Jump to content

நம்மவர் குறும்படங்கள்!!


Recommended Posts

1. துலைக்கோ போறியள்!

 

thulaikkoporiyalposter_zps93e6611c.jpg
 

துலைக்கோ போறியள் என்றதும் சிலருக்கு என்ன வார்த்தை என்று தெரியாது. ஈழத்து தமிழர்கள் பேசக்கூடிய சொல்துலைக்கோ போறியள்?”. 

 

அப்படி என்றால்எங்கே போறீங்கஅல்லதுதூரத்துக்கு போறீங்களா?” என்று தான் கேட்பார்கள்.

 

குறும்பட பெயரை பற்றி தெரிந்து கொண்டு விட்டோம். இப்போது குறும்படத்தை பற்றி அறிவோம் வாருங்கள்.

 

ஒரு மயானம், அங்கு இருக்கும் ஒரு கல்லறையில் ஒருவர் படுத்திருக்கிறார். முகத்தில் சூரியன் சுள்ளுன்னு பட சோம்பல் முறித்து எழுகிறார். இதற்கு பின் வரும் காட்சி பஸ்ட்கிளாஸ்

 

தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த மனிதன் பல் விளக்குகிறான், தலை சீவுகிறான். எப்படி இவற்றை செய்கிறான் என்பது குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

 

இலங்கையில் ஒரு திருடனின் வாழ்க்கையில் ஒரு நாளில் சில மணிநேரங்களில் நடக்கும் சம்பவங்களை படம்பிடித்து நகைச்சுவையுடன் காட்டியுள்ளனர். அதோடு சில சமூக கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மதிசுதா.

 

வெளிநாட்டில் இருந்து வருபவரிடம் அந்த திருடன் 200 ரூபாய் சுடுவது, சைக்கிளை திருடி செல்வது, பின் இறுதியில் மாட்டிக் கொண்டு அடி வாங்குவது எல்லாம் சூப்பர். இக்குறும்படத்தின் கதைக்களமும் அருமையாக அமைந்திருக்கிறது.

 

கதையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று குறும்படத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள். நச்சுன்னு புரிகிறது

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/105648/

 

https://www.youtube.com/watch?v=ocIKF_H1q_E

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply

2. சீட்டு

 

c00b6ca3-a52e-48e2-b099-365673b90cd0_zps

 

இலங்கைத் தீவின் வடபுலத்தில் இருந்து குறும்படத்துறையில் ஒரு வரவுசீட்டு‘!

 

இளையவர்களின் குழு முயற்சியால் இன்று வெளியான குறும்படம். ஈழத்தமிழ் சமூகத்தின் பொருண்மியம் சார்ந்த கதைக்கருவைக் கையாண்டமைக்கு வாழ்த்துக்கள்!இத் தெரிவிலேயே ஒரு துணிச்சல் தெரிந்துவிடுகிறது!

பூசிமெழுகாத இயன்றவரை இயல்பான நடிப்பு, இட்டுக்கட்டாத நடைமுறைத்தனமான வசனம், பொருண்மியம் சார்ந்த ஏதிலிப்படகுப் (அகதி) பயணம், நம்ப வைத்துக் கழுத்தறுக்கும்நம்மவர்அடையாளம், பாத்திர வார்ப்புக்கள் இயல்பானமை, இடையூறு பண்ணாத அரிதாரம் (ஒப்பனை), நடைமுறை உடை & அலங்காரம், இரைச்சல் கொட்டாது சேர்ந்து பயணிக்கும் இசை, கண்களை உறுத்தாத கலை, அரைத்த மாவை அரைக்காது புத்தாக்கத்துடன் உண்மைச் சம்பவங்களைத் தழுவி குறும்படம் ஆக்கிய தயாரிப்பாளர் Manoouj Krishnan & இயக்குநர் Mayan Kanthan பாராடுக்குரியவர்களே!

 

https://www.youtube.com/watch?v=MZ9y3yLlK_8

Link to comment
Share on other sites

3. ஊனம்

 

46 கிரியேசன்ஸ் வழங்கும்

ராஜின் கதை, திரைக்கதை, நெறியாள்கையில் 'ஊனம்'!

 

https://www.youtube.com/watch?v=qs4tC7B5Ens

Link to comment
Share on other sites

 

கிளியவன்! தயவு செய்து பொருத்தமான இடத்தில் தங்களது இணைப்புகளை இணைக்கவும்.

 

இதற்குள் இடையூறு செய்ய வேண்டாம்! நன்றி!!

