Jump to content

நான் சொல்வதை என் உடம்பு கேட்குமா??


Recommended Posts

நான் KFC, Wendy's, McDonald's போன்ற துரித உணவுகளையும், பாண் வகைகளையும் நிப்பாட்டி 3 மாதங்கள் ஆகுது. மாதத்திற்கு ஒருமுறை சிலவேளைகளில் உண்ணவேண்டி வரும். இப்ப எடையில் 7lbs குறைந்துவிட்டது.  :icon_idea:

Link to comment
Share on other sites

நான் KFC, Wendy's, McDonald's போன்ற துரித உணவுகளையும், பாண் வகைகளையும் நிப்பாட்டி 3 மாதங்கள் ஆகுது. மாதத்திற்கு ஒருமுறை சிலவேளைகளில் உண்ணவேண்டி வரும். இப்ப எடையில் 7lbs குறைந்துவிட்டது. :icon_idea:

ரிம் கோர்டன் கோப்பியில் பால், கிரீம் சேர்ப்பதை தவிர்த்து பாருங்கள். ஒரு மாதத்தில் இன்னொரு 7 பவுண்ட் குறைக்கலாம். :)

Link to comment
Share on other sites

நான் KFC, Wendy's, McDonald's போன்ற துரித உணவுகளையும், பாண் வகைகளையும் நிப்பாட்டி 3 மாதங்கள் ஆகுது. மாதத்திற்கு ஒருமுறை சிலவேளைகளில் உண்ணவேண்டி வரும். இப்ப எடையில் 7lbs குறைந்துவிட்டது.  :icon_idea:

 

இந்த மூன்றிலும் நான் சாப்பிடுவதே இல்லை. ரிம் ஹோர்ட்டன்ஸ் பக்கமும் போவதில்லை. பொதுவாக எந்த ஒரு Fast food கடைகளிலும் சாப்பிடுவது இல்லை. அவற்றின் சுவை எனக்கு பிடிப்பதே இல்லை.

 

ஆனால் தமிழ்கடை சாப்பாடுகளை தொடர்வதால் உடம்பு குறையுது இல்லை. முக்கியமாக யாரோ எனக்கு 'வீச்சு' ரொட்டியிலும் பரோட்டாவிலும் செய்வினை செஞ்சு போட்டினம் போல இருக்கு. 2 கிழமைக்கு ஒருக்க்காவாவது வேண்டி சாப்பிடாட்டி நித்திரை வராது. அதே மாதிரி கீரை வடையையும் கிழமைக்கு ஒரு நாளாவது சாப்பிட வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தவரைக்கு கடைகளில் சாப்பிடுவதை தவிர்த்து,வீட்டில் உள்ள கோப்பையை எறிஞ்சுட்டு ஒரு கைப்பிடி அளவுக்குள் உணவுக் கட்டுப்பாட்டை கொண்டு வந்தால் நன்று..நானும் கொஞ்ச நாளாக சாப்பிடுறது எல்லாம் ரொம்ப குறைவு 5 lb, குறைஞ்சு இருக்கிறன்..என்ன ஒரே களைக்குது...ஒன்றுமே செய்ய இயலாது இருக்கு என்றுட்டு வெயிட் செக் பண்ணி பார்த்தால் குறைஞ்சு இருக்கிறன்..கடந்த சில கிழமைகளில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த  உடல் நிறைவு குறைவு மாற்றத்தை மட்டும் தான் கொண்டு வர முடிஞ்சது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மனைவியும் இந்த டயட் (GM diet) முறையை ஆரம்பித்து இன்றுடன் 4 ஆவது நாளாகின்றது. நானும் ஒரு முறை முயன்று பார்ப்பம் என்று நினைத்து இருந்தனான். ஆனால் என் மனைவி சாப்பிடும் அளவையும் உணவையும் பார்த்து விட்டு நமக்கெல்லாம் இது ஒரு விஷப் பரீட்சை என்று நினைக்கத் தொடங்கி விட்டேன்.... :)

முயற்சி செய்யுங்கள் உங்களாலும் முடியும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூன்றிலும் நான் சாப்பிடுவதே இல்லை. ரிம் ஹோர்ட்டன்ஸ் பக்கமும் போவதில்லை. பொதுவாக எந்த ஒரு Fast food கடைகளிலும் சாப்பிடுவது இல்லை. அவற்றின் சுவை எனக்கு பிடிப்பதே இல்லை.

