Jump to content

புலத்தில் புதிய மதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் வானத்தில இருந்து சூலத்தோட கழுத்தில பாம்போட நெத்தியில பிறையோட இல்லாட்டி வேலோட மயில் வாகனத்தில இல்லாட்டி எலி வாகனத்தில எண்டு ஏதோ ஒரு விதமா ஏகப்பட்ட தலையோடையும் காலோடையும் கையளோடையும் தான் கடவுள் வருவார் எண்டு எண்ணிக்கொண்டிருக்கிறாங்க.

அதாலதான் ஆராவது தன்னைக் கடவுளெண்டால் சீ சீ இவர் கடவுளில்ல எண்டுறாங்க.

சாயிபாபா நான்மட்டும் கடவுளில்ல நீங்களும் கடவுள்தான் உணர்ந்து பாருங்க தெரியுமெண்டிறார்.

நாம எங்க இதெல்லாம் உணருறது எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியுமெண்டிற்று இருக்கவேண்டியதுதான்.

ஒரு நாளைக்கு எப்பிடியும் கடவுள் வரத்தானே வேணும். வராம விடவா போறார்.

செவ்வாய்க் கிரகத்திலயும் தண்ணி இருக்குதாம். சிலவேளை அங்க இருந்து திடீரெண்டு ஒருநாளைக்கு இறங்கினாலும் இறங்குவார்.

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

சாயிபாபா நான்மட்டும் கடவுளில்ல நீங்களும் கடவுள்தான் உணர்ந்து பாருங்க தெரியுமெண்டிறார்.

நாம எங்க இதெல்லாம் உணருறது எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியுமெண்டிற்று இருக்கவேண்டியதுதான்.

நானும் கடவுளா நல்லா இருகுதே அப்ப என்ட வாயில இருந்து ஒன்றும் வரவில்லை ஏன்??

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கடவுளா நல்லா இருகுதே அப்ப என்ட வாயில இருந்து ஒன்றும் வரவில்லை ஏன்??

வாயிருக்குது எண்டதால கடவுளாகலாமோ தெரியாது. வாயில்லாம என்ன இருக்குது? எல்லாத்துக்கும் வாயிருக்குது. என்னென்னமோவெல்லாம் கக்குப்படுகுது.

Link to comment
Share on other sites

முதற் தமிழ்ச்சங்க காலத்தில் தமிழின் முதன் நிலைப் புலவர்களாக சிவபெருமான் முருகப்பெருமான் போன்றோர் இருந்ததாக கடைச்சங்கத்தில் எஞ்சிய அவணங்களை ஆதாரம் காட்டி சொல்லப்படுகின்றது. முதற்சங்கம் ஈழத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட இடம் எனவும் கடல் கோளால் அடித்து செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இது ஒரு பக்கம்.

சிவன் முருகன் என்ற பதங்களுக்கு தமிழ்ச் சித்தர்கள் கொண்ட விளக்கமும் குறிப்புகளும் மருத்தவத்துடனும் உடல் பிணிகளை தீர்க்கும் வழிமுறை சார்ந்த தாக இருப்பினும் தமிழ் மொழியுடன் சொல்லப்பட்ட கருத்துக்களுடன் முரண்படவில்லை.

அடுத்து வரும் காலங்களில் வைணவம் சமஸ்கிருதத்துடனும் வடநாட்டு ஆரிய கடவுள்களுடனும,; சைவம் தமிழுடனும் தென்னாட்டு கடவுள்களுடனும் நீண்ட காலம் முரண்பட்டு நகர்ந்துள்ளது. வரலாற்று குறிப்புகள் ஆவணங்களின் படி தென்னாட்டு கோயில்களில் வடநாட்டு விக்கிரகங்கள் வன்முறையுடன் நிறுவப்பட்ட சான்றுகளும் உண்டு. பெயர் மாற்றங்கள். (திரு என்பது சிறி ஆக மாறியதும். வள்ளி இருக்க தெய்வானை செருகப்பட்டதும். கந்தன் ஸ்கந்தன் சோமஸ்கந்தன் என்றும். பல நூறு வகைகளும். தமிழ் சார்ந்த குட முழுக்கு எல்லாம் மாறி கும்பாபிசேகமாகியதும் என்று பல நுழைவுகள்)

இவ்வாறு வைணவம் பெரிது சைவம் பெரிது என்று பின் இரண்டும் சமம் என்றும் பிறகு இரண்டும் ஒன்று என்றும் நகர்ந்து பின்பு இரண்டும் இந்து என்ற ஒன்றாகி நிற்கின்றது.

