Jump to content

சிங்கள திரைப்பட இயக்குனரைப் புகழ்ந்து பேசிய கவிஞர் ஜெயபாலன் தமிழ் உணர்வாளர்களால் நையப்புடைப்பு!


Recommended Posts

 

'With You, Without You'

A; Drama

Director: Prasanna Vithanage

Cast: Anjali Patil, Shyam Fernando

Rating: 3-half-stars.gif

Heartbreaking and beautifully tragic, Sri Lankan filmmaker Prasanna Vithanage’s With You Without You is evidence of a cinematic intelligence and the choice of form over script. While we might expect that Vithanage, already an acclaimed filmmaker in his come country, to make a good film, this is a film that stands out in the sad and depressing gamut of desi films.

With-You-Without-You.jpg

A still from 'With You, Without You'

Anjali Patil in her breakthrough role stars as Selvi, a young rural girl who gets married to a pawn shop owner, Sarathsiri (played by a somber Shyam Fernando). Right from the first frame of the film, we’re convinced that this is a film about doomed love. So when the two characters fall in love, we know what to expect in the end. And yet the film is an interesting watch because of the way Vithanage handles the material.

Atmosphere is the key here, as is the sensitive, subdued acting and direction. The reason for the big crack in the marriage between the two is devastating beyond belief, but Vithanage chooses subtlety to delve into the characters and tell his story. Again, anyone familiar with LTTE and Lankan political skirmishes can guess the conflict between the two characters, and the same conflict has been used before in cinema. With You Without You, however transcends the clichés because it does not rest on simple solutions and easy answers. The strength of the film rests on the fact that its themes are relevant no matter which country or time the characters are from.

Patil, a newcomer, portrays the paradoxes of her character skillfully and it is great to experience her grasp of such sensitive material. The turmoil of being married to someone whom you can’t help but hate is a difficult emotion to render, and both Patil and Fernando pull it off. Both characters, to some degree, are creatures of folly, who are liable to self-loathing. Director Vithanage resists the temptation to pump tacky melodramatic emotional uplift into the film’s austere atmosphere. In the end, you have to deal with the fact that sometimes letting go is the only solution for a complicated relationship — things don’t get easier or better defined. With You Without You is a lacerating movie to remind you of the same. It’s a tough movie to watch, but it sure is impossible to forget.

- See more at: http://www.mid-day.com/articles/movie-review-with-you-without-you/15394161#sthash.H05rMHMl.dpuf

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

இதுக்கு பச்சை

அதே தன்னுடைய  இனத்தில் ஒருத்தில கொள்கையில் விடாப்பிடியாக .இருந்தால்  அவன் முட்டாள்......??? :(  :(  :(

மற்றவனை பலி கொடுத்துவிட்டு தான் வெள்ளைகொடி பிடிக்கவில்லை சதாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் உங்கள் புலி எதிர்ப்பு வன்மத்தை, காழ்ப்பு உணர்ச்சியை நன்றாகவே வெளிப்படுத்துகிறீர்கள்.
எதோ உங்களுக்கு ஒரு அற்ப சந்தோசம் கிடைக்குதாக்கும் ..தொடருங்கள் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொண்ட கொள்கை மாறாமல் தூக்கு மேடையிலும் அமெரிக்கனை திட்டித்தீர்த்த தியாகி.. :D

 

 அர்த்தங்கள் மாறிவிடக்கூடாது எனும் ரீதியில்......எனது இந்த கருத்திற்கு மனமுவர்ந்து பச்சை வழங்கிய அன்பு உறவிடம்...அதனை திருப்ப பெறுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். நன்றி  :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரை நினைச்சா பாவமாகிடக்கு.

பிரபல்யம் என்ற ஒன்றுக்காக எவ்வளவு கஸ்டபட்வேண்டிக்கிடக்கு.

இலங்கையில மாங்குளத்துக்கு போய் பராக்கு பார்த்து கொண்டிருந்த ஆமிக்காரனுக்கு முன்னால் பஞ் டயலாக் பேசி ஒரு செண்டிமெண்ட் சீன்.

பின் திரும்பி வந்து தற்புகழ்சி அறிக்கை விட்டு ரெண்டு செம காமெடி சீன்.

இப்ப இது. சண்டைக் காட்சி.

அடுத்தது கிளைமாக்ஸ்தான்.

தாகூரும் தாடிதான் ராப்பிச்சைகாரனும் தாடிதான்.

இவர் ஒரு பக்கா வேடதாரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குது என்று எதிராக போராட வெளிக்கிட்டவை? வர,வர எதற்கு போராடுவது என்று ஒரு விவஸ்தை இல்லாமல் போயிட்டுது

மற்றவனை பலி கொடுத்துவிட்டு தான் வெள்ளைகொடி பிடிக்கவில்லை சதாம் .

இந்த கருத்தை நானும் கண்டிக்கிறேன்.அர்ஜீன் அண்ணா உணர்ச்சி வசப்பட்டு இங்குள்ளவர்கள் மேல் உள்ள கோபத்தில் இப்படி கேவலமாக பொய் எழுதக் கூடாது.

Link to comment
Share on other sites

கவிஞரை நினைச்சா பாவமாகிடக்கு.

பிரபல்யம் என்ற ஒன்றுக்காக எவ்வளவு கஸ்டபட்வேண்டிக்கிடக்கு.

