Jump to content

''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்


Recommended Posts

vidthalaiek4.jpg

எமது விடுதலைப் போராட்டத்தின் மையநிலமாகவும் -ந்துதளமாகவும், இன்றைய நிலையில், வன்னிப் பெருநிலப்பரப்பு விளங்குகின்றது. இந்தப் போராட்ட மையத்தைப் பாதுகாத்தபடி வன்னியைப் பின்தளமாகக் கொண்டு நிலமீட்புச் சமர்களை நடாத்தப் புலிகள் இயக்கம்

தயாராகிவருகின்றது.

ஆனால் இந்தப் போராட்டமையத்தை நெருக்கடிக்குள் ளாக்கும் விதத்தில் வன்னிநிலப்பரப்பு மீது பாரிய படையெடுப் பொன்றைப் பலமுனைகளில் நடாத்தச் சிங்களப் படைத் தலைமை திட்டமிட்டு வருகின்றது. எதிரிப்படைகளின் படையெடுப்பு முயற்சியை முறியடிக்க வேண்டிய பொறுப்பும் அதேசமயம் புலிகளின் நிலமீட்புச் சமருக்கு உதவவேண்டிய கடமையும் வன்னிவாழ் மக்களிடமே

உள்ளது. ஏற்கனவே இத்தகைய வரலாற்றுப் பொறுப்புகளை

வன்னிவாழ் மக்கள் கனகச்சிதமாகச் செய்துமுடித்து போராட்ட

வண்டியை முன்னோக்கித் தள்ளி வெற்றிப்பாதையில் பயணிக்கச் செய்திருக்கின்றனர்.

இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் புலிகள் இயக்கம் நடாத்திய வீரமிகு போராட்டத்தில் வன்னிவாழ் மக்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்தது. அதுபோல, வன்னிப் பெருநிலப்பரப்பை இரண்டாகப் பிளந்து போராட்ட இதயத்தை நசுக்கிச் சிதைக்கும் எண்ணத்துடன் ஷஜயசிக்குறு| என்ற பெயரில் சிங்கள அரசு செய்த வன்கவர்ச் சமரைப் புலிகள் இயக்கம் முறியடித்து வெற்றி வாகை சூடியதற்கு வன்னிவாழ் மக்கள் அளித்த போராட்டப் பங்களிப்பு மகத்தானதாகவே இருந்தது.அதே மாதிரியானதொரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வரும்படி வன்னிவாழ் இளையோரிடம் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

பாரியதொரு நிலமீட்புச் சமர்த்திட்டத்தை மனதில் வைத்த படி அதற்கு முன்னேற்பாடாக வன்னி நிலப்பரப்பெங்கும் ஒரு மக்கள் போர்க் கட்டமைப்பைப் புலிகள் திட்டமிட்டு மேற்கொண்டுவந்தனர். எந்தவித சலசலப்புமில்லாமல் மிகவும் நேர்த்தியான முறையில் கட்டப்பட்டுவந்த அந்தப் போர்க் கட்டமைப்பை வன்னிவாழ் மக்களும் ஏற்றுக்கொண்டு முழு ஒத்துழைப்பையும் உற்சாகமாக வழங்கி தற்காப்புப் பயிற்சிகள் பெற்றுவந்தனர். ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகவே மீறும் வகையில், சிங்களப் படைகள், தமிழர் தாயகம் மீது நில ஆக்கிரமிப்புச் சமர்களை நடாத்தத் தொடங்கின. திருக்கோணமலையில் படையினர் தொடங்கிய அந்த நில ஆக்கிரமிப்புச் சமர்கள் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் வன்னி ,அம்பாறை,மன்னார் என விரிந்துசென்றன.

மக்கள் இலக்குகள் மீது பாரிய அளவில் வான் தாக்குதல்

களையும் ,ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்மக்கள் பெரு மளவில் கொல்லப்பட்டும் - பல்லாயிரக்கணக்கில் அகதிகளாக

வும் ஆக்கப்பட்டு வருகின்றனர்.

சிங்கள அரசின் இந்த ஒட்டுமொத்த ஒப்பந்த மீறலையும் – தமிழ்மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களையும் சர்வதேச சமூகம் வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. இதேசமயம், போராட்ட மையமான வன்னிப் பெருநிலப்பரப்பின் மீது ஒரு பாரிய படையெடுப்பைப் பலமுனைகளில் நடாத்தச் சிங்களப் படைகள் தயாராகிவருகின்றன.

அதற்கு முன்னேற்பாடாக முகமாலை முன்னரங்கங்களில் இருந்து படையினர் தொடர்ச்சியாக நடாத்திவரும் எறிகணைத்

தாக்குதல் – வான் தாக்குதல்களால் பளை - யக்கச்சிப்பகுதி

மக்கள் இடம்பெயர்ந்தோடியுள்ளனர். நாகர்கோவில் முன்னரங்கிலிருந்து படையினர் நடாத்தும் கொலைவெறித் தாக்குதலால் வடமராட்சி கிழக்குவாழ் மக்கள் முழுமையாகவே இடம் பெயர்ந்துவிட்டனர். முன்னர் தள்ளாடிப் படைமுகாமிலிருந்து நடாத்தப்படும் தாக்குதல்களால் அடம்பன் மற்றும் அதைச்சூழவுள்ள ஊர்களில் இருந்து மக்கள் அகதிகளாகியுள்ளனர்.

இதுபோன்று வவுனியா மற்றும் கொக்கிளாய்ப்பகுதி படை முகாம்களில் இருந்து படையினர் நாடத்தும் எறிகணைத் தாக்குதல்களால் வவுனியா வடக்கு மற்றும் மணலாறுப் பகுதி

மக்கள் இடம்பெயர்ந்து அல்லலுறுகின்றனர். இவ்விதம் வனன பெருநிலப்பரப்பு நாற் புறமும் தாக்குதலுக்கு உள்ளாகின்றது.இதே சமயம், வன்னிமீது உணவு,மருந்துத் தடைகளையும்,போக்குவரத்து,தொலை

Link to comment
Share on other sites

  • Replies 211
  • Created
  • Last Reply

சமாதானம் சொன்ன எதிர்வு கூறல் எல்லாம் மெய்யாலும் நடக்கப் போகுது போலத்தான் கிடக்கு.

Link to comment
Share on other sites

மேலே உள்ள கட்டுரை பற்றி விமர்சனம் ஒன்றை அண்மையில் தமிழ் இணைய தளம் ஒன்றில் வாசித்தேன். ஆனால் அதன் மூலக்கட்டுரையை படிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

நான் தேடிய கட்டுரையை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் நாரதர்.

அந்த கட்டுரை பற்றி விரிவான எனது அவதானத்தை எழுது முன் நாரதரின் கேள்வி ஒன்றுக்கு அவசரமாக பதில் தரவேண்டியுள்ளேன்.