இந்த நிலையில் சாமியார்கள் பாபாக்கள்என்று தற்போதைய காலம் உள்ளது.

எங்கோ நாம் தொலைத்த அரும் பொருட்களை, எம் அடிக்கொடிகள் மூதாதையரின் அரும்பெரும் பொருட்களை எல்லம் பறிகொடுத்து இன்றளவில் அது பற்றிய சிந்தனை இன்றி மதத்தில் மதம் பிடித்தும் குறளிவித்தை காட்டுபவனை எல்லாம் கடவுள் என்று ஏற்கும் அளவுக்கு வந்து விட்டோம்.

தமிழனுக்கெண்டு ஒரு நாடு வேண்டும். அதில் தமிழர்கள் தடையின்றி மானுடவியல் ஆய்விலும் எமது புராதன வரலாற்றாய்விலும் ஈடுபட வேண்டும். தவிர நாம் இந்த விசயத்தில் பல ஆயிரம் ஆண்டுகாலம் மூடத்தனத்தில் சென்றுகொண்டிருப்பதுக்கு விமோசனம் இல்லை.

உணர்வுள்ள சிலரின் ஆய்வுகள் கூட தற்போது கணனி உதவியுடன் சிதைக்கப்பட்டு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏனெனில் உண்மையான வரலாறுகள் கூட அதிகாரத்தில் உள்ளவர்களால் மாற்றப்படுகின்றது என்பதே உண்மை. தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அதிகாரம் மூலமே நாம் இழந்து கொண்டிருப்பதை தடுக்கவும் இது வரை இழந்ததை மீளப்பெறவும் முடியும்.

Link to comment
Share on other sites

தமிழனுக்கெண்டு ஒரு நாடு வேண்டும். அதில் தமிழர்கள் தடையின்றி மானுடவியல் ஆய்விலும் எமது புராதன வரலாற்றாய்விலும் ஈடுபட வேண்டும். தவிர நாம் இந்த விசயத்தில் பல ஆயிரம் ஆண்டுகாலம் மூடத்தனத்தில் சென்றுகொண்டிருப்பதுக்கு விமோசனம் இல்லை.

உணர்வுள்ள சிலரின் ஆய்வுகள் கூட தற்போது கணனி உதவியுடன் சிதைக்கப்பட்டு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏனெனில் உண்மையான வரலாறுகள் கூட அதிகாரத்தில் உள்ளவர்களால் மாற்றப்படுகின்றது என்பதே உண்மை. தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அதிகாரம் மூலமே நாம் இழந்து கொண்டிருப்பதை தடுக்கவும் இது வரை இழந்ததை மீளப்பெறவும் முடியும்.

அருமையான கருத்து. முயற்சிப்போம். வெற்றி பெறுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவனும் முருகனும் தென் லெமூரியாவில் வாழ்ந்த சங்கப் புலவர்களென்ற கூற்றை இன்று யார் கருத்திலெடுக்கிறார்கள். இருக்கு வேதகாலத்து அல்லது அதற்கும் முந்திய ஆரிய மன்னர்களில் பலபேரை அந்த வேதமே கடவுளர்களாக்கி விட்டது. இன்றுவரை பகுத்தறிவோடு சிந்தித்து மக்கள் அந்தச் சமயப் பிடியிலிருந்து விடுபடவில்லை. இராமன் போன்ற ஆரிய மன்னர்கள் இதிகாச நாயகர்களாக்கப்பட்டுப் பின்னர் கடவுளர்களாக்பட்டனர். வடநாட்டில் ராம நாம ஜெபம் செய்துகொண்டே முஸ்லீம்களுக்கெதிராக அநியாயங்கள் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாகத் தொடரும் இந்த மூட நம்பிக்கைகளை உடைத்தெறிவதற்கு முடியவில்லை. நாம் புதிதாக ஆய்வு செய்வதற்கு இந்த விடயத்தில் எதுவுமில்லை. மக்களின் மனது ஒருவகைச் சரணாகதிக் கோட்பாட்டில் ஊறிப்போய்விட்டது. சமயம்- குறிப்பாக இந்துக்கள் காலம் காலமாகத் தங்கள் நிம்மதியை இந்த வழியிலேயே பெற்று இன்று அதுவே உண்மை வழி என்று ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

