Jump to content

ஆயுத எழுத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் முகவரி சஞ்சிகை ஆசிரியர் குழுமம் தாங்கள் வெளியிடப் போவதாக தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்கள்.விரைவில் அவர்களுக்கு அனுப்பி வைப்பேன் அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்

 

சாஸ்திரியார் உங்களது புத்தகத்தை வெளியிடுவதாக முகவரி சஞ்சிகை ஆசிரியர்குழு சொல்லவில்லையாமே ? அவர்களது ஆசிரியர்குழுவில் இருக்கும் ஒருவரை முகநூலில் நீங்கள் தொடர்பு கொண்டு உங்கள் நூல கனடாவிற்கு  அறிமுகம்  செய்து தருமாறு கேட்டிருந்தீர்களாம். ஆனால் நீங்கள் உங்கள் நூலை அறிமுகம் செய்து விற்பனை செய்து தருமாறு கேட்ட நபர் உங்களது புத்தகத்தில் 3 முதல் அனுப்புங்கள் படித்துவிட்டு சொல்லாம் என சொன்னாராம். 
என்றாலும் உங்களது புத்தகத்தை கனடாவில் தங்கள் சஞ்சிகையானது வெளியிடும் எண்ணம் எதுவும் இல்லையென முகவரி ஆசிரியர்குழுவினர் தெரிவித்துள்ளனர். நீங்களாக கேட்டுவிட்டு உங்களை முகவரி ஆசிரியர்குழு அழைத்து புத்தகங்கள் கேட்டதாக பொய்யுரைத்துள்ளீர்கள். முகவரி வாசகனாகிய நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். 
சாஸ்திரி என்பவரை முகவரி ஆசிரியர் குழுவிற்கு யாரெனவே தெரியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். நீங்கள் முகநூலில் இணைத்துள்ள அந்த ஆசிரியர்குழு அண்ணருக்கு உங்களை யாரென்றே தெரியாது எனவும் கூறியிருப்பதாகவும் சொல்கிறார்கள். 
 
கனடா கருத்துக்கள உறுப்பினர்கள் முகவரி ஆசிரியர் குழுவிடம் விசாரித்தால் உண்மையை அறிய முடியும். சாஸ்திரியார் நீங்களும் முகவரி ஆசிரியர் குழுவினரின் உண்மையான கருத்தை கேட்டறிந்து சொல்லுங்கள். புலிகளின் போராட்டத்தை புலிகளை அழித்துவிட்டு பிணவிசாரணை செய்யும் உங்கள் புத்தகத்தை இன்று மட்டுமல்ல என்றும் கனடாவில் முகவரி சஞ்சிகை அறிமுகம்  வியாபாரம் செய்யப் போவதில்லை என்பதனை ஆணித்தரமாக கூறியுள்ளார்கள். 
(இவ்வுண்மையை இன்று ஸ்கைப் உரையாடலின் போது முகவரி ஆசிரியர் குழுவுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருக்கும் உறவு ஒருவர் தெரிவித்தார்)

 

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் போராட்டத்தை, புலிகளை சாத்திரியார் அழித்தாரா? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தர் இணைய அங்காடியை பார்த்தபோது சிரிப்புத்தாங்க முடியவில்லை ஆமா என்னுடைய வேங்கையன் பூங்கொடியில் பண்ணையார் என்ற சொற்பதம் வந்தபோது சுட்டிக்காட்டிய சாத்திரியா இந்த இணைய அங்காடிக்குள் தன்னுடைய நூலையும் இணைத்திருக்கிறார் ஆ?

சாஸ்திரியார் இப்படி தனக்கென்றால் படபடப்பார் சாகாரா அக்கா கண்டுக்காதீர்கள் அக்கா. கனடாவிலிருந்து வெளியாகும் முகவரி சஞ்சிகையும் தன்னை அழைத்து புத்தகம் கேட்டதா ஒரு பென்னம்பெரிய பூசணிக்காயை முன்னுக்கு கொண்டு வந்துள்ளார். நீங்களும் கனடா தானே அக்கா முகவரியிடம் ஒருக்கா கேளுங்கோ. சிரிப்பா சிரிக்கிறாங்க.