 

ஆனால் தமிழ்கடை சாப்பாடுகளை தொடர்வதால் உடம்பு குறையுது இல்லை. முக்கியமாக யாரோ எனக்கு 'வீச்சு' ரொட்டியிலும் பரோட்டாவிலும் செய்வினை செஞ்சு போட்டினம் போல இருக்கு. 2 கிழமைக்கு ஒருக்க்காவாவது வேண்டி சாப்பிடாட்டி நித்திரை வராது. அதே மாதிரி கீரை வடையையும் கிழமைக்கு ஒரு நாளாவது சாப்பிட வேண்டும்.. 001_forward.gif

 

மிச்சத்தை எப்ப சொல்லுவியள்.....காத்திருக்கின்றோம்  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கு பொரிச்ச சிக்கின் கடையை கண்டால் கால் தானாக கடைக்குள் போய் விடும். ஒரு கிழமைக்கு இரு தடவையாவது சாப்பிட்டு விட்டு விடுவேன். எப்படி நிப்பாட்டுவது தெரியவில்லை

Link to comment
Share on other sites

எனக்கு இங்கு பொரிச்ச சிக்கின் கடையை கண்டால் கால் தானாக கடைக்குள் போய் விடும். ஒரு கிழமைக்கு இரு தடவையாவது சாப்பிட்டு விட்டு விடுவேன். எப்படி நிப்பாட்டுவது தெரியவில்லை

 

 ரதியக்கா உங்களுக்கு சிக்கின் குனியா வரப்போகுது  :D

நான் KFC, Wendy's, McDonald's போன்ற துரித உணவுகளையும், பாண் வகைகளையும் நிப்பாட்டி 3 மாதங்கள் ஆகுது. மாதத்திற்கு ஒருமுறை சிலவேளைகளில் உண்ணவேண்டி வரும். இப்ப எடையில் 7lbs குறைந்துவிட்டது.  :icon_idea:

 

  100 - 7 = 93 lbs ??? :D

Link to comment
Share on other sites

எனக்கு இங்கு பொரிச்ச சிக்கின் கடையை கண்டால் கால் தானாக கடைக்குள் போய் விடும். ஒரு கிழமைக்கு இரு தடவையாவது சாப்பிட்டு விட்டு விடுவேன். எப்படி நிப்பாட்டுவது தெரியவில்லை

 

வாயில் போடாமல்தான்.. :D

  100 - 7 = 93 lbs ??? :D

 

இது குள்ளமான ஏலியன்களின் நிறையாகத்தான் இருக்கும்..  :icon_idea:

Link to comment
Share on other sites

கடைசியாக எப்போது நெத்தலி போட்ட ஒடியல் புட்டு சாப்பிட்டீர்கள்....அந்த நாளே நீங்கள் கடைசியாக நல்ல உணவு சாப்பிட்ட நாள் :)

இப்போது வெளிநாடுகளில் பெரும்பாலானவர்கள் சாப்பிடுவது எல்லாம் நஞ்சு.....வேறு வழியும் இல்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோய்கள் எதுவும் தீண்டாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

அது ஏன் 52 வழிகள்? இந்த வழிகளை எல்லாம் ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பது சிரமமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு ஒரு வழி என்று பழக்கப்படுத்திக் கொண்டால் போதும், ஒரு வருடத்தில் இவை எல்லாமே அத்துப்படி ஆகிவிடும். ‘அப்புறம், உங்கள் உடலுக்கும் மனதுக்கும் 100% கியாரண்டி!’ என்கிறார் பாதை வகுத்துத் தந்த ரேகா ஷெட்டி.

இனி அந்த வழிகளைப் பின்பற்றி நடப்போமே!

1. ஒவ்வொரு நாளும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. சாப்பாட்டில் தவறாது இரண்டு காய்கறிகளாவது இடம் பெறும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டுக்குப் பின் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. உணவுக்கு முன்பு காய்கறிகளைப் பச்சையாக நறுக்கிப் போட்ட வெஜிடபிள் சாலட் சாப்பிடலாம்.

