Jump to content

நம்மவர் குறும்படங்கள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பதியப்பட்டுள்ள  அநேக  படங்களை  ஏற்கனவே  பார்த்திருக்கின்றேன்

புங்குடுதீவு  ஒன்றியத்தின்

நாவலர்விருத்துக்கான போட்டிகளின் போது.

 

பல  படங்கள் வெற்றிகளைக்குவித்தவை

அத்துடன் சில  படங்கள் தகுதியிருந்தும் 

போட்டிகளினால் பின்னடந்தவை..........

 

போன  வருடம் இரண்டாவது இடத்தை

அடங்கா மதவி  பெற்றுக்கொண்டது

புலம் பெயர் அவலவாழ்வை  சொல்லி  நின்ற  படம்

இந்தியாவிலிருந்து தெரிவுக்குழு தலைவராக  வந்திருந்த 

தேசிய விருது பெற்ற  இயக்குநர் சக்திவேல் அவர்கள்

புலம் பெயர் வாழ்வு பற்றிய  அவரது அபிப்பிராயத்தை மாற்றிய  படம்...

 

தொடருங்கள் ஐயா

நன்றிகள்

எல்லோரும் பார்க்கணும்

பாராட்டணும்

அவர்களை  ஊக்குவிக்கணும்

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply

44. கறள்

 

யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு மே 31 திகதி எரிக்கப்பட்டது .அதன் நினைவு நாளான 31.05.2014 அன்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமும் ஆகும் . புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கறள் குறும்பட வெளியீடு யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு முகிலனின் முகிலனின் இயக்கத்தில் பாரதியின் நடிப்பில் 39 வினாடிகளில் எடுக்கப்பட்டிருக்கின்றது கறள். முகிலனின் ஒவ்வொரு படைப்புகளும் சமுகத்துக்கு ஏதோ ஒரு கருத்தை சொல்லுவதாகவே அமையும் அந்த வகையில் அவரது 9வது படைப்பும் நல்லதொரு கருத்தை முன்வைத்திருக்கின்றது. எமக்கு அறிவுரை கூற பலர் இருக்கின்றார்கள், அவர்கள் கூரும் அறிவுரைகளுக்கு அவர்கள் தகுதியானவர்களா என்று அவர்கள் சிந்திப்பதே இல்லை. அப்படிதான் இக்கதையிலும் வகுப்பறையில் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கையில் புகைத்தலால் உண்டாகும் தீமைககளை பற்றி வகுப்பெடுக்கின்றார், திடீரெண்டு அவர் எழுதிகொண்டிருந்த சார்க் கீழே விழுகின்றது அதை எடுப்பதற்காக ஆசிரியர் குனியும்போது அவரது பாக்கட்டில் இருந்த சிகரெட்டும் விழுகின்றது,
பின்னணி இசை மற்றும் ஒளித்தொகுப்பில் முகிலனது முன்னைய படைப்புக்களையும் பார்க்க அதிகம் கவனம் செலுத்தியிருக்கின்றார். பாரதிரின் நடிப்பு சொல்லவே தேவையில்லை, யதார்த்தமான கதாபாத்திரங்களுக்கு அருமையான தெரிவு பாரதி, நல்லதொரு செய்தியினை நச்சென்று சொல்லியிருக்கிறார்கள்.

 

https://www.youtube.com/watch?v=7z_xGY_7ysA

 

Link to comment
Share on other sites

45. மித்திரன்

 

ஜதி, தினேஷ், அனுஷா, சுபா, தனுஷன், கிரிஷ், யுவன் மற்றும் தனுஷ் ஆகியோர் நடிப்பில் டினேஷ் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் மித்திரன்.

 

இக்குறும்படம் நட்பின் புத்துணர்வை பற்றி சொல்லுவதாக அமைந்திருக்கிறது. ஐந்து நண்பர்கள் அதில் பிரபு என்பவன் போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் இணைந்து சிறைக்கு செல்கிறான். இவனுக்கு பிருந்தா என்ற காதலியும் இருக்கிறாள்.

 

சிறையில் இருந்து வெளிவரும் பிரபு, தன் காதலியை சிவா காதலிக்கிறான் என்ற விஷயத்தை அறிந்து சிவாவை கொலை செய்து விடுகிறான். ஆனால் சிவாவுக்கு பிருந்தா தன் நண்பனின் காதலி என்று தெரியாது.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104287/

 

https://www.youtube.com/watch?v=ElzAmYYkvsA

Link to comment
Share on other sites

இதில் பதியப்பட்டுள்ள  அநேக  படங்களை  ஏற்கனவே  பார்த்திருக்கின்றேன்

புங்குடுதீவு  ஒன்றியத்தின்

நாவலர்விருத்துக்கான போட்டிகளின் போது.

