Jump to content

மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? - மனோ கணேசன்:-


Recommended Posts

modi-rajapaksa_CI.jpg

இரண்டு வாரங்களுக்கு முன்னர் 13ம் திருத்தமோ அல்லது 13 ப்ளஸ் என்ற அதற்கு மேல் செல்லுவதோ, எதுவென்றாலும், பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து பேசுங்கள், வராவிட்டால் எதுவும் கிடையாது, என்று சொன்ன அரசாங்கம், இன்று என்ன சொல்கிறது? 13ம் திருத்தத்தில் போலிஸ் அதிகாரத்தை தவிர ஏனையவற்றை அமுல் செய்ய தயார் என இந்திய அரசுக்கு செய்தி அனுப்புகிறது.

இந்த இரண்டு வாரங்களுக்குள் என்ன நிகழ்ந்தது? பிரதமர் நரேந்திர மோடியின் மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின்  ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

வடமாகாணத்தின் முதல்வராக  பதவியேற்றவுடன் விக்னேஸ்வரன் இந்தியாவின் இந்து நாளிதழுக்கு அளித்த செவ்வியில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியிருந்தார். இலங்கையில் தமிழர், சிங்களவர் இடையிலான பிரச்சினை ஒரு குடும்பத்தின் உள்விவகாரம். இன்று சண்டையிட்டுக்கொள்ளும் நாம் நாளை சமாதானமடைவோம். இதில் வெளியார், குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள் தலையிடக்கூடாது என கூறியிருந்தார். இந்த கருத்தினால் அவர், இலங்கையிலும், இந்தியாவிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழ் தேசியவாதிகளின் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார். அது வேறு விடயம். 

ஆனால், இந்த கருத்தை கூறியதன் மூலம் விக்னேஸ்வரன் இலங்கை அரசுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பியிருந்தார். நாம் ஒரே குடும்பமாக வாழ்ந்து எம் பிரச்சினைகளை தீர்த்து கொள்வோம் என்பதுவே அதுவாகும். ஆனால், இலங்கை அரசு அதை கணக்கிலும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று விக்னேஸ்வரனின் கட்சி, சந்திக்க நேரம் ஒதுக்கும்படி தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும் தெரிவித்து, கோரிக்கை விடுத்து கடிதம் எழுதும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்ளேயே நமது பிரச்சினைகளை தீர்க்கும் நல்ல முயற்சிகளை தூக்கி எறிந்துவிட்டு, இந்நாட்டில் தமிழர்களை வெளிநாடுகளை நோக்கி இந்த அரசு தான் தள்ளுகிறது. உள்நாட்டு பிரச்சினைக்கு உலக நாடுகளிடம் தீர்வை கோருகிறோம் என தமிழர்களை இனி எவரும் குறை கூற கூடாது. ஐநா சபையையும், இந்தியாவையும் நோக்கி நாம் செல்வதற்கு இந்த முட்டாள் அரசாங்கம்தான்  காரணம் என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  

இலங்கை நாட்டு பிரிவினையை எதிர்க்கிறோம்; ஆனால், இலங்கை இனப்பிரச்சினைக்கு  13ஐ அமுல் செய்து, 13க்கு மேலே செல்லுங்கள் என பிரதமர் மோடி கடுமையாக கூறிவிட்டார். அத்துடன் அவர் நேற்று, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவை இருகரங்கூப்பி வரவேற்று உரையாடியுள்ளார். அவர்கள் இருவரும் பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் இலங்கையில் வாழும்  தமிழ் மக்கள் பற்றியும் உரையாடியுள்ளனர். இதன்மூலம் ஒருநாட்டு பிரதமர் தனது நாட்டின்  இன்னொரு கட்சியை சார்ந்த ஒரு மாநில முதல்வரை எவ்விதம் நாகரீகமாக நடத்த வேண்டும் என்ற பாடத்தையும் இலங்கை அரசுக்கு பிரதமர் மோடி கற்று கொடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்த விமல் வீரவன்ச கட்சி, ஹெல உறுமய, தேசிய தேசப்பற்று இயக்கம் ஆகியவை இன்று எங்கே? பாராளுமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவை  தரக்குறைவாக பேசிய அரசு தரப்பு அஸ்வர் எம்பி இன்று எங்கே? முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி போகும் முன்னர், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கையில் விடுவிக்கப்பட்ட வேகம்தான் என்ன?    