Link to comment
Share on other sites

4. துடிப்பு

 

BA40BC10B9F0BBF0BAA0BCD0BAA0BC10_zps8481

 

இளைஞர்களிடத்தில் தற்போது அதிகரித்துவரும் மோட்டார்சைக்கிள் மோகமும் அதனால் இளைஞர்களின் வாழ்வு எப்படி தடம் மாறிப்போகின்றது என்பதனையும் கருவாக கொண்டு வெளியாகியிருக்கிறது “துடிப்பு” குறும்படம். 17 நிமிடங்கள் கொண்ட இக் குறும்படத்தை இயக்கியுள்ளார் ராஜ்கரன். மோட்டார்சைக்கிளுக்காக இன்றைய இளைஞர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், அவர்களுடைய குடும்ப பின்னணி, வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட நம்மவர்களின் வாழ்க்கை முறை என அனைத்தையும் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தியுள்ளமை பாராட்டத்தக்கது.

 

குறும்படத்தில் நடித்தவர்களின் யதார்த்தமான நடிப்பு, இன்றைய இளைஞர்களையும், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என அனைத்திலும் கலக்கியுள்ளார்கள் துடிப்பு குறும்பட குழுவினர்.

 

https://www.youtube.com/watch?v=fw7XXnMO9wQ

 

 

(நுணாவிலான் மன்னிக்க.. மீண்டும் இங்கே இப்படத்தைப் பதிவதற்கு.)

Link to comment
Share on other sites

5. வல்லூறு

 

valluru001_zpsc71bd99d.jpg

 

சக மனிதனை உடல் ரீதியாக துன்புறுத்துவது குற்றம் என பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது

 

ஆனால் அந்த சட்டங்கள் எல்லாம் தாண்டி இப்போது பல நாடுகளில் இப்படிபட்ட துன்புறுத்தல்கள் நிறைய நடந்து வருகின்றன.

 

கதை ஆரம்பமாகிறது, தாய் இல்லாமல் வாடும் ஒரு அண்ணன், தங்கை. அவர்களுக்கு ஒரு குடிகார அப்பா. தினமும் குழந்தைகளை பட்டினி போடுவதும், அவர்களை போட்டு அடிப்பதும் என மனிதனாக வாழ்ந்து வரும் மிருகம்.

 

ஆனால் அந்த சிறுவர்களுக்கு உணவு கொடுத்து உதவுகிறாள் அவர்களின் எதிர் வீட்டு சிறுமி. திடீரென அப்பெண் பரிதாபமாக இறந்து விடுகிறாள். அவளுக்கு என்ன நடந்தது, ஏன் இறந்தாள் என்பது கதை.

 

மிகவும் தெளிவாகவும், ஷார்ப்பாகவும் அமைந்திருக்கிறது கதைக்களம். அருமையான ஒளிப்பதிவு மற்றும் வரிகள். அனைவரும் பார்க்க வேண்டிய குறும்படம், ஒரு குறும்படம் தொழில்நுட்ப ரீதியாக எப்படி அமைய வேண்டும் என்பதற்கு உதாரணம்.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/105175/

 

https://www.youtube.com/watch?v=nBwNMtMdjPE

Link to comment
Share on other sites

வணக்கம் சோலியன் ஒரு வருடத்துக்கு பிறகு இன்றைக்கு  ஒரு லிங்க போட்டன் ஓடி வந்து பதில் போட்ட உங்களுக்கு நன்றி.

 

இந்த குரும்படங்களின் மூலம் நீங்கள் திருத்த நினைப்பது யாரை?

 

பழைய சமுதாயத்தையா? அல்லது

இளைய சமுதாயத்தையா? அல்லது

இணைய சமுதாயத்தையா?

 

 

 

 
Link to comment
Share on other sites

 

வணக்கம் சோலியன் ஒரு வருடத்துக்கு பிறகு இன்றைக்கு  ஒரு லிங்க போட்டன் ஓடி வந்து பதில் போட்ட உங்களுக்கு நன்றி.

 

இந்த குரும்படங்களின் மூலம் நீங்கள் திருத்த நினைப்பது யாரை?

 

பழைய சமுதாயத்தையா? அல்லது

இளைய சமுதாயத்தையா? அல்லது

இணைய சமுதாயத்தையா?

 

 

யாரை யார் திருத்துவது?!  :o

விபரமானவர்கள்தானே இந்தக் களத்துக்கு வருகிறார்கள்?!  :o 

எம்மவர்களின் படைப்புகளை (நேரம் உள்ளபோது) இந்த யாழில் பகிர்ந்து அழகு பார்க்க விரும்புகிறேன். அவ்வளவுதான்!!  :lol:

Link to comment
Share on other sites

6. அகரம்

 

பிரவீன் மற்றும் யேசுராசா நடிப்பில் வனிதா சேனாதிராஜா இயக்கி இருக்கும் குறும்படம் அகரம்.