புலிகளின் போராட்டத்தை, புலிகளை சாத்திரியார் அழித்தாரா? :o

அட விடுங்க வாலிசார். ஏதோ நானும் நாலும் தெரிஞ்சமாதிரி போராட்டம் புலிகள் என்று எழுதலாமென்றால் நீங்கள் விடமாட்டியள் போல. முகவரி பத்திரிகையின் ஆள் சொன்னத்தை எழுதினனப்பா வாலிசார்: :lol:

Link to comment
Share on other sites

முகவரி சஞ்சிகை ஆசிரியர் குழு தாங்களாகவே எனது புத்தகத்தினை அறிமுகம் செய்ய கேட்டிருந்தார்கள் அவர்களை எனக்கு தெரியும்( முகவரி ஆசிரியர் குழுவுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருக்கும் உறவு ஒருவர்அல்ல .)நேரடியாக தொலை பேசியில் பேசியிருந்தேன் .அவர்களுக்கான புத்தகமும் அனுப்பி விட்டேன் இங்கு முக மூடிகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை .அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து யாராவது கனடாவில் எனது புத்தக வெளியீட்டை தடுத்து நிறுத்த முயன்றாலும் எனது புத்தகம் அங்கு வெளியிடப் படும் என்பதை அறியத் தருகிறேன் ..காரணம் யாழ் இணையத்தில் நான் எழுதத் தொடக்கி பலரால் தடுத்து நிறுத்தப்பட்ட தொடர் தான் எனது ஆயுத எழுத்து நாவலாக வெளி வந்துள்ளது ..இந்த நாவல் ஆங்கிலத்திலும் விரைவில் வரவுள்ளது ..நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக நான் வேலை செய்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ..

................

...........

நியானி: பண்பற்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

ஆயுத எழுத்து நாவல் பற்றி மலைகள் இதழில்  தமிழ்க்கவி  அவர்கள் ..

 

“ஆயுத எழுத்து“  ( நாவல் )     “ படித்ததில் புரிந்தது“ /       தமிழ்க்கவி

[ A+ ] /[ A- ]

download-21.jpg

 

 

 

 

போராட்டம் வலுவிழந்து நிற்கும் காலப்பகுதியில் வரும் ஒப்புதல் வாக்குமூலம்.1983ம் ஆண்டு தின்னவேலித்தாக்குதலோடு தொடங்கும்.கதை பரந்து விரிந்த போராட்டத்தின் பல பரிமாணங்களை விளக்குகிறது

”அப்பு ராசா வாடா போராட எண்டால் வரமாட்டாங்கள்” அவர்களை களத்துக்கு அனுப்ப சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும் கையாளவேண்டித்தான் வரும்.இங்கு அந்த காரணங்களில் சில வெளிவருகிறது.

1987க்குப்பினனரான காலத்தில் நடக்காத எதையும் புலிகள் செய்யவில்லை. இந்திய ராணுவத்தின் அனுசரணையுடன் ஆள் பிடித்தவர்களால் தமிழீழப்பிரதேசமே அரண்டு போய்க் கிடந்ததை நாம் மறக்க முடியுமா? இயக்கத்துக்கு போவதற்கு பல காரணங்கள்உண்டு.

சிலவற்றை முடிச்சவிழ்க்கிறது. ஆயுத எழுத்து. போர் பிரபலமடைந்ததே இயக்க மோதல்கள் தொடங்கியபின்னர்தான்.அதையும் புலிகள்தான் தொடக்கி வைத்தார்களா?  தனிப்பட்ட பகைகளால் நடந்த அசம்பாவிதங்கள். உயிர் நண்பா்களால் விடுவிக்கப்பட்டபுலியால், உயிர் நண்பனைக் காப்பாற்ற மனசில்லாமற் போனதும், வெட்கமற்று விரிகிறது காரணத்தோடும் காரணமேஇல்லாமலும் மனித உயிரகள் தமர் பிறர் என்றில்லாமல் காவு கொள்ளப்பட்ட விந்தை. வலக்கரத்தில் துப்பாக்கி பிடித்தபின் இடக்கரத்தால் மாலை போட்டு வீரவணக்கம் செலுத்தும்..அசகாய சூரத்தனம்..ஒருபுறம்.