13ஐ பற்றி பேசவே பேசாதீர்கள். பேச வேண்டுமானால் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் என்று அகம்பாவத்துடன் பேசியவர்கள், விக்னேஸ்வரனின் நல்லெண்ண கருத்தை தூக்கி எறிந்தவர்கள், இன்று 13ம் திருத்தத்தில் போலிஸ் அதிகாரத்தை தவிர ஏனையவற்றை அமுல் செய்ய தயார் என சொல்கிறார்கள். இனி நாளை இன்னொரு மோடி சந்திப்புக்கு பிறகு போலிஸ் அதிகாரத்தையும் தருகிறோம் என சொன்னாலும் ஆச்சரியமில்லை. உள்நாட்டில் நாம் கெஞ்சினாலும் சட்டத்தில் உள்ள உரிமையைகூட வழங்க மாட்டீர்கள். ஆனால், வெளிநாட்டில் பலம் பொருந்தியவர்கள் அழுத்தம் கொடுத்தால் இணங்குகிறீர்கள். ஆகவேதான் கேட்கிறேன், மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா?  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107775/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

சூரிய சந்திர சக்கரைவத்தி நல்லா பயந்து போனார்.

Link to comment
Share on other sites

மோதியுடன் மோதி விளையாடினால் என்ன நடக்கும் என்று குஜராத்தில் வாழும் ஒவ்வொரு காக்காவும் சொல்லுவான்.  :D  :D  :D 

Link to comment
Share on other sites

மோடி என்ன மந்திரவாதியா?

Link to comment
Share on other sites

போரில் இந்தியாவின் பங்குபற்றி தனிப்பட ஒரு கவலையும் இல்லை மோடிக்கு. சில அதிகாரிகளுக்கு மட்டும் இப்போது பேஸ்மன்ட் சற்று வீக்காகி இருக்கும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரில் இந்தியாவின் பங்குபற்றி தனிப்பட ஒரு கவலையும் இல்லை மோடிக்கு. சில அதிகாரிகளுக்கு மட்டும் இப்போது பேஸ்மன்ட் சற்று வீக்காகி இருக்கும்.. :D

 

ஆனால் பில்டிங் ஸ்ரொங்காம்... :D

Link to comment
Share on other sites

சிங்களவனின் இராஜதந்திரம் மோடி படித்து முடிய முதல் பதவி போய்விடும் . :icon_mrgreen:

  ஜே ஆர் இந்தியாவிற்கும் புலிக்கும் ஒரே நேரத்தில் வைத்தான் ஆப்பு இராஜதந்திரத்தின் உச்சம் .

Link to comment
Share on other sites

சிங்களவனின் இராஜதந்திரம் மோடி படித்து முடிய முதல் பதவி போய்விடும் . :icon_mrgreen:

இந்தியாவிற்கும் புலிக்கும் ஒரே நேரத்தில் வைத்தான் ஆப்பு இராஜதந்திரத்தின் உச்சம் .

சூரிய சந்திர சக்கரைவத்தி எப்படி ஆப்படித்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவையில்லாமல் ராஜபக்சாவைத் தூண்டிவிடும் செயல். இந்த மடலால் என்ன இலாபம் உள்ளது? மனோ கணேசன் மீது மரியாதை உள்ளது. ஆனால் இந்த மடலில் அவர் சாதிக்க நினைப்பது என்ன??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.