4. நொறுக்குத்தீனிக்கு நாக்கு பரபரக்கிறதா? ‘ஸ்நாக்ஸ்’ வேண்டாம். அதற்குப் பதில் முளைவிட்ட பட்டாணி, பயிறு வகைகளைச் சாப்பிடலாம்.

5. ஒவ்வொரு வேளை உணவையும் அனுபவித்து உண்ணுங்கள். ரசித்து, ருசித்துச் சாப்பிடுங்கள்.
6. ஃப்ரெஷ் ஆன காய்கறிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

7. சர்க்கரை அம்சம் கொண்ட குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள், மிட்டாய்வகைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.
8. எதையும் சமைத்த உடனேயே சாப்பிடுவது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடாக்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
9. உணவில் அவ்வப்போது கீரையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. என்றேனும் ஒருநாள் ‘முழு உண்ணாவிரதம்’ இருங்கள். உணவுக்குப் பதில் காலை, மதியம், மாலை, இரவு காய்கறி சூப், பழரசம் மட்டும் சாப்பிடலாம்.
11. காபி பழக்கத்திற்கு டாடா சொல்லுங்கள். எதையாவது குடிக்கவேண்டும் எனத் தோன்றினால் ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாம்.

12. பொரித்த உணவுப்பண்டங்கள் உடலுக்குக் கெடுதல். உங்கள் உணவிலிருந்து அவற்றை விலக்கி விடுங்கள்.
13. வாரத்தில் ஏதாவது ஒருநாள் காலை டிபனுக்குப் பதிலாகப் பழங்கள் மட்டுமே சாப்பிடுங்கள். மதியம் வரை வேறு எதுவும் உண்ணாமல் நேராக மதிய உணவு அருந்துங்கள்.
14. ‘டயட்’டில் இருக்கிறோம் என்பதற்காக உணவைத் தியாகம் செய்யாதீர்கள். சாப்பிடாத வேளைகளில் ஃப்ரெஷ் ஆன பழங்கள் அல்லது வெஜிடபிள் ஜூஸ் அருந்தலாம்.
15. காபி, சோடா, கோலா ஆகிய பானங்களை அருந்த வேண்டாம்.
16. நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் உங்கள் மெனுவில் இடம் பெறட்டும்.
17. உப்பை அளவாகப் பயன்படுத்துங்கள்.
18. குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாடுங்கள். உங்கள் குழந்தைப் பருவம் நெஞ்சில் நிழலாடுமே! அது அல்லவா ஆனந்தம்?

