Jump to content

ஆயுத எழுத்து


Recommended Posts

சீமானுக்கும் நெடுமாறனுக்கும் தனது நூல் பிரதிகளை அனுப்பிய சாத்திரியார் அப்படியே சங்கருக்கும் மணிரத்தினத்திற்கும் ஒரு பிரதியை அனுப்பியிருந்தால் இந்நேரம் அவர்களின் படங்களிற்கு (ஆயுத எழுத்து) சாத்திரியார் கீரோவாகி சீயான் விக்ரம் சூர்யா ரேஞ்சுக்கு வந்திருப்பார்.  :D

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் விவாதத்துக்கு கேட்டது என்பது ஒரு அவியலாய் தான் இருக்கும். கவிஞரோடை விவாதித்து இருக்கலாம். கவிதையாலேயே அடித்து துரத்தி இருப்பார்.

Link to comment
Share on other sites

சாத்திரியின் நாவல் புறக்கணிப்பு எண்டு செய்தி வந்தமாதிரி .சாத்திரி பின்கதவால் தப்பியோட்டம் எண்டு யாராவது செய்தி போட முதல் நானே படத்தை போடுறது நல்லது

 

10945611_10202395570130346_4441667050452

10958048_10202395571810388_5377984256634


10947246_10202395574050444_6190226196138

Link to comment
Share on other sites

கருணாகரனின் முக நூலில்
3 h ·

ஆயுத எழுத்து வெளியீடு பற்றி
----------------------------------------------------

ஆயுத எழுத்து - புதினம் வெளியிடப்பட்ட நாளில் எனக்கு நினைவுக்கு வந்தது, 2010 ஒக்ரோபரில் தேவதைகளின் தீட்டுத்துணி - சிறுகதைத் தொகுதியை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டபோது அதைக் கண்காணிப்பதற்காக வந்திருந்தவர்களைத்தான். ஆனால், அவர்கள் நிகழ்ச்சியைத் தடை செய்ய முயற்சிக்கவில்லை. குழப்பவும் இல்லை. புத்தகம் ஒன்றை மட்டும்தான் கேட்டார்கள்.

ஆனால். ஆயுத எழுத்து வெளியீடு மற்றும் விற்பனையின் போது நடந்தவை வேறு. ஆயுத எழுத்தை எதிர்த்தவர்கள் வெளியீட்டு நிகழ்ச்சியைத் தடை செய்ய முயன்றார்கள். அதற்காக அவர்கள் சிலரை அனுப்பியிருந்தனர். அதில் ஒருவர் எனக்கும் தெரிந்தவராக இருந்தார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத்தான் வந்திருக்கிறார் என்று எண்ணினேன். நாங்கள் சேப்பாக்கம் பத்திரிகையாளர் அரங்குக்குச் சென்றபோது அந்த நண்பரைக் கண்டேன். நீண்ட காலத்திற்குப் பிறகு சந்தித்ததால் இருவரும் சுகநலன்களை விசாரித்துக் கொண்டோம். பிறகு, நிகழ்வு தொடங்க முன் உள்ளரங்கிற்கு அழைப்பதற்காக தேடியபோது அவரைக் காணமுடியவில்லை. என்னிடம் சொல்லாமற் கொள்ளாமல் போய்விட்டார். இவ்வளவுக்கும் அவர் நல்ல பண்பாளர். நீண்டகாலமாகப் பழகி வருகிறவர். ஏன் அப்படிச் செய்தார் என்று தெரியவில்லை.

ஆனால், எதிர்பார்த்த மாதிரி தடைகளோ எதிர்ப்போ நடக்கவில்லை. காவல்துறையின் காவலை மிஞ்சி வருவதற்கு தடையாளர்கள் விரும்பாதிருக்கலாம். அல்லது இந்தத் தடைக்கும் எதிர்ப்புக்கும் பிற சக்திகள் யாரும் முன்வராததால் தனித்துப் போய் நாம் தமிழர் அமைப்பினர் பின்வாங்கியிருக்கலாம். ஆனாலும் அவர்கள் எந்த இடைஞ்சலையும் தரவில்லை. கூட்டம் அமைதியாக நடந்தது.
அமைதியாக நடந்த கூட்டத்தில் ஆதவன் தீட்சண்யாவின் விமர்சன உரை மிகச் சிறப்பு. நாவலை மிக நுட்பமாக - செழுமையாக விமர்சித்தார். அதைப்போல கேர்ணல் ஹரிகரனும் சிறப்பாகப் பேசினார். ஹரிகரனையும் சிறி - சாத்திரியையும் ஒரே மேடையில் பார்த்தபோது எனக்கு உள்ளுரச் சிரிப்பு வந்தது. ஒரு காலம் ஆளை ஆள் தேடிக்கொண்டிருந்தவர்கள். ஹரிகரன் இந்திய அமைதிப்படையிலும் சாத்திரி புலிகள் அமைப்பிலும் எதிரெதிராக இருந்தவர்கள். இப்பொழுது ஒரே மேடையில் தங்கள் கடந்த காலத்தை அலசிக் கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு ஈழப்போராட்டம் பற்றியோ, ஆயுத எழுத்தைப் பற்றியோ, அங்கே என்னவெல்லாம் பேசப்படுகின்றன, ஈழப்போராட்டத்தோடும் இந்த நாவலோடும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டவர்கள்தான் இந்த அரங்கில் உள்ளனர் என்பதைப் பற்றியே தெரியாது. ஏதோ ஒரு கூட்டத்துக்கு வந்திருப்பதைப்போல வழமையாக இருந்தார்கள். ஒரு சிலர் மட்டும் கொஞசமாக விவரம் கேட்டனர். ஆனால் அவர்களும் அதைச் சரியாக விளங்கிக் கொண்ட மாதிரித் தெரியவிலலை.

நிகழ்வு முடிய என்னைச் சந்திப்பதற்காக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த வன்னி அரசு வந்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வன்னியரசுவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. பல விடயங்களைப் பற்றியும் பேசினோம். ஆதவன் தீட்சண்யா, குகன், வன்னியரசு, நான் என அங்கே ஒன்றாக நின்றது இன்னும் சந்தோசமாக இருந்தது. வெளியீடு முடிந்து எல்லோரும் சென்ற பிறகு இறுதியாக நாங்கள் வெளியேறினோம். எல்லாம் ஒழுங்கா முடிஞ்சுதா சார் என்று காவல்துறையினர் கேட்டார்கள். அவர்களுக்கும் பசி வந்திருக்க வேணும். நேரம் மதியம் ஒரு மணியாகி விட்டிருந்தது. நண்பர்கள் சாப்பிடுவதற்காக பயணமாகினோம்.

