Jump to content

புலத்தில் புதிய மதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் வானத்தில இருந்து சூலத்தோட கழுத்தில பாம்போட நெத்தியில பிறையோட இல்லாட்டி வேலோட மயில் வாகனத்தில இல்லாட்டி எலி வாகனத்தில எண்டு ஏதோ ஒரு விதமா ஏகப்பட்ட தலையோடையும் காலோடையும் கையளோடையும் தான் கடவுள் வருவார் எண்டு எண்ணிக்கொண்டிருக்கிறாங்க.

அதாலதான் ஆராவது தன்னைக் கடவுளெண்டால் சீ சீ இவர் கடவுளில்ல எண்டுறாங்க.

சாயிபாபா நான்மட்டும் கடவுளில்ல நீங்களும் கடவுள்தான் உணர்ந்து பாருங்க தெரியுமெண்டிறார்.

நாம எங்க இதெல்லாம் உணருறது எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியுமெண்டிற்று இருக்கவேண்டியதுதான்.

ஒரு நாளைக்கு எப்பிடியும் கடவுள் வரத்தானே வேணும். வராம விடவா போறார்.

செவ்வாய்க் கிரகத்திலயும் தண்ணி இருக்குதாம். சிலவேளை அங்க இருந்து திடீரெண்டு ஒருநாளைக்கு இறங்கினாலும் இறங்குவார்.

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

சாயிபாபா நான்மட்டும் கடவுளில்ல நீங்களும் கடவுள்தான் உணர்ந்து பாருங்க தெரியுமெண்டிறார்.

நாம எங்க இதெல்லாம் உணருறது எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியுமெண்டிற்று இருக்கவேண்டியதுதான்.

நானும் கடவுளா நல்லா இருகுதே அப்ப என்ட வாயில இருந்து ஒன்றும் வரவில்லை ஏன்??

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கடவுளா நல்லா இருகுதே அப்ப என்ட வாயில இருந்து ஒன்றும் வரவில்லை ஏன்??

வாயிருக்குது எண்டதால கடவுளாகலாமோ தெரியாது. வாயில்லாம என்ன இருக்குது? எல்லாத்துக்கும் வாயிருக்குது. என்னென்னமோவெல்லாம் கக்குப்படுகுது.

Link to comment
Share on other sites

முதற் தமிழ்ச்சங்க காலத்தில் தமிழின் முதன் நிலைப் புலவர்களாக சிவபெருமான் முருகப்பெருமான் போன்றோர் இருந்ததாக கடைச்சங்கத்தில் எஞ்சிய அவணங்களை ஆதாரம் காட்டி சொல்லப்படுகின்றது. முதற்சங்கம் ஈழத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட இடம் எனவும் கடல் கோளால் அடித்து செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இது ஒரு பக்கம்.

சிவன் முருகன் என்ற பதங்களுக்கு தமிழ்ச் சித்தர்கள் கொண்ட விளக்கமும் குறிப்புகளும் மருத்தவத்துடனும் உடல் பிணிகளை தீர்க்கும் வழிமுறை சார்ந்த தாக இருப்பினும் தமிழ் மொழியுடன் சொல்லப்பட்ட கருத்துக்களுடன் முரண்படவில்லை.

அடுத்து வரும் காலங்களில் வைணவம் சமஸ்கிருதத்துடனும் வடநாட்டு ஆரிய கடவுள்களுடனும,; சைவம் தமிழுடனும் தென்னாட்டு கடவுள்களுடனும் நீண்ட காலம் முரண்பட்டு நகர்ந்துள்ளது. வரலாற்று குறிப்புகள் ஆவணங்களின் படி தென்னாட்டு கோயில்களில் வடநாட்டு விக்கிரகங்கள் வன்முறையுடன் நிறுவப்பட்ட சான்றுகளும் உண்டு. பெயர் மாற்றங்கள். (திரு என்பது சிறி ஆக மாறியதும். வள்ளி இருக்க தெய்வானை செருகப்பட்டதும். கந்தன் ஸ்கந்தன் சோமஸ்கந்தன் என்றும். பல நூறு வகைகளும். தமிழ் சார்ந்த குட முழுக்கு எல்லாம் மாறி கும்பாபிசேகமாகியதும் என்று பல நுழைவுகள்)

இவ்வாறு வைணவம் பெரிது சைவம் பெரிது என்று பின் இரண்டும் சமம் என்றும் பிறகு இரண்டும் ஒன்று என்றும் நகர்ந்து பின்பு இரண்டும் இந்து என்ற ஒன்றாகி நிற்கின்றது.