இலங்கையில மாங்குளத்துக்கு போய் பராக்கு பார்த்து கொண்டிருந்த ஆமிக்காரனுக்கு முன்னால் பஞ் டயலாக் பேசி ஒரு செண்டிமெண்ட் சீன்.

பின் திரும்பி வந்து தற்புகழ்சி அறிக்கை விட்டு ரெண்டு செம காமெடி சீன்.

இப்ப இது. சண்டைக் காட்சி.

அடுத்தது கிளைமாக்ஸ்தான்.

தாகூரும் தாடிதான் ராப்பிச்சைகாரனும் தாடிதான்.

இவர் ஒரு பக்கா வேடதாரி.

உங்கள் கருத்து உண்மையும் தான் பொய்யும் தான் .

முன்னரும் பதிவிட்ட விடயம் தான் இருந்தும் எழுத வேண்டி இருக்கு .லண்டனால் போய் புளொட்டில் எவரையும் சந்திக்காத நிலையில் MLA HOSTEL இல் இருந்து என்னை கூட்டிகொண்டுபோய் கேள்வி மேல் கேள்வி கேட்டார் .எல்லாமே புலம்பெயர்தர்கள் பற்றித்தான் ,பின்னர் டெல்கி சந்திப்பு ,மரீனா பீச் சந்திப்பு ,புளொட்டின் பாடசாலை வகுப்பு ,கனடா சந்திப்பு என்று தொடர்ந்தது .இன்றுவரை அவருக்கு என்னை தெரியாது .அதுதான் ஜெயபாலன் .

உண்மையான மனிதர் ஆனால் அடாவடியும் அத்துமீறலும் தான் தான் என்ற அகங்காரமும் தான் அவரின் இருப்பு .அதைவிட விட நடிப்பு அவருக்கு கை வந்த கலை.

Link to comment
Share on other sites

மற்றவனை பலி கொடுத்துவிட்டு தான் வெள்ளைகொடி பிடிக்கவில்லை சதாம் .

 

ஊரிலே களவெடுத்து இந்தியாவுக்கு சாப்பிட காசு அனுப்பியதும் அதற்கு போத்தலும் சிகரட்டும் கொத்து பராட்டாவும் வாங்கி கொண்டு ஒரு தாடியும் வைத்து சுருள் சுருளாக புகை விட்டு மாக்சிசம் பேசி விடுதலை பற்றி கதைக்கும் அர்ஜுன் போன்றவர்களுக்கு  இப்படியான வரிகளை எழுதுவதில் ஆச்சரியமில்லை. அவரின் அரசியல் அறிவு பற்றி சொல்ல வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புதன், ஜூன் 25, 2014 - 16:33 மணி தமிழீழம் | வேந்தன்

சிங்கள திரைப்படமும் அதன் பின்னிருக்கும் NGO அரசியலும்....

 

தமிழ் ஸ்டுடியோ என்னும் நிறுவனத்தால் with you,with out you (பிறகு) என்கிற இந்த சிங்கள படம் பிரத்யேக காட்சியாக தமிழ்ப் பார்வையாளர்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.

with%20you,with%20out%20you%20%20(1).JPG
இந்த படம் திரையிடும் முன்பே இணையங்களிலும் பொது ஊடக தளங்களிலும் தமிழ் உணர்வாளர்கள் எதிர்க்கிறார்கள் என்கிற திட்டமிட்ட பரப்புரையும் அதற்கு எதிரான கருத்துக்களுமாக முளைத்து அதன் ஒரு பகுதியாக திரையரங்கு நிரம்பி வழிந்தது..பொதுவாக உலக வரிசைத் திரைப்படங்கள் என்கிற இந்த வகைப்படங்கள் திரைப்பட விழாக்கள் மற்றும்,திரைப்பட இயக்கங்கள் மொத்தமாக திரையிடல் என்னும் பாணியை தவிர்த்து பொது அரங்கில் இப்படி திட்டமிட்டு பெரும் பொருட்செலவுடன் திரையிடப்படுவதில்லை..ஆனால் திரையிடப்பட்டது..அதுவும் தமிழ் ஸ்டுடியோ நிறுவனர் 22 மணி நேரங்களில் திட்டமிட்டது என்றார்..இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