நான் குறிப்பிட்ட பன்முக அரசியல் என்றால் என்ன? அதை நான் அர்த்தம் தெரியாது எங்கிருந்து பொறுக்கி எடுத்து வந்தேன் ? போன்ற கேள்விகள் எழுப்பிய நாரதரிடம் அதே கேள்விகளை திருப்பிக் கேட்டு அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை.

பன்முக அரசியல் என்பது ஏகப்பிரதி நிதித்துவத்தை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஜனநாயகக்கோட்பாடு. சர்வதேச நாடுகள் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அரசியல் கோட்பாடும் இதுதான். புலிகளின் தலைமை அதற்குரிய அரசியல் தீர்வாகத்தான் தமிழர் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் கள அரசியல் எதிரோட்டத்தை அவர்களால் முகம் கொடுக்கமுடியவில்லை. அவர்களில் பலர் தாம் ஆற்ற வேண்டிய அரசியல் பணி பற்றி எந்தவித தெளிவும் இல்லாதவர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புலிகளின் காலை வாரிவிடுவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள். அவர்களின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஒரு காலத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்டு மக்களின் மதிப்பிழந்த இவர்களின் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசும் செப்படி வித்தை எமது தலைமைக்கு தெரியாதது அல்ல. இந்திய விஜயத்தில் அவர்களின் உள்முரண்பாடுதான் டெல்கியில் உள்ள சவுத் புளொக்கினால் நன்கு பயன் படுத்தப்பட்டு புலிகளுக்கு எதிரான அரசியலாக அரங்கேறிய நாடகம்.

அதனால்தான் எமது தலைமை ஒரு புதிய அரசியல் அறிவிப்புக்கு வரலாம் என்று எழுதினேன். ஈ என் டி எல் எவ் ஒரு புதிய பாத்திரம் வகிக்கும் அரசியல் அரங்கம் ஒன்று திறக்க வாய்ப்புகள் காணப்படுகின்றது. அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இப்போது அறுதியிட்டு சொல்லமுடியாத நிலை.

Link to comment
Share on other sites

நான் குறிப்பிட்ட பன்முக அரசியல் என்றால் என்ன? அதை நான் அர்த்தம் தெரியாது எங்கிருந்து பொறுக்கி எடுத்து வந்தேன் ? போன்ற கேள்விகள் எழுப்பிய நாரதரிடம் அதே கேள்விகளை திருப்பிக் கேட்டு அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை.

பன்முக அரசியல் என்பது ஏகப்பிரதி நிதித்துவத்தை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஜனநாயகக்கோட்பாடு. சர்வதேச நாடுகள் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அரசியல் கோட்பாடும் இதுதான். புலிகளின் தலைமை அதற்குரிய அரசியல் தீர்வாகத்தான் தமிழர் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் கள அரசியல் எதிரோட்டத்தை அவர்களால் முகம் கொடுக்கமுடியவில்லை. அவர்களில் பலர் தாம் ஆற்ற வேண்டிய அரசியல் பணி பற்றி எந்தவித தெளிவும் இல்லாதவர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புலிகளின் காலை வாரிவிடுவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள். அவர்களின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஒரு காலத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்டு மக்களின் மதிப்பிழந்த இவர்களின் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசும் செப்படி வித்தை எமது தலைமைக்கு தெரியாதது அல்ல. இந்திய விஜயத்தில் அவர்களின் உள்முரண்பாடுதான் டெல்கியில் உள்ள சவுத் புளொக்கினால் நன்கு பயன் படுத்தப்பட்டு புலிகளுக்கு எதிரான அரசியலாக அரங்கேறிய நாடகம்.

அதனால்தான் எமது தலைமை ஒரு புதிய அரசியல் அறிவிப்புக்கு வரலாம் என்று எழுதினேன். ஈ என் டி எல் எவ் ஒரு புதிய பாத்திரம் வகிக்கும் அரசியல் அரங்கம் ஒன்று திறக்க வாய்ப்புகள் காணப்படுகின்றது. அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இப்போது அறுதியிட்டு சொல்லமுடியாத நிலை.

ஓ உமக்கு எல்லாம் தெரியும் போலா எது உந்த பரந்தன் ராசனின்ட இஎன்டிஎல்போ, நல்லது இதை எப்படி நீர் சொல்லுறீர் அதற்கான ஆதாரம் என்ன? மேலும் நீர் சொல்லும் விடயங்களுக்கு நான் ஆதாரமோ ,விளக்கமோ எப்படிக் கொடுக்க முடியும், நீர் தான் கொடுக்க வேணும்.

புலிகள் கூடமைப்பை உருவாக்கினம் சரி அது கிடக்கட்டும் ,இல்லை இந்த பன்முக அரசியல் எண்ட உமது விளக்கதைத் தான் கேட்டனான், புலிகளின்ர பதிலைக்கேக்கேல்ல. நீர் தானே புலிகள் சரவெதேசம் சொல்லுற மாதிரி பன் முக அரசியலுக்க வரவேணும் எண்டு எழுதுனீர், அதற்குத் தான் உமது விளக்கத்தைக் கேட்டனான்.அதை நீர் இன்னும் விளக்கவில்லை? அமெரிக்கா இந்தியா எல்லாம் தான் அதைச்சொல்லுது ,அவயள் சொல்லுறது தான் உமது விளக்கமா .அப்படியெண்டா சிதார்த்தன்,ஆனந்தசங்கரி, டக்கிளசு எல்லோரும் தமிழரின் பிரதினிதிகள் தான் புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகள் இல்லை எண்டு நீர் சொல்லுறீரா இல்லயா என்பது தான் எனது கேள்வி?

மேற்குறிப்பிட்ட இரண்டு கேள்விகளுக்கும் விளக்கம் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே உள்ள கட்டுரை பற்றி விமர்சனம் ஒன்றை அண்மையில் தமிழ் இணைய தளம் ஒன்றில் வாசித்தேன். ஆனால் அதன் மூலக்கட்டுரையை படிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

நான் தேடிய கட்டுரையை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் நாரதர்.

அந்த கட்டுரை பற்றி விரிவான எனது அவதானத்தை எழுது முன் நாரதரின் கேள்வி ஒன்றுக்கு அவசரமாக பதில் தரவேண்டியுள்ளேன்.

நான் குறிப்பிட்ட பன்முக அரசியல் என்றால் என்ன? அதை நான் அர்த்தம் தெரியாது எங்கிருந்து பொறுக்கி எடுத்து வந்தேன் ? போன்ற கேள்விகள் எழுப்பிய நாரதரிடம் அதே கேள்விகளை திருப்பிக் கேட்டு அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை.