சாயிபாபா போன்றவர்கள் சமயங்களைப் புறக்கணிக்காவிட்டாலும் ஓரளவுக்கேனும் சர்வமத சமரசத்தையும் அதனால் கிடைக்கப்பெறும் அமைதி சமாதானத்தையும் வலியுறுத்துகின்றனர். அதற்காகத் தனக்குத் தெரிந்த குறளிவித்தையை பாபா பயன்படுத்துகிறார். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மக்களிடமே வசூலித்து மக்களுக்கு நல்லதையே செய்கிறார். எடுத்த எடுப்பில் நிராகரித்து விடுமளவுக்கு அவர் மிக மோசமானவராக இருந்திருந்தால் இன்று வரை அவரால் தாக்குப் பிடித்திருக்கவே முடியாது. மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பார்கள். சிறிய எதிர்ப்புகளை மட்டுமே அவர் இன்றுவரை சந்திக்கிறார். ஆனால் ராமனோ, சிவனோ அப்படி எறியப்பட, எதிர்க்கப்பட முடியாதவர்கள். ஏனென்றால் அவர்கள் கற்பனைப் பாத்திரங்கள். சிறிய எதிர்ப்புக் கூட இல்லாமல் நிலை நிற்கிறார்கள். புத்தி ஜீவிகளுக்கு அவர்களின் அருகில் போகவே பயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க சுரிச்ல ஒருத்தன் காலலூயாவோ (வாயுக்குள்ள நுழையுதல்லை) அதுக்கு மாறினவன். கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு போர்சே (Porsche Jeep) வாங்கினவன். அதின்ர விலை SFR. 150'000 . என்ர வாழ்க்கை முடியிற வரைக்கும் உழைச்சாலும் என்னால இவ்வளவு சேர்க்க முடியா. எப்டி தான் வாங்கினாங்களோ....

Link to comment
Share on other sites

சாயிபாபா போன்றவர்கள் சமயங்களைப் புறக்கணிக்காவிட்டாலும் ஓரளவுக்கேனும் சர்வமத சமரசத்தையும் அதனால் கிடைக்கப்பெறும் அமைதி சமாதானத்தையும் வலியுறுத்துகின்றனர். அதற்காகத் தனக்குத் தெரிந்த குறளிவித்தையை பாபா பயன்படுத்துகிறார். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மக்களிடமே வசூலித்து மக்களுக்கு நல்லதையே செய்கிறார். எடுத்த எடுப்பில் நிராகரித்து விடுமளவுக்கு அவர் மிக மோசமானவராக இருந்திருந்தால் இன்று வரை அவரால் தாக்குப் பிடித்திருக்கவே முடியாது. மக்கள் அவரைத் தூக்கியெறிந்திருப்பார்கள். சிறிய எதிர்ப்புகளை மட்டுமே அவர் இன்றுவரை சந்திக்கிறார். ஆனால் ராமனோ, சிவனோ அப்படி எறியப்பட, எதிர்க்கப்பட முடியாதவர்கள். ஏனென்றால் அவர்கள் கற்பனைப் பாத்திரங்கள். சிறிய எதிர்ப்புக் கூட இல்லாமல் நிலை நிற்கிறார்கள். புத்தி ஜீவிகளுக்கு அவர்களின் அருகில் போகவே பயம்.

ஆக குற்றம் செய்யலாம் ஒரளவு நல்லது செய்து கொண்டு என்று சொல்லுறீங்களா??அவ்வாறாயின் உலகத்தில இருகிற எல்லாரும் குற்றம் செய்ய தொடங்கிவிடூவீனம்.........இதனால் சர்வமதம் வளர்கிறது என்று ஏற்று கொள்ள முடியாத வாதம்..................இதனால் ஒரு புதிய மதம் உருவாகிறது பிற்காலத்தில் இது பாரிய பிரசினைகளுக்கு இட்டு செல்லும்.......இன்றைய காலத்தில் மதம் என்று ஒன்று தேவையா????அவன் அவன் தங்களின் வேலையில் கவனமா ஈடுபட்டால் மதம் என்று வார்த்தை கூட தேவையில்லை..........மதம் என்று வரும் போது தான் பல பிரச்சினைகள் உருவாகிறது............