 

பல  படங்கள் வெற்றிகளைக்குவித்தவை

அத்துடன் சில  படங்கள் தகுதியிருந்தும் 

போட்டிகளினால் பின்னடந்தவை..........

 

போன  வருடம் இரண்டாவது இடத்தை

அடங்கா மதவி  பெற்றுக்கொண்டது

புலம் பெயர் அவலவாழ்வை  சொல்லி  நின்ற  படம்

இந்தியாவிலிருந்து தெரிவுக்குழு தலைவராக  வந்திருந்த 

தேசிய விருது பெற்ற  இயக்குநர் சக்திவேல் அவர்கள்

புலம் பெயர் வாழ்வு பற்றிய  அவரது அபிப்பிராயத்தை மாற்றிய  படம்...

 

தொடருங்கள் ஐயா

நன்றிகள்

எல்லோரும் பார்க்கணும்

பாராட்டணும்

அவர்களை  ஊக்குவிக்கணும்

 

கருத்துக்கு மிகவும் நன்றி.

 

இந்தத் திரியை ஆரம்பித்த பின்பு, இதில் இணைக்கும் குறும்படங்களை முழுமையாகப் பார்த்த பின்பே இணைக்கின்றேன். கதை.. காட்சிகள்.. வெளிப்படுத்தல்கள் என வெகு விரைவில் நிகழப்போகும் ஈழத்துச் சினிமாவின் பரம்பலுக்கு கட்டியம் கூறுகின்றன.

 

ஏற்கெனவே சில குறும்படங்களை பார்த்திருந்தாலும், இவைகளைப் பார்க்கும்போது நம்மவர்களின் திறமைகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

46. கேட்காமல் வந்த காதல்

 

48 மணி நேர குறும்பட போட்டிக்காக மாஸ்டர் ஸ்கிரீன் அணியினரால் எடுக்கப்பட்ட குறும்படம் கேட்காமல் வந்த காதல்.

 

காதல் வருவதற்கு நேரம், காலம், சூழ்நிலை எதுவும் முக்கியமில்லை என்பதை அழகாக காட்டுகிறது இக்குறும்படம். வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு இளம் ஜோடிகள் தங்கள் பழைய வீட்டை சுற்றி பார்க்கின்றனர். அப்போது கதாநாயகிக்கு தங்கள் பழைய நாட்கள் ஞாபகம் வருகிறது. பின் அவர்கள் இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது கதை. இக்குறும்படத்தில் பலம் சேர்ப்பது ஜெயதீபன் மற்றும் மிதுனாவின் நடிப்பு அழகாகவும் இருந்தது.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104217/

 

https://www.youtube.com/watch?v=2VfWicME4ck

Link to comment
Share on other sites

47. அப்பா எங்க?

 

அப்பாவின் பாசத்துக்காக ஏங்கும் சிறுவனும் அப்பாவின் வேலைப்பழுவும் முடிவில் என்னவாகிறது.. என்பது தான் இந்த கதை.

 

https://www.youtube.com/watch?v=uOTZIrjmma0

 

Link to comment
Share on other sites

48. நிர்க்கதி

 

கண்ணீர் தேசம் குறும்படத்தை தொடர்ந்து சங்கர் தேவா இயக்கத்தில் மீண்டும் ஓர் குறும்படம் நிர்க்கதி இறுதி யுத்தத்தில் மூன்று தலைமுறையின் இடப்பெயர்வும். பெண்களுக்கு ஏற்படும் நிலைமையையும் அவர்கள் கடவுளால் கூட கைவிடப்பட்டதையும் சொல்லி நிற்கிறது நிர்க்கதி.

 

அந்த சம்பவத்தை அப்படியே எடுத்துக் காட்டி இருக்குறார் இயக்குனர் சங்கர் தேவா.

 

https://www.youtube.com/watch?v=XEVYnLsg_ZQ

Link to comment
Share on other sites

49. அறவை

 

சுபர்த்தனா மூவிஸ் வழங்கும் குறும்படம் அறவை.