இந்த நிலையில் சாமியார்கள் பாபாக்கள்என்று தற்போதைய காலம் உள்ளது.

எங்கோ நாம் தொலைத்த அரும் பொருட்களை, எம் அடிக்கொடிகள் மூதாதையரின் அரும்பெரும் பொருட்களை எல்லம் பறிகொடுத்து இன்றளவில் அது பற்றிய சிந்தனை இன்றி மதத்தில் மதம் பிடித்தும் குறளிவித்தை காட்டுபவனை எல்லாம் கடவுள் என்று ஏற்கும் அளவுக்கு வந்து விட்டோம்.

தமிழனுக்கெண்டு ஒரு நாடு வேண்டும். அதில் தமிழர்கள் தடையின்றி மானுடவியல் ஆய்விலும் எமது புராதன வரலாற்றாய்விலும் ஈடுபட வேண்டும். தவிர நாம் இந்த விசயத்தில் பல ஆயிரம் ஆண்டுகாலம் மூடத்தனத்தில் சென்றுகொண்டிருப்பதுக்கு விமோசனம் இல்லை.

உணர்வுள்ள சிலரின் ஆய்வுகள் கூட தற்போது கணனி உதவியுடன் சிதைக்கப்பட்டு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏனெனில் உண்மையான வரலாறுகள் கூட அதிகாரத்தில் உள்ளவர்களால் மாற்றப்படுகின்றது என்பதே உண்மை. தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அதிகாரம் மூலமே நாம் இழந்து கொண்டிருப்பதை தடுக்கவும் இது வரை இழந்ததை மீளப்பெறவும் முடியும்.

Link to comment
Share on other sites

தமிழனுக்கெண்டு ஒரு நாடு வேண்டும். அதில் தமிழர்கள் தடையின்றி மானுடவியல் ஆய்விலும் எமது புராதன வரலாற்றாய்விலும் ஈடுபட வேண்டும். தவிர நாம் இந்த விசயத்தில் பல ஆயிரம் ஆண்டுகாலம் மூடத்தனத்தில் சென்றுகொண்டிருப்பதுக்கு விமோசனம் இல்லை.

உணர்வுள்ள சிலரின் ஆய்வுகள் கூட தற்போது கணனி உதவியுடன் சிதைக்கப்பட்டு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏனெனில் உண்மையான வரலாறுகள் கூட அதிகாரத்தில் உள்ளவர்களால் மாற்றப்படுகின்றது என்பதே உண்மை. தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அதிகாரம் மூலமே நாம் இழந்து கொண்டிருப்பதை தடுக்கவும் இது வரை இழந்ததை மீளப்பெறவும் முடியும்.

அருமையான கருத்து. முயற்சிப்போம். வெற்றி பெறுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவனும் முருகனும் தென் லெமூரியாவில் வாழ்ந்த சங்கப் புலவர்களென்ற கூற்றை இன்று யார் கருத்திலெடுக்கிறார்கள். இருக்கு வேதகாலத்து அல்லது அதற்கும் முந்திய ஆரிய மன்னர்களில் பலபேரை அந்த வேதமே கடவுளர்களாக்கி விட்டது. இன்றுவரை பகுத்தறிவோடு சிந்தித்து மக்கள் அந்தச் சமயப் பிடியிலிருந்து விடுபடவில்லை. இராமன் போன்ற ஆரிய மன்னர்கள் இதிகாச நாயகர்களாக்கப்பட்டுப் பின்னர் கடவுளர்களாக்பட்டனர். வடநாட்டில் ராம நாம ஜெபம் செய்துகொண்டே முஸ்லீம்களுக்கெதிராக அநியாயங்கள் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாகத் தொடரும் இந்த மூட நம்பிக்கைகளை உடைத்தெறிவதற்கு முடியவில்லை. நாம் புதிதாக ஆய்வு செய்வதற்கு இந்த விடயத்தில் எதுவுமில்லை. மக்களின் மனது ஒருவகைச் சரணாகதிக் கோட்பாட்டில் ஊறிப்போய்விட்டது. சமயம்- குறிப்பாக இந்துக்கள் காலம் காலமாகத் தங்கள் நிம்மதியை இந்த வழியிலேயே பெற்று இன்று அதுவே உண்மை வழி என்று ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