பெண்கரும்புலிகளின் போ் சொல்ல முடியாத சாதனைகள்.

“வாய்விட்டு போ் சொல்லி அழ முடியாது

வெறும் வார்த்தைகளால்… உன்னை தொழ முடியாது… இவரகள் புகழ் பாட முடியாது எனற பாடலடிகளுக்கு விளக்கம் வெளியிடப் பட்டுள்ளது.

ஒருதேச விடுதலைப் போராட்டத்தின் மறுபக்கம் உடைக்கப்பட்டிருக்கிறது.அது ஆயுத எழுத்தாக வெளிவந்திருக்கிறது.

”நீதி வழங்கப்பட்டால் போதாது…நீதிவழங்கப் பட்டதாக காட்டப்பட வேண்டும்” என்றசட்டப் பழமொழிக்கமைய அதிக  நீதியை கடைப்பிடிக்க முடியாத நிலையே உலக யதார்த்தமாகும்.

இந்த நுாலின் தாத்பரியமும் அதில் வரும் ஒரு பாத்திரத்தால் பேசப்படும்.” எனது நாட்டுக்காகவும் எமது மக்களுக்காகவும்”  என்ற போர்வையில் நடந்தேறிய அராஜகங்கள்தான்..என துடைத்தெறிய முடிகிறதா பாருங்கள்.

திட்டங்களைத் தீட்டி ஏவாமல் ஏவப்பட்டவரே திட்டங்களைத் தீட்ட முடிந்துள்ளது.

“சினைப்பர் “திரைப்படத்தில் வருவது போல ” அங்க அறைக்குள்ள இருந்து திட்டம் போடுறவன்ர கட்டளைகள நாங்க நிறைவேற்ற முடியாது.   இஞ்ச என்ன சூழ்நிலை இருக்கோ அதற்கு ஏற்றமாதிரிதான் நாங்கள் செயல்பட முடியும்”

மற்ற இயக்கப் போராளிகள் பரவலாக வந்து போகிறார்கள். இயக்க மோதல்கள் மிக தெளிவாக அதற்கான துாசுக் காரணங்களுடன் விபரிக்கப்படுகிறது.மனித உயிர் நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி பந்தாடப்பட்டுள்ளது.

கதைக்கு தேவையானதற்கு மேலாகவே உடலுறவுச் சம்பவங்கள் ஏராளமாக,தாராளமாக.உள்ளது சில இடங்களில் அது தேவையானதாக உள்ளது இன்னொரு வகையில் பழைய மித்திரன் தொடர்களான ,பட்லீ, அலீமாராணி, பூலான்தேவி தொடர்களை நினைவூட்டத் தவறவில்லை. ஆடை களையும் வரை அருகிலிருந்து குறிப் பெடுக்கும்  எழுத்தாளர்களைப் போலல்லாது விடயத்தைசுருங்கச்சொல்லி விலகி விடுகிறார். சாத்திரி

கற்பனையல்ல நிஜம். என்பது சிறீசபாரத்தினம் கொலைச்சம்பவஙகளில் விழிகளைத் திறந்து வைத்திருக்கிறது

எல்லாம் சரி இப்போது எதற்காக இதையெல்லாம் வெளியே சொல்லவேண்டும். தகவல்களை வைத்துக் கொண்டிருக்க முடியாமல் தத்தளித்து கொட்டிவிட்டார் ஆசிரியா். கொடூரமான சம்பவங்கள்ஊடாக பயணிக்கும்போதும் எழுத்தில் எள்ளல் சுவை துள்ளி நடை போடுகிறது. எல்லாம் நானே என்பதான கர்வம் தொனிக்கிறது.

