Jump to content

ஆயுத எழுத்து


Recommended Posts

ஆயுத எழுத்து நாவலை லண்டனில் இப்பொழுது பெற்றுக்கொள்ளலாம் .விலாசம் .
317 High Street North , Eastham , London , E12 6SL , phone number is 07817262980..
மற்றைய நாடுகளின் விபரங்கள் விரைவில் அறியத்தருகிறேன்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 141
  • Created
  • Last Reply

நல்லதோர் வீணை செய்து - அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி....

Thursday, March 19, 2015

 

ஆயுத எழுத்து - என் பார்வையில்....

விமர்சனங்கள் என்பது இப்போதெல்லாம் கட்டணங்கள் இல்லா விளம்பரங்கள்! ‘ஆயுத எழுத்து” குறித்த பல விமர்சனங்கள் தான் ஒரு வகையில் இந்த புத்தகத்தினை எப்படியாவது வாசித்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்தினை உருவாக்கியிருந்தது.

 

பாடசாலைப் பருவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து பதினேழு வருடங்கள் கள போராளியாக பணியாற்றிய முன்னாள் போராளியான சாத்திரி என்கின்ற புனைப்பெயர் கொண்ட கௌரிபால் சிறி எழுதி திலீபன் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்த புத்தகம் கையில் கிடைத்தது முதல் இரவு பகலாக 391 + 1 பக்கத்தினை இரு நாட்களிலேயே வாசித்து முடித்து விட்டிருந்தாலும் ஏறத்தாழ இரு வாரங்களின் பின்னர் தான் இந்த விமர்சன பதிவினை எழுத ஆரம்பித்தேன். என்னுள் நிழலாக படிந்திருந்த ஏனையவர்களின்   விமர்சனங்களின் சாயல் மறைந்த பின்னர் தான் எழுத வேண்டும் என்கின்றதே இதற்கான முக்கிய காரணம். என் விமர்சனங்களை வரைய தொடங்குகின்றேன்… 

index.jpg

இந்த நூலின் ஆசிரியர் “என்னுரை”யில் குறிப்பிட்டுள்ளதன் படி 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியினை தொடக்கமாக வைத்து தான் கேட்ட, அறிந்த, நேரடியாக தொடர்புபட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருப்பதாலோ என்னவோ “அவன்” என்கின்ற பெயரற்ற உயர்தரம் படிக்கின்ற இளைஞனின் பாத்திரமாக ஆரம்பித்து அவனை போராளியாக்கி வெளிநாட்டு கட்டமைப்பில் பணியாற்றுபவனாக்கி இறுதிவரை “அவன்” ஆகவே நகர்த்தி முடித்திருக்கின்றார். ஓரெழுத்து பெயர் தானும் வைத்திருந்தால் “அவன்” யாராவது ஒருவரது சாயலாகவோ அல்லது அடையாளமாகவோ ஆகியிருப்பான் என்று சாமர்த்தியமாக நகர்த்தியிருக்கின்ற சாத்திரிக்கு சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்.  ஆனால் தொடர்ந்து “அவன்” ஐ தொடர்ந்தால்  “அவன்” இந்து சமயத்தவன், யாழ்ப்பாணத்தவன், உயர்சாதிக்காரன், படித்த குடும்பத்திலிருந்து வந்தவன் என்கின்ற அடையாளங்களை நாம் குறித்துக்கொள்ளலாம்.

 

சராசரி குடும்பத்தின் அதிகாலை நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கின்ற முதல் அத்தியாயம் 83 இன் தமிழ் சமூகத்தின் அன்றாடம் போலவே அடுத்த அத்தியாயத்திலேயே “கண்ணிவெடி”க்கு இலக்கான அவலமொன்றுக்கு போய் நின்றுவிடுகின்றது. கூடவே இத்தகைய வன்முறைகள் இளைஞர்களிடம் தோற்றுவித்திருந்த சிந்தனை விதைப்பினை பின்வரும் வரிகளில் கொடுத்து விடுகின்றார் சாத்திரி. அந்த விதை “அவன்” உள்ளும் விழுந்து விடுகின்றது.

..அது மாகியம்பதியுடன் மட்டுமே முடிந்துவிட்ட துயரக்குரல் அல்ல. தமிழர்கள் வாழும் பகுதிகள் எங்குமிருந்து ஒலிக்க ஆரம்பித்தது. அது முடிவு இல்லாத மரணக்குரலாக நீண்டு கொண்டிருந்தது. எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலிருந்தும் மரணக்குரல்கள் எழுந்தன. கொழும்பிலிருந்து மரணச்செய்திகள் வந்தன. மலையகம், அநுராதபுரம் என எல்லா இடங்களிலிருந்தும் படுகொலைச்செய்திகள் வந்தன. மரணம் மட்டுமே செய்தியானது…….. இவையெல்லாம் என்ன தடுக்க முடியாதா? அடிக்கிறவனைத் திருப்பி அடிக்க முடியாதா? …. முடியும் என்றனர் ஊரிலுள்ள சில இளைஞர்கள். “நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பத்தான் அவங்களுக்குப் புத்தி வரும்” என்றனர். அவனும் முடிவெடுத்தான் இயக்கத்தில் சேரலாம் என.

அடுத்த அத்தியாயங்களில் “அவன்” இன் அண்ணன் வீட்டுக்கு வரவில்லை என்டு வீடு கலங்கிவிடுகின்றது. இறுதியில் இயக்கமொன்றில் சேர்ந்து விட்டிருக்கும் தகவலும் கிடைக்கின்றது. அந்த அத்தியாயத்தில்

“எல்லாம் உன்ர பிள்ளை வளர்க்கின்ற விறுத்தம்” என அப்பா அந்த ரணகளத்திலும் புறுபுறுத்துக்கொண்டிருந்தார். எனும் வரிகள் அன்றைய.. இன்றைய என்றைய நிலையிலும் ஒரு தமிழ்க் குடும்பத்தில் “பிள்ளை வளர்ப்பு” என்கின்றது எப்படி ஒரு தாயை மட்டும் சார்ந்து விடுகின்றது என்பதையும் சுட்டி நிற்கின்றது.

 

பின்வந்த பக்கங்களில் குடும்பத்திலிருந்து சமூகத்திற்கு பாய்ந்து விடுகின்றது வரிகள்… அல்லது “அவன்” ஐ நகர்த்த வேண்டிய தேவை கருதி பயணிக்கின்றது.

 

அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்புக்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டுப் போய்க்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாணச் சமூகம். அது எப்போதும் சாதி, கல்வி இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடை போடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர்சாதிக்காரனாகவும், கல்வி கற்றவராகவும் இருந்தார். (பக்கம் - 25)

 

வரிகளிலேயே “யாழ்ப்பாணச் சமூகம்” குறித்து ஆழமாகவும் அர்த்தமாகவும் சொல்லிவிடுகின்றார் நூலாசிரியர். “ஈழபோராட்டம்” என்பது பெரும்பான்மை – சிறுபான்மை இரண்டுக்குமிடையிலானது மட்டுமல்ல சாதிகளுக்கும் இடையிலானதும் கூட என்றும் ஆக யாழ்ப்பாணத்தவருக்கு விடுதலை உணர்வு என்பதும் கூட சாதியடிப்படையிலானதொன்றானதாக தான் இருந்திருக்கின்றது என்பதை நிறுவிவிட்டிருக்கின்றார் சாத்திரி.

 

“பெண்ணுரிமை” குறித்து பேசும் போது “புலிப்பெண்கள்” குறித்து பேசாதவர்கள் இல்லை எனலாம். ஆனால் ரெலோவில் இணைய வந்த பெண்களை தமிழ்நாட்டில் இடைநடுவே விட்டுவிட்டு ரெலோ ஓடிவிட விடுதலைப்புலிகள் அடேல் தலைமையில் பராமரித்து பயிற்சியளித்திருக்கின்றார்கள் என்கின்ற விடயம் எனக்கு புதியதொன்று. கூடவே புலிகளின் உறுப்பினர் காட்டிய பாலின வேறுபாட்டினையும் மேற்கோள் காட்டியிருக்கின்றார் ஆசிரியர் வரும் வரிகளில்……

 

…இவன் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாரில் இறங்கிய போது, இந்தியாவிலிருந்து பெண்கள் அணியினர் பயிற்சி முடித்து கடல் வழியாக மன்னாரில் இறங்கியிருந்தார்கள்…… இயக்கத்தின் முதலாவது ஆயுதப்பயிற்சி பெற்ற பெண்கள் அணி அது………. மன்னாரில் பெண்கள் பயிற்சி முடித்துக் களத்திற்கு வந்த போதும், யாழ்ப்பாணத்தில் அவனது பொறுப்பாளர் பெண்களை இயக்கத்தில் எடுக்க அவ்வளவாக அக்கறை காட்டாதது அவனுக்கு ஏன் என்று விளங்கவில்லை. அவர் பொறுப்பாக இருந்த காலத்தில் பெண்கள் மருத்துவம் போன்ற பணிகளுக்குத்தான் எடுக்கப்பட்டனர். பின்னர் தீப்பொறி குழவினரின் கைக்குண்டு தாக்குதலில் பொறுப்பாளர் காயமடைந்து இந்தியா சென்ற பின்னர் தான் பெண்கள் யாழ்ப்பாணத்தில் சேர்க்கப்பட்டனர்.

 

அடுத்தடுத்து திலீபனின் அஹிம்சை போராட்டம்….. வாசிக்கின்ற ஒவ்வொருவர் முன்னும் அந்த வீரனையும் இறுதிக்கணங்களையும் நிறுத்தித்தான் கடந்து போகின்றது…..

 

“இந்தியாவிற்கு அஹிம்சையைப் பற்றி யாரும் படிப்பிக்கத் தேவையில்லை” என, பரணி ஒருநாள் உறுதியாக சொன்னான். அவன் சொன்னதை கேட்க, நம்பும்படியாகத்தான் இருந்தது. ஆனால் நடந்தது வேறு திலீபனின் உயிர் பிரிந்தது. எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதைவிட ஆற்றாமை பெருகியிருந்தது. …. திலீபனை அநேகமாக எல்லோருக்கும் பிடிக்கும். மெல்லிய…. கலைந்த தலையுடனான அந்த உருவம் நீண்ட நாட்களுக்கு இவனது கண்களின் முன் நடமாடி திரிந்தது.

 

“ஈழப்போராட்டம்” எப்பவும் “இந்தியர்களை” மறக்காது. ஆசிரியரும் சர்மாவை மறக்கவில்லை.

 

……சர்மாவின் கட்டளைகளின் படி இந்திய இராணுவம் தமிழர் பகுதிகளில் பல அழிவுகளைக் கொடுத்தபடியே முன்னேறியது. அசைந்த பொருள்களான நாய்,பூனை, ஆடு, மாடு, மனிதர்களை எல்லாம் காலாட்படை சுட்டுத்தள்ள அசையாது நின்ற கட்டடங்கள், மரம் செடி எல்லாவற்றையும் டாங்கிகள் தகர்த்தப்படி முன்னேறின.

இந்திய இராணுவத்தின் வருகை குறித்து விபரித்திருக்கின்ற சாத்திரி பெரிதாக வரிகளில் அழுத்தம் கொடுக்கவில்லை அல்லது கொடுக்க விரும்பவில்லை என்பது என் கருத்து. துரோகம் என்றால் “கருணா” என்று சொல்லித்திரிகின்றவர்களுக்கும் அதன் வெறுப்புணர்வை “கிழக்கிற்கு” கொடுத்திருப்பவர்களுக்கும் பின்வரும் வரிகளை சமர்ப்பித்து “துரோகம்” என்பதன் வரைவிலக்கணம் ஏன் கிழக்கிற்கு மட்டும் கொடுக்கப்பட்டது? என்கின்ற வினாவினையும் சாத்திரியின் வரிகளூடாக முன்வைக்கின்றேன். ஒருவன் துரோகம் தான் கிழக்கிற்கான முத்திரையாக வைத்த… வைக்கின்ற தகுதி வடக்கிற்கு உண்டா?

 

புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களிலிருந்து தப்பியோடி வெளிநாடுகளுக்கு போக முடியாமல் இந்தியாவிலும் கொழும்பிலும் தங்கியிருந்த மாற்று இயக்ககாரர்களை உள்ளடக்கிய “3 ஸ்டார்” அமைப்பை இந்திய உளவுப்பிரிவினர் உருவாக்கினார்கள்…..ஈ.என்.டி.எல்.எஃப் , ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகியவற்றினை ஒன்றிணைத்து….. யாழிலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் கொண்டு வந்து இறக்கினார்கள்.

 

மண் என்பதற்கானது தான் இப்போராட்டம் என்றால் “வடக்கு” மண்ணில் முஸ்லீம்களுக்கும் பங்கில்லையா? என்பது என்னுள்ளான கேள்விகளுள் ஒன்று. சாத்திரியின் “அவன்” உம் என் கேள்விக்குள் விழுந்து பயணிக்கின்றான். ஆசிரியர் ஒருவேளை “முஸ்லீம்களின் வெளியேற்றம்” குறித்தும் பேசவேண்டும் அல்லது 83 இல் ஆரம்பித்த பயணம் இடைநடுவே நின்று விடுமோ என்று நினைத்திருப்பார் போலும். அடுத்தடுத்த இரு பந்திகளில் கேள்வியும் விடையும் ஆக மேற்கோள் காட்டியிருக்கின்றேன். ஆனால் ஆசிரியர் என்னளவில் சரியாக பதிலளிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. (இவ்விரு பந்திகளும் வெவ்வேறு அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டவை)

 

…..சொல்லி முடித்த நலீமா கண்ணீர் வழிந்த விழிகளைத் துடைத்த படியே, “இப்ப சொல்லு எதுக்காக எங்களை வெளியேத்தவேனும்? எங்களுக்கும் கிழக்கு முஸ்லீம்களுக்கும் கூட வியாபார தொடர்போ, உறவோ எதுவும் பெயரளவில் இல்லை. முஸ்லீம்கள் என்ற ஓர் அடையாளத்திற்காகவே வெளியேற்றப்பட்டோமோ? ஏதாவது சொல்லன்” என்றாள். அவனிடம் பதில் எதுவும் இல்லை தொண்டை அடைப்பது போல் இருந்தது.

எங்கடை ஊர் மல்வத்தைச் சோனகரும் சிங்களரும் எங்கடை ஊருக்கே புகுந்து அட்டகாசம் பண்ணி வெட்டி கொத்தி எல்டீலாரையும் திரத்திட்டாங்கள்………அதிலை என்டை அம்மாவும் செத்துப்போனா. அதுதான் அவங்களுக்கு ஏதாவது செய்யவேணும் என்டு இயக்கத்திலை சேர்ந்தன். அதுவும் சும்மா சண்டையிலை செத்துப்போக விருப்பம் இல்லை. சாகிறதென்டால் ஏதாவது பெரிசா செய்திட்டு சாகவேணும். அத தான் கரும்புலிக்கு போக விரும்பினன்.” என்று விட்டு அவனையே அசையாது பார்த்தபடி நின்றாள்.

 

“ஆயுத எழுத்து” இல் என்னுள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததொரு பாத்திரம் “ரெஜினா” சிங்கள தந்தைக்கும் தமிழ் தாய்க்கும் பிறந்தவள். தன் சொந்த அவலத்தின் பழியுணர்வினால் கரும்புலியில் இணைந்தவள். “அவன்” ஆல் தெரிவுசெய்யப்பட்டு இலங்கையின் தெற்கிற்கு பயணிக்கின்றாள். முக்கிய அதிகாரிகளுடன் பழகவிடப்படுகின்றாள். கடைசியில் தற்கொலை குண்டுதாரியாகி “பச்சைக்கட்சி வேட்பாளரோடு அவரது கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்” என்கின்ற தலைப்புச் செய்தியின் நாயகியாகிப்போய்விடுகின்றாள். இங்கே “பெண்ணுடல்” என்பது போரில் மட்டும் மரணிக்கவில்லை. சிலரது “படுக்கையிலும் மரணித்திருக்கின்றது” என்பதை மறுப்பதற்கில்லை. “கற்பு, ஒழுக்கம்” பேசிய அதேயவர்கள் தான் “பெண்” ஐ பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பதையும் அதை “போர் வியூகம்” என்று நியாயப்படுத்தி விடுகின்றார்கள் என்று நினைக்கும் போதும் “போரில் முதல் நிலையில் பாதிக்கப்படுபவளும் பெண் இரண்டாம் நிலையில் பாதிக்கப்படுபவளும் பெண்” என்கின்ற வாசகம் தான் என் சிந்தையில் தோன்றுகின்றது.  “ரெஜினா” ஏதோவொரு புள்ளியில் இன்றும் என்னுள் வலித்துக்கொண்டிருக்கின்றாள்.

 

அடுத்த கட்டமாக “அவன்” நாடு கடக்கின்றான். கடல்களை தாண்டுகின்றான். “அவன்” க்கு முகம் கொடுக்க விரும்பாத ஆசிரியர் அவன் சந்திக்கின்றவர்களது முகங்களை தெளிவாகவே காட்டுகின்றமை ஆசிரியருக்கு ஏதும் தனிப்பட்ட பகையிருக்குமோ என்கின்ற ஐயத்தினை ஏற்படுத்துகின்றது. சுயம் பற்றி நான் அலச விரும்பாததாலும் எப்பவும் “ஒரு நாள் கள்ளன் தான் மாட்டுவான் பல நாள் கள்ளன் எப்படியும் தப்பித்துக்கொள்வான்” என்கின்ற என் தனிப்பட்ட மனவாசகத்தினாலும் நபர்கள் குறித்த ஆசிரியரின் அலசலை என் எழுத்தில் இணைக்க விரும்பவில்லை. ஆனாலும் நான் மதிக்கின்ற தலைவர்களுள் ஒருவரான பிரபாகரன் அவர்கள் “புலம்பெயர் சமூகத்திடம்” ஒப்படைத்துள்ள போராட்டம் பற்றிய விமர்சனங்களை விவாதிக்க வேண்டிய தேவை இன்று உள்ளதாலும் சாத்திரியின் பின்வரும் வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகின்றேன்.