பன்முக அரசியல் என்பது ஏகப்பிரதி நிதித்துவத்தை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஜனநாயகக்கோட்பாடு. சர்வதேச நாடுகள் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அரசியல் கோட்பாடும் இதுதான். புலிகளின் தலைமை அதற்குரிய அரசியல் தீர்வாகத்தான் தமிழர் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் கள அரசியல் எதிரோட்டத்தை அவர்களால் முகம் கொடுக்கமுடியவில்லை. அவர்களில் பலர் தாம் ஆற்ற வேண்டிய அரசியல் பணி பற்றி எந்தவித தெளிவும் இல்லாதவர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புலிகளின் காலை வாரிவிடுவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள். அவர்களின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஒரு காலத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்டு மக்களின் மதிப்பிழந்த இவர்களின் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசும் செப்படி வித்தை எமது தலைமைக்கு தெரியாதது அல்ல. இந்திய விஜயத்தில் அவர்களின் உள்முரண்பாடுதான் டெல்கியில் உள்ள சவுத் புளொக்கினால் நன்கு பயன் படுத்தப்பட்டு புலிகளுக்கு எதிரான அரசியலாக அரங்கேறிய நாடகம்.

அதனால்தான் எமது தலைமை ஒரு புதிய அரசியல் அறிவிப்புக்கு வரலாம் என்று எழுதினேன். ஈ என் டி எல் எவ் ஒரு புதிய பாத்திரம் வகிக்கும் அரசியல் அரங்கம் ஒன்று திறக்க வாய்ப்புகள் காணப்படுகின்றது. அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இப்போது அறுதியிட்டு சொல்லமுடியாத நிலை.

ஐயா சமாதானம்

பன்முக அரசியல் சுதந்திரம் கண்ணீர்வடிக்கிறதா?

உங்கட பிழைப்புக்கும் கொஞ்சம் வழி பிறக்கட்டும் எண்டா?

அல்ல எம்மக்கள் தெரிவு பிரதிநிதிகளுக்கு மதிப்பு தராத அந்த உலகத்தை மனம் குளிரவைக்கவா?

வேறு என்னய்யா கூட்டணி நடத்தை அவளவு நல்லாய் இல்லயா?

அப்ப எப்படி உவங்கள் புலியளின்ர நடத்தை சொல்லுங்கோ வெக்கப்படாமல்.

உங்கட அரசியல் ஞானம் போடும் பிச்சையிலதானே நாங்கள் உலகத்தைப் படிக்கவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏந்தான் எல்லாரும் உங்கடை நேரத்தை செவிடற்ரை காதில சங்கூதி வீணாக்கிறீங்களோ :!: :!: :!:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்முக அரசியல் என்பது ஏகப்பிரதி நிதித்துவத்தை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஜனநாயகக்கோட்பாடு. சர்வதேச நாடுகள் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அரசியல் கோட்பாடும் இதுதான். புலிகளின் தலைமை அதற்குரிய அரசியல் தீர்வாகத்தான் தமிழர் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் கள அரசியல் எதிரோட்டத்தை அவர்களால் முகம் கொடுக்கமுடியவில்லை. அவர்களில் பலர் தாம் ஆற்ற வேண்டிய அரசியல் பணி பற்றி எந்தவித தெளிவும் இல்லாதவர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புலிகளின் காலை வாரிவிடுவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள். அவர்களின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஒரு காலத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்டு மக்களின் மதிப்பிழந்த இவர்களின் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசும் செப்படி வித்தை எமது தலைமைக்கு தெரியாதது அல்ல. இந்திய விஜயத்தில் அவர்களின் உள்முரண்பாடுதான் டெல்கியில் உள்ள சவுத் புளொக்கினால் நன்கு பயன் படுத்தப்பட்டு புலிகளுக்கு எதிரான அரசியலாக அரங்கேறிய நாடகம்.

அதனால்தான் எமது தலைமை ஒரு புதிய அரசியல் அறிவிப்புக்கு வரலாம் என்று எழுதினேன். ஈ என் டி எல் எவ் ஒரு புதிய பாத்திரம் வகிக்கும் அரசியல் அரங்கம் ஒன்று திறக்க வாய்ப்புகள் காணப்படுகின்றது. அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இப்போது அறுதியிட்டு சொல்லமுடியாத நிலை.

தங்கள் தங்கள் தேவைகளுக்காகத் தான் ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு எண்ணங்களையும், சிந்தனைகளையும் உலக நாடுகள் தருமே தவிர, மற்றும்படி எல்லாமே ஏமாற்று வார்த்தைகள் தான். பாகிஸ்தானின் முஸ்ராவ் பன்முக ஆட்சியாக கோட்பாட்டையா மேற்கொள்கின்றார்? பன்முக அரசியல் கொண்ட இந்தியாவை விட, ஜரோப்பிய-அமெரிக்க நாடுகள் பாகிஸ்தான் கூடத் தானே தங்களினின் நட்புறவை கொண்டிருக்கின்றன.

அல்லது சமீபத்தில் லிபியாத் தலைவர், அமெரிக்க ஜரோப்பிய, நாடுகளோடு நட்புறவக்கத்தை மேற்கொண்டாரே, அவர் ஆளுவது என்ன பன்முக அரசியலா?

இலங்கையரசியலில், புலிகள் நுழைந்தால்,அவர்கள்

தமிழ்மக்களுக்கான தீர்வுகள் கிடையாமல், ஒன்றுபட்ட இலங்கையில் வாழ முடியும் என்ற தோற்றப்பாட்டை இலங்கையரசு ஏற்படுத்தும். ஆனால் தமிழ்மக்களின் உரிமைகள் எதையுமே, நியாயபுூர்வமாகத் தவிர்த்து நிற்கும். இவ்வாறன யதார்த்தங்களால் தான் தமிழ்கூட்டமைப்பைத் தலைமை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் முன்னாள் போராளிகளோடு, சமூக அமைப்புக்களில் இருந்து போனவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். அப்படியிருக்க அவர்கள் தலைமையின் எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள்.

தலைமைக்கு இவர்களின் செயற்பாடு தெரியும் என்றால், அவர்களுக்கு சொல்ல வேண்டிய பரிந்துரை பற்றி அவர்களுக்குத் தெரியும். உமது கருத்து என்பது தமிழ் கூட்டமைப்புக்காரர்களை புலிகளுக்குள் பிரச்சனை என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி மக்களுக்கு வெறுப்பை உண்டாக்குவது தான் போலிருக்கின்றது.

