Jump to content

என் அப்பா ..!


Recommended Posts

அப்பா ஒரு அழகிய சிற்பி..

என்னை செதுக்கிய போது வலித்தது ..

செதுக்கிய பின் என்னை பார்த்தா ..

எனக்கே ஆச்சரியம் அவ்வளவு அழகு ..

பல முரணுக்கு செந்தக்காரர் அப்பா ..

என் பார்வையில் அப்படியே ஆனால் ..

உள்ளாத்தம் என்னை சீர்படுத்தல் என்று ..

எனக்கு அப்பொழுது தெரிய வாய்ப்பில்லை ..

இளமையும் வேகமும் கேட்கும் நிலையில் ..

எனக்கு இருக்கவில்லை அறிவுரை வதையே ..

பொய்சொல்லி பணம் கேட்கும் போதும் ..

சொல்வது பொய் என தெரிந்தும் கண்டுக்காமல் ..

மேலதிகமா தந்துவிட்டு வேளைக்கு வா என ..

சொல்லிவிடும் அற்புத ஜீவன் அப்பா ..

என்ன செய்கிறாய் என்று இன்றுவரை என்னை ..

கேட்டது இல்லை என்னுள் தான் இருப்பதா ..

பலமுறை அம்மாவிடம் சொல்லி இருந்தார் ..

அவன் என்னைபோல எங்கு போனாலும் ..

தன்னை காத்து கொள்ளும் அறிவு இருக்கடி ..

என என் பின்னாடி பெருமை பேசும் இறை ..

கள்ளுக்கு வைத்த காசை பலமுறை ..

களவாடி போயிருக்கேன் இன்று ..

பல போத்தில் வாங்கி கொடுக்கும் நிலை ..

ஆனால் அப்பாத்தான் இறைநிலை ..

ஒரு முறை பலமா அடித்து விட்டார் ..

எண்ணை போட்டு உருவியபடி சொன்னார் ..

இனி என் கை உன்னை தட்டி கொடுக்க மட்டும் ..

உன்னில் படும் மகனே என்று செயலிலும் செய்தார் ..

சும்மா தட்டினா சொரணை கெடும் என்பார் ..

நீ சுயமா சிந்தி நீதான் ராஜா உனக்கு என்பார் ..

பாசத்தை கோவமா காட்டும் தாயுமானவர் .

என் அப்பா .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா கவிதை அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை  எனக்கும் பொருந்தும்

அதையும் கடந்து

உங்கள் அப்பாநிலையில் நான் இன்று...

வாழ்க்கை ஒரு சக்கரம்

தருவதை பெறுவதும்

மீண்டும் விதைப்பதும் தொடர்கிறது

 

நன்றி  கவிக்கும் நினைவுகளுக்கும்..

 

Link to comment
Share on other sites

அப்பா கவிதை அருமை

 

நன்றி புத்தன் அண்ணே வருகைக்கு உங்கள் கருத்துக்கு .

உங்கள் கவிதை  எனக்கும் பொருந்தும்

அதையும் கடந்து

உங்கள் அப்பாநிலையில் நான் இன்று...

வாழ்க்கை ஒரு சக்கரம்

தருவதை பெறுவதும்

மீண்டும் விதைப்பதும் தொடர்கிறது

 

நன்றி  கவிக்கும் நினைவுகளுக்கும்..

 

கண்டிப்பா இருப்பதாய் விட கட்டுபாடா அப்பா இருத்தா பிள்ளை எப்பவும் அப்பா மின்னே .

 

நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும் .

Link to comment
Share on other sites

தந்தையர் தினத்தில் என் அப்பாவையும் நினைவூட்டிய உங்கள் கவிதைக்கு மிக்க நன்றி அஞ்சரன்.

Link to comment
Share on other sites

தந்தையர் தினத்தில் என் அப்பாவையும் நினைவூட்டிய உங்கள் கவிதைக்கு மிக்க நன்றி அஞ்சரன்.

நன்றி பகலவன் வருகைக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா!

நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைத்த அப்பா !

