Jump to content

என் இல்லம் சொல்லும் சேதி இது.......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் இல்லம் சொல்லும் சேதி இது...

 

 

என் முற்றத்தில் மூழியாய் எறிக்கிறது முழுநிலவு.
சற்றைக்கொருதரம் தன்னை ஸ்பரிசிக்கும் திரைச்சீலைகளின் உரசல்களை இழந்த சாளரத்து ஓரங்கள்.
தலைவாசல்  கதவிழந்து தனிமையில் தவிக்கும் நிலைப்படிகள்.
மௌனித்துக் கிடக்கும் சமையலறை மேடை.
பொலிவிழந்து  புகைக்க மறந்த சோகத்தில் புகைபோக்கி.
ஏஞ்சல்கள் ஆடும் ஊஞ்சலை எண்ணி ஏங்கும் வேப்பமரம்.
சிறு சோறு சமைக்கும் சில்வண்டுகளைத் தேடும் சிறு தாழ்வாரம்.
சுற்றிப் பறந்த ( த) தும்பிகளைத் தேடும் கம்பி வேலிகள்.
தேவதைகளைத் தேடி தேகம் இளைத்த நிலைக் கண்ணாடி;.
ஓளித்து விளையாடிய தோழர்களின் தோள்சாயத் துடிக்கும் குட்டை மதில்.
ஓண்டிகாகி உறவிழந்து நிற்கும் ஒற்றைப்பனை.
உல்லாசமிழந்து உருக்குலைந்த மண்டபம்.
ஒப்பனை இழந்து உருமாறி நிற்கும் தலைவாசல்.
சல்லாபம் மறந்து தவிக்கும் சயனஅறை.
சலனமற்றுக் கிடக்கும் கிணற்று மேடை.
அன்னை தமிழை அழித்து எழுதிய முற்றத்து மண்.
சில்லுக்கோடு சொக்கட்டான் விளையாட நிழல் தந்த பூவரசு.
சிறுநீரைக்கூட சினக்காமல் சிறைப்பிடித்த புழக்கடை.
எல்லாமே...எல்லாமே...நிராசைகளைச் சுமந்து...
.எதிப்பார்ப்புக்களை நெஞ்சில் கனன்று...
'அவ்வப்போ உங்களை மகிழவைத்த ஜனனங்களும்
நெகிழவைத்த தருணங்களும் கூட
எமக்குள்தானே அரங்கேறின.
தேற்றுவார் யாருமின்றி வேற்றுக்கிரக வாசிகளாய்
முகவரியிழந்து நாம் இன்று.....
உங்கள் முகம்காண ஏங்கும் முதிர்கன்னிகளாய் நாம் இங்கு...
என் மடியில் விளையாட.. என் மதிலில் சாய்ந்தாட..
என் நிலவில் சோறுண்ண...என் மண்ணில் கோலமிட..
நீண்ட நாட்களாய் ஏங்குகின்ற தாயாய் நான்...
ஒருமுறை.. ஒரே ஒருமுறை...என் ஏக்கம் தீர்க்க
விண்ணைத்தாண்டி விளையாட வருவாயா??

 

                            xx-xx-xx-xx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்து சோகம்  சொல்லும் இழப்பும் ஏக்கமும் ..உங்கள் வரிகளில் ... பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணத்தின் எச்சங்கள் கவிதையாய் நிற்கிறது நன்று அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு வருடங்களின் முன் நான் தாயகம் சென்றபொழுது என் வீடு கூரையிழந்து குட்டிச்சுவராக நின்றது. அதைப்பார்த்த பொழுது மனம் வெதும்பியது. இம்முறை நான் தாயகம் செல்லுமுன் வீட்டை முடிந்தவரை கூரையிட்டு கதவுகள் பொருத்தி பழையநிலைக்கு தயார் செய்துவிட்டுத்தான் போனேன். ஆனாலும் என்ன உறவுகளை இழந்த வீடு. வெறுமைதான் மிஞ்சியது. நன்றிகள் நிலாமதி சுமோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை படித்த திருப்தி மனசில்...! தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி...!! :)

Link to comment
Share on other sites

இக்கவிதை  தாயகத்தில் என் வீட்டின் ஏக்கங்களை உணரவைத்தது.


பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஒவ்வொருவருக்குள்ளும் இப்படியான வலிகள் ஏராளம். புலம் பெயர் மண்ணில் எத்தனை வசதி வாய்புகளுடன் வாழ்ந்தாலும் நம் இழப்பின் வலிகள் எமக்குள் நிரந்தரமானவை. மன உணர்வின் ஏக்கத்தை புரிந்துகொண்ட சுவி ஆதவன் இருவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ விதமான உணவுகள் இருந்தாலும்......பச்சை மிளகாயும்...சின்ன வெங்காயமும் நறுக்கிப் போட்ட.... அந்தப் பழைய சோத்துத் தண்ணீருக்காய்.... ஏங்குகின்றது   நாக்கு! :D

 

எனக்கென்னவோ கடற்கரையில மீனை வாங்கத் தென்நீர்க்கில கோத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கறி வைச்சுச் சாப்பிட வேணுமெண்டு,  எப்போதுமே ஒரு ஆசை...! :icon_idea:

 

சாப்பிட்ட பிறகு, அப்பிடியே வேப்பமரத்துக்குக் கீழ, சாக்குக்கட்டிலல 'ஒருக்காச் சரிஞ்சால்'   அது தான் நான் ஏங்குகின்ற வாழ்க்கை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையுரான் உங்கள் ஏக்கத்தை என்னால் முழுமையாக உணரமுடிகிறது. இம்முறை நான் வீட்டிற்கு சென்றபொழுது யாழ்பாணம் சென்று மண்சட்டி வாங்கி பண்ணைச் சந்தையில் நண்டும் வாங்கி கொண்டு வந்து வளவுக்குள் பனம் பாளையும் கொக்கறையும் எடுத்து அடுப்பெரித்து நண்டுக்கறியும் கத்தரிக்காய் பால் கறியும் ரசமும் சமைத்து சம்பாச் சோறுடன் சாப்பிட்டோம். இருபத்தைந்து வருங்களின் பின் என் வீட்டில் சமைத்து சாப்பிட்ட பசுமைநிறைந்த நினைவுகளுடன் நான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.