 

சுற்றுச்சூழலை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதை ஒரு சின்ன கருத்தை வைத்து எடுத்துள்ளனர் இப்படக்குழுவினர்.

 

சிறுவன் ஒரு பூச்செடி குப்பைகளுக்கு நடுவில் இருப்பதை காண்கிறான். அதனால் அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று முயல்கிறான். அவன் செய்யும் வேலையை பார்த்து ஒருவர் வந்து அந்த சிறுவனுக்கு உதவி செய்கிறார்.

 

அடுத்த நாள் அந்த இடத்தை பார்க்கும் போது அதேபோல் குப்பைகள் இருக்கின்றன. மீண்டும் சுத்தம் செய்கின்றனர். பின் அந்த இடம் எப்படி சுத்தமாக மாறுகிறது என்பது கதை

 

www.cineulagam.com/eelatamil/reviews-tamil/short-film/100158/

 

https://www.youtube.com/watch?v=2iw17mYIv5o

Link to comment
Share on other sites

7. அம்மா நலமா?

 

amma_nalama001_zpsafe2b989.jpg

 

ஒரு சில குறும்படங்கள் பார்த்து முடித்த பிறகும் நம் மனதை விட்டு நீங்காது இருக்கும், அந்த வகை தான் இந்த அம்மா நலமா.

 

கடல் சார்ந்த உலகில் தாய் இல்லாமல் வாழும் ஒரு சிறுமி தன் அப்பாவிடம் அம்மா எங்கே என்று கேட்கிறார். என்ன சொல்வது என்று தெரியாமல் தன் மகளிடம் கை நீட்டி அம்மா வானத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்.

 

தினம் தோறும் அவர் அப்பா மீன்பிடிக்க செல்ல, கடல் கிட்ட உட்கார்ந்து வானத்தை நோக்கி அம்மாவுக்காக ஏங்குகிறார். அந்த குழந்தை.தன் கஷ்டங்களையும், வலிகளையும் வெளியில் கூட சொல்ல முடியாது, ஏனென்றால் வாய் பேச முடியாத குழந்தை அது. தன் எண்ணங்களை ஒரு கடிதத்தின் மூலம் சொல்லி உணர்வுகளால் கட்டி போடுகிறார். அந்த சிறுமியின் ஏங்குதலும் அவளின் உணர்வுகளும் தான் இந்த அம்மா. 

 

நலமாகண்டிப்பாக அம்மா நலமா இயக்குனர் அருள் செல்வத்தின் அருமையான படைப்பு என்று தான் சொல்லவேண்டும். இசை ,ஒளிப்பதிவு , அந்த குழந்தையின் நடிப்பு மற்றும் அப்பாவின் நடிப்பு யதர்த்தம் . வசனமே அதிகம் இல்லாமல் இல்லாமல் இசை முலம் உணர்வுகளை சொல்லி இருப்பது வலியின் உச்சம்.

 

மொத்தத்தில் அம்மா நலமா - அழகான தேடல்.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/

 

https://www.youtube.com/watch?v=ZtX0j1RQBX4

Link to comment
Share on other sites

8. இது

 

B870BA40BC10_zpsf679bc04.jpg

 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 48மணி நேர குறும்படப்போட்டியில், வழங்கப்பட்ட கருவிற்கமைவாக தெரு சார்ந்த கதைக்களத்தைமையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டஇதுகுறும் படம்போட்டியில் இரண்டாவதh தெரிவாகி பாராட்டுக்களை  பெற்றுள்ளது

 

குறிப்பிட்ட கால அளவுக்குள், பல காட்சிச் சட்டகங்களை உள்ளடக்கியுள்ள இக் குறும்படம், நல்ல கருப்பொருளையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trinco Creation  அணியினரின் இது குறும்படம்.

 

https://www.youtube.com/watch?v=pcQusWRNkto

Link to comment
Share on other sites

9. நன்றி அம்மா!

 

Naammma_zps0c237a60.jpg

 

காதல் எப்போதும் காமத்தோடு சேர்ந்ததுதான்ஆனால் காமத்திற்கு பின்னான காதல், அது மாத்திரமே உண்மைக்காதல். தன் காதலனை நெஞ்சிலும் குழந்தையை மார்போடும் சுமக்கும் ஒரு காதலியின் கதை தான் இந்தநன்றி அம்மா

 