முன்பு அற்புதனும் தினமுரசின் ஊடாக அதையே செய்தார். புலிகளுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே தான் பிரச்சனை என்ற தோற்றப்பாட்டில் பத்திரிகையில் எழுதி வந்தார். புங்குடுதீவில் ஈபிடிபியோடு நடந்த சண்டையைக் கூட, அது சாதாரணம் போல மறைத்தார். அவ்வாறே டக்ளஸ் மீதான களுத்துறைச் சிறைத் தாக்குதலைக் கூட, சாதாரண விடயமாக்கி மறைத்தார்.

இதனால் அவர்களுக்கு அனுகூலம் இருந்தது. சில தேர்தல்களில் அவர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. தமிழ்மக்களிடம் புலிகளை ஆதரித்து எழுதிய பிரல்யமாக தினமுரசு இருந்தால் ஈபிடிபியின் செயற்பாடு புலிகளுக்கு எதிரில்லை என்று சனம் நம்பிய காலமும் உண்டு.

இப்போது அவர்களின் நிலை வங்குரோத்து நிலைக்குப் போக்க காரணமே, விடுதலைப்புலிகளோடு, தமிழ் கூட்டமைப்பு கொண்டுள்ள நெருக்கமாகும். இதனால் பலருக்குச் சங்கடமே! ஆனந்தசங்கரியாருக்கு 5,000 வாக்குகள் கூடத் தேறவில்லை. ஈபிடிபியிருக்கு 15,000, சித்தாத்தனுக்கு ஒரு சீட் கூட இல்லை. ஈபிஆர்எல்எவ்வுக்கு சொல்லவே வேண்டாம்.

எனவே, தமிழ் கூட்டமைப்பில் உடைவு ஏற்படுத்த வேண்டும் என்று, பலர் விரும்புவது ஒரு காரணமில்லாமல் இல்லை. இவர்களின் பிழைப்பு அதில் தான் இருக்கின்றது.

ஈஎன்டிஎல்எவ், எப்போது அரசியல் செய்தது? கொலைகளையும், வழிப்பறிகளையும் தானே செய்தது. ஆனால் இந்தியா தொடர்ந்து பிச்சை போடுமா என்ற சந்தேகம் தான் அரசியலில் குதிக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும். பாவம்!

பத்தோடு, பதினென்றாக பெயரைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளட்டுமன். என்ன இலங்கையரசியலில், வாக்கே எடுக்காமல், தோற்றுப் போன கட்சி என்ற ரெக்கோட் யாருமே எடுக்கவில்லை. இவர்களாவது முயற்சிக்கட்டுமன்!

Link to comment
Share on other sites

ஓ உமக்கு எல்லாம் தெரியும் போலா எது உந்த பரந்தன் ராசனின்ட இஎன்டிஎல்போ, நல்லது இதை எப்படி நீர் சொல்லுறீர் அதற்கான ஆதாரம் என்ன? மேலும் நீர் சொல்லும் விடயங்களுக்கு நான் ஆதாரமோ ,விளக்கமோ எப்படிக் கொடுக்க முடியும், நீர் தான் கொடுக்க வேணும்.

புலிகள் கூடமைப்பை உருவாக்கினம் சரி அது கிடக்கட்டும் , இல்லை இந்த பன்முக அரசியல் எண்ட உமது விளக்கதைத் தான் கேட்டனான்,.அப்படியெண்டா சிதார்த்தன்,ஆனந்தசங்கரி, டக்கிளசு எல்லோரும் தமிழரின் பிரதினிதிகள் தான் புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகள் இல்லை எண்டு நீர் சொல்லுறீரா இல்லயா என்பது தான் எனது கேள்வி?

மேற்குறிப்பிட்ட இரண்டு கேள்விகளுக்கும் விளக்கம் தேவை.

இதைத்தான் விளக்கமாக மாங்கு மாங்கு எண்டு சொல்லுறார் உங்களுக்கு விளங்காத்துக்கு என்ன செய்யலாம்...

புலிகள் தியாகங்கள் செய்து கட்டமைப்பான ஒரு அமைப்பை நிறுவி... பலப்பிரயோகத்தின் மூலம் ஆட்ச்சியாளர்களை ஆட்டம் காணவைத்து, அரசாங்கத்தை பேச்சு வார்த்தைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்... தமிழர் தரப்பு சிங்களவனுக்கு சமனாக மேடையில் பேச அமருகிறது எண்றால் புலிகளின் இராணுவ பலம்தான் காரணம்... அதனால் புலிகளை ஆதரிக்கிறார். உவர்... அப்படி புலிகள் இல்லாட்டால் பேச்சு வார்த்தையும் பேரம்பேசலும் சாத்தியம் இல்லை பாருங்கோ....!

ஆனாலும் எம்மின மக்களின் உரிமைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் பேரம்பேசி விற்க்கப்பட வசதியாக மாற்றுக்குழுக்களை பேச்சுவார்த்திக்கு உள்ளே விடப்பட்ச வேண்டுமாம்... அப்பதானே அரசாங்கம் இப்ப மாசம் மாசம் குடுக்கிறதை தங்கட பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்...

அதுக்காக புலிகள் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை மட்டும்படுத்தி மற்றவர்களையும் உள்ள விடட்டாம்.... அப்பதான் புலிகளை ஓரங்கட்டி எல்லா சுகங்களையும் அனுபவிக்கலாம் எண்ட நப்பாசைதான்...!

இந்தியாவின் இப்போதைய நடவடிக்கைகளை பார்த்து இவர் போடும் தப்புகணக்கு உது... புலிகள் எல்லாவற்றுக்கும் தலையாட்டுவார்கள் எண்டுவேற நினைக்கிறார்... புலிகளால் அங்கீகரிக்க பட்டு, தமிழீழத்திக்கு வேண்டிய அளவு கட்ச்சிகள் இருக்கிண்றன... தேசியத்துக்கு ஆதரவான மக்களை கொண்றவர்களை புலிகள் அங்கீகரிக்க வில்லை... அப்படி அங்கீகரித்தால் அது புலிகளின் நோக்கத்துக்கு எதிரானது...

Link to comment
Share on other sites

தல கொஞ்சம் பொறுக்கங்கப்பா மனிசர் தங்கட கொள்கைகளை விளக்க ஒரு சந்தர்ப்பம் கொடுங்கோ,பொறுமையா இருங்கோ.சமாதானத் தம்பி நீங்க சொல்லுங்க நாங்கள் கேக்கிறம்,உங்களிட்டப் படிக்கக் கனக்கக் கிடக்கு.

எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கோ.

1)புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகள் இல்லையா?

2)அப்படியாயின் தமிழ் மக்களின் மற்றைய பிரதி நிதிகள் யார்?

3) யாரை நீங்கள் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாகக் கருதுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானம்

உம்பதிவுகள் தேசியத்துரோகத்துக்காய் மாரடிப்பதை

புரிந்து கொள்ளாத ஒரு களஉறவை உம்மால் காட்டமுடியுமா?