அம்மா இறந்த நாளன்று, கடவுளே எங்கள் அம்மாவை எங்களுடன் விட்டு விட்டு, அப்பாவை எடுத்துக்கொள்ளேன் என்று ஏங்கவைத்த அப்பா !

ஆத்தையுடன் சேர்ந்து நீங்கள் மூன்றுபேரும் செத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்விட்டுச் சொல்லிய அப்பா !

அம்மா இறந்த முதலாம் நினைவஞ்சலியில் தனது இரண்டாம் தாரத்தை ஊருக்கு காட்டிய அப்பா!

சிற்றன்னை வந்த முதலாம் வருடத்திலேயே தனது மூத்த பிள்ளைகள் இரண்டையும் வீட்டை விட்டுத் துரத்திய அப்பா !

கடைசியாக இருந்த தம்பியையும், சிற்றன்னைக்காக, ஒரு தகப்பன் கூறமுடியாத குற்றச்சாட்டுக்களைக் கோர்த்துக்கட்டி விரட்டி விட்ட அப்பா !

ஆனையிறவு மீட்புச் சமரில் பலியானான் என்று நம்பிய  தனது இராணுவக் கப்டன் நண்பனுக்காக கடவுளிடம் மன்றாடிய நாத்திக அப்பா!

அவன் திரும்பவந்து அவர்னமுன் நின்றதும், கடவுள் இருக்கிறார் என்று துதிபாடிய அப்பா!

அதே சமரில் தனது இளைய மகன் கொல்லப்பட்டதை அறிந்து குதூகலித்துப், "பயங்கரவாதி இறந்தான்" என்று கூவிய அப்பா!

இறுதியாக இறந்தபோது மீதமிருந்த பிள்ளைகளிடமிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட பெறமுடியாமல்ப் போன அப்பா !

இப்படியொரு அப்பன் இருந்தாலென்ன, செத்தாலென்ன ??

 

ஒவ்வொரு அப்பாக்கள் தினமும் எனக்கு இப்படித்தான் கழிகிறது !

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா கவிதை அருமை


கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை அப்பாவை. மாறத வலிகள் இன்னும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா!

நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைத்த அப்பா !

அம்மா இறந்த நாளன்று, கடவுளே எங்கள் அம்மாவை எங்களுடன் விட்டு விட்டு, அப்பாவை எடுத்துக்கொள்ளேன் என்று ஏங்கவைத்த அப்பா !

ஆத்தையுடன் சேர்ந்து நீங்கள் மூன்றுபேரும் செத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்விட்டுச் சொல்லிய அப்பா !

அம்மா இறந்த முதலாம் நினைவஞ்சலியில் தனது இரண்டாம் தாரத்தை ஊருக்கு காட்டிய அப்பா!

சிற்றன்னை வந்த முதலாம் வருடத்திலேயே தனது மூத்த பிள்ளைகள் இரண்டையும் வீட்டை விட்டுத் துரத்திய அப்பா !

கடைசியாக இருந்த தம்பியையும், சிற்றன்னைக்காக, ஒரு தகப்பன் கூறமுடியாத குற்றச்சாட்டுக்களைக் கோர்த்துக்கட்டி விரட்டி விட்ட அப்பா !

ஆனையிறவு மீட்புச் சமரில் பலியானான் என்று நம்பிய  தனது இராணுவக் கப்டன் நண்பனுக்காக கடவுளிடம் மன்றாடிய நாத்திக அப்பா!

அவன் திரும்பவந்து அவர்னமுன் நின்றதும், கடவுள் இருக்கிறார் என்று துதிபாடிய அப்பா!

அதே சமரில் தனது இளைய மகன் கொல்லப்பட்டதை அறிந்து குதூகலித்துப், "பயங்கரவாதி இறந்தான்" என்று கூவிய அப்பா!

இறுதியாக இறந்தபோது மீதமிருந்த பிள்ளைகளிடமிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட பெறமுடியாமல்ப் போன அப்பா !

இப்படியொரு அப்பன் இருந்தாலென்ன, செத்தாலென்ன ??