மறுநாள் புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தபோது, அங்கே ஆயுத எழுத்தை விற்க வேண்டாம் என்று யாரோ வந்து சொல்லி விட்டுப் போனதாக விற்பனையாளர்கள் சொன்னார்கள். ஆனாலும் அதையும் மீறி ஆயுத எழுத்து விற்பனையாகியது. சிலர் அதை தங்கள் மேசைக்குக் கீழும் புத்தக அடுக்குகளின் கீழும் வைத்து விற்றார்கள்.

கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட சோதனையைப்பற்றி, மாற்றுக்கருத்துகளை முன்வைப்பதற்குப் படும் சிரமங்களைப் பற்றி சாத்திரியும் நன்றாக விளங்கியிருப்பார்.

எப்படியோ ஆயுத எழுத்து இரண்டாம் பதிப்புக்கு தயாராகும் நிலைக்கு வந்து விட்டது.

 

Link to comment
Share on other sites

 

கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட சோதனையைப்பற்றி, மாற்றுக்கருத்துகளை முன்வைப்பதற்குப் படும் சிரமங்களைப் பற்றி சாத்திரியும் நன்றாக விளங்கியிருப்பார்.

 

 

 

காலம் எப்படி எல்லாம் மாறுகின்றது. சபாலிங்கத்தின் ஆத்மா இனியாவது சாந்தியடையட்டும். :(

Link to comment
Share on other sites

காலம் எப்படி எல்லாம் மாறுகின்றது. சபாலிங்கத்தின் ஆத்மா இனியாவது சாந்தியடையட்டும். :(

 

நிறைய ஆத்மாக்கள்  சாந்தி அடைய வேண்டியிருக்கு ..அது கிடக்கட்டும் ..எனது நாவலில் இந்தியப்படைகளின் பெரும்பாலான விதி மீறல்கள் படுகொலைகளையும் பதிவு செய்துள்ளேன் அத்தனையையும் மேடையில் வைத்து ஹரிஹரன் ஒத்துக்கொண்டார் ..எனது நாவலின் வெற்றியாக அதனை பார்கிறேன் .எனது நாவல் வெளியீடுக்கு ஹரிஹரனை அழைக்கிறேன் என்கிற விளம்பரத்தை பார்த்ததும் வழமை போல எம்மவர்கள் சாத்திரி றோ உளவாளி என்று கூச்சல் போடத்தான் முடிந்தது ஆனால் இந்திய இராணுவத்தின் படுகொலைகளை பதிவு செய்து விட்டு  அதனுடன்  சம்பத்தப்பட்ட  ஒரு அதிகாரியின் வாயாலேயே பொது மேடையில் தவறை ஒத்துக்கொள்ள வைக்க யாராலாவது முடிந்தால் அதனை செய்து விட்டு  இங்கு வந்து ...வேண்டாம் போது வெளியில் வந்து முழங்குங்கள்

Link to comment
Share on other sites

சோமிதரனை காலங்காத்தாலை தட்டியெழுப்பி புத்தகத்தை கொடுத்தபோது

10675738_10202347576490535_4920494438183

Link to comment
Share on other sites

நிறைய ஆத்மாக்கள்  சாந்தி அடைய வேண்டியிருக்கு ..அது கிடக்கட்டும் ..எனது நாவலில் இந்தியப்படைகளின் பெரும்பாலான விதி மீறல்கள் படுகொலைகளையும் பதிவு செய்துள்ளேன் அத்தனையையும் மேடையில் வைத்து ஹரிஹரன் ஒத்துக்கொண்டார் ..எனது நாவலின் வெற்றியாக அதனை பார்கிறேன் .எனது நாவல் வெளியீடுக்கு ஹரிஹரனை அழைக்கிறேன் என்கிற விளம்பரத்தை பார்த்ததும் வழமை போல எம்மவர்கள் சாத்திரி றோ உளவாளி என்று கூச்சல் போடத்தான் முடிந்தது ஆனால் இந்திய இராணுவத்தின் படுகொலைகளை பதிவு செய்து விட்டு  அதனுடன்  சம்பத்தப்பட்ட  ஒரு அதிகாரியின் வாயாலேயே பொது மேடையில் தவறை ஒத்துக்கொள்ள வைக்க யாராலாவது முடிந்தால் அதனை செய்து விட்டு  இங்கு வந்து ...வேண்டாம் போது வெளியில் வந்து முழங்குங்கள்

அப்ப நீங்க றோ இல்லையா பயலுக பொய் சொல்லிருக்குறாங்க  போல  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறைய ஆத்மாக்கள்  சாந்தி அடைய வேண்டியிருக்கு ..அது கிடக்கட்டும் ..எனது நாவலில் இந்தியப்படைகளின் பெரும்பாலான விதி மீறல்கள் படுகொலைகளையும் பதிவு செய்துள்ளேன் அத்தனையையும் மேடையில் வைத்து ஹரிஹரன் ஒத்துக்கொண்டார் ..எனது நாவலின் வெற்றியாக அதனை பார்கிறேன் .எனது நாவல் வெளியீடுக்கு ஹரிஹரனை அழைக்கிறேன் என்கிற விளம்பரத்தை பார்த்ததும் வழமை போல எம்மவர்கள் சாத்திரி றோ உளவாளி என்று கூச்சல் போடத்தான் முடிந்தது ஆனால் இந்திய இராணுவத்தின் படுகொலைகளை பதிவு செய்து விட்டு  அதனுடன்  சம்பத்தப்பட்ட  ஒரு அதிகாரியின் வாயாலேயே பொது மேடையில் தவறை ஒத்துக்கொள்ள வைக்க யாராலாவது முடிந்தால் அதனை செய்து விட்டு  இங்கு வந்து ...வேண்டாம் போது வெளியில் வந்து முழங்குங்கள்

 