 

https://www.youtube.com/watch?v=Wq3SCknx2A0

 

Link to comment
Share on other sites

50. ஆழி

 

ஒரு அழகான குடும்பம். மனைவி, குழந்தை என வாழ்ந்து வருகிறான். பின் ஒரு நாள் பணம் சம்பாதிப்பதற்காக ஆஸ்திரேலியா செல்கிறான். தன் கணவன் ஆஸ்திரேலியா செல்கிறானே என்று மனைவி தன் கழுத்தில் இருக்கும் தங்க செயினை கழட்டி, இதை விற்று பணம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கணவனை வழி அனுப்பி வைக்கிறாள்.

 

மனைவி கொடுத்த பணமும் போதாது என்பதால், தன் நண்பனிடமும் பண உதவி பெறுகிறான்.

 

ஆஸ்திரேலியா செல்கிறான். கடைசியில் அவன் பணத்துடன் வீட்டிற்கு வந்து தன் மனைவி, மகளோடு சந்தோஷமாக வாழ்கிறானா இல்லையா என்பது கதை.

 

நல்ல கருத்து, சொல்ல வந்த விஷயத்தை மிகவும் தெளிவாக 11 நிமிடத்திற்குள் அழகாக சொல்லியிருக்கிறார்.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/106094/

 

https://www.youtube.com/watch?v=XYje-nbx73k

Link to comment
Share on other sites

51. திரைக்கதையில் அவள்

 

சிவலிங்கம் விமல்ராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது திரைக்கதையில் அவள் குறும்படம்.

 

எப்படியாவது ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் கணவன்.

 

ஆனால் வேலைக்கு போகாமல் படம் இயக்க போகிறேன் என்று சுற்றி வருகிறான்.

 

அந்த பெண்ணோ கடன் தொல்லை காரணமாக ஒரு நாள் கணவனிடம் வேலைக்கு போங்கள், சினிமா எல்லாம் நமக்கு சரிவராது என்று கூறுகிறாள்.

 

ஆனால் அவனோ ஆத்திரத்தில் தன் மனைவியை அடிக்க, அவளும் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே போகிறாள்.

 

அந்நேரம் பார்த்து வானொலியில் ஒரு செய்தி ஒலிக்கிறது.

இதன் பிறகு கதையில் ஒரு திருப்பம் வருகிறது.

 

நல்ல கதைக்களம் ஆனால் ஏதோ ஒன்று மிஸ் ஆனது போல் தோன்றுகிறது.

 

http://www.cineulagam.com/tamil/reviews-tamil/short-film/100195

 

https://www.youtube.com/watch?v=1cJNeIoX7qU

Link to comment
Share on other sites

52. பூம்புகார்

 

மருத்துவ வசதி, மின்சார வசதி என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் ஒரு குக்கிராமம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. அந்த கிராமத்திற்கு பெயர் தான் பூம்புகார். இந்த கிராமத்தில் வசதிகள் ஏதும் இன்றி அல்லல்படும் கிராமத்து மக்களின் இன்னல்களை பற்றி பேசுகிறது இக்குறும்படம்.

 

பூம்புகார் கிராமம் எங்கு இருக்கிறது என்று வழி கேட்டு ஒரு நபர் அலைகிறான். அதே நேரம் அந்த கிராமத்தில் ஒரு சிறுவன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் அத்தை வீட்டுக்கு செல்கிறான். அப்போது அவன் கண்டிராத சில பொருள்களையும் காண்கிறான். மின் விளக்கு, தொலைக்காட்சி போன்ற பொருட்கள் நம் நகரத்தில் ஏன் நம் கிராமத்தில் இல்லை என்று தன் தந்தையிடம் குடைந்து குடைந்து கேட்கிறான்.

 

ஊருக்கு திரும்பியதும் அவன் மின்சாரத்தை பற்றியே கனவிலும் காண்கிறான். இந்த மனநிலையில் இருக்கும் அச்சிறுவன் எண்ணம் நிறைவேறுகிறதா? இல்லையா என்பது கதை.

 

முதலில் இயக்குனர் விமல்ராஜுக்கு எமது பாராட்டுக்கள், அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் கிராமத்தை நம் கண்முன் காட்டியிருக்கிறார்.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/103472/

 

https://www.youtube.com/watch?v=DmOaNFhXw24

 

Link to comment
Share on other sites

53. என்னுள் பசி

 

https://www.youtube.com/watch?v=dvIvX9m6-08

Link to comment
Share on other sites

54. இணையத்தளம்

 

https://www.youtube.com/watch?v=zTrH5fa1GeA

Link to comment
Share on other sites

55. ஈரம்

 

https://www.youtube.com/watch?v=Efgs4SfbJkk

Link to comment
Share on other sites

56. மாயை

 

https://www.youtube.com/watch?v=mfiOmGEUjcc

Link to comment
Share on other sites

57. தொடரி

 

மதிசுதாவின் இயக்கத்தில் தயாரான 'தொடரி' குறும்படம் 'பத்து சோடி கால்களும் ஒரு சோடி கைகளும் மாத்திரம் பயன்படுத்தி எவருடைய முகமும் தெரியாதபடி வித்தியாசமாக எடுக்கப்பட்டதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.   அத்துடன் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட குறும்படமாகும்.