தன்னோக்கத்தை அம்பலம் செய்துதான் ஒரு துரோகச்செயல் களம் அமைக்கும், என்றுதான் உமது புத்திசாலித்தனம் நினைத்துக் கொண்டிருக்கிறதோ?

எட்டப்பத்தனப் பிழைப்புக்கு இக்களத்தை உபயோகப் படுத்தாதே!

களமே காறி உமிழு உம்கருத்துக்களுக்கு சுரணை இன்றிய அந்த உள்நுளைவுவிருப்பத்தின் காரணம் எதுவோ?

ஊர் உண்ணி மனைவியர் கொண்டோர்க்கு

சுரணை கொண்டால் வாழ்வு உண்டா என்கிறீரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதனாம் அண்ணா போட்டுதாக்குகிறார்........

இந்த மாவீரர் நாள் உரையில் தலைவர் புதிதாக புதிய விடயம் கூறப்போகின்றாராம்........

ஐயோ......ஐயோ.....

நான் இது நாள்வரையில்...... தலைவர் இந்த முறை போன வருடத்து உரையைத்தான் திரும்பவும் வாசிக்க போகிறார் என்று எண்ணிகொண்டிருந்தேன்.

என்னைப்போல் எண்ணிகொண்டிருந்த மற்ற கள உறவுகளுக்கும் சமாதானம் அண்ணா நற் செய்தி தந்திருக்கிறார். அவருக்கு உங்களால் முடிந்தால் நன்றியை தெரிவியுங்கள்.

நன்றி சமாதானம் அண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதனாம் அண்ணா போட்டுதாக்குகிறார்........

இந்த மாவீரர் நாள் உரையில் தலைவர் புதிதாக புதிய விடயம் கூறப்போகின்றாராம்........

ஐயோ......ஐயோ.....

நான் இது நாள்வரையில்...... தலைவர் இந்த முறை போன வருடத்து உரையைத்தான் திரும்பவும் வாசிக்க போகிறார் என்று எண்ணிகொண்டிருந்தேன்.

என்னைப்போல் எண்ணிகொண்டிருந்த மற்ற கள உறவுகளுக்கும் சமாதானம் அண்ணா நற் செய்தி தந்திருக்கிறார். அவருக்கு உங்களால் முடிந்தால் நன்றியை தெரிவியுங்கள்.

நன்றி சமாதானம் அண்ணா!

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

இதைத்தான் விளக்கமாக மாங்கு மாங்கு எண்டு சொல்லுறார் உங்களுக்கு விளங்காத்துக்கு என்ன செய்யலாம்...

புலிகள் தியாகங்கள் செய்து கட்டமைப்பான ஒரு அமைப்பை நிறுவி... பலப்பிரயோகத்தின் மூலம் ஆட்ச்சியாளர்களை ஆட்டம் காணவைத்து, அரசாங்கத்தை பேச்சு வார்த்தைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்... தமிழர் தரப்பு சிங்களவனுக்கு சமனாக மேடையில் பேச அமருகிறது எண்றால் புலிகளின் இராணுவ பலம்தான் காரணம்... அதனால் புலிகளை ஆதரிக்கிறார். உவர்... அப்படி புலிகள் இல்லாட்டால் பேச்சு வார்த்தையும் பேரம்பேசலும் சாத்தியம் இல்லை பாருங்கோ....!

ஆனாலும் எம்மின மக்களின் உரிமைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் பேரம்பேசி விற்க்கப்பட வசதியாக மாற்றுக்குழுக்களை பேச்சுவார்த்திக்கு உள்ளே விடப்பட்ச வேண்டுமாம்... அப்பதானே அரசாங்கம் இப்ப மாசம் மாசம் குடுக்கிறதை தங்கட பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்...

அதுக்காக புலிகள் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை மட்டும்படுத்தி மற்றவர்களையும் உள்ள விடட்டாம்.... அப்பதான் புலிகளை ஓரங்கட்டி எல்லா சுகங்களையும் அனுபவிக்கலாம் எண்ட நப்பாசைதான்...!

இந்தியாவின் இப்போதைய நடவடிக்கைகளை பார்த்து இவர் போடும் தப்புகணக்கு உது... புலிகள் எல்லாவற்றுக்கும் தலையாட்டுவார்கள் எண்டுவேற நினைக்கிறார்... புலிகளால் அங்கீகரிக்க பட்டு, தமிழீழத்திக்கு வேண்டிய அளவு கட்ச்சிகள் இருக்கிண்றன... தேசியத்துக்கு ஆதரவான மக்களை கொண்றவர்களை புலிகள் அங்கீகரிக்க வில்லை... அப்படி அங்கீகரித்தால் அது புலிகளின் நோக்கத்துக்கு எதிரானது

டெலோ வின் அட்டகாசம் அபாயகட்டத்தை தொட்டபோதுதான் புலிகள் அவர்களை தடைசெய்ததோடு அவர்களின் தலைமையையும் அழித்தது வெறும் அதிகார ஆசையினால் அல்ல. அதன் பின் டெலோவுக்கு தலைமை ஏற்ற செல்வம் அடைக்கலநாதன் பிரேமதாச காலத்தில் சிங்கள ஒட்டுப்படையாக இருந்து தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் எதிராக எத்தனையோ சமூகவிரோத செயல்களை செய்தும் காலத்தின் தேவைகருதி தமிழர் தேசிய கூட்டமைப்பில் எமது தலைமையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரு தற்செயல் அல்ல.

அதேபோல் இந்திய அமைதி காக்கும் படையுடன் ஒட்டுப்படையாக இயங்கிய ஈ பி ஆர் எல், நாபா கொலை செய்யப்பட்ட பின் அதற்கு தலைமை கொடுத்த சுரேஸ் பிரேமசந்திரன் எப்படி வன்னிக்கு வந்து தலைவருடன் ஒரு மேசையில் அமர்ந்து உணவு அருந்த முடியுமோ அதேபோல் தான் சில வேளை ஈ என் டி எல் எவ் தலைமையினால் தேவை கருதி பயன்படுத்தப்படலாம் என்று நான் குறிப்பிட்டேனே தவிர அவர்கள் ஏதோ புனிதர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

கருணா - பரந்தன் ராஜன் பிரிவை புலிகள் எப்படி பயன்படுத்தபோகிறார்கள் என்பதில் இருந்துதான் எனது அவதானத்தை சொன்னேன். ஆனால் அது பற்றி அறுதியிட்டு எதையும் சொல்வதற்கில்லை.

Link to comment
Share on other sites

...

எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கோ.

1)புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகள் இல்லையா?

2)அப்படியாயின் தமிழ் மக்களின் மற்றைய பிரதி நிதிகள் யார்?