 

80 களில் ஊரில் இயக்கங்களின் தோற்றத்தின் போது வெளிநாடுகளிலும் அவர்களுக்கு உதவுவதற்காகச் சிலர் ஒவ்வோர் இயக்கத்தின் சார்பிலும் நிதி சேகரிப்புகள் செய்து அனுப்பினார்கள். ஆனால் அதில் பாதி அங்கும் மீதி இவர்கள் பைக்குள்ளும் போய்க்கொண்டிருந்தன. பின்னர் மற்ற இயக்கங்கள் அழிக்கப்பட்டு புலிகள் மட்டும் நிலைத்த போது ஃபிரான்ஸில் புலிகளுக்காக நிதிசேகரிப்பு செய்தவர்களில்….. அதேநேரம் புலிகள் அமைப்புக்காகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுச் சிறையில் இருந்த… ஒருவர்…….. இவர்கள் நிதியைச் சேகரித்துப் புலிகளுக்கு அனுப்புவார்கள். எவ்வளவு சேகரித்தார்கள். எவ்வளவு அனுப்பினார்கள் என்ற கணக்கெல்லாம் யாருக்கும் தெரியாது…… அன்றைய காலங்களில் வெளிநாடுகளில் புலிகள் சார்பாக வேலை செய்த அனைவருமே செய்த செயல் தான். பலர் சேகரிக்கப்பட்ட நிதியோடு வேறு நாட்டுக்கு தப்பியோடி வாழ்கின்றார்கள்…… இப்படியான நிதி மோசடிகளை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக கிட்டு ஐரோப்பாவிற்கு வந்திருந்த காலங்களில் கவனஞ்செலுத்தியதோடு, ….. 70 சதவீதத்தை இயக்கத்திற்கு அனுப்பச் சொல்லி கட்டளையிட்டிருந்தார்…… ஆனால் கிட்டு ஐரோப்பாவை விட்டுப் போனதும் மீண்டும் நிலைமை தலைகீழாக மாறியிருந்தது.
…. போடுவதன் மூலம் மூன்று விஷயங்களை நிறைவேற்றலாம் எனப் புலிகளின் புலனாய்வுப்பிரிவு கணக்குப்போட்டது.
1.    இந்த விஷயத்தை இயக்கத்தின் வெளிநாட்டு அனைத்துலகப் பிரிவு பொறுப்பாளர்களிடம் கசியவிட்டு இயக்கத்தின் நிதியை கையாடல் செய்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கையைக் கொடுப்பது.
2.    சாதாரண புலம்பெயர் தமிழர்களிடம் இந்தக்கொலை புலம்பெயர் தமிழர்களிடம் இந்தக்கொலை இலங்கை புலனாய்வாளர்களால் செய்யப்பட்டது என ஓர் அனுதாப அலையை உருவாக்குதல்
3.    ….ஏற்படுத்தப்பட்ட அனுதாப அலையை வைத்து உணர்ச்சி தளத்திலுள்ள மக்களிடம் மேலதிகமாக நிதி சேகரிப்பை செய்வது.

 

59 அத்தியாயங்கள் வரை போராளியாக பயணித்த “அவன்” தனக்கு வருகின்ற

…….. “டேய் எங்கடை கட்டமைப்பைக் கலைச்சிட்டு எல்லாரும் ஏதாவது நாடுகளிலை தங்கடை சொந்த வாழ்க்கைக்கு போகலாம்.. என்று தலைமை அறிவிச்சிருக்கு என்று வசனங்களை நிறுத்திப் பேசினார்…… என்கின்ற அழைப்பினூடாக நிறுத்தப்படுகின்றான். அடுத்ததும் இறுதியானதுமான 60 வது அத்தியாயத்தில்…..

 

நள்ளிரவைத் தாண்டி நண்பனிடம் விடைபெற்றான். இவனைக் கொண்டு வந்து வீட்டில் விடுவதாக நண்பன் சொன்னான். இவன் மறுத்த விட்டான். தள்ளாடிய படி வந்து காரில் ஏறினான். “ கல்லறைகள் விடை திறக்கும்…..ஒரு பாடலை எழுதிடும் இரவு” சாந்தன் பாடிக்கொண்டிருந்தார்…….. வளைந்த மலைச்சரிவுகளில் கார் வேகமெடுக்கத் தொடங்கியது……. தொலைபேசி அலறியது. பார்த்தான் அது யூலியா அதனை எடுத்துக் காதில் வைத்து ஹலோ என்ற போது, நழுவி விழுந்து விட அதைக்குனிந்து எடுத்தபடி நிமிர்ந்தான். எதிரே பெரிய வீதி வளைவு……. வீதிப் பாதுகாப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் உருளத்தொடங்கியிருந்தது.

 

“அவன்” ஐ முற்றுப்புள்ளி அல்லது அரைக்காற்புள்ளி ஆக்கிவிட்டார் ஆசிரியர். 59 வரை சீராக வந்த வளைவு மாதிரியான “அவன்” கதை திடீரென 90 பாகையில் சரிந்து நின்றுவிட்டது போன்றதொரு உணர்வு எனக்குள். சாத்திரி தன் முன்னுரையில் “கிழக்கு சம்பவங்களை சரிபார்க்க” பத்திரிகையாளர்களான இரா.துரை, நிராஜ் டேவிட் உதவியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் எண்ணிப் பத்து தடவை கூட “கிழக்கு” குறித்து “ஆயுத எழுத்து” இல் பேசப்படவில்லை. ஏன் உலகம் சுற்றியளவிற்கு கூட சாத்திரியின் “அவன்” கிழக்கிற்கோ மலையகத்திற்கோ பயணிக்கவில்லை. வழமை  போன்று மறக்கப்பட்டதா? மறைக்கப்பட்டதா? அல்லது வடக்கிலிருந்து வேறு இடங்களுக்கு பயணிக்க விரும்பவில்லையா? என்கின்ற என் கேள்விக்கான பதிலை சாத்திரியிடம் எதிர்பார்க்கின்றேன். 

கூடவே நாணயத்தின் ஒரு பக்கத்தினை எழுதியுள்ள “ஆயுத எழுத்து” என்பது எனக்கடுத்த தலைமுறைக்கு ஒரு காவியமாக மாறிட கூடாது என்பதால் மறுபக்கத்தினை வரைய வேண்டிய தேவை, இந்திய துரோகங்களை பட்டியலிட வேண்டிய தேவை நிச்சயம் இன்னுமொரு எழுத்தாளனுக்கு உருவாக வேண்டும். எனினும் பலர் உடைக்க முடியாமல் திணருகின்ற கட்டுக்களை உடைத்து “ஆயத எழுத்து” எழுதியிருக்கின்ற சாத்திரியையும் அவரது தைரியத்தையும் வாழ்த்தாமலும் என்னால் இருக்க முடியவில்லை

தன்னுடைய அனுபவத்தில் 40 வீதம் மட்டும் பதிவு செய்துள்ள சாத்திரி ஒருவேளை “அவன்” ஐ படுகாயங்களுடன் மீட்டு “ஆயுத எழுத்து பாகம் - 02” எழுதினால் “அவன்” கிழக்கின் வாகரைக்கும் புல்லுமலைக்கும் மலையகத்தின் பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டும். அதிக போராளிகளை மண்ணுக்கு விதையாக்கி விட்டு பீத்திக்கொள்ளாமல் அல்லது அழுது பிச்சையெடுக்காமல் இருக்கின்ற கிழக்கு மக்களை சாத்திரியின் “அவன்” சந்திக்க வேண்டும். இனம் தாண்டி பிராபாகரனை நேசிக்கின்ற கிழக்கின் காத்தான்குடியில் அல்லது ஏறாவூரில் சாத்திரியின் “அவன்” நோன்புக் கஞ்சி குடிக்கனும். “ஆயுதம்” என்னவென்றே தெரியாமல் சுமந்து இராணுவத்தினால் அழிக்கப்பட்ட ஆதிவாசிகளான வேடர்களிடம் “அவன்” சூட்டிறைச்சி சாப்பிடனும். லயத்தில் வாழ்கின்ற மலையக மக்களிடமும் “அவன்” பேசட்டும். மீதி 60 ஆவது “பேசப்படாத போராட்டம்” குறித்து பேசட்டும். இது ஒரு மட்டக்களப்பாளினுடைய வேண்டுகோளும் கூட…

Link to comment
Share on other sites

ஐயா, பெயரை இப்படி மாற்றிவிட்டீர்களே! எனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. :lol: பக்கத்தில் இருந்து வேலை செய்பவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றார்கள். :wub:

 

கோமணன் சொல்லுறதில ஒரு நியாயம் இருக்கு. :D  :D  :lol: 

பினாகொலடாவை அடிச்சு கொண்டு ஆயுத எழுத்தை படிச்சால் சுதியாதான் இருக்கும்.  :D  :D  :lol:

Link to comment
Share on other sites

நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து:

இரு நூல்கள் ஒரு அறிமுகம்

https://meerabharathy.wordpress.com/2015/03/20/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/

kumaran1.jpg?w=300&h=225ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் இருவரின் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு சென்றிருந்தேன். ஒரு நூல் போராளி ஒருவரின் நினைவுக்குறிப்புகள். மற்ற நூல் “சிப்பாய் ஒருவரின்” நினைவுக் குறிப்புகளைக் கொண்ட நாவல்(?). இவ்வாறு குறிப்பிடுவதற்கு காரணம் உள்ளது.

sathiri2.jpg?w=500சாத்திரி என்ற கௌரிபால் சிறி எழுதிய ஆயுத எழுத்து நூல் வெளியீடும் அறிமுக நிகழ்வும் ரொரன்டோவில் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவித்திருந்தார்கள். மதிய உணவு நேரம் யாராவாது கூட்டத்தை ஆரம்பிப்பார்களா என்ற எரிச்சல் மனதில் இருந்தாலும் நிச்சயமாக மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் 2 மணிக்குச் செல்வது எனத் தீர்மானித்தேன். இந்த நேரத்திற்கு செல்வதற்கே பல வாதப்பிரதிவாதங்கள் செய்து உடன்பாடு காணவேண்டி இருந்தது. ஏனெனில் கடந்த கால அனுபவங்கள் அப்படி. வழமையாக எந்த நிகழ்வுகளுக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு போக வேண்டும் என நினைப்பதுடன் நிகழ்வுகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கவும் வேண்டும் என விரும்புபவன். ஆனால் நிகழ்வுகளை நடாத்துகின்றவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிப்பதில்லை. இதனால் நமக்குள் பிர்ச்சனை உருவாகும். ஆகவே ஒரளவு மதிப்பிட்டு அரை மணித்தியாலம் தாமதமாக சென்றாலும் நிகழ்வு ஆரம்பிக்காது. இது எனக்கு மேலும் பிரச்சனையை உருவாக்கும். மேலும் யார் எந்த நிகழ்வு நடத்தினாலும் சமூக அரசியல் விடயங்கள் சார்ந்தது எனின் எனக்கு ஆர்வமானது எனின் நிச்சயமாக செல்வேன். யார் ஒழுங்கு செய்கின்றார்கள் எனப் பார்த்து முடிவெடுப்பதல்ல எனது தெரிவு. ஆனால் இங்கு பலர் அப்படித்தான் செய்கின்றார்கள். இதனால் ஒவ்வொரு நிகழ்விற்கும் குறிப்பிட்ட நிகழ்வை ஒழுங்கு செய்பவர்களின் நண்பர்களில் சிலர் மட்டுமே வருகின்றனர். ஆகவே இவ்வாறான நிகழ்வுகள் பயனுள்ளவையா என்ற கேள்வியும் உள்ளது.

sathiri1.jpg?w=500ஆயுத எழுத்து நூல் அறிமுக நிகழ்வு இவ்வாறான அசாதாரணமான நேரத்திற்கு அறிவித்தது மட்டுமல்ல இடமும் வழமைக்கு மாறாக புதியதொரு இடம். அதுவும் இடத்தின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. விலாசம் இல்லை. இது கூட்டத்திற்கு வருகின்றவர்களுக்கு பல சங்கடங்களை ஏற்படுத்தியது என்பதை அறியக்கூடியதாக இருந்தது. இப்படி பல காரணங்களால் நிகழ்வு இரண்டரை மூன்று மணியளில் ஆரம்பமானது. இந்த நிகழ்வை சமவுரிமை இயக்கத்தின் கனடா கிளை ஒழுங்கு செய்திருந்தது.

தர்சன் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை தாங்கி சிறப்பானதொரு விமர்சன உரையை நிகழ்த்தினார். இந்த நூல் ஒரு போராளியின் படைப்பு அல்ல எனவும் மாறாக ஒரு சிப்பாயின் நினைவுக்குறிப்புகள் என இவர் குறிப்பிட்டார். ஏனெனில் ஒரு போராளிக்கு சமூக உணர்வும் பொறுப்பும் இருக்கும். தனக்கு என்ற ஒரு சுய சிந்தனை மதிப்பீடு இருக்கும். இந்த அடிப்படைகளிலையே தனது தலைமையுடன் இணைந்து பங்களிப்பார். ஆனால் ஒரு சிப்பாய்க்கு இவை எதுவும் இருக்காது. மேலிடம் என்ன சொல்கின்றதோ அதை எந்தக் கேள்விகளும் இல்லாமல் பின்பற்றுவதும் நிறைவேற்றுவதுமாகும். அவ்வாறான ஒரு பாத்திரமே ஆயுத எழுத்தில் வருகின்ற அவன் என்கின்ற பாத்திரம். மேலும் ஹொலிவூட் ரக சாகாச கதாநாயகன் போன்ற ஒருவராகவே இப் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நூல் ஒருவகையில் முக்கியமானது. அதாவது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆணாதிக்க மேல் மற்றும் மத்திய வர்க்க மற்றும் சாதிகளின் கருத்துக்களே ஈழவிடுதலைப் போராட்டத்திலும் மேலோங்கி இருந்தன என்பதற்கு இந்த நூல் சாட்சியாக இருக்கின்றது என்றார். (இந்த உரையை விரைவில் தர்சன் அவர்கள் பொதுத் தளம் ஒன்றில் பகிர்வார் என நம்புகின்றேன்).

ravi.jpg?w=500முன்னால் வைகறை ஆசிரியர் ரவி அவர்கள் தனது அனுபவங்கள் மற்றும் தான் அறிந்த தனக்குத் தெரிந்த தகவல்களுடன் எவ்வாறு இந்த நூல் முரண்படுகின்றது என்பதைக் குறிப்பிட்டார். ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் மீதான தாக்குதல் கற்பனை கதையாக கட்டப்பட்டிருக்கின்றது. புலிகளே திட்டமிட்டு ஈபி முகாம்களின் மீது இறுதித் தாக்குதலை தொடுத்தனர். இத் தாக்குதல் நடப்பதற்கு முதல் இரு பகுதிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றது. இதில் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்களை நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரின் தந்தையின் தலைமையில் யாழ் பல்கலைக்கழத்தில் பரிமாற்றம் செய்யப்பட்டது. அப்பொழுது புலிப்போராளிகளின் உடல்களை மிகுந்த மரியாதையுடன் நன்றாக உடைகள் அணிவித்து அன்றைய ஈபியின் மக்கள் இராணுவத்தின் தளபதி தேவானந்தா அவர்கள் கொடுத்தார். ஆனால் புலிகள் இயக்கத்தினர் அந்த உடல்களுக்கு எந்த மரியாதையும் செய்யாது அவமதித்ததுடன் பொறுப்பற்ற முறையில் கையளித்தனர் என்றார். இந்த இடத்தில் தேவானந்தா தொடர்பாக இன்னுமொரு குறிப்பையும் குறிப்பிடலாம். பொன்னுத்துரை (குமரன்) அவர்களும் புளொட் ஈபி இயக்க மோதலின் மோதும் தேவானந்தா அவர்கள் மிகவும் பண்புடனும் தோழமையுடனும் செயற்பாட்டார் எனத் தனது நூலில் குறிப்பிடுகின்றார். (இன்று டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியது ஒன்றானாலும் அக் காலத்தில் இவ்வாறான பண்புடன் செயற்பட்டுள்ளார் என்பதை நாம் புறக்கணிக்க கூடாது).

சாம் சிவதாசன் அவர்கள் தனக்கு இயக்க அனுபவங்கள் மற்றும் சார்புகள் இல்லை என்பதால் தனது பார்வை பொதுமக்கள் சார்ந்த ஒன்றாக இருக்கும் என்றார். இவ்வாறு பலரும் தம் அனுபவங்களை எழுதும் பொழுதே நாம் உண்மையான ஒரு வரலாற்றை இவற்றிலிருந்து தொகுத்துப் பெறலாம். இந்தவகையில் இந்த நூல் வரவேற்கத்தக்கது என்றார். நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் இவ்வாறான நூல்களின் வரவுகள் அவசியமானதும் முக்கியமானதும் என்பதில் முரண்படவில்லை. ஓவியர் ஜீவன் அவர்களை உரையாற்ற அழைத்தபோது அந்த அழைப்பை மறுத்து கலந்துரையாடலில் தனது கருத்துக்களை கூறுவதாக குறிப்பிட்டார். உரையாடலின் போது டெலி மற்றும் டெலா இயக்கங்களின் தலைவர்களை புலிகளின் தலைமை திட்டமிட்டே அழித்ததாக குறிப்பிட்டார். இவர்கள் இருவரும் புலிகளின் தலைவர் பிரபாகரனைப்போல நினைத்ததை சாதிக்க கூடியவர்களாகவும் சாகாச செயற்பாடுகளில் ஆர்வமுள்ளவர்களாகவும் இருந்தமை புலிகளின் தலைமைக்கு சவாலானதாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டார். இதனாலையே வஞ்சகமான சூழ்ச்சியூடாக அவர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும் இது ஒரு நாவலுக்கான தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் வாசிக்கும் பொழுது எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றார். ஆனால் தனித் தனிப் பதிவுகளாக வாசித்தபோது இருந்த பாதிப்பு நாவலாக்கியபோது மறைந்து போனது என்றார். அதேவேளை த.அகிலனின் மரணத்தின் வாசனை என்றை சிறுகதைத் தொகுப்பு தனக்கு ஒரு நாவல் வாசித்த உணர்வைத் தந்ததாகவும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலர் தமது கருத்துக்களைக் கூறினர். குறிப்பு எடுக்காது நினைவிலிருந்து எழுதுவதால் பல நினைவிலிருந்து மங்கிப்போய்விட்டன. புலிகள் இயக்கத்தைத் தவிர்த்து மற்ற எல்லா இயக்கங்களையும் நக்கலடிக்கவும் மலினப்படுத்தவும் இந்த நூல் தவறவில்லை எனக் கூறினேன். இவர் இவர்களது நேர்மறைப் பாத்திரங்களை மறந்தும் குறிப்பிடவில்லை. மேலும் இது ஒரு நாவலே இல்லை. மாறாக ஒருவரின் அனுபவக் குறிப்புகள். இதற்கு நாவல் வடிவம் கொடுப்பதற்கு தன்னைப் பாதுகாக்கின்ற ஒன்றே காரணமாக இருக்கலாம். ஆனால் இவ்வாறு தன்னைப் பாதுகாப்பாதில் இருக்கின்ற அக்கறை மற்றவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இல்லாமல் இருப்பது இதிலுள்ள பல குறைகளில் ஒரு குறை. முக்கியமாக திலகர் அவர்களின் இன்றைய நிலை தொடர்பாக ஒருவரும் ஒன்றும் அறியாத நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அறமல்ல. இதுபோல சுவிஸ் பொறுப்பாளர் மற்றும் தென் ஆபிரிக்க வைத்தியர் தொடர்பாக இலகுவில் அடையாளப்படுத்தக் கூடியவகையில் தெரிவித்திருப்பதும் அறமல்ல. இதேபோல் யோ.கர்ணன் அவர்களும் தனது நூல் ஒன்றில் எழிளனை வெளிப்படையாக அடையாளப்படுதியிருந்தார். இவர்களது வாழ்வு கேள்விக்குறியாக இருக்கின்ற இக் காலங்களில் இவ்வாறு செய்வது அறமல்ல.