 

https://www.youtube.com/watch?v=tiRhVCeDkIY

 

Link to comment
Share on other sites

58. என்னத்த சொல்ல

 

30 செகன்டுகளில் என்னத்த சொல்ல முடியும் என்று நாம் சொல்வது வழக்கம் தான். ஆனால் முப்பது செகன்டுகளில் ஓர் இளைஞனின் நிலைமையை அழகாக சொல்லியிருக்கிறது என்னத்த சொல்ல குறும்படம்.

 

ஈழத்தில் இருந்து வெளிநாட்டுக்கு வேலை காரணமாக செல்லும் தமிழர்களின் கஷ்டத்தை அருமையாக சொல்லி இருக்கிறது இக்குறும்படம்.

 

30 செகண்டில் இக்குறும்படம் அமைந்திருப்பது வியப்பாக இருக்கிறது.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/102767/

 

https://www.youtube.com/watch?v=p2T3AlIJr6o

Link to comment
Share on other sites

59. சில நிஜங்கள்

 

சில நிஜங்கள் குறும்படத்தை இயக்கியவர்கள் என்னதான் கூற வருகின்றனர் என்பது தெரியவில்லை.

 

கணவன், மனைவி, மகன் என்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். தன் மகனுக்கு கார் வாங்கி தருகிறேன், வீடு வாங்கி தருகிறேன் என்று சொல்லும் தந்தை.

 

பிறகு அதனை நிறைவேற்ற முடியாமல் போக தன் மனைவியிடம் கதை முழுவதும் திட்டுவாங்குகிறார். இவ்வளவு தான் கதை.

 

புனிதமலர் கதை முழுவதும் தன் கணவனை திட்டி தீர்க்கும் பெண்ணாக அருமையாக நடித்திருந்தார்.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/102311/

 

பகுதி 1

https://www.youtube.com/watch?v=UGP7MQynYuI

 

பகுதி 2

https://www.youtube.com/watch?v=78Bz7x_oCks

 

பகுதி 3

https://www.youtube.com/watch?v=7jfT5_IUZzI

 

 

பகுதி 4

https://www.youtube.com/watch?v=eY5l5vl9FRo

 

Link to comment
Share on other sites

60. காதல் தினம்

 

https://www.youtube.com/watch?v=U2axJrZ70i4

Link to comment
Share on other sites

61. பயமா

 

இத்தாலியிலிருந்து வெளியாகியுள்ள குறும்படம் “பயமா”.

இத்தாலியின் பலெர்மோ நகரிலிருந்து வேறிடம் சென்ற இளைஞன் ஒருவன் பதினைந்து வருடங்களின் பின்னர் திரும்பவும் ஊருக்கு வருகிறான். விமான நிலையத்திலிருந்து அவனை அழைத்து வரும் அவனது நண்பன் ஒருவன் அன்று இரவு நண்பர்களுடன் ஒரு பார்ட்டிக்கு ஒழுங்கு செய்திருப்பதாகவும் இவனையும் வருமாறு அழைப்பு விடுத்து செல்கிறான்.

 

அழைப்பை ஏற்று இரவு அவர்கள் சொன்ன இடத்திற்கு காரில் சென்றுகொண்டிருக்கிறான் இந்த இளைஞன். வழியில் தன் நண்பன் ஒருவனை சந்தித்து அவனையும் தன் காரில் அழைத்து செல்கிறான்.

அவனோ நண்பர்கள் கூடும் இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது என கூறி இவனை ஒரு காட்டுக்குள் அழைத்து செல்கிறான். காட்டுக்குள் நண்பர்களை நீண்டநேரம் காணாததால் அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பேசும்போதுதான் தன்னை அழைத்து வந்த நண்பன் சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டான் என தெரியவருகிறது.

 

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சிறிய திருப்பம் ஒன்றோடு சொல்லியிருக்கிறார்கள். நல்ல கதைக்கருவும், அதுக்கேற்ற நல்ல திருப்பத்தையும் வைத்தது பாராட்டுக்குரியது. அதை சிறப்பாக செய்த இயக்குனர் ஜெபநாதனுக்கு பாராட்டுக்கள். ஒளிப்பதிவும் பாராட்டும்படி உள்ளது.