3) யாரை நீங்கள் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாகக் கருதுகிறீர்கள்?

ஏகபிரதிநிதித்துவம் என்பது ஒரு ஜனநாயகக்கோட்பாடு அல்ல. அதனால்தான் தேர்தலில் தோற்றுப்போன சங்கரிக்கும் யுனெஸ்கோ விருது கிடைத்தது. தேர்தலில் நின்று தோற்றுப்போனவர்களும் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் ஒருவராக சொல்லிக்கொள்வதை உலகு ஏற்றுக்கொள்கிறது நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கூட.

ஆக தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் அரசியல் மற்றும் இராணுவ பலமிக்க பிரதான தலைமை புலிகள்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உம் கருத்தில் இருந்து மாறுபடுவது மட்டுமல்ல, மிகவும் குழப்பாக இருக்கின்றது. மக்களால் ஆதரிக்கப்படாத ஆனந்தசங்கரியாருக்கு, விருது கிடைத்ததன் மூலம், அவர் ஏகபிரதிநிதியாகிவிட்டார் என்ற தோற்றப்பாடு தெரிகின்றதே!

எம் மக்களைப் பிரதிநிதிப்படுத்துபவரை உலக நாடுகள் எவ்வாறு தெரிவு செய்யத் தகுதியைக் கொண்டிருக்கின்றன? ஆனந்தசங்கரியாருக்கு கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் விருது, முக்கியத்துவமானதே இல்லை. ஆனால் எதிரிகளின் அடிவருடி ஒருவருக்கு விருது கிடைக்கப் போகின்றதே என்பது தான் எம் ஆதங்கம். அவ்வளவே!

உலகு என்பது தனக்கு தலையாட்டிகளாக ஆகக்கூடிய ஆட்களை வைத்துக் காய்களை நகர்த்துவது என்பது புதிய விடயமல்ல. இந்தியா தமிழரின் விருப்பு வெறுப்புக்களை மதியாமல் கொண்டு வந்த வடக்கு-கிழக்கு மாகாணசபையில், வரதராஜப் பெருமாளை முன்நிறுத்தியது கூட புலிகளை ஓரம் கட்டவே! ஆனால் மக்களிடம் எடுபடாததால், அது தோற்றுப் போனது. இப்போது, யுனோஸ்கோ என்ற பெயரில் முயற்சிக்க சில நாடுகள் முனைவது போலத் தெரிகின்றது. சொல்லப் போனால், ஜ.கே குஜராலும் இந்தத் தேர்வுக்குழுவில் நிற்பதால், இந்தியாவுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கலாம் என்று நம்பத் தோன்றுகின்றது.

எனவே அவ் விருதால், ஏதோ ஆனந்தசங்கரியார் தமிழ்மக்களால் அங்கிகரிக்கப்பட்டவர் என்ற தோற்றப்பாட்டோடு எழுதுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

Link to comment
Share on other sites

டெலோ வின் அட்டகாசம் அபாயகட்டத்தை தொட்டபோதுதான் புலிகள் அவர்களை தடைசெய்ததோடு அவர்களின் தலைமையையும் அழித்தது வெறும் அதிகார ஆசையினால் அல்ல. அதன் பின் டெலோவுக்கு தலைமை ஏற்ற செல்வம் அடைக்கலநாதன் பிரேமதாச காலத்தில் சிங்கள ஒட்டுப்படையாக இருந்து தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் எதிராக எத்தனையோ சமூகவிரோத செயல்களை செய்தும் காலத்தின் தேவைகருதி தமிழர் தேசிய கூட்டமைப்பில் எமது தலைமையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரு தற்செயல் அல்ல.

அதேபோல் இந்திய அமைதி காக்கும் படையுடன் ஒட்டுப்படையாக இயங்கிய ஈ பி ஆர் எல், நாபா கொலை செய்யப்பட்ட பின் அதற்கு தலைமை கொடுத்த சுரேஸ் பிரேமசந்திரன் எப்படி வன்னிக்கு வந்து தலைவருடன் ஒரு மேசையில் அமர்ந்து உணவு அருந்த முடியுமோ அதேபோல் தான் சில வேளை ஈ என் டி எல் எவ் தலைமையினால் தேவை கருதி பயன்படுத்தப்படலாம் என்று நான் குறிப்பிட்டேனே தவிர அவர்கள் ஏதோ புனிதர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

கருணா - பரந்தன் ராஜன் பிரிவை புலிகள் எப்படி பயன்படுத்தபோகிறார்கள் என்பதில் இருந்துதான் எனது அவதானத்தை சொன்னேன். ஆனால் அது பற்றி அறுதியிட்டு எதையும் சொல்வதற்கில்லை.

ரொலோ மக்களை கொண்றது எண்றோ இல்லை சுரோஸ் பிரேமச்சந்திரனோடு இருக்கும் EPRLF காறர் மக்கள் விரோத்யப்போக்கோடு இயங்கினார்கள் என்பதுக்கு உம்மால் ஆதரம் தரமுடியுமா...???

புலிகள் விரோதப்போக்குடன் இருந்தவர்கள் எல்லாம் மக்களை கொண்றவர்கள் துன்புறுத்தியவர்கள் ஆகமாட்டார்கள்... பலம் பெறுவதுக்கும் முன்னர் அதுக்கு தடையாக இருந்தவர்களை புலிகள் தடை செய்தார்கள்... பலமானவர்களான பின் அவர்களில் இருந்த களைகள் தானாக அகண்ற பின்னர் தாங்களாக இணைத்துக்கொண்டார்கள்...!

புலிகளால் சேர்த்துக்கொள்ளப்படாத PLOT , EPRLF(வரதர் குழு ) , ENDLF , EPDP கூட்டம் போல TELO வோ ,இல்லை சுரேஸ் பிரேமச்சந்திரன்(EPRLF) அமைப்போ மக்களை கொண்றார்கள்... துன்புறுத்தினார்கள் எண்று உம்மால் நிறூபிக்க முடியுமா...???

Link to comment
Share on other sites

உம் கருத்தில் இருந்து மாறுபடுவது மட்டுமல்ல, மிகவும் குழப்பாக இருக்கின்றது. மக்களால் ஆதரிக்கப்படாத ஆனந்தசங்கரியாருக்கு, விருது கிடைத்ததன் மூலம், அவர் ஏகபிரதிநிதியாகிவிட்டார் என்ற தோற்றப்பாடு தெரிகின்றதே! ...........

ஏகபிரதிநிதித்துவம் என்பது ஒரு ஜனநாயகக்கோட்பாடு அல்ல. அதனால்தான் தேர்தலில் தோற்றுப்போன சங்கரிக்கும் யுனெஸ்கோ விருது கிடைத்தது. தேர்தலில் நின்று தோற்றுப்போனவர்களும் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் ஒருவராக சொல்லிக்கொள்வதை உலகு ஏற்றுக்கொள்கிறது நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கூட.

