Jump to content

இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...


Recommended Posts

அது 80 களின் நடுப்பகுதி, இளைஞானி இளையராஜா ராஜா உச்சத்தில் இருந்த காலம். அவரைப்போலவே அவரது இசைக்கலைஞர்களும். மணிரத்னம் அப்போது தனது தனித்துவத்தைக் காட்டத் தொடங்கியிருக்கவில்லை . ஆனால் அவரால் ராஜாவிடம் அருமையான பாடல்களைத் தனது படங்களுக்கு வாங்கிக் கொள்ளும் திறமை அப்போதே இருந்தது. அப்போது அவர் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதில் இழந்த காதலியை நினைத்து நாயகன் பாடுவதாக ஒரு காட்சி.
 
ராஜா மணிரத்னத்தின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு இதயத்தின் அடியிலிருந்து வெளிப்படும் மெட்டொன்றைப் போட, பாடலும் எழுதப்பட்டாயிற்று. அடுத்த நாள் பிரசாத் ஸ்டூடியோவில் பாடலின் ஒலிப்பதிவு என்று ராஜாவின் உதவியாளர் இசைக்கலைஞர்களுக்கு அறிவித்திருந்தார்.
 
அனேகமான பாடல் பதிவுகளுக்கு நான்கு தொடக்கம் 6 மணித்தியாலங்களே பொதுவாக ராஜாவால் ஒதுக்கப்படுகின்றது. இதற்குள்ளேதான் பாடலுக்கான, இசைக் குறிப்புக்களைப் பரிமாறிக்கொள்ளுதல், ஒத்திகை பின் ஒலிப்பதிவு என்பன நடைபெறுவதாக அறிகின்றேன்.
 
அந்த நாள்.. பாடலின் ஒலிப்பதிவன்று காலை 7 மணியிலிருந்து மதியம் ஒருமணிவரை அந்தப் பாடலுக்காக கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஏழு மணிக்கே எல்லோரும் ஸ்டூடியோவில் ஆஜராகியிருந்தனர். ஆனால் முக்கியமான ஒரு கலைஞர் மட்டும் வரவில்லை.. .. சரி விரைவில் வந்துவிடுவார் என எண்ணியபடி மற்றய கலைஞர்கள் ராஜாவின் இசைக்குறிப்பை படித்து அதை உள்வாங்கிய பின் ஒத்திகையும் பார்க்கத் தொடங்கியிருந்தனர். அந்த முக்கியமான கலைஞர் இன்னும் வரவில்லை..
 
அப்போதெல்லாம் இப்போதையப் போல செல்போன் வசதியெல்லாம் கிடையாது. எனவே அந்தக் கலைஞர் வருவாரா இல்லையா என்பதை எவராலுமே உறுதிப்படுத்த முடியவில்லை.
 
பாடலுக்காக பல மணிநேர ஒத்திகை முடிவடைந்து ரேக் போகலாம் என முடிவெடுக்கப்ப்ட்டாயிற்று.. ம்ஹூம்... இப்போதும் அந்த முக்கியமான கலைஞர் வந்து சேரவில்லை. சரி அவரால் இன்று வரமுடியாது என முடிவுக்கு வந்து அவரில்லாமலேயே பாடலைப் பதிவு செய்து விடுவோம் என வேறு வழியில்லாமல் முடிவெடுக்கப்பட்டு வழமையின் படி தேங்காய் உடைக்கப்பட்டு ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் எல்லா கலைஞர்களும் தமக்குரிய இடங்களில் அமர்ந்து பாடல் தொடங்கவும் கதவு திறக்கப்படுகின்றது அங்கே அந்தக் கலைஞன் அப்போதுதான் ஸ்டூடியோவுக்குள் வந்து சேர்கிறார்..
 
இனி என்ன செய்வது ? பல மணிநேர ஒத்திகையின் பின் பாடல் பதிவிற்கான இறுதிக்கட்டத்தில் இவர் வந்திருக்கிறாரே.. இனி மீண்டும் இவரிற்கான ஒத்திகைக்கு நேரம் ஒதுக்க வேண்டுமா என்ன? இந்த எண்ணம் சாதாரணமான எல்லோருக்கும் ஏற்பட்டிருக்குமல்லவா? .அங்குதான் வித்தியாசம் இருக்கின்றது. அந்தக் கலைஞர் ஒத்திகை ஒன்றுக்கும் போகவில்லை.. எதுவுமே பார்க்கவில்லை.. கேட்கவில்லை.. ராஜாவின் இசைக்குறிப்பை வாங்குகின்றார். ஓகே ரேக் போகலாம் என்கிறார்.
 