with%20you,with%20out%20you%20%20(2).JPG
டம் பார்க்க பெரும்பாலான அமைப்புகளும் வந்திருந்தன.. படத்தின் சாராம்சம் இதுதான். அகதியாக ஒரு யாழ்ப்பாண பெண் ,மலையக மக்கள் வாழும் பகுதியில் வசிக்கிறாள் ..ஒரு சிங்கள இராணுவ வீரன் நகை அடகுக் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான்.அந்த அடகுக் கடைக்கு அடிக்கடி நகை வைக்க வரும் பெண்ணின் சோகம் நிரம்பிய வலிகளைத் தாண்டி ,அவளது கண்களும்,உதடுகளும் அந்த இராணுவ வீரனை கவர்கிறது.அவளது துயர்மிக்க வாழ்வில் ஏற்படும் நெருக்கடிகளை பயன்படுத்தியும் அவள் மீது படரும் மெலிய காதல் உணர்வாலும் தூண்டப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்கிறான்.
with%20you,with%20out%20you%20%20(3).JPG
திருமணத்திற்கு பிறகுதான் அந்த பெண்ணிற்கு தான் திருமணம் செய்திருப்பது தனது இனத்தையே அழித்த சிங்கள இராணுவ வீரர்களில் அவனும் ஒருவன் என்கிற உண்மை தெரிகிறது.இராணுவம் தன் குடும்பம் மற்றும் மக்களை கொன்ற,பாலியல் வன்புணர்வுகள் அனைத்தும் அவள் மனபிம்பங்களில் இருந்து அழியாத ஓவியமாக அவள் நினைவுகளை கொன்று கொண்டிருக்க,அவனை வெறுக்கத் துவங்குகிறாள்.ஆனால் அந்த இராணுவ வீரன் அவளின் நிலையை புரிந்து கொள்கிறான்.இராணுவ வீரனாக தானும் தனது சக படையினரும் செய்த அட்டுழியங்களின் பிரதிநிதியாக மன்னிப்பு கோருகிறான் ..ஒரு கட்டத்தில் அவளை இந்தியாவிற்கு அனுப்புவதன் மூலம் தன் தவறுகளுக்கான விடுதலையாகவும் நினைக்கிறான்..அவனின் மனநிலையை புரிந்து கொள்கிறாள் ..ஆனாலும் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.

with%20you,with%20out%20you%20%20(4).JPG
மேலோட்டமாக காணும் பொழுது ஆகசிறந்த மாந்த நேயமிக்க கலைப்படைப்பாகத் தோற்றம் பெரும் இச் சினிமா கோரும் உள்ளடக்கமானது ..போரும் போருக்கு பிந்தைய நீதியற்ற வாழ்வில் சிதைக்கப்பட்ட தமிழர்களிடம் ஒரு சமரசத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தி முடிகிறது. இப்படத்தின் இயக்குனர் பிரசன்னா விதானகே பொதுவில் ஒரு இடது சாரி சிந்தனையாளர் ...அவரின் திரைப்படங்கள் சிங்களர்களின் ஆதிக்கத்தையும் சேர்ந்து வாழ்தலையும் வலியுறுத்தியபடியே இருக்கின்றன.இப்படத்திலும் பல நுட்பமான காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.அதி உன்னத கலைப்படைப்பாக தோற்றம் பெரும் வகையில் ,அடகு நகைகள்,புத்தர் சிலை,கதை நாயகி பயன்படுத்தும் செப மாலை,மற்றும் பெட்டிக்குள் வைக்கப்பட்ட துப்பாக்கி ..இவைகளின் வழியே பல கதைகள் சொல்லப்படுகின்றன..ஆனால் சிங்கள பகுதியில் காட்டப்படும் மலையக மக்கள் குறித்த பெரும் பிம்பங்கள் ஏதுமில்லை.சாளரம் வழியே ஊடுரும் வனப்பு மிக்க மலைகளும்,விஜய் பட பாடல்களால் சமூகம் சுதந்திரத் தன்மையுடனும் இயல்பாகவும் இருப்பது போன்றான காட்சியமைப்புகளின் மூலம் படம் எதை உறுதி செய்கிறது என்பதை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ளலாம்.

with%20you,with%20out%20you%20%20(5).JPG
படம் திரையிடப்பட்டு கேள்வி எழுப்பப்படும் பொழுது பிரசன்னா விதானகே பதில் கொடுக்க தயாராக இருந்தார்.அது அமைதியான ஒரு சூழலாகவே முடிந்திருக்க வேண்டிய வாய்ப்பு இருந்தது. படம் எங்கு நடக்கிறது என்கிற கேள்வியும்,தமிழ்ப் பாடல்கள் மட்டுமே இடம் பெரும் காரணம் என்கிற கேள்விக்கும் கவிஞர் ஜெயபாலன் முன்வந்து பதில் கொடுக்க துவங்கியதிலிருந்து அவ்விடத்தின் தன்மை மாறுபட்டது.. ஏன் தமிழ்ப் பாடல்கள் இடம் பெறுகின்றன என்கிற கேள்விக்கு..அது சிங்கள பகுதியில் வசிக்கும் மலையக மக்களின் பகுதி என்கிறார்.மலையாக மக்கள் சிங்கள பகுதியில் அவ்வளவு சுதந்திரமாகவா இருக்கிறார்கள்..சிங்கள பாடல்கள் கட்டுப்படுத்தப்பட்டு தமிழர்கள் வாழும் பகுதியில் தமிழ்ப் பாடல்கள் தான் ஒலிக்க வேண்டும் என்கிற சிங்கள சட்டம் ஏதேனும் இருக்கிறதா எனத் தெரிய வில்லை...?