 

ஒவ்வொரு அப்பாக்கள் தினமும் எனக்கு இப்படித்தான் கழிகிறது !

 

நீங்கள் எழுதி இருக்கும் சம்பவங்களை படித்ததும் மிகவும் கவலையாக போய் விட்டது. :(  :'( அந்த தந்தைக்கான கவலை அல்ல...

Link to comment
Share on other sites

எனது அப்பா!

நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைத்த அப்பா !

அம்மா இறந்த நாளன்று, கடவுளே எங்கள் அம்மாவை எங்களுடன் விட்டு விட்டு, அப்பாவை எடுத்துக்கொள்ளேன் என்று ஏங்கவைத்த அப்பா !

ஆத்தையுடன் சேர்ந்து நீங்கள் மூன்றுபேரும் செத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்விட்டுச் சொல்லிய அப்பா !

அம்மா இறந்த முதலாம் நினைவஞ்சலியில் தனது இரண்டாம் தாரத்தை ஊருக்கு காட்டிய அப்பா!

சிற்றன்னை வந்த முதலாம் வருடத்திலேயே தனது மூத்த பிள்ளைகள் இரண்டையும் வீட்டை விட்டுத் துரத்திய அப்பா !

கடைசியாக இருந்த தம்பியையும், சிற்றன்னைக்காக, ஒரு தகப்பன் கூறமுடியாத குற்றச்சாட்டுக்களைக் கோர்த்துக்கட்டி விரட்டி விட்ட அப்பா !

ஆனையிறவு மீட்புச் சமரில் பலியானான் என்று நம்பிய  தனது இராணுவக் கப்டன் நண்பனுக்காக கடவுளிடம் மன்றாடிய நாத்திக அப்பா!

அவன் திரும்பவந்து அவர்னமுன் நின்றதும், கடவுள் இருக்கிறார் என்று துதிபாடிய அப்பா!

அதே சமரில் தனது இளைய மகன் கொல்லப்பட்டதை அறிந்து குதூகலித்துப், "பயங்கரவாதி இறந்தான்" என்று கூவிய அப்பா!

இறுதியாக இறந்தபோது மீதமிருந்த பிள்ளைகளிடமிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட பெறமுடியாமல்ப் போன அப்பா !

இப்படியொரு அப்பன் இருந்தாலென்ன, செத்தாலென்ன ??

 

ஒவ்வொரு அப்பாக்கள் தினமும் எனக்கு இப்படித்தான் கழிகிறது !

 

ஒவ்வொரு அப்பாக்களும் ஒருவிதம். எனது தந்தையின் தத்துவம்..  வாழ்க்கையில் வெல்லவே Take it easy policy! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் அப்பா மிகவும் நேசமானவர் ஒரு அடியோ பேச்சோ விழுந்து இராது விடுமுறைக்கு   வருவாதால் சந்தோஷமாய்   

 

நேரம் செலவி டுவார் . கவிதை பகிர்வுக்கு நன்றி  அஞ்சரன் ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா!

நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைத்த அப்பா !

அம்மா இறந்த நாளன்று, கடவுளே எங்கள் அம்மாவை எங்களுடன் விட்டு விட்டு, அப்பாவை எடுத்துக்கொள்ளேன் என்று ஏங்கவைத்த அப்பா !

ஆத்தையுடன் சேர்ந்து நீங்கள் மூன்றுபேரும் செத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்விட்டுச் சொல்லிய அப்பா !

அம்மா இறந்த முதலாம் நினைவஞ்சலியில் தனது இரண்டாம் தாரத்தை ஊருக்கு காட்டிய அப்பா!

சிற்றன்னை வந்த முதலாம் வருடத்திலேயே தனது மூத்த பிள்ளைகள் இரண்டையும் வீட்டை விட்டுத் துரத்திய அப்பா !

கடைசியாக இருந்த தம்பியையும், சிற்றன்னைக்காக, ஒரு தகப்பன் கூறமுடியாத குற்றச்சாட்டுக்களைக் கோர்த்துக்கட்டி விரட்டி விட்ட அப்பா !