சாத்திரியின் (பாத்திரத்தின்) பார்வை பெண்கள் தொடர்பாக மிகவும் மலினமான பார்வையாக உள்ளது. ஏற்கனவே நண்பர்கள் குறிப்பிட்டதுபோல ஹொலிவூட் காதாநாயகன் ஒருவன் எவ்வாறு பெண்களை ஒரு போகப் பொருளாகப் பார்ப்பானோ பயன்படுத்துவானோ அவ்வாறே இவரும் (அல்லது இவரது கதாநாயகனும்) பார்க்கின்றார். அதுவும் அரசியல் தலைமைகளின் தவறுகளால் பாதிக்கப்பட்டு பழிவாங்கும் உணர்ச்சிகள் மேலிட அரசிடம் சென்று பணிபுரிந்த ஈபிஆர்எல்எவின் பெண் ஒருவர் தொடர்பாக மிகவும் மோசமாகக் குறிப்பிடுவதுடன் அவரது மரணத்தில் ஆனந்தமடைவது நமது போராட்டத்தின் எதிர்மறை விளைவுகளால் ஏற்பட்ட ஒரு இழி நிலை எனலாம். அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய பேய்க் கதைக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை இது.

இந்த நூலில் மகிழக் கூடிய ஒரு விடயம் முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பான குறிப்பு. இவ்வாறான ஒரு குறிப்பை இதுவரை யாரும் தமிழில் எழுதி நான் வாசித்ததில்லை. அதுவும் புலிகளிலிருந்து வந்த ஒருவர் எழுதியது ஆச்சரியமானதே. எல்லாம் காலத்தின் மாறுதலேயல்லாமல் மன மாறுதலோ அரசியல் அடிப்படையிலான புரிதலோ அல்ல என்பது வெளிப்படை. அதனால்தான் எல்லாவற்றையும் குறிப்பிட்ட இவர் கந்தன் கருணையும் ராஜினியையும் இலகுவாக மறந்துவிட்டார். அல்லது தவிர்த்து விட்டார். மேலும் கேசாயினி இந்த நூல் தொடர்பான தனது விமர்சனக் குறிப்பில் வடக்கையும் மலையகத்தையும் இவர் மறந்துவிட்டார் எனக் குறிப்பிடுகின்றார். இதற்கு காரணம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் இவருக்குள் இருக்கின்ற ஆதிக்க கருத்தியல் தான் என்றால் தவறல்ல. மேலும் இவர் முகநூலில் தான் மலையகத்திற்கும் கிழக்குப் பகுதிக்கும் பயணம் செய்யவில்லை ஆகவே எழுதவில்லை என்கின்றார். இதுவே போதும் இது ஒரு நாவலல்ல வெறும் நினைவுகளின் குறிப்பே என கூறுவதற்கு. ஏனெனில் ஆகக் குறைந்தது கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவதை ஏதாவது ஒருவகையில் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறான ஒரு பதிவு இது ஒரு படைப்பாக இருந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகியிருக்கும். இந்த நூலின் கதாநாயகனான “அவனுக்கு” அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதங்களுடனும் பெண்களுடனும் நடைபெறும் ஒரு சாகாசப் பயணம். அவ்வளவுதான்.

,,,,,,,,,,,,,,,………,,,,,,,,

kumaran.jpg?w=300&h=200குமரன் என அழைக்கப்பட்ட பொன்னுத்துரை அவர்களின் நினைவுக் குறிப்புகளான நான் நடந்து வந்த பாதை என்ற நூலின் அறிமுகம நிகழ்வை தேடகம் அமைப்பினர் ஒழுங்கு செய்தனர். இதில் தேடகம் குமரன், பரதன் மற்றும் ரகுமான் ஜான் ஆகியோர் உரையாற்றினர். பரதன் அவர்கள் தனது கழக மற்றும் உமாவுடனான உறவு தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்தார்.

e0ae9ce0aebee0aea9e0af8d.jpg?w=500ரகுமான் ஜான் உரையாற்றும் பொழுது நாம் ஏன் தோற்றுப்போனோம் என்ற வினாவை எழுப்பினார். ஒவ்வொருவரும் மற்றவர் முட்டாள் எனவும். தான் அனைவரையும் திறமையாக வெட்டி ஆளுகின்றேன் எனவும் நினைப்பதுண்டு. இவ்வாறு தான் மற்றவரும் நினைக்கின்றார் என்பதை ஒருத்தரும் புரிந்துகொள்வதில்லை. இது சமூகத்திலிருக்கின்ற குட்டி பூர்சுவா சிந்தனையின் வெளிப்பாடாகும். இந்த சிந்தனை மட்டுப்படுத்தப்பட்டதாகும். ஏனெனில் இது எந்தவிதமான சமூக ஆய்வுகள் மற்றும் வரலாறு தொடர்பான புரிதல்கள் எதுவும் இல்லாமலே வெளிப்படும் கருத்தியலாகும். ஆகவே நடைமுறை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எதிர்வினையாகவும் உடனடி முடிவுகளை முன்வைப்பதாகவுமே இருக்கும். இது பிரச்சனைகள் தீர்க்கப்படுவது மற்றும் முன்னேறுவது போன்ற தோற்றப்பாடுகளைத் தரும். ஆனால் இது முன்னேற்றமல்ல. இதுவே நமது போராட்டத்திற்கும் நடந்தது. இதன் பின் கலந்துரையாடல் நடைபெற்றது. பலர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிலர் தமது சந்தேகங்களைக் கேட்டனர்.
இந்த நூல் சிறிலங்கா அரசுக்கு எதிரான தமது செயற்பாடுகளை பற்றியது அல்ல.  மாறாக தான் செயற்பட்ட இயக்கத்திற்குள் இருந்த அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கான செயற்பாடுகள் தொடர்பானது என்றால் தவறல்ல. போராட்டத்தை சரியா பாதையில் கொண்டு செல்ல பல போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் வென்றது அதிகாரத்து ஆயுதப் போராட்டமே. ஈழவிடுதலைப் போராட்டதை அழித்ததுவும் அதுவே.

சாத்திரி அவர்களின் ஆயுத எழுத்திற்கும் பொன்னுத்துரை (குமரன்) அவர்களின் நான் நடந்து வந்த பாதைக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு உள்ளது. முதலாவது சமூகத்தில் நிலவும் ஆதிக்க சிந்தனைகளின் அடிப்படையிலான ஆயுத மோகமும் சாகாச செயற்பாடுகளில் ஆர்வமும் கொண்ட பணிக்கப்பட்ட கட்டளைகளை மறு கேள்வி இல்லாமல் பின்பற்றுகின்ற ஒரு சிப்பாயினது நினைவுக் குறிப்புகள். இங்கு ஆயுதமே முனைப்பானதாக இருக்கின்றது. இரண்டாவது சமூக விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த, எதிர்த்து கேள்வி கேட்கின்ற, மக்கள் மற்றும் போராளிகள் மீது அக்கறை கொண்ட பொறுப்புணர்வுள்ள ஒரு போராளியின் மன உளைச்சலே இந்த நினைவுக் குறிப்புகள். இப் போராளியின் நினைவுகளை இவ்வாறு எழுதவைத்தது இவர்களை ஆதிக்கம் செலுத்திய ஆயுதங்களே. இருப்பினும் இங்கு முனைப்பு பெற்றிருப்பது அரசியலும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் விடுதலையும் என்றால் மிகையல்ல.

இவர்கள் நடந்து வந்த பாதைகளில் எல்லாம் ஆதிக்கம் செய்தது ஆயுதமே. ஆகவேதான் நான் நடந்து வந்த பாதை(யில்) ஆயுத எழுத்து எனத் தலைப்பிட்டுள்ளேன்.

மீராபாரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூல் ஒரு போராளியின் படைப்பு அல்ல எனவும் மாறாக ஒரு சிப்பாயின் நினைவுக்குறிப்புகள் என இவர் குறிப்பிட்டார். ஏனெனில் ஒரு போராளிக்கு சமூக உணர்வும் பொறுப்பும் இருக்கும். தனக்கு என்ற ஒரு சுய சிந்தனை மதிப்பீடு இருக்கும். இந்த அடிப்படைகளிலையே தனது தலைமையுடன் இணைந்து பங்களிப்பார். ஆனால் ஒரு சிப்பாய்க்கு இவை எதுவும் இருக்காது. மேலிடம் என்ன சொல்கின்றதோ அதை எந்தக் கேள்விகளும் இல்லாமல் பின்பற்றுவதும் நிறைவேற்றுவதுமாகும். அவ்வாறான ஒரு பாத்திரமே ஆயுத எழுத்தில் வருகின்ற அவன் என்கின்ற பாத்திரம். மேலும் ஹொலிவூட் ரக சாகாச கதாநாயகன் போன்ற ஒருவராகவே இப் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நூல் ஒருவகையில் முக்கியமானது. அதாவது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆணாதிக்க மேல் மற்றும் மத்திய வர்க்க மற்றும் சாதிகளின் கருத்துக்களே ஈழவிடுதலைப் போராட்டத்திலும் மேலோங்கி இருந்தன என்பதற்கு இந்த நூல் சாட்சியாக இருக்கின்றது என்றார்

நாவலைப் படித்தவகையில் இந்தக் கருத்துடன் முழுமையாக ஒத்துப்போகமுடிகின்றது :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

புத்தகம் பேசுது இதழில் வெளியான எனது செவ்வி

 

கேள்விகள் - புலிகள் மீதான விமர்சனத்துக்காக ஆயுத எழுத்து நாவல எழுதினீர்களா? அல்லது அது உங்கள் சுயசரிதையா? அல்லது ஈழப்போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை உங்கள் நாவலில் பேச வைத்திருக்கிறீர்களா?
ஆயுத எழுத்து நாவலானது புலிகள் மீதான விமர்சனமோ சுயசரிதையோ அல்ல.முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டத்தில் நான் நேரில் சந்தித்த, சம்பத்தப்பட்ட சில சம்பவங்களை பதிவு செய்திருக்கிறேன்.அதில் இதுவரை அறியப்படாத அல்லது செய்திகளாக அறியப்படிருந்த பல சம்பவங்களை விரிவாக பதிவு செய்திருக்கிறேன் அவ்வளவுதான் . நான் யாரையும் சரி பிழை பார்க்கவோ சம்பவங்களுக்கான தீர்ப்புக் கூறவோ முயற்சி செய்யவில்லை படிப்பவர்களே அதை செய்துகொள்வார்கள் .

 

02. ஆயுத எழுத்து நாவலை வாசிப்பதற்கான ஆர்வம் பலரிடமும் காணப்படுகிறது. ஆனால் அதன் விற்பனையோ தலைமறைவில் - இரகசிய நடவடிக்கை போல உள்ளதே. இதற்கு என்ன காரணம்?
மேலே சொன்னதுபோல பலர் விடுதலைப் புலிகள் பற்றி செய்திகளாக அறியப்பட்ட சில சம்பவங்களை நான் விரிவாக எழுதியிருப்பதால் விடுதலைப்புலிகளை விமர்சனத்துக்கு உட்படுத்தக் கூடாது என்று தங்களை தீவிர விடுதலைப்புலி விசுவாசிகளாக கட்டிக்கொள்ளும் ஒரு கும்பல் இந்த நாவல் வெளிவருவதை விரும்பவில்லை.நாவல் வெளிவருவதை ,வெளியீட்டை ,அதன் விற்பனையை தடுத்து நிறுத்த பெரும் பிரயத்தனப் பட்டனர்.இவர்களது எதிர்ப்பு எனக்கு எதிர்மறையான விளம்பரத்தை கொடுத்து விட்டது பலருக்கும் இதனை படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டி விட்டது .எனவே நாவல் வெளிவந்து சிறப்பாக வெளியீடும் நடந்துமுடிந்து நான் பதிப்பித்த ஆயிரம் புத்தகங்களும் இரண்டு மாதத்திலேயே விற்றுத் தீரும் நிலைக்கு வந்துவிட்டது .விரைவிலேயே இரண்டாவது பதிப்பு போடும் வேலையில் இறங்கிவிட்டேன் .

03. இந்த நாவல் வெளியான பின் தமிழ்ச் சூழலில் நீங்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளும் அனுபவங்களும் என்ன?
தமிழ் சுழலில் நான் நெருக்கடிகளை எதிர் கொள்வது ஒன்றும் இது முதல்தடவையல்ல நிறைய அனுபவங்கள் உள்ளது.அதில் பெரிய நெருக்கடி எதுவெனில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் மே மாதம் 21 திகதி 2009 ஆண்டு வியாபாரிகளால் வீழ்ந்த தலைவா ..என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன்.அதில் புலிகளின் வெளிநாட்டு பொறுப்பாளர்கள் புலிகளின் தலைமையிடம் ஆயுதம் வருகிறது காப்பாற்ற அமேரிக்கா வருகிறது என்று நம்பவைத்து கழுத்தறுத்தது மட்டுமல்லாமல் இறுதி யுத்தம்... இதோ தமிழீழம்.. என்று சொல்லி சேர்த்த பலமில்லியன் பணத்தையும் சுருட்டியதோடு பிரபாகனின் மரணத்தை கூட பகிரங்கமாக அறிவித்து ஒரு அஞ்சலி கூட செலுத்தவில்லைஎன்று சாடியிருந்ததோடு பிரபாகரனுக்கு அஞ்சலியும் செலுத்தியிருந்தேன் .அந்தசமயத்தில்தான் கொலை மிரட்டல்கள், வசவுகள் ,அவதூறுகள் என்று பெரும் நெருக்கடியை நானும் எனது குடும்பமும் சந்தித்திருந்தோம்.பின்னர் இன்றுவரை அதுபோன்ற நெருக்கடிகள் தொடரத்தான் செய்கிறது இப்போவெல்லாம் எனக்கு அவை பழகிப்போய் விட்டது.அம்மணமான ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்றொரு பழமொழி உண்டு நான் பைத்தியக்காரனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் .

 

4. இந்த நாவலை இப்படி எழுத வேணும் என்று ஏன் எண்ணித்துணிந்தீர்கள்?
உண்மையில் நான் இதனை நாவலாக எழுதவில்லை.சம்பவவங்களின் தொகுப்பாக அதில் சம்பதப்பட்டவர்கள். அதன் காலம் திகதி என்று ஒரு ஆவணமாகத்தான் முதலில் 800 பக்கத்தில் எழுதியிருந்தேன்.எழுதியவற்றை சில நண்பகளிடம் காட்டி ஆலோசனை கேட்டபோது அவர்கள் எனக்கு சொன்ன ஆலோசனை என்னவென்றால் இந்த சம்பவங்களோடு தொடர்புடைய பலரும் பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.உண்மைகள் பேசப்படத்தான் வேண்டும் ஆனால் அவை எமது எதிர்தரப்புகளுக்கு சாதகமாகி விடக்கூடாது இவற்றில் கவனமாக இரு என்று சொல்லிவிட்டார்கள் .எனவே ஆவணத்தை நாவல் வடிவில் மாற்றும் வேலையை செய்தேன் இது ஒரு நாவல் எழுதுவதை விட கடினமாக இருந்தது.சர்சைக்குரிய விடயங்கள் என கருதப்பட்ட பல விடயங்கள் நீக்கப் பட்டு நான் எழுதியதில் பாதியளவு 391 பக்க நாவலாக மாறியது.இதற்கு யோ .கர்ணனும் பெரிதும் உதவியிருந்தார்.இதில் நீக்கப் பட்ட பகுதிகள் இன்னமும் சொல்லப்படாத விடயங்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இன்னொரு நாவலாக வெளிவரும் .
5. புலிகள் அமைப்பில் இருந்தவர்களே அந்த அமைப்பை அதிகமாக விமர்சித்து வருவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது. நீங்கள், ஷோபாசக்தி, குணா. கவியழகன், யோ. கர்ணன், நிலாந்தன், தமிழ்க்கவி என ஒரு பட்டியல் இருக்கிறது. இது ஏன்? இந்த மாற்றம் எப்படி எற்பட்டது?

இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்றைய நண்பர்கள் புலிகள் அமைப்பை விமர்சிப்பது பற்றி அவர்கள் மாற்றம் பற்றி என்னால் கருத்துக் கூற முடியாது.ஆனால் நான் புலிகள் அமைப்பை விமர்சிப்பதில்லை.இல்லாத ஒரு அமைப்பை விமர்சிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை. புலிகள் அமைப்பில் நடந்த சம்பவங்களை பதிவு செய்கிறேன் அவ்வளவுதான்.அதனை படிப்பவர்கள் விமர்சிக்கிறார்கள் .

6. ஆயுத எழுத்தின் இரண்டாம் பாகம் வருமா?
நிச்சயமாக ..அதற்கான காலம் வரும்போது ..

7. சாத்திரி சர்ச்சையைக் கிளப்பும் ஆள் என்ற விமர்சனத்தை சிலர் முன்வைக்கிறார்கள். அத்துடன் அவர் இந்திய உளவுசார் அமைப்புகளுடன் தொடர்புள்ளவர். போராட்டத்தை தேவையற்ற விதமாக விமர்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுககு உங்கள் பதில் என்ன?
நான் சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்று நினைத்து எதையும் எழுதுவதில்லை உண்மையை எழுதுவது பலருக்கு விரும்பப்படாத சர்ச்சையாக உள்ளது .மற்றும்படி இந்திய உளவுசார் அமைப்போடு தொடர்புள்ளது என்கிற குற்றச்சாட்டுக்கு எனது பதில் என்னவெனில் புலிகள் அமைப்பு இயங்கிய காலத்தில் அது தனது தேவைக்காக எந்தெந்த அமைப்புகளோடு தொடர்புகளை கொண்டிருந்ததோ அவர்கள் ஊ டாக அந்த அமைப்புகள் அனைத்தோடும் எனக்கு தொடர்புகள் இருக்கிறது .புலிகளுக்கு இந்தியாவில் முதலில் ஆயுதப் பயிற்ச்சியை வழங்கி ஆயுதம் கொடுத்தும் சில தாக்குதல்களை நடத்த ஆலோசனை வழங்கியதும் இந்திய உளவுப்பிரிவுதான் என்பதை பலர் சாவகாசமாக ஏனோ மறந்து விடுகிறார்கள். மற்றும்படி ஆதாரமற்ற எழுந்தமான குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் சொல்வது நேர விரயமாக கருதுகிறேன்

8. ஆயுத எழுத்து உங்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு என்ன? அது தந்த வெற்றிகள் என்ன?
ஆயுத எழுத்து எனக்கு பாதிப்பு வெற்றி என்பதுக்கப்பால் மன திருப்தி .