with%20you,with%20out%20you%20%20(6).JPG
மே 17 இயக்கத் அருள் எழுந்து "தெற்காசிய முழுக்க ஒரு இன்டலக்சுவல் கூட கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு நீதி கோரி நிற்க வில்லை,படைப்புகளை உருவாக்கியதில்லை,காத்திரமாக போராட முன்வந்ததில்லை,கள்ள மௌனத்தோடு பெரும் அமைதி காட்டினார்கள் ...ஆனால் போருக்கு பிந்தைய இந்த காலத்தில் சிங்களரின் தவறை(கொடும்பாதக செயல்களை ) மன்னித்து இணைந்து வாழும் படியான படைப்புகளையும் செயல்படுத்துவதும் எழுதுவதும் எமது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றார்..அமெரிக்கா போன்ற நாடுகள் விரிவாதிக்கம் செய்ய படுகொலைகளை நிகழ்த்தி விட்டு கடைசியாக படைப்புகளின் வழியே சிறு தவறுகள் செய்தது போல காட்டும் உத்தியே தாங்களும் செய்வது,படுகொலைகளை குறித்து படம் செய்தது உண்டா " என கேள்வி எழுப்ப, தமிழ் ஸ்டுடியோ அருண் இது பொலிடிகல் மீட்டிங் அல்ல என்றார்... கலகம் சார்பில் பேசிய கீரா "சினிமா என்பது அரசியல் இல்லாமல் வேறன்ன ..? பொலிடிகல் மீட்டிங் இல்லையென்றால் எல்லோரையும் அழைத்து படம் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்றார்...?" அதன் பிறகு சுழல் இன்னும் கடுந்தன்மைக்கு மாறியது..பலர் எழுந்து கேள்வி எழுப்பத் துவங்கினர்..பத்திரிக்கையாளர் செந்தில்குமார் மற்றும் வ.கௌதமனின் கேள்விகளுக்கு பிரசாந்த விதானகே அளித்த பதில் போதுமானதாக இல்லை...அதற்குள் ஜெயபாலன் கடுமையாக எழுந்து பேச துவங்க...நாம் வெளியேறினோம்..

with%20you,with%20out%20you%20%20(7).JPG
கிட்டத்தட்ட இந்த படம் திட்டமிட்டு போடப்பட்ட சூழலும் ,அதிக பார்வையாளர்களை உருவாக்க கையாண்ட முன்பின் உத்திகளும்,ஒரு ngo ஏற்படுத்தும் பின்னனியறி வேறன்ன...? பெரும் சலசலப்புக்கு மத்தியிலும் சிங்கள இயக்குனருக்கான ஆதரவுப் போக்கை உருவாக்கும் ஒரு முனைப்பும் இதில் அடங்கி கிடக்கிறது.

with%20you,with%20out%20you%20%20(8).JPG
படத்தின் இயக்குனர் தான் நினைத்ததை சொல்லி இருக்கிறார்..அவரின் மீதான நம்பகத் தன்மையை நாம் பரிசீலிக்க வேண்டியதை விட,படத்தை தமிழர்களுக்கு திரையிட்டுக் காட்டி ,ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முனைபவர்களின் பின் புலம் குறித்து சிந்திப்பது தமிழர்களுக்கு அவசியமான ஒன்று....இப்படம் திரையிடுவதன் மூலம் தமிழர்களின் மத்தியில் சிங்களர்களின் பேரன்பை..? புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழர்களுக்கு உணர்த்த முயன்றிருக்கிறார்கள்...
நாமும் அப்பேரன்பை நம்புவோமாக...ஆமென். 

கலகம்-கலை இலக்கிய தமிழ்த் தேசிய தடம்.
சிங்கள திரைப்பட இயக்குனரைப் புகழ்ந்து பேசிய கவிஞர் ஜெயபாலன் தமிழ் உணர்வாளர்களால் நையப்புடைப்பு!

http://www.pathivu.com/news/31915/57/NGO/d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னவன் யாழ் இணையத்தை மஞ்சள் பத்திரீகை ஆக்கவேண்டாம்.

 

திரை அரங்கிற்க்கு வந்த தமிழ் உணர்வாலர்கள் பலர் உட்பட பெரும்பாலானவர்களுக்கு படம் தமிழருக்கு எதிரானதல்ல சார்பானது என்ற கருத்தே இருந்தது. குரல்மூலம் அவர்கள் அதனை வெளிப்படுத்தினார்கள்.                                                                                                                    

 

  மிக சிறுபாண்மையினரே ஒருசிலர் மட்டுமே கூச்சல்போட்டனர். கவிதமன் போன்ற ஒரிருவர் மட்டுமே நியாயமான சந்தேகங்களை கேட்டு உரையாடினர். ஒரு கைகலப்போ பொலிஸ் முறைப்பாடோ இடம்பெறவில்லை.

 

பதிவு போன்ற பதிரிகைகள் ஆதாரமில்லாத மஞ்சள் செய்திகளை யாழில் வெளியிடுவது வேதனை அளிக்கிறது. அத்தகைய சேதிகளை யாழில் மறுபிரசுரம் செய்ய  மோகன் நிழலி போன்றவர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்.

 

ஜெர்மனியைச் சேர்ந்த என் உறவினரான இலங்கைபெண்ணை டெல்ஹியில் தடுத்து வைத்துத் துன்புறுத்தி அவர் தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக திருமுருகனோடும் வளர்மதியோடும் எனக்கு மோதல் நடைபெறுவது இரகசியமல்ல. ஈழம் பற்றி அவர்கள்பேசுவதாலேயே பொலிஸில் முறையிடவில்லை என்பதும் இரகசியமல்ல.

 

. என்னை சுடப்போவதாக மே17 ஆட்க்களுடன் வந்த குட்டையான ஒருவர் (வட்டுக்கோட்டை என்றாராம்) சொன்னதால்தான் என் அனைவி வாசுகியும் சிலரும் அவரை திட்டினார்கள். 