ஆனையிறவு மீட்புச் சமரில் பலியானான் என்று நம்பிய  தனது இராணுவக் கப்டன் நண்பனுக்காக கடவுளிடம் மன்றாடிய நாத்திக அப்பா!

அவன் திரும்பவந்து அவர்னமுன் நின்றதும், கடவுள் இருக்கிறார் என்று துதிபாடிய அப்பா!

அதே சமரில் தனது இளைய மகன் கொல்லப்பட்டதை அறிந்து குதூகலித்துப், "பயங்கரவாதி இறந்தான்" என்று கூவிய அப்பா!

இறுதியாக இறந்தபோது மீதமிருந்த பிள்ளைகளிடமிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட பெறமுடியாமல்ப் போன அப்பா !

இப்படியொரு அப்பன் இருந்தாலென்ன, செத்தாலென்ன ??

 

ஒவ்வொரு அப்பாக்கள் தினமும் எனக்கு இப்படித்தான் கழிகிறது !

 

 

வலிக்கிறது ராசா

உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு ஈடுகிடையாது

கடவுள்

கடவுள் என்று வாழ்பவரை

கடவுளே  காயப்படுத்தினால்........??

கண்ணீர் பனிக்கிறது

வேண்டாம்

அவரைத்திட்டிவிடுவேன்......... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா!

நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைத்த அப்பா !

அம்மா இறந்த நாளன்று, கடவுளே எங்கள் அம்மாவை எங்களுடன் விட்டு விட்டு, அப்பாவை எடுத்துக்கொள்ளேன் என்று ஏங்கவைத்த அப்பா !

ஆத்தையுடன் சேர்ந்து நீங்கள் மூன்றுபேரும் செத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்விட்டுச் சொல்லிய அப்பா !

அம்மா இறந்த முதலாம் நினைவஞ்சலியில் தனது இரண்டாம் தாரத்தை ஊருக்கு காட்டிய அப்பா!

சிற்றன்னை வந்த முதலாம் வருடத்திலேயே தனது மூத்த பிள்ளைகள் இரண்டையும் வீட்டை விட்டுத் துரத்திய அப்பா !

கடைசியாக இருந்த தம்பியையும், சிற்றன்னைக்காக, ஒரு தகப்பன் கூறமுடியாத குற்றச்சாட்டுக்களைக் கோர்த்துக்கட்டி விரட்டி விட்ட அப்பா !

ஆனையிறவு மீட்புச் சமரில் பலியானான் என்று நம்பிய  தனது இராணுவக் கப்டன் நண்பனுக்காக கடவுளிடம் மன்றாடிய நாத்திக அப்பா!

அவன் திரும்பவந்து அவர்னமுன் நின்றதும், கடவுள் இருக்கிறார் என்று துதிபாடிய அப்பா!

அதே சமரில் தனது இளைய மகன் கொல்லப்பட்டதை அறிந்து குதூகலித்துப், "பயங்கரவாதி இறந்தான்" என்று கூவிய அப்பா!

இறுதியாக இறந்தபோது மீதமிருந்த பிள்ளைகளிடமிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட பெறமுடியாமல்ப் போன அப்பா !

இப்படியொரு அப்பன் இருந்தாலென்ன, செத்தாலென்ன ??

 

ஒவ்வொரு அப்பாக்கள் தினமும் எனக்கு இப்படித்தான் கழிகிறது !

 

இப்படி ஒரு அப்பா எவருக்குமே இருக்கக் கூடாது தான். என்ன செய்வது.

Link to comment
Share on other sites

எனது அப்பா!

நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைத்த அப்பா !

அம்மா இறந்த நாளன்று, கடவுளே எங்கள் அம்மாவை எங்களுடன் விட்டு விட்டு, அப்பாவை எடுத்துக்கொள்ளேன் என்று ஏங்கவைத்த அப்பா !

ஆத்தையுடன் சேர்ந்து நீங்கள் மூன்றுபேரும் செத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வாய்விட்டுச் சொல்லிய அப்பா !