தன் காதலனை கல்யாணம் செய்துகொள்ள அம்மா, அப்பாவிடம் அனுமதி வாங்குவதில் ஆரம்பிக்கிறது படம். பிரான்சு நாட்டின் தெருக்களில் எல்லாம் காதலர்கள் சுற்றித்திரிகிறார்கள், அன்பு முத்தங்கள், ஆச்சரிய கிஃப்டுகள் என காதல் நிரம்பி வழிகிறது படம் முழுவதும். கல்யாணத்துக்கு அனுமதி கிடைத்ததும், காதலின் உச்சக்கட்ட வெளிப்பாடாக காதலி தன்னையே காதலனுக்கு பரிசளிக்கிறாள். ஆறு மாதங்கள் கழித்து திருமணம் என நிச்சயம் பண்ணி முடிக்கும்போது காதலி கர்பமாகிறாள். தன் அம்மாவிடம் ஒரு வழியாக இதை சொல்லி, திருமணத்தை முன்கூட்டியே நடத்திவிட சம்மதம் வாங்குகிறாள். அம்மாவும் சம்மதம் தெரிவிக்கிறார்

 

பின்னர் என்ன ஆனது என குறும்படத்தில் பார்க்கவும்!

 

முதலில் நடிகர்கள் தேர்வுக்கும், திரைக்கதைக்கும் பெரிய ஒரு பொக்கே!! அழகு காதலியாக மிஷா ரொட்னி.. கண்களினாலே காதல் பேசும் நடிப்பு. சந்தோசம், அழுகை, தவிப்பு, காதல் என அத்தனை உணர்ச்சிகளை கொட்டும் போது பர்ஃபெக்ட் நடிகை. காதலனாக தீபன் துரைஸ். காதலியை சந்திக்க லேட்டாக வரும்போது, கோபத்தில் இருக்கும் காதலியை சமாதானப்படுத்த மரத்தில் தொங்கும் ஒரு பூவை பறித்துக்கொண்டு வரும்போது மாத்திரம் கவனம் ஈர்க்கிறார்.

 

பகுதி 1

 

https://www.youtube.com/watch?v=ccNKsDaxkJg

 

பகுதி 2

 

https://www.youtube.com/watch?v=M4QULXgpgOY

 

Link to comment
Share on other sites

10. நிர்ணயம்

 

வாழ்க்கையில் ஏதும் நிரந்தரம் என்பதில்லை என்று சொல்லியிருக்கிறது இந்த நிர்ணயம். இந்த அவசர உலகத்தில் நாம் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, சொல்லவந்த கருத்தை 2 நிமிடத்தில் சொல்லி முடித்துவிட்டது இக்குறும்படம்.

 

ஒருவன் 2000ம் ஆண்டு காரில் வந்து பெட்ரோல் போடுகிறான், பின்பு 2010ம் ஆண்டு பைக்கில் வந்து பெட்ரோல் போட 2014ல் அவன் வளர்ச்சி எங்கு உள்ளது என்பதை மிக அழகாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் எஸ்.. நிலான்

 

http://www.cineulagam.com/eelatamil/reviews-tamil/movie/100131/

 

https://www.youtube.com/watch?v=8GokLWNZ72k

Link to comment
Share on other sites

11. எனக்கும் உனக்கும்

 

B8E0BA90B950BCD0B950BC10BAE0BCD0_zpsa736

 

பல விருதுகளை வாங்கிய பாஸ்கி மன்மதன் அவர்களின் தயாரிப்பில் உருவான [எனக்கும் உனக்கும் ] குறும்படம்..

இன்று தாயகத்தில்..

01. 
யாழ். ஆவராங்கால் இளம்பெண் விசுவமடுவில் எரிந்தநிலையில் சடலமாக மீட்பு!

02. 
யாழ் திருநெல்வேலியில் இளம் பெண் சடலமாக மீட்பு!

நடந்த மரணங்கள் இவை. இப்படி தினமும் 10 பேராவது சாகிறார்கள். அது எந்த பின்னணியில் நடக்கிறது என்பதை துல்லியமாகப படம் பிடித்திருக்கிறார்கள் தமிழீழ கலைஞர்கள்.

https://www.youtube.com/watch?v=t-cn23FCOBM

 
Link to comment
Share on other sites

12. 3 இரவு 4 பகல்
 

இப்படத்துக்கான விமர்சனத்தை எழுத முன்பு, ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவின் காலநிலையை ஒருமுறை பரிசோதித்தோம். -14 என்று காட்டியது காலநிலை குறிகாட்டி. பொதுவாகவே ரஷ்யா எவ்வளவு குளிர் மிக்க நாடு என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த அடர் குளிருக்குள், அடர் காட்டுக்குள், இரவு பகலாக படம் பிடித்த குழுவினருக்கு பெரியதொரு பாராட்டினை வழங்கிக் கொண்டு விமர்சனத்தை ஆரம்பிக்கிறோம்.