ஆயுத எழுத்துக்குள் மக்கள் எவ்வளவு மட்டமாக முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுபல இடஙகளில் செரிமானமாகாமல் வலிக்கிறது.அழகான இந்த ஆயுத எழுத்தை எழுதிய நபர்  இங்கு நடமாடுவது  நானல்ல,இது உங்களில் ஒருவராகவும் இருக்கலாம். ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நபர்களைப் பொருத்திப்பாருங்கள்.என்கிறார்.

இவைபற்றி இயக்கவேறுபாடின்றி எல்லோரும் கருத்துக் கூறப் போகிறார்கள். எனபது சர்வ நிச்சயம். ஆசிரியரின் தீர்க்க தரிசனம் அல்லஇது

ஏற்கெனவே தெரிந்திருந்தும் நாம் பேசாது விட்ட பல விடயங்களை உடைத்து வெளிவந்திருக்கிறது ஆயுத எழுத்து .ஒரு சுய விசாரணை கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து மீளெழுகைக்கான வழிகாட்டலாக…..நிச்சயமாக இது இருக்கவேண்டாம்.

                     •••

 

Link to comment
Share on other sites

என்னுடைய நாவல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து குலைப்பன் காச்சல் பிடித்திருந்தவர்களுக்கு .தமிழ்க்கவியின் விமர்சனம் கொஞ்சம் நிம்மதியை கொடுத்திருக்கும் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

முதல்வன் முகவரியின் வாசகனா?  எனது ஆக்கக்கங்களும் அதில் இருப்பதால் சந்தோசம் .

சாத்திரி- முகவரி தொடர்பு பற்றி நான் எழுதவிரும்பவில்லை .ஆனால் தெரியும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகவரி சஞ்சிகை ஆசிரியர் குழு தாங்களாகவே எனது புத்தகத்தினை அறிமுகம் செய்ய கேட்டிருந்தார்கள் அவர்களை எனக்கு தெரியும்( முகவரி ஆசிரியர் குழுவுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருக்கும் உறவு ஒருவர்அல்ல .)நேரடியாக தொலை பேசியில் பேசியிருந்தேன் .அவர்களுக்கான புத்தகமும் அனுப்பி விட்டேன் இங்கு முக மூடிகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை .அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து யாராவது கனடாவில் எனது புத்தக வெளியீட்டை தடுத்து நிறுத்த முயன்றாலும் எனது புத்தகம் அங்கு வெளியிடப் படும் என்பதை அறியத் தருகிறேன் ..காரணம் யாழ் இணையத்தில் நான் எழுதத் தொடக்கி பலரால் தடுத்து நிறுத்தப்பட்ட தொடர் தான் எனது ஆயுத எழுத்து நாவலாக வெளி வந்துள்ளது ..இந்த நாவல் ஆங்கிலத்திலும் விரைவில் வரவுள்ளது ..நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக நான் வேலை செய்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ..

................

...........

நியானி: பண்பற்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

 

நீங்கள் முகமூடிபற்றி கதைக்க தகுதியில்லாத ஆள். திரும்பத்திரும்ம வெருட்டி உறுட்டி புழுக வேண்டாம். உங்கள் புத்தகத்தை முகவரி சஞ்சிகை வெளியிடாது. நீங்கள் முகவரியின் ஒரு அள்ளக்கையின் கதையை கேட்டு அப்பாவித்தனமாக நம்புகிறீர்கள். உங்களை ஒரு கொசுவாகத்தான் முகவரி ஆசிரியர்குழு கருதுகிறது. ஏனெனில் எவ்வித தொடர்புகளும் இல்லாத தங்கள் பத்திரிகையின் பெயரை பயன்படுத்துகிறீர்கள் என்றுதான் தெரிவித்துள்ளார்கள்.

 

கனடாவில் உங்கள் புத்தகத்தை யாரும் வெளியிடலாம். எங்கள் தோழர் அர்சுன் வெளியிடக்கூடும் தனது செலவில். முகவரி உங்களுக்கு முகவரி தராது என்பதனை மட்டும் நம்புங்கள். ஆங்கிலத்தில் மட்டுமல்ல அரபியிலும் உங்கள் புத்தகம் வர வேண்டும். ஆனால் முகவரி சஞ்சிகை மானமுள்ள சஞ்சிகை பெயருக்காக அம்மணமாக ஓடும் உங்களுக்கு ஒருபோதும் இடம் தராது.

