம் முடிந்து கழுவி வைத்துவிட் டேன் என்றாள் 

.

 

ஒரு அரைமணி நேரத்தில் வேணி யும் கணவனும்  வந்துவிட் டார்கள். ...அம்மா ஏதும் சமைத்தீர்களா?..எதோ மணக்கிறதே என்றாள்    வேணி ...  இல்லை பிள்ளை இவனுக்கு முட்டை    பொரித்து சா ப்பாடு கொடுத்தேன்..என்றார்.. தங்களுக்கு தேநீர்  போட பால் எடுக்க திறந்த வேணி புகைமூட்ட த்தால் இருமினாள் ... முட்டை  பெட்டி புகைந்து கொண்டு இருந்தது ..... அப்பா அப்பா......... பிரிஜ் ...எல்லாம் ஒரே  புகை.    என்னம்மா செய்தீர்கள்    ஒரே கத்தல்.....அப்போது தான்  விழித்துக்  கொண்டார் அம்மா ...

 

 

ஒரு தடவை அணைத்த அடுப்பின் பின் மீது   வைத்த முட்டைபெட்டி நினைவு  வந்தது.   நடந்தததை  சொன்னார்... உடனே மருமகன் பிரிஜை  நிறுத்தி ...(ஆப்) ...எல்லாம்  வெளியே  எடுத்து .. துப்புரவு  செய்தும்  மண ம்போகவில்லை. ,,,ஏற்கனவே மாமியாருடன் கொஞ்சம்  அப்படி இப்படி .. ....நான் சொன்னேன்   கேட்டாயா .... அம்மாவை அடுப்பு போட  விடாதே என்று ...வேணியும் அவள் பாட்டுக்கு எல்லாம் இருக்கு தானே அம்மா ஏன் சமைக்கக்  வெளிக்கிட்ட  நீங்கள்... என்று அவள்  பாட்டுக்கு சத்தமிட்டாள் ... வீடு அல்லோல கல்லோலப்பட்டது ..... அம்மம்மா தன்  விதியை நொந்தார்....பின்பு ஊது பத்தி கொளுத்தி .. நீரும்  வினிகரும் சேர்த்து   கொதிக்க் வைத்து .. காற்றாடியை நன்கு சுழல விட்டு ஒருவாறு ஓய்ந்தது ...

.மற்றவர்களுக்கு இது ஒருபாடமாக  அமையட்டும் பெரும் விபத்துக்கள் நடப்பது ... பெரும்பாலும் தீயினால். ...வீட் டுக்கு தீ அலாரமும் முக்கியம் இங்கு கனடாவில் கண்டிப்பாக் பொருத்த வேண்டும்  இல்லா ட்டால் தண்ட பணம்   கட்ட  வேண்டும்  .நம்மவர் சமையலுக்கு...... பொரிப்பது   வெங்காயம்  வதக்கு வது   ச மையல்செய் யும்   போது   வரும் தொலைபேசி ..... மிக மிக அவதானம் தேவை ......

இது ஒரு சம்பவம் மட்டுமே  விழிப்பு னர்வுகாக் பதிய பட் ட உண்மைக்கதை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பாட்டி

 

Link to comment
Share on other sites

நன்றி நிலாக்கா பகிர்வுக்கு.. சமையலறையில் ஒரு தீ அணைப்பு பொறியை வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள் எமது அலுவலகத்தில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்ல , அதிகமான பெண்கள் சமைக்கும்போது தொள தொள கவுனுடன் முன்னெ இருக்கும் அடுப்பின் அருகே நின்றும் சமைப்பார்கள் , கையில் போனும் இருந்தால் வயிறு சுடுமட்டும் எதுவும் தெரியாது...!

 

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.