அம்மா இறந்த முதலாம் நினைவஞ்சலியில் தனது இரண்டாம் தாரத்தை ஊருக்கு காட்டிய அப்பா!

சிற்றன்னை வந்த முதலாம் வருடத்திலேயே தனது மூத்த பிள்ளைகள் இரண்டையும் வீட்டை விட்டுத் துரத்திய அப்பா !

கடைசியாக இருந்த தம்பியையும், சிற்றன்னைக்காக, ஒரு தகப்பன் கூறமுடியாத குற்றச்சாட்டுக்களைக் கோர்த்துக்கட்டி விரட்டி விட்ட அப்பா !

ஆனையிறவு மீட்புச் சமரில் பலியானான் என்று நம்பிய  தனது இராணுவக் கப்டன் நண்பனுக்காக கடவுளிடம் மன்றாடிய நாத்திக அப்பா!

அவன் திரும்பவந்து அவர்னமுன் நின்றதும், கடவுள் இருக்கிறார் என்று துதிபாடிய அப்பா!

அதே சமரில் தனது இளைய மகன் கொல்லப்பட்டதை அறிந்து குதூகலித்துப், "பயங்கரவாதி இறந்தான்" என்று கூவிய அப்பா!

இறுதியாக இறந்தபோது மீதமிருந்த பிள்ளைகளிடமிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட பெறமுடியாமல்ப் போன அப்பா !

இப்படியொரு அப்பன் இருந்தாலென்ன, செத்தாலென்ன ??

 

ஒவ்வொரு அப்பாக்கள் தினமும் எனக்கு இப்படித்தான் கழிகிறது !

 

ம் ......... மனம் கனக்கிறது :(

 

 

நீங்கள் விரும்பியபடி நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல அப்பாவாக வாழ்ந்து காட்டுங்கள். 

Link to comment
Share on other sites

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அனைவருக்கும் .. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அனைவருக்கும் .. :)

 

மன்னிக்க வேண்டும் அஞ்சரன்,

 

சிவபூஜையில் கரடி புகுந்ததைப்போல, உங்கள் அப்பாவின் இனிமையான நிகழ்வினைப் பகிர நீங்கள் திறந்த கருத்தினுள் எனது குப்பையைக் கொண்டுவந்து கொட்டியமைக்காக.

 

மற்றும் எனது நண்பர்களான (!) யாயினி, இசை, விசுகர், அலைமகள், மெசொப்பொத்தேமியர் ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்கள் இரக்கப்படும் அளவிற்கு நானிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நான் இங்கே எழுதியது அனுதாபம் திரட்ட அல்ல. அப்பா என்று என்னுள் விளங்கிக்கொண்டதை எழுதுவதற்காகவே. எவரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.

 

எனது சிறுவர் பராயம் மிகவும் கொடூரமானது. எனக்கும், எனது சகோதரங்களும் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை. எல்லாம் அம்மா இறந்தவுடம் மாறிப்போயிற்று. இவைபற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று விரும்பியிருந்தேன், யாழ்க்களம் சரியான களமா என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் அஞ்சரன்,

 

சிவபூஜையில் கரடி புகுந்ததைப்போல, உங்கள் அப்பாவின் இனிமையான நிகழ்வினைப் பகிர நீங்கள் திறந்த கருத்தினுள் எனது குப்பையைக் கொண்டுவந்து கொட்டியமைக்காக.

 

மற்றும் எனது நண்பர்களான (!) யாயினி, இசை, விசுகர், அலைமகள், மெசொப்பொத்தேமியர் ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்கள் இரக்கப்படும் அளவிற்கு நானிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நான் இங்கே எழுதியது அனுதாபம் திரட்ட அல்ல. அப்பா என்று என்னுள் விளங்கிக்கொண்டதை எழுதுவதற்காகவே. எவரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.

 

எனது சிறுவர் பராயம் மிகவும் கொடூரமானது. எனக்கும், எனது சகோதரங்களும் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை. எல்லாம் அம்மா இறந்தவுடம் மாறிப்போயிற்று. இவைபற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று விரும்பியிருந்தேன், யாழ்க்களம் சரியான களமா என்று தெரியவில்லை.

 

நாங்கள் யாரும் நீங்கள் எழுதி இருப்பததை தவறாக எடுத்துக் கொள்ள இல்லை. இப்படியான நேரங்களிலாவது சில உண்மைச் சம்பவங்களும் வெளி வருகிறதே...சிறுவயதிலயே கஸ்ரங்களை அனுபவிப்பது என்பது கொடுமை தானே.அதனால் தான் மன வருத்தமாக இருந்தது..நான் இயற்கையாகவே கொஞ்சம் இப்படியான சம்பவங்களைப் பார்த்தால்,கேட்டால் கவலைப்படுது அதிகம்.என் சுபாவம் அப்படித் தான்.மற்றப்படி சொல்லப்போனால் உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல தந்தையாராக இருப்பீர்கள் என்று நினைக்கிறன்.என் அறிவுக்கு எட்டியது இவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யாரும் நீங்கள் எழுதி இருப்பததை தவறாக எடுத்துக் கொள்ள இல்லை. இப்படியான நேரங்களிலாவது சில உண்மைச் சம்பவங்களும் வெளி வருகிறதே...சிறுவயதிலயே கஸ்ரங்களை அனுபவிப்பது என்பது கொடுமை தானே.அதனால் தான் மன வருத்தமாக இருந்தது..நான் இயற்கையாகவே கொஞ்சம் இப்படியான சம்பவங்களைப் பார்த்தால்,கேட்டால் கவலைப்படுது அதிகம்.என் சுபாவம் அப்படித் தான்.மற்றப்படி சொல்லப்போனால் உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல தந்தையாராக இருப்பீர்கள் என்று நினைக்கிறன்.என் அறிவுக்கு எட்டியது இவ்வளவு தான்.

 

 

நன்றி யாயினி,

 

எனது தந்தையார் எனக்கு எதை எதையெல்லாம் செய்தாரோ அவற்றை எனது பிள்ளைகளுக்கு நிச்சயம் செய்வதில்லை என்றும், எவை எவை எல்லாவற்றையும் எனக்குச் செய்யாமல் விட்டாரோ, அவற்றையெல்லாம் நிச்சயம் எனது பிள்ளைகளுக்குச் செய்வேன் என்றும் உறுதி பூண்டு செய்துவருகிறேன். நீங்கள் நம்பலாம், நிச்சயம் அவரைப் போல நான் இருக்கப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

மன்னிக்க வேண்டும் அஞ்சரன்,

 

சிவபூஜையில் கரடி புகுந்ததைப்போல, உங்கள் அப்பாவின் இனிமையான நிகழ்வினைப் பகிர நீங்கள் திறந்த கருத்தினுள் எனது குப்பையைக் கொண்டுவந்து கொட்டியமைக்காக.

 

மற்றும் எனது நண்பர்களான (!) யாயினி, இசை, விசுகர், அலைமகள், மெசொப்பொத்தேமியர் ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்கள் இரக்கப்படும் அளவிற்கு நானிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நான் இங்கே எழுதியது அனுதாபம் திரட்ட அல்ல. அப்பா என்று என்னுள் விளங்கிக்கொண்டதை எழுதுவதற்காகவே. எவரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.

 

எனது சிறுவர் பராயம் மிகவும் கொடூரமானது. எனக்கும், எனது சகோதரங்களும் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை. எல்லாம் அம்மா இறந்தவுடம் மாறிப்போயிற்று. இவைபற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று விரும்பியிருந்தேன், யாழ்க்களம் சரியான களமா என்று தெரியவில்லை.

இதில் ஏன்னா மன்னிப்பு எல்லோருக்கும் ஒரு வலி இருக்கு உங்களுக்கு அது அப்பாவடிவில் இருக்கு அதை ஒரு பாடமா எடுத்து கடந்து போங்கோ அண்ணே ....

வாழ்தலில் இல்லை வாழ்த்து காட்டுவதிலே இருக்கு எம் சுயமும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.