முகவரி ஆசிரியர்குழுவுக்கு உங்களுடன் தொடர்புகள் எதுவும் இல்லை. ஒரு அள்ளக்கைதான் உங்களுடன் கதைத்து உங்களை ஏமாற்றுகிறது.

நியாணி பண்புபற்றி இவர்களுக்கு வகுப்பெடுத்தாலும் சிலவால்களை நிமிர்த்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வன் முகவரியின் வாசகனா?  எனது ஆக்கக்கங்களும் அதில் இருப்பதால் சந்தோசம் .

சாத்திரி- முகவரி தொடர்பு பற்றி நான் எழுதவிரும்பவில்லை .ஆனால் தெரியும் .

தோழர் அர்சுன் முகவரியில் விளையாட்டுச்செய்தி எழுதும் தங்கள் செய்தியையும் வாசிக்கிறேன். விளம்பரப்பிரியர்கள் நீங்கள் வந்து சொல்லாமல் நான் வாசகன் சொல்லக்கூடாதென்று இருந்தேன். அர்சுன் முகவரி பற்றி எல்லாம் தெரிந்த நீங்கள் உண்மையை எழுதலாமே ? ஏன் சாஸ்திரி போல கள்ளமவுனம் ?

பொய் எழுதினால் உங்களையும் முகவரி துரத்திவிடும் என பயப்படுகிறீர்களா தோழர் ? சாஸ்திரி தனது தேவைக்காக முகவரி பெயரை பயன்படுத்துவதற்கு நீங்களும் துணைபோகிறீர்கள். முகவரி சஞ்சிகை சாஸ்திரி தங்கள் பெயரை பயன்படுத்துவதற்கு வழக்கு ஒன்றும் போடலாம்.ஒரு லச்சம் கனடியடொலரை கேட்டால் உங்கள் கொம்பனியிலிருந்து கொடுத்து சாஸ்திரியின் பொய்யை காப்பீர்களா ?யால்ரா போட்டு படம் ஓட்டாமல் தெரிஞ்ச உண்மையை எழுதுங்கள் தோழர் அர்சுன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10013673_634734423270130_240138312297291

 

யாயினியின் பக்கத்தில் படித்ஹதில் பிடித்தது.

Link to comment
Share on other sites

தோழர் அர்சுன் முகவரியில் விளையாட்டுச்செய்தி எழுதும் தங்கள் செய்தியையும் வாசிக்கிறேன். விளம்பரப்பிரியர்கள் நீங்கள் வந்து சொல்லாமல் நான் வாசகன் சொல்லக்கூடாதென்று இருந்தேன். அர்சுன் முகவரி பற்றி எல்லாம் தெரிந்த நீங்கள் உண்மையை எழுதலாமே ? ஏன் சாஸ்திரி போல கள்ளமவுனம் ?

பொய் எழுதினால் உங்களையும் முகவரி துரத்திவிடும் என பயப்படுகிறீர்களா தோழர் ? சாஸ்திரி தனது தேவைக்காக முகவரி பெயரை பயன்படுத்துவதற்கு நீங்களும் துணைபோகிறீர்கள். முகவரி சஞ்சிகை சாஸ்திரி தங்கள் பெயரை பயன்படுத்துவதற்கு வழக்கு ஒன்றும் போடலாம்.ஒரு லச்சம் கனடியடொலரை கேட்டால் உங்கள் கொம்பனியிலிருந்து கொடுத்து சாஸ்திரியின் பொய்யை காப்பீர்களா ?யால்ரா போட்டு படம் ஓட்டாமல் தெரிஞ்ச உண்மையை எழுதுங்கள் தோழர் அர்சுன்.

ஒரு பத்திரிகையில் ஒரு ஆக்கம் எழுதுவது விளம்பரத்திற்கு என்று நினைப்பவர்களுடன் எப்படி உரையாடுவது ?