21nan-rasitha-padal1.jpg
 
ஒரு அந்தரிக்கும் ஆன்மாவின் அழுகுரலை.. பிடுங்கி எறியப்பட்ட இதயத்தின் அலறலை,.. சொல்வதற்கு வார்த்தையில்லாமல் தவிக்கும் ஒருவனின் வலியை பாடலின் ஆரம்ப இசையின் ஆரம்பத்திலேயே, நெத்தியடியாக, கேட்பவர் நெஞ்சுக்குள், சம்மட்டியாக இறக்கி, பாடல் இடம்பெறும் சூழ்நிலையை புரியவைக்க தீர்மானித்த ராஜா, அதற்காகத் தெரிவு செய்த வாத்தியம். பின்னணியில் அமானுஷ்ய அமைதியுடன் கூடிய ஒரு ஒற்றைப் புல்லாங்குழல்.
 
ராஜாவின் இசைக்குறிப்புக்கு ஏற்ப புல்லாங்குழல் ஓ.. வென உச்சஸ்தாயியில் கதறத் தொடங்கியது.. காதலின் இழப்பை, காதலியின் பிரிவை, உலகத்தில் தனித்து விடப்பட்ட ஒருவனின் தவிப்பை .முதல் 22 செக்கனில் அச்சொட்டாகப் புரிய வைத்து கேட்பவர்களின் நெஞ்சைப் பதறவைக்கிறது அந்தப் புல்லாங்குழல். அது . கதறியபடியே செல்லவும் 22 வது செக்கனிலிருந்து ... மெது மெதுவாக குருவிகளின் சத்தங்கள் வந்து புல்லாங்குழலுடன் சேர அதனைத் தொடர்ந்து பாலு படத்தின் நாயகனின் உள்ளக் குமுறலை அநாயாசமாக ஒவ்வொரு வரிகளிலும் கொண்டுவந்து உச்சரித்துப் பாடத்தொடங்கவும் அவருடன் கிட்டாரின் Vamping உடன் Electric Piano வும் சேர்ந்து கொள்கின்றன.
 
அவற்றைத் தொடர்ந்து மெது மெதுவாக தாள வாத்தியக் கலைஞர்களும் ஏனைய கலைஞர்களும் இணைந்து ஆர்ப்பட்டமில்லாத மென்மையான ஒரு மெலடியை உருவாக்கத் தொடங்குகின்றார்கள். பாட்டென்றால் பாட்டு அப்படியொரு பாட்டு. அந்தப் பாட்டு தொடங்கியபோது அந்த ஒற்றைப் புல்லாங்குழல் கொடுத்த அதே மன உணர்வை இறுதிவரை சுமந்து செல்கின்றது அந்தப் பாட்டு.
 
இந்தப் பாட்டின் ராஜா முத்திரையை ராஜா பதித்துள்ள இடம் ஆரம்ப மற்றும் இடையிசைகளுக்கிடையே இருக்கும் அசாத்தியமான ஒற்றுமை. எப்படி ஆரம்ப இசையை ஒரு ஒற்றை புல்லாங்குழலின் கதறல் மூலம் ஆரம்பித்தாரோ அதே உணர்வுக்கு கொஞ்சமும் குறைவில்லாத உணர்வை முதலாவது இடையிசையும் தருகின்றது. ஆனால் இங்கே வித்தியாசம் என்னவென்றால் ஒற்றை புல்லாங்குழலுக்குப் பதிலாக ஒற்றை வயிலினின் கேவலும் அதை முன்னிறுத்திக்காட்டும் வயிலின் கூட்டணிகளின் அற்புதமான பின்னணியிசையும் தான் . ..
 
சரி, இனி நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த இசைக்கலைஞர் இந்தப் பாட்டில் எப்படி சம்பந்தப்படுகின்றார்? ஒரு ஒத்திகை கூடப் பார்க்காத அவரின் வாசிப்ப்பில் பிசிறல்கள், பிழைகள், இடைஞ்சல்கள் ஏதாவது ஏற்பட்டதா?
 