சாயிபாபா போன்றவர்கள் சமயங்களைப் புறக்கணிக்காவிட்டாலும் ஓரளவுக்கேனும் சர்வமத சமரசத்தையும் அதனால் கிடைக்கப்பெறும் அமைதி சமாதானத்தையும் வலியுறுத்துகின்றனர். அதற்காகத் தனக்குத் தெரிந்த குறளிவித்தையை பாபா பயன்படுத்துகிறார். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மக்களிடமே வசூலித்து மக்களுக்கு நல்லதையே செய்கிறார். எடுத்த எடுப்பில் நிராகரித்து விடுமளவுக்கு அவர் மிக மோசமானவராக இருந்திருந்தால் இன்று வரை அவரால் தாக்குப் பிடித்திருக்கவே முடியாது. மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பார்கள். சிறிய எதிர்ப்புகளை மட்டுமே அவர் இன்றுவரை சந்திக்கிறார். ஆனால் ராமனோ, சிவனோ அப்படி எறியப்பட, எதிர்க்கப்பட முடியாதவர்கள். ஏனென்றால் அவர்கள் கற்பனைப் பாத்திரங்கள். சிறிய எதிர்ப்புக் கூட இல்லாமல் நிலை நிற்கிறார்கள். புத்தி ஜீவிகளுக்கு அவர்களின் அருகில் போகவே பயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க சுரிச்ல ஒருத்தன் காலலூயாவோ (வாயுக்குள்ள நுழையுதல்லை) அதுக்கு மாறினவன். கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு போர்சே (Porsche Jeep) வாங்கினவன். அதின்ர விலை SFR. 150'000 . என்ர வாழ்க்கை முடியிற வரைக்கும் உழைச்சாலும் என்னால இவ்வளவு சேர்க்க முடியா. எப்டி தான் வாங்கினாங்களோ....

Link to comment
Share on other sites

சாயிபாபா போன்றவர்கள் சமயங்களைப் புறக்கணிக்காவிட்டாலும் ஓரளவுக்கேனும் சர்வமத சமரசத்தையும் அதனால் கிடைக்கப்பெறும் அமைதி சமாதானத்தையும் வலியுறுத்துகின்றனர். அதற்காகத் தனக்குத் தெரிந்த குறளிவித்தையை பாபா பயன்படுத்துகிறார். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மக்களிடமே வசூலித்து மக்களுக்கு நல்லதையே செய்கிறார். எடுத்த எடுப்பில் நிராகரித்து விடுமளவுக்கு அவர் மிக மோசமானவராக இருந்திருந்தால் இன்று வரை அவரால் தாக்குப் பிடித்திருக்கவே முடியாது. மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பார்கள். சிறிய எதிர்ப்புகளை மட்டுமே அவர் இன்றுவரை சந்திக்கிறார். ஆனால் ராமனோ, சிவனோ அப்படி எறியப்பட, எதிர்க்கப்பட முடியாதவர்கள். ஏனென்றால் அவர்கள் கற்பனைப் பாத்திரங்கள். சிறிய எதிர்ப்புக் கூட இல்லாமல் நிலை நிற்கிறார்கள். புத்தி ஜீவிகளுக்கு அவர்களின் அருகில் போகவே பயம்.

ஆக குற்றம் செய்யலாம் ஒரளவு நல்லது செய்து கொண்டு என்று சொல்லுறீங்களா??அவ்வாறாயின் உலகத்தில இருகிற எல்லாரும் குற்றம் செய்ய தொடங்கிவிடூவீனம்.........இதனால் சர்வமதம் வளர்கிறது என்று ஏற்று கொள்ள முடியாத வாதம்..................இதனால் ஒரு புதிய மதம் உருவாகிறது பிற்காலத்தில் இது பாரிய பிரசினைகளுக்கு இட்டு செல்லும்.......இன்றைய காலத்தில் மதம் என்று ஒன்று தேவையா????அவன் அவன் தங்களின் வேலையில் கவனமா ஈடுபட்டால் மதம் என்று வார்த்தை கூட தேவையில்லை..........மதம் என்று வரும் போது தான் பல பிரச்சினைகள் உருவாகிறது............