முதலில் அருகில் பாடசாலை ஏதும் இருந்தால் எட்டி பாருங்கள் .

Link to comment
Share on other sites

முதலாவது முகவரி விவசாயி விக் உடன் ஆனா சந்திப்பின் போது உறவுகளுக்கு கொண்டுபோய் கொடுத்தேன் 

உங்களுக்கு வேலை வெட்டி இல்லாமல் அடிபடுவீர்கள் அதற்கு என்னை ஏன் சாட்சிக்கு இழுகின்றீர்கள் .

 

நல்லா அடிபடுங்கோ பார்த்து ரசிக்கலாம் வேணுமென்றால் விசிலும் அடித்துவிடுகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10013673_634734423270130_240138312297291

யாயினியின் பக்கத்தில் படித்ஹதில் பிடித்தது.

இது மோசமாய் புலிகளை விமர்சிப்போருக்கும் பொருந்தும்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மோசமாய் புலிகளை விமர்சிப்போருக்கும் பொருந்தும்தானே?

 

பொது விமர்சனம் என்பது ஒருவரின் விருப்பத்துக்கு மற்றவர் செய்வதல்ல. நாம் நேரில் எதையுமே காணாமல் இங்கு ஊடகங்களால் நாம் அறிந்து கொள்பவற்றை மட்டும் கேட்டு எம்மனதுக்கு ஏற்புடையதாக இருப்பதுபோல் இருந்தால் அதையே உண்மை என்று  நம்பி அதுவே சரி என்று வாதிடுகிறோம். உண்மையில் எம் மனச்ச்சாட்சிக்குத் தெரியும் நாம் எண்ணுவதும் நம்புவதும் சரி அல்ல என்று.அனாலும் மற்றவர்களுக்காகவும் மற்றவரிடம் எம்மைப்பற்றிய எண்ணத்தை உயர்த்தவுமே யாழ் களத்தில் மட்டுமல்ல எங்குமே பலர் நடித்துக்கொண்டு இருக்கிறோம்.

 

சரி சாத்திரி பொய் கூறுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவரும் நீண்டநாள் யாழ்கள உறவுதானே. எதற்காக  அவரை தனிப்பட விமர்சிப்பான். அதனால் நீங்கள் காண்பது ஒரு அற்ப சந்தோசம் மட்டுமே. அதுவும் சிலர் சிலருக்காகவும் பலர் பலருக்காகவும் கட்சிகட்டிக்கொண்டு ..... நினைக்கவே வேதனையாக இருக்கு. நான் யாழுக்கு வந்ததன் பின்னரே இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை பேர் யாழில் ஆர்வமாக எழுதியவர்கள் இப்ப வருவதில்லை. பொது விடயத்தில் யாரும் எதுவும் எழுதுங்கள் எதற்காக தனிமனிதர்களை ...... யாரும் திருந்தவே போவதில்லை என்பதுதான் உண்மை. :unsure: :unsure:

 

Link to comment
Share on other sites

இது மோசமாய் புலிகளை விமர்சிப்போருக்கும் பொருந்தும்தானே?

 

நிச்சயமாய் அனைவருக்கும் பொருந்தும்  இது உங்களுக்கும் பொருந்தும் எனக்கும் பொருந்தும் ..ஆளாளுக்கு பம்மாமல் நேரே விமர்சனங்களை வைக்கும் அனைவருக்கும் பொருந்தும் சுபேஸ் ..இனி உங்கள் தனி விமர்சனங்களை இங்கு வையுங்கள் நானும் வைக்கிறேன் வேணுமானால் தனி திரி திறவுங்கள் இருவர் மட்டுமே உரையாடுவோம் பகிரங்கமாக ..இப்படி நான் யாழில் பகிரங்க அழைப்பு விடுவது இது முதல் தடவையல்ல .எல்லாருமே ஓடித்தான் போயிருக்கிறாக்கள் .சுபேஷ் நீங்களாவது பகிரங்க விவாதத்துக்கு வந்து ஒரு ....ம் ....எதோ ஒண்டு என்று நிருபியுங்கள் ..கெஞ்சி கேக்கிறன் நான் ..முடியவில்லையா பொத்திக் கொண்டு போயிட வேணும்

நானும்தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதைப்பற்றி விமர்சனம் வைக்கவேண்டும்?