பாடலுக்கான ஒரு ஒத்திகையில் கூடப் பங்கேற்காத அந்தக் கலைஞர்தான், இசைஞானி அந்தப்பாட்டுக்காக எழுதிக் கொடுத்த Harmony யினை அற்புதமாக பின்னணியில் பண்ணியிருப்பார். பாடலுடன் சென்று கொண்டேயிருப்பார்... எங்கும் எந்த இடத்திலும் ஒரு சிறு பிழைகூட அவர் விடவில்லை.. ஒரு பிசிறும் இல்லை.. ராஜாவின் இசைக்குறிப்பை அச்சு அசலாக அலாக்காக ஒரே மூச்சில் வாசித்து முடித்து சக இசைக்கலைஞர்களை ஆச்சரியப்படுத்தி சந்தோஷப்பட வைத்தார். அவர்தான்..
 
இந்தியாவின் தலை சிறந்த கீபோர்ட் கலைஞர்களில் ஒருவர் என அறியப்படும் விஜி மனுவல் அந்தப்பாட்டுக்கு அவர் ஹார்மனி பண்ணிய வாத்தியம் Electric Piano..
பாடல் : இதயக்கோயில் படத்தில் இடம்பெற்ற 'நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா..' என்ற பாலுவின் மெலடி.
 
 
இந்தச் சம்பவத்தை நேரே பார்த்தசாட்சியாக எனக்குக் கூறிப் பிரமூப்பூட்டியவர் அவருடன் கூடவே அங்கிருந்து பேஸ் கிட்டார் வாசித்த இன்னொரு மேதை சசி அண்ணர். விஜி மனுவல் அவர்களுடன் 35 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாகப் பணிபுரிந்த சக கலைஞன் சசி அண்ணர்.
 
அவரின் பேஸ் கிட்டார் வாசிக்கும் ஸ்டைலைப் பற்றி பிரமிக்கும் பேஸ் கிட்டார் கலைஞர்களை எனக்குத் தெரியும். அவரின் வாசிப்பில் காணப்படும் தனித்துவமும் நுணுக்கமும்தான் பேஸ் கிட்டார் பழகுவதற்கான தங்களின் ஐnளிசையவழைn என்று எத்தனையோ பேர் எனது பதிவுகளுக்கே பின்னூட்டமிட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தனது சக கலைஞனைப் பற்றிக் கூறும் போது விஜி மனுவல் சாரா... அவரைப் போல ஒரு மேதையை இனி வருங்காலத்தில் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குரிய விடயம்தான்.. என கவலைப்படுவதை நான் அடிக்கடி கேட்கின்றேன்..
 
அந்த மகா கலைஞன் திரு.விஜி மனுவல் விபத்தில் அகப்பட்டு தற்போது தேறிவருகின்றார். அவர் விபத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு விரைவில் வரவேண்டும்.
 
( விஜி மனுவல் அவர்களை கீபோர்ட் கலைஞர் என்றுதான் பரவலாக எல்லோருக்கும் தெரியும்இ ஆனால் ராஜாவின் ஆரம்பப்பாடல்கள் சிலவற்றுக்கு அவர் பேஸ் கிட்டாரும் வாசித்துள்ளார். அவற்றில் பிரியா படத்தில் இடம்பெற்ற டார்லிங்..டார்லிங்..டார்லிங்...
 
 
கிழக்கே போகும் ரயிலில் இடம்பெற்ற 'பூவரசம் பூ பூத்தாச்சு' என்ற பாட்டும்..
 
 
சுஜாதா தனது பதின்ம வயதில் பாடிய 'காதல் ஓவியம் கண்டேன்.. கனவோ..நினைவோ..
 
என்ற பாட்டும் குறிப்பிடத்தக்கவை. )
மேலே நான் குறிப்பிட்டுள்ள விஜி மனுவலின் புலமைக்குச் சான்று பகர்ந்த நான் பாடும் மௌனராகம்.. என்ற பாட்டு ஏற்படுத்திய தாக்கத்தால்தான் மணிரத்னம் தான் எடுத்த அடுத்தபடத்துக்கு மௌனராகம் எனப் பெயரிட்டாராம். இ அவரை ஒரு வித்தியாசமான இயக்குனராக முதலில் அடையாளம் காட்டிய படம் மௌனராகம்தான்.
( படத்தில் விஜி மனுவல்இ ட்ரம்ஸ் கலைஞர் .கொண்டக்டர், புருஷோத்தமன், ராஜாவின் முன்னாள் புல்லாங்குழல்க் கலைஞன் சுதாகர். புகைப்படம் நன்றி Eddie Dhinesh )
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.