 

மோகனும் நிழலியும் யாழில் ஆதரமில்லாத மஞ்சள் செய்திகளை வெளியிடும் இணையதளங்களில் இருந்து செய்திகள் பகிரபடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேணும்.

தமிழர்களுக்கு சார்பாக படங்களை எடுப்பதால் சிங்கள இயக்குனருக்கு. கவிஞர் ஜெயபாலன் அவர்களுக்கு ஏற்பட்ட இராணுவ பொலிஸ் கெடுபிடிகள் போல் இலங்கை செல்லும்போது அவருக்கும் ஏற்பட அதிக வாய்ப்பிருகிறது.
அதலால் தங்கள் வாழ்வை தமிழுக்கு அர்பணித்து தமிழர்களுக்காக வாழ்ந்துகொண்டிருக்கும் குறும்பட இயக்குணிகள் இலக்கிய விற்பன்னர்கள் தொடர்பை ஏற்படுத்தி. தமிழர்களுக்கு சார்பாக படங்களை எடுக்கும் அந்த இயக்குனரை தமிழ் நாட்டில் வைத்து பாதுகாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். 
 
இவர்களுக்கு சினிமாவை சினிமாவாக பார்க்க தெரியாதா ??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குது என்று எதிராக போராட வெளிக்கிட்டவை? வர,வர எதற்கு போராடுவது என்று ஒரு விவஸ்தை இல்லாமல் போயிட்டுது

 

விபஸ்தை துறையில் பட்டம் பெற்றவர்கள் வீட்டிற்குள் இருந்தால் .......... விபஸ்தை  தெரியாதவர்கள்தான் வீதியில் இறங்கி போராடமுடியும்.
விபஸ்தை தெரியாதவர்களே போராடுகிறார்கள் .............??
அப்படி என்றுகூட விபஸ்தை துறையில் பட்டம் அருளியவர்கள் அறிவிற்கு எட்டவில்லையே ?
 
அப்படி ஏன் நீங்கள் சிந்திக்க கூடாது ??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவனை பலி கொடுத்துவிட்டு தான் வெள்ளைகொடி பிடிக்கவில்லை சதாம் .

 

ஆத்திரம்

பொறாமை

முடியாமை

பழி  தீர்த்தல்..  உள்ள  மனிதனிடமிருந்து  இப்படியான  பதில்கள் தான் வரமுடியும்...... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1990 இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்து காலம் போர் தீவிரமடைந்தது இலங்கை வெளினாட்டு முதலீட்டாளருக்கு செங்கம்பளம் விரித்தது கிட்டத்தட்ட 5 தசாப்பதகாலமாக நிறுத்தப்பட்டிருந்த கனிம அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது அதற்காக பல சலுகைகள் 5 சதவிகிதாமாக லெவி குறைக்கப்பட்டது மாசுக்கட்டுப்பாடு முற்றாக புறக்கணிக்கப்பட்டது முதலீட்டிற்கு பாதுகாப்பு என சத்தமில்லாமல் காய் நகர்த்தியது. ஆனால் முதலீட்டாளர்களிற்கு அதை விட உறுதி தேவைப்பட்டது தமிழர் தரப்பு அதன் பின்னாலிருந்த தந்திரம் புரியாமல் தேச நலன் என்ற சிந்தனையில் புறக்கணித்தார்கள் இதைதானே சிங்களம் விரும்பியது. 2003 இல் பாதுகப்பைஉதாரணம் காட்டி வெளினாட்டு நிறுவனத்தின் வெளியேற்றம் மேற்குலகின் வர்த்தகப்பதிப்புகளில் அளுத்தம் திருத்தமாகப்பதியப்பட்டது சில கனிமங்கள் இலங்கையில் மட்டுமே உள்ளது அது டன் ஒற்றிற்கு 2000 டாலர் வரையான பெறுமதியுடையது எந்த வித சுத்திகரிப்புமற்ற ஏற்றுமதி நிறுவங்களிற்கு கொள்ளை இலாபத்தை கொடுத்தது அவற்றை இழக்க ஐரோப்பிய முதலாளிகளுக்கு விருப்பம் இல்லை அதனால் அவர்கள் தமது கைகளை தமிழர் குருதியில் களுவி விட்டார்கள். சிங்களவன் எதை செய்தாலும் அதை கலையுணர்வுடன் அழகாக செய்வான் அதை புரிந்து கொள்ளமுடியாத தமிழன் கலை வேறு அரசியல் வேறு என்று பிதற்றிக்கொண்டு திரிவான்,தமிழன் வாங்கினது பத்தாது.

Link to comment
Share on other sites

இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குது என்று எதிராக போராட வெளிக்கிட்டவை? வர,வர எதற்கு போராடுவது என்று ஒரு விவஸ்தை இல்லாமல் போயிட்டுது

இந்த கருத்தை நானும் கண்டிக்கிறேன்.அர்ஜீன் அண்ணா உணர்ச்சி வசப்பட்டு இங்குள்ளவர்கள் மேல் உள்ள கோபத்தில் இப்படி கேவலமாக பொய் எழுதக் கூடாது.