9. ஆயுத எழுத்து நாவலில் சில விடயங்கள் தவறாகச் சொல்லப்படுகின்றன என்று நாவலில் குறிப்பிடப்படும் சம்பவங்களோடு தொடர்பானவர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக சிறிசபாரட்ணத்தை முதலில் கண்டவர், வளலாயில் உள்ள ஈ.பி.ஆர்.எல். எவ் முகாம் தாக்குதல் பற்றிய விவரம். பிரான்ஸில் கொல்லப்பட்ட நாதன், கஜன் ஆகியோரின் கொலைக்கும் புலிகளின் தலைக்கும் தொடர்பில்லை என்ற விடயங்கள். இது பற்றிய உ்ங்கள் பதில் என்ன?
ஒரு நாவலில்.ஒரு செய்தியில் அல்லது ஒரு கட்டுரையில் வரும் விடயத்தை இப்போதெல்லாம் பலர் தவறு என்று சொல்லவரும்போது ஒற்றை வரியில் இதெல்லாம் பொய் .அப்படி நடக்கவில்லை என்று ஒற்றை வரியில் மறுப்பதுதான் பரவலாக நடக்கிறது.ஒரு விடயத்தை பொய் என்று மறுப்பவருக்கு உண்மை தெரிந்திருக்க வேண்டும் அவர் அந்த உண்மையை ஆதாரத்தோடு கூறி நான் சொல்வது பொய் என்று இதுவரை யாரும் நிருபிக்கவில்லை .அடுத்ததாக புலிகள் அமைப்பின் வெற்றிகளுக்கு எல்லாம் தலைவரின் நேரடி வழிகாட்டுதல் என்று புகழ்த்து கொண்டும் அவர்களால் நடத்தப்பட்ட தவறான சம்பவங்கள் அனைத்துக்கும் தலைவருக்கும் தொடர்பில்லை என்று சப்பைக் கட்டு கட்டும் ஒரு கூட்டம் வெளி நாடுகளில் உள்ளனர்.ராஜீவ் காந்தி .பத்மநாபா .அமிர்தலிங்கம் தொடக்கி நாதன் கஜன் கொலை வரை தலைவருக்கு தெரியாமல் நடந்தது என்றால் புலிகள் இயக்கத்தை இயக்கியது யார் ?? தலைவர் யார் ??அப்படி சொல்பவர்கள் பிரபாகரன் ஒரு ஆழுமையற்ற தலைவர் என்று சொல்கிறார்கள் என்பது தான் அர்த்தம் .

10. வரலாற்றுச் சம்பவங்களை படைப்பாக்கும் போது - புனைவாக்கும்போது படைப்பாளிக்கு எற்படும் சவால்கள் என்ன? படைப்பாளி எடுத்துக்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு என்ன?
வரலாற்று சம்பவங்களை படைப்பக்கும்போது அந்தச் சம்பவங்களோடு சம்பத்தப் பட்ட நபர்கள் உயிரோடிருப்பின் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது .அடுத்தது எமது படைப்பானது எங்கள் பொது எதிரிக்கு வாய்ப்புக் கொடுப்பதாக அமைந்து விடக் கூடாது எல்லாவற்றையும் விட முக்கியமானது படைப்பில் வரும் சம்பவங்கள் அனுபவங்களாக நன்கு அறிந்தோ அல்லது அதுபற்றி சரியான தகவல்களை திரட்டிய பின்னர் எழுதப்பட வேண்டும் .ஏனெனில் படைப்பில் ஒரு தவறான தகவல் சேர்க்கப்பட்டிருபின் ஒட்டு மொத்த படைப்பே தவறானது என நிராகரிக்கப் பட்டுவிடும் அபாயம் உள்ளது

11050118_363648113845518_421561205510711
11127562_363648283845501_860960863675697

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளில் முக்காவாசி வாசித்துவிட்டேன். மிகுதியையும் வாசித்திருப்பேன் ஆனால் அப்படியே நித்திரையாய் போய்விட்டேன். இப்போ வேலயிடத்தில் தூங்கி வழிகிறேன்.

83 சந்தையடிப் படுகொலை - சிங்கராசர் மகனின் மரணம் - சங்கானைச் சீக்கியன் - இப்படி பல நிஜங்கள் அப்படியே சொல்லப் படிருக்கிறன.

ஆனால் நாவல் என்பதன் பின்னால் அவன் மறைந்துள்ளதால் இது எல்லா சம்பவஹ்களுக்கும் பொருந்தாமல் போகவும் கூடும்.

யாழ் சூழலில் தென்னிந்திய வார்தை பிரயோகங்கள் ஒட்டவில்லை. ஆசிரியருக்கும் தெரியும் ஆனால் கொம்ர்சல் காரணக்களுக்காக ஒரிஜினாலிட்டியை இழந்துள்ளார்.

சிறி கொலை - அந்த வீட்டின் பெண்மணிக்கும், சிறிக்கும் அவர்கணவருக்கும் இடையான உறவு பூடகமாக சொல்லப் பட்டிருக்கிறது? வாசிக்கும் போது

நான் உணர்ந்ததை தான் அவனும் அந்த சூழலில் இந்த போது உணர்ந்தானா? அறிய ஆவல்.

அவன் தான் புளொட்டுக்கு போவதே முதல் தெரிவாய் இருந்திருக்கும் என்பதன் மூலம் தான் ஒரு வெள்ளாளன் என்று சொல்லாமல் சொல்கிறான். புத்தகம் வேறு வெள்ளாளர் டாட் காமில் கிடைக்கிறது :)

யுரேக்கா ஒரு கற்பனை என்றே நினைக்கிறேன். என்னதான் இயக்கத்துக்கு ஓடிடுவான் எண்ட பயம் இருந்தாலும் அன்றைய யாழ் சூழலில், ஓ எல் எடுக்காத பெடி பெட்டையளின் காதலை இப்படி ஏற்றுப்பார்களா என்பது சந்தேகமே.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
"ஆயுத எழுத்து" மற்றும் அது தொடர்பான மதிப்பீடுகள் பற்றி Category: இரயாகரன் Created: 19 April 2015 Hits: 20

Autham.jpg

"ஆயுத எழுத்து" ஒரு கற்பனை நாவல் அல்ல. அது சுயவிமர்சனமோ, சுயவிளக்கமோ அல்ல. மாறாக புலிகளின் இனவாத அரசியல், இராணுவ நடத்தைகள் இந்த நாவல் மூலம் நியாப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

நவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை கட்டமைத்த புலியிச நடத்தைகளையும், அதை எப்படி மாபியத்தன கிரிமினல் வழிகளில் நாங்கள் அரங்கேற்றினோம் என்பதையும் இலக்கியம் ஊடாக பேசி இருக்கின்றது. கடந்த கால பாசிசத்தினை நியாயப்படுத்தும் படைப்பே ஆயுத எழுத்து.

இந்த நாவல் புலி அரசியலை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. புலிகளின் நடத்தைகளை யாழ் மேலாதிக்க நடத்தைகளின் அங்கமாக முன்னிறுத்தி நியாயப்படுத்தி இருக்கின்றது. புலிகளை முன்தள்ளி நக்கிப் பிழைத்த பாசிட்டுகள், புலிகள் இல்லாத இன்றைய சூழலுக்குரிய சந்தர்ப்பவாதத்துடன், குறித்த காலத்தை மையப்படுத்தி தனிமனிதப் புலம்பலாக வெளிவரும் புலி விமர்சன இலக்கிய வரிசையில், "ஆயுத எழுத்து" புலிகளின் நடத்தைகளை நியாயப்படுத்தி வெளிவந்திருகின்றது. இந்த அடிப்படையில் புலிகளின் நடத்தைகள் ஒட்டிய முரண்பாடுகளை, இலக்கிய அரங்கில் அரசியல் தர்க்கமாக மாற்றியிருக்கின்றது. புலி அரசியலை பாதுகாக்கும் வண்ணம், இலக்கியத்தை முடக்கி இருக்கின்றது. இதன் மூலம் புலி அரசியலை பாதுகாக்கும் வண்ணம் இன்றைய தமிழ் இலக்கியப் போக்கினை மாற்றி இருகின்றது. இன்றைய இலக்கிய அரங்கானது புலி அரசியலை பாதுக்காக்கும் புலி நடத்தையை மையப்படுத்திய புலம்பல் இலக்கியமாக குறுகி இருகின்றது. யுத்தத்தில் தோற்றுப்போன சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையில் புலம்பல்களே இத்தகைய இலக்கிய படைப்புகளும் அதனை காவித் திரிவோரினதும் நடத்தைகளுமாகும்.

சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையே புலியிசம்

புலியிச சிந்தனை முறை புலிக்குள் மட்டும் இருந்த ஒன்றல்ல. மக்களை மையப்படுத்தாத தேசியம், இனவாதம், சுயநிர்ணயம்… என்று, இதைச் சுற்றிய இயங்கிய எல்லா சிந்தனை முறையிலும், சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனையே இயங்கியது, இயங்குகின்றது. இது உருவாக்கிய புலியிசம் என்பது, வெறுமனே வலதுசாரிய வெளிப் பூச்சுகளல்ல. நிலவுகின்ற யாழ் மேலாதிக்க சமூக அமைப்பின் மகிழ்ச்சியையோ, அதன் வெளிப்புற அழகையையோ கொண்டு கட்டமைக்கப்பட்ட வெளித் தோற்றமல்ல. ஒழுக்கம், அறம், தூய்மை, பாண்பாடு... என்ற போலியான இழிவான சமூக மேலாதிக்க பாசிச சொல்லாடல்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட புனித புலிகள் பற்றிய விம்பத்துக்கு முரணாதே புலிகளின் நடத்தைகள். மக்களை ஏமாற்றி அவர்களை ஒடுக்கிய புலிகளின் எதார்த்தம் மனித விரோத நடத்தைகளானது. அதற்காக அவர்கள் கையாண்ட வாழ்க்கை நெறியினையும் அரசியலையும் "ஆயுத எழுத்து" பிரதிபலிக்கின்றது.

இயல்பாகவே ஜனநாயக விரோத்தையும், பாசிசத்தையும், மாபியத்தனத்தையும், கிரிமினல் தனத்தையும்... கொண்ட இனவாதம் மூலம் தான், புலிகள் தங்கள் அதிகாரத்தை நிறுவ முடிந்தது. மோசடி, ஊழல், முகம் பார்த்தல், பயன்படுத்தல், பழிவங்குதல்.. என்று அதன் எல்லா இழி கேட்டிலும் ஈடுபட்டவர்கள், வன்முறை கடத்தல், கப்பம், கொலை.. என்று எல்லாவற்றிலும் ஈடுபட்டார்கள். புலிகளின் இந்த வலதுசாரிய அரசியல் பாதையில் பயணித்து, அந்த காதபாத்திரங்களாக முன்னின்று செயற்பட்டவர்கள் தான், உண்மையான அதன் அரசியல் உணர்வுடன் பயணித்த புலிகள்.

புலி அரசியலால் உருவாக்கப்பட்ட ஒருவர் தான் சாத்திரி. எது அவரது புலி அரசியல் வாழ்க்கையாக இருந்ததோ, அதையே தன் "ஆயுத எழுத்து" மூலம் சாத்திரி வெளி உலக்கு கொண்டு வந்து இருக்கின்றார். சாத்திரி இன்னும் புலியாகவே இருப்பதாலும், புலியாக சிந்திப்பதாலும் தான் உண்மையான புலியின் படைப்பாக "ஆயுத எழுத்து" இருக்கின்றது. புலி பற்றி போலி விம்பம் உருவாக்கி பிழைக்கும் கும்பலுக்கும், புலியை நம்பும் அப்பாவிகளுக்கும் "ஆயுத எழுத்து" சொல்லும் உண்மைகள் அதிர்வாக மாறி இருக்கின்றது. புலிகளைச் சொல்லி பிழைத்த பிழைப்புக்கு இது சாவல் விடுகின்றது.

இதில் ஈடுபட்ட ஒருவனின் தொடர்ச்சியான அதே அரசியல் பிழைப்புக்கு, இந்த உண்மை தான் அவனுக்கான ஆயுதம். புலியாக சிந்திக்கும் ஒருவனிடம் சுயவிமர்சனத்தைத் தேடுவது, சுயவிமர்சனத்தைக் கொண்டு இருப்பதாக சுய தர்க்க அறிவில் இருந்து கற்பிப்பதும் காட்டுவதும் அபத்தம்.

நவதாரள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை மூலமாக புலியிச நடத்தைகளை அது எப்படி அணுகுகின்றது என்பதை விடுத்து, சுய தர்க்க அறிவு மூலம் சுயவிமர்சனமாக விளக்க முற்படுவது உண்மையில் யாழ் மையவாத சிந்தனையின் முரண்பட்ட மற்றொரு வடிவமாகும்.

சாத்திரியின் நாவலின் அரசியலும் சரி, நாவலுக்கான விமர்சன அரசியலும் சரி, மக்களைச் சார்ந்து முன்வைக்கப்படுகின்றதா எனின் இல்லை. பிரமுகர்த்தன இருப்பை தக்க வைக்கின்ற சுய தர்க்கங்களாக குறுகி இருப்பதால், இந்த நாவல் கொண்டு இருக்கும் புலி அரசியல் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதில்லை.

"ஆயுத எழுத்து" ஒரு நாவலா?

"ஆயுத எழுத்து" ஒரு நாவல் அல்ல என்று இலக்கியவாதிகள் என கூறுபவர்கள் சிலரால் பேசப்படுகின்றது. இதன் அரசியல் பின்புலமானது, அடிப்படையில் தங்களை இலக்கியவாதிகளாக பிற்றிக் கொள்ளும் தரப்பின் பொது அச்சமாகும். உண்மையான மனிதர்களின் யதார்த்தவாதத்தை இலக்கியமாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற, வலதுசாரிய சிந்தனை முறையாகும். கற்பனையையும், இயற்கையையும், மொழியையும் முதன்மையாக கொண்டிராத படைப்பு இலக்கியமல்ல என்ற புரட்டுவாதம், உயிர் உள்ள மனிதனையும், அவன் வாழ்வையும் முதன்மையாக கொண்ட படைப்பு இலக்கியத்தை மறுக்கின்ற இலக்கியமாகும். இது இலக்கியதுக்கே இலக்கியம் என்ற வலதுசாரிய வரட்டுப் பார்வையாகும்.

இந்த வரட்டுப் பார்வை கடந்து பார்த்தால் "ஆயுத எழுத்து" ஒரு நாவல். கடந்த இலங்கை வரலாற்றுடன் தொடர்புள்ள சம்பவங்களுடன், தொடர்புபட்ட ஒருவனின் சொந்தக் கதை. நான் என்ற பாத்திரத்தை தவிர்த்து "அவன்" என்ற ஒருவன் ஊடாக நடந்தவற்றில், சிலதைக் கூற முனைகின்றது.

இந்த நாவலில் கூறப்படும் சம்பவங்கள் அன்றைய செய்திகளிலும், மக்கள் சார்ந்த கருத்து ரீதியான அரசியல் விமர்னங்களிலும் காணமுடியும். வன்னிப் புலிகள் தொடங்கி அதன் சர்வதேச வலைப் பின்னல் வரையான, அதன் மக்கள் விரோதப் போக்கும், அதற்கு இசைவான அதன் மாபியத்தனம் வரை, மக்கள் சார்ந்த கருத்து நிலை அரசியலை முன்வைத்தவர்கள் முன் இவை புதியவை அல்ல. இதை புலியாக முன்னின்று செய்தவனுக்கு, இது தான் அவனின் அரசியல் வாழ்க்கை. ஆனால் இந்த வலதுசாரிய செயற்பாடுகளை சரியானதாக ஏற்றுக் கொண்டு, அதையே தமிழ் தேசியமாக கருதியவர்களும், கண்ணை மூடிக்கொண்டு இதன் பின்னால் கும்மியடித்தவர்களுக்கும் "ஆயுத எழுத்து" அதிர்ச்சியளிக்க கூடியவையல்ல. அந்த வகையில் இந்த நாவல் உண்மையின் எதார்த்தமாகும்.

இங்கு "அவன்" அதாவது நான், இதை இப்படிச் செய்தேன் என்பது, நடந்த எதார்த்தத்தினை நியாயப்படுத்தியிருக்கின்றது. இந்த உண்மையை தங்களைப் போல் மூடிமறைக்காது சொன்னதே, சாத்திரிக்கு எதிரான புலியைச் சொல்லி பிழைக்கும் புலித் தரப்பின் இன்றைய எதிர்வினையாகும்.

உதாரணமாக சோபாசக்தியின் நாவல்களை எடுத்தால் அதன் உள்ளடக்கத்துக்கு "ஆயுத எழுத்து"க்கும் இடையேயான அரசியல் ஒற்றுமையையும், வலதுசாரிய ஒத்த நோக்கையும் காண முடியும். அடிப்படையில் புலி அரசியலை விமர்சித்த இலக்கியமாக இருப்பதில்லை. சம்பங்களைத் தவறானதாகவோ அல்லது சரியானதாகவோ காட்டுவதே இந்த இலக்கியத்தில் உள்ள அரசியல் ஒற்றுமையாகும். இந்த இலக்கிய மூகமுடித்தனம் அம்பலமாவதைத் தடுக்கவே, இதை நாவல் இல்லை என்ற நிறுவ முனையும் இலக்கிய விமர்சனப் போக்கைக் காண முடியும்.

குறிப்பாக இந்த இலக்கிய படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்தோ, சமூகம் நோக்கம் சார்ந்தோ, படைப்பு நோக்கத்தைக் கொண்டு இருப்பதில்லை என்பதே அடிப்படையான உண்மை. சாத்திரி கூட சோபாசக்தியின் நோக்கில் இருந்து முரண்படவில்லை.நடந்ததை சரியென்று அப்படியே சொல்லி விடும் சாத்திரியின் நேர்மை, சோபாசக்திக்கும் கிடையாது. சாத்திரி சொன்ன புலி எதார்த்தம் இலக்கிய தன்மை குறைவானதாகவும், சோபாசக்தி மூடிமறைத்து சொல்லும் கையாளும் இலக்கிய மொழி இலக்கியம் என்று கூறுவது தான், இதை நாவல் அல்ல என்று கூறி முன்வைக்கின்றவர்கள் கூறமுனையும் அடிப்படை வேறுபாடகும். இவர்களால் அரசியல் வேறுபாட்டை முன்வைக்க முடிவதில்லை.