முன்னாள் இந்திய படை அதிகாரி கரிகரன் மேடையில் தமது போர்க்குற்றங்களை ஏற்றுக்கொண்டாரா? இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஹரிகரனையும் சிறி - சாத்திரியையும் ஒரே மேடையில் பார்த்தபோது எனக்கு உள்ளுரச் சிரிப்பு வந்தது. ஒரு காலம் ஆளை ஆள் தேடிக்கொண்டிருந்தவர்கள். ஹரிகரன் இந்திய அமைதிப்படையிலும் சாத்திரி புலிகள் அமைப்பிலும் எதிரெதிராக இருந்தவர்கள்
எனக்கு கேபியையும்..கோத்தாவையும் நினைச்சு சிரிப்பு வருகின்றது....அன்று ஹரிகரன் தன்னுடைய நாட்டுக்காவும் சாத்திரி தன்னுடைய மக்களின் உரிமைக்காகவும் ஆயுதத்தால் பேசினார்கள் ...இன்று இருவரும் மேடையில் பேசுகின்றனர்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இந்திய படை அதிகாரி கரிகரன் மேடையில் தமது போர்க்குற்றங்களை ஏற்றுக்கொண்டாரா? இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதா? 

சாஸ்திரியின்ட புத்தகத்தை வாசித்திருந்து அல்லது அது பற்றி தெரிந்திருந்தும் ஒன்றாக மேடையில் அவர் அமந்திருந்தது சாஸ்திரிக்கு கிடைத்த ஒரு வித வெற்றி தானே...சீமான் போன்றோர் இந்த நூலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சாஸ்திரி எழுதி இருந்தார்.அது உண்மையோ தெரியாது!...உண்மையாயிருந்தால் அப்படி என்ன அந்த புத்தகத்தில் எழுதியிருக்குது என எதிர்க்க வெளிக்கிட்டார்கள்?...அவர்களது அமைதிப் படை பற்றியும்,அவர்கள் செய்த கொடுமைகள் பற்றியும் எழுதின படியாலா?

Link to comment
Share on other sites

அப்ப நீங்க றோ இல்லையா பயலுக பொய் சொல்லிருக்குறாங்க  போல  :D

 

நான் றோ இல்லை  றோ வோடு கள்ளத் தொடர்பு மட்டுமே உள்ளது ...எங்கடை ஆக்களுக்கு இந்த உலகத்திலை றோ ..சி ஐ ஏ  .இலங்கை( புலனாய்வு பெயர் தெரியாது )இதை விட்டால்  வேறை புலனாய்வு அமைப்புகளின் பெயரே தெரியாது ..அல்லது  வேறு நாடுகளிடம் புலனாய்வு அமைப்பு இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாஸ்திரியின்ட புத்தகத்தை வாசித்திருந்து அல்லது அது பற்றி தெரிந்திருந்தும் ஒன்றாக மேடையில் அவர் அமந்திருந்தது சாஸ்திரிக்கு கிடைத்த ஒரு வித வெற்றி தானே...சீமான் போன்றோர் இந்த நூலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சாஸ்திரி எழுதி இருந்தார்.அது உண்மையோ தெரியாது!...உண்மையாயிருந்தால் அப்படி என்ன அந்த புத்தகத்தில் எழுதியிருக்குது என எதிர்க்க வெளிக்கிட்டார்கள்?...அவர்களது அமைதிப் படை பற்றியும்,அவர்கள் செய்த கொடுமைகள் பற்றியும் எழுதின படியாலா?

 

இலக்கிய ஆர்வம் காரணமாக அல்லது இந்தியப்படையுடன் சம்மந்தப்பட்ட புஸ்தகம் என்பதனால் கரிகரன் வருகை தந்து இருக்கலாம். புஸ்தகத்தில் உள்ளது பற்றி என்ன கூறினார் என்று வீடியோவை இணைத்தால் அறியலாம். மேடையில் உட்கார்ந்தார் என்பதை புஸ்கத்தில் உள்ளவனற்றுடன் உடன்படுகின்றார் என்று எடுத்துக்கொள்ள இயலாதே. நாளை கோத்தாவும் முள்ளிவாய்க்கால் பற்றி யாராவது எழுதும் புஸ்தக வெளியீட்டில் கலந்து கொள்ளலாம். அதற்காக, கோத்தா குறிப்பிட்ட புஸ்தகத்தின் உள்ளடக்கத்துடன் உடன்பட்டு போர்குற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடும் என்று அர்த்தம் இல்லையே. இவ்வளவு படங்கள் இணைக்கும் சாஸ்திரி வெளியீட்டு விழாவின் வீடியோவை இணைக்கலாமே? யார் யார் என்ன கூறினார்கள் என்று இதன்மூலம் அறியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய ஆர்வம் காரணமாக அல்லது இந்தியப்படையுடன் சம்மந்தப்பட்ட புஸ்தகம் என்பதனால் கரிகரன் வருகை தந்து இருக்கலாம். புஸ்தகத்தில் உள்ளது பற்றி என்ன கூறினார் என்று வீடியோவை இணைத்தால் அறியலாம். மேடையில் உட்கார்ந்தார் என்பதை புஸ்கத்தில் உள்ளவனற்றுடன் உடன்படுகின்றார் என்று எடுத்துக்கொள்ள இயலாதே. நாளை கோத்தாவும் முள்ளிவாய்க்கால் பற்றி யாராவது எழுதும் புஸ்தக வெளியீட்டில் கலந்து கொள்ளலாம். அதற்காக, கோத்தா குறிப்பிட்ட புஸ்தகத்தின் உள்ளடக்கத்துடன் உடன்பட்டு போர்குற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடும் என்று அர்த்தம் இல்லையே. இவ்வளவு படங்கள் இணைக்கும் சாஸ்திரி வெளியீட்டு விழாவின் வீடியோவை இணைக்கலாமே? யார் யார் என்ன கூறினார்கள் என்று இதன்மூலம் அறியலாம்.