19. காய்கறிகளை வறுப்பதோ பொரிப்பதோ கூடாது. வேக வைப்பதே சிறந்தது.
20. சமைக்கும்போது உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், கேரட், தக்காளி ஆகிய காய்கறிகளின் மேற்புறத் தோலை நீக்க வேண்டாம். கழுவி வெறுமனே சுரண்டிப் போட்டால் போதும்.
21. நீங்கள் உண்ணும் உணவில் தேவையான கலோரிகள், புரதச்சத்து ஆகியவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் உணவைத் திட்டமிடுங்கள்.
22. எப்போதும் அவசர அவசரமாக உணவை அள்ளி விழுங்காதீர்கள். மென்று தின்றால்தான் உண்ணும் உணவு செரிக்கும்.
23. தியானமும் பிரார்த்தனையும் மனப்பயிற்சிகள். தினமும் 20 நிமிடங்கள் அதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
24. நீங்கள் உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் தரும் உணவைத் தேர்ந்தெடுங்கள்.
25. மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என எதுவானாலும் நீங்களே நேரடியாகச் சென்று வாங்குங்கள். உற்றுப் பார்த்து, முகர்ந்து பார்த்து, தொட்டுப் பார்த்து ஒவ்வொன்றையும் வாங்கினால் எந்த நோய்க்கிருமியும் உங்களிடம் வாலாட்ட முடியாது.
26. மனம் வெறுமையாக இருந்தாலோ, களைப்பு ஏற்பட்டாலோ அதனை ஈடுகட்டுவதற்காகச் சிலர் சாக்லேட்களைச் சாப்பிடுவார்கள். ஜாலி மூடில் ஐஸ்க்ரீம், ஸ்நாக்ஸ் என வெளுத்துக் கட்டுவார்கள். இப்படி உங்கள் உணர்வுகளை உணவுடன் முடிச்சு போடாதீர்கள். பின்பு அதுவே ஒரு பழக்கமாகிவிடும். ‘மூடு’ எதுவாக இருந்தாலும் ஜூஸ் மட்டும் அருந்துங்கள்.
27. சினிமா தியேட்டரில் ‘சிப்ஸ்’ கொறிக்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? அதற்கு ‘நோ’ சொல்லிவிட்டு ‘பாப்கார்ன்’ கொறியுங்கள்.
28. உணவுவேளையின் போது டைனிங்டேபிளில் அமர்ந்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது பேப்பர் படிப்பது, காரசாரமான விவாதங்கள் என்ன வேண்டிக் கிடக்கிறது? முழுக்கவனமும் உணவின் மீதே இருக்கட்டும்.
29. இரவு உணவின்போது ஒட்டுமொத்த குடும்பமும் டி.வி. முன் ஆஜராகி சாப்பாட்டை உள்ளே தள்ளுவது விரும்பத்தக்கதல்ல. அதைவிட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து கலகலப்பான மனநிலையில் சாப்பிடுங்கள்.
30. சுவாசப்பயிற்சி நுரையீரலுக்கு நல்லது. மூச்சை நன்றாக உள்ளுக்கு இழுத்து, மெதுமெதுவாக விடவும். இதுபோல் தினமும் பலமுறை செய்யுங்கள்.
31. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். காமெடி சினிமாக்கள் பார்ப்பது, சரமாரியாக ஜோக்குகள் அடிப்பது, உரக்கச் சிரிப்பது, நகைச்சுவை புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றை உங்கள் இயல்பாக்கிக் கொள்ளுங்கள்.
32. மது அருந்தும் ஆசாமியா நீங்கள்? உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
33. இரவில் படுக்கைக்குச் செல்லும்போது மகிழ்ச்சியான மனநிலை தேவை. தூக்கம் கண்களைத் தழுவும்போது அமைதி உங்கள் நெஞ்சில் நிலவட்டும் குட்நைட்! ஸ்வீட் ட்ரீம்ஸ்!
34. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைக்காமல் ஸ்விம்மிங், ரோலர் ஸ்கேட்டிங் என்று காலில் சக்கரம் கட்டிக் கொள்ளுங்கள்.
35. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ‘வாக்கிங்’ செல்லுங்கள்.
36. கை, கால்களை நீட்டி மடக்கிச் செய்யும் எளிய உடற்பயிற்சிகளுக்கு என்று காலையில் 10 நிமிடங்கள், மாலையில் 10 நிமிடங்கள் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
37. மாடிப்படிகளில் ஏறிச் செல்ல முடிகிறபோது லிஃப்ட், எஸ்கலேட்டர் எல்லாம் எதற்கு? படியேறுவது காலுக்கு வலிமை சேர்க்கும்.

38. தினமும் தியானம் மனதுக்கு நல்லது.
39. ஒருபோதும் மூக்கு முட்ட சாப்பிடாதீர்கள்.
40. ஓய்வெடுப்பது என்பது ஒரு கலை. சும்மா இருப்பது ஓய்வு ஆகாது. உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஓய்வு கொடுங்கள். குறைந்தது 20 நிமிடங்கள் ஓய்வு அவசியம்.
41. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடிப்பது நல்லது.
42. புகை உங்கள் உடலுக்குப் பகை. பழக்கம் இருந்தால் அடியோடு விட்டுவிடுங்கள்.
43. உங்கள் ஆழ்மனத்திற்கு என்று இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடலை 20 நிமிடங்களுக்குத் தளர்த்திவிட்டுக் கொள்ளுங்கள். அந்த ஆரோக்கியமான உடல்நிலையை மனதால் உணருங்கள்.
44. வேலை செய்ய, பொழுதுபோக்க என்று உங்கள் நேரத்தைச் சரியாகப் பகுத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் ‘பேலன்ஸ்’ மிக முக்கியம்.
45. காய்கறிகளை நறுக்குவதற்கு முன் சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவுங்கள்.
46. நண்பர்களை அடிக்கடி சந்தியுங்கள். வாய்ப்பு இல்லாவிட்டால் டெலிபோனிலாவது பேசுங்கள். தனிமை விலகும், இனிமை கூடும்.
47. இதுவரை செய்யாவிட்டால் என்ன, இன்று முதலாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
48. பிறரது தவறுகளை மன்னித்துவிடுங்கள். தேவையில்லாத மனபாரம் குறையும்.
49. முன்பின் தெரியாதவராக இருந்தால் என்ன, எல்லோரிடமும் நட்பு பாராட்டுங்கள்.
50. தினமும் குறைந்தது அரைமணி நேரம் குடும்பத்தினருடன் அரட்டை அடியுங்கள்.
51. ஒவ்வொரு நாளும் குறைந்து 15 நிமிடங்களாவது காது குளிர இசையைக் கேளுங்கள்.