 

கொழும்பு கட்டுநாயக்கவில் இருந்து புறப்படும் விமானம் ஒன்று ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இறங்குகிறது. அதில் இறங்கும் சில தமிழர்களைஆட்களை கடத்தும் குழு”( ஏஜென்சி ) ஒன்று, தரை வழியாக பாரிஸ் அழைத்துவருகிறது. கடும் பனிக்குள்ளே, காடு மலை எல்லாம் நடக்கிறார்கள். குளிர் தாங்க முடியாமல் நடுங்குகிறார்கள். அந்த குழுவிலே ஒரு சிறுவனும், சிறுமியும் இருக்கிறார்கள். பயணத்தை தொடர அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

 

ஒருவாறு 3 இரவுகளை முடித்துக் கொண்டு நாலாம் நாள் பகல் பாரிஸ் நகருக்குள் வருகிறார்கள். அந்த குழுவில் வந்த தன்னுடைய தம்பியை அழைத்துச் செல்ல ஆவலுடன் பாஸ்கர் வருகிறார். காரின் கதவு திறக்கிறது. இதோ தம்பியை பார்க்கப் போகிறோமே என்று நினைக்கும் போது, சட்டென்று கதவை இழுத்து மூடிவிடுகிறார்கள். 2000 ஃபிராங்குகள் கொடுத்தால் மட்டுமே தம்பியை விட முடியும் என்று பேரம் பேசுகிறார்கள் ஏஜென்சிக்காரர்கள்.

 

துடித்துப் போகிறார் பாஸ்கர். அவர்களுடன் வாதாடுகிறார். அவர்களோ இசைவதாக இல்லை. வேறு வழி இன்றி, பேசியதொகைக்கு மேலதிகமாக 2000 ஃபிராங்குகளை கொடுத்துவிட்டு, ஆசையோடு தன் தம்பியை அழைத்துச் செல்கிறார் பாஸ்கர். இப்போது இருவரும் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்துக்குள் வந்துவிடுகிறார்கள். தம்பியிடம் டிக்கட் இல்லை. அதை வாங்கிக் கொடுக்க பாஸ்கரிடம் பணமும் இல்லை. அதனால் தடைக் கம்பிக்குள்ளால் புகுந்து உள்ளே செல்கின்றனர்.

 

அங்கே டிக்கட் பரிசோதகர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். டிக்கட் இல்லை என்று தெரிந்தவுடன், சந்தேகப்பட்டு, வதிவிட அட்டையினை கேட்கின்றனர். அதுவும் இல்லை என்று தெரிந்தவுடன் போலீஸ் வரவழைக்கப்படுகிறது. போலீஸ் வந்த பின்னர் என்னாகிறது என்பதே மீதிக் கதை.

 

வெளிநாடுகளில் சட்டங்கள் மிக இறுக்கமானவை. இங்கு லஞ்சம் கொடுத்து கூட தப்பிக்க முடியாது. ஆனாலும் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல, சொந்த நாட்டில் பிரச்சனைகாரணமாக வெளிநாட்டுக்கு வரும் மக்களை இந்த சட்டங்கள் கூட அவ்வப்போது சோதிப்பதுண்டு.

 

இதைத்தான் தனது குறும்படத்தில் மிக அழகாக சொல்லியிருக்கிறார் .வி.ஜனா. படத்தின் மேக்கிங் ஸ்டைல், அதற்கு அவர்கள் பட்ட கஷ்டம் அனைத்துக்கும் பெரியதொரு சல்யூட். க்ளைமேக்சில் வரும் புல்லாங்குழல் இசை இதயத்தை பிழிகிறது. போலீஸ் வந்த பின்னர் நடந்த சம்பவங்களைக் காட்டும் போது மட்டும் கேமரா கொஞ்சம் தடுமாறியிருக்கிறது. மற்றும்படி படம் மிகவும் அழகாக தொகுக்கப்பட்டு இதயத்தில் பதியும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது.

 

https://www.youtube.com/watch?v=BOFjn4b5m-o

 

 

இதனால்தான் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த கேமரா, சிறந்த பார்வையாளர்கள் விருது என்று ஏகப்பட்ட விருந்துகளை வென்றிருக்கிறது இப்படம்!

Link to comment
Share on other sites

13. வன்மம்

 

நான் செய்யாத பிழைக்காக என்னை தண்டிக்கும்போது, நான் ஏன் அந்த பிழையை செய்யக்கூடாது? அருமையான கேள்வி

 

இந்த ஒரு வரியை மையப்படுத்தி வன்மம் கதை நகர்கிறது.

 

ஒருவன் தவறு செய்தால் போதும் அவனை சுற்றி இருப்பவர்கள் கூட தவறானவர்கள் என்று பார்க்கும் கண்ணோட்டம் காலகாலமாக இருந்து வருகிறது.

 

இக்குறும்படத்தில் திருடனின் மகனான தேசிகன் பாடசாலையில் சேர்வதற்கு வருகிறான்

 

அப்போது ஆரம்பித்து ஒவ்வொரு சமயத்திலும் அவனை ஒவ்வொருவரும் திருடன் மகன் என்று முத்திரை குத்துகின்றனர்.