"ஆயுத எழுத்தை" இலக்கியமாக குறுக்கிக் காட்டும் இலக்கிய அரசியல்

கலை - இலக்கியத்தை அரசியலுக்கு வெளியில் வைத்து பார்க்க வேண்டும் என்று கூறுவது கூட ஒரு அரசியல். படைப்பு இலக்கிய தன்மை இருக்கின்றதா என்பதைக் கொண்டு, அதை மதிப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். கற்பனைப் படைப்புகளின் அரசியலை மூடிமறைத்தது போன்று, யதார்த்த படைப்புகளில் இதை செய்ய முடியாது. எதார்த்தத்தில் படைப்பாளியும் உயிருள்ள அங்கமாக இருப்பதால், அது பற்றிய தங்கள் கருத்து மூலம் அம்பலப்பட்டுப்போவதை தவிர்க்க, இலக்கிய தன்மை கொண்டு இருக்கின்றதா என்பதை முன்னிறுத்தி விடுகின்ற விமர்சனப் போக்கைக் காணமுடியும்.

கடந்த 30 வருடத்தின் மனித அவலங்கள் வெறும் நிகழ்வுகள் அல்ல. அதன் பின்னால் பாரிய மனித அழிவும், அவலங்களும் நிலவியது. இக்காலத்தில் நாம் வாழ்ந்து இருக்கின்றோம். பங்கு பற்றி இருக்கின்றோம். இந்த மனித அவலத்தை தடுக்க, மக்களை சார்ந்த எதிர் நிலை கருத்துகள் இருந்தன. பல போராட்டங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இது பற்றி அன்றும், இன்றும் அக்கறையற்ற, சமூக நோக்கற்ற இலக்கியம், இலக்கிய ஆய்வுகள் மூலம் நடந்ததை நியாயப்படுத்திவிடுகின்ற குறுகிய போக்கு தான், இலக்கியமாக குறுக்கிவிடுகின்ற விமர்னங்களாக வெளிவருகின்றன. மேட்டுக்குடி – மத்தியதர வர்க்க தனிமனித பிரச்சனைதான், ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனையாக சித்தரிக்கின்ற இலக்கியங்களை தான் இலக்கியம் என்ற அகாரதியை "ஆயுத எழுத்து" விமர்சனம் மூலம் கட்டமைக்க முனைகின்றனர்.

"ஆயுத எழுத்து" புலிக்கு எதிரானது என்ற விமர்சனம்

"ஆயுத எழுத்து" நூல் புலிக்கு எதிரானது என்பது பெரும் பொய், மாறாக புலிக்கு சார்பானது. புலி அரசியலை கேள்விக்கு உட்படுத்தாதது. புலிக்குள் இயங்கிய "அவன்" அதாவது நான் எது சரி என்று புலி கருதியதோ, அதை செய்ததை நியாயப்படுத்திவிடுகின்ற ஒரு நூல். புலிகளாக தங்களைத் தாங்கள் உணருகின்ற ஒருவனின் நடத்தை. இது தான் யாழ் மேலாதிக்கத்தின் வெளிப்பாடு.

புலிகள் இயக்கத்தில் உண்மையான அதன் செயற்பாட்டில் இருந்த ஒருவன், இன்று தன்னை புலியாக உணருகின்ற ஒருவனின் மனநிலை தான் "ஆயுத எழுத்து". சாத்திரி தன்னை புலிக்கு வெளியில் நிறுத்தி இதை எழுதவில்லை. புலியாகவே நின்று எழுதுகின்றார். புலிகளை சுற்றிய பிழைப்புவாதிகள், அவர்களின் புலிமனப்பாங்கில் இருந்து விலகியதற்கு எதிரான எதிர்வினை தான் இந்த நாவல். உண்மையாக போராடியவர்கள், பிழைப்புவாத புலிகளால் இன்று கைவிடப்பட்ட நிலையில், தாங்கள் போராடிய வடிவத்தை புலிகளின் மனநிலையில் நின்று சொல்லும் படைப்பு.

யுத்தத்தில் பங்கு பற்றியவர்கள் தொடங்கி புலிகளின் சர்வதேச மாபிய வலைப் பின்னல் வரை இயங்கியவர்கள், புலிகளின் பினாமிச் சொத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் புலிகளால் புறக்கணிபட்ட இன்றைய சூழலை அங்கீகரிப்பதில்லை. புலிகளின் பாசிச - கிரிமினல் புலி நடத்தையை தங்களின் வீரச்செயலாக காட்டி, தம்மை அங்கீகரிக்கக் கோருகின்றது இந்த நாவல்.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

விரைவில் யேர்மனி , டென்மார்க் ,மற்றும் இலங்கையில் ஆயுத எழுத்து அறிமுகமும் கலந்துரையாடலும்  விபரம் அறியத் தருகிறேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில்... அது, நடவாத காரியம்.
சொறிலங்கா -   டென்மார்க்......  நடக்கும் காரியம்.

Link to comment
Share on other sites

ஜேர்மனியில்... அது, நடவாத காரியம்.

சொறிலங்கா -   டென்மார்க்......  நடக்கும் காரியம்.

 

ஏன் ஜெர்மனி உங்கள் அதிகாரத்தில் இருக்கு என்ற எண்ணமா? <_<:icon_idea:

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

http://eathuvarai.net/?p=4824

 

*சாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை – ராகவன்

 

391 பக்கங்களை கொண்ட இந்த நாவல் சாதாரணமான மனிதர்கள் , அழிவையே தரும் ஒரு அமைப்பொன்றின் அதிகாரத்தினுள் வந்தபின் எவ்வாறு கொலைகள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில், இயல்பாக எவ்வித குற்ற உணர்வுமின்றி பங்கெடுக்கிறார்கள் என்பதை படம் பிடிக்கிறது. இந்த நாவலானது 83 கலவரத்தின் பின் விடுதலைப் புலிகளில் சேர்ந்த ஒரு இளைஞன் சந்தித்த அனுபவங்கள் மட்டுமல்லை, அவன் தன்னார்வத்துடன் புலிகளின் நடவடிக்கைகளில் பங்கு பற்றிய ஒரு பதிவு. விடுதலை புலிகளின், டெலோ மேலான படுகொலை தொடக்கம் பாரிசில் விடுதலை புலிகளின் முகவரான நாதனின் படுகொலை வரையாக நாவல் நீள்கிறது.எனது மனதை மிகவும் அழுத்திய நாவல்களில் இதுவுமொன்று.

raakavanஇந்த நாவலில் வரும் கதா பாத்திரம் ஒரு பெயரிலி. ‘அவன்’ என்று மட்டும் கதா நாயகன் விளிக்கப்படுகிறான். எனவே ‘அவன்’ என்றே நானும் விளிக்கிறேன்.அவன் வெறும் இயக்க கட்டளைகளை ஏற்றுக்கொண்டு மட்டும் செயல் படவில்லை. அதன் பங்காளனாகிறான். அவனதும், இயக்க உறுப்பினர்களினதும்  மானிட விழுமியங்களுக்கெதிரான ஒவ்வொரு செயலும் தினமும் சாப்பிடுவது உறங்குவது உறவு கொள்வது போன்ற அற்ப விடயங்களாக தினசரி நிகழ்வுகளாகின்றன. கொலைகள் சித்திரவதைகள் பழிவாங்கல்கள் ஏமாற்று என்பவை எவ்வித மனக்கிலேசமுமின்றி அரங்கேறுவதன் காலக்கண்ணடியாக ஆயுத எழுத்து இருக்கிறது.

ஒரு மோசமான அமைப்புக்கான தயார்படுத்தலை செயல்படுத்தலை தனது கடமையாக அவன் முன்னெடுக்கும் போது அனைத்து மானிட விழுமியங்களும் புதைக்கப்படுகின்றன. வெறும் உத்தரவுகளை நிறைவேற்றுபவனாக, ஒரு சிப்பாயாக அவன் காட்சிப்படுத்தப்படவில்லை. மாறாக அவன் ஒவ்வொரு நகர்வையும் தனது கடமையாக கருதி செயல்படுகிறான். அவன் மட்டுமல்லை அமைப்பில் அங்கம் வகிக்கும் பலரும் அவ்வாறே. ஒரு ராட்சச இயந்திரத்தின் சிறிய அங்கமாக அதன் சுழற்சிக்குள் அகப்பட்டு தொழில்படுகின்றான் என்பதைவிட அவனும் அந்த இயந்திரத்தின் சுழற்சிக்கு உந்து கொடுக்கின்ற முக்கிய பாத்திரம் வகிக்கின்றான் என்பதையே நாவல் உணர்த்துகிறது. .

ஒரு வகையில் தமிழ் மக்கள் மேலான 83 அரச வன்முறையை தொடர்ந்து அவனும் அவன் போன்றவர்களும் விடுதலை அல்லது இலங்கை அரசை பழி வாங்கல் என்ற ஆர்வத்துடன் புலிகளிலும் மற்றைய அமைப்புகளிலும் சேர்ந்தார்கள் என்பது உண்மையே. அதற்கான நியாயங்களும் இருக்கின்றன. ஆரம்பத்தில் அவன் அமைப்பில் சேரும் போது அவனுக்கு குடும்பம் பற்றிய நினைவுகள் ,காதலி , நண்பர்கள் பற்றிய நினைவுகள் போன்ற இயல்பான மனித உணர்வுகள் வரத்தான் செய்கிறது. இவ்வுணர்வுகளை படிப்படியாக அடக்குவதன் மூலம் தனது மனிதத்தை அவன் மழுங்கடிக்கிறான்.

ஆரம்ப காலகட்டத்தில் அவனுக்கோ மற்றும் பலருக்கோ அமைப்புகளின் முழுப் பரிமாணமும் தெரியவில்லை என்பதும் நியாயமே. அத்துடன் அமைப்புகளின், முக்கியமாக புலிகளின், வன்முறைசார்ந்த சர்வாதிகார தலைமைமுறை ஆரம்பத்தில் முழு பலமும் பெறவில்லை. ஆனால் ஒரு வகையில் அவன் பொறுமையற்றவனாக உடனடி நடவடிக்கையில் ஈடுபட விரும்பும் ஒருவனாக ஈ பி ஆர் எல் எப் இன் புத்தகப்படிப்பில் ஆர்வமற்று புலிகளின் ஆயுதங்களை நம்பி அவர்களுடன் சேர்கிறான். அவனது தெரிவுக்கு அவனது இளம் பராய வயது மற்றும் அரசின் நேரடியான வன்முறை காரணம் என்பதும் யதார்த்தமே.

நாவலின் பக்கங்கள் அவனது நடவடிக்கைகளின் தொகுப்பல்ல. ஹாலிவூட் பட நாயகனின் வீரக்கதையுமல்ல. மாறாக ஒரு வன் முறைக்கலாச்சாரம் எவ்வாறு சமூகத்தில் அங்கீகாரம் பெற்று சகஜமாக்கப்பட்டதென்பதே இக்கதை.நாவலில் வரும் அவன், விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ,இந்திய அரச படைகள் ,ஆயுத அமைப்புக்களின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் பக்கங்களை தனது பங்களிப்புக்களூடாக எவ்வித ஒழிவுமறைவுமின்றி வெளிக்கொணர்கிறான். அத்துமீறல்கள், படுகொலைகள், கடத்தல்களுக்கான திட்டமிடுதல் அவற்றை நிறைவேற்றும் பாங்கு அனைத்தும் வெறும் சாதாரண நிகழ்வுகளாகவே அவனுக்குப்படுகின்றன. துப்பாக்கியின் விசை அழுத்தல் ஒரு பொழுது போக்காகிறது. எதிரி நண்பன் உறவினன் அனைவரும் துப்பாக்கி விசையின் முன் ஒரு புள்ளி. புளட் இயக்கத்தில் இருந்து விலகி வெளி நாடு செல்ல இருந்த தனது பால்ய நண்பனை திடீரென்று சந்திக்கையில் அவன் சுட்டு கொல்கிறான். நண்பனிடம் துப்பாக்கி இருக்குமென்ற சந்தேகத்தில். இங்கு அவனது நிலை கொலை நிலத்தில் வாழும் நிலையே. சிறிய சந்தேகம் துப்பாக்கி விசையின் அழுத்தத்தையே வேண்டி நிற்கிறது.

saaththiriஇக்கதை அறம், மனித விழுமியங்கள் பற்றிய சிந்தனைக்கான இடைவெளி இல்லாத அந்தகாரத்தில் விடப்பட்ட ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல; நடந்து முடிந்த ஒரு கோரமான வன்முறையின் பக்கங்கள் எவ்வாறு சாதாரண சம்பவங்களாக சகஜ நிலையாக பார்க்கப்பட்டன என்பதையும் நாவல் படம் பிடிக்கிறது. அவன் சம்பவங்களை நியாயத்தராசில் போடவில்லை ; மாறாக வாசகனிடம் அதனை விட்டுவிடுகிறான். சாத்திரியின் இந்த உத்தி அவரை தேர்ந்த கதை சொல்லியாக்கியிருக்கிறது.

மனிதத்துக்கெதிரான அப்பட்டமான குற்றசெயல்கள் ஸ்தாபனமயப்பட்டு எதிர்ப்பின்றி தினசரி நிகழ்வுகளாகும் போது இக்குற்றச்செயல்களின் பங்காளர்களுக்கு இது சாதாரணமான நிகழ்வுகள். மனிதத்துகெதிரான பாரிய குற்ற செயல்களானது அங்கீகரிக்கப்பட்டு வழமையாக்கப்படும் போது அதற்கெதிரான அறச் சீற்றமோ அரசியல் எதிர்ப்போ இன்றி நடைமுறைப்படுத்தப்படுகின்றதென்கிறார் ஹன்னா ஆரெண்ட் எனும் அறிஞர்.ஒரு ஆயுத அமைப்பின் பிறழ்வு, அதன் நாசகார சக்தி, அதில் இணைந்து கொண்ட இளைஞன் ஒருவனின் பங்களிப்பு இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவாறு கதை நகர்கிறது.

0000

இந்திய ராணுவத்தினதும் இலங்கை ராணுவத்தினதும் கோரத்தனங்கள் படுகொலைகள் பாலியல் பலாத்காரம் இவ்வதிகாரங்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுத அமைப்புக்களும் அவர்களின் வன்முறையும் அதற்கான புலிகளின் எதிர் நடவடிக்கைகள் ஊடாகவும் அவன் வருகிறான். வன்முறையே வாழ்க்கை முறையாகி ஒருமுழுச்சமூகத்தையும் காவு கொண்ட கதையை நாவல் சொல்கிறது.

இந்த நச்சு சூழல் மக்கள் மத்தியிலும் பரவியது யதார்த்தமே. கம்பத்தில் கட்டி கொல்லப்பட்ட மனிதர்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டபோது பலர் வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல அதனை நியாயப்படுத்தவும் தவறவில்லை. அது மட்டுமல்ல புலிகள், டெலோ மீது நடத்திய படுகொலைகளின் போது ஒரு சிலர்’ சுட்டு ‘ களைத்துப்போன’ புலிகளுக்கு சோடா கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அறிவு ஜீவிகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் இவ்வழிவு கலாச்சாரத்தை நியாயப்படுத்தி முண்டுகொடுத்திருக்கின்றனர். அதற்காக ஒட்டு மொத்த சமூகமும் வன்முறைக்கலாச்சாரத்தை அங்கீகரித்ததென்பதல்ல. மாறாக வன்முறைக்கலாச்சாரமானது எவ்வாறு பல் பரிமாணங்களில் செயல்படுகிறது, அக்கலாச்சாரம் எவ்வாறு சாதாரண நிகழ்வாக்கப்பட்டு அங்கீகாரம் பெறுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இந்திய ராணுவ அட்டூழியம் அதனை தொடர்ந்த அவனது பிரான்ஸ் வருகை. அதன் பின் சர்வதேச ஆயுதக்கொள்வனவு என கதை நகர்கிறது. ஆயுத கொள்வனவு செய்கையில் பாலியல் தொழிலாளர்களிடம் போவதிலிருந்து ஜானி வாக்கர் விஸ்கி, நல்ல பிரஞ்சு வைன் தேடுதல் மற்றும் போதை பொருள் கடத்தல் வரை இயக்கத்துக்கான கடமையை எவ்வித கேள்விகளும் இன்றி அவன் செய்கிறான். விடுதலைப்புலிகள் கட்டுப்பாடான இயக்கம் என்ற முகத் திரை இங்கு கிழிந்து போகிறது.அதனை விட அவன் தயாரிக்கும் பெண் தற்கொலை போராளி மூலம் பொலிஸ் அதிகாரிகளை வலையில் விழுத்த அவன் திட்டம் போடுகிறான். அவளை அவர்களுடன் பாலியல் உறவு கொள்ள ஏற்பாடு செய்கிறான். அவள் அவனுக்கு ஒரு இயந்திரமாகவே தெரிகிறாள். அவள் இறந்த பின் அவளது முக அடையாளம் தெரியக்கூடாதென்பதில் கவனம் செலுத்தி வெடி மருந்து கொண்ட கழுத்துப்பட்டியும் மாட்டுகிறான்.

மற்றைய இயக்கங்களுக்கு மேலான புலிகளின் படுகொலைகள்,  தாக்குதல்கள் அவனுக்கு மட்டுமல்ல அவனுடன் சேர்ந்திருந்தவர்களுக்கும் நியாயமாகவே படுகிறது. டெலோவை அழிப்பதற்கு உறுப்பினர் பலரின் எவ்வித விசாரணையுமற்ற உற்சாகமான பங்கு பற்றலும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

 

0000

மனிதன் சுதந்திரமானவன் என்பது தீர்மானகரமானது. ஏனெனில் இவ்வுலகில் அவன் எறியப்பட்டபின் அவனது ஒவ்வொரு செயலுக்கும் அவனே பொறுப்பென்கிறார் சாத்தர். அவனும் அவனை சேர்ந்த பலரும் அழிப்புகளை உற்சாகத்துடன் செயல்படுத்துகின்றனர். டெலோ அமைப்பை அழிப்பதற்கான புலிகளின் தலைமையின் நியாயப்படுத்தலை கண்மூடித்தனமாக ஏற்றுகொண்டு அவர்கள் செயல் படுகின்றனர். ஒருவகையில் புலிகளின் தலைமையானது மாற்று இயக்க முரண்பாடுகளை அழிப்பு முறையை விடுத்து தீர்ப்பதற்கான வழிவகைகளை கைக்கொள்ளவில்லை என்பது யதார்த்தமெனினும் அந்த அழிப்பை முன்னின்று நிகழ்த்த துணை புரிந்த உறுப்பினர்களின் பாகத்தை எவ்வாறு கணக்கிடுவது? விசாரணையின்றி மற்றைய இயக்கங்களுக்கு மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதை எவ்வாறு எடுத்துக்கொள்வது? ஹன்னா ஆரெண்ட் அடொல்ப் ஐச்மன் என்ற நாசி கொலையாளியை பற்றி ஆயும் போது அவன் கொலைகளை செய்தான் ஆனால் அதனை ஐச்மனுக்கு பகுத்தறிவாக சிந்திக்கும் திறன் இருக்கவில்லை என் கிறார். இன்னிலையை கெடுதியின் இயல்பாகம் (banality of evil) என்கிறார் அவர். அவனது செயல்களை banality of evil எனக்கொள்வதா அல்லது சாத்தர் சொல்வது போல் மனிதனின் செயலுக்கு அவன் பொறுப்பா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.

பாரிசில் விடுதலை புலிகளின் காசை கையாடுகிறார் என குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நாதன் வரை அவனது பங்களிப்பு தொடர்கிறது. அவனும் கொலை செய்வதற்காக இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்ட தேர்ந்த கொலையாளியை பாதுகாப்பாக பிரான்ஸ் கொண்டு வருவதிலிருந்து கொலை செய்தபின் அவனை பாதுகாப்பாக பிரான்ஸிலிருந்து வெளியேற்றுவது வரை முழு பொறுப்பையும் நிறைவேற்றுகிறான். கொலையைச் செய்து விட்டு அதனை இலங்கை அரச உளவாளிகளின் தலையில் சுமத்துவது ,மக்களை தம்வசப்படுத்துவது ,அதிக பணம் சேர்ப்பது என்ற திட்டத்துடன் கொலை நிறைவேறுகிறது.

அல்பேர்டோ மொறவியாவின் -கொன்ஃபொர்மிஸ்ட் -என்ற நாவலை இரண்டு வருடங்களுக்கு முன் வாசித்திருந்தேன். பாசிஸ்ட் இத்தாலியில் புலனாய்வு துறையில் தொழில் புரியும் மார்சலோ என்ற பாத்திரத்தின் புனைவு அக்கதை . பாசிச எதிர்ப்பாளரான தனது முன்னை நாள் பேராசிரியரை பாரிசில் வைத்து கொலை செய்ய புலனாய்வு துறையால் மாசலஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அப்போது தான் திருமணமான அவன் தனது தேன்னிலவை கொண்டாட பாரிசை தேர்ந்தெடுக்கிறான். ஏனெனில் தனது இரகசிய நடவடிக்கைக்கு அது துணை போகுமென்று. கொன்பொர்மிஸ்ட் நாவலில் ஒரு இடத்தில் மாசலசின் செயல் பற்றி இவ்வாறு…” அக்கணத்தில் அவளை விருப்புடன் கொன்றிருப்பான் . அவள் எதிரியாக இருந்துகொண்டு உயிருடனும் இருப்பது அவனுக்கு சகிக்கவில்லை. அவள் இறப்பதை காண மனப்பயம் இருப்பினும் அவள் தன்னை நேசிப்பதை விட அவளது இறப்பு அவனுக்கு அதிக மகிழ்வை தந்தது”.
0000

306938-gun

 

அது போல் ஆயுத எழுத்து அவன் இலங்கை பொலிசிடம் சிக்கி சித்திரவதை படும் போது ,ராணி என்ற விசாரணையாளரிடம் சிக்குகிறான். ராணி அவனை சித்திரவதைக்குள்ளாகி பின்னர் அவன் மேல் காதல் கொள்கிறாள். தனது கதையையும் சொல்கிறாள். தனது கணவன் ஈ பி ஆர் எல் எப் இலிருந்து விலகி இருக்கையில் புலிகளால் அனியாயமாக சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை விவரித்து புலிகளை பழி வாங்க பொலிஸில் சேர்ந்ததாக தெரிவித்தாள். இருவரும் உடலுறவு கொள்கின்றனர். அவன் பொலிசில் பிடி பட முன்னர் கச்சிதமாக ஒரு தற்கொலையாளியை தயார் செய்து குண்டு வெடிப்பொன்றை நிகழ்த்த ஏற்பாடு செய்துவிட்டான்.

தீவிரமான விசாரணைகளின் பின் அவன் விடுவிக்கப்பட்டு திரும்ப வெளி நாடு செல்ல விமான நிலையத்தில் நிற்கையில் தொலை பேசி அழைப்பு ராணியிடமிருந்து. உடனே அவன் எங்கு குண்டு வெடிப்பு நிகழ இருக்கிறதோ அங்கு அவளை வர சொல்கிறான். அவள் அந்த குண்டு வெடிப்பில் தப்பமாட்டாள் என அவன் திருப்தி அடைகிறான். தனது கணவன் அநியாயமாக புலிகளால் கொலை செய்யப்பட்டபின் பொலிஸில் அவள் இணைவதற்கான காரணம் அதன் சரி பிழைகளுக்கப்பால் அவனுக்கு உறுத்தவில்லை. அவள் அழிந்து போவது அவசியம் என நம்புகிறான்.

தனது தந்தை தன்னை கண்டிப்புடன் நடத்தியதை சிறு வயதில் இருந்து வெறுத்த அவன் ஒரு முறை இயக்கத்தில் இருந்து வீடு செல்கிறான். அங்கு முற்றத்தில் ஒரு கோழியும் சேவலும் உறவாடக் காண்கிறான். அச்சமயம் அவனது தந்தை அவனை திட்டி தீர்க்கிறார் . அவன் தனது கைத்துப்பாக்கியை எடுத்து சேவலை சுட்டு கொல்கிறான். தகப்பன் மேலான அவனது ஆத்திரம் கோழியுடன் உறவு கொண்டிருந்த சேவல் மேல் வந்தது. அவன் கோழியை கொன்றது பற்றி மன உறுத்தல் கொள்ளவில்லை, மாறாக கோழிக்கறியை சாப்பிடாமல் விட்டது தான் அவனுக்குப் பிரச்சனை. ஒருவகையில் தந்தை மேலான தீர்க்கப்படாத பகைமை சேவல் உறவு கொள்ளும் போது அதை கொல்ல தூண்டியதா எனவும் கருதத் தோன்றுகிறது
000000

பிரான்சுக்கு வரும் அவன் ஒரு பிரஞ்சு பெண்ணை காதலிக்கிறான். ஆனாலும் அவன் தன்னை விடுதலைப் புலிகளின் ஒரு பாகமாகவே நினைக்கிறான். . மற்றவர்களை தயார்படுத்த அவன் தொடர்ந்தும் முனைகிறான். அவளுக்கு தெரியாமல் பாரிசை விட்டு வெளிவருகிறான்.அவன் அழகையும் அன்பையும் காதலையும் உணரக்கூடியவான இருப்பினும் இவை தன்னை ஆட்கொள்ள கூடாதென உறுதியாக இருக்கிறான். தான் அங்கத்தவனாக இருக்கும்  அமைப்பிற்கான கடமையுணர்வு மேலோங்க தான் செய்யப்போகும் நடவடிக்கைகள் மேலான ஈர்ப்பு ,அன்பு இரக்கம் போன்ற விழுமியங்களை இழக்க அல்லது அடக்க செய்கிறது.

இந்த நாவலில் 1990களில் நிகழ்ந்த முஸ்லிம் வெளியேற்றம் பற்றிய பதிவானது நாவலுக்கு வெளியில் இருப்பதாகவே எனக்கு படுகிறது. ஏனெனில் அவன் அதுவரை நிகழ்வுகளை நேரடி அனுபவங்களூடாகவே சொன்னான். ஆனால் இது பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையாக தனியாக பதிக்கப்பட்டது அல்லது புகுத்தப்பட்டது போன்ற உணர்வை தந்தது. அதனை விட பதிப்பாளர்கள் எழுத்துப்பிழைகளை சீர்பார்த்திருக்க வேண்டும். பெரிதாக எழுத்துப்பிழை இல்லாவிடினும் அதில் கவனம் செலுத்துவது அவசியம்.

-கொன்ஃபொர்மிஸ்ட் -இல் வரும் மாசலோவின் இறப்பு முசோலினியின் பாசிச இத்தாலியின் ஆட்சி முடிவுடன் நிறைவேறுகிறது. காரில் செல்லும் மாசலோ நேசப்படைகளின் விமான குண்டு வீச்சில் சிக்கி இறக்கிறான். இது பாசிசத்தின் முடிவுக்கான ஒரு குறியீடாக அந்த நாவலில் வருகிறது. ஆயுத எழுத்து நாயகனும் மே 2009 இன் பின் புலிகளின் அழிவின் முடிவுடன் கொல்லப்படுகிறான். கொல்லப்பட்டது கதா நாயகனல்ல, புலிகளின் வன் முறைக்கலாச்சாரமே என்கிறது ஆயுத எழுத்து.

ஆனால் வன்முறை கலாச்சாரமானது வெறும் தமிழ் பகுதிகளுக்கு சொந்தமானது அல்ல. ஆயுதகலாச்சாரம் இலங்கையின் ஒட்டுமொத்த சமூகத்திலும் வேரூன்றியதுதான் யதார்த்தம். 80 களில் நிகழ்ந்த ஜேவி பி யினரின் கொலைகள் 1970 களிலிருந்து இலங்கை அரச படையினர் தமிழ் சிங்கள மக்கள் மேல் நிகழ்த்திய அப்பட்டமான படு கொலைகள் மனித உரிமை மீறல்கள். இதற்கு மகுடம் வைத்தது போல் முள்ளிவாய்க்காலில் அரச படைகள் நிராயுத பாணிகளை சித்திரவதை செய்து படுகொலைகள் செய்துவிட்டு அக்காட்சிகளை கைத்தொலைபேசிகளால் படமெடுத்து மகிழ்ந்ததும் ,அப்படங்களை வெற்றி சின்னங்களாக வரித்ததும் வன்முறைக்கலாச்சாரத்தின் இன்னுமொரு பிரிக்க முடியாத அங்கமே. இவை பற்றி அனைத்து பிரிவினரிடமிருந்தும் பதிவுகள் வர வேண்டும்.

முடிவாக சாத்திரி தரமான நாவலை மட்டுமல்ல ஆயுதக்கலாச்சாரத்தின் நச்சு சூழல் பற்றிய நல்லதொரு பதிவையும் தந்திருக்கிறார்.
00

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஒரு போராளியின் அனுபவங்கள்...

http://www.senguruthi.com/2015/07/blog-post_22.html

 
10930934_10202901764304884_1821295818603

ஆயுத எழுத்துசாத்திரி 
திலீபன் பதிப்பகம் | விலை:400/-
 
நிறுவனமயப்பட்ட அனைத்துமே  அதிகாரம் சார்ந்ததுதான் .அதிகாரம் ஏனையோரை ஒடுக்குகிற கருவியாக உருமாறக்கூடியது என்பது எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடியதே .அது ஒரு புரட்சிகர அமைப்பாக இருக்கலாம், கலகக்குழுவாக இருக்கலாம், வர்க்க சாதிய விடுதலையை கோருபவையாக இருக்கலாம் அல்லது ஈழ மக்களின் துயர் தோய்ந்த நீண்ட நெடுநாளைய போராட்டமாக இருக்கலாம் எது எப்படி இருந்தாலும் மேற்கண்ட கூற்று எல்லாவற்றுக்குமே பொருந்தக்கூடியதே!
 
புறத்திலும் அகத்திலுமாய் விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பல்வேறு தகவல்களை நாம் வாசித்தும் கேட்டும் இருக்க கூடும் ஆனால் அந்த இயக்கத்தின் உள்நாட்டு வெளிநாட்டு பிரிவுகளின் நீண்ட வருடங்கள் பணியாற்றிய சாத்திரி கூறுகிற போது  சுவாரஸ்யம் மேலிடுகிற அதே சமயம் வெறுப்பும் உடனிணைந்து கொள்கிறது.
 
ஒருமொழி பேசும் இனமக்ககளை இன்னொரு மொழிபேசும் இனமக்கள் பூர்வகுடிகள் என்கிற ஒற்றை அதிகாரத்தை கொண்டு எல்லா வகைகளிலும் ஒடுக்க முனைவதை யாவராலும் ஏற்க முடியாது.அதை ஒடுக்க அல்லது வேரறுக்க கிளர்ந்தெழும் விடுதலை வேட்கைகொண்ட இயக்கங்கள் அச்சமூகத்தை நன்கு ஆராயாமல் அதன் வரலாற்று தன்மைகளை நிகழ்காலத் தேவைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் தமிழ் பேசும் சகல பண்பாட்டு வேறுபாடுகள் உடையவர்களையும் புறக்கணித்து தமிழ் இந்துக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று புறப்படுகிற போது என்ன வகையான விபரீதங்கள் எல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதையும் என்னென்ன வரலாற்று தவறுகளை உணர்ச்சிக்கு ஆட்பட்டு மனிதாபிமானமே இல்லாமல் செய்ய வேண்டி இருக்கும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் தான் விடுதலை புலிகள் இயக்கம்.
 
ஒரு இயக்கத்துக்கான கோட்பாடு அத்தலைமையினாலே மீறப்படும் போது அதை எதிர்த்து கேள்வி கேட்க்காமல் அப்படியே ஏற்று செயல்பட வேண்டிய மனோநிலையும் தலைமை செய்தால் அது சரியாகத்தான் இருக்கும் அல்லது அதை எதிர்த்து  நமக்கு நாமே சாவை தேடிக்கொள்ள வேண்டுமா  என்பதான கீழ்படிதல் ஒவ்வொரு இயக்கத்தின் சர்வாதிகார தனத்தை நிரூபிப்பதாக இருக்கிறது.இன விடுதலையின் பேரால் தமிழ் பேசும் பகுதிகளில் இருந்து ஒட்டுமொத்த முஸ்லீம்களின் உடமைகளையும் வலுகட்டாயமாக பறித்துக்கொண்டு வெறும் கையோடு வெளியேற்றிய கொடூரத்தை புனைவில்லாமல் சொல்லும் காட்சி நெஞ்சை கணக்க செய்கிறது.
 
ஒரு புரட்சிகர இயக்கம் தன் ஆயுத தேவைக்காகவும் இன்னபிற தேவைக்காகவும் என்னென்ன வேலைகளிலெல்லாம் ஈடுபட வேண்டி இருக்கும் என்பதை சாகசத்தோடு வெளிநாடுகளில்  நடைபெற்ற சம்பவங்களின் ஊடே சொல்லி இருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது.இதுநாள்வரை நமக்கு சொல்லப்பட்ட செய்திகளை கடந்து புலிககளின் சர்வதேச தொடர்புகளையும் அவர்களின் வலைப்பின்னலும் பிரம்மாண்டமானதும் சாகசத்தன்மை வாய்ந்தது என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.
 
இந்திய அரசியல் ,இந்திய அரசியலுக்கு ஈழப் பிரச்சனைகள் கொடுத்த நெருக்கடிகள் ,நெருக்கடிகளால் இந்திய இராணுவ வருகை,வருகைக்கு பின்பாக ஈழத்தில் நடைபெற்ற அக்கிரமங்கள் அந்த அடாவடித்தனத்துக்கு புலிகளின் எதிர்வினை ,நள்ளிரவில் பிரபாகரனை சுட்டுக்கொல்ல டெக்ரா டூனில் இருந்து வான்வழியாக வந்திறங்கும் ஆயுதப்படை .இரவோடு இரவாக நடந்த சண்டையில் வந்த அநேகரும் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் மரித்துப்போக இது மேலும் சிக்கலை கொடுக்குமோ என்கிற பயத்தில் பின்வாங்கிய இந்திய ராணுவம் என ஒவ்வொரு காட்சியாக இந்திய -இலங்கை அரசுகளுக்குமான  தொடர்புகளின் வழியே அப்போதைய தமிழக முதல்வராய் இருந்த எம்.ஜி.ஆரின் உதவிகள் என ஈழ மக்களின் மீதான பரிவு விடுதலைப் புலிகளின் தமிழக ஆயுத பயிற்சிகள் என விரிகிற நூலில் பெண் போராளிகள் குறித்தும் முதல் கரும்புலி பற்றியான குறிப்புகளும் இடம் பெற்றிருக்கிறது.கன்னி வெடியும் தற்கொலைப் படையும் புலிகளின் பிரத்தியேக போராட்ட யுக்தியாக இருந்தது என்பதை இந்நூலின் மூலம் காண முடிகிறது.அதே வேலை எத்தகைய மனோநிலையில் அவர்கள் வேலை செய்திருக்கிறார்கள் மரணத்தை முன் வந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கான புறச்சூழலையும் உணர்த்துகிறது.
 
பிரான்ஸ்,தாய்லாந்து,ஜெர்மனி,சுவிஸ்,இங்கிலாந்து,சிங்கப்பூர்,ருமேனியா,கம்போடியா,செக் குடியரசு,கிழக்கு ஆப்ரிக்கா,மியான்மார்,இத்தாலி,ரஷ்யா,பெல்ஜியம்,போலாந்து,இஸ்காண்டிநோவியா,இந்தோனேசியா,நைஜீரியா மற்றும் இந்நூலில் அரசியல் சூழல் கருதி குறிப்பிட முடியாமல் போன நாடுகளும் சேர்த்து உலகம் சுற்றும் வாலிபனாக வளம் வரும் வெளிநாட்டு பிரிவு ஊழியர்கள் மருந்து,ஆயுதம் மற்றும் இதர கொள்வினை செய்யும் போது எதிர்கொள்ளும் துனீ கர செயல் குறிப்பாக ஆப்ரிக்க கள்ளச்சந்தை தலைவனிடம் ஆயுத கொள்வினைக்காக சந்திக்கும் தருவாயும் இந்தியாவின் பெங்களூரில் துறைமுக அதிகாரியிடம் மருந்து கொள்வினைக்காக இசைந்து போகவேண்டிய சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் ஆண் தன்மையை உணர்த்துவதோடு..... இயக்க உறுதிமொழிகளும் கட்டுப்பாடுகளும் இங்கு எடுபடாது என்பதை நடைமுறை எதார்த்தத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.          
 
மொத்தம் 32 விடுதலைக் குழுக்கள் இயங்கியதாக சொல்லும் சாத்திரி ஒவ்வொரு குழுவும் யாருடைய நிதியின் மூலம் இயங்கின அவைகள் எதிர்கொண்ட பிரச்சனைகள் சக குழுக்களோடு கொண்ட முரண்பாடு முற்றி பகையுணர்வாக உருமாறி ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்ட சம்பவங்கள் பின் அதன் தொடர்ச்சியாய் புலிகளால் அனைத்து குழக்களும் ஒழித்துகட்டபட்ட கதைகள் என நீள்கிறது. சமகால படிப்பினையாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தோற்றமும் மறைவும் நம் கண்முன்னே மனிதத் தன்மையற்ற ஒரு காட்சியாய்  இன அழிப்பாய் நடந்துமுடிந்தபோதிலும் ஒரு புரட்சிகர இயக்கம் சரியான திசைவழியில் பயணிக்காமல் போனால் அது தானாகவே நீர்த்துப்போகும் என்பதன் சமகால எடுத்துக்காட்டு தான் ஈழப் பிரச்சனையில் விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவமாகும்.
 
புலிகள் அமைப்பின் தலைவர்கள் கிட்டு,பொட்டு அம்மன்,ஆண்டன் பாலசிங்கம்,அவரின் மனைவி அடேல்,மாத்தையா,கருணா,நடேசன்,குமரன் பத்மநாபன்,எல்லாவற்றுக்கும் முன்பாக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபன் என ஒரு இன விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு கூறுகளை அதன் அரசியல் தத்துவார்த்த நடைமுறை முரண்பாடுகளை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது ஆயுத எழுத்து.
 
நெருக்கடி ,உல்லாசம்,காமம்,வேட்கை,காதல்,சாகசம்,சுவாரஸ்யம் என மனித வாழ்நிலையின் பல்வேறு அம்சங்களை சுமந்து நிற்கும் ஒரு இயக்கப் போராளியின்  அனுபவங்கள் நிறைந்த இத்தொகுப்பு முழுமையானதல்ல மிக சொற்பமான பகிர்வுகளே என்கிற போதும் உணர்ச்சி வேகத்தில் எடுக்கிற முடிவுகள் ஒருபோதும் நன்மை பயக்காது மாறாக விபரீதத்தில் தான் கொண்டு நிறுத்தும் என்பதை தான் சிறுவயது அனுபவத்தோடு சுட்டிக்காட்டி இருப்பது தான் இத்தொகுப்பின் தனித்தன்மையாக அமைந்திருக்கிறது.அப்பவே   படி....   படினு.... சொன்னாங்க நான் தான் கேக்கல.... என மனசாட்சி மறுகும்  மனித தடுமாற்றம் இயல்பானதே!
Link to comment
Share on other sites

  • 3 months later...

சாத்திரியின் ஆயுத எழுத்து

Posted on 11/11/2015 by noelnadesan

படித்தோம் சொல்கிறோம்

po முருகபூபதி

தாயும் இன்றி தந்தையும் இன்றி தான் ஒரு இஸ்லாமியன் என்ற பிரக்ஞையே இல்லாமல் குழந்தைப்பருவத்தில் இவர்களுடன் இணைந்துகொண்டு இயக்க முகாமில் தேநீர் தயாரித்துதரும் கிச்சான் என்ற சிறுவனுக்கும் ஜீகாத்துக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் கரிகாலன் என்பவர் அவனைக்கொண்டே கிடங்கு வெட்டச்செய்து அவனது தலையில் போடச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கிறார்.

கிச்சானின் மரணவாக்குமூலம் இவ்வாறு பதிவாகிறது:
” அண்ணே… எனக்கு அப்பா யாரெண்டே தெரியாது. அம்மாவும் துரத்திவிட்டா. பிறகு எங்கேயெல்லாமோ அலைஞ்சு திரிஞ்சன். ஆனா, நான் இஞ்சை வந்தாப்பிறகு உங்களைத்தான் ஒரு சகோதரமா நினைச்சுப் பழகியிருக்கிறன். சரியான தாகமா இருக்கு. கடைசியா உங்கடை கையால கொஞ்சம் தண்ணி தாங்கண்ணே. அண்ணே நான் இங்கே வந்தபிறகு தொழுறதைக்கூட கைவிட்டிட்டன். நான் ஒரு முஸ்லிம் எண்டதைக்கூட மறந்தே போயிற்றுது. அதாலைதான் இது அல்லாஹ் தந்த தண்டனையா இருக்கும். நான் தொழுகை நடத்துறன். அண்ணே நீங்கள் போய் கரிகாலன் அண்ணையை கூட்டிவாங்க.”(பக்கம் 321)

சாத்திரியின் ஆயுத எழுத்து நாவலின் பெயரைப்பார்த்ததும் எனக்கு மாதவன், – இயக்குநர் பாரதிராஜா நடித்து மணிரத்தினம் இயக்கிய ஆயுதஎழுத்து திரைப்படமும் அதன் பெயரளவில் நினைவுக்கு வந்தது.
வடக்கில் இந்தியத் திரைப்படங்களை புலிகள் தடைசெய்திருந்த காலப்பகுதியில் – தமிழர் கலாச்சாரத்திற்கு அந்தப்படங்கள் ஊறுவிளைவிக்கின்றன என்றே அவர்களின் தலைவர் நியாயம் சொன்னார்.ஆனால், அவர் பாதுகாப்பாக பங்கருக்குள் இருந்து ஆயுத எழுத்து திரைப்படம் பார்த்துவிட்டு, தன்னைப்பார்க்க வந்திருந்த முள்ளுமலரும் மகேந்திரனிடம், ” பாரதிராஜா அந்தப்படத்தில் நடித்திருப்பது அநாவசியமானது ” என்றும் விமர்சனம் சொல்லிவிட்டு மகேந்திரனுக்கு பல திரைப்படங்களின் சி.டி.க்களையும் அன்பளிப்பாக கொடுத்தனுப்பினார்.
தற்பொழுது பிரான்ஸில் புகலிடம்பெற்று வதியும் முன்னாள் விடுதலைப்புலிப்போராளி

சாத்திரியின் ஆயுத எழுத்து நாவலை அவுஸ்திரேலியாவில் வதியும் இலக்கிய நண்பர் டொக்டர் நடேசனிடம் பெற்று படித்தேன்.

யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த கௌரிபால் சிறி என்ற சாத்திரி, 1984 இல் தமது பாடசாலைப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைந்துகொண்டவர் என்பது தெரிகிறது. 2001 ஆம் ஆண்டு அந்த அமைப்பின் பல பிரிவுகளிலும் உள்நாட்டு வெளிநாட்டு கட்டமைப்புகளிலும் பணியாற்றியிருப்பவர். அவர் பெற்ற அனுபவம், அவரது ஆயுத எழுத்தாக எமது முன்னால், 386 பக்கங்களில் விரிந்திருக்கிறது.

” படியுங்கோடா…படியுங்கோடா ” என்ற பல்லவிதான் அங்கு ஒவ்வொரு வீடுகளிலும் பேசுபொருளாகவும் நீடித்தது. இளைஞர்கள் மட்டுமன்றி இளம் யுவதிகளும் கல்விக்கு முழுக்குப்போட்டுவிட்டு சயனைட்டும் அணிந்து ஆயுதமும் ஏந்தத்தொடங்கியதும் அந்த அப்பாவி பெற்றோர்களின் கனவுகள் யாவும் குலைந்துபோனது. புலிகளின் தாகம்; தமிழீழ தாயகம் என்று இளம்தலைமுறை பாடத்தொடங்கியதும் அந்தப்பெற்றோர் கையாலாகாதவர்களானார்கள்.

இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களில் ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் அறிமுகமானபொழுது கல்வியையே மூலதனமாக வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இந்த மறைந்திருந்து தாக்கிவிட்டு ஓடும் தந்திரோபாயமான போராட்டத்திலிருந்து தப்பவைப்பதற்கே பெரிதும் முயன்றனர்.
இந்த நாவலில் வரும் அவன் என்ற பாத்திரத்துக்கு பெயர் இல்லை. கிட்டு, மாத்தையா, பொட்டு அம்மான், கரிகாலன், ஸ்ரீசபாரத்தினம், லோரன்ஸ் திலகர், யோகி, இப்படி எல்லோரும் தமிழ் உலகம் அறிந்த பெயருடன் வருகிறார்கள். ஆனால் இந்நாவலின் நாயகன் பெயர் அவன். இந்த அவனில் பலர் இருக்கலாம். ஏன் நீங்களாகவும் இருக்கலாம் … என்று ஒவ்வொரு ஈழத்தமிழ் இளைஞனின் தலையிலும் அனைத்தையும் வைக்கிறார் சாத்திரி.

விடுதலைக்காக என்னவோ எல்லாம் செய்துவிட்டு, எத்தனையோ சகோதரப்படுகொலைகளையும் அழிவுகளையும் சந்தித்துவிட்டு தமிழ் ஈழத்தின் பெயரால் எத்தனையோ பாதகங்களையும் குற்றங்களையும் புரிந்துவிட்டு விபசாரிகளின் அரவணைப்பில் எல்லாம் சுகித்துவிட்டு, இறுதியில் தலைவர் போர் நிறுத்தத்திற்கு தயாராகிவிட்டார், சிறிதுகாலத்துக்கு எல்லாவற்றையும் நிறுத்துமாறு சொல்லிவிட்டார், முதலான பணிப்புரைகள் வந்த பின்னர்தான் இந்நாவலின் நாயகன் அவனுக்கு, தனது வாழ்வாதாரம் எதிர்காலம் பற்றிய சிந்தனை வருகிறது.

உணவு விடுதியில் எச்சில்கோப்பை கழுவும் பொழுதான் சுடலைஞானம் பிறக்கிறது.
” ஊர் சுத்தாமல் படியடா படியடா ” என்று அவனது அப்பா திட்டிய திட்டுக்கள் திரும்பத்திரும்ப அவன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.

மது, புகைத்தல், உடலுக்கு தீங்குவிளைவிக்கும் போதைவஸ்து முதலானவற்றை அடியோடு வெறுத்தவர்தான் அவனுக்கும் அவனைப்போன்ற பல்லாயிரம் இளைஞர் யுவதிகளுக்கும் ஆதர்சமாக விளங்கிய தலைவர். ஆனால் அவர் அரசியல் ஆதாயம் கருதியோ தந்திரோபாயமாகவோ போர்நிறுத்தத்திற்கு உத்தரவிட்டதும் அவர் தவிர்க்கச்சொன்னவற்றை நாடி ஓடி இறுதியில் மதுவெறியிலேயே அவன் காரை செலுத்திச்சென்று பள்ளத்தில் வீழந்து மடிவதுடன் நாவல் முடிகிறது.

தலைவரின் கொள்கைகள் கோட்பாடுகள் ஈழத்தமிழனுக்கு மட்டுதான் விதிக்கப்பட்டிருந்ததா…? ஈழப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் நிதி சேகரிக்கவும் புகலிட நாடுகளில் தஞ்சமடைந்த இளைஞர்களுக்கு விதிக்கப்படவில்லையா?

ஒரு தடவை விமானத்தில் பறந்துகொண்டிருந்தபொழுது விமானப்பணிப்பெண் அருந்தத்தந்த பியரின் பெயர் டைகர். புலியின் பெயரிலும் பியர் இருப்பது எனக்கு அன்றுதான் தெரியும். சாத்திரி எழுதியிருக்கும் ஆயுதஎழுத்து நாவலின் இறுதியிலும் மலிவுவிலையில் விற்கப்படும் சோழன் பியர்வருகிறது. என்ன ஒற்றுமை. சோழமன்னனின் புலிக்கொடியுடன் இரண்டு பியர்களையும் ஒப்பிட்டுப்பார்க்க மனம் கூசியது.

நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத்தேர்தலில் ஒரு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளரை எப்படியாவது அதிகூடிய விருப்பு வாக்குகளினால் வெல்லவைக்கவேண்டும் என்பதற்காக பெரும்பிரயத்தனப்பட்டு, ” சோழன் பரம்பரையே எழுந்து வாடா” என்ற பாடலையும் அவருக்கு சார்பான இணையத்தளம் ஒன்று அடிக்கடி ஒலிபரப்பியது.
கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து முன் தோன்றிய தமிழன் பரம்பரையில் சோழமன்னனும் இடையில் புகுந்துகொண்டான். இந்தப்பரம்பரையின் சரித்திரம் தெரியாத யாரோ ஒரு மதுப்பிரியன் டைகர் பியரும் – சோழன் பியரும் கண்டுபிடித்துவிட்டான்.

இன்று யாழ்ப்பாணம்தான் சாராய விற்பனையில் இலங்கை அரசுக்கு வரிவழங்குவதில் முன்னிலை வகிப்பதாக நல்லாட்சிக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பினாலும் ஆதரவு வழங்கப்பட்ட புதிய ஜனாதிபதியின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியவரும் இந்நாவலின் நாயகனின் தலைவர்தான். ஈழம் கேட்ட தலைவரின் வழித்தோன்றல்கள் தற்பொழுது பாராளுமன்றில் நியமன அங்கத்தவர் பதவிகேட்டதிலும் வடமாகண முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதிலும் போராடிக்கொண்டிருக்கிறது.

இந்நாவலின் ஆசிரியர் அவன் என்ற பாத்திரம் ஊடாக தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொண்டு புலிகள் இயக்கத்தையும் அதன் போராளித்தலைவர்களையும் தமிழ் ஈழ ஆதரவாளர்களையும் பிற ஆயுதம் ஏந்திய இயக்கங்களையும் அரசியல் தலைவர்களையும் உள்நாட்டு வெளிநாட்டு அரசுகளையும், உளவுத்துறைகளையும் விமர்சித்துக்கொண்டு ஒரு கதைசொல்லியாக இந்நாவலை நகர்த்திச்செல்கிறார்.

அவரது உதாரணங்கள் சில: நட்சத்திர நாடு – அமெரிக்கா, நட்சத்திர நாய்கள் அமெரிக்கா சி.ஐ.ஏ உளவமைப்பு, மற்றும் அவர்களுக்காகப் பணத்துக்கு வேலை செய்பவர்கள். உடைந்த நாடு: ரஷ்யா.

இளைஞர்களை உணர்ச்சியினால் உசுப்பேற்றிய தமிழ்த்தலைவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அவர்களில் சிலர் தம்மால் உசுப்பேற்றியவர்களினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஆயுதமுனையில் எச்சரிக்கப்பட்டார்கள். ஒரே கொள்கையுடன் உருவான இயக்கங்கள் அனைத்தும் ஆயுதம்தான் ஏந்தின. முடிந்தவரையில் சகோதரப்படுகொலைகளை நடத்திவிட்டு, இறுதியில் தம்மால் ஆயுதம் களையப்பட்ட புளட், டெலோ, ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கங்களை தேர்தலுக்காக ஒரு கூட்டமைப்பாக இணைத்த தலைவர், தாமும் தமது இயக்கமும் மட்டுமே ஆயுதங்களையும் சயனைட்டுகளையும் நம்பியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

இவர்கள் அனைவரும் இந்நாவலில் இடம்பெறும் சம்பவங்களில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த நாவலின் தொனிப்பொருள் சுயவிமர்சனம்தான். அதிலிருந்துதான் உண்மைகளை வாசகர்கள் தேட வேண்டும். தேடுதலுடன் நின்றுவிடாமல் செய்த பாவங்களுக்கு விமோசனமும் தேட வேண்டும். அவ்வாறு பாவசங்கீர்த்தனம் செய்தால் அதுவே இந்நாவலின் வெற்றி.

இல்லையேல் பத்தோடு பதினொன்றாக ஈழப்போராட்ட நாவல்களில் சாத்திரியின் ஆயுதஎழுத்தும் ஒன்று என்ற வரிசைக்குள் வந்துவிடும்.

அல்சர் நோய் உடலில் எந்தப்பாகத்தில் வரும் என்பதும் தெரியாத அப்பாவியாகவும் இளம்குறுத்துக்கள் இந்த இயக்கங்களில் இணைந்திருக்கிறார்கள் என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.

1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி புதன்கிழமை யாழ்குடாநாட்டில் காலம்காலமாக வாழ்ந்த முஸ்லிம்மக்களின் வாழ்வின் மறக்கமுடியாத நாள். அவர்களின் வெளியேற்றம் குறித்தே நாவலின் 36, 37, 38, 39 ஆவது அத்தியாயங்கள் பேசுகின்றன.
சிங்கள அப்பாவுக்கும் தமிழ் அம்மாவுக்கும் பிறந்த ரெஜினா என்ற இளம் யுவதி எப்படி கரும்புலியாகி ஒரு முக்கிய சிங்கள அரசியல் தலைவருடன் சிதறிப்போனாள், அரசின் புலனாய்வுப்பிரிவு சித்திரவதைக்கூடத்தில் முன்னாள் ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கத்தில் இணைந்திருந்த ராணி என்ற பெண்ணை அவன் சந்திக்கிறான். அவள் அவனை பாலியல்ரீதியில் துன்புறுத்தி உண்மையை வரவழைக்கப்பார்க்கிறாள்.

அவள் எவ்வாறு ஒரு விடுதலை இயக்கத்திலிருந்து போராடப்புறப்பட்டு புலிகளில் இருந்த ஒரு சொந்தக்காரப்பெடியனால் காட்டிக்கொடுக்கப்பட்டு அவளது காதல் கணவன் (அவனும் அந்த இயக்கத்தில் இருந்தவன்) சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக இவளும் அரசின் புலனாய்வுப்பிரிவில் இணைந்து தன் கணவனைக்காட்டிக்கொடுத்தவனை பழி தீர்த்துவிட்டு ஒரு பெண் கரும்புலிக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் பிடிக்கப்பட்ட அவனை சித்திரவதை முகாமில் விதையை நசுக்கி வதைக்கிறாள்.

ஈழ விடுதலைக்காக புறப்பட்டு பணத்துக்காக காதலர்களை பிரிக்கும் பரிசுகெட்ட வேலைகளிலும் ஒவ்வொருவர் தனிப்பட்ட வாழ்விலும் மூக்கை நுழைத்து அவர்களின் வாழ்வை சீரழித்த கதைகளையும் இந்நாவல் சித்திரிக்கிறது.

இந்நாவல் இவ்வாறு தனிநபர், சமூகம், விடுதலை இயக்கம் பற்றியெல்லாம் விமர்சிக்கிறது. அதனால்தானோ இதன் வெளியீட்டு அரங்கு சென்னையில் நடந்தபொழுது அதனை கண்டுகொள்ளாமல் பலர் கள்ளமௌனம் அனுட்டித்தனர்.

ஒரு காலகட்டத்தில் ஈழ விடுதலை இயக்கத்தில் தன்னைப்பினைத்துக்கொண்ட சாத்திரி காலம் கடந்து ஆழமாக சிந்தித்ததன் பெறுபேறுதான் ஆயுதஎழுத்து. அதனை அவர் நாவல் வடிவில் இலக்கிய உலகிற்கு வரவாக்கியுள்ளார்.

அதன்மூலம் அவர் பாவசங்கீர்த்தனமும் செய்துகொண்டார். மற்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்….? என்ற வினாவையும் இந்நாவல் செய்தியாக்கியுள்ளது.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பும், யோசிப்பும் 225 : சாத்திரியின் 'ஆயுத எழுத்து'

Thursday, 02 March 2017 22:49 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்

 

அண்மையில் சாத்திரியின் 'ஆயுத எழுத்து' வாசித்தேன் அவ்வாசிப்பு பற்றிய என் கருத்துகளே இப்பதிவு. சாத்திரியின் 'ஆயுத எழுத்து' நூலின் முக்கியம் அது கூறும் தகவல்களில்தானுள்ளது.தமிழினியின் அபுனைவான 'கூர்வாளின் நிழலில்' நூலின் ஞாபகம் சாத்திரியின் புனைவான 'ஆயுத எழுத்து' நாவலை வாசிக்கும்போது எழுந்தது. தமிழினியின் அபுனைவு சுயசரிதையாக, தான் சார்ந்திருந்த அமைப்பின் மீதான சுய விமர்சனமென்றால், 'ஆயுத்த எழுத்து' தான் அமைப்பிலிருந்த அனுபவங்களின் அடிப்படையில் தன்அனுபவங்களை, தான் அறிந்த விபரங்களைக்கூறும் புனைவாகும். புனைவென்பதால் இந்நாவல் கூறும் விடயங்கள் சம்பந்தமாக யாரும் கேள்வி எழுப்பினால், 'இது அனுபவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட நாவல்' என்று கேள்வி கேட்டு தப்பிப்பதற்கு நிறையவே சாத்தியமுண்டு. தமிழினியின் 'கூர்வாளின் நிழலில்' ஆவணச்சிறப்பு மிக்கதாக, கவித்துவ மொழியில் ஆங்காங்கே மானுட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக, மானுட நேயம் மிக்கதாக, இலக்கியச்சிறப்பு மிக்கதாக அமைந்திருக்கும் அபுனைவுஎன்றால், சாத்திரியின் 'ஆயுத எழுத்து'ம் தவிர்க்கப்படக்கூடியதல்ல. ஆவணச்சிறப்பு மிக்க புனைவான 'ஆயுத எழுத்து' நாவலில் ஆங்காங்கே அங்கதச்சுவை மிக்கதாக, மானுட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

 

அங்கதச்சுவையுடன் ஆரம்பத்தில் 'டெலி' ஜெகன் பற்றிய பகுதி அமைந்திருக்கின்றது. அவ்விதமான அங்கதச்சுவை மிக்கதாகவே முழு நாவலும் அமைந்திருந்தால் 'ஆயுத எழுத்து' அற்புதமான, இலக்கியச்சிறப்பு மிக்கதொரு பிரதியாகவும் அமைந்திருக்குமென்பது என் தனிப்பட்ட கருத்து. உண்மையில் அங்கதச்சுவை மிக்கதாக 'டெலி' ஜெகன் பற்றிய பகுது இருப்பதால், நூலினை படித்து முடிந்தும் கூட, நூலில் கூறப்பட்ட முக்கியமான பல தகவல்களையும் விட 'டெலி' ஜெகனின் இயக்க நடவடிக்கைகள் பற்றிய விபரிப்புகளும், அவரது துயரகரமான முடிவும் நெஞ்சில் நிற்கவே செய்கின்றன. அவரது இயக்க நடவடிக்கைகளை ஆசிரியர் அங்கதச்சுவை மிக்கதாக விபரித்திருந்தாலும்,வாசிக்கும் ஒருவருக்கு ஜெகனின் தாய் மண் மீதான பற்றும், அதற்கான விடாப்பிடியான போராட்ட முன்னெடுப்புகளும் நெஞ்சில் படமென விரிகின்றன. அதுவே ஆசிரியரின் எழுத்துச்சிறப்பு. அதனால்தான் கூறுகின்றேன் சாத்திரி அந்த நடையிலேயே முழு நாவலையும் படைத்திருக்கலாமே என்று.

'சாத்திரியின் நாவலின் நாயகனான அவனின் அண்ணனும் 'டெலி' ஜெகனின் இயக்கத்தைச்சேர்ந்தவர். அது பற்றி வரும் பகுதியிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

 

" பள்ளிக்கூடத்திலை ஒருநாள் விஞ்ஞான வாத்தியார் கேட்டார், 'அடேய், உன்ர அண்ணன் எந்த இயக்கமடா?'

 

'டெலி சேர்'

 

வாத்தியார் கெக்கட்டம் போட்டு சிரித்து விட்டு 'ஓ.. சங்கக்கடை இயக்கமா? போன கிழமை அளவெட்டிச் சங்கம் உடைச்சாங்கள். நேற்று எங்கட தெல்லிப்பளை சங்கத்தை

 

உடைச்சுப்போட்டாங்கள்... களவாணி இயக்கம்.' என்றார்.

 

எல்லாப் பொடியளும் விழுந்து விழுந்து சிரிக்க, இவனுக்குப் பெரிய பரிசைக்கேடாகக் போய்விட்டது. அடுத்த முறை ஜெகன் வீட்டுக்கு வந்தபோது பள்ளிக்கூடத்திலை நடந்த

 

சம்பவத்தைச் சொல்லி, 'சனத்தின்ட சங்கக்கடையை உடைக்கிறது சரியில்ல அண்ண' என்றான்.

 

ஜெகன் சிரித்து விட்டு 'சங்கக் கடை சனத்தின்ர சொத்து இல்லையடா. அது அரசாங்கத்தின்ர சொத்து. இப்பிடி ஏதாவது செய்துதான் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தலாம். மற்றது நாங்கள் கெரில்லா இயக்கம். அடிச்சுப்பறிச்சுத்தான் சாப்பிட வேணும் கண்டியோ' என்றான். அவனின் நியாயமும் இவனுக்குச்சரி எனப்பட்டது." [பக்கம் 20]

 

"சில நாட்கள் நடு இரவுகளில் வீட்டுக்கு வரும் அண்ணனும், ஜெகனும் வெளித்திண்ணையில் படுத்துக்கிடந்துவிட்டு விடிவதற்கு முன்னர் காணாமல் போவார்கள். சில சமயங்களில் யாராவது புதியவரை அழைத்து வந்து கீச்சுக்குரலில் நீண்ட நேரம் கதைத்துக்கொண்டிருப்பார்கள்."

 

"ஒருநாள் அப்பாவை வீதியில் மறித்த ஜெகன் தமது டெலி இயக்கத்தின் அரசியல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டிருக்கின்றார். 'ஒரு புத்தி ஜீவியை இவயின்ர சிறுபிள்ளை வேளாண்மைக்கு விளக்குப் பிடிக்கக் கூப்பிடறான். 'கவுழுவானுக்கு நக்கலைப்பாரன்' எனத் தனது கடைசிக்காலம் வரை அப்பா இதைச்சொல்லித் திட்டிக்கொண்டேயிருந்தார்." [பக்கம் 18]

 

நாவலின் அத்தியாயம் மூன்று 'டெலி' ஜெகனின் கதையினை, அவனது வீரப்பிரதாபங்களை, துயரகரமான முடிவினை அங்கதச்சுவையுடன் விபரிக்கின்றது. உண்மையில்

 

'டெலி' ஜெகனின் ஆளுமையினை அற்புதமாக அத்தியாயம் மூன்று வெளிப்படுத்துவதாகவே எனக்குப் படுகின்றது. உண்மையிலேயே தமிழர் விடுதலைக்காகத் தன்னால் முடிந்தவரையில் போராடி வாழ்ந்த 'டெலி' ஜெகனைப்பற்றி, அவனது ஆளுமை பற்றி 'ஆயுத எழுத்து' நாவல் மூலமே அறிகின்றேன்.

 

இது போல் நாவலின் இன்னுமொரு முக்கியமான பகுதியாக நாவலின் நாயகனான அவன் தன் காதலைபற்றி விபரிக்கும் பகுதி அமைந்திருந்ததாக எனக்குத்தோன்றியது.

 

காதல் உணர்வுகள் மானுட வாழ்வில் முக்கியமானதோர் உணர்வு. யாரும் இதற்கு விதிவிலக்கல்லர், இந்நாவலின் நாயகனான அவனையும் சேர்த்துத்தான். அவனது காதல்வெற்றியடைந்தாலும், அவள் அவன் வாழ்விலிருந்தே நிரந்தரமாகக் காணாமல் போவது வாசிப்பவர் உள்ளங்களைத் துயருற வைக்கும். அந்த வகையில் நூலைப்படித்து முடிந்ததும் 'டெலி' ஜெகனைப்போல், நாயகனின் காதல் அனுபவங்களும் வாசகர்கள் நெஞ்சங்களைவிட்டுப் போய்விடுவதில்லை.

 

நாவலின் நாயகனான அவன் தான் விரும்பிய இயக்கத்தோழிக்குக் காதல் கடிதம் எழுதியதை இவ்விதம் விபரிக்கின்றார்:

 

"என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு வித்தியாசமான ஐடியா தோன்றியது. அவளுக்குப் பிடித்தமான 'மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா' என்ற பாடலை

 

மட்டும் ஒரு ஓடியோ கசட்டில் இரண்டு பக்கமும் பதிவு செய்தவன், ஒரு கடதாசியில் 'ஆம்... இல்லை..' என்று மட்டும் எழுதி, 'அதில் புள்ளடி மட்டும் போட்டால் போதும். பிடிக்காட்டி கிழித்தெறிந்து விடு' என்று சொல்லி அவள் கையில் திணித்து விட்டுப்போய்விட்டான்." [பக்கம் 144]' "

 

அவனின் கடிதத்துக்கு அவளிடமிருந்து நல்ல பதில் வருகின்றது. அது பற்றியும், அதனால் அவன் அடைந்த் மகிழ்ச்சி பற்றி பற்றியும் , அந்த மகிழ்ச்சியினால் அவன் ஆடிய ஆனந்தக் கூத்து பற்றியும் விபரிக்கப்படுகின்றது:

 

"கடுதாசியில் 'ஆம்' என்றதற்கு மேல் புள்ளடியிட்டிருந்தது. அவனுக்கு அன்றிருந்த மகிழ்ச்சியில் பலாலி ஆமிக்காம்புக்குக் கொஞ்ச செல்களை அடித்து விட்டான்." [பக்கம் 144]

 

இந்தக் காதல் பின்வருமாறு முடிகின்றது:

 

"இந்திய ராணுவத்தினருடன் மோதல்கள் ஏற்பட, அவள் தனது குழுவுடன் வன்னிக்குச் சென்று விட்டிருந்தாள். அதன் பின்னர் அவளை அவன் சந்திக்கவே இல்லை." [பக்கம் 150]

 

இந்தக் காதல் கதையும் நான் இதுவரை வாசித்த நாவலில் என்னைப் பாதித்த விடயங்கள்.

 

நாயகனின் சொந்தக் குடும்பத்துக்கு இந்தியப்படையினரால் ஏற்பட்ட அழிவுகள் நெஞ்சினை அதிர வைப்பன. அவனது அக்காவுக்கு ஏற்பட்ட நிலை.. அவளைப்போல் எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் அக்காலகட்டத்தில். இந்த நாவல் இயக்க மோதல்களை, இயக்க நடவடிக்கைகளை, இயக்கத்தவறுகளுக்கு இயக்கம் வழங்கும் தண்டனைகளை, இலங்கைப்படையினருடனான , இந்தியப்

படையினருடனான ஆயுத மோதல்களை, இயக்கத்தின் மனித உரிமை மீறல்களை (இயக்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் இறந்து விடவே, அதனை நியாயப்படுத்த அவனை உளவாளியாகச் சித்திரித்துக் கொலை செய்து வீதியில் போட்ட விபரங்களை) .. எனப் பல விடயங்களையும் பட்டியலிடுவதன் மூலம்ஆவணப்படுத்துகின்றது. அந்த வகையில் புனைவானபோதிலும் முக்கியமான புனைவுகளிலொன்றாக 'ஆயுத எழுத்து' விளங்குகின்றது.

 

டெலோ சிறி சபாரத்தினம் கிட்டுவால் கொல்லப்பட்ட விபரம், மட்டக்களப்பில் புளட் மீதான தாக்குதல் பற்றிய விபரம் .கிட்டு மீதான தாக்குதல், ..... என நாவல் பல விடயங்களை நூல் ஆவணப்படுத்துகின்றது நூலின் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தினை இவ்விதமான நூலில் கூறப்படும் தகவல்கள் உறுதி செய்கின்றன.

 

சுதுமலையில் இலங்கை அரசின் கமாண்டோக்கள் 'ஹெலி காப்டர்' மூலம் வந்திறங்குவதும், அவர்கள் மீதான தாக்குதல்கள் பற்றியும் நூல் எடுத்துரைக்கின்றது. அவ்விதம் இறங்கிய இலங்கைப்படையினரை எவ்விதம் அருகில் முகாமடித்திருந்த அனைத்த இயக்கங்களும் ஒன்று சேர்ந்து முறியடிக்கின்றன என்பதுபற்றியும் நாவல் விபரிக்கின்றது.

 

அம்மோதல் முடிவடையவும், மீண்டும் உதவிக்கு வந்திருந்த இயக்கமொன்றுடன் மோதல் ஆரம்பிக்கின்றது.

 

இவை போன்ற பல தகவல்கள்.

 

இந்நூல் ஆவணப்படுத்தும் விடயங்களில் முக்கியமான இன்னுமொரு விடயம் இதுவரை நான் வாசித்த வேறெந்த வரலாற்றுப்புனைவாலும் இவ்வளவு விரிவாக ஆவணப்படுத்தப்படவில்லை. அது யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்களின் வெளியேற்றம். பாத்திரங்களினூடு ஆறு அத்தியாயங்களில் (அத்தியாயங்கள் 34-39) விபரிக்கப்பட்டுள்ள வெளியேற்ற விபரங்களை வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் , பரம்பரை பரம்பரையாகச் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படும் மக்கள் படும் துயரினை உணர்ந்துகொள்வார்கள். குறுகிய நேரத்தில் வாழ்நாள் உழைப்பையெல்லாம், சொத்திகளையெல்லாம் விட்டு விலகும்படி பணிக்கப்படும்போது மக்கள் அடையும் உணர்வுகளை அவ்வத்தியாயங்கள் விரிவாக, வாசிப்பவர் நெஞ்சங்களைப் பாதிக்கும் வகையில் எடுத்துரைக்கின்றன. இவ்விடயம் இந்நூல் ஆவணப்படுத்தும் மிக முக்கியமான விடயங்களிலொன்று என்பேன்.

 

ஆவணப்படுத்தப்படும் இன்னுமொரு விடயம் தற்கொலைப்போராளியொருவரின் செயற்பாடுகள். எவ்விதம் தற்கொலைப்போராளியொருவர் தயார்படுத்தப்பட்டு, களமிறக்கப்படுகின்றார் என்னும் விடயத்தையும் வேறெந்த ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை மையமாகக்கொண்டு வெளியான நூல்கள் எவற்றிலும் நான் இந்நூலில் வாசித்ததைப்போல் வாசித்ததில்லை.

 

இந்நாவலின் பிரதான பாத்திரமான அவன் இதுவரை வெளியான தமிழ்ப்புனைவுகளில் உருவகிக்கப்பட்டுள்ள அனைத்துத் துப்பறிவாளர்கள், புலனாய்வாளர்கள் எல்லாரையும் தூக்கிச்சாப்பிட்டு விடுகின்றான். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று ஒரு காலத்தில் ஜெய்சங்கரைக் கூறினார்கள். அவரை வைத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் துப்பறியும் தொடர் நாவல்கள் கூட அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளில் வெளியாகியுள்ளன. ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர், தமிழ்வாணனின் சங்கர்லால், தமிழ்வாணன், சுஜாதாவின் வசந்த் - கணேஷ் இவர்களில் எவருமே 'ஆயுத எழுத்து' நாவலின் நாயகனுக்குக் கிட்ட நெருங்க முடியாது. ஹாலிவூட் ஜேம்ஸ்பாண்ட் போன்றே இவனும் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தலைமாற்றிப் பயணிக்கின்றேன். பணிக்கப்பட்ட பணிகளைச் செய்கின்றான். பெண்களுடன் தொடர்புகளைப்பேணுகின்றான்.

 

இந்நூல் ஆவணப்படுத்தும் ஏனைய விடங்களில் சிலவாக சர்வதேச ஆயுதத்தரகர்களின் செயற்பாடுகள், அவற்றின் மூலம் பயனடையும் சமூகத்தின் பிரதிநிதிகள் பற்றிய தகவல்கள், இலங்கை அரசுக்குத் தரகர்கள் மூலம் பெறப்பட்ட ஆயுதங்களை எவ்விதம் விடுதலைப்புலிகள் தம் கப்பலொன்றின் மூலம் தந்திரமாகத் தம் பகுதிக்குக் கடத்திச் செல்கின்றார்கள் என்பது பற்றிய விபரங்கள் ஆகியவற்றையும் கூறலாம்.

 

இந்தியப்படையினரின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை, விடுதலைப்புலிகளுட்பட ஏனைய இயக்கங்களின் செயற்பாடுகளை (புலிகளின் கோணத்தில்) இந்நூல் விபரிக்கின்றது.

 

ஆயுதப்போராட்டக் காலத்தில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் பலவற்றை நூல் ஆவணப்படுத்துகின்றது. இங்கு விபரிக்கப்பட்ட பல சம்பவங்களைப் புரிந்தவர்கள் பலர் என்றாலும், எல்லாரையும் குறிக்கும் குறியீடாக நாவலின் நாயகனான 'அவன்' விபரிக்கபடுகின்றான். இது நல்லதோர் உத்தி. இவ்விதமொரு உத்தியினனை வேறெந்த எழுத்தாளராவது தம் பாத்திரப்படையில் பாவித்திருக்கின்றார்களா? தெரியவில்லை. நானறிந்த வரையில் இல்லையென்றே கருதுகின்றேன். அவ்விதம் இருந்தாலும் உடனடியாக என் ஞாபகத்துக்கு வரவில்லை.

 

தான் ஏன் இவ்விதமானதொரு உத்தியினைப் பாவித்தார் என்பது பற்றி நூலாசிரியர் சாத்திரி நூலுக்கான முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

 

"இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும், ஒரே நபருடன் சம்பந்தப்பட்டவை அல்ல; பல நபர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள். ஆனால், இலகுவாக நாவலை நகர்த்துவதற்காக ஒரு கதாநாயகனை உருவாக்கி அவனூடாகவே இறுதிவரை நாவலை நகர்த்தியிருக்கிறேன். அதனால்தான் நாயகனுக்கு நான் பெயரே வைக்கவில்லை. நூலின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை 'அவன்' என்றே அழைத்திருக்கின்றேன். அவன் என்பவன் பலர். அவன், ஒவ்வோர் ஊரிலும் , ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயரிலும் அழைக்கப்பட்டான். பல்வேறு கடவுச்சீட்டுகளில் பல நாடுகளுக்கும் பறந்து திரிந்தான்."

 

நூல் ஆவணப்படுத்தும் இன்னுமொரு விடயம் பெருமாள் கோயில், துர்க்கையம்மன் கோயில் ஆகியவற்றில் இயக்கம் நடாத்திய கொள்ளை. சாத்திரியின் பார்வையில் அவை நாவலில் விபரிக்கப்பட்டுள்ளன.

 

இவ்விதமாக சாத்திரியின் 'ஆயுத எழுத்து' நாவல் தவிர்க்கப்பட முடியாத முக்கிய நாவல்களிலொன்றாக விளங்குகின்றது என்றால் அது மிகையான கூற்றல்ல. உண்மையில் இது வெறும் புனைவல்ல; வரலாற்றுப்புனைவு. அண்மைக்கால வரலாற்றை மையமாகக்கொண்ட வரலாற்றுப்புனைவு. முக்கியமான வரலாற்றுப்புனைவு. இவ்வரலாற்றுப்புனைவு நடந்தவற்றைச் சரியா, பிழையா என்று விமர்சிக்கவில்லை. ஆனால் நடந்தவற்றை விபரிக்கின்றது. விமர்ச்சிப்பதை வாசகர்களிடமே விட்டு விடுகின்றது.

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3790:-225-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.