ஆக தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் அரசியல் மற்றும் இராணுவ பலமிக்க பிரதான தலைமை புலிகள்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

ஆனந்தசங்கரியாருக்கு கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் விருது, முக்கியத்துவமானதே இல்லை. ..........

ஆனால் எதிரிகளின் அடிவருடி ஒருவருக்கு விருது கிடைக்கப் போகின்றதே என்பது தான் எம் ஆதங்கம். அவ்வளவே! .

முக்கியம் இல்லாத விடயத்துக்கு ஆதங்கப்படவேண்டியது இல்லை... தூயவன்

...எனவே அவ் விருதால், ஏதோ ஆனந்தசங்கரியார் தமிழ்மக்களால் அங்கிகரிக்கப்பட்டவர் என்ற தோற்றப்பாட்டோடு எழுதுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

.. தேர்தலில் நின்று தோற்றுப்போனவர்களும் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் ஒருவராக சொல்லிக்கொள்வதை உலகு ஏற்றுக்கொள்கிறது நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கூட..

ஒரு சமூகத்தின் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவாகி இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், தேர்தலில் தோற்றவர்களும் அச்சமூகத்தில் இருக்கும் சிறுபான்மையை பிரதிநிதிப்படுத்தும் பிரதிநிதிகள்தான்.

ஆக, ஏகபிரதிநிதித்துவம் என்பதை உலகில் எந்த கலாச்சார சமூகமும் ஏற்றுக்கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

ஏகபிரதிநிதித்துவம் என்பது ஒரு ஜனநாயகக்கோட்பாடு அல்ல. அதனால்தான் தேர்தலில் தோற்றுப்போன சங்கரிக்கும் யுனெஸ்கோ விருது கிடைத்தது. தேர்தலில் நின்று தோற்றுப்போனவர்களும் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் ஒருவராக சொல்லிக்கொள்வதை உலகு ஏற்றுக்கொள்கிறது நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கூட.

ஆக தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் அரசியல் மற்றும் இராணுவ பலமிக்க பிரதான தலைமை புலிகள்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

ஒரு இனத்தின் பிரதினிதிகள் என்றால் அந்த இனத்தின் அங்கதுவர்கள் எல்லோரும் அல்ல.ஒரு இனக் குழுவைப் பிரதினிதிதுவப் படுத்த ஜனனாயக ரீதியாக நடைபெறும் தேர்வின் மூலம் பிரதினிதிகள் தேர்வு செய்ய படுகின்றனர்.அவர்கள் தான் ஜன நாயக ரீதியா அந்தக் குழுமத்தைப் பிரதினிதித்துவம் செய்கிறார்கள்.இங்கே பன்முகத்தன்மை என்று சொல்வதே அவாறான ஜன நாயக முடிவுக்கு எதிரானதாக இருக்கிறது.ஜன நாயக ரீதியாக நடை பெற்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப் பட்ட பிரதினிதிகளுக்கும் இடம் கொடுங்கோ என்று சொவது தான் ஜன நாயக விரோதமானது.

நீர் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நேரடியாகப் பதில் சொல்லவில்லை, நான் உம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது அதைத்தான்.தமிழ் மக்களின் பிரதி நிதிகள் தமிழ் மக்களால் தான் தேர்வு செய்ய பட முடியும் அது தான் ஜனன நாயகம்.இந்தியாவலோ அல்லது அமெரிக்காவலோ அல்லது சிறிலங்கா அரசாலோ தேர்ந்தெடுக்கப் பட்ட கைக்கூலிகள் தமிழ் மக்களின் பிரதி நிதிகள் ஆக முடியாது,ஜன நாயக மோசடி என்றால் அது தான்.மீண்டும் எனது கேள்விக்கு உமது பதில் என்ன?

1)புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகள் இல்லையா?

2)அப்படியாயின் தமிழ் மக்களின் மற்றைய பிரதி நிதிகள் யார்?

3) யாரை நீங்கள் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாகக் கருதுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

ரொலோ மக்களை கொண்றது எண்றோ

புலிகள் விரோதப்போக்குடன் இருந்தவர்கள் எல்லாம் மக்களை கொண்றவர்கள் துன்புறுத்தியவர்கள் ஆகமாட்டார்கள்... பலம் பெறுவதுக்கும் முன்னர் அதுக்கு தடையாக இருந்தவர்களை புலிகள் தடை செய்தார்கள்... பலமானவர்களான பின் அவர்களில் இருந்த களைகள் தானாக அகண்ற பின்னர் தாங்களாக இணைத்துக்கொண்டார்கள்...!

புலிகளால் சேர்த்துக்கொள்ளப்படாத PLOT , EPRLF(வரதர் குழு ) , ENDLF , EPDP

1985 மே மாத ஆரம்பத்தில் டெலோ புலிகளால் தடை செய்யப்பட்டு அத்தடை 2001 ஏப்பிரலில் ரி என் ஏ தோற்றம் பெறும் வரை மிக இறுக்கமாக புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டிட்ருந

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு சமாதானம்

ஒவ்வொரு பிராந்திய வல்லாதிக்கமும் தம் எடுபிடிகளுக்கு அரசியல் முத்திரை குத்துவதற்க்காக பயன்படுத்தும் அரசியல் சதுரங்கம் தான் இவை.

கருணா,ENTLF,EPDP,PLOT இந்த அமைப்புகளுடன் கூட்டணி வேண்டுமா? இந்த அமைப்புக்களின் அத்திவாரமே அரசவாதம்தான் என்று உமக்கு தெரியாதா?

அப்பு போய் வேற பிழைப்பைப் பார்.

யார் உம் அரசியல் ஞானத்தை ஆரூடம் சொல்லச் சொல்லிக் கேட்டது.

உன்வீட்டு புருசஉத்தியோகத்தை ஊரவன் பொறுப்பில கொடுத்திட்டு வேண்டாத வேலயெல்லாம் ஏன் உனக்கு ராசா போய் அந்தவேலயைப் பார்.

Link to comment
Share on other sites

இதே அளவுகோலை நாமும் பாவித்தால் தேர்தலில் தோற்ற ரணிலும், ஏன் விகிரமாபாகுவும் சிங்கள மக்களைப் பிரதினிதுதுவப் படுத்த மேசையில் உக்கார வேண்டி இருக்கும்.இங்கே முடிவுகளை யார் எடுப்பது? மகிந்தவா,ரணிலா அமரவன்ஸவா அல்லது விகிரமாபாகுவா?

அமெரிக்காவின் அரசியல் முடிவுகளைத் தேர்தலில் தோற்றவர்களா எடுகிறார்கள்? உலகில் எந்த நாட்டில் இப்படியான நடை முறை இருகிறது.கேலிக்குரியாதாக இருக்கிறது உமது வியாக்கியானங்கள்.இவ்வாறு முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதானால் தேர்தல்களே தேவையில்லயே.

பன்முகத்தன்மையின் பிரதினிதிகள் யாரோ, கருணா,டக்கிளசு,ஆனந்தசங்கரி, ராதிகா குமாரசாமி? சரத் பொன்சேகா? நான், நீர் மற்றும் இங்குள்ளவர்கள் எல்லோருமா? நகைப்புகிடமானது இந்த பன்முகத் தன்மை.

Link to comment
Share on other sites

தயவு செய்து கருதாடலைத் திசை திருப்ப வேண்டாம் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் நேரடியாகப் பதில் தாரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 2001ம் ஆண்டு வரை ரெலோ மீது புலிகள் இறுக்கமான போக்கினைக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வது மிகவும் தப்பானது.

வவுனியாவில் 90களின் பிற்பகுதியில் புளோட் மாணிக்கதாசன், ரெலோவிற்கிடையில் நடந்த சண்டையின் போது, புளோட் தான் படு அநியாயங்களைச் செய்தது! லக்கி முகாம் என்று, ஒரு சித்திரைக் கூடமே இருந்தது.

ஆனால் புளோட் காரர்கள் தான் தண்டிக்கப்பட்டார்களே தவிர, ரெலோவில் தப்பு என்று புலிகள் அக்காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புலிகள் 90களின் பிற்பகுதியில் பெற்ற ஓரளவு நன்மதிப்பினூடகத் தான், புலிகளோடு நெருக்கமானார்கள் என்று சொல்லலாம்.

அவ்வாறே, சுரேஸ் பிரேமச்சந்திரன் வரதரின் தப்பியோட்டத்துக்கு பிறகு தலைவராக இருந்தாலும், யாழ்பாணத்தில் சுபத்திரன், சிறீ தரன் கொட்டமும், வவுனியாவில் இலிங்கேஸ், என்று பிராந்தியத் தாதா நிலையில் தான் அவர்கள் இருந்தனர்.சொல்லப் போனால், அக்காலப்பகுதியில் சுரேஸ் முகவரி இழந்தவராகவே இருந்தார்.

எனவே, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டே, ஏற்றுக் கொள்ளப்பட்டனர் எனலாம். ஆனால் ஈஎன்டிஎல்எவ், நேற்று வரைக்கும் கருணாவோடு நின்று அநியாயப் படுகொலைகளைச் செய்து போட்டு, கருணா பிரிந்தவுடன், அவர்களை உள்வாங்குவது என்பதற்கு, இது ஒன்றும், சாக்கடை அரசியல் அல்லவே!

Link to comment
Share on other sites

1)புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகள் இல்லையா?

2)அப்படியாயின் தமிழ் மக்களின் மற்றைய பிரதி நிதிகள் யார்?

3) யாரை நீங்கள் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாகக் கருதுகிறீர்கள்?

1. ஏகபிரதிநிதித்துவம் என்பது ஒரு ஜனநாயகக்கோட்பாடு அல்ல. தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல சிங்கள, முஸ்லிம், மலையக மக்களுக்கும் ஏகபிரதிநிதிகள் என்று எவரும் இல்லை.அதனால்தான் அரசியல் தீர்வு பற்றி அனைத்து கட்சிகள் மாநாடு கூட்டவேண்டிய ஜனநாயகக் கடைமைப்பாட்டை வலியுறுத்தி கொழும்புக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன.

2. தேர்தலில் வென்றவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள்....தமிழர் தேசிய கூட்டமைப்பு. ஈ பி டி பி - டக்கிளஸ்.

தேர்தல் மூலம் அங்கிகாரம் பெறத்தவறிய பிரதிநிதிகளில்............. அதாவது தேர்தலில் நின்று ஆசனங்கள் எதையும் பெறாத ஈ பி ஆர் எல் எவ் - சிறிதரன், ரி யு எல் எவ் - சங்கரி, பி எல் ஓ ரி ஈ - சித்தார்தன்.

3. தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் அரசியல் மற்றும் இராணுவ பலமிக்க பிரதான தலைமை புலிகள்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை

Link to comment
Share on other sites

வர்த்தகர்களிடம் கப்பம் பெற புளொட் நடமாடும் சேவை

ஜ03 - ழுஉவழடிநச - 2006ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ

வவுனியா பிரதேசங்களில் இயங்கும் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பைச் சேர்ந்த (புளொட்) உறுப்பினர்கள் அங்குள்ள வர்த்தகர்களை அழைத்து ஏற்கனவே அமைப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாதாந்தப் பணவசூலிப்பு மறு படியும் ஆரம்பிக்கப்படுவதாகவும் இதனால் இனிமேல் மறுபடியும் வர்த்தகர்கள் புளொட் அமைப்புக்கு மாதாந்தம் வரிப் பணம் செலுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

இவ்வாறு வவுனியாவிலுள்ள வர்த்தகர்களால் நடத்தப்படும் வியாபாரம் எத்தகையதுஇ அதற்கான முதலீடுஇ விற்பனை இலாபம் என்பனவற்றுக்கேற்ப வர்த்தகர்கள் புளொட் அமைப்புக்கு மாதாந்தம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமென அமைப்பினால் தீர்மானம் செய்யப்பட்டு அது பற்றிய விபரங்களை அமைப்பு வர்த்தகர்களுக்கு அறிவித்துள்ளது.

புளொட் அமைப்பின் மேற்படி தீர்மானங்களுக்கேற்ப வவுனியாவில் வர்த்தகம் செய்யும் உரிமையாளர்கள் முதலில் ஒரு மாதத்துக்கு ரூபா 5இ000 தொடக்கம் ரூபா 35இ000 வரையிலான பணத்தை புளொட் அமைப்புக்குச் செலுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் பணத்தொகையைக் கொடுக்கும் பட்சத்தில் இரண்டாவது மாதம் வர்த்தகர்கள் ரூபா 500 தொடக்கம் ரூபா 7இ500 வரை புளொட் அமைக்குக் கொடுக்க வேண்டும். மேலும் இவ்வாறு வவுனியாவில் தொழில் செய்யும் வர்த்தகர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காகப் புளொட் அமைப்பின் நடமாடும் பண வசூலிப்புப் பிரிவுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நன்றி........திவயின :30.09.2006

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
    • 15 APR, 2024 | 03:58 PM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181135
    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
    • மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள்.  கடற்கரையோரம் காலாற நடப்பதற்காக கால்களை தயார் செய்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை நினைத்தீர்கள். 
    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.