52. நல்ல புத்தகம், நல்ல நண்பன். வாரம் ஒரு புத்தகமாவது

 

http://kiliyanur.blogspot.com.au/2010_12_12_archive.html

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் 4 முறை மாதங்கள் விட்டு விட்டு செய்து

தற்பொழுது 15 கிலோ குறைந்துள்ளேன் உறவுகளே..

 

வயிறு முழுவதுமாக போய்விட்டது

ஓடுதல்

குனிதல்

படி ஏறுதல் சுலபமாக உள்ளது...

 

தலை மயிர் மட்டும் கொஞ்சம் கழண்டுவிட்டது :(

விற்றமின் குறைவடைந்ததால் இருக்கலாம்...

 

பதில் எழுதியவர்களுக்கு பின்னர் எழதுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வைத்தியர்

மற்றும் குடும்பத்தவர்கள்

நண்பர்கள் அனைவருக்கும் சந்தோசம்

நானே இதைச்செய்து முடித்ததால் (சாப்பாட்டு ராமன் நான்)

எனது குடும்பத்தில் பலர் (ஊரிலும் கூட)  செய்கிறார்கள்

அந்தளவுக்கு உதாரணமாகியுள்ளேன்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் 4 முறை மாதங்கள் விட்டு விட்டு செய்து

தற்பொழுது 15 கிலோ குறைந்துள்ளேன் உறவுகளே..

 

வயிறு முழுவதுமாக போய்விட்டது

ஓடுதல்

குனிதல்

படி ஏறுதல் சுலபமாக உள்ளது...

 

தலை மயிர் மட்டும் கொஞ்சம் கழண்டுவிட்டது :(

விற்றமின் குறைவடைந்ததால் இருக்கலாம்...

 

பதில் எழுதியவர்களுக்கு பின்னர் எழதுகின்றேன்

 

என்ன செய்து 15 கிலோ குறைஞ்சது எண்டு உடனடியாய் பதில் வேணும் விசுகர்!! பிரச்சனை எனக்கில்லை.....தூரத்து அண்ணை முறையான ஒராளுக்கு உதவி தேவையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பிரின்ற் எடுத்து கொடுங்கள் அண்ணா...

7_DAYS_6_KG_Page_1.jpg7_DAYS_6_KG_Page_2.jpg

Link to comment
Share on other sites

இவ்வளவையும்  வாசிக்கவே மனுஷன் மெலிஞ்சு போவான் போலகிடக்கு . :icon_mrgreen:

 

மாதத்தில இரண்டு நாள் பார்ட்டி போட்டு அந்த மாதிரி குத்து பாட்டுக்கு  டான்ஸ் ஆட தனுஷ் மாதிரி வரலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனடி பதிலுக்கும் தகவல் இணைப்பிற்கும் நன்றி விசுகர்! 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உடனடி பதிலுக்கும் தகவல் இணைப்பிற்கும் நன்றி விசுகர்! 

 

குமாரசாமியண்ணா

எனது குடும்பத்தினர் கேட்டதற்காக முகநூலில்  நான் எழுதிப்போட்டதை இங்கு தந்திருக்கின்றேன்.

தேவையென்றால் எடுத்துக்கொள்ளுங்கள்.

 

7 நாட்கள் வாய்க்குள் போடுவதை பார்த்துப்போட்டால் 6 கிலோ காணாமல் போகும். தயாரா..??

 

1- முதலாவது நாள்

பழங்கள் மட்டும் (வாழைப்பழம் தவிர்த்து)

எவ்வளவும் சாப்பிடலாம். தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று.