Link to comment
Share on other sites

புலிகளில் எந்த விமர்சனம் வைத்தாலும் அது மோசமான விமர்சனம் தான் என்பது அவர்களுக்கு .கருத்து 

புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றே இன்றும் அவர்கள் நிற்கின்றார்கள் .புலிகளின் வெற்றியும்அதுதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது விமர்சனம் என்பது ஒருவரின் விருப்பத்துக்கு மற்றவர் செய்வதல்ல. நாம் நேரில் எதையுமே காணாமல் இங்கு ஊடகங்களால் நாம் அறிந்து கொள்பவற்றை மட்டும் கேட்டு எம்மனதுக்கு ஏற்புடையதாக இருப்பதுபோல் இருந்தால் அதையே உண்மை என்று நம்பி அதுவே சரி என்று வாதிடுகிறோம். உண்மையில் எம் மனச்ச்சாட்சிக்குத் தெரியும் நாம் எண்ணுவதும் நம்புவதும் சரி அல்ல என்று.அனாலும் மற்றவர்களுக்காகவும் மற்றவரிடம் எம்மைப்பற்றிய எண்ணத்தை உயர்த்தவுமே யாழ் களத்தில் மட்டுமல்ல எங்குமே பலர் நடித்துக்கொண்டு இருக்கிறோம்.

சரி சாத்திரி பொய் கூறுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவரும் நீண்டநாள் யாழ்கள உறவுதானே. எதற்காக அவரை தனிப்பட விமர்சிப்பான். அதனால் நீங்கள் காண்பது ஒரு அற்ப சந்தோசம் மட்டுமே. அதுவும் சிலர் சிலருக்காகவும் பலர் பலருக்காகவும் கட்சிகட்டிக்கொண்டு ..... நினைக்கவே வேதனையாக இருக்கு. நான் யாழுக்கு வந்ததன் பின்னரே இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை பேர் யாழில் ஆர்வமாக எழுதியவர்கள் இப்ப வருவதில்லை. பொது விடயத்தில் யாரும் எதுவும் எழுதுங்கள் எதற்காக தனிமனிதர்களை ...... யாரும் திருந்தவே போவதில்லை என்பதுதான் உண்மை. :unsure: :unsure:

கருத்து வறட்சி உடையவர்கள் அல்லது இலேசில் உணர்ச்சிவசப்படுபவர்கள்தான் தனிமனித தாக்குதல் செய்வது. யாராயினும்/யாருக்காயினும் கருத்துக்கு கருத்தால் பதில் அளியாமல் தனிமனித தாக்குதல் செய்வது தவறு. அதை யாழ் களவிதிகளும் வலியுறுத்துகின்றன
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் இன்னும் இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை. சாத்திரியண்ணா சொல்லிவருகின்ற பலவிடயங்கள் எனக்குத் தெரிந்தவரை உண்மையென நம்புகின்றேன். அந்த இயக்கத்தின் குறுக்குவெட்டுமுகம் ஒன்றை பத்தில் ஒருவீதமேனும் இந்த நூல் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. பலர் அலறித் துடிப்பதில் இருந்து விளங்குகின்றது நூலின் வீச்சு. உண்மையில் என் போன்ற வரலாறு விரும்பிகளுக்கு இந்நூல் அல்வா சாப்பிட்டமாதிரி இருக்கும்! :D

Link to comment
Share on other sites

எதைப்பற்றி விமர்சனம் வைக்கவேண்டும்?

