Jump to content

33 வயதுக்குப் பின் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு நீண்ட ஆயுள் :அமெரிக்கா புதிய ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 33 வயதுக்குப் பின்னர் கர்ப்பமடையும் பெண்கள் மெதுவாக மூப்படைவதால் நீண்ட காலம் வாழ்வதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு கூறுகின்றது.
 
இறுதியாக 29 வயதுக்குள் குழந்தை பிரசவித்த பெண்களுடன் ஒப்பிடுகையில் தமது இறுதிக் குழந்தையை 33 வயதுக்குப் பின்னர் பிரசவித்த பெண்கள் தமது 95 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வாய்ப்பை பெறுகின்றமை இரு மடங்கு அதிகம் என மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி தோமஸ் பெரில்ஸ் கூறினார். 
 
எனினும், இந்த கண்டுபிடிப்பானது பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்துவதை வலியுறுத்தவில்லை என அவர் கூறினார்.
 
வயதான காலத்தில் கடைசிக் குழந்தைகளைப் பிரசவிப்பது பெண்களின் இனவிருத்தி முறைமை மெதுவாக வயதாவதற்கு வழிவகை செய்து அவர்கள்  நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
நீண்ட காலம் வாழும் உறுப்பினர்களைக் கொண்ட 551 குடும்பங்களின் பரம்பரை மற்றும் சமூக தரவுகளை அடிப்படையாக வைத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
மேற்படி, பெண்களின் இனவிருத்தி ஆற்றல் காரணமாகவே அவர்களின் 45 சதவீதமானவர்கள் 100 வயது அல்லது அதற்கு அதிகமான வயது வரை வாழ்கின்றனர். ஆனால் ஆண்களில் 15 சதவீதமானவர்களே 100 வயது வரை வாழ்கின்றனர்.
  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 33 வயதுக்குப் பின்னர் கர்ப்பமடையும் பெண்கள் மெதுவாக மூப்படைவதால் நீண்ட காலம் வாழ்வதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு கூறுகின்றது.
-----

 

இந்த ஆய்வு உண்மையாக இருக்கலாம்.

ஏனெனில்... அந்தப் பிள்ளையை வளர்த்து, படிப்பித்து, நல்ல இடத்தில் கலியாணம் கட்டிக் கொடுத்து, பேரப் பிள்ளையுடன் விளையாட வேண்டும் என்ற ஆசையில்... ஒரு மனத் தைரியமும், வைராக்கியமும் வரும் போது.... நீண்ட வருடம் வாழ, சாத்தியக் கூறுகள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னமில்ல. ஏலியா கலியாணம் கட்டி.. கள்ளப் பொண்டாட்டி புருசன் என்று மன அழுத்தங்களோடு வாழுறதிலும்.. லேட்டா கட்டி உருப்படியான ஒன்றே ரெண்டோ பெத்துக்கிட்டு வாழுறது.. கூடிய மன நிம்மதி.. என்று.

 

சின்னப் பொடியன் சொல்லுறான் என்று தட்டிக் கழிச்சவை.. இப்ப அமெரிக்கன் சொன்னா மட்டும் கேளுங்க...! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னமில்ல. ஏலியா கலியாணம் கட்டி.. கள்ளப் பொண்டாட்டி புருசன் என்று மன அழுத்தங்களோடு வாழுறதிலும்.. லேட்டா கட்டி உருப்படியான ஒன்றே ரெண்டோ பெத்துக்கிட்டு வாழுறது.. கூடிய மன நிம்மதி.. என்று.

 

சின்னப் பொடியன் சொல்லுறான் என்று தட்டிக் கழிச்சவை.. இப்ப அமெரிக்கன் சொன்னா மட்டும் கேளுங்க...! :lol::D

 

ஆஹா...... கலியாணம் கட்டிறதில்லை, என்று இருந்த... நெடுக்கருக்கு,

இந்தப் பதிவைப் பார்த்தாவது, கலியாண ஆசை வந்தது.....

நெஞ்சிலை.... பால் வார்த்த, மாதிரி இருந்தது. :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா...... கலியாணம் கட்டிறதில்லை, என்று இருந்த... நெடுக்கருக்கு,

இந்தப் பதிவைப் பார்த்தாவது, கலியாண ஆசை வந்தது.....

நெஞ்சிலை.... பால் வார்த்த, மாதிரி இருந்தது. :D  :lol:  :icon_idea:

 

தப்பு தப்பு. நான் பொதுவாகச் சொன்னேன். எனக்கு என்றில்லை. :lol::icon_idea:

நாங்க எப்பவும் கொள்கை.. கோட்பாட்டில் உறுதியான ஆக்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60 வயதுக்குப்பிறகும் தினாவெட்டாய் இருக்கிற போய்ஸ்சுக்கு ஏதாவது விஞ்ஞான விளக்கங்கள் இருக்கே தம்பி????  confused0036_zps6b957e78.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

33 வயதுக்குப் பின் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு நீண்ட ஆயுள் :அமெரிக்கா புதிய ஆய்வு

 

 

காலையில் ஓர் எனக்கான  செய்தி... :icon_mrgreen:  :icon_mrgreen:

பிரின்ற் எடுத்து அறையைச்சுற்றி  ஒட்டணும் :icon_mrgreen:

சொன்னது அமெரிக்கா  என்று பெரிய  எழுத்தில  போடணும்... :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

33 வயதுக்குப் பின் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு நீண்ட ஆயுள் :அமெரிக்கா புதிய ஆய்வு

காலையில் ஓர் எனக்கான செய்தி... :icon_mrgreen::icon_mrgreen:

பிரின்ற் எடுத்து அறையைச்சுற்றி ஒட்டணும் :icon_mrgreen:

சொன்னது அமெரிக்கா என்று பெரிய எழுத்தில போடணும்... :D:D

ஆத்துக்காரியிட்ட உதை வாங்கணும்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.