மக்கள் ஒன்றில் மூழ்கிவிடார்கள் என்றால் அதில் இருந்து மீள வருகிறது ஏலாத காரியம் பிரேன்வோஸ் நல்லா நடைபெற்றிருக்கும் அவர்கள் அவரின் பின்னாலே செல்வார்கள் இதை யாரும் தடுக்க முடியாது அது தான் இவர்களின் வெற்றியே தங்கியுள்ளது

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DELETE IT BY NITHARSAN

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க சுரிச்ல ஒருத்தன் காலலூயாவோ (வாயுக்குள்ள நுழையுதல்லை) அதுக்கு மாறினவன். கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு போர்சே (Porsche Jeep) வாங்கினவன். அதின்ர விலை SFR. 150'000 . என்ர வாழ்க்கை முடியிற வரைக்கும் உழைச்சாலும் என்னால இவ்வளவு சேர்க்க முடியா. எப்டி தான் வாங்கினாங்களோ....

வாழத்தெரியாத மனிதப்புழுவில் நீங்களும் ஒன்று.செல்லுங்கள்.அவர்களின் ஜோதியில் ஒன்றாக சேருங்கள்.அதன் பின் உல்லாசவாழ்க்கை உங்களை தேடி வரும்.(பெயரிலைமட்டுந்தான் 007 அங்காலை கோதாரியுமில்லை. :angry: ) :D

Link to comment
Share on other sites

வாழத்தெரியாத மனிதப்புழுவில் நீங்களும் ஒன்று.செல்லுங்கள்.அவர்களின் ஜோதியில் ஒன்றாக சேருங்கள்.அதன் பின் உல்லாசவாழ்க்கை உங்களை தேடி வரும்.(பெயரிலைமட்டுந்தான் 007 அங்காலை கோதாரியுமில்லை. :angry: ) :D

நானும் ஜோதியில் ஒன்று சேருவோ!!!!!!!!

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி! சும்மா அல்லேலூயா கோசம் போட்டுக்கொண்டு பின்னால திரிஞ்சால் போர்ச் ஜீப்பெல்லாம் வாங்கலாமெண்டால் முடிஞ்சவங்க வாங்குறதுதானே. நாங்கள் அரோகராதான் போடுவமெண்டு புத்தி ஜீவத்தனமாக நடக்கிறதில என்ன வரப்போகுது. எல்லாம் ஒண்டுதான் பாருங்கோ! ஒண்டுக்கொண்டு குறைஞ்சதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா............!!! பன்னி தான் கூட்டமா வரும் டைகர்(ஜம்மு) எப்பவும் சிங்கிளா தான் வரும்!!! சும்மா அதிருதில்லலல..........ஊழழடு

அப்ப ஏன் டபிளா வருகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்தெரியாத மனிதப்புழுவில் நீங்களும் ஒன்று.செல்லுங்கள்.அவர்களின் ஜோதியில் ஒன்றாக சேருங்கள்.அதன் பின் உல்லாசவாழ்க்கை உங்களை தேடி வரும்.(பெயரிலைமட்டுந்தான் 007 அங்காலை கோதாரியுமில்லை. :angry: ) <_<

மானத்தையும் மதத்தையும் வித்து பிழைக்கிறது ஒரு வாழ்க்கையா? இப்ப தெரியுதா ஏன் எப்ப பாத்தாலும் அடுத்தவன் எங்கடை ஆக்களை மதம் மாத்திறதில குறியா இருக்கிறாங்கள் என்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானத்தையும் மதத்தையும் வித்து பிழைக்கிறது ஒரு வாழ்க்கையா? இப்ப தெரியுதா ஏன் எப்ப பாத்தாலும் அடுத்தவன் எங்கடை ஆக்களை மதம் மாத்திறதில குறியா இருக்கிறாங்கள் என்டு.

ஓஹோ! நீங்க அப்பிடி வாறீங்களா! அதாவது உங்க சொந்த சமயத்தைத் தூக்கிப் பிடிக்கிறீங்களா! நான் நினைச்சன் ஏதோ புத்தி ஜீவித்தனமாச் சொல் வாறீங்களாக்குமெண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஹோ! நீங்க அப்பிடி வாறீங்களா! அதாவது உங்க சொந்த சமயத்தைத் தூக்கிப் பிடிக்கிறீங்களா! நான் நினைச்சன் ஏதோ புத்தி ஜீவித்தனமாச் சொல் வாறீங்களாக்குமெண்டு.

நான் எந்த மதத்தையும் தூக்கிப்பிடிக்கிறதில்லை. காசுக்காக தமிழன் பெத்த தாயையும் ...... கொடுப்பான் என்ட நிலமையை உருவாக்காதேங்கோ.