 

நீங்கள் தான் சொன்னது புலிகள் மீது விமர்சனம் வைப்பவர் என்று அதுக்கு நான் தயார்  ..எந்த கருத்து வறட்சியும் எனக்கு இல்லை  பசுமையாக இருக்கிறது  மேயலாம் ..யாரென்று தெரியாத முக மூடிகளோடு  விவாதித்து நேரத்தை வீணடிப்பதை விட முகம்  கட்டும் நீங்கள் இங்கு பதில் கொடுக்க தயாரா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது விமர்சனம் என்பது ஒருவரின் விருப்பத்துக்கு மற்றவர் செய்வதல்ல. நாம் நேரில் எதையுமே காணாமல் இங்கு ஊடகங்களால் நாம் அறிந்து கொள்பவற்றை மட்டும் கேட்டு எம்மனதுக்கு ஏற்புடையதாக இருப்பதுபோல் இருந்தால் அதையே உண்மை என்று  நம்பி அதுவே சரி என்று வாதிடுகிறோம். உண்மையில் எம் மனச்ச்சாட்சிக்குத் தெரியும் நாம் எண்ணுவதும் நம்புவதும் சரி அல்ல என்று.அனாலும் மற்றவர்களுக்காகவும் மற்றவரிடம் எம்மைப்பற்றிய எண்ணத்தை உயர்த்தவுமே யாழ் களத்தில் மட்டுமல்ல எங்குமே பலர் நடித்துக்கொண்டு இருக்கிறோம்.

 

சரி சாத்திரி பொய் கூறுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவரும் நீண்டநாள் யாழ்கள உறவுதானே. எதற்காக  அவரை தனிப்பட விமர்சிப்பான். அதனால் நீங்கள் காண்பது ஒரு அற்ப சந்தோசம் மட்டுமே. அதுவும் சிலர் சிலருக்காகவும் பலர் பலருக்காகவும் கட்சிகட்டிக்கொண்டு ..... நினைக்கவே வேதனையாக இருக்கு. நான் யாழுக்கு வந்ததன் பின்னரே இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை பேர் யாழில் ஆர்வமாக எழுதியவர்கள் இப்ப வருவதில்லை. பொது விடயத்தில் யாரும் எதுவும் எழுதுங்கள் எதற்காக தனிமனிதர்களை ...... யாரும் திருந்தவே போவதில்லை என்பதுதான் உண்மை. :unsure: :unsure:

 

புலிகள் இருந்த காலத்தில் சாத்திரி என்பவருக்கு என்ன பேனை பஞ்சமா இருந்தது ?
இப்போது ஏன் இழுத்துவிடுகிறார்கள்?
 
சுய விளம்பரம் 
சுய விளம்பரம் 
சுய சுய விளம்பரம்.
 
எல்லோரும் இறந்துவிட்டார்கள். பிராபகரன் சுடும்போது நான் அருகில் நின்று பார்த்தேன் என்று இஸ்டத்தில் கதை அளக்கலாம். இதை தவிர உண்மையான நோக்கம் காரணம் எல்லாம் வேறு. அதை ஆறு அறிவு உள்ளவன் தெரிந்துகொள்வான். தெரியாதவர்களுக்கு ஆறாம் அறிவு செயற்பட தொடங்கும்வரை காத்திருப்பதே நல்லம்.
 
எதிரிகளும் 
துரோகிக்களும்தான் 
நாட்டை விடுதலை போரை காட்டிகொடுப்பர்கள்.
 
போராளிகளின் பிணங்களை புணர்ந்த சிங்களவன் எவளவோ மேலானவன்.
அவற்றை வியாபாரம் பண்ண அவன் எண்ணியதில்லை. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தயார் ..எந்த கருத்து வறட்சியும் எனக்கு இல்லை பசுமையாக இருக்கிறது மேயலாம் ..யாரென்று தெரியாத முக மூடிகளோடு விவாதித்து நேரத்தை வீணடிப்பதை விட முகம் கட்டும் நீங்கள் இங்கு பதில் கொடுக்க தயாரா ??

புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் முழுதும் வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் முழுதும் வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

 

அப்போ புத்தகம் கிடைக்கும் வரை பொத்திக் கொண்டு இருந்து விட்டு முழுதும் வாசித்து விட்டு இங்கு வந்து எழுதி யிருக்க வேண்டும் ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.