நீங்கள் கேட்பதிலும் ஒரு வித நியாயம் இருக்குது. சாஸ்திரி காணொலியை இணைத்தால் ஹரிகரன் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும் ஹரிகரன் இப்படி நூல் வெளியீட்டுக்கு வந்ததே ஒரு மாற்றம் தானே

Link to comment
Share on other sites

ஹரிகரனுக்கும் சாத்திரிக்கும் எவ்வளவு உறவு இருந்திருக்கிறது ?
ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்பதிலும் ஒரு வித நியாயம் இருக்குது. சாஸ்திரி காணொலியை இணைத்தால் ஹரிகரன் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும் ஹரிகரன் இப்படி நூல் வெளியீட்டுக்கு வந்ததே ஒரு மாற்றம் தானே

பாகம் 3ஆவது 4வதை எப்படி மாற்றவேண்டும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும்.
எல்லாம் ஒரே மாற்மாத்தான் இருக்கும். 
மாத்தி மாத்தி வித்தை காட்டினால்தான் ......... கொஞ்ச பேர் என்றாலும் நம்புவார்கள்.
ஒரே மாஜிக்கை எத்தனை தடவை நீங்கள் சென்று பார்ப்பீர்கள் ??? 
 
நீங்கள் இந்தியாவில் பிரபாகரனுக்கு சிலை வைத்தால் 
திறப்பதற்கு கரிகரன் வருவார்.
 
உங்கள் இருவரையும் நம்பி பட்டவன் யாரும் வர மாட்டன் என்பது தான் கசப்பான உண்மை. 
பட்டவனுக்கு 
ஏன் ..?
எங்கே ...?
யார் ....?
 
என்பதற்கு பதில் வேண்டும். 
கூத்தாடிகளுக்கு தேவையில்லை அவர்களுக்கு அது தொழில்.
தமிழனுக்கு உயிர்!
Link to comment
Share on other sites

 
முகநூலில்
 

ஆயுத எழுத்து என்ற இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடக்கவிருந்தபோது, சில இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. அதையும் மீறி, ஜனவரி 9ல் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. அப்போது இலங்கையில் இருந்ததால், இந்த நிகழ்வு எதையும் நேரில் பார்க்க முடியவில்லை.

இலங்கையின் உள்நாட்டுப் போர் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், புலிகள் இயக்கத்தை விமர்சிக்கிறது என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணமாக கூறப்பட்டது. ஒரு படைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் எப்படி, சம்பந்தப்பட்ட படைப்பை பார்க்கவோ, படித்திருக்கவோ மாட்டார்கள் என்பதற்கு இந்த நாவல் சிறந்த உதாரணம்.

சுமார் 400 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் உண்மையில், புலிகள் இயக்கத்தின் பார்வையில்தான் இலங்கை இனப்போரின் பல கால கட்டங்களைச் சொல்லிச் செல்கிறது.

சமீப காலத்தில் நான் படித்த நாவல்களில் மிக சுவாரஸ்யமான நாவலாக இதையே குறிப்பிடுவேன். 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தோடு துவங்குகிறது கதை. அந்தக் கலவரங்களையொட்டி, புலிகள் இயக்கத்தில் சேர்கிறான் நாயகன். 2009ஆம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன், நாயகனும் இறப்பதாக நாவல் முடிகிறது.

இதற்கு நடுவில், புலிகள் இயக்கத்தில் சேரும் நாயகன் இந்தியாவுக்கு வந்து பயிற்சி பெறுவது, குண்டுகளைச் செய்வதில் தேர்ச்சி பெறுவது, பிரபாகரனின் திருமணம், அந்தத் திருமணம் இயக்கத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சி, சக போராளி இயக்கங்களுடனான மோதல், சிறிசபாரத்தினம் கொல்லப்படுவது, வெளிநாட்டிற்குச் செல்லும் நாயகன், போலி ஆவணங்களை உருவாக்குவதிலும் ஆயுதக் கொள்முதல் செய்வதிலும் வல்லவனாக உருவெடுப்பது, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை துவங்கியவுடன் வேலை இழந்து போவது என விரிகிறது இந்த நாவல்.

பொதுவாக, இனப் போர் குறித்த பதிவுகளில், இலங்கை அரசு, ராணுவம் ஆகியவை சிறுபான்மையினர் மீது நிகழ்த்தும் தாக்குதல்கள், அதன் கொடூரங்கள், அதற்கு தமிழர்களின் பதிலடி என்பதாக விரியும். ஆனால், இந்த நாவல் ஒரு விடுதலை இயக்கத்திற்குள் இருக்கும் கடைநிலை வீரனின் கதையாக விரிவதால், இயக்கங்களின் மனப்போக்கை புரிந்துகொள்ள உதவுகிறது.

போராளி இயக்கங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் நிகழ்வுகளும் அதற்கான அற்ப காரணங்களும் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு இயக்கத்தினரின் கையில் சிக்கிக்கொண்டால், அவர்கள் அனுபவிக்கும் சித்ரவதைகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இந்த நாவில் இரண்டு முக்கியமான பதிவுகளைச் செய்கிறது. ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வு ஒரு இஸ்லாமியக் குடும்பத்தின் பார்வையில் முன்வைக்கப்படுகிறது.

இரண்டாவது, இந்திய அமைதி காக்கும் படை அங்கே செய்த அட்டூழியங்கள். இந்த இரண்டு பதிவுகளுமே, வேறு புத்தகங்களில் இல்லாத வகையில் சொல்லப்படுகின்றன.
இதுதவிர, புலிகளின் சர்வேதச வலைப்பின்னல் பற்றிய தகவல்கள் ஆச்சரியத்தையும் சாகஸ உணர்வையும் தூண்டுகின்றன.

புலிகள் இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எதையும் நாவல் நேரடியாக முன்வைக்கவில்லை. ஆனால், நுணுக்கமான பல விமர்சனங்கள் புத்தகம் நெடுக விரவிக்கிடக்கின்றன.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், யாழ்ப்பாணத்தில் இருக்கும் மானிப்பாயில் பிறந்தவர். கௌரிபால் சிறி என்ற இவர், சாத்திரி என்ற பெயரில் புத்தகத்தை எழுதியிருக்கிறார். 1984ல் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த இவர் 2001ஆம் ஆண்டுவரை இயக்கத்தில் இருந்திருப்பதாகச் சொல்கிறார். தன் அனுபவத்தில் 40 சதவீதத்தையே இந்த புத்தகத்தில் எழுதியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் சாத்திரி. மீதம் இருக்கும் 60 சதவீதத்திற்காக காத்திருக்கலாம்.

