Jump to content

இவர் இன்ஸ்டாகிராம் பாட்டி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

granmda.jpg?w=300&h=154

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத்தோடு நீங்கள் நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள். புற்றுநோயின் பாதிப்பை மீறி நாட்கள் உற்சாகமானதாகவும் இருக்கும். தினமும் புதிய நண்பர்களை பெற்றுத்தருவதாகவும் இருக்கும். சந்தேகம் இருந்தால் அமெரிக்க பாட்டி கிராண்ட்மாபெட்டியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து பாருங்கள். அவரது உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். அவரது 4 லட்சத்துக்கும் அதிமான இணைய நண்பர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள்.

இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை. ட்விட்டர் குறும்பதிவுகளுக்கான களம் என்றால்,இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் பேசலாம். புகைப்படங்கள் வாயிலாக புதியவர்களோடு தொடர்பு கொள்ளலாம். அறிமுகம் இல்லாதவர்களை எல்லாம் நண்பர்களாக்கி பின் தொடர வைக்கலாம். இப்படி லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்களை பெற்றுள்ள பிரபலங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஹாலிவுட் நட்சத்திரங்களும் , பாடகிகளும் கோலோச்சும் இன்ஸ்டாகிராமில் இப்போது 80 வயது பாட்டி கிராண்ட்மாபெட்டி பிரபலமாகி இருக்கிறார்.

பெட்டி என்னவோ பொக்கை வாய் பாட்டி தான்.ஆனால் அவரது புன்னகையோடு உற்சாகமாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பார்த்தால் பாட்டிம்மா என்று பாசத்தோடு அழைக்கத்தோன்றும். இப்படித்தான் பலரும் பாட்டிக்கு அடிமையாகி கொண்டிருக்கின்றனர். பலர் பாட்டியை பின் தொடர்வதற்காக என்றே இன்ஸ்டாகிராமில் உறுப்பினராகி வருகின்றனர்.பாடகி மைலி சைரஸ் உட்பட பிரபலங்களும் பாட்டியின் நண்பர்களாகி இருக்கின்றனர்.

கிராண்ட்மாபெட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் ஆயிரக்கணக்கானோரால் பார்த்து ரசிக்கப்படுகின்றன. பலரும் பாட்டியுடன் பேசுவது போல பின்னூட்டம் வழியே உருகி வழிகின்றனர். எல்லாம் பாட்டியின் பேரன் துவக்கி வைத்தது. பிலடல்பியாவில் வசிக்கும் கிராண்ட்மா பெட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்ததும் பேரன் ஜேக் பெல்டன் மிகுந்த வேதனைக்குள்ளானார். சில மாதங்கள் அல்லது அதிகபட்சம் சில ஆண்டுகளில் பாட்டியை நிரந்தரமாக பிரிய வேண்டியிருக்கும் என்ற எண்ணம் வாட்டியது. பாட்டியின் இறுதி நாட்களை வாழ்க்கையை நினைவில் நிறுத்தும் வகையில் அவரது இறுதி நாட்களை பதிவு செய்ய விரும்பினார். ஜேக்கின் பல நண்பர்களுக்கும் பாட்டி அறிமுகமானவர் என்பதால் அவர்களுடனும் பாட்டியின் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டது போல இருக்கும் என்ற எண்ணத்தில் இன்ஸ்டாகிராமில் பாட்டி பெயரில் கிராண்ட்மாபெட்டி எனும் பக்கத்தை துவக்கி , புகைப்படங்களை வெளியிடத்துவங்கினார்.

பாட்டியின் மீதான பாசத்தின் வெளிப்பாடாக அமைந்ததே தவிர, பேரன் ஜேக் வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், கிராண்ட்மாபெட்டி, புற்றுநோய் போராளி, இயேசுவை ந்ம்புவர் … எனும் சுருக்கமான அறிமுகத்துடன் அமைந்திருந்த அந்த பக்கத்தில் வெளியான பாட்டியின் புகைப்படங்கள் மற்றவர்களையும் கவரத்துவங்கியது. முதல் வார்த்திலேயே 100 பேர் பாட்டியின் நண்பர்களாகி அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடரத்துவங்கினர். புற்றுநோயின் பாதிப்பையும் மீறு புன்னகையுடன் காட்சி அளித்து வாழ்வின் மீதான பாசத்தையும் நேசத்தையும் பகிர்ந்து கொண்ட அந்த பாட்டியின் தோற்றம் பலருக்கு பிடித்துப்போனது. பல்ரும் தங்கள் அபிமானத்தை பின்னூட்டம் மூலம் வெளிப்படுத்தினர். “ நீங்கள் தான் மிகவும் அழகான்வர் ‘ என் ஒருவர் குறிப்பிட்டார். இன்னொருவர்’ உங்கள் முடி அழகாக உள்ளது. அதை விட உங்கள் உள்ளம் அழகாக இருக்கிறது ‘ என தெரிவித்திருந்தார். இப்படி பலரும் பாட்டியின் மன உறுதியை பாராட்ட அவரது ஆதரவாளர்களின் எண்ணுக்கை கூடிக்கொண்டே சென்றது. மிக விரைவிலேயே பாட்டியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்வது பற்றியும் அவற்றைப்பார்க்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தயாராக இருப்பதையும் பேரன் சொல்லக்கேட்ட பெட்டி பாட்டி மகிழ்ந்து போனார்.

நோயின் பாதிப்பை தள்ளி வைத்துவிட்டு அவர் அன்பு பொங்க சிரித்தபடி காட்சி அளிக்கும் புகைப்படங்கள் மேலும் ஆயிரக்கணக்கானோரின் உள்ளத்தை உருக் வைத்தது. இதனிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாட்டிக்காக பேரன் உருவாக்கிய இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் கவனத்தை ஈர்க்க பாட்டி மேலும் பிரபலமாகி விட்டார். பாட்டிக்கு அன்பும் ஆதரவும் தெரிவித்து கடிதங்களும் குவிந்து வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பலரும் பாட்டியின் உறுதியை பாராட்டி பாசத்தோடு கருத்து பதிவு செய்து வருகின்றனர்.

இணையம் சாத்தியமாக்கும் எளிய அற்புதங்களுக்கு எத்தனையோ அழகான உதாரணங்கள் இருக்கின்றன. கிராண்ட்மாபெட்டி அந்த வரிசையில் நெகிழ வைக்கிறார்.

 

பாட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கம்; http://instagram.com/grandmabetty33

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.