 

இப்படி தேசிகன் இருக்கும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் அவனை கள்ளன் மகன் என்று ஒரு மாதிரியாக பார்க்கும் போது அந்த பிஞ்சு மனம் எப்படி இருந்திருக்கும்.

 

ஒருநாள் வகுப்பு ஆசிரியையின் பணம் காணாமல் போகிறது. மாணவர்களை பரிசோதிக்கும்போது தேசிகன் மட்டும் தயங்குகிறான். இதை பார்த்ததும் ஆசிரியர்களுக்கு மட்டும் இல்லை, குறும்படம் பார்க்கும் நமக்கு தேசிகன் திருடி இருக்கிறான் என்ற எண்ணம் வருகிறது.

 

ஆனால் அவன் திருடவில்லை என்று தெரியவரும்போது மனதில் ஒரு வலி ஏற்பட்டது.

 

இக்குறும்படத்தில் தொழில்நுட்ப வேலைகள் எல்லாத்தையும் தாண்டி, இதில் பிடித்தது தேசிகன் என்ற அந்த மாணவனின் நடிப்பு

 

http://www.cineulagam.com/eelatamil/reviews-tamil/short-film/100154/

 

https://www.youtube.com/watch?v=zWVjfoumLf8

 
Link to comment
Share on other sites

14. விழி ஓரம் ஒரு துளி

 

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானவிழி ஓரம் ஒரு துளிகுறும்படம் உஷா பிலிம்ஸ் வழங்கும் வின்சன் குரு வின் கதை, திரைக்கதை, வசனம் இயக்கம், நடிகர்களாக , எஸ் விஜய், வின்சன், ஜெயா, ஜசீர், இசை ஒலிப்பதுவு செந்தூர், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு யுறா சன்வவா ஆகியோரின் முயற்சியில் காதலின் ஏமாற்றத்தை காயத்தின் சாரலோடு தூவி சென்றுள்ளதுவிழி ஓரம் ஒரு துளி”.

 

காதலில் ஏமாற்றப்பட்ட வாய் பேச முடியாத ஓர் இளைஞ்சனின் தற்கொலை முடிவின் பயன் ஏது, முட்டாள்தனமான முடிவு எடுப்பதன் மூலம் எதை அடைந்து விட முடியும் என்று விழியோரம் துளி வைத்து காட்சியமைத்து காட்டியிருக்கிறது ..!

 

ஒரு பெண்ணை காதலிக்கும் ஒரு வாலிபர், அப்பெண்ணை அவரது நண்பராகிய வாய் பேச முடியாத நண்பரும் அப்பெண்ணால் காதலித்து ஏமார்ந்தவர், ஏமார்ந்த அந்த இளைஞனின் மனோ நிலை ஏமாற்றத்தின் வலியை தாங்க முடியாத இக்கட்டான சூழ்னிலைக்கு தள்ளப்பட்டு விபரிதமான முடிவு எடுக்கிறான், பின்பு அது தவறு என்று உணர்ந்து நண்பனுக்கு உண்மையை சொல்லி உதவி செய்ய முன் வருகிறான். அதை எப்படி சொல்கிறான் என்பதுதான் படத்தின் முடிவு.

 

காதலில் ஏமாற்றுத்தின் வலியை காயங்களோடு உணர்த்த முயற்சித்திருக்கிறார்கள், படத்தின் ஒளிப்பதிவு தெளிவாக இருக்கிறது.

 

https://www.youtube.com/watch?v=BuW15ADOUkY

 

 
Link to comment
Share on other sites

15. சிறகு விரிக்க 

(Tamil mobile shortfilm)

 

அழகான கவிதையாக தான் உள்ளது இந்த "சிறகு விரிக்க".முன்னேற முயற்சிப்பவர்களுக்கு நாம் வழியை காட்டிவிடலாமே தவிர அவர்களை தோள்மீது சுமந்து செல்லவேண்டும் என நினைக்கக்கூடாது. ஏனெனில் நாம் யாரும் 100% அறிந்தவர்கள் கிடையாது. இதை தான் சொல்ல வருகிறது "சிறகு விரிக்க" குறும்படமும்.

 

பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து இருக்கும் இளைஞன் ஒருவன் அதன் ஜன்னலில் இருக்கும் பாட்டில் ஒன்றை கல்லால் அடித்து வீழ்த்த முயற்சிக்கிறான். பின்னர் அருகில் இருந்த சிறுவனை அழைத்து அந்த பாட்டிலை எறிந்து வீழ்த்த சொல்லி அவனுக்கு தானே உதவி புரிகிறான்.