 

2- இரண்டாவது நாள் 

மரக்கறிகள் மட்டும்.

பொரிக்க

வதக்கக்கூடாது. பச்சையாக அல்லது அவித்து.

எவ்வளவும் சாப்பிடலாம். தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று.

 

3-மூன்றாவது நாள்

இரண்டும் கலந்து (பழம் மரக்கறி)

எவ்வளவும் சாப்பிடலாம். தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று.

 

4- நான்காவது நாள்

8 வாழைப்பழமும் 3 கப் பாலும்...

தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று.

பயப்படவேண்டாம். பாலும் பழமும் பசியை விரட்டிவிடும்.

 

5-வது நாள்

ஒருபிடி சோறும் 6 தக்காளிப்பழமும்..

காலையில் 2 தக்காளிப்பழத்தை மட்டும் சாப்பிடுங்கள்.

பாலில்லாத தேனீர் குடியுங்கள்.

மதியம் ஒரு பிடி சோறு. 2 தக்காளிப்பழம்

இரவு ஒரு பிடி சோறு. 2 தக்காளிப்பழம்

மொத்தம் 6 தக்காளிகள் தான்

தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று.

பயப்படவேண்டாம். தக்காளிப் பழம் பசியை விரட்டிவிடும்

உங்களது வயிறு குறைவடைவதையும் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவதையும் உணரத்தொடங்குவீர்கள்

 

6-வது நாள்

ஒருபிடி சோறும் மரக்கறிகளும் 

காலையில் மரக்கறி அல்லது உருளைக்கிழங்கை அவித்து சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடியுங்கள்

மிகுதி இரு நேரமும் ஒருபிடி சோறும் மரக்கறிகளும் 

தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று

 

7வது நாள்

ஒருபிடி சோறும் மரக்கறிகளும் பழங்களும்..

காலையில் பழம் சாப்பிடுங்கள்(வாழைப்பழம் தவிர்த்து)

மிகுதி இரு நேரமும் ஒருபிடி சோறும் மரக்கறிகளும் பழங்களும்..

தாகத்துக்கு தண்ணீர் குடியுங்கள். தேனீர் வேண்டும் என்றால் பாலில்லாத தேனீர். சீனியை முடிந்தவரை குறையுங்கள். தேசிக்காய் விட்டுக்குடித்தால் இன்னும் நன்று

 

விரதம் முடிந்தது

அதற்குள்ளேயே மக்கள் சொல்லிவிட்டார்கள்

பெரும் வெற்றி என்று...

நிறுத்தால்

6 கிலோ குறைந்தேன்.....

 

*****(7 நாளும் கட்டாயம் தவிர்ப்பவை

சீனி

இறைச்சி

முட்டை

மீன்

எண்ணெய்

பால் (ஒரு நாள் தவிர்த்து)

மாவகைகளில் செய்த பதார்த்தங்கள் - புட்டு, இடியப்பம், பாண் உட்பட)

 

6 மாதத்தில் நாலு முறை செய்து 15 கிலோ குறைந்துள்ளேன்.

 

காணாமல் போனவை.

வயிறு

எப்பொழுதும் கண்ணுக்குள் இருக்கும் நித்திரை மயக்கம்

கன்னங்களிலிருந்த கறுப்புப்படலம்..

ஓடினால் 

படி ஏறினால் ஏற்படும் மூச்சுவாங்கல்

உடம்பிலிருந்த கொழுப்பு மற்றும் சீனி 

உடுப்புக்களின் size XXL

 

மீண்டும் கிடைத்தவை

எனது பழைய வெள்ளைநிறம்

ஊசியைக்கூட குனிந்து எடுக்கமுடிவது

உடுப்புக்களின் size L (மக்களின் உடுப்பை இனி மாறிப்போடலாம்)

நானே ஒரு உதாரணம்.

என்னாலேயே முடிந்தது என்றால் உங்களுக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி விசுகர்!
வைத்தியர்களின் வைத்தியத்தை விட அனுபவித்து சொல்பவர்களின் வைத்தியமே சிறந்தது.  நன்றி   :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உங்க உடம்பு கேட்டிட்டு இல்ல.. உங்க சொல்ல.. அதுக்கு கடா வெட்டி விருந்து வையுங்க.. விசுகு அண்ணா. :D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.