Link to comment
Share on other sites

அது சரி! சும்மா அல்லேலூயா கோசம் போட்டுக்கொண்டு பின்னால திரிஞ்சால் போர்ச் ஜீப்பெல்லாம் வாங்கலாமெண்டால் முடிஞ்சவங்க வாங்குறதுதானே. நாங்கள் அரோகராதான் போடுவமெண்டு புத்தி ஜீவத்தனமாக நடக்கிறதில என்ன வரப்போகுது. எல்லாம் ஒண்டுதான் பாருங்கோ! ஒண்டுக்கொண்டு குறைஞ்சதில்லை.

உண்மையில நான் சொல்ல வந்த பதிலையே கரு சார் சொல்லிவிட்டார். சைவ சமையதிலை இருந்து சாதிக முடியாததை வேதத்தில் போய் சாதிக்கலாம் என்ற்ரு வடிவேல் சார் நீங்கள் கண்டால் போய் ஆசைப்பட்டதுகளை சாதிக வேண்டியது தானே

Link to comment
Share on other sites

மானத்தையும் மதத்தையும் வித்து பிழைக்கிறது ஒரு வாழ்க்கையா? இப்ப தெரியுதா ஏன் எப்ப பாத்தாலும் அடுத்தவன் எங்கடை ஆக்களை மதம் மாத்திறதில குறியா இருக்கிறாங்கள் என்டு.

ஓஹோ! நீங்க அப்பிடி வாறீங்களா! அதாவது உங்க சொந்த சமயத்தைத் தூக்கிப் பிடிக்கிறீங்களா! நான் நினைச்சன் ஏதோ புத்தி ஜீவித்தனமாச் சொல் வாறீங்களாக்குமெண்டு.

மதம் என்ற ஒரு மூடதனம் அவசியம் என்று நினைகிறீங்களா..............இப்படியான ஒரு விஞ்ஞான யுகத்தில மதம் என்ற வீணற்ற செயல் தேவை என்று நினைகிறீங்களா???இதனால் நாங்கள் சாதித்தது என்ன சாதிக்க போவது தான் என்ன?

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு வடிவேல்:

நான் எந்த மதத்தையும் தூக்கிப்பிடிக்கிறதில்லை. காசுக்காக தமிழன் பெத்த தாயையும் ...... கொடுப்பான் என்ட நிலமையை உருவாக்காதேங்கோ.

கரு: தயவு செய்து மதத்தைப் பெற்றதாயாக்காதீர்கள். அது கீப். மொழி எமது தாய்க்குச் சமன். மண் எமது தாய். ஆனால் மதம் அப்படியில்லை. கண்ணுக்குத் தெரியாத கடவுளைப் பற்றிய வெறித்தனமான கோட்பாடுகள் சிலருக்கு வேண்டுமானால் பிரிய முடியாதவையாயிருக்கலாம். ஆனால் எல்லோரும் நம்மைப் போன்றே இருப்பார்களென்றில்லை. மதத்தை மாகஸ் அபின் என்றார். நான் கீப் என்கிறேன் - நீங்கள் தாயோடு ஒப்பிடப் புகுந்ததால். மதம் வேண்டுவதெல்லாம் எம்மிடமிருந்து பணம் பணம் பணம்தான். கீப்பும் அப்படித்தான். யார் எந்த நம்பிக்கையைப் பற்றிக்கொண்டால் நமக்கென்ன! அவர்கள் சமூகத்துக்கும் இனத்திற்கும் மண்ணிற்கும் எதுவித தீங்கும் செய்யாதவரை அவர்களை அவர்கள் பாட்டில் விட்டுவிடலாம்தானே. ஒவ்வொருவருக்கும் அவரது நம்பிக்கை பெரியது அதனால் வரும் சாந்தியும் சமாதானமும் அவசியமானது. அதைப்போய் நாம் கெடுப்பானேன். அதாவது பன்முகத் தன்மை கொண்ட சமயக் கோட்பாடுகளை நாம் எதிர்க்காதிருப்பது எமது சமுதாயத்தின் எதிர்காலச் சிந்தனை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் இயற்கை நியதி. சமுதாயம் ஏற்கவேண்டியதை ஏற்கட்டும் தேவையற்றதை விட்டுவிட்டும். இதிலே வீணான தலையீட்டைச் செய்யவேண்டிய அவசியம் என்ன இப்போது ஏற்பட்டிருக்கிறது. யாருக்கு என்ன கெடுதல் இப்போது ஏற்பட்டுவிட்டது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.