 

சிறுவனின் கையை பிடித்து தானே கல்லை எறிகிறான். ஆனால் அந்த சிறுவனால் பாட்டிலை வீழ்த்த முடியவில்லை. இறுதியில் இளைஞனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் சிறுவன் ரப்பர் பாண்டின் உதவியுடன் கல்லால் அந்த பாட்டிலை அடித்து சாய்க்கிறான்.

 

இதில் நாம் முன்பே சொன்ன கருத்தை விட நமக்கே தெரியாமல் பல கருத்துகள் சொல்லப்பட்டு இருக்கிறது. கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்யாமல், மிகவும் எளிதாக இஷ்டப்பட்டு செய்ய வேண்டும் என்பதே, தவறாமல் பார்த்து விடுங்கள் இந்த "சிறகு விரிக்க" குறும்படத்தை

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/103652/

 

https://www.youtube.com/watch?v=uz8ae0sDvGc

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் பார்த்தேன்

அருமையான பதிவு

 

குறும்படங்களை  ஊக்குவிப்பதனூடாக  எவ்வளவோ விடயங்களை  வெளிக்கொண்டு வரலாம்

அதைச்செய்யும் தங்கள் பணி  தொடர்க.

 

(தம்பி  கிளியவன் பற்றி  தப்பாக விளங்கிக்கொள்ளாதீர்கள் ஐயா.  ஏதோ  தவறு நடந்துள்ளது.  இருவரும் புரிந்து கொள்ளுங்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சோழியான் மிகவும் நல்ல முயற்சி.நன்றி..." நன்றி அம்மா" படத்தில் கதாநாயகியாய் நடித்த பெண் தமிழர் இல்லை என்பதால் முழுமையான நம்மவர் ஆக்கம் என சொல்ல முடியாமல் உள்ளது

Link to comment
Share on other sites

இன்று தான் பார்த்தேன்

அருமையான பதிவு

 

குறும்படங்களை  ஊக்குவிப்பதனூடாக  எவ்வளவோ விடயங்களை  வெளிக்கொண்டு வரலாம்

அதைச்செய்யும் தங்கள் பணி  தொடர்க.

 

(தம்பி  கிளியவன் பற்றி  தப்பாக விளங்கிக்கொள்ளாதீர்கள் ஐயா.  ஏதோ  தவறு நடந்துள்ளது.  இருவரும் புரிந்து கொள்ளுங்கள்)

 

இதற்குள் வேறு அம்சங்கள் புகுந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்திலேயே சுட்டிக்காட்டினேன். வேறு எந்த தவறான புரிதலோ அல்லது முரண்களோ எமக்குள் இல்லை. 

 

நன்றி விசுகர்!!  :D

தொடருங்கள் சோழியான் மிகவும் நல்ல முயற்சி.நன்றி..." நன்றி அம்மா" படத்தில் கதாநாயகியாய் நடித்த பெண் தமிழர் இல்லை என்பதால் முழுமையான நம்மவர் ஆக்கம் என சொல்ல முடியாமல் உள்ளது

 

ஓம். கதாநாயகியைத் தவிர ஏனையவர்கள் பிரான்சில் வாழும் நம்மவர்கள்!

கருத்திற்கு நன்றி ரதி!  :D

Link to comment
Share on other sites

16. Merci la France

 

ஒருவன் மனதால் காயப்படும் போது, அவனுக்கு ஆறுதலாக யார் இருந்தாலும்அவர் தான் அவனுக்கு கடவுள் , தெய்வம்…. எல்லாம்! சரியான சமயத்தில் குடுக்கப்படும் அனுசரிப்பும், நம்பிக்கையும் அவனுக்கு வாழ்நாள் முழுவதும் சந்தோசத்தைக்கொடுக்கும், வாழ வழியைக்கொடுக்கும். இங்கே வாழ்க்கை கொடுத்த ஒரு தேசத்திற்கு கண்ணீரால் நன்றி சொல்வதே இந்தமெர்ஸி லா ஃப்ரான்ஸ்

 

சரியான சந்தர்ப்பத்தில், எதுவுமே கைகளில் இல்லாத ஒருவருக்கு, எதுவுமே இவரிடமிருந்து வாங்கிடமுடியாது என தெரிந்தும்..  ஒருவர் தரும் ஆரவிற்கும், அடைக்கலத்திற்கும் எதன் மூலம் நன்றி சொல்லிவிட முடியும்கண்ணீரால் தான்

 