மக்கள் ஒன்றில் மூழ்கிவிடார்கள் என்றால் அதில் இருந்து மீள வருகிறது ஏலாத காரியம் பிரேன்வோஸ் நல்லா நடைபெற்றிருக்கும் அவர்கள் அவரின் பின்னாலே செல்வார்கள் இதை யாரும் தடுக்க முடியாது அது தான் இவர்களின் வெற்றியே தங்கியுள்ளது

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DELETE IT BY NITHARSAN

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க சுரிச்ல ஒருத்தன் காலலூயாவோ (வாயுக்குள்ள நுழையுதல்லை) அதுக்கு மாறினவன். கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு போர்சே (Porsche Jeep) வாங்கினவன். அதின்ர விலை SFR. 150'000 . என்ர வாழ்க்கை முடியிற வரைக்கும் உழைச்சாலும் என்னால இவ்வளவு சேர்க்க முடியா. எப்டி தான் வாங்கினாங்களோ....

வாழத்தெரியாத மனிதப்புழுவில் நீங்களும் ஒன்று.செல்லுங்கள்.அவர்களின் ஜோதியில் ஒன்றாக சேருங்கள்.அதன் பின் உல்லாசவாழ்க்கை உங்களை தேடி வரும்.(பெயரிலைமட்டுந்தான் 007 அங்காலை கோதாரியுமில்லை. :angry: ) :D

Link to comment
Share on other sites

வாழத்தெரியாத மனிதப்புழுவில் நீங்களும் ஒன்று.செல்லுங்கள்.அவர்களின் ஜோதியில் ஒன்றாக சேருங்கள்.அதன் பின் உல்லாசவாழ்க்கை உங்களை தேடி வரும்.(பெயரிலைமட்டுந்தான் 007 அங்காலை கோதாரியுமில்லை. :angry: ) :D

நானும் ஜோதியில் ஒன்று சேருவோ!!!!!!!!

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி! சும்மா அல்லேலூயா கோசம் போட்டுக்கொண்டு பின்னால திரிஞ்சால் போர்ச் ஜீப்பெல்லாம் வாங்கலாமெண்டால் முடிஞ்சவங்க வாங்குறதுதானே. நாங்கள் அரோகராதான் போடுவமெண்டு புத்தி ஜீவத்தனமாக நடக்கிறதில என்ன வரப்போகுது. எல்லாம் ஒண்டுதான் பாருங்கோ! ஒண்டுக்கொண்டு குறைஞ்சதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா............!!! பன்னி தான் கூட்டமா வரும் டைகர்(ஜம்மு) எப்பவும் சிங்கிளா தான் வரும்!!! சும்மா அதிருதில்லலல..........ஊழழடு

அப்ப ஏன் டபிளா வருகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்தெரியாத மனிதப்புழுவில் நீங்களும் ஒன்று.செல்லுங்கள்.அவர்களின் ஜோதியில் ஒன்றாக சேருங்கள்.அதன் பின் உல்லாசவாழ்க்கை உங்களை தேடி வரும்.(பெயரிலைமட்டுந்தான் 007 அங்காலை கோதாரியுமில்லை. :angry: ) <_<

மானத்தையும் மதத்தையும் வித்து பிழைக்கிறது ஒரு வாழ்க்கையா? இப்ப தெரியுதா ஏன் எப்ப பாத்தாலும் அடுத்தவன் எங்கடை ஆக்களை மதம் மாத்திறதில குறியா இருக்கிறாங்கள் என்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானத்தையும் மதத்தையும் வித்து பிழைக்கிறது ஒரு வாழ்க்கையா? இப்ப தெரியுதா ஏன் எப்ப பாத்தாலும் அடுத்தவன் எங்கடை ஆக்களை மதம் மாத்திறதில குறியா இருக்கிறாங்கள் என்டு.

ஓஹோ! நீங்க அப்பிடி வாறீங்களா! அதாவது உங்க சொந்த சமயத்தைத் தூக்கிப் பிடிக்கிறீங்களா! நான் நினைச்சன் ஏதோ புத்தி ஜீவித்தனமாச் சொல் வாறீங்களாக்குமெண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஹோ! நீங்க அப்பிடி வாறீங்களா! அதாவது உங்க சொந்த சமயத்தைத் தூக்கிப் பிடிக்கிறீங்களா! நான் நினைச்சன் ஏதோ புத்தி ஜீவித்தனமாச் சொல் வாறீங்களாக்குமெண்டு.

நான் எந்த மதத்தையும் தூக்கிப்பிடிக்கிறதில்லை. காசுக்காக தமிழன் பெத்த தாயையும் ...... கொடுப்பான் என்ட நிலமையை உருவாக்காதேங்கோ.