 

https://www.youtube.com/watch?v=uhDdxOu3X0c

 

Link to comment
Share on other sites

62. FEB 17?

 

காதலர் தினத்தை முன்னிட்டு தினேஷின் Feb 14?  என்கின்ற குறும்படம் வெளியாகி உள்ளது..! EElam Brothers வழங்கும், திரை கதை, இயக்கம், எடிட்டிங், முக்கிய கதாபாத்திரம் தினேஷ் . இவரின் முதல் குறுந்திரைப்படம் ஆகும்.

 நாட்டின் சூழ்னிலை கருதி, பொருளாதாரத்தால் தள்ளப்பட்ட ஓர் இளைஞனின் வெளிநாட்டு வாழ்க்கை, எதையும் கருத்தில் கொள்ளாமல்,வயசு எங்கும் காதலில் விழுந்து விடுகிறார், தொலைபேசி மூலம் மட்டும் காதல் தொடர்கிறது. காதலர் தினமாகிய Feb 14  அன்று காதலியை சந்திக்க போகின்ற சமையத்தில் யாரும் எதிர் பாரத சம்பவம் ஒன்று நடக்கிறது.

 கவனக்குறைவாலும், மனிதாபமற்ற முறையில் அளவுக்கும் மிஞ்சிய காதலின் எதிர்பார்ப்புகளினாலும், விபரித ஆபத்துக்கு உள்ளாக்கப்படுவதை இரண்டே நிமிடங்களில் காட்சியமைத்து நகர்த்தியிருக்கிறார், இக் குறும்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் டினேஷ் அவர்கள்.

நீண்ட உரையாடல்கள், பொறுமையை சோதிக்கும் காட்சியமைப்புகள் என்று இழுத்து அடிக்காமல் கூற வந்த கருத்தை ஓரிரு நொடிகளில் பதிவு செய்திருக்கிறார்.

 தேவையான அளவிலான ஒளிப்பதிவும், இசையும் இப் படத்தின் பலம்.வாகனத்தில் மோதி விபத்தாகும் காட்சியமைப்பை நேர்த்தியாக எடிட் செய்திருப்பது படத்தின் இன்னொரு பலம்!

 

https://www.youtube.com/watch?v=lRZEUh6y2SE

Link to comment
Share on other sites

63. தூர தேசம்

 

தூர தேசம் குறும்படம் அவுஸ்த்ரேலியா வாழ் எம் கலைஞர்கள் உருவாக்கி இருக்கும் தூர தேசம் குறும்படம் இதில் பாடலாசிரியர் சுதர்ஷன் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார்.

 

அளவெட்டி சுபாகரனின் இயக்கத்தில் (அறிமுகம்) முள்ளியவளை சுதர்சனின் நடிப்பிலும் (அறிமுகம்) வெளியாகியுள்ள இக்குறும்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார் தினேஷ் படத்தொகுப்பு தீபிகா துணை நடிகர்கள் - மாலா மற்றும் சுபாகரன்.

 

https://www.youtube.com/watch?v=QjEAku3Auh4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பொம்புளை பாக்கிறது மாப்பிளை பாக்கிறது கலியாணவீடு செத்தவீடு எல்லாம் ஸ்கைப்பிலைதான் நடக்குது......இனி தாலிகட்டு என்னமாதிரியெண்டு பாப்பம்?

இணைப்பிற்கு நன்றி சோழியன்.

Link to comment
Share on other sites

இப்ப பொம்புளை பாக்கிறது மாப்பிளை பாக்கிறது கலியாணவீடு செத்தவீடு எல்லாம் ஸ்கைப்பிலைதான் நடக்குது......இனி தாலிகட்டு என்னமாதிரியெண்டு பாப்பம்?

இணைப்பிற்கு நன்றி சோழியன்.

 

கருத்திற்கு மிகவும் நன்றி!!

Link to comment
Share on other sites

64. நம்ம ஊரு

 

A.J.felicion இன் நம்ம ஊரு குறும்படத்தில் இருந்து, கோ.ரஞ்சண் சாம்சனின் இசையில், சா.சஜேந்திராவின் வரிகளில், .பிரதிப் பாடிய பாடல். இது ஒரு சிதம்பரஸ்வரம் நடனாலயத்தின் வெளியீடு.

 

https://www.youtube.com/watch?v=whFZm6HHt5M

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.