அழகிய பிரான்சு தேசத்தில் சலனமற்று கிடக்கும் ஒரு காஃபி ஷாப்கதைக்களம். காஃபி ஷாப்பின் மூலையில் ஒரு ஓரமாய் ஒரு மேஜை. மேஜையில் ஒரு காஃபி கப். அவ் மேஜையை ஒட்டி கண்களில் வெற்றுத்தன்மையான பார்வையுடன், இயலாமையின் வெளிப்பாடாக உடைந்துபோயிருக்கும் வெவ்வேறு நாட்டின் மனிதர்கள் !! காஃபி அருந்துகிறார்கள். சடசட..சடவென துப்பாக்கி குண்டுகள் தெறிக்கிறது. யுத்தம் நடைபெறுகிறது. உடனிருந்தவர்கள் இறக்கிறார்கள். சிலர் உயிரை கையில் பிடித்தபடி ஓடுகிறார்கள். கை கால்கள் இழந்தபடி சில பிணங்கள் தெறித்து விழுகின்றனஇவையெல்லாம் அவர்கள் கண்களில்தான் தெரிகிறது, கண்ணீர் சொட்டுகிறது. படம் முடிகிறது.

 

பாராட்டுக்கள் படக்குழுவினர் அனைவருக்கும். சொல்லவந்ததை சரியாக சொன்னதற்கு. ஐபோனில் எடுத்திருக்கிறார்கள் படத்தை. இப்படத்தில் எடிட்டிங், கேமரா, லைட்டிங், ரீ ரெக்கார்டிங், டப்பிங், வசனம்எதுவுமே இல்லைஎதுவுமே தேவையும் இல்லை. 59 செக்கனில் அசரடித்திருக்கிறது அவதாரம் டீம்.

 

https://www.youtube.com/watch?v=3mM6_ORIFpg

 

Link to comment
Share on other sites

17. அஞ்சனம்

 

ஒரு சில குறும்படங்கள் நம்மை நெகிழ வைக்கும், அப்படி ஒரு குறும்படம் தான் இது

 

'நான் இந்த உலகத்திடம் ஒன்று தான் கேட்டேன், ஆனால் அதையும் தர மறுத்துவிட்டது' என்று கண்ணீருடன் ஒருவன்.

 

அவன் கண்ணீருக்கு என்ன காரணம் என்று தொடர்கிறது படம், மரண படுக்கையில் இருக்கும் தன் தாயின் நோய்களை குணப்படுத்த முடியாமல் போராடுகிறான், இந்த வலிகளை தாங்க முடியாமல் கருணை கொலை கூட செய்ய சொல்லி ஒரு சில அதிகாரிகளிடம் முறையிடுகிறான்

 

ஆனால் யாரும் முன் வரவில்லை, இதனால் இறுதியாக அவன் எடுக்கும் முடிவு அவனை மட்டுமில்லாமல் பார்க்கின்ற நம்மையும் கண் கலங்க வைக்கிறது.

 

கருணை கொலை என்பது அவர்களால் வாழவே முடியாது என்ற நிலையில் தான் இந்த முடிவை எடுப்பார்கள், ஆனால் அதற்கான முழு வலியையும் இக்குறும்படத்தில் காட்டவில்லை என்பது தான் மிகப்பெரிய குறை.

 

அம்மாவாக நடித்தவர் இன்னும் தன் வேதனையை முகத்தில் காட்டியிருந்தால் நமக்கும் அந்த வேதனை புரிந்திருக்கும், ஆனால் இந்த குறையை மகன் தன் அழுகையில் காட்டியது உண்மையாகவே பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

 

http://www.cineulagam.com/eelatamil/reviews-tamil/short-film/100144/

 

https://www.youtube.com/watch?v=mLpzQmHphwE

Link to comment
Share on other sites

18. கராளம்

 

மகிழ்தரன் இயக்கத்தில், போதைப் பாவனை பற்றிய விழிப்புணர்வு குறும்படமாக வந்திருக்கிறது கராளம் குறும்படம்.

 

இக்குறும்படம் தொடங்கிய முதலில் இருந்து இறுதி வரை சற்று கூட திரும்பாமல் எல்லோரையும் பார்க்க வைத்துள்ளது.

 

அதற்கு முக்கிய காரணம், போதைப் பாவனை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்த அன்புமைந்தனும், தன் கதைக்கும், அதில் வரும் கதாபாத்திரத்துக்கும் உரிய நடிகனை தேர்வு செய்த இயக்குனர் மகிர்தரனும், இயக்குனர் நினைத்ததை அப்படியே ஒளிப்பதிவு செய்த பாலமுரளி ஆகிய மூவரின் பங்களிப்பே ஆகும்.

 

போதைப் பழக்கத்தை கருவாக கொண்ட சிறப்பான திரைக்கதை, கச்சிதமான எடிட்டிங், பின்னணி இசை அசத்தல்

 

http://www.cineulagam.com/eelatamil/reviews-tamil/short-film/100168

 

https://www.youtube.com/watch?v=UlTmAh0ON4A

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.