Link to comment
Share on other sites

அது சரி! சும்மா அல்லேலூயா கோசம் போட்டுக்கொண்டு பின்னால திரிஞ்சால் போர்ச் ஜீப்பெல்லாம் வாங்கலாமெண்டால் முடிஞ்சவங்க வாங்குறதுதானே. நாங்கள் அரோகராதான் போடுவமெண்டு புத்தி ஜீவத்தனமாக நடக்கிறதில என்ன வரப்போகுது. எல்லாம் ஒண்டுதான் பாருங்கோ! ஒண்டுக்கொண்டு குறைஞ்சதில்லை.

உண்மையில நான் சொல்ல வந்த பதிலையே கரு சார் சொல்லிவிட்டார். சைவ சமையதிலை இருந்து சாதிக முடியாததை வேதத்தில் போய் சாதிக்கலாம் என்ற்ரு வடிவேல் சார் நீங்கள் கண்டால் போய் ஆசைப்பட்டதுகளை சாதிக வேண்டியது தானே

Link to comment
Share on other sites

மானத்தையும் மதத்தையும் வித்து பிழைக்கிறது ஒரு வாழ்க்கையா? இப்ப தெரியுதா ஏன் எப்ப பாத்தாலும் அடுத்தவன் எங்கடை ஆக்களை மதம் மாத்திறதில குறியா இருக்கிறாங்கள் என்டு.

ஓஹோ! நீங்க அப்பிடி வாறீங்களா! அதாவது உங்க சொந்த சமயத்தைத் தூக்கிப் பிடிக்கிறீங்களா! நான் நினைச்சன் ஏதோ புத்தி ஜீவித்தனமாச் சொல் வாறீங்களாக்குமெண்டு.

மதம் என்ற ஒரு மூடதனம் அவசியம் என்று நினைகிறீங்களா..............இப்படியான ஒரு விஞ்ஞான யுகத்தில மதம் என்ற வீணற்ற செயல் தேவை என்று நினைகிறீங்களா???இதனால் நாங்கள் சாதித்தது என்ன சாதிக்க போவது தான் என்ன?

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு வடிவேல்:

நான் எந்த மதத்தையும் தூக்கிப்பிடிக்கிறதில்லை. காசுக்காக தமிழன் பெத்த தாயையும் ...... கொடுப்பான் என்ட நிலமையை உருவாக்காதேங்கோ.

கரு: தயவு செய்து மதத்தைப் பெற்றதாயாக்காதீர்கள். அது கீப். மொழி எமது தாய்க்குச் சமன். மண் எமது தாய். ஆனால் மதம் அப்படியில்லை. கண்ணுக்குத் தெரியாத கடவுளைப் பற்றிய வெறித்தனமான கோட்பாடுகள் சிலருக்கு வேண்டுமானால் பிரிய முடியாதவையாயிருக்கலாம். ஆனால் எல்லோரும் நம்மைப் போன்றே இருப்பார்களென்றில்லை. மதத்தை மாகஸ் அபின் என்றார். நான் கீப் என்கிறேன் - நீங்கள் தாயோடு ஒப்பிடப் புகுந்ததால். மதம் வேண்டுவதெல்லாம் எம்மிடமிருந்து பணம் பணம் பணம்தான். கீப்பும் அப்படித்தான். யார் எந்த நம்பிக்கையைப் பற்றிக்கொண்டால் நமக்கென்ன! அவர்கள் சமூகத்துக்கும் இனத்திற்கும் மண்ணிற்கும் எதுவித தீங்கும் செய்யாதவரை அவர்களை அவர்கள் பாட்டில் விட்டுவிடலாம்தானே. ஒவ்வொருவருக்கும் அவரது நம்பிக்கை பெரியது அதனால் வரும் சாந்தியும் சமாதானமும் அவசியமானது. அதைப்போய் நாம் கெடுப்பானேன். அதாவது பன்முகத் தன்மை கொண்ட சமயக் கோட்பாடுகளை நாம் எதிர்க்காதிருப்பது எமது சமுதாயத்தின் எதிர்காலச் சிந்தனை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் இயற்கை நியதி. சமுதாயம் ஏற்கவேண்டியதை ஏற்கட்டும் தேவையற்றதை விட்டுவிட்டும். இதிலே வீணான தலையீட்டைச் செய்யவேண்டிய அவசியம் என்ன இப்போது ஏற்பட்டிருக்கிறது. யாருக்கு என்ன கெடுதல் இப்போது ஏற்பட்டுவிட்டது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.