இலங்கையின் உள்நாட்டுப் போர் குறித்து திறந்த மனதோடு அறிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் இதைப் படிக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

நான் றோ இல்லை  றோ வோடு கள்ளத் தொடர்பு மட்டுமே உள்ளது ...எங்கடை ஆக்களுக்கு இந்த உலகத்திலை றோ ..சி ஐ ஏ  .இலங்கை( புலனாய்வு பெயர் தெரியாது )இதை விட்டால்  வேறை புலனாய்வு அமைப்புகளின் பெயரே தெரியாது ..அல்லது  வேறு நாடுகளிடம் புலனாய்வு அமைப்பு இல்லை

 

அப்ப உங்களுக்கு றோவுடன் கள்ள தொடர்பு மட்டும்தான் இருந்ததா? நல்லது. உங்களுக்கு றோவுடன் நேரடி தொடர்பு இருந்தது என்று கருதும் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்.  :D

Link to comment
Share on other sites

நிறைய ஆத்மாக்கள்  சாந்தி அடைய வேண்டியிருக்கு ..அது கிடக்கட்டும் ..எனது நாவலில் இந்தியப்படைகளின் பெரும்பாலான விதி மீறல்கள் படுகொலைகளையும் பதிவு செய்துள்ளேன் அத்தனையையும் மேடையில் வைத்து ஹரிஹரன் ஒத்துக்கொண்டார் ..எனது நாவலின் வெற்றியாக அதனை பார்கிறேன் .எனது நாவல் வெளியீடுக்கு ஹரிஹரனை அழைக்கிறேன் என்கிற விளம்பரத்தை பார்த்ததும் வழமை போல எம்மவர்கள் சாத்திரி றோ உளவாளி என்று கூச்சல் போடத்தான் முடிந்தது ஆனால் இந்திய இராணுவத்தின் படுகொலைகளை பதிவு செய்து விட்டு  அதனுடன்  சம்பத்தப்பட்ட  ஒரு அதிகாரியின் வாயாலேயே பொது மேடையில் தவறை ஒத்துக்கொள்ள வைக்க யாராலாவது முடிந்தால் அதனை செய்து விட்டு  இங்கு வந்து ...வேண்டாம் போது வெளியில் வந்து முழங்குங்கள்

 

அப்ப என்ன ஐயா சொல்ல வாறியள்? 
புலிகள் சாத்திரியாரை இயக்கத்தை விட்டு துரத்தியது போல றோ ஹரிஹரனையும் துரத்தி விட்டார்களா என்ன?  :D
 
சாட்சாத் மேதகு சாத்திரி அவர்களே தமிழ் செல்வனின் மனைவி பிரான்சுக்கு போன நேரம் பார்த்து மிஸ். செல்வி என்கிற கதை எழுதிய உங்களை போன்ற பிறவிகள் உண்மையிலேயே புலிகள் இயக்கத்தில் இருந்திருந்தால் மகத்தான தியாகம் செய்த அந்த மாவீரர்களின் ஆத்மா ஒரு போதும் சாந்தி அடைந்திருக்காது. 
 
வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம் என்று எழுதிய சாத்திரியார் தானே ஆயுத எழுத்து என்கிற பெயரில் வியாபாரத்தை தொடங்கிய போது "வியாபாரிகளால் வீழ்ந்த" என்கிற சொல் பதத்தை நீக்கி விட்டு "மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்" என்று மாறியதன் மர்மம் என்னவோ?  :D
Link to comment
Share on other sites

நீங்கள் கேட்பதிலும் ஒரு வித நியாயம் இருக்குது. சாஸ்திரி காணொலியை இணைத்தால் ஹரிகரன் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும் ஹரிகரன் இப்படி நூல் வெளியீட்டுக்கு வந்ததே ஒரு மாற்றம் தானே

 

எது எப்படி இருந்தாலும் ரதியக்கா தேம்ஸ் நதிக்கைரையில் இருந்து கொண்டு இப்படியெல்லாம் எழுதுவதும் ஒருவித மாற்றம் அல்லவா?  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கேட்பதிலும் ஒரு வித நியாயம் இருக்குது. சாஸ்திரி காணொலியை இணைத்தால் ஹரிகரன் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும் ஹரிகரன் இப்படி நூல் வெளியீட்டுக்கு வந்ததே ஒரு மாற்றம் தானே

 

சாஸ்திரியின் புஸ்தகவெளியீடு இரகசியமாக ஒன்றும் நடைபெறவில்லையே. அப்படியாயின், புஸ்தகவெளியீட்டில் கரிகரன் என்ன கூறினார் என்பதை ஆதாரத்துடன் வீடியோவாக இணைப்பதில் என்ன தயக்கம்? ஆளுக்கு கையிலொரு செல்லுடன் திரியும் இந்தக்காலத்தில் வீடியோ எடுக்க முடியவில்லை என்று மட்டும் கூறவிட்டால் சரி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆயுத எழுத்து நாவல் விமர்சனம் . அம்ருதா இதழில் ..கோமகன்

6:30 AM Posted by Siva Sri No Comment

 என் பார்வையில் ஃ ( ஆயுத எழுத்து )

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை. அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ??? என்று ஓர் கேள்வியை நான் எழுதிய " சின்னாட்டி " என்ற சிறுகதையில் எழுப்பியிருந்தேன். நாங்கள் எப்பொழுதுமே  உண்மையைவிடக்  கற்பனையில்  மிகுந்த ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றோம் . உண்மையைவிடப் பொய்தான்  மிகவும்  உண்மையாகத் எங்களுக்குத் தெரிகிறது. கற்பனைகள் என்றுமே  பலவகைகளில்  எங்களுக்கு திருப்தியைக் கொடுக்கின்றன .எங்களுடைய கற்பனைகள்  எங்கள் அகங்காரத்திற்கு  திருப்தியை  அளித்துக் கொண்டிருகின்றது. இன்றைய இலக்கிய  வெளியில் பெரும்பாலானவர்கள் உண்மைகளை பேசாது விடுகின்றனர். உண்மை பேசுவோர் பேசுவது உண்மை என்று தெரிந்திரிந்தும், இந்தப் பெரும்பாலானவர்கள் வெறும் கற்பனை வடிவங்களுக்கே   முண்டு கொடுக்கின்றனர் .