 

இந்த அறிவாளிகளின் லேட்டஸ்ட் காமெடியில் ஒன்று `பிறகு’ என்ற சிங்கள இயக்குனரின் படத்திற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.. படத்தை வெளியிட விட மாட்டோம் என்றெல்லாம் மிரட்டினார்கள் என்று ஓவர் பில்டப்புகளை கடந்த சில நாட்களாக அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இப்படி ஒரு படம் வருவது குறித்தோ.. அதை எதிர்க்க வேண்டும் என்று எந்த அமைப்பும் அறிவித்ததாக ஒரு தக்குனுண்டு செய்தி கூட வரவில்லை.

ஆனால் டாக்குமெண்ட்ரி வியாபாரி லீனா மேடம் உள்ளிட்ட ஈழ எதிர்ப்பு கும்பல், இந்த படத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடத்துவது போல் மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.-FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் டாக்குமெண்ட்ரி வியாபாரி லீனா மேடம் உள்ளிட்ட ஈழ எதிர்ப்பு கும்பல், இந்த படத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடத்துவது போல் மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.-FB

 

சின்ன  எதிர்ப்பு என்றால்

நம்ம பிழைப்பு

கௌரவம் :lol: என்னாவது.....??

Link to comment
Share on other sites

லீனாக்கு ஓசி விளம்பரம் நடக்கு .

Link to comment
Share on other sites

லீனாக்கு ஓசி விளம்பரம் நடக்கு .

 

டாக்குமென்டரி வியாபாரி என்று சொன்னதை மாற்றி, தனக்குத் தானே விபச்சாரி என்று கூறிக்கொண்டு விளம்பரம் தேடும் லீனா மணிமேகலை(  வியாபாரி / விபச்சாரி ) வித்தியாசத்தை யார் சொல்லிக்கொடுப்பது.

Link to comment
Share on other sites

ஆனால் டாக்குமெண்ட்ரி வியாபாரி லீனா மேடம் உள்ளிட்ட ஈழ எதிர்ப்பு கும்பல், இந்த படத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடத்துவது போல் மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.-FB

 

 

 

 
லீனாவின் பரமரசிகர்கள் இங்கும் உள்ளார்கள் வேந்தன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

&

இந்த அறிவாளிகளின் லேட்டஸ்ட் காமெடியில் ஒன்று `பிறகு’ என்ற சிங்கள இயக்குனரின் படத்திற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.. படத்தை வெளியிட விட மாட்டோம் என்றெல்லாம் மிரட்டினார்கள் என்று ஓவர் பில்டப்புகளை கடந்த சில நாட்களாக அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இப்படி ஒரு படம் வருவது குறித்தோ.. அதை எதிர்க்க வேண்டும் என்று எந்த அமைப்பும் அறிவித்ததாக ஒரு தக்குனுண்டு செய்தி கூட வரவில்லை.

ஆனால் டாக்குமெண்ட்ரி வியாபாரி லீனா மேடம் உள்ளிட்ட ஈழ எதிர்ப்பு கும்பல், இந்த படத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடத்துவது போல் மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.-FB

ஓ நீங்கள் எதிராய் ஆர்ப்பாட்டம் செய்யேல்ல ஆனால் முட்டையில் மயிர் புடுங்குவிங்களாக்கும்...ஈழ உணர்வாளார்கள் என சொல்லிக் கொண்டு எத்தனை தயாரிப்பாளார்கள்,டைரக்டர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் யாராவது ஒருவர் உண்மையான போராட்டத்தில் வலியை சொல்கின்ற மாதிரி படம் எடுத்தீர்களா?...இதே படத்தை ஒரு தமிழன் எடுத்திருந்தால் வாயை மூடிக் கொண்டு மூச்சுக் காட்டாமல் படம் பாத்திருப்பீர்கள்.

எனக்கு லீனா மேடத்தையும் தெரியாது,ஒரு மண்ணாங்கட்டியையும் தெரியாது.உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியும்.நீங்களும் அந்தத் துறையில் தான் இருக்கிறீங்கள்.நான் இங்கு ஒருத்தருக்கும் ஆதரவாக கதைக்கவில்லை.என் பொதுவான கருத்தையே வைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தை நோக்கி நகர்த்தப்படும் வெட்டுக் காய்கள்!
ஜூன் 27, 2014
 
இந்த வாரத்தில் இரண்டு வெட்டுக் காய்கள் தமிழகத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. ஒன்று, சுப்ரமணியசுவாமி ஊடான ஜெயலலிதா - மகிந்த சந்திப்பு விவகாரம். அடுத்தது, சர்ச்சைக்குரிய 'பிறகு' என்ற தமிழ்த் தலைப்புடன்  'ஒப நத்துவா ஒப எக்கா' என்ற சிங்களப் படத்தை தமிழகத்தில் திரையிட முயன்றது. 
 
தமிழீழ மக்களது துயரங்களுக்கு நீதி தேடும் தமிழக முதல்வரையும், அத்தனை துயரங்களுக்கும் காரணமான போர்க் குற்றவாளி மகிந்தாவையும் சந்திக்க வைக்கும் முயற்சி ஒன்றை, தமிழகத்தின் அரசியல் கோமாளியும், மகிந்தவின் நண்பருமான சுப்பரமணியசுவாமி மேற்கொண்டிருந்தார். தமிழக மீனவர் பிரச்சினையை மையப்படுத்தி இருவரையும் சந்திக்க வைப்பதன் மூலம், தமிழீழ மக்கள் தொடர்பான தமிழக முதல்வரது கடும் போக்கில் மாற்றங்களை உருவாக்கும் முயற்சியாகவே இது நோக்கப்படுகின்றது. 
 
இதற்கு அடுத்ததாக, சிறிலங்காவின் பிரசன்ன விதானகே இயக்கிய 'ஒப நத்துவா ஒப எக்கா' எனும் சிங்களப் படத்தின் 'வித் யூ, வித்அவுட் யூ' என்ற ஆங்கிலத் தலைப்பை 'பிறகு' என்ற தமிழ்ப் பெயருடன் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோஸில் செவ்வாய்க்கிழமை சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ஸ்டூடியோ அமைப்பு இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது.
 
இந்தப் படம், கடந்த வாரத்தில் வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், படம் குறித்த சர்ச்சைகள் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பு குறித்த காரணங்களால் சென்னைத் திரையரங்குகளிலிருந்து ஞாயிறு அன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இரு வருடங்களுக்கு முன்னால், சிறிலங்கா அரசால் இந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டு, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. படத்தில், சிங்கள ஆட்சியாளர்களுக்கு நெருடலான சில காட்சிகள் இருந்த காரணத்தாலேயே அது சிறிலங்காவில் திரையிட அனுமதி டறுக்கப்பட்டிருந்தது. அந்தக் காரணங்களுக்காக, இற்தப் படம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானதான கருத்துருவாக்கத்தேடு தமிழகத்தில் திரையிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 
 
முதலில், சிங்களப் படைப்பாளிகளோ, இலக்கிய கர்த்தாக்களோ தமிழர் தளங்களில் கால் பதிக்கும் முயற்சியை மேற்கொள்வதற்கு முன்னர் தமிழ் மண்ணில், தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்களின் உண்மை நிலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிங்களப் படைகள்மீதும், சிங்கள அரசு மீதும், அவர்களது வெற்றிவாதத்தில் பங்கெடுக்கும் சிங்களப் பேரினவாதத்தின்மீதும் முன்வைக்கப்படும் ஆதாரங்களுடனான போர்க் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ள வேண்டும். அதன் பின்னராகவே, அதன் வலிகளுக்கான தீர்வு நோக்கிப் பயணிக்க முடியும். 
 
பிரசன்ன விதானகேயின் இந்தப் படத்திலும், நடந்தேறிய குற்றங்களின் ஒரு பகுதியை இராணுவ சிப்பாய்களின்மீது சுமத்திவிட்டு, சிங்கள ஆட்சியாளர்களையும், சிங்களப் பேரினவாதத்தையும் தப்பிக்க வைக்கும் முயற்சியே எத்தனிக்கப்படுகின்றது. அதுவும், யுத்த களத்து ரணங்களால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து விடுபட முடியாத தமிழ்ப் பெண்ணான செல்வியை, அவளது வலிக்குக் காரணமான அதே சிங்களப் படையின் சிப்பாயே வாழ்வு கொடுப்பதாகவும் இந்தப் படத்தின் கதைக்களம் நகர்கின்றது. உண்மைகள் மறைக்கப்பட்டு, அவள் மீண்டும் ஒரு பலிக் களத்தில் நிறுத்தப்படுகின்றாள். அது வெளிச்சத்திற்கு வந்தபோது, அவள் தன்னையே மாய்த்துக் கொள்கின்றாள். 
 
தமிழ் இனத்தின்மீதான சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளை ஒரு சிலரது குற்றச் செயல்களாக்கிவிட்டுத் தப்பிக்கும் முயற்சியில், அவர்களது குற்றங்களையும், நண்பர்கள் என்ற காரணத்தால் அதனை மறைத்ததையும் ஒப்புக்கொள்ளும் சரத்சிறி என்ற கதாநாயக பாத்திரத்தின் மூலமாக, இயக்குனர் பிரசன்ன விதானகே பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு எந்த நீதியை வழங்க முற்படுகின்றார்? எல்ல உண்மைகளை மறைத்துவிடுவதனாலும், அதற்குப் பரிகாரமாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவரைத் திருமணம் என்ற பெயரில் மீள் வல்லுறவு கொள்வதனாலும் பிரச்சினைகள் முற்றுப்பெற்றுவிடும் என்று நினைக்கிறாரா? அதாவது, முப்பது வருடங்களுக்கு முந்தைய தமிழ்ச் சினிமாவில் வருவது போன்று, வல்லுறவுக்குள்ளாக்கியவனே அவளைத் திருமணம் செய்துகொள்ளும் நீதியை நிலைநாட்ட முற்படுகின்றாரா? அதுவும், சிங்களப் பேரினவாதத்தை ஆண் வல்லமையாகவும், தமிழினத்தின் இன்றைய நிலையை பெண் இயலாமையாகவும் கொண்ட பாத்திரப் படைப்புக்கள் சகிக்க முடியாத கொடூரங்கள். இறுதியில். தன்னையே மாய்த்துக்கொள்ளும் செல்வி, மீளவே முடியாத தமிழினத்தின் தோல்வியின் அடையாளமாக்கப்பட்டுள்ளாள். இல்லையெனில், அவளது துப்பாக்கி குறி தவறாமல் வெடித்திருக்க வேண்டும். அதற்கு, பிரசன்ன விதானகேயின் சிங்கள மேலாதிக்க வெற்றிவாதம் இடம் கொடுக்கவில்லை. 
 
மொத்தத்தில், தமிழகத்தை நோக்கி நகர்த்தப்பட்ட இரண்டு காய்களும் தமிழ்த் தேசியவாதிகளால் களத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. 
 
- தமிழ்ச்செல்வன் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

&

ஓ நீங்கள் எதிராய் ஆர்ப்பாட்டம் செய்யேல்ல ஆனால் முட்டையில் மயிர் புடுங்குவிங்களாக்கும்...ஈழ உணர்வாளார்கள் என சொல்லிக் கொண்டு எத்தனை தயாரிப்பாளார்கள்,டைரக்டர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் யாராவது ஒருவர் உண்மையான போராட்டத்தில் வலியை சொல்கின்ற மாதிரி படம் எடுத்தீர்களா?...இதே படத்தை ஒரு தமிழன் எடுத்திருந்தால் வாயை மூடிக் கொண்டு மூச்சுக் காட்டாமல் படம் பாத்திருப்பீர்கள்.

எனக்கு லீனா மேடத்தையும் தெரியாது,ஒரு மண்ணாங்கட்டியையும் தெரியாது.உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியும்.நீங்களும் அந்தத் துறையில் தான் இருக்கிறீங்கள்.நான் இங்கு ஒருத்தருக்கும் ஆதரவாக கதைக்கவில்லை.என் பொதுவான கருத்தையே வைத்தேன்.

 
எடுத்த 3 படங்கள் சென்சாரில்  இருக்கிறது அதில் ஒன்று 1994இல் செல்வமணி எடுத்தது இப்ப வயது 20.
அவற்றை சென்சருக்குளால் அக்கா எடுத்துவிட்டால் ............ அவர்களும் தொடர்ந்து படம் எடுப்பார்கள்.
 
இதுவும் என்னுடைய பொதுவான கருத்துதான்.
 
சினிமாவை இவர்களால் ஏன் சினிமாவாக பார்க்க முடியவில்லை?
Link to comment
Share on other sites

"யாவும் கற்பனையே" என்று டைட்டில் கார்டில் போட்டிருந்தால் அந்த 3 படங்களையும் வெளியே விட்டிருப்பார்கள்....

"based on true story"  என்பது இடிக்குது போல உள்ளது...

 

ஏன் அந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நீதிமன்றம் செல்ல வில்லை??? செய்து பார்க்கலாமே...இப்போது எதிர்ப்பு கடினமாக இருக்காது என்று நினைக்கிறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது லீனா மேடத்தைத் தெரியாதா????? இதைப் படித்துப் பாருங்கள். http://www.vinavu.com/2010/01/06/leena/

Link to comment
Share on other sites

&

ஓ நீங்கள் எதிராய் ஆர்ப்பாட்டம் செய்யேல்ல ஆனால் முட்டையில் மயிர் புடுங்குவிங்களாக்கும்...ஈழ உணர்வாளார்கள் என சொல்லிக் கொண்டு எத்தனை தயாரிப்பாளார்கள்,டைரக்டர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் யாராவது ஒருவர் உண்மையான போராட்டத்தில் வலியை சொல்கின்ற மாதிரி படம் எடுத்தீர்களா?...இதே படத்தை ஒரு தமிழன் எடுத்திருந்தால் வாயை மூடிக் கொண்டு மூச்சுக் காட்டாமல் படம் பாத்திருப்பீர்கள்.

எனக்கு லீனா மேடத்தையும் தெரியாது,ஒரு மண்ணாங்கட்டியையும் தெரியாது.உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியும்.நீங்களும் அந்தத் துறையில் தான் இருக்கிறீங்கள்.நான் இங்கு ஒருத்தருக்கும் ஆதரவாக கதைக்கவில்லை.என் பொதுவான கருத்தையே வைத்தேன்.

 

நீங்கள் முட்டையில் மயிர்  புடுங்குங்க  யாரும் வேண்டாம் என்று சொன்னார்கலா...

 

 

 

 
எடுத்த 3 படங்கள் சென்சாரில்  இருக்கிறது அதில் ஒன்று 1994இல் செல்வமணி எடுத்தது இப்ப வயது 20.
அவற்றை சென்சருக்குளால் அக்கா எடுத்துவிட்டால் ............ அவர்களும் தொடர்ந்து படம் எடுப்பார்கள்.
 
இதுவும் என்னுடைய பொதுவான கருத்துதான்.
 
சினிமாவை இவர்களால் ஏன் சினிமாவாக பார்க்க முடியவில்லை?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன பதில் எழுதுவது என்று தெரியாமல் மற்றவர் எழுதியதை குவேட் பண்ணி இப்படி எதையாவது கிறுக்குவீங்கள் என்பதை எதிர் பார்த்தது தான்...மக்களது வலியை மாத்திரம் சொல்கின்ற மாதிரி படம் எடுத்தால் எதற்காக தடை செய்யப் போகிறார்கள்?...மக்களது வலியை மாத்திரம் சொல்ல நினைத்தால் நிச்சயமாக சொல்லலாம்.அதற்கெல்லாம் திறமையும்,தமிழன் என்ட உணர்வும் வேண்டும்.வியாபாரத்தை நோக்கமாக கொண்ட தமிழக தயாரிப்பாளர்களிடம் அது இல்லவே இல்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.