Jump to content

பிரபாகரன் இருந்தால் நாம் தாக்கப்பட்டிருப்போமா? முஸ்லிம் தாயின் அங்கலாய்ப்பு!


Recommended Posts

 

தமிழர்களும் இசுலாமியத் தமிழருன் ஏன் ஒன்றுபட வேண்டும் என்பதற்கான வலுவான காரணம் இந்தத் தாயின் அங்காலய்ப்பு.

 

பிரித்தானிய தமிழர் பேரவை முதற்கொண்டு அனைத்து தமிழர் அமைப்புக்களும் எடுத்த நிலைப்பாட்டிற்கான பின்னணி இது தான்.

 

இனி இசுலாமியத் தமிழர்களை பகடைக்காய்க்களாகப் பயன் படுத்த நினினைக்கும் தலமைகள் தூக்கி எறியப்படும் நாளும் வெகு தூரத்தில் இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 137
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மூன்று நாட்களாக.... முஸ்லீமுக்கு, சிங்களவன் அடிக்கும் போது...
இவர் ஏன் கவலைப்படுறார்?
 

நாம்.... கடந்த 35 வருடமாக.... சிங்களவனிவிடம, இரண்டு லட்சம் தமிழ் உயிர்களைக் கொடுத்த போது... எந்த முஸ்லீமாவது வாயை.. திறந்தானா? 
 

மாறாக... சிங்களவனுடன் சேர்ந்து... பால் கஞ்சி பொங்கி, குதூகலித்தார்கள்.
முஸ்லீமுக்கு.... பொதுபல சேனா, கொடுத்த அடி காணாது... என்பதே என் அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

தமிழர் அமைப்புகள் எடுத்த நிைலப்பாடுகள் ஒருபுறம் இருக்கட்டும். தமிழரின் அரசியல் கொள்கைகளுக்கு ஆதரவான முஸ்லீம் கட்சி ஏதாவது இலங்கைத்தீவில் உள்ளதா? :rolleyes:

இல்லை என்றே நினைக்கிறேன். அப்படி ஏதாவது இருந்தாலும் முஸ்லீம் மக்களின் ஆதரவை / வாக்குகளை பெறாத கட்சியாகவே அது இருக்கும்.

அதாவது, தமிழ் மக்களின் தலையாய பிரச்சினைகளில் அக்கறை கொள்ளாத ஒரு சமுதாயத்துடன் தமிழர்களுக்கு என்ன வேலை என்பதே எனது கேள்வி.

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கோ இசுலாமியத் தமிழர்களுக்கோ பாதுகாப்பான ஒரு தேசம் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இருக்கும் தமிழீழம் என்பதே சாத்தியமான தீர்வு. சிறிலங்கா பவுத்த பேரினவாதம் என்பது அதைத் தான் சொல்கிறது. இதனை தமிழர்களும் இசுலாமிய தமிழர்களும் உணரத்தலைப்படுள்ளனர். இசுலாமியத் தமிழர்களின் ஆதரவு இன்றி வடக்குக்கிழக்கு இணைந்த தமிழீழீத் தாயகம் என்பது சாத்தியப்பாடற்றது. இன்று இருக்கும் முசிலிம்களின் தலமை என்பது நாளை இல்லாது போகலாம், ஆனால் தமிழரினதும் இசுலாமியத் தமிழரினதும் நலங்கள் அப்படியே பின்னிப் பிணைந்தே இருக்கும்.

 

இதனை உணர்ந்து கடந்தகாலத் தவறுகளை நிவர்த்தி செய்து அல்லலுறும் மக்களுக்கான நீதியைப் பெற இணைந்து போராடுவதே நீதிக்கும் சமத்துவத்திற்குமான சுதந்திரப் போராட்டமாக இருக்க முடியும்.

அதுவே போராட்டம் வெல்வதற்கான வழியும் கூட. இசுலாமியத் தமிழர்களிடம் இருந்து வரும் இத்தகைய சக்திகளுடன் இணைந்து வேலை செய்வதே அவர்களை வளர்க்கும்.போராட்டத்தையும் வலுவுள்ளதாக்கும்.

 


''இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கோ இசுலாமியத் தமிழர்களுக்கோ பாதுகாப்பான ஒரு தேசம் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இருக்கும் தமிழீழம் என்பதே சாத்தியமான தீர்வு. சிறிலங்கா பவுத்த பேரினவாதம் என்பது அதைத் தான் சொல்கிறது. இதனை தமிழர்களும் இசுலாமிய தமிழர்களும் உணரத்தலைப்படுள்ளனர். இசுலாமியத் தமிழர்களின் ஆதரவு இன்றி வடக்குக்கிழக்கு இணைந்த தமிழீழீத் தாயகம் என்பது சாத்தியப்பாடற்றது. இன்று இருக்கும் முசிலிம்களின் தலமை என்பது நாளை இல்லாது போகலாம், ஆனால் தமிழரினதும் இசுலாமியத் தமிழரினதும் நலங்கள் அப்படியே பின்னிப் பிணைந்தே இருக்கும்.

 

இதனை உணர்ந்து கடந்தகாலத் தவறுகளை நிவர்த்தி செய்து அல்லலுறும் மக்களுக்கான நீதியைப் பெற இணைந்து போராடுவதே நீதிக்கும் சமத்துவத்திற்குமான சுதந்திரப் போராட்டமாக இருக்க முடியும்.

அதுவே போராட்டம் வெல்வதற்கான வழியும் கூட. இசுலாமியத் தமிழர்களிடம் இருந்து வரும் இத்தகைய சக்திகளுடன் இணைந்து வேலை செய்வதே அவர்களை வளர்க்கும்.போராட்டத்தையும் வலுவுள்ளதாக்கும்.

 

''இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்''

 

நாரதர்,

உதுகள்.. தான்.... வேண்டாம்கிறது .

சோனகனுடன்... தமிழனுக்கு சோலி வேண்டாம்.

இந்த, கூறு கேட்ட, சோனியை.... நம்பினால்... ,

நாம்... நாய் மாதிரி....... நடுக்கடலில், நிற்க வேண்டியது தான்.

 

உங்களுக்கு.... வேணுமென்றால்...., அவனுக்கு, கொடி பிடியுங்கோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அடிப்படை வாதத்தில் இருந்து பாதுகாப்பு தேடி நீங்கள் பொதுபலசேனாவுடன் கூட்டணி வைக்கும் காலமும் வெகுவிரைவில் வரப்போகுது.

ஏற்கனவே கல்முனையில் இதுதான் நிலை.

மறுபடியும் புலிச்சிந்தனை தமிழ்த்தேசியவாதிகள் தமிழ் மக்களின் அடிப்படை கோவணத்தையும் பறிகொடுக்கும் ஒரு நாசதந்திர நகர்வை செய்கிறனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் தமது நிலையை உணர்ந்து தமிழருடன் சேர்ந்து நடக்க முடிவெடுத்தால் நிச்சயம் நாம் அவர்களுடன் கைகோர்க்க வேண்டும்.  எமக்குள்ளிருக்கும் வேறுபாடுகள் நீங்கி , முன்னைய கசப்புணர்வுகள் களையப்படுமாக இருந்தால் நிச்சயம் முஸ்லீம்களும் தமிழரும் ஒன்றாகப் பயணிக்க முடியும். 

 

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையும், இனவாதிகளையும் தூக்கியெறிவதன் மூலம் முஸ்லீம்கள் இதனைச் செய்யமுடியும். தமிழர் தரப்பில் முஸ்லீம்களுக்கெதிரான போக்கு இன்னும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆகவே இது சரியான சந்தர்ப்பம். 

Link to comment
Share on other sites

தமிழ் சிறி கிழக்கில் இருக்கும் இசுலாமியத் தமிழர்களை என்ன செய்யப் போகிறீர்கள்? கிழக்கு மாகாண சபையைக் கூடத் தக்கவைக்க முடியவில்லை?

எமக்கு ஒரு நீதி மற்றவனுக்கு ஒரு நீதி என்பது ஒரு நீதியான போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும்.

 

இன்று சிறிலங்காவின் பொருளாதராத்தை முண்டு கொடுப்பது மத்திய கிழக்கில் இருந்து வரும் பணம். மனித உரிமைச் சபையில் சிறிலங்காவிற்கு ஆதரவாக இருந்து வரும் நாடுகளில் முக்கியமானவை இசுலாமிய நாடுகள். இவை எல்லாவற்றையும் கருத்தில் எடுத்தே எமது அரசியல் நிலைப்பாடுகள் இருக்க வேண்டும்.

 

நம்ப நட நம்பி நடவாதே என்பதை யார் சொன்னார் என்று தெரியுமா? 


தமிழரின் போராட்டாம் தோற்பதற்கு, சிறிலங்கா அரசின் நுட்பமான கூறு போடும் வேலையைச் செய்யும் கோசன் சே என்பவரின் கருதுக்களை அவதானத்துடன் அணுகவும்.

இவரின் கருதுக்களை ஊன்றி  அவதானித்தால் இது நன்கு தெளிவாகும். 

Link to comment
Share on other sites

நாரதர்,

உதுகள்.. தான்.... வேண்டாம்கிறது .

சோனகனுடன்... தமிழனுக்கு சோலி வேண்டாம்.

இந்த, கூறு கேட்ட, சோனியை.... நம்பினால்... ,

நாம்... நாய் மாதிரி....... நடுக்கடலில், நிற்க வேண்டியது தான்.

உங்களுக்கு.... வேணுமென்றால்...., அவனுக்கு, கொடி பிடியுங்கோ.....

அதென்ன இஸ்லாமிய தமிழார், நான் சிங்களவனுடன் இணைந்து வாழ தயார் ஆனால் முஸ்லிமுடன் இல்லை, விட்டால் நாரதே தமிழார் தாயக பூமியை முஸ்லிமுக்கு தாரை வார்ப்பார் போல் உள்ளது, எனது இனம் 5000 வருடமாக வாழ்ந்த பூமியை (வடக்கு கிழக்கு) நாம் ஏன் அராபியாவில் இருந்து வந்த முஸ்லிமுக்கு தாரைவார்க்க வேண்டும், அதை விட எமது மன் மீட்புப் போராட்டம் முஸ்லீமிடமும் இருந்து எமது மண்ணை மீட்க வேண்டும்.(காத்தான்குடி,மருதமுனை,சம்மாந்துறை)
Link to comment
Share on other sites

முஸ்லீம்கள் தமது நிலையை உணர்ந்து தமிழருடன் சேர்ந்து நடக்க முடிவெடுத்தால் நிச்சயம் நாம் அவர்களுடன் கைகோர்க்க வேண்டும். எமக்குள்ளிருக்கும் வேறுபாடுகள் நீங்கி , முன்னைய கசப்புணர்வுகள் களையப்படுமாக இருந்தால் நிச்சயம் முஸ்லீம்களும் தமிழரும் ஒன்றாகப் பயணிக்க முடியும்.

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையும், இனவாதிகளையும் தூக்கியெறிவதன் மூலம் முஸ்லீம்கள் இதனைச் செய்யமுடியும். தமிழர் தரப்பில் முஸ்லீம்களுக்கெதிரான போக்கு இன்னும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆகவே இது சரியான சந்தர்ப்பம்.

கடைசி வரைக்கும் நடக்காது,இவர்களுக்க் தெரிந்தது ஒரு விடயம் மட்டுமே, ஒரு நாட்டுக்கு செல்ல வேண்டியது,பின்னர் அந்த நாட்டை இஸ்லாமிய மயப்படுத்த வேண்டியது, அவனுக்கு தெரிந்தது அதுமட்டும் தான், வன்னியில் இஸ்லாமிய மயப்படுத்தல் தொடக்கி விட்டது அது தெரியுமா??, இனிமேல் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தில் பெரிய பள்ளி வாசலும், மத்சராவுமே இருக்கும் !!!

Link to comment
Share on other sites

இசுலாமியர்கள் அரேபியாவில் இருந்து எப்படி வந்தார்கள்? அவர்கள் ஏன் தமிழ் பேசுகிறார்கள்? ஏன் சிங்களம் அல்லது அரபி  பேசவில்லை? அரேபியாவில் இருந்து வந்தவர்கள் பெண்களையும் கூட்டிக் கொண்டு வந்தார்களா? பண்டைய கடலோடிகளான தமிழ் வணிகர்களே இவர்கள். பவுத்தர்கள் எல்லாம் சிங்களவர்கள் என்பதுவும், இசுலாமியர் எல்லாம் அரேபியர் என்பதுவும் எந்த வரலாற்று ஆதாரமும் அற்ற குருட்டுத் தானமான கருத்துக்கள். மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தில் இசுலாமியரும் தமிழ் இந்துக்களும் எங்கனம் இருக்கிறார்கள்?

 

யார் எங்கிருந்து எப்போது வந்தாலும், தமிழருக்கும் இசுலாமியத் தமிழருக்குமான நிரந்தரத் தீர்வு என்பது தமீழழத் தனியரசே. இதனை நாம் எமது அரசியல் நிலைப்பாடுகளினூடாக இசுலாமியத் தமிழ் மக்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழீழ அரசு என்பது மதச் சார்பற்ற அரசு. ஆனால் பவுத்த பேரினவாத சிறிலங்கா அரசு மற்றைய மதத்தவரை ஒடுக்கும் அரசு. இதில் இசுலாமியத் தமிழர்கள் எதைத் தேர்ந்தெடுப்பர்கள்?   அதற்கான வழியை நாம் தான் திறக்க வேண்டும். 

 

தமீழீழப் போராட்டாத்தில் இசுலாமிய இளைஞர்கள் இணையவில்லையா? அவர்கள் அப் போராட்டத்தில் இருந்தும் வெளியேற எது காரணம்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் கோசான் எழுதியிருக்காட்டி முள்ளிவாய்க்கால் நடந்திராது.

2005இல் பணத்தை வாங்கி கொண்டு தேர்தலை புறக்கணித்தபோது, வேண்டாம் வேண்டாம் என்று தலை தலையாய் அடித்துக்கொண்டோம்.

யாரும் கேக்கவில்லை.

இப்போ கிழக்கைப் போல வடக்கையும் இசுலாமிய மயப்படுத்த நாமே செங்கம்பளம் விரிக்கிறோம். சோனகர். காம் பேஸ் புக்கில் போய் யாழ் பல்கலை பற்றிய செய்தியை வாசியுங்கள். எல்லாம் அல்லாட கிருபையாம். எதிர்தவர்களையே தம்மை நாடச்செய்வானாம்.

தமிழரின் ஆதரவுக்கு ஒருவர் கூட நன்றி சொல்லவில்லை.

நாம் இப்போ சும்மா இருப்பதே நமக்கு பாதுகாப்பு. வேலியில் போகும் ஓணானை வேட்டியில் எடுத்து விடுவது சிலருக்கு பொழுதுபோக்கு.

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் இருக்கும் இசுலாமியத் தமிழர்கள் தமிழ் நாட்டை இசுலாமிய மயப்படுத்தி விட்டார்களா? 

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் இருக்கும் இசுலாமியத் தமிழர்கள் தமிழ் நாட்டை இசுலாமிய மயப்படுத்தி விட்டார்களா?

ஒருக்கா தமிழ் நாட்டுக்கு போங்கோ, அது மிகவும் வேகமாக நடக்குது, மோடியின் அபார வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணையின் கருத்துக்கு நான் பச்சை குத்தும் ஒரு காலமும் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

இதுவும் கடந்து போகும் :)

Link to comment
Share on other sites

[quote name="goshan_che" post="1019076" timestamp="

இப்போ கிழக்கைப் போல வடக்கையும் இசுலாமிய மயப்படுத்த நாமே செங்கம்பளம் விரிக்கிறோம். சோனகர். காம் பேஸ் புக்கில் போய் யாழ் பல்கலை பற்றிய செய்தியை வாசியுங்கள். எல்லாம் அல்லாட கிருபையாம். எதிர்தவர்களையே தம்மை நாடச்செய்வானாம்.

தமிழரின் ஆதரவுக்கு ஒருவர் கூட நன்றி சொல்லவில்லை.

நாம் இப்போ சும்மா இருப்பதே நமக்கு பாதுகாப்பு. வேலியில் போகும் ஓணானை வேட்டியில் எடுத்து விடுவது சிலருக்கு பொழுதுபோக்கு.

Link to comment
Share on other sites

நான் தமிழ்நாட்டிற்கு அண்மையில் தான் சென்றேன். தமிழ் நாட்டில் மட்டுமே இசுலாமியர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துகின்றனர். ஏனெனில் தமிழ் அடையாளம் என்பது ஒரு மத அடையாளம் அல்ல. அதனால் தான் இந்தியா எங்கும் வென்ற  மோடியால் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது போனது.  தமிழ் நாட்டில் மட்டுமே இந்து இசுலாமியக் கலவரங்கள் நடக்கவில்லை. அது ஏன்?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் தமது நிலையை உணர்ந்து தமிழருடன் சேர்ந்து நடக்க முடிவெடுத்தால் நிச்சயம் நாம் அவர்களுடன் கைகோர்க்க வேண்டும்.  எமக்குள்ளிருக்கும் வேறுபாடுகள் நீங்கி , முன்னைய கசப்புணர்வுகள் களையப்படுமாக இருந்தால் நிச்சயம் முஸ்லீம்களும் தமிழரும் ஒன்றாகப் பயணிக்க முடியும். 

 

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையும், இனவாதிகளையும் தூக்கியெறிவதன் மூலம் முஸ்லீம்கள் இதனைச் செய்யமுடியும். தமிழர் தரப்பில் முஸ்லீம்களுக்கெதிரான போக்கு இன்னும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆகவே இது சரியான சந்தர்ப்பம். 

 

ரகு... நீங்களும். முட்டாளா?

ஈழத் தமிழனும், முஸ்லீமும்... எந்தக் காலத்திலும்.... இணைய சந்தர்ப்பம் இல்லை. இது யதார்த்தம்..

இலவு.  காத்த கிளி, மாதிரி.. நீங்க இருக்காதீங்கோ....

Link to comment
Share on other sites

 

 

Anti-Muslim violence is systematic pogrom, not communal riot

[TamilNet, Friday, 20 June 2014, 21:09 GMT]
After waging war against the nation of Eezham Tamils, there is a clear, systematic pattern of violence against the Muslims in the island of Sri Lanka during the last two years, said the State president of the Social Democratic Party of India (SDPI), Mr KKSM Tehlan Baqavi, in an exclusive interview to TamilNet this week. The Tamil Nadu politician of the pan-Indian Muslim political party urged the world to pay particular attention that the Buddhist extremist Bodu Bala Sena is a creation of the SL military system led by Gotabhaya Rajapaksa. There is a clear nexus between the military and the extremist force, he said. There is also a serious question why the pogrom is getting instigated at this juncture, despite the global focus on the records of the SL State, he said. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இஸ்லாமிய தமிழர் என்ற போலிப்பதத்தை விட்டெறியுங்கள்.

தமிழரும் அதை ஏர்பதில்லை, சிங்களவரும் ஏற்பதில்லை, முஸ்லீம்களும் ஏற்பதில்லை.

தாம் சோனகர் என்பதில் அவர்கள் தெளிவாயுள்ளனர். நாம்தான் இல்லாததை கட்டிக் கொண்டு மாரடிக்கிறோம்.

செல்வா முதல் பிரபா வரை அனைவரும் விட்ட பிழை இது.

ஒரே குடும்பத்தில் இரு பிள்ளைகள் ஒருவர் தமிழரையும் இன்னொருவர் சிங்களவரையும் கட்டுவதில்லையா? அதுக்காக சிங்களவர் எல்லாரும் தமிழரா? நல்ல காமெடித்தனமான வியாக்கியானம்.

முஸ்லீம்களோடு எமக்கு பகை தேவையில்லை. பழிதீர்கவும் தேவையில்லை.

ஆனால் அவர்களின் பிரச்சினையை நமக்கு சாதகமாக பயன்ப்டுத்தி ராசதந்திரம் செய்ய நினைத்தோமானால் - இன்னொரு முள்ளிவாய்க்கால் கியரண்டி.

சும்மா இருப்பதே சுகம் - கடையிற் சுவாமி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கொடூர கெடுபிடி நிலையிலும்....... ஒரு பொது இடத்தில் பகிரங்கமாக எம் தலைவன் பெயரை உச்சரித்து மட்டுமல்லாமல்....தலைவன் இல்லாக்குறையை விளிர்த்து காட்டிய உறவுகளுக்கு என் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

இசுலாமியர்கள் அரேபியாவில் இருந்து எப்படி வந்தார்கள்? அவர்கள் ஏன் தமிழ் பேசுகிறார்கள்? ஏன் சிங்களம் அல்லது அரபி பேசவில்லை? அரேபியாவில் இருந்து வந்தவர்கள் பெண்களையும் கூட்டிக் கொண்டு வந்தார்களா? பண்டைய கடலோடிகளான தமிழ் வணிகர்களே இவர்கள். பவுத்தர்கள் எல்லாம் சிங்களவர்கள் என்பதுவும், இசுலாமியர் எல்லாம் அரேபியர் என்பதுவும் எந்த வரலாற்று ஆதாரமும் அற்ற குருட்டுத் தானமான கருத்துக்கள். மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தில் இசுலாமியரும் தமிழ் இந்துக்களும் எங்கனம் இருக்கிறார்கள்?

யார் எங்கிருந்து எப்போது வந்தாலும், தமிழருக்கும் இசுலாமியத் தமிழருக்குமான நிரந்தரத் தீர்வு என்பது தமீழழத் தனியரசே. இதனை நாம் எமது அரசியல் நிலைப்பாடுகளினூடாக இசுலாமியத் தமிழ் மக்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழீழ அரசு என்பது மதச் சார்பற்ற அரசு. ஆனால் பவுத்த பேரினவாத சிறிலங்கா அரசு மற்றைய மதத்தவரை ஒடுக்கும் அரசு. இதில் இசுலாமியத் தமிழர்கள் எதைத் தேர்ந்தெடுப்பர்கள்? அதற்கான வழியை நாம் தான் திறக்க வேண்டும்.

தமீழீழப் போராட்டாத்தில் இசுலாமிய இளைஞர்கள் இணையவில்லையா? அவர்கள் அப் போராட்டத்தில் இருந்தும் வெளியேற எது காரணம்?

மதம் மாற்றம் மூலமான இனசுத்திகரிப்பு, சிங்களவன் போல் அல்லாது முஸ்லிம் கத்தி இன்றி ரத்தம் இன்றி, சத்தம் இன்றி எம்மை அழிப்பான். அதே போல் தமிழ் பேசினால் மட்டும் தமிழன் ஆக முடியாது,அதே போல் முஸ்லீமை என்ன செய்யலாம் என்ற உங்களது கேள்விக்கு 1947இல் இந்தியாவில் செய்தது போல் அவர்களை ஏதாவது முஸ்லீம் நாட்டுக்கு இடம் பெயர வசதி செய்து கொடுக்கலாம்,அல்லது பறங்கியர் வேறு நாடுகளுக்கு செல்ல வசதி செய்து கொடுத்தது போல் இவர்களும் இடம்பெயர வசதி செய்து கொடுக்கலாம், 1505 ம் ஆண்டு வந்த போர்த்துக்கேயன் 150 வருடத்தில் வெளிய்றி விட்டான் ஆனால் இவங்கள் மட்டும்......!!!!!!

Link to comment
Share on other sites

சும்மா இருக்கச் சொல்லித் தான் ராஜபக்சவும் சொல்கிறார், அதனையே கோசன் சேயும் சொல்கிறார். செல்வா முதல் பிரபா வரை பிழைவிட்டனர் ஆனால் கோசன் சே சொல்வதே சரி.

தமிழ்நாட்டுத் தமிழரும் புலத் தமிழருமே பலம் என்று சொன்னோம், இன்று அதுவே நிஜம் ஆகிப் போனது. எமக்கான ஆதரவுத் தளங்கள் இன்றிப் போராட்டாம் இல்லை.

 

அதனை நாம் தான் உருவாக்க வேண்டும். ஆனால் எமக்கான ஆதரவுத் தளங்களான தமிழ் நாட்டையும், புலத்தையும் தாக்கி வந்த் கோசன் சே இப்போது இசுலாமியத் தமிழருடன் ஒன்றுபடுவதையும் எதிர்க்கிறார் என்றால் யோசியுங்கள் , இதனால் யார் பயனடைவார்கள் என்று.

 

 


 கொடூர கெடுபிடி நிலையிலும்....... ஒரு பொது இடத்தில் பகிரங்கமாக எம் தலைவன் பெயரை உச்சரித்து மட்டுமல்லாமல்....தலைவன் இல்லாக்குறையை விளிர்த்து காட்டிய உறவுகளுக்கு என் பாராட்டுக்கள்.

 

அப்படிச் சொன்னவர் ஒரு இசுலாமியத் தமிழர். தமிழ் அரசியல்வாதிகள் யாராவது பிரபாகரனின் பெயரை யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக உச்சரித்தது உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் பெரியார் என்றொரு பேரலை இந்து, கிறிஸ்தவ இஸ்லாமிய பிரிவினையை கட்டுக்குள் வைத்திருந்தது. இருக்கிறது.

அங்கே திராவிடம்/தமிழ் என்னும் அடையாளம் வலுவாயுள்ளது. அதுகூட இப்போ படி படியாக அழிகிறது. தமுமுக, அதன் தலைவர் பிஜே ஆகியோர் எமது பிரச்சினையில் எடுத்த நிலைபாட்டை பார்த்தால் இது நன்கு புரியும்.

தமிழ்நாட்டு இஸ்லாமியரோடு இலங்கை சோனகரை ஒருபோதும் ஒப்பிடக்கூடாது, முடியாது. இலங்கை சோனகர்கள் எப்போதுமே தம்மை தமிழர்களாக அடையாள படுத்தாதவர்கள். அவர்களுக்காக நாம் பரிதாபப்படலாம், அவர்களுக்கு நடப்பது அநீதி என்பதை ஏற்றுக்கொள்லலாம்.

அதுக்குமேல் போய் எதுவும் செய்ய முடியாது.

நேற்று தாலியறுத்தவளிடம் போய், பக்கத்துவீட்டுக்காரியின் முதலிரவுக்கட்டிலை ஏற்பாடு செய்யும்படி கூறுவதற்க்கு ஒப்பானது, இந்த விவஸ்தை கெட்ட வேலை.

Link to comment
Share on other sites

மதம் மாற்றம் மூலமான இனசுத்திகரிப்பு, சிங்களவன் போல் அல்லாது முஸ்லிம் கத்தி இன்றி ரத்தம் இன்றி, சத்தம் இன்றி எம்மை அழிப்பான். அதே போல் தமிழ் பேசினால் மட்டும் தமிழன் ஆக முடியாது,அதே போல் முஸ்லீமை என்ன செய்யலாம் என்ற உங்களது கேள்விக்கு 1947இல் இந்தியாவில் செய்தது போல் அவர்களை ஏதாவது முஸ்லீம் நாட்டுக்கு இடம் பெயர வசதி செய்து கொடுக்கலாம்,அல்லது பறங்கியர் வேறு நாடுகளுக்கு செல்ல வசதி செய்து கொடுத்தது போல் இவர்களும் இடம்பெயர வசதி செய்து கொடுக்கலாம், 1505 ம் ஆண்டு வந்த போர்த்துக்கேயன் 150 வருடத்தில் வெளிய்றி விட்டான் ஆனால் இவங்கள் மட்டும்......!!!!!!

 

தமிழ் பேசினால் மட்டுமே தமிழன் ஆகமுடியாது என்றால் , தமிழன் ஆவதற்கான தகுதிகள் என்ன? முதலில் இதைச்சொல்லுங்கள். 

 

இசுலாமிய மத்தைத் தழுவிய தமிழர்களே இசுலாமியத் தமிழர்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.