இவர்கள் உண்மைகளைப் பேசுவோரை கள்ளத்தனமாக ரசித்து அவர்களை  ஓர் செப்படிவித்தைக்காரர்கள் போல் பார்க்கின்றார்கள். ஆனால் உண்மை பேசுவோரை ஓர் பேசுபொருளாக இவர்கள் அங்கீகாரம் கொடுக்கத்தயாரில்லை. இந்த உண்மைகள் பேசுவோரை பெரும்பாலானவர்கள் இழிசனங்களாக, தீட்டுப்பட்டோராக கருதுகின்ற வேளையில், பிரான்ஸின் தென்கிழக்கு மூலையில் இருந்து உண்மைகளின் சத்தியாவேசம் ஆயுத எழுத்தாகப் பீறிட்டுப் பாய்கின்றது. உலகாளாகிய அளவில் ஆயுத மொழிக்கு ஒரேயொரு மொழி தான் உண்டு. அதுதான் கொலை. ஆயுத மொழிகள் என்றுமே கொலைகளுக்கான காரண காரியங்களை பொதுவெளிகளில் ஆராய முற்படுவதில்லை .ஆனால் காலம் எப்பொழுதுமே ஒரே திசையிலும் ஒரே நேர் கோட்டிலும் பயணம் செய்வதில்லை .

அதன் சுழற்சியில் அகப்பட்ட ஆயுத மொழிகள் கடந்து வந்த பாதையில் இருந்த உண்மைகளை பேச ஆரம்பிக்கின்றன. அதன் தொடர்ச்சியே சாத்திரி எழுதிய ஆயுத எழுத்து என்று எண்ண இடமுண்டு.
எமது இனம் கடந்து வந்த விடுதலைப் பாதையில் யாழ்ப்பாணியம் தனது வசதிக்கேற்ப ஏறத்தாழ 35 க்கும் மேற்பட்ட போராளிக்குழுக்களை உருவாக்கியிருந்தது. ஆரம்பத்தில் பல கணக்குத்தீர்ப்புகளின் பின்னர்  அவன் சார்ந்த போராளி அமைப்பே தமிழினத்தின் விடுதலைக்காக ஏகபோக உரிமையை எடுத்துக்கொண்டது.   இந்த  அமைப்பின் போராளிகள் தாய் மண்ணிலும் உலகின் பல பாகங்களிலும் நீக்கமறக் கலந்து இருந்தனர். இவர்கள் விட்ட தவறுகள், சீர்கேடுகள் சகலதும் எவ்வாறு  அதன் தலைவரை மட்டுமல்ல, தமிழ் இனத்தின் தலைவிதியை தமிழின் இறுதி எழுத்தான அகேனத்துக்கு  கொண்டு சென்றது என்பதை சல்லடை போட்டு விபரிக்கின்றது ஆயுத எழுத்து. இந்த நாவலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம்.

01 தாயகத்தில் நடைபெற்ற ஆரம்பகால நடவடிக்கைகளும், அதன் தொடர்ச்சிகளும்.
02 சர்வதேச வலைப்பின்னலில் நடைபெற்ற இரத்தத்தை உறைய வைக்கும் சம்பவங்கள் .
முதல் பகுதியில்  தாயகத்தில் இருந்த போராளிகள்  எவ்வாறு சனங்களுடன் நடந்து கொண்டார்கள் ?? சனங்கள் எவ்வாறு அவர்களுக்கு ஆதாரசுருதியாக இருந்தார்கள்??  பின்னர் அதே சனங்கள் எப்படி அவர்களுக்கெதிராகத் திசை மாறினார்கள் ?? என்பதைக் குறிப்பாக இஸ்லாமியர்களது "ஓர் இரவு புலப் பெயர்வு" உரைகல்லாக நாவலில் ஓடுகின்றது. அந்த பகுதி மனத்தைக் கனக்க வைக்கின்றது. நாங்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றோம் என்று என்மீதே எரிச்சல் பட வைத்தது. அன்றைய புலப்பெயர்வு தங்களுக்கும் வருங்காலத்தில் நடைபெறும் என்பதையும்,  போராளிகளின் இந்த நடவடிக்கைக்கு முண்டு கொடுத்துக்கொண்டும் அந்த அப்பாவி  இஸ்லாமியர்களை வேடிக்கை பார்த்த அந்த சனங்கள் அறிந்திருக்கவில்லை என்பதை நாவல் மறைமுகமாகச்  சுட்டி நிற்கின்றது.

மேலும் இந்திய அமைதிப்படை வருகையும் அதனுடனான முறுகல் நிலையும்,  அதனுடைய  செயற்பாடுகள் பற்றியும் வரும் பகுதியானது நாவலுடன் ஒட்டாது கட்டுரைத்தனமையாக துருத்திக்கொண்டு இருக்கின்றது.  இருந்த போதிலும் , " ஈழத்தில் பல்லாயிரம் குடும்பங்கள் யாரோ ஒருவரை இழந்து கதறினார்கள். எங்கள் கதறல்கள் யாவுமே அவர்களின் தேசத்தின் காற்றிலேயே  கரைந்து போனது ; யார் காதிலும் விழவில்லை. " (பக்கம் 182) என்று  இந்திய அமைதிப்படையின் செயற்பாடுகளைப்  நாவலாசிரியர் ரத்தினச் சுருக்கமாக வாசகர் மனதில் பதியவிட்டிருப்பது நாவலாசிரியரின் சொல்லாட்சியை படம் பிடித்துக்கட்டுகின்றது.

நான் ஏலவே கூறிய முதல் பகுதியில், யதார்த்தங்களை அறியாது ஆயுத மனநோய் பிடித்த நிலையில் இயக்க முரண்பாடுகள் எவ்வாறு  போராளிகளால் கணக்குத் தீர்க்கப்பட்டது என்பதை விபரிக்கின்ற இடத்தில் என்னையறியாது கண்கள் கலங்குவது தவிர்க்க முடியாது போகின்றது. அதிலும் ஓர் இடம் என்னை மிகவும் பாதித்தது. அந்த இடம் பின்வருமாறு நாவலில் விரிகின்றது,
" அதுவரை அவன் கிச்சானின் செய்கைகளை உற்றுப்பார்த்து கொண்டிருந்தவன் அவனது பேச்சு ,சுட்டித்தனம் ,எதையாவது சொன்னால் பட்டென்று பதில் சொல்லும் திறமை பிடித்திருந்தது .சைகைமூலம் ஜும்கலியிடம் "யாரது" ? என்று கேட்டான் .  அவனின் பெயர் இஸ்மாயில் .அப்பா ஆரோ பாக்கிஸ்தான் வியாபாரியாம். இவன் பிறந்ததோடை அவன் விடுட்டுப்போய்விட்டான் ?அவன்ரை அம்மா வேறை கலியாணம் கட்டிப் போயிட்டாளாம் .இவனைத் துரத்தி விட்டுட்டாங்கள் .இவன் போய் ஒரு தேத்தண்ணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான் .ஒருநாள் இவன்ரை குளப்படி தாங்காமல் முதலாளிக்காரன் இவனுக்குப் பிடரியிலை ஒண்டு போட,இவனும் சுடுதண்ணியாலை முதலாளிக்கு எத்தி போட்டு  ஓடியந்து எங்களோடை வந்து சேந்திட்டான் .இப்பதான் 11 வயதாகுது டிரெயினிங்குக்கும் அனுப்பேலை இங்கே முகாமிலை வேலையள் செய்யட்டும் எண்டு விட்டிருக்கிறன் .நல்ல கெட்டிக்காரப் பெடியன் .அதை விட நல்லாய் டீ போடுவான் .இங்கேயிருந்தே படிக்கிறான் " என்று சொல்லி முடித்தான் ஜும்கலி .

பக்கம் ( 289 - 290 ).
சில விசையங்களைக் கதைத்துவிட்டு ஜும்கலி புறப்படும் போதுதான் அவனுக்குக் கிச்சானின் ஞாபகம் வந்ததால் அதைப்பற்றி விசாரித்தான் " அது வேறை கதையடா !" என்றபடி தொடங்கினவன் , தெரியும்தானே மச்சான் .இயக்கம் உள்ளை ஜிகாத் புகுந்துட்டுதெண்டு எல்லா சோனகரையும் களையெடுப்பு நடத்தினது .அண்டைக்கு கரிகாலன் முகாமுக்கு வந்தவன். அவனுக்கு கிச்சான் டீ கொண்டு போய் குடுத்தவன் " என்று சொல்லத் தொடங்கினான் .

டீ யை வாங்கிய கரிகாலன் அவனை உற்றுப் பார்த்திட்டு " டேய் நீ துலுக்கன் தானே ?" கிச்சான் பேசாமல் தலையை குனிந்தபடி நிக்க , முகாம் பொறுப்பாளராக இருந்த குமணனை கூப்பிட்ட கரிகாலன் , டேய் இவனை கொண்டு போ ........... கொண்டுபோய் போடு " என்று கத்தினான் .
அவன் தயங்கியபடி " அண்ணை கிச்சான் சின்ன வயசிலை இஞ்சை வந்துட்டான். அதைவிட அவன் இஞ்சை வந்ததிலை இருந்து வெளியாலை ஊருக்குள்ளை போறேல்லை .இவனுக்கும் ஜிகாத்துக்கும் தொடர்பு ஒண்டும் இருக்காது எண்டு எங்களுக்கு நல்லாய் தெரியும் .அதுதான் அவனை ஒண்டும் செய்யேலை .பாவம் சின்னப் பெடியன் .வேணுமெண்டால் அவனை வெளியாலை அனுப்பி விடலாம்" என்றான்.

கோபத்தில் கரிகாலன் " டேய் நான் சொன்னதை செய் என்று கத்தினான்.
ஆனால், குமணன் கிச்சானுக்காக  மீண்டும் வாதாடிப்பார்த்தான் .ஒரு பிரயோசனமும் இல்லை ." அவனைக் கொண்டு போய் கிடங்கு வெட்டச் சொல்லு , நானே வந்து போடுறன் " என்று கரிகாலன் கறாராகச் சொல்லி அனுப்பி விட்டான் .அதுவரை பேசாமல் தலையைத் தொங்கப் போட்டபடி நின்று கொண்டிருந்த  கிச்சான் ,பேசாமல் குமணனுக்கு பின்னாலை நடந்து போனான் . பிக்கானையும் மண்வெட்டியையும் எடுத்த குமணன் முகாமுக்குப் பின்புறம் இருந்த பற்றைப் பகுதியில் கிச்சானிடம் கிடங்கை வெட்டச் சொன்னவன் , அவனுக்கு உதவியாக இன்னொருவனையும் அழைத்து கிடங்கை வெட்டச் சொன்னான். கிடங்கை வெட்டி முடித்த வியர்வையோடு மூச்சு வாங்க குமணனை கிச்சான் பார்க்க, மௌனமாக நின்ற குமணன், கரிகாலனை அழைத்துவரப் புறப்படும்போது, “அண்ணோய் ..!” கிச்சானின் குரல் கேட்டுத் திரும்பியவனிடம், “அண்ணே... எனக்கு அப்பா யாரெண்டே தெரியாது. அம்மாவும் துரத்திவிட்டா.

பிறகு எங்கேயெல்லாமே அலைஞ்சு திரிஞ்சன். ஆனா, நான் இஞ்சை வந்தாப் பிறகு உங்களைத்தான் ஒரு சகோதரமா நினைச்சு பழகியிருக்கிறன். சரியான தாகமா இருக்கு. கடைசியா உங்கடை கையாலை கொஞ்சம் தண்ணி தாங்கண்ணே” என்றதும் குமணன் கொண்டுவந்து கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்தவன், ‘‘அண்ணே, நான் இங்கே வந்தபிறகு தொழுறதைக்கூடக் கைவிட்டிட்டன். நான் ஒரு முஸ்லிம் எண்டதைக்கூட மறந்தேபோயிற்றுது. அதாலைதான் இது அல்லா தந்த தண்டனையா இருக்கும். நான் தொழுகை நடத்துறன். அண்ணே, நீங்கள் போய்க் கரிகாலன் அண்ணையைக் கூட்டி வாங்கோ" என்றுவிட்டுக் கிடங்கின் முன்னால் முழந்தாளிட்டுத் தொழுகை நடத்தத் தொடங்கினான். குமணன் கரிகாலனிடம் போய் விஷயத்தைச் சொன்னதும், அங்கு வந்த கரிகாலனின் பிஸ்டல் தொழுகைநடத்திவிட்டு நிமிர்ந்த கிச்சானின் பிடரியில் அழுத்தியது. கிச்சானின் கண்கள்  மூடிக்கொள்ளத் துப்பாக்கி குண்டைத் துப்புகின்றது. கிச்சான் கிடங்கினுள்  தலைகுப்புற விழுந்தான்."  ( பக்கம் 320 - 321 ).

இந்தப் பகுதி நாங்கள் நிறையவே வினைகளை விதைத்திருக்கின்றோம் என்பதை அப்பட்டமாகக் காட்டி நிற்கின்றது. இன்று அரபு தேசங்களில் ஜிகாதிகள் மேற்கொள்ளும் கொடுமைகளை காணொளிகளில் கண்டு மனம் பதறியும், இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் அவன் சார்ந்த நிறுவனத்தின் தலைவரின் அதேவயதையொத்த சிறுவயது மகனைக் கொன்ற பொழுது பொங்கி எழுந்த சனங்கள்  எமது தாயகத்தில் பல கிச்சான்கள் காரணமின்றி ஆயுத மொழிக்கு இரையான பொழுது கள்ள மௌனம் சாதித்ததை நாவல் எள்ளி நகையாடுகின்றது. மொத்தத்தில் முதலாவது பகுதி எனக்கு கிளீன் எஸ்ட் வூட்டின் " கௌபோய் " படங்களையே நினைவு படுத்தியது.
இரண்டாவது பாகம் பிரபல கொலிவூட் படமான ஜேம்ஸ் பொண்ட் தொடர்களையே நினைவு படுத்தியது.இரண்டாவது பாகத்தில்,  இரத்தத்தை உறைய வைக்கும் கணக்குத்தீர்க்கும் காட்சிகளும், சர்வதேச ஆயுதப் பேரங்களும் ,அதனூடாக படுக்கையறைக் காட்சிகளும் தாராளமாகவே அள்ளித்தெளிக்கின்றது.

இந்த கதை சொல்லும் உத்தியானது முதல் பாகத்தில் கட்டுரைகளை வாசித்த வாசகர்களின் மனநிலையை மாற்றியமைத்து கிளுகிளு சம்பவங்களினூடாக தான் சொல்ல வந்த செய்தியினை கச்சிதமாக நாவலாசிரியர் நகர்த்தியிருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. ஆனாலும் படுக்கையறைக் காட்சிளைத் தவிர்த்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில் அவைகள் சொல்ல வந்த செய்திகளின் வீரியத்தை இருட்டடிப்புச்  செய்து தூக்கலாகாக நிற்கின்றன. பாரிஸில் நான் வாழ்ந்த காலப்பகுதிகளில் பங்கு பிரிப்புகளில் ஏற்பட்ட முரண்களில் நடைபெற்ற இரட்டைப் படுகொலைகளை விலாவாரியாக விபரித்த ஆயுத எழுத்து, தான் சார்ந்த நிறுவனத்தின் ஆரம்ப கால உறுப்பினர் ஒருவரின் படுகொலையை எடுத்துச் சொல்லாது கள்ள மௌனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றது. ஏனெனில் அந்த உறுப்பினர் செய்த ஒரேயொரு குற்றம் தான் சார்ந்த நிறுவனத்தை விமர்சித்தது ஒன்றே .இந்த சம்பவம் நான் வாழ்ந்த காலப் பகுதியில் நடைபெற்று என்னை உலுக்கிய சம்பவமாகும் அதே வேளையில் ஆயுத எழுத்தானது இந்தியாவில் நடைபெற்ற இந்தியப்பிரதமரின் கணக்குத்தீர்ப்பு மர்மமுடிச்சுகளையும் அவிழ்க்கத் தவறிவிட்டதாகவே  எண்ண இடமளிக்கின்றது. அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட பலரால் இந்த நாவல் செம்மைப்படுத்தப்பட்டாலும், ஆங்காங்கே லகரங்களிலும், ழகரங்களிலும், இடைவெளி விடுவதிலும் ஆயுத எழுத்து தடுக்கி விழுந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. 

10246489_10202469705543685_9172321312615

இறுதியாக நாவலில் வருகின்ற கதை சொல்லியான " அவன் "  இறுதியில் கார் விபத்தில் அகால மரணமானதை இரண்டு விதமாகப் பார்க்கத் தோன்றுகின்றது. ஒன்று இன்றைய அரசியல் சூழலில் (அவன் சார்ந்த நிறுவனத்தின் தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்பது போல ) அவன் தனது வாழ்க்கையை முடித்திருக்க வேண்டும். இரண்டாவதாக, அவன் தவிர்க்க முடியாத கார்விபத்தில் அகாலமாக  இறந்திருக்க வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஆயுத எழுத்து என்பது பலரின் வயிற்றில் புளியைகரைக்கும் ஆயு(த்)த எழுத்தாகவே இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

கோமகன் சொல்லுறதில ஒரு நியாயம் இருக்கு.
சாத்திரி முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்படும்போது இலங்கையில் 
இல்லை. இங்குஇருந்த போராளிகள் உண்மையை எழுதுவார்கள்.
நான் இந்த புத்தகத்தை வாசித்தேன்.இதைப்போன்று பல இடங்களில் 
பொய்கள் புனையப்பட்டிருக்கிறது.ஆனால் பல உண்மைகளும் எழுதப்பட்டிருக்கிறது.இதன் காரணமாய் பலர் இதை உண்மை தொடர் என்று நினைக்கலாம்.  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமணன் சொல்லுறதில ஒரு நியாயம் இருக்கு.

ஐயா, பெயரை இப்படி மாற்றிவிட்டீர்களே! எனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. :lol: பக்கத்தில் இருந்து வேலை செய்பவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றார்கள். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D எனக்கும் தான் முடியல! இன்னும் அவர் மாற்றவில்லை! எவ்வளவு லொள்